Untitled Document
May 4, 2024 [GMT]
தே.மு.தி.க. - அ.தி.மு.க. பேச்சுவார்த்தை: தொகுதிப் பங்கீடு குறித்து வெளியான தகவல்!
[Wednesday 2024-03-06 18:00]

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகத் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகமும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகத் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகமும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

  

இத்தகைய சூழலில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி (07.02.2024) காலை 10 மணியளவில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, “தே.மு.தி.க. தனித்து போட்டியிட வேண்டும் என பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். மாவட்டச் செயலாளர்களில் ஒரு தரப்பினர் பா.ஜ.க.வுடனும் மற்றொரு தரப்பினரோ அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடனே தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும். எனவே யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். 14 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தரும் கட்சியுடன் தான் தே.மு.தி.க. கூட்டணி அமைக்க வேண்டும் எனவும் மாவட்டச் செயலாளர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதுவரை கூட்டணி குறித்து யாருடனும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கே.பி. அன்பழகன், பெஞ்சமின் ஆகியோர் கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) சந்தித்துப் பேசினர். அப்போது தே.மு.தி.க. மூத்த நிர்வாகிகளான எல்.கே. சுதிஷ், பார்த்தசாரதி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பிற்கு பின்னர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். கூட்டணி குறித்து விவாதிக்க அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே இரு தரப்பிலும் குழு அமைக்கப்படும். இதன் பின்னர் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவில், “நடைபெறவுள்ள 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தே.மு.தி.க. சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தே.மு.தி.க. துணைச் செயலாளரும், உயர் மட்டக்குழு உறுப்பினருமான எல்.கே. சுதீஷ், அவைத் தலைவர் வி. இளங்கோவன், கொள்கைப்பரப்பு செயலாளர் மோகன்ராஜ், துணைச் செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே 2 ஆம் கட்ட கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்று (06.03.2024) மாலை 5 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, தே.மு.தி.க. சார்பில் இளங்கோவன், பார்த்தசாரதி, மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு வழங்கப்பட்ட வட சென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய 4 மக்களவைத் தொகுதிகளைத் தற்போதும் ஒதுக்க அ.தி.மு.க. தரப்பில் தயாராக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது வட சென்னை மக்களவைத் தொகுதிக்கு மாற்றாக வேறு ஒரு தொகுதியை வழங்க வேண்டும் என தே.மு.தி.க. தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்துகொள்ளலாம் என அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

  
   Bookmark and Share Seithy.com



சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி: தந்தையை தொடர்ந்து மகளும் உயிரிழப்பு!
[Saturday 2024-05-04 07:00]

நாமக்கல்லில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உயிரிழந்த தந்தையை தொடர்ந்து மகள் நதியாவும் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள கொண்டிச்செட்டிபட்டி தேவராயபுரத்தை சேர்ந்த பகவதி (20) என்ற தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஓட்டல் ஒன்றில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு உள்ளார்.



“ராகுல் காந்தி தப்பி ஓடுவது இது முதல் முறையல்ல” - ஸ்மிருதி இராணி விமர்சனம்!
[Saturday 2024-05-04 07:00]

நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அடுத்து வரவிருக்கும் மூன்றாம், நான்காம் கட்டத் தேர்தலுக்காக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



அமித்ஷா மீது வழக்குப்பதிவு!
[Saturday 2024-05-04 07:00]

நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அடுத்து வரவிருக்கும் மூன்றாம், நான்காம் கட்டத் தேர்தலுக்காக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



மதுபானக் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சாதகமாகும் தீர்ப்பு?
[Friday 2024-05-03 18:00]

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.



சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஊடகவியலாளர் பலி!
[Friday 2024-05-03 18:00]

ஊடகவியலாளர்கள் வெயில், மழை, இரவு, பகல் பார்த்து பணி செய்வதில்லை. உலகம் முழுவதும் இராணுவ மோதலின்போது செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உயிரைவிட்ட ஊடகவியலாளர்கள் அனேகம்பேர். இந்தியாவிலும் செய்திப் பணிக்காகக் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்களின் பட்டியல் பெரிது. ஆக, உயிரையும் பணயம் வைத்துச் செய்தி சேகரிப்பது, ஒரு சமூகத் தொண்டாகவே கருதப்படுகிறது.



பத்மஸ்ரீ விருது பெற்றவருக்கு ஏற்பட்டுள்ள அவலநிலை!
[Friday 2024-05-03 18:00]

இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற பெற்றவர் தற்போது தினக்கூலிக்கு வேலை செய்து வருகிறார். இந்திய மாநிலமான தெலங்கானாவைச் சேர்ந்தவர் தர்ஷனம் மொகிலையா (Mogulaiah). இவர், வீணை போன்ற ஒரு சரம் கொண்ட கருவியான கின்னரா என்ற பழங்குடி இசைக்கருவியை இசைக்கும் கலைஞர் ஆவார்.



விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது!
[Friday 2024-05-03 18:00]

மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.



கோவாக்சின் பாதுகாப்பானது: பயோடெக் நிறுவனம் விளக்கம்!
[Friday 2024-05-03 06:00]

கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியில் இரத்த உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தெரிவித்ததை அடுத்து, கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்டவர்களிடையே அச்சம் ஏற்பட்டது. இந்த அச்சத்தை போக்கும் வகையில், கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் இரத்த உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.



மேற்குவங்க ஆளுநர் மீது பாலியல் புகார்!
[Friday 2024-05-03 06:00]

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் பெண் ஒருவர் அம்மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த்போஸ் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். ஹேர் ஸ்ட்ரீட் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இந்த பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



'பெண்கள், சிறுவர்கள் மீது தடியடி?'- விசிக போராட்டம்!
[Friday 2024-05-03 06:00]

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டதால் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் கல்வீச்சு சம்பவம் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் தடியடி நடத்தி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.



கோவி ஷீல்டை அடுத்து கோவாக்சின்: தயாரிப்பு நிறுவனம் கொடுத்த விளக்கம்!
[Thursday 2024-05-02 18:00]

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் பலியானார்கள். இந்தத் தொற்றை கட்டுப்படுத்த உலகில் உள்ள மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உட்பட அனைவரும் பல்வேறு ஆய்வுகளை செய்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற தீவிர முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.



சென்னையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்குக் கொடுக்கப்பட்ட திடீர் அறிவிப்பு!
[Thursday 2024-05-02 18:00]

18 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.



உத்தர பிரதேசத்தில் சோகம்: மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்!
[Thursday 2024-05-02 18:00]

கங்கை நதியில் உடம்பை வைத்திருந்தால் பாம்பு கடியின் விஷம் தானாக இறங்கி விடும் என்ற மூடநம்பிக்கையால் ஒரு உயிர் பறிபோகியுள்ளது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில 20 வயது கல்லூரி மாணவர் மோகித் என்பவர் பி.காம் படித்து வந்துள்ளார்.



சொத்துக்காக தாயை அடித்தே கொன்ற கொடூரன்!
[Thursday 2024-05-02 18:00]

இந்திய மாநிலம் ஆந்திராவில் வளர்ப்பு தாயை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தத்து நாயக். இவரது தந்தையின் முதல் மனைவியான லட்சுமி பாய், சொந்த மகன் போல தத்து நாயக்கை சிறுவயது முதலேயே வளர்த்து வந்துள்ளார்.



உலகில் அதிக சம்பளம் வாங்கும் இந்தியர்: யார் அந்த தமிழர்?
[Thursday 2024-05-02 06:00]

உலகின் அதிக சம்பளம் வாங்கும் இந்தியர் யார் தெரியுமா? அது வேறு யாரும் இல்லை, நம்ம சொந்த தமிழர் சுந்தர் பிச்சை தான்! கூகுள் நிறுவனத்தின் CEO ஆக இருக்கும் சுந்தர் பிச்சை, வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளிகளில் அதிக சம்பளம் வாங்குபவர் என்ற பெருமைக்குரியவர்.



"2 எருமை மாடுகள் இருந்தால் காங்கிரஸ் ஆட்சியில் ஒன்றை பறித்துக்கொள்வார்கள்" - பிரதமர் மோடி பேச்சு!
[Thursday 2024-05-02 06:00]

உங்களிடம் 2 எருமை மாடுகள் இருந்தால், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் ஒரு எருமை மாட்டை உங்களிடம் இருந்து பறித்துவிடுவார்கள் என குஜராத்தில் மாடுகள் வளர்க்கும் மக்கள் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது.



நிலவின் தென்துருவத்தில் தண்ணீர்: உறுதி செய்த இஸ்ரோ!
[Thursday 2024-05-02 06:00]

இந்தியா சார்பில் நிலவின் தென் துருவத்தை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு நிலவுக்கு மிக அருகில் சென்றதைத் தொடர்ந்து கடந்த வருடம் ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.2 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து லேண்டரில் இருந்த ரோவர் வெளியே வந்து நிலவில் ஆய்வுகளை செய்து வருகிறது.



ரஷ்யாவிலிருந்து வந்த இ-மெயில்: தகிக்கும் டெல்லி!
[Wednesday 2024-05-01 16:00]

டெல்லியில் 80க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள மூன்று பள்ளிக்கு இன்று காலை இ - மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.



திட்டவட்டமாக மறுத்த கர்நாடக அரசு: உச்சநீதிமன்றத்தை நாடும் தமிழக அரசு!
[Wednesday 2024-05-01 16:00]

காவிரியில் இருந்து தமிழகத்திற்குத் தரவேண்டிய தண்ணீரை தர கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகள்: இந்திய மருத்துவர்கள் சொல்வது என்ன?
[Wednesday 2024-05-01 16:00]

இந்தியாவில் சுமார் 175 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், பக்கவிளைவுகள் ஏற்படும் என்று தயாரிப்பு நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதுமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன.


Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா