Untitled Document
May 2, 2024 [GMT]
கச்சதீவு விடயத்திலும் ஈழத்தமிழர்கள் பார்வையாளர்கள்.
[Friday 2024-04-19 20:00]

இந்து சமுத்திரத்தைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும், நிர்வகிக்கவும்வல்ல  கேந்திர மையத்தில்இந்தியாவும் இலங்கைத்  தீவும் அமைந்திருப்பதனால் இன்றைய சர்வதேச ஒழுங்கு மாற்றத்தில் இந்தபிராந்தியம் முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது. இந்த நிலையில் இந்தியாவிலும் இலங்கையிலும்தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில் பாக்கு நீரிணை சார்ந்தும், கச்சதீவு சார்ந்தும் இரு நாடுகளிலும் தேர்தல் அரசியல் நலன்களுக்காக செயற்கையான ஒரு முறுகல்நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

இந்து சமுத்திரத்தைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும், நிர்வகிக்கவும்வல்ல கேந்திர மையத்தில்இந்தியாவும் இலங்கைத் தீவும் அமைந்திருப்பதனால் இன்றைய சர்வதேச ஒழுங்கு மாற்றத்தில் இந்தபிராந்தியம் முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது. இந்த நிலையில் இந்தியாவிலும் இலங்கையிலும்தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில் பாக்கு நீரிணை சார்ந்தும், கச்சதீவு சார்ந்தும் இரு நாடுகளிலும் தேர்தல் அரசியல் நலன்களுக்காக செயற்கையான ஒரு முறுகல்நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

  

கச்சதீவு உரிமை சார்ந்த பிரச்சனை அதிகம் முக்கியத்தும் பெறுகிறது. இந்தப் பிரச்சனையில் முக்கியபங்குதாரர்கள் ஈழத் தமிழர்கள் என்பதை இருநாட்டு தரப்பினரும் மறந்திருக்கிறார்கள் அல்லதுமறைத்திருக்கிறார்கள் என்ற கோணத்தில் இருந்து ஈழத் தமிழர்கள் சார்பாக நாம் பேசவேண்டிய நிர்ப்பந்தம்ஏற்பட்டிருக்கிறது.

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து 20 கிலோ மீற்றர்கள் தொலைவிலும் இந்தியாவின் இராமநாதபுரத்தில்இருந்து 10 கிலோமிற்றர்கள் தொலைவிலும் கச்சதீவு அமைந்துள்ளது.

வங்காள விரிகுடாவிலிருந்து பாக்கு நீரணைக்கு நுழைகின்ற. நுழை வாயிலை கண்காணிக்கக்கூடிய கேந்திரஸ்தானத்தில் கச்சதீவு இருப்பதனால் அது கடல்சார் பாதுகாப்பில் இந்தியாவுக்கு பெரிதும் துணைநிற்கவல்லது.இந்தியாவுக்கும் இலங்கைக்குமான கடல் எல்லைகள் வரையறுக்கப்பட்ட போது இரண்டுநிலப்பரப்புக்கும் இடைப்பட்ட கடல்கள் சமமாக பங்கிடப்பட்டன. அந்த அடிப்படையில் கச்சதீவு இந்தியநிலப்பரப்புக்குள் இருந்தது. ஆனாலும் அரசியலில் ஏற்படுகின்ற விட்டுக்கொடுப்புகளும், நிர்ப்பந்தங்களும், நலன்களும், ராஜதந்திர வியூகங்களும் அவ்வப்போது நிலங்களையும், கடல் எல்லைகளையும், நிர்வாகஎல்லைகளையும் மாற்றி அமைக்கும் என்பதற்கு கச்சதீவு சிறந்த உதாரணம்.

எதிரணியினரால் சூழப்பட்டிருந்த இந்தியா, இலங்கையை தன் பக்கம் இழுப்பதற்கான ஒரு முயற்சியாகவேதன்னுடைய நிர்வாகத்தின் கீழுள்ள கச்சதீவை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கி இலங்கையுடனான உறவைபலப்படுத்துவதற்காகவே அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்திக்கும் இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோபண்டார நாயக்கவிற்கும் இடையில் 1974 யூன் 06ம் திகதி ஒப்பந்தம் கையெழுத்தாகியது என்றொரு கருத்துமுன்வைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து மீண்டுமொரு ஒப்பந்தம் 1976ஆம் ஆண்டு கச்சதீவு தொடர்பாகஇந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டது.

1974 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் பின்னர் கச்சதீவின் நிர்வாகம் யாழ்ப்பாண மாவட்டத்தின் நெடுந்தீவு பிரதேசசெயலகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.ஈழத் தமிழரின் மரபுவழித் தாயகத்தை அண்டிய கடலின்எல்லைக்குட்பட்ட வளங்களை பயன்படுத்துவது, நிர்வகிப்பது தொடர்பான அனைத்து விடயங்களிலும் ஈழத்தமிழர்கள் முக்கிய பாத்திரத்தை வகிக்க வேண்டும். இந்திய தரப்பால் முன்வைக்கப்படுகின்ற வரலாற்றுரீதியான ஆதாரங்களின் அளவுக்கு ஈழத் தமிழர்களால் எவ்வித ஆதாரங்களும் முன் வைக்கப்படவில்லை. ஈழத்தமிழர்கள் இந்த பிரச்சனை சார்ந்து எதுவும் பேசாமல் மௌனமாக இருப்பது மிக ஆபத்தானது. 1974ஆம்ஆண்டு ஒப்பந்தம், 1976ஆம் ஆண்டு ஒப்பந்தம், 1987 இந்தோ சிறிலங்கா ஒப்பந்தம் யாவற்றிலும்ஈழத்தமிழர்கள் ஒருதரப்பாக அல்லாமல், பார்வையாளர்களாகவே இருந்து வருகின்றார்கள். நாம் எமது அரசியல்இறைமையை வெளிப்படுத்த வேண்டும். ஜப்பானில் Okinawa நகரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம்தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் டோக்கியோவுடன் மட்டும் பேசவில்லை Okinawa மக்களுடனும் பேசியது.

அண்மைக் காலமாக கச்சதீவு பிரச்சனை பற்றி தமிழகத்திலும், இலங்கையிலும் மேற்கொள்ளப்படுகின்றநடவடிக்கைகளும், கருத்துருவாக்கங்களும் ஈழத் தமிழர்களை புறந்தள்ளி இதனை இலங்கை அரசுக்கும் அதன்கடற்படைக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையிலான எல்லை பிரச்சனையாக காட்டுவதாகவே அமைவதைக்காணலாம். இந்த விடயத்தில் பேசப்பட வேண்டிய முக்கிய தரப்பு ஈழத் தமிழர் ஆவார். பாக்கு நீரிணை கடற்பரப்பில் கடல் வளங்களை பயன்படுத்துவதற்கும் அனுபவிப்பதற்கு இரண்டு கடற்கரைகளிலும் வாழ்கின்ற தமிழ்மீனவ சமூகங்களுக்கே உரிமை உண்டு. இவ் இரு சமூகங்களும் தொல்தமிழ் குடி வழிவந்து இரண்டுகடற்கரையிலும் பரந்து வாழ்கின்ற தமிழ் சமூகமாகும். இத் தொல் தமிழ்குடி இரண்டு அரசுகளுக்குள்வாழ்ந்தாலும் அவர்கள் மொழியியல் பண்பாட்டு ரீதியில் ஒரே குழுமத்தினரே எனவே அந்த அடிப்படையும்கருத்திற் கொண்டு கச்சதீவு பிரச்சனை அணுகப்படவும், தீர்க்கப்படவும் வேண்டும்.

கச்சதீவுடன் தொடர்புடைய பிரச்சனையில் சிங்கள பௌத்த அரசு மீதான எதிர்ப்புணர்வை கொண்டிருக்கும் தமிழ்த்தேசிய சக்திகள் இந்திய தரப்பினரின் நிலைப்பாட்டை ஆதரிப்பதை அல்லது கண்டும் காணாமல்இருப்பதை அவதானிக்க முடிகிறது. இது ஈழத் தமிழர் தரப்பின் தோல்வி மனப்பான்மையிலிருந்து எழுகின்றஇயலாதன்மையின் வெளிப்பாடு.

இலங்கையை எதிர்ப்பதாக எண்ணிக்கொண்டு இந்தியத் தரப்பு ஈழத் தமிழரின் அடிமடியில் கை வைக்கஅனுமதிக்க முடியாது. இங்கு புத்தி பூர்வமாக ஈழத் தமிழர்கள் செயற்பட வேண்டும்

இந்திய தேர்தல் பிரச்சார உத்திகள் இலங்கை – இந்திய சர்ச்சையாக முரண்பாடாக எழுகிறதோ இல்லையோ, எதிர்காலத்தில் தமிழகத் தமிழர்களும், ஈழத் தமிழர்களும் மோதுகிற ஒரு நிலையை நோக்கியே இழுத்து, வளர்த்துச் செல்லப்படுவதாகவே அமைகிறது. ஈழத் தமிழர்கள் தமிழகத் தமிழர்களையும் இந்தியாவையும்எதிர்க்கின்ற முரண்பாடுகளை ஏற்படுத்துகின்ற இத்தகைய செயல்களுக்கு இலங்கை அரசு பூரண அனுசரணைவழங்கி வருகிறது. அதற்கேற்றாற்போல் சிங்கள அரசுடன் கூட்டுச் சேர்ந்திருக்கின்ற தமிழ் அரசியல் தரப்பைஇணைத்து இந்திய எதிர்ப்பு வாதங்களை ஈழத் தமிழர்கள் என்ற போர்வையில் நடத்தியும் வருகிறது. இத்தகையசெயல்களை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் . தாய் தமிழகத்தின் உறவுகளுடன் தமிழர்களைப்பகையாளிகளிக. ஆக்க இலங்கையரசு மேற்கொள்கின்ற அனைத்து சதுரங்க நடவடிக்கைகளையும் தமிழ்தேசிய இனம் புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய ஒரு சூழலில் கச்சதீவு விவகாரம் இலங்கை அரசுடன் மாத்திரமல்ல அது ஈழத் தமிழர்களின் அரசியல்பொருளியல் நலத்துடனும் சம்பந்தப்பட்டது என்ற அடிப்படையில் ஈழத் தமிழர்கள் கச்சதீவு விவகாரத்தில்தலையிடவும், பேசவும் வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது.. பாக்கு நீரிணையும், கச்சதீவு கடற்பரப்பும்வரலாற்று ரீதியாக இருநாட்டு தமிழ் மக்களுடைய தொழில் புரியும் பாரம்பரிய கடற்பரப்பு. எனவே இந்த கடற்பரப்பு சார்ந்து எடுக்கப்படுகின்ற அரசியல் முடிவுகள் இருநாட்டு மீனவ சமூகங்களின் அனுமதியின்றி அல்லதுஅந்த மக்களுடைய ஆதரவின்றி எடுக்கப்படுமாயின் அது தொடர் பதற்றத்தையும் குழப்பங்களையும்விளைவிக்கும். எடுக்கப்படுகின்ற அரசியல் முடிவுகள் மக்களுக்கானதாக அமைய வேண்டும் . இரு தரப்பும்நலன்களை அனுபவிக்க கூடிய வகையிலும் இருதரப்பும் திருப்தி அடைய கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில் தமிழக மீனவ சங்கமும் வடகிழக்கு மீனவ சங்கமும் ஒரு மேசையில் அமர்ந்துபேசுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும் பட்சத்தில் இந்த பிரச்சனை அரசுகளின் தலையிடு இன்றிஇலகுவாக தீர்த்துவைக்கப்பட முடியும்.

தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

விசுவநாதன் ருத்திரகுமாரன்

பிரதமர்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

  
   Bookmark and Share Seithy.com



அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியை இராணுவத்துக்கு சுவீகரிக்கும் முயற்சி தடுத்து நிறுத்தம்! Top News
[Thursday 2024-05-02 17:00]

முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுத்த முயற்சி அப் பகுதி மக்களாலும், அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலராலும் இன்று தடுத்து நிறுத்தப்பட்டது.



எரிக் சொல்ஹெய்முக்கு அம்பிகா கண்டனம்!
[Thursday 2024-05-02 17:00]

இலங்கையின் வடபகுதி அமைதியாக உள்ளது அது சிறப்பான விடயம் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்திற்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.



அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டிய நிலையில் உள்ளோம்!
[Thursday 2024-05-02 17:00]

தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமல்ல தமிழர் நிலம் அழிக்கப்படும் நிலையில் ஒன்று கூடியிருக்கிறோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.



கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா வழங்குவதை இந்திய நிறுவனம் பொறுப்பேற்றதால் பதற்றம்!
[Thursday 2024-05-02 17:00]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசா வழங்கும் நடைமுறை மே.1 ஆம் திகதி முதல் இந்திய தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதால், நேற்று மாலை 05.00 மணி முதல் அவர்களால் கணினிகளை சரியாக இயக்க முடியவில்லை, இதனால் விமான பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.



லக்ஷ்மன் யாப்பா, நஸீர் அஹமட் ஆளுநர்களாக சத்தியப் பிரமாணம்! Top News
[Thursday 2024-05-02 17:00]

தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அதேவேளை, வடமேல் மாகாண ஆளுநராக நஸீர் அஹமட் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.



சரத் பொன்சேகாவுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை!
[Thursday 2024-05-02 17:00]

ஐக்கிய மக்கள் சக்தி மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எந்தப் பங்கையும் வகிக்கவில்லை, எனவே அவருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று அதன் உப தலைவர் சுஜீவ சேனசிங்க இன்று தெரிவித்துள்ளார்.



பாடசாலை முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் முடிவு!
[Thursday 2024-05-02 17:00]

நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



புங்குடுதீவு அகழ்வில் செப்புக் காசுகளுடன் பெண்ணின் எலும்புக்கூடு சிக்கியது! Top News
[Thursday 2024-05-02 17:00]

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணிகள் மதியத்துடன் நிறைவுக்கு வந்தது.



அனுரகுமாரவைச் சந்தித்தார் நோர்வே தூதுவர்!
[Thursday 2024-05-02 17:00]

நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.



மன்னாரில் கைதான சந்தேக நபரின் 9 கோடி 30 லட்சம் சொத்துக்கள் முடக்கம்!
[Thursday 2024-05-02 16:00]

யுக்திய தேடுதல் நடவடிக்கையின் மன்னாரில் சந்தேக நபர் ஒருவரின் 9 கோடி 30 லட்சம் பெறுமதியான சொத்துக்கள் இன்று முடக்கப்பட்டுள்ளன.



புரட்சிகர அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறேன்! - மேதினத்தில் சூளுரைத்த சிறீதரன்.
[Thursday 2024-05-02 07:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், அதன் எதிர்கால தலைமைத்துவத்தையும் மக்கள் மன்றத்தின் முன் கையளித்து, தமிழ்த் தேசிய மே நாளன்று புரட்சிகர அரசியல் பயணமாக எனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.



மக்கள் தீர்ப்பு ஒன்றைப் பெறுவதற்கே தமிழ்ப்பேசும் பொதுவேட்பாளர்!
[Thursday 2024-05-02 07:00]

வடக்கு, கிழக்கில் உள்ள எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றையோருக்கும் தெளிவுபடுத்தவும் மக்கள் தீர்ப்பு ஒன்றைப் பெறுவதற்கு ஆவன செய்யவதற்காகவே தமிழ்ப்பேசும் பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.



விக்கியின் 2 ஆவது விருப்பு வாக்கு யோசனை பொது வேட்பாளர் கோசத்தை மலினப்படுத்தும்!
[Thursday 2024-05-02 07:00]

தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் விக்னேஸ்வரனின் 2ஆம் வாக்கு அளிப்பது பற்றிய கூற்று சந்கேத்தை ஏற்படுத்துவதோடு பொதுவேட்பாளர் விடயத்தினை மலினப்படுத்துவதாகவும் உள்ளதென்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.



ஜனாதிபதித் தேர்தலை ஒட்டுமொத்த தமிழர் தேசத்து மக்களும் நிராகரிக்க வேண்டும்! Top News
[Thursday 2024-05-02 07:00]

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை ஒட்டுமொத்த தமிழர் தேசத்து மக்களும் நிராகரிக்க வேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம் என்று தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் மேதினப் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



எமது ஆட்சியின் கீழேயே அடுத்த மே தினம்! - அனுர சூளுரை.
[Thursday 2024-05-02 07:00]

முதலாளித்துவ வர்க்கத்தின் கீழ் இடம்பெறும் இறுதி மே தினக்கூட்டம் இதுவாகவே இருக்கும். அடுத்த மே தினக்கூட்டம் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழேயே நடைபெறும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க சூளுரைத்துள்ளார்.



எமது வேட்பாளரே வெற்றிபெறுவார்! - என்கிறார் மஹிந்த.
[Thursday 2024-05-02 07:00]

ஜனாதிபதி தேர்தலில் எமது வேட்பாளரே வெற்றிபெறுவார் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். கொழும்பு கெம்பல் பார்க்கில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.



ஈழவேந்தன் மறைவுக்கு வேலன் சுவாமிகள் இரங்கல்!
[Thursday 2024-05-02 07:00]

எமது ஈழ விடுதலைப் பயண வரலாற்றில் தடம் மாறாமல் உயர்ந்த இலட்சியத்துடன் பயணித்த விடுதலைச் செம்மல் ம.க.ஈழவேந்தன் ஐயாவின் மறைவு எம்மையெல்லாம் பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அன்னாருக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் சார்பில் எமது அஞ்சலிகளையும் புகழ் வணக்கத்தினையும் தெரிவித்துக்கொள்கிறோம் என தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.



வடக்கில் வெப்பநிலை 42 பாகை செல்சியசை விட அதிகரிக்கும்!
[Thursday 2024-05-02 07:00]

வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளில், அடுத்த சில நாட்களுக்கு 42 பாகை செல்சியஸ் இனை விட அதிகமான வெப்பநிலை காணப்படும் என, யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் அங்கீகரிக்கப்பட்ட வானிலையானருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.



இம்மாதக் கடைசியில் உயர்தரப் பரீட்சை பெறுபேறு!
[Thursday 2024-05-02 07:00]

கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



நாட்டின் மொத்த கையிருப்பு 05 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பு!
[Thursday 2024-05-02 07:00]

கடந்தமார்ச் மாதம் வரை நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 05 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா