Untitled Document
May 19, 2024 [GMT]
அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்துகொண்ட இலங்கையர்: வெளிச்சத்துக்கு வந்த பல அதிர்ச்சிகரமான தகவல்கள்!
[Monday 2022-01-31 16:00]

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் தனது குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த சம்பவம் தொடர்பில் பல அதிர்ச்சிகரமான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. Huntingdaleல் வசித்து வந்த இலங்கையரான 40 வயது இந்திகா குணத்திலகாவுக்கு 6 வயதில் கோஹன் என்ற மகனும், 4 வயதில் லில்லி என்ற மகளும் இருந்தனர்.

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் தனது குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த சம்பவம் தொடர்பில் பல அதிர்ச்சிகரமான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. Huntingdaleல் வசித்து வந்த இலங்கையரான 40 வயது இந்திகா குணத்திலகாவுக்கு 6 வயதில் கோஹன் என்ற மகனும், 4 வயதில் லில்லி என்ற மகளும் இருந்தனர்.

  

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தனது இரண்டு பிள்ளைகளையும் கொன்றுவிட்டு, குணத்திலகாவும் தற்கொலை செய்து கொண்டார். மிகுந்த மன அழுத்தம் மற்றும் மனரீதியான பிரச்சினையில் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இம்முடிவை அவர் எடுத்தார் என கூறப்படுகிறது.

இந்த சம்பவத்துக்கான சரியான காரணம் குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் குணத்திலகா குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பூக்கள் மற்றும் பொம்மைகளை அவர்களின் வீட்டருகே வைத்தார்கள்.

மேலும் அங்கு வந்தவர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறி கொண்டனர்.இதனிடையில் குணத்திலகா திருமண வாழ்க்கை குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி படிப்புக்காக அவுஸ்திரேலியா சென்ற குணத்திலகா Curtin பல்கலைக்கழகத்தில் படித்த போது உடன் படித்த அந்நாட்டு பெண்ணுடன் காதலில் விழுந்தார். பின்னர் கடந்த 2016ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

குணத்திலகாவின் மனைவி மற்றும் மாமியார் இருவருமே சட்ட துறை தொடர்பான பணியில் இருந்தனர். குணத்திலகாவை தனது மகள் திருமணம் செய்வதற்கு அவரின் தாயார் ஆரம்பம் முதலேயே தயக்கம் காட்டி வந்தார் என கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

கடந்த 2020 - 2021 காலக்கட்டத்தில் குணத்திலகாவுக்கும் அவர் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மனைவியும், மாமியாரும் சட்ட துறையில் இருந்ததால் அவர்களிடம் வாக்குவாதம் செய்து ஜெயிப்பது என்பது குணத்திலகாவுக்கு கடினமாகவே இருந்ததாக கூறப்படுகிறது.

இதை அவர் தனது நண்பர்களிடமும் கூறியிருக்கிறார். இதையடுத்து குணத்திலகாவும் அவர் மனைவியும் பிரிவதற்கான சட்ட ரீதியான ஏற்பாடுகளும் ஒருபக்கம் நடந்துள்ளன.

மனரீதியான பிரச்சினை கொண்ட குணத்திலகாவுடன் வாழ முடியாது என்ற காரணத்தையும் அவர் மனைவி கூறியதாக தெரிகிறது. இதற்கு அவரின் தாயாரும் பக்கபலமாக இருந்திருக்கிறார்.

இதனை தொடர்ந்தே தனது பிள்ளைகளுடன் தனியாக வசிக்க தொடங்கியிருக்கிறார் குணத்திலகா. இது குறித்து குணத்திலகா நண்பர்கள் கூறுகையில், குணத்திலகா தனது மனைவியையும், பிள்ளைகளையும் மிகவும் நேசித்தார். ஆனால் அவருடைய மனைவி தனது குழந்தைகளை சரியாக கவனிக்கவில்லை. மாமியாரும் இதை தான் செய்தார்.

இந்த பிரச்சனைக்கு மத்தியில் இந்திகா குழந்தைகளை கவனித்துக் கொண்டிருந்தார், ஆனால் அவரது மனச்சோர்வு அதிகமாகிக்கொண்டே இருந்த சூழலில் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறியுள்ளனர்.

மேலும் பிரகாசமான எதிர்காலம் கொண்ட இரண்டு அழகான குழந்தைகளின் வாழ்க்கை இந்தப் பிரச்சனைக்கு மத்தியில் அழிந்துவிட்டது என வேதனை தெரிவித்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



60,000 கோடி லாபம் ஈட்டிய விமான நிறுவனம்: ஊழியர்களுக்கு போனஸாக 8 மாத சம்பளம்!
[Sunday 2024-05-19 19:00]

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதன் ஊழியர்களுக்கு 8 மாத சம்பளத்தை போனஸாக வழங்க உள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைப்பதால் எட்டு மாத சம்பளத்திற்கு இணையான தொகையை போனஸாக வழங்க முடிவு செய்துள்ளது. 2023-24 நிதியாண்டில் விமான நிறுவனம் 1.98 பில்லியன் டொலர் (இலங்கைப் பணமதிப்பில் ரூபா. 59,032 கோடி) லாபத்தைப் பதிவு செய்துள்ளது.



"மூன்றாம் உலகப்போர் வெடிக்கலாம்" - பகீர் கிளப்பும் டொனால்டு டிரம்ப்!
[Sunday 2024-05-19 19:00]

அமெரிக்க தலைமையின் திறமையின்மையால் மூன்றாம் உலகப்போர் வெடிக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வரும் நவம்பர் 5ஆம் திகதி நடக்க உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், ஜோ பைடன் (Joe Biden) அரசை விமர்சித்து வரும் டொனால்டு டிரம்ப், தற்போது உலகப்போர் வெடிக்கலாம் என பகீர் கிளப்பியுள்ளார்.



கனடாவில் தாயை கொடூரமாக கொன்ற மகன் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்!
[Sunday 2024-05-19 19:00]

கனடாவில் தாயை கொடூரமான முறையில் கத்தியில் குத்திக் கொன்ற மகன் ஒருவர், நீதிமன்ற விசாரணைகளின் போது கொலை செய்ய நினைக்கவில்லை என கூறியுள்ளார். தமது தாயாரை படுகொலை செய்யும் நோக்கில் கத்தியால் பல தடவை குத்தவில்லை என தெரிவித்துள்ளார்.



துபாயில் பள்ளி பேருந்துகளில் புதிய முயற்சி!
[Sunday 2024-05-19 19:00]

துபாயில் பள்ளி பேருந்துகளில் விளம்பரத்தரங்கள் ஒட்டுவது குறித்து புதிய முயற்சி எடுக்கவுள்ளதாக போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது பள்ளிப் பேருந்துகளில் விளம்பரம் செய்ய துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் நேற்று வெள்ளிக்கிழமை ஒப்புதல் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் பள்ளிப் போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு கூடுதல் வருவாயை வழங்குதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



மறைக்கவோ மறுக்கவோ மறக்கவோ முடியாத நினைவு நாள்: பிரித்தானியாவில் பேரணி! Top News
[Sunday 2024-05-19 08:00]

பிரித்தானியாவில் பல்வேறு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள் புலம்பெயர் தமிழ் உறவுகளால் முன்டுக்கப்பட்டு வருகிறது. இதற்கமைய இன்று 15 தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரினால் பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. தமிழீழ மக்களாகிய எமக்கு அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்பதை வலியுறுத்திய கடிதமொன்றினை தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயற்பாட்டாளர்கள் பிரதமர் அலுவலகத்தில் கையளித்தார்கள்.



முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல்: கனேடிய பிரதிநிதியின் உருக்கமான பதிவு!
[Sunday 2024-05-19 08:00]

இலங்கையின் பேரவலமான முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்கள் இலங்கை உட்பட சர்வதேச தரப்புகளினால் நினைவுகூறப்படுகிறது. அந்த வகையில் கனேடிய அரசியலின் முக்கிய பிரதிநிதியும் சுகாதார அமைச்சருமான மார்க் ஹொலண்ட்டினால்(Mark Holland) அவரது அலுவலகத்தில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தாயக உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.



பிரித்தானியாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
[Sunday 2024-05-19 08:00]

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலானது புலம்பெயர் தேசமான பிரித்தானியாவில் உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் இடம்பெற்றது. நந்திக்கடலை நினைவுகூரும் முகமாகவும் முள்ளிவாய்காக்கல் இறுதி போரின் போது கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் முகமாகவும் பிரித்தானியா உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் உள்ள ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் நினைவுகூரப்பட்டது.



அமெரிக்காவில் கஞ்சாவுக்கு பச்சைகொடி காட்டிய ஜோ பைடன்!
[Saturday 2024-05-18 16:00]

அமெரிக்காவில் கஞ்சாவை குறைந்த ஆபத்து கொண்ட போதைப்பாருள் என மறுவகைப்படுத்த ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதனால் அமெரிக்காவில் இனிமேல் கஞ்சா பயன்படுத்துவது அதிகாரப்பூர்வாக்கப்படலாம் எனத எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.



கிர்கிஸ்தானில் தாக்குதல்; இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை!
[Saturday 2024-05-18 16:00]

மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் பலர் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் தலைநகர் பிஷ்கெக்கில் நேற்று நள்ளிரவு வெளிநாட்டு மாணவர்களை குறிவைத்து கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது.



புலம்பெயர் பணியாளர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ள கனடா அரசின் நடைமுறை!
[Saturday 2024-05-18 16:00]

கனடா அரசின் ஒரு நடைமுறை, புலம்பெயர் பணியாளர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போரை, அவர்களுடைய வயது, கல்வி, ஆங்கிலப் புலமை மற்றும் பணி அனுபவம் போன்ற காரணிகளை வைத்து தரவரிசைப்படுத்தும் நடைமுறையே CRS என்னும் நடைமுறை.



பறந்து கொண்டிருந்த விமானத்தில் திருமண ஒத்திகை!
[Saturday 2024-05-18 16:00]

நடுவானில் விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது விமான பணிப்பெண் ஒருவர் சக பயணி ஒருவருடன் திருமண சடங்கு ஒத்திகையில் ஈடுபடுவது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் காட்டுத்தீபோல பரவி வருகிறது.



இலங்கை தமிழர்களுக்காக சுதந்திர வாக்கெடுப்பு: அமெரிக்காவில் முன்வைக்கப்பட்ட வரலாற்று தீர்மானம்!
[Saturday 2024-05-18 08:00]

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஈழத் தமிழர்களுக்காக சுதந்திர வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், வரலாற்று தீர்மானம் ஒன்றை அமெரிக்க நாடாளுமன்றில் முன்வைத்துள்ளனர். அமெரிக்க காங்கிரஸின் 7 உறுப்பினர்களுடன் இணைந்த நிலையில் அதன் ஒரு உறுப்பினரான வைல்லி நிக்கலினால் (Wiley Nickel )இலங்கையின் மோதலுக்கு ஒரு தீர்வாக ஈழத் தமிழர்களுக்கான சுதந்திர வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கும் இந்த முக்கிய தீர்மானத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.



பிரித்தானியாவில் இலங்கை குடும்பமொன்று எதிர்நோக்கிய நெருக்கடி!
[Saturday 2024-05-18 08:00]

பிரித்தானியாவில் வசித்து வரும் இலங்கை குடும்பமொன்றின் தந்தை மற்றும் மகன் நாட்டில் வசிக்க முடியுமெனவும், தாய் நாட்டில் வசிக்க முடியாதெனவும் Home Office அறிவித்திருந்த சம்பவம் தொடர்பில் தகவல் வெளிவந்துள்ளது. இலங்கையை சேர்ந்த தாய், தந்தை மற்றும் பத்து வயது மகனை கொண்ட குடும்பத்திற்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.



பாலஸ்தீனிய மாணவியை நாடுகடத்த திட்டமிடும் பிரித்தானியா!
[Saturday 2024-05-18 08:00]

இஸ்ரேல் மீது ஹமாஸ்(israel-hamas) நடத்திய தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்ட பாலஸ்தீனிய மாணவியை பிரித்தானியா நாடுகடத்த திட்டமிடுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 1,200க்கும் அதிகமான இஸ்ரேலியர்களைக் கொன்றதற்கு மறுநாள், பிரித்தானியாவிலுள்ள மான்செஸ்டர் (Manchester) பல்கலையில் சட்டம் பயிலும் பாலஸ்தீனிய மாணவியான டானா (Dana Abuqamar, 19), பாலஸ்தீன ஆதரவு பேரணி ஒன்றில் கலந்துகொண்டார்.



பிரித்தானிய நகரம் ஒன்றின் முதல்வராக இலங்கை தமிழர் பதவியேற்பு!
[Friday 2024-05-17 18:00]

பிரித்தானிய (British) நகரம் ஒன்றின் புதிய முதல்வராக இலங்கையிலிருந்து (Sri Lanka) ஏதிலியாக சென்ற தமிழர் பதவியேற்றுள்ளார். தொழில் கட்சியின் உறுப்பினரான இளங்கோ இளவழகன் (Elango Elavalakan) என்பவரே இப்ஸ்விச் (Ipswich) மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.



கனடாவில் ஓன்லைன் சொப்பிங் செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!
[Friday 2024-05-17 18:00]

கனடாவில் ஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்வோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கனடாவின் வியாபாரப் போட்டி முகவர் நிறுவனம் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இணைய வழியில் கொள்வனவு செய்யும் போது ஏதேனும் மறைமுகக் கட்டணங்கள் அறவீடு செய்யப்படுகின்றனவா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.



காஸாவிற்கு கடல் மார்க்க மிதக்கும் பாதை!
[Friday 2024-05-17 18:00]

காஸாவிற்கு கடல் மார்க்கமாக நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்ல, மிதக்கும் பாலம் ஒன்றை அமெரிக்கா கட்டி முடித்துள்ளது. அமெரிக்க ராணுவ வீரர்களை நேரடியாக ஈடுபடுத்தாமல், இஸ்ரேல் ராணுவ பொறியாளர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் மூலம் மிதக்கும் பாலத்தை கட்டி முடித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.



கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்திலிருக்கும் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
[Friday 2024-05-17 18:00]

கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்திலிருக்கும் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதைக் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கனடாவின் Prince Edward Island மாகாணம், 2024, அதாவது, இந்த ஆண்டில், மாகாண நாமினி திட்டத்தின் கீழ் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிகளின் எண்ணிக்கையை 25 சதவிகிதம் குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. மருத்துவ அமைப்புக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் மற்றும் வீடுகள் தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவை எடுக்க இருப்பதாக அம்மாகாணம் அறிவித்துள்ளது.



இலங்கை தமிழ் வம்சாவளி பெண் எழுத்தாளருக்கு அமெரிக்காவில் கிடைத்துள்ள அங்கீகாரம்!
[Wednesday 2024-05-15 06:00]

அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை தமிழ் வம்சாவளி எழுத்தாளரான வி.வி.சுகி கணேசநந்தன் எழுதிய பிரதர்லெஸ் நைட் (Brotherless Night) என்ற நாவல், புனைக் கதைக்கான 2024 கரோல் ஷீல்ட்ஸ் (Carol Shields) பரிசை வென்றுள்ளது. இதற்காக அவருக்கு 150,000 அமெரிக்க டொலர்கள் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் கனடாவின் நியூஃபவுண்ட்லாந்தில் உள்ள ஃபோகோ தீவில் வசித்து வருகின்றார்.



பிரித்தானியாவில் சீனாவுக்கு உளவுபார்த்த 3 பேர் கைது!
[Wednesday 2024-05-15 06:00]

பிரித்தானியாவில் சீனாவுக்கு(China) உளவுபார்த்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்தினை தொடர்ந்து சீனா மீது கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், லண்டனில் உள்ள சீன தூதரை அழைத்து பிரித்தானியா குறித்த கண்டனத்தை தெரிவித்துள்ளது.


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா