Untitled Document
April 29, 2024 [GMT]
தமிழர்களை பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்துவது எதிர்காலத்தை அழிவுக்குள் தள்ளும்!
[Tuesday 2024-04-16 15:00]


தமிழர்களை தொடர்ந்தும் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தி செய்ய முற்படும் அரசியல் நாட்டின் எதிர்காலத்தை மேலும் அழிவுக்குள்ளேயே தள்ளும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

தமிழர்களை தொடர்ந்தும் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தி செய்ய முற்படும் அரசியல் நாட்டின் எதிர்காலத்தை மேலும் அழிவுக்குள்ளேயே தள்ளும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

  

அருட்தந்தை மா.சக்திவேல் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச பயங்கரவாதம் தமிழர் தரப்பில் பேரினவாதத்தின் கைக்கூலிகளாக செயற்பட்டோரை தவிர ஏனைய அனைத்து தமிழர்களையும் தொடர்ந்து பயங்கரவாதிகளாகவே பார்க்கிறது என்பதை எழுத்தாளரும் கவிஞருமான தீபச்செல்வனை அண்மையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைத்து நடத்திய நீண்ட விசாரணை மூலம் புலப்படுத்துகின்றது.

ஒரு நூல் வெளியீட்டு நிகழ்வினை தலைமை தாங்கியமையை காரணம் காட்டி விசாரணை என அழைத்து குறித்த நூல் புலிகளின் மீளுருவாக்கம் தொடர்பில் கருத்துள்ளனவா?என கேட்டு விசாரணை நடத்தியமை தமிழர் தாயகத்தின் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என்போரின் கருத்து சுதந்திரம் எழுத்து சுதந்திரம் என்பவற்றுக்கு எதிரான அச்சுறுத்தல் மட்டுமல்ல அடிப்படை உரிமை மீறலுமாகும்.

இத்தகைய அச்சுறுத்தல் உளவியல் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதோடு இத்தகைய தாக்குதலுக்கு எதிராக இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என்போர் ஜனநாயகத்தின் வழியில் எழுதுகோலினை(பேனை) கையில் எடுத்து தமது எதிர்ப்பினை வெளியிடுதல் வேண்டும்.

கருத்து சுதந்திரம் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் என்பவற்றை நசுக்குவதற்காக நிகழ்நிலை காப்பு சட்டத்தை நிறைவேற்றியுள்ள ஆட்சியாளர்கள் தமிழக தாயகத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மூலம் போர்க்கால நிகழ்வுகளை வெளிக்கொண்டுவரும் இலக்கியவாதிகள் எழுத்தாளர்கள் என்பவரை இலக்கு வைத்து அவர்களின் கழுத்தை நெரிக்க முற்படுவது ஜனநாயத்திற்கு எதிரான அராஜகமே.

பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நடாத்தியுள்ள இத்தகைய விசாரணை மூலம் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என்பவரை மன உளைச்சலுக்குள் தள்ளுவதோடு அவர்களின் குடும்ப உறவுகளையும் அச்சுறுத்தல் உளவியல் தாக்குதலுக்குள் உட்படுத்தி தாம் பாதுகாப்பில்லா சூழலிலா வாழ்கிறோம் எனும் மனநிலைக்குள் தள்ள வைப்பது பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் நோக்கமாகவும் இருக்கலாம்.

இராணுவத்தினரை பயன்படுத்தி மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்து அதன்மூலம் தியாக வரலாற்றை அழிக்க நினைத்து அது கை கூடாத நிலையில் நினைவேந்தலை தடுக்க சட்டம் கொண்டுவர உள்ளனர். இன்னொரு பக்கம் தொல்லியல் திணைக்களம் மூலம் தமிழர்களின் வரலாற்று தொன்மையை சிங்கள பௌத்தமாக்கி ஆக்கிரமித்துக் கொண்டு இப்போது போர்கால வரலாற்றினை அடுத்த சாந்ததியினருக்கு கடத்தும் இலக்கியவாதிகள் எழுத்தாளர்கள் என்போரை அச்சுறுத்தி அடக்கு முறையை பிரயோகிக்க நினைப்பது அரச பயங்கரவாதத்தின் அரசியல் கோழைத்தனமே அன்றி வேறில்லை.

போர்க்கால அனுபவங்கள், போரின் வலிகள் அதனை சுமந்து நிற்கும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் தேங்கிக்கிடக்கின்றது.அதனை இலக்கிய வடிவில் வெளியில் கொண்டு வருவதும் அதனை தமது வாழ்வு பயணத்தோடு சேமித்து கடப்பதும் உளவியல் சுகமாகும். அத்தோடு வரலாற்றையும் சேமிக்கும் செயற்பாடுமாகும். இதனை பயங்கரவாதமாக்குவது பயங்கரவாத சிந்தனை உளவியலாகும். இதுவே பயங்கரவாதம். இத்தகைய பயங்கரவாதத்திற்கு ஆட்சியாளர் முற்றுப்புள்ளி வைத்தல் வேண்டும். இல்லையேல் எதிர்காலம் இன்னும் பயங்கரமாகவே இருக்கும்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தீபச்செல்வனை விசாரணைக்கு உட்படுத்தியதன் மூலம் அவர்கள் நோக்கத்தை அடைய முடியாது.எந்த நூல் தொடர்பாக அவர் விசாரணைக்கு அழைகப்பட்டாரோ அந்த நூலான 30 நாட்களை நீந்தி கடந்த நெருப்பாறு எனும் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதன் அவர்களின் நோக்கம் மிக மிக வேகமாக மக்களை சென்றடையும். அத்தோடு தீபச்செல்வன் அவர்கள் எழுத்தின் வீச்சும் மேலும் விரிவடையும். இதற்கு தேசிய பற்றாளர்கள் தமது ஆதரவினையும் வழங்குவர்.

தமிழர்களின் தேசியம் தொடர்பான சிந்தனையை 2009 இனப்படுகொலையோடு முடிவுக்கு வந்துவிட்டோம் என ஆட்சியாளர் நினைக்கும் போது அது ஜனநாயக வடிவில் மீண்டும் மக்கள் மயமாகி உயிர்ப்பு பெற்று வருகின்றது. தற்போது பேரினவாதத்தின் அடக்குமுறை, ஆக்கிரமிப்பு என்பவற்றை யுத்தமற்ற சூழ்நிலையிலும் நேரடியாக காண்பவர்கள் ஆங்காங்கே ஜனநாயக வடிவில் தமது தேசிய சிந்தனையை மீளுருவாக்கம் செய்து வருகின்றனர். இதற்கு பயங்கரவாதம் சாயம் பூசுவதற்கு எடுத்தாளர்களை விளக்க வைக்கின்றனர்.

பேரினவாதிகள் தமிழர்களை தொடர்ந்தும் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தி செய்ய முற்படும் அரசியல் நாட்டின் எதிர்காலத்தை மேலும் அழிவுக்குள்ளேயே தள்ளும். அழிவுகளை அரசியலாக்குவது நீடிக்க முடியாது என்பதை தற்போதைய சூழ்நிலை உணர்த்துகின்ற போது அதனை ஏற்றுக் கொள்ளாது வேறு திசையில் மக்களை திருப்பம் அடைவது வெட்கக்கேடு.

  
   Bookmark and Share Seithy.com



முல்லைத்தீவில் வசிக்கும் இலங்கையின் மிக உயரமான மனிதன்! Top News
[Monday 2024-04-29 16:00]

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் இலங்கையில் மிகவும் உயரமான மனிதர் குணசிங்கம் கஜேந்திரன் வசித்து வருகின்றார். இவர் 7 அடி 2 அங்குலம் உயரத்தினை கொண்டிருப்பதனாலேயே இலங்கையில் தற்போது உயரமான மனிதனாக இடம் பிடித்துள்ளார்.



வேலையில்லா பட்டதாரிகள் யாழ். மாவட்டச் செயலகம் முன் போராட்டம்! Top News
[Monday 2024-04-29 16:00]

வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினால் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



கிளிநொச்சி, மட்டக்களப்பில் தமிழரசின் மே தின கூட்டங்கள்!
[Monday 2024-04-29 16:00]

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மே தினக் கூட்டங்கள் கிளிநொச்சியிலும் மட்டக்களப்பிலும் நடைபெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்ட தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்தக் கூட்டம் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.



மைத்திரியை முன்னிறுத்தி வரலாற்றுத் தவறு செய்து விட்டேன்!
[Monday 2024-04-29 16:00]

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக முன்னிறுத்தியமை தனது வாழ்க்கையில் செய்த வரலாற்றுத் தவறு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.



முன்னாள் எம்.பி. ஈழவேந்தன் கனடாவில் காலமானார்!
[Monday 2024-04-29 16:00]

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் உடல்நலக் குறைவு காரணமாக கனடா - டொராண்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.



17 வயது சிறுவனை இங்கிலாந்துக்கு அழைத்து செல்ல முயன்ற பெண்கள் கைது!
[Monday 2024-04-29 16:00]

இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கைத் தாய் மற்றும் அவரது மகனின் தகவல்களை பயன்படுத்தி போலி ஆவணங்களை தயாரித்து, 17 வயதுடைய இளைஞனை இங்கிலாந்திற்கு அழைத்து செல்ல முயன்ற இரண்டு பெண்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ள சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது .



நாயாறு கடலில் மூழ்கி காணாமல் போனவரின் சடலம் கரையொதுங்கியது!
[Monday 2024-04-29 16:00]

முல்லைத்தீவு நாயாறு கடலில் குளிக்கச் சென்று மூழ்கிய இருவரில் ஒருவரின் சடலம் இன்று கரையொதுங்கியுள்ளது.



யாழ். சிறைச்சாலையில் தாக்கப்பட்ட கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி!
[Monday 2024-04-29 16:00]

யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களின் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவித்து , விளக்கமறியல் கைதிகள் இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



வவுனியாவில் ஹெரோயினுடன் இளைஞன் கைது!
[Monday 2024-04-29 15:00]

வவுனியா- ஒமந்தைப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.



வடக்கில் தகுதியற்ற அதிகாரிகளுக்கு உயர் பதவி - கல்வியை சீரழிக்கும் சதி என்கிறார் சந்திரசேகரன்!
[Monday 2024-04-29 05:00]

வட மாகாணத்தில் கல்வியில் தகுதியற்றவர்களுக்கும், குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கும் உயர் பதவியை வழங்கி வடக்கு கல்வியை அழிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.



நாயாறு கடலில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கினார்!
[Monday 2024-04-29 05:00]

முல்லைத்தீவுநாயாறு கடல் பகுதியில் நீராடச் சென்ற ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவில் இருவர் நீரில் மூழ்கியதில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் இன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.



கோட்டாவுக்குப் பின்னால் நின்றவர்கள் இப்போது தங்களின் பக்கம் என்கிறார் அனுர!
[Monday 2024-04-29 05:00]

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு வெளிநாட்டு இலங்கையர்கள் முக்கியப் பங்காற்றியதாகக் குறிப்பிட்ட தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இம்முறை அவர்களின் முதன்மைத் தேர்வாக தேசிய மக்கள் சக்தியே உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.



முகமாலையில் இன்று அகழ்வுப் பணி!
[Monday 2024-04-29 05:00]

பளை - முகமாலை பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில், இன்று மேலதிக அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.



சுண்டிக்குளத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவர்களுடன் ரவிகரன் சந்திப்பு!
[Monday 2024-04-29 05:00]

கரியல்வயல், சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்கு தாக்கல் செய்துள்ள இடங்களுக்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஞாயிற்றுக்கிழமை களவிஜயம் மேற்கொண்டு அவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.



ஆவரங்காலில் காய்ச்சலுக்கு 5 வயதுச் சிறுமி பலி!
[Monday 2024-04-29 05:00]

யாழ்ப்பாணம் - ஆவரங்கால் கிழக்கைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சஸ்மிதா என்ற 5 வயதான சிறுமி காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு போகும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.



புதுக்குடியிருப்பில் ஊழியரின் தாக்குதலில் மரக்காலை உரிமையாளர் படுகாயம்!
[Monday 2024-04-29 05:00]

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை வீதி சிவநகர் பகுதியில் அமைந்துள்ள மரக்காலையில் பணிபுரியும் ஊழியரால், மரக்காலை உரிமையாளர் மீது நேற்று அதிகாலை 2 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான மல்லிகைத்தீவினை சேர்ந்த மரக்காலை உரிமையாளர் வேலுப்பிள்ளை வரதகுமார் (35 வயது) யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



குறையும் பிறப்பு, உயரும் இறப்பு! - பாதிக்கப்படும் இயற்கைச் சமநிலை.
[Monday 2024-04-29 05:00]

2020ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளதோடு இறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் லக்ஷிகா கணேபொல தெரிவித்துள்ளார்.



ஊழியர் சேமலாப நிதியத்திற்கான வட்டி 13 வீதமாக அதிகரிப்பு!
[Monday 2024-04-29 05:00]

ஊழியர் சேமலாப நிதியத்திற்காக வழங்கப்படும் வட்டி விகிதத்தை 9 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.



நாட்டை விட்டுத் தப்பிக்க முயன்ற பாதாள உலகத் தலைவரை காட்டிக் கொடுத்தது இயந்திரம்!
[Monday 2024-04-29 05:00]

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த பிரதான பாதாள உலக உறுப்பினர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.



பாரதிபுரத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்த 5 பொலிசாருக்கு மரணதண்டனை!
[Sunday 2024-04-28 18:00]

கந்தளாய் - பாரதிபுரம் கிராமத்தில் 28 வருடங்களுக்கு முன்னர் 8 தமிழ் மக்களைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட ஐந்து பொலிஸாருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா