Untitled Document
May 3, 2024 [GMT]
கனேடிய தமிழ் காங்கிரஸ் உலகத் தமிழர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்!
[Friday 2024-04-05 16:00]

தமிழர்களுக்கு எதிராக எந்த விதமான இனப்படுகொலையும் நடைபெறவில்லை என்பதை கனடிய தமிழர் பேரவை (CTC) தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கனேடியத் தமிழர் கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளதுடன்,  கனடிய தமிழர் பேரவை தொடர்பாக விமர்சனங்களையும் முன்வைத்துள்ளது.

தமிழர்களுக்கு எதிராக எந்த விதமான இனப்படுகொலையும் நடைபெறவில்லை என்பதை கனடிய தமிழர் பேரவை (CTC) தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கனேடியத் தமிழர் கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளதுடன், கனடிய தமிழர் பேரவை தொடர்பாக விமர்சனங்களையும் முன்வைத்துள்ளது.

  

அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு,

கனடிய தமிழர் பேரவைக்கு ("CTC") எதிரான கண்டனம் மற்றும் நடவடிக்கைக்கான அழைப்புகள் ஈழத்தமிழர்கள் மத்தியில் தொடர்ந்து உரத்து எதிரொலிக்கிறது.

எனினும், இது பற்றிய எந்த நடவடிக்கையும் எடுக்காத தன்மை CTC தரப்பில் நீடிக்கிறது. சமூகத்தின் அனைத்து பிரிவினர்களிடமிருந்தும் ஒரு காத்திரமான பதிலை எதிர்பார்த்து பல கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ஈழத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் உள்ள கிராமம் மற்றும் நகர சங்கங்கள் உட்பட, மாணவர் சங்கங்களுக்கும் அப்பால் இக்கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. CTC இன் நெருக்கமான இரகசிய உறுப்பினர்களையும் தாண்டி இவ்வாறான கண்டனங்கள் பரவலடைந்துள்ளன.

அண்மையில், கனேடியத் தமிழர் கூட்டு (“கூட்டு”) மார்ச் 23, 2024 அன்று நடத்திய மக்கள் சந்திப்பில் இது தெளிவாக வெளிப்பட்டது. இதில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான சமூக உறுப்பினர்கள் தங்கள் அக்கறை, விரக்தி, சீற்றம் மற்றும் கவலை என்பவற்றை CTCஇன் நடவடிக்கைகள் தொடர்பில் வெளிப்படுத்தினர்.

இமாலயப் பிரகடனம்

ஏப்ரல் 27, 2023 அன்று, CTC யின் பிரதிநிதி திரு. ராஜ் தவரட்ணசிங்கம் இமயமலைப் பிரகடனத்தில் ("பிரகடனம்") கையெழுத்திட்டார்.

அதில் தமிழ் மக்கள் மீது, இலங்கை அரசு இழைத்த கொடுமைகளான இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் அல்லது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் எவ்வித பொருள்கோடலோ, ஒப்புதலோ, அடையாளப்படுத்தலோ உள்ளடக்கப்படவில்லை.

ஈழத்தமிழர்களிடமிருந்து எந்தவித கருத்து உள்வாங்கலோ அல்லது பங்களிப்போ இல்லாமல் குறித்த பிரகடனம் கையெழுத்திடப்பட்டது. குறித்த பிரகடனம், கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை நியாயப்படுத்தவும் வரலாற்று ரீதியாக தொடர்ந்த அநீதிகளுக்கான தடயங்களை அழிக்கவும் முயல்கிறது.

அதில் தமிழர்கள் குறித்த குறிப்போ அல்லது அவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்தோ இல்லாமை இலங்கையை சமத்துவம் மற்றும் பன்மைத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகமாக படம்பிடித்து காட்ட முயல்கிறது.

அடிப்படை உரிமைகள்

இது இலங்கை குறித்த உண்மைத் தன்மைக்கு வெகுவாக அப்பாற்பட்டது. நிதர்சனத்தில், அடிப்படை உண்மைகளை அங்கீகரிக்காமல், உண்மையான நல்லிணக்கம் என்பது எப்போதும் சாத்தியமாகாது.

இத்தகைய அருவருப்பான செயலை நியாயப்படுத்த சிங்களம் என்ற பதமும் பிரகடனத்தில் குறிப்பிடப்படவில்லை என கூறுவது, தமிழர்கள் எதிர்கொண்ட துன்பம் நிறைந்த வரலாற்றை கேலிக்கூத்தாக்குவதாகும்.

அதேவேளை, குற்றவாளியை பாதிக்கப்பட்டவர்களுடன் சமநிலையில் வைத்திருக்கும் ஒரு முயற்சியாகும்.

குறித்த பிரகடனத்தை ஒரு உடன்படிக்கை அல்ல என CTCதவறாக வகைப்படுத்துகிறது. எனினும், இந்தப் பிரகடனம் அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் அடிப்படையாக இருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலை, தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அநீதிகளைத் முற்றாக மறைத்து, நல்லிணக்கத்தை வெறும் வார்த்தை பிரயோகமாக மாத்திரமே வைத்திருக்கும்.

பொருளாதார தடையாக மாத்திரம்....

போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்சவை CTC சந்தித்ததோடு அவருடன் ஒளிப்படமும் எடுத்துக்கொண்டது. கனேடிய அரசாங்கம் மஹிந்த ராஜபக்சவுக்கு தடை விதித்துள்ளது. இருப்பினும், CTC, தடையை பொருளாதார தடையாக மட்டுமே வகைப்படுத்துகிறது.

இது போன்ற தடைகளின் நோக்கத்தையும், அர்த்தத்தையும் புரிந்துகொள்ளவோ அல்லது கண்டுகொள்ளவோ இயலாத நிலையில் CTC தனது பார்வைப்புலனை இழந்துள்ளது.

இந்தத் தடை பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கலாம். இருப்பினும், அத்தகைய தடைகளின் நோக்கங்கள் எப்போதும் முற்றிலும் அரசியல் சார்ந்தவையே. இந்தத் தடையை வெறுமனே பொருளாதாரத்துடன் தொடர்புடையது என வகைப்படுத்துவது கபடத்தனமானதும், பயங்கரமானதுமாகும்.

தன்னிச்சையான முடிவுகள்

புதிய உறுப்பினர்களின் இணைப்புக்கான கோரிக்கைகளை CTC தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. தற்போது, உறுப்பினர் இணைப்பு என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

உறுப்பினர் இணைப்புக் குறித்த முடிவுகள், முற்றிலும் தன்னிச்சையானவையாக உள்ளது. இது எந்தவிதமான ஜனநாயக கோட்பாடுகள், பொறுப்புக்கூறல், சட்டத்தின் ஆட்சி அல்லது வெளிப்படைத்தன்மையற்ற ஒரு முறையாகும். தமது முடிவுகள் உறுப்பினர்களின் ஆதரவை அடிப்படையாகக் கொண்டவை என்பதை CTC தொடர்ந்துவலியுறுத்துகிறது.

இருப்பினும், உறுப்பினர் அனுமதி என்பது, தமக்கு இணக்கமான குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தெரிவு செய்யப்பட்ட தனிநபர்களுக்கானது என்ற நிலை அவமானகரமானதும், அபாயகரமானதும் ஆகும்.

CTCஇன் ஆயுதம்

இந்த அணுகுமுறை சுதந்திரமாகக் கருத்துக்கூற முடியாமை மற்றும் உண்மையான விருப்பத்தை வெளிப்படுத்த முடியாத நிலையை உருவாக்கி, தமிழர்களைத் தோல்வியுறச் செய்கிறது. இத்தகைய அநீதியை எதிர்க்கும் ஊடகவியலாளர் அல்லது சமூக உறுப்பினர்களுக்கு எதிராக அவதூறு சட்டத்தை CTC தொடர்ந்து ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.

இது பேச்சு சுதந்திரம் மற்றும் பொதுப் பங்கேற்பை மௌனமாக்கும் ஒரு நகர்வாகும்.

இறுதியாக, தமிழர்களுக்கு எதிராக எந்த விதமான இனப்படுகொலையும் நடைபெறவில்லை என்பதை CTC தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இது உலகின் அனைத்து மூலைகளிலும் உள்ள தமிழர்கள் நிராகரித்துக் கண்டிக்கும் ஒரு நிலைப்பாடாகும். CTC யின் தொடரும் இனப்படுகொலை மறுப்பும், அதனை நியாயப்படுத்துதலும், பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் அவமானப்படுத்துவதாகும்.

நடைபெற்ற இனப்படுகொலை என்பது தமிழர்களை மீள முடியாத துயரில் தொடர்ந்தும் வைத்துள்ளது.

தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் CTC இதனை மறுப்பது, இந்தத் துயரையும் அழிவையும் தொடர ஏதுவாக்குகிறது. அத்தகைய ஒரு நிலைப்பாடு, இழந்த உயிர்களைப் பெரிதும் அவமதிப்பதோடு, அவர்களின் சாம்பல்களையும், கல்லறைகளையும் இழிவுபடுத்துவதற்குச் சமமானதாகும்.

இந்தத் தருணத்தில், ஈழத் தமிழர்கள் அல்லது கனேடியத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தவோ, அல்லது "தமிழர்களின் குரல்" எனத் தம்மைப் பகிரங்கமாக அடையாளப்படுத்தவோ, தார்மீக மற்றும் அதிகாரத்தை CTC இழக்கிறது.

முன்மொழிவுகள்

எனவே, CTC கண்டிப்பாக:

• பிரகடனத்தில் இருந்து பகிரங்கமாக விலக வேண்டும். இது போன்ற நிலை மீண்டும் நடைபெறாமல் இருக்க, இந்த மாபெரும் தவறுக்கு வழிவகுத்த முடிவெடுக்கும்.

• செயல்முறையை வெளிப்படுத்துவதுடன், ஈழத் தமிழர்களிடமும், உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடமும் நேரடியாக மன்னிப்புக் கோரவேண்டும்.

• கூட்டின் மக்கள் சந்திப்பு நடைபெற்ற மார்ச் 23, 2024 அன்று வெளியான CTC இன் அறிக்கை எந்த தவறுக்கும் பொறுப்பேற்கவில்லை. மாறாக, அது பிரகடனத்தில் இருந்து CTC யை விலத்தி வைக்க முயற்சிக்கிறது. அல்லது தனக்கான பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்க முயற்சிக்கிறது.

பிரகடனம் கடுமையாகக் கண்டிக்கப்பட்டு மீள முடியாத தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், CTC யின் இந்த நிலைப்பாடு பொறுப்பானதோ அல்லது ஏற்றுக்கொள்ளத்தக்கதோ அல்ல.

அரசியல் பரப்பரை

நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களின் அர்த்தமுள்ள ஈடுபாட்டுடன் ஈழத் தமிழர்கள் மற்றும் கனேடியத் தமிழர்களுக்கான அரசியல் பரப்புரைகளை முன்னெடுக்க வேண்டும்.

கனேடியத் தமிழர்களின் உண்மையான ஆணையை பெற்று, அவசியமான சீர்திருத்தம் நிகழும் வரை CTC அமைப்பானது, கனடா, அமெரிக்கா, இலங்கை அல்லது வேறு எந்த நாடுகளுடனோ அல்லது அவற்றின் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளுடனோ அனைத்து தொடர்புகளையும் நிறுத்த வேண்டும்.

இலங்கை மற்றும் பிற அரச அதிகாரிகளுடன் கனேடியத் தமிழர்களின் கருத்துக்கள் பெறப்படாமல் அல்லது அவர்களின் ஆணை எதுவுமின்றி, வரலாற்று ரீதியாக வெளிப்படைத்தன்மையற்ற பல சந்திப்புகளை CTC நடத்தியுள்ளது. அத்தகைய ஒரு அணுகுமுறை தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இறுதியாக, CTC தன் மீதான நம்பிக்கையை பெருமளவு இழந்துள்ளதை கருத்தில் கொண்டு, ஈழத் தமிழர்கள் மற்றும் கனேடியத் தமிழர்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கி, அடுத்தகட்ட நடவடிக்கைகளை தீர்மானிக்க உதவும் முகமாக, ஏப்ரல் 18, 2024க்குள் சமூக உறுப்பினர்களைக் கொண்ட ஒரு நிரந்தர நிலைக்குழுவை நிறுவுவதற்கான செயல்முறையை CTC ஆரம்பிக்க வேண்டும் என ‘கூட்டு’ அழைப்பு விடுகிறது.

  
   Bookmark and Share Seithy.com



அச்சுவேலியில் வீடுகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!
[Friday 2024-05-03 05:00]

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. அச்சுவேலி - சங்கானை வீதியில் தென்மூலைப் பகுதியில் குறித்த தாக்குதல் நேற்று நடத்தப்பட்டுள்ளது. இந்த, வன்முறைச் சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவில்லை!
[Friday 2024-05-03 05:00]

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் பணிகள் வெளிநாட்டு நிறுவனத்துக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. விசா விநியோகிக்கும் பணிகளுக்கு உரிய வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளுக்கான பொறுப்பு மாத்திரமே இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.



கட்டுநாயக்க விமான நிலைய விசா வழங்கும் பிரிவை இந்திய நிறுவனம் பொறுப்பேற்கவில்லை!
[Friday 2024-05-03 05:00]

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசா வழங்கும் நடைமுறையை இந்திய நிறுவனங்கள் பொறுப்பேற்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என கொழும்புக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.



வட இலங்கை சமாதானத்தை அனுபவிக்கிறதாம்!- சொல்கிறார் சொல்ஹெய்ம்.
[Friday 2024-05-03 05:00]

தற்போது வட இலங்கை சமாதானத்தை அனுபவிப்பதாகவும், யுத்தம் இடம்பெற்ற காலத்துக்குத் திரும்பிச்செல்வதை எவரும் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ள இலங்கைக்கான முன்னாள் சமாதானத்தூதுவரும், நோர்வே நாட்டு இராஜதந்திரியுமான எரிக் சொல்ஹெய்ம், இருப்பினும் இன்னமும் தமிழர்களின் அபிலாஷைகள் முழுமையாகப் பூர்த்திசெய்யப்படாத நிலையில் இலங்கை அரசு அதிகாரங்களைப் பகிரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு - 15ஆம் ஆண்டு நினைவு நாள்! Top News
[Friday 2024-05-03 05:00]

ஆண்டுகள் பல கடந்தும் நீதிக்காகவும், சுதந்திரவேட்கையோடு எம் மண்ணின் விடுதலைக்காகவும் இறுதிப்போரில் வதைக்கப்பட்ட,கொல்லப்பட்டஎம் உறவுகளுக்காகவும் லண்டன் மாநகரில் அணிதிரள்வோம் வாரீர்.



உமா ஓயாவினால் மின்சார சபைக்கு தினமும் 80 மில்லியன் ரூபா மிச்சம்!
[Friday 2024-05-03 05:00]

உமாஓயா அபிவிருத்தி திட்டம் செயற்படத் தொடங்கியதன் மூலம் மின்சார சபைக்கு நாளொன்றுக்கு 80 மில்லியன் ரூபா சேமிக்கப்படுவதாக என அதன் திட்டப் பணிப்பாளர் சுதர்ம எலகந்த தெரிவித்துள்ளார்.



நள்ளிரவில் குறைகிறது லிட்ரோ எரிவாயு விலை!
[Friday 2024-05-03 05:00]

சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைக்கப்படும் விலைகள் தொடர்பில் இன்ற அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். அதன்படி குறைக்கப்பட்ட விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.



அனுரவின் மேதின கூட்டத்திலேயே அதிக சனம்! - என்கிறார் சம்பிக்க.
[Friday 2024-05-03 05:00]

தேசிய மக்கள் சக்தியின் மே தின கூட்டத்திலேயே பெருமளவிலானோர் கலந்துக் கொண்டார்கள்.அவர்களின் கூட்டமே சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. பழைய மாக்ஸிச கொள்கையில் இருந்து மக்கள் விடுதலை முன்னணி விடுபட்டால் அரசியலில் முன்னேற்றமடையலாம் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.



இன, மதக் கலவரத்தை தடுத்தவர் பேராயர்!
[Friday 2024-05-03 05:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போது ஏற்படவிருந்த இன, மத கலவரத்தை பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தடுத்தார். எனவே அவர் மீது போலியான விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.



கனடாவில் முதியவர்களிடம் மோசடி செய்த இரு தமிழர்கள் கைது!
[Friday 2024-05-03 05:00]

கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்தில் பல முதியவர்களை ஏமாற்றி மோசடி செய்த குற்றச்சாட்டில் இரு தமிழர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.



அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியை இராணுவத்துக்கு சுவீகரிக்கும் முயற்சி தடுத்து நிறுத்தம்! Top News
[Thursday 2024-05-02 17:00]

முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுத்த முயற்சி அப் பகுதி மக்களாலும், அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலராலும் இன்று தடுத்து நிறுத்தப்பட்டது.



எரிக் சொல்ஹெய்முக்கு அம்பிகா கண்டனம்!
[Thursday 2024-05-02 17:00]

இலங்கையின் வடபகுதி அமைதியாக உள்ளது அது சிறப்பான விடயம் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்திற்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.



அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டிய நிலையில் உள்ளோம்!
[Thursday 2024-05-02 17:00]

தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமல்ல தமிழர் நிலம் அழிக்கப்படும் நிலையில் ஒன்று கூடியிருக்கிறோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.



கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா வழங்குவதை இந்திய நிறுவனம் பொறுப்பேற்றதால் பதற்றம்!
[Thursday 2024-05-02 17:00]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசா வழங்கும் நடைமுறை மே.1 ஆம் திகதி முதல் இந்திய தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதால், நேற்று மாலை 05.00 மணி முதல் அவர்களால் கணினிகளை சரியாக இயக்க முடியவில்லை, இதனால் விமான பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.



லக்ஷ்மன் யாப்பா, நஸீர் அஹமட் ஆளுநர்களாக சத்தியப் பிரமாணம்! Top News
[Thursday 2024-05-02 17:00]

தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அதேவேளை, வடமேல் மாகாண ஆளுநராக நஸீர் அஹமட் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.



சரத் பொன்சேகாவுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை!
[Thursday 2024-05-02 17:00]

ஐக்கிய மக்கள் சக்தி மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எந்தப் பங்கையும் வகிக்கவில்லை, எனவே அவருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று அதன் உப தலைவர் சுஜீவ சேனசிங்க இன்று தெரிவித்துள்ளார்.



பாடசாலை முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் முடிவு!
[Thursday 2024-05-02 17:00]

நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



புங்குடுதீவு அகழ்வில் செப்புக் காசுகளுடன் பெண்ணின் எலும்புக்கூடு சிக்கியது! Top News
[Thursday 2024-05-02 17:00]

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணிகள் மதியத்துடன் நிறைவுக்கு வந்தது.



அனுரகுமாரவைச் சந்தித்தார் நோர்வே தூதுவர்!
[Thursday 2024-05-02 17:00]

நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.



மன்னாரில் கைதான சந்தேக நபரின் 9 கோடி 30 லட்சம் சொத்துக்கள் முடக்கம்!
[Thursday 2024-05-02 16:00]

யுக்திய தேடுதல் நடவடிக்கையின் மன்னாரில் சந்தேக நபர் ஒருவரின் 9 கோடி 30 லட்சம் பெறுமதியான சொத்துக்கள் இன்று முடக்கப்பட்டுள்ளன.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா