Untitled Document
May 12, 2024 [GMT]
கனடாவில் மாயமான 4,100 சிறுவர், சிறுமியர்: அதிர்ச்சி சம்பவம்!
[Friday 2021-05-28 16:00]

பள்ளிக்குச் சென்றுவிட்டு பிள்ளைகள் வீடு திரும்பாமல் மாயமாகும் ஒரு நிலைமையை எந்த பெற்றோராவது நினைத்துக்கூட பார்க்க முடியுமா? அப்படி ஒரு கொடூரம் கனடாவில் நிகழ்ந்துள்ளது... ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் புதிதாக ஒரு கூட்டத்தினர் குடிபுகும்போது, அங்கிருக்கும் பூர்வக்குடியினர் ஓரங்கட்டப்படுவார்கள். ஒருவேளை, அவர்கள் கொல்லப்படலாம், அல்லது புதிதாக வந்தவர்களுக்கு அடிமைகளாக்கப்படலாம்.

பள்ளிக்குச் சென்றுவிட்டு பிள்ளைகள் வீடு திரும்பாமல் மாயமாகும் ஒரு நிலைமையை எந்த பெற்றோராவது நினைத்துக்கூட பார்க்க முடியுமா? அப்படி ஒரு கொடூரம் கனடாவில் நிகழ்ந்துள்ளது... ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் புதிதாக ஒரு கூட்டத்தினர் குடிபுகும்போது, அங்கிருக்கும் பூர்வக்குடியினர் ஓரங்கட்டப்படுவார்கள். ஒருவேளை, அவர்கள் கொல்லப்படலாம், அல்லது புதிதாக வந்தவர்களுக்கு அடிமைகளாக்கப்படலாம்.

  

இது காலம் காலமாக வரலாற்றில் நிகழ்ந்து வரும் ஒரு கொடுமை... ஆனால், பள்ளிக்கு செல்லும் ஆயிரக்கணக்கான பூர்வக்குடியின பிள்ளைகள் காணாமல் போவதும், உயிரிழப்பதும் எத்தனை நாடுகளில் நிகழ்கிறதோ தெரியாது. ஆனால், கனடாவின் கருப்பு வரலாற்றில் அப்படி நிகழ்ந்துள்ளது.

Truth and Reconciliation Commission of Canada (TRC) என்னும் அமைப்பு, இப்படி மாயமான மற்றும் உயிரிழந்த 4,100 பேரை இதுவரை அடையாளம் கண்டுள்ளது. ஆனால், எத்தனைபேர் இதுவரை அப்படி உயிரிழந்தார்கள் என்ற உண்மையான எண்ணிக்கை இதுவரை யாருக்கும் தெரியாது.

உண்டுறை பள்ளிகள் எனப்படும் residential schools எனப்படும் பள்ளிகளில், இதுபோல் எக்கச்சக்கமான பூர்வக்குடியின மாணவ மாணவியர், பள்ளிக்குச் சென்றவர்கள் வீடுகளுக்குத் திரும்பவேயில்லை.

இந்நிலையில், சமீபத்தில், Kamloops Indian Residential school என்ற பள்ளி அமைந்திருக்கும் இடத்தில், ராடார் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டபோது, அந்த பகுதியில், 215 சிறுவர் சிறுமியரின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அவர்களில் மூன்று வயது சிறுவர் சிறுமியரும் அடக்கம். அவர்கள் எப்படி இறந்தார்கள், அவர்களது மரணம் குறித்து அவர்களது பெற்றோருக்குத் தெரியப்படுத்தப்படாதது ஏன் என்பதுபோன்ற கேள்விகளுக்கும் யாரிடமும் பதிலில்லை.

இந்த விடயம் கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குறிப்பிட்ட பள்ளி 1890 முதல் 1969 வரை இயங்கிய நிலையில், பின்னர் அதை அரசு பொறுப்பெடுத்துக்கொண்டுள்ளது. 1978இல் பள்ளி மூடப்பட்டுவிட்டது.

எனவே, இந்த குழந்தைகளின் மரணத்தின் பின்னணியில் இருப்போர் எத்தனை பேர் இப்போது உயிருடன் இருப்பார்கள், அவர்கள் மீது எப்படி, என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவில்லை.

  
   Bookmark and Share Seithy.com



மியான்மார் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 15 இலங்கையர்கள் விடுதலை!
[Sunday 2024-05-12 06:00]

மியான்மார் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு அந்நாட்டுச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை கடற்றொழிலாளர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நேற்று இவர்கள் நாட்டை வந்தடைந்தடைந்துள்ளனர். இந்நிலையில் குறித்த 15 பேரும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இளவரசி கேட்டின் உடல் நிலை தொடர்பில் இளவரசர் வில்லியம் விளக்கம்!
[Sunday 2024-05-12 06:00]

பிரித்தானிய இளவரசி(Catherine, Princess) கேட்டின் உடல் நிலை சீராக இருப்பதாக இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார். இளவரசர் வில்லியம், மருத்துவமனை ஒன்றின் புதிய கட்டிட கட்டுமானப்பணியின் ஆரம்ப விழாக்கு நேற்று சென்றிருந்த நிலையில் மேற்படி கூறியுள்ளார்.



இஸ்ரேல் தூதரின் செயற்பாட்டால் அதிர்ச்சியடைந்த ஐ.நா சபை!
[Sunday 2024-05-12 06:00]

பாலஸ்தீனத்திற்கு(Palestine) ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேல்(Israel) தூதர் ஐ.நா.வின் அறிக்கையை கிழித்த காணொளி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் ஐ. நா பார்வையாளராக செயற்பட்டு வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீனத்தை நிரந்தர உறுப்பினராக்குவதற்கான ஐ. நா தீர்மானமொன்றை கொண்டுவந்துள்ளது.



ஐரோப்பாவில் ஐந்து இலங்கையர்கள் கைது!
[Saturday 2024-05-11 18:00]

லாத்வியா நாட்டின் எல்லைகளுக்குள் சட்டவிரோதமான முறையில் மக்களை ஏற்றிச் சென்ற ஐந்து இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லாத்வியா குடியுரிமை பெற்ற இலங்கையர் ஒருவரினால் செலுத்திய வோக்ஸ்வேகன் போலோ (Peugeot) 307 ரக வாகனத்தையே எல்லைப் பாதுகாப்புப் படையினர் சோதனையிட்டுள்ளனர்.



மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய கனடிய இரத்த வங்கி!
[Saturday 2024-05-11 18:00]

கனடிய இரத்த வங்கி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது. குறிப்பாக மாற்றுப் பாலின சமூகத்தினரிடம் இவ்வாறு மன்னிப்பு கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாற்றுப் பாலின சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் இரத்த தானம் செய்வது தொடர்பில் கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட சட்டங்களுக்காக இவ்வாறு மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.



பூமியை தாக்கிய சக்தி வாய்ந்த சூரியப்புயல்!
[Saturday 2024-05-11 18:00]

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த சூரியப்புயல் பூமியை தாக்கியது. ஏற்கனவே பூமியை கடும் சூரிய காந்த புயல் தாக்கும் அபாயம் உள்ளது என்றும் இதனால் கலிபோர்னியா முதல் தெற்கு அலபாமா வரை அரோரா என்ற துருவ ஒளி ஏற்படும் என்றும் அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் தெரிவித்தது.



சீனாவில் நாய்க்கு வண்ணம் பூசி பாண்டா கரடியாக ஏமாற்றிய பூங்கா நிர்வாகம்!
[Saturday 2024-05-11 18:00]

சீனாவில் உள்ள பூங்கா ஒன்றில் சௌ சௌ இன நாய்க்கு கருப்பு வேலை பெயிண்ட் அடித்து பாண்டா கரடியாக மாற்றி பார்வையாளர்களை பூங்கா நிர்வாகம் ஏமாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில் சௌ சௌ இன நாயை பாண்டா என நினைத்து தினமும் ஏராளமானோர் காணக் குவிந்துள்ளனர்.



புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரித்தானியாவின் திட்டம்: லண்டனில் திடீர் போராட்டம்!
[Saturday 2024-05-11 06:00]

பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களை மிதவைப்படகில் ஏற்றும் திட்டத்திற்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானியா - லண்டனிலுள்ள தனியார் விடுதியில் புகலிடக்கோரிக்கையாளர்கள் நீண்டகாலமாக தங்கியிருக்கும் நிலையில், இன்று (10.05.2024) காலை 10.00 மணியளவில் பொலிஸார் சுமார் 5 பொலிஸ் வான்களில் அங்கு வந்துள்ளனர்.



ஜெர்மனியின் இராணுவ திட்டத்திற்கு கனடா நிதியுதவி!
[Saturday 2024-05-11 06:00]

உக்ரைனுக்காக வான் பாதுகாப்பை வழங்குவதற்கான ஜெர்மனியின் திட்டத்திற்கு கனடா(Canada) பூரண ஆதரவை வழங்கும் என கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் உறுதியளித்துள்ளார். இந்த திட்டத்தின் முதல் கட்டமாக 76 மில்லியன் கனேடிய டொலர்களை(55 மில்லியன் அமொரிக்க டொலர்) உதவியாக வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



அபுதாபி இளவரசர் ஷேக் ஹஸ்ஸா காலமானார்!
[Saturday 2024-05-11 06:00]

அபுதாபி (Abu dhabi) இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Hazza bin Sultan bin Zayed Al Nahyan )காலாமானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர் (09.05.2024) காலமானதாக அபுதாபி ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. காலமான அபுதாபி இளவரசர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் மூத்த மகனாவார்.



200,000 அகதிகளை வரவேற்ற வரலாற்று நிகழ்வை நினைவுகூர்ந்த கனடா அரசு!
[Friday 2024-05-10 18:00]

கனடா, ஒரு காலகட்டத்தில், 200,000 அகதிகளை வரவேற்றுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், நேற்று, வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த சம்பவம் தொடர்பான நிகழ்வொன்று கனடாவில் நடைபெற்றது. 1975ஆம் ஆண்டு, வியட்நாம் போர் முடிவடை ந்ததைத் தொடர்ந்து, துன்புறுத்தல் மற்றும் மோசமான வாழ்க்கைச் சூழலுக்குத் தப்பி ஏராளமானோர் வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து பல நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றார்கள்.



அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கைக்கு பெஞ்சமின் நெதன்யாகுவின் பதில்!
[Friday 2024-05-10 18:00]

இஸ்ரேல் தன்னிடம் உள்ள அனைத்துவளங்களையும் பயன்படுத்தி தனியாக போரிடும் எனவும், எங்கள் விரல்நகங்களையும் பயன்படுத்தி போரிடும்வோம் எனவும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலிற்கான ஆயுதவிநியோகத்தினை இடைநிறுத்துவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கைக்கு பதில் அளித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



கனடாவில் வாடகை குடியிருப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!
[Friday 2024-05-10 18:00]

கனடாவில் வாடகைக் குடியிருப்பாளர்கள் பெரும் நிதி நெருக்கடி நிலைமையை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒப்பீட்டளவில் வீட்டு உரிமையாளர்களை விடவும் வாடகைக் குடியிருப்பாளர்கள் இந்த நெருக்கடிகளை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



பிரித்தானியாவில் கக்குவான் இருமல்: 5 சிறுவர்கள் உயிரிழப்பு!
[Friday 2024-05-10 18:00]

பிரித்தானியாவில் பரவிவரும் “100 நாள் இருமல்” என கூறப்படும் கக்குவான் இருமல் தொற்று காரணமாக ஐந்து குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உயிரிழப்புக்கள் ஜனவரி முதல் மார்ச் இறுதி வரையான மூன்று மாதங்களில் பதிவானவை என UK Health Security Agency தெரிவித்துள்ளது.



கனடாவிற்கு குடிபெயர்வதற்கு எவ்வளவு பணம் தேவை: வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு!
[Friday 2024-05-10 06:00]

புலம்பெயர் கனேடிய விண்ணப்பதாரர்களின் நிதி ஆதாரம் தொடர்பில் அந்நாட்டின் அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பானது(IRCC) புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இதன்படி கனடாவுக்கான எக்ஸ்பிரஸ் நுழைவு வீசா விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் மே 27. 2024ஆம் திகதிக்கு முன்னர் புதிய நிதிச் சான்றுடன் தங்கள் சுயவிவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கான புதிய நிதி திட்டத்தை மே 28, 2024 முதல் நடைமுறைக்குக் கொண்டுவருவதாக கனடா அறிவித்துள்ளது.



விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை பாடமாகக்கொண்டு ஹமாஸ் செயற்படவேண்டும்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
[Friday 2024-05-10 06:00]

ஹமாஸ்(Hamas) அமைப்பு, தமிழீழ விடுதலைப்புலிகள்(LTTE) மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கு இடையிலான யுத்தத்தை பாடமாகக்கொண்டு, பணயக்கைதிகளை விடுவித்து நேர்மையை காட்டும் வரையில் இஸ்ரேல் நிராயுதப்பாணிகள் மீதான தாக்குதல்களை நிறுத்தாது என்று சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.



வெளிநாடொன்றில் ஓடுபாதையில் விபத்துக்குள்ளான விமானம் : 11 பேர் காயம்!
[Friday 2024-05-10 06:00]

மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில்(Senegal) உள்ள பிரதான விமான நிலையத்தில் 78 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தானது (09.05.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



ரஃபா மீது தாக்குதல்: ஜோபைடன் பகிரங்க எச்சரிக்கை!
[Thursday 2024-05-09 18:00]

காசாவின் ரஃபாமீது , இஸ்ரேல் பாரிய தாக்குதலை மேற்கொண்டால் இஸ்ரேலிற்கு சில ஆயுதங்களை வழங்குவதை நிறுத்துவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் எச்சரித்துள்ளார். ரஃபாவிற்குள் நுழைந்தால் நான் ரஃபா விடயத்தில் வரலாற்றுரீதியாக பயன்படுத்தப்படும் சில ஆயுதங்களை வழங்க தயாரில்லை எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.



அமெரிக்க பாடசாலைகளிலும் யூதவெறி தாக்குதல்கள்!
[Thursday 2024-05-09 18:00]

காஸா போரைத் தொடர்ந்து அமெரிக்க பல்கலைக்கழகங்களில் யூத மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்ததைப் போல், பாடசாலைகளிலும் தாக்குதல் சம்பவங்கள் நடந்துவருவதாக கூறப்படுகின்றது.



கனடாவில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட கேரளப் பெண்!
[Thursday 2024-05-09 18:00]

கனடாவில் தன் கணவருடன் வாழ்ந்துவந்த கேரளப் பெண்ணொருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த படிகலா சாஜன் மற்றும் புளோரா தம்பதியின் மகள் டோனா சாஜா (34). தன் கணவரான லால் கே. பவுலஸுடன் கனடாவில் வாழ்ந்துவந்த டோனா, நேற்று முன்தினம் தன் வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.


 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா