Untitled Document
May 13, 2024 [GMT]
ஈராக் டிக்டோக் பிரபலம் மர்ம நபரால் சுட்டுக்கொலை!
[Sunday 2024-04-28 18:00]

ஈராக்கில் பெண் டிக்டோக் பிரபலம் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈராக் நாட்டில் குஃப்ரான் மஹ்தி சவாதி எனும் பெண் டிக்டோக்கில் பிரபலமானவர். ''ஓம் பஹத்'' என்று சமூக வலைத்தளங்களில் அழைக்கப்பட்ட இவர், நாட்டின் கலாச்சாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வீடியோக்களை டிக்டோக்கில் பதிவேற்றிய குற்றத்திற்காக கடந்த ஆண்டு 6 மாதம் சிறைத்தண்டனை பெற்றார்.

ஈராக்கில் பெண் டிக்டோக் பிரபலம் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈராக் நாட்டில் குஃப்ரான் மஹ்தி சவாதி எனும் பெண் டிக்டோக்கில் பிரபலமானவர். ''ஓம் பஹத்'' என்று சமூக வலைத்தளங்களில் அழைக்கப்பட்ட இவர், நாட்டின் கலாச்சாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வீடியோக்களை டிக்டோக்கில் பதிவேற்றிய குற்றத்திற்காக கடந்த ஆண்டு 6 மாதம் சிறைத்தண்டனை பெற்றார்.

  

இந்த நிலையில் ஓம் பஹத் தனது காரில் அமர்ந்திருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினார்.

இதில் ஓம் பஹத் ரத்த வெள்ளத்தில் சரிந்து காரிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது.

உணவு விநியோகம் செய்பவர் போல் வந்து குறித்த மர்ம நபர் இந்தக் கொலைச்சம்பவத்தை அரங்கேற்றியதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இச்சம்பவத்தில் மற்றொரு பெண் காயமடைந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் குஃப்ரான் மஹ்தி சவாதியின் மரணம் குறித்து விசாரிக்க சிறப்புக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் குஃப்ரான் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  
   Bookmark and Share Seithy.com



டென்மார்க்கில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!
[Monday 2024-05-13 06:00]

டென்மார்க்கில் உள்ள மத வழிபாட்டு இடங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. டென்மார்க் நாஸ்ட்வேட்(Naestved) நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் (11.05.2024)முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய தமிழின அழிப்பின் மூலம், தங்கள் இன்னுயிர்களை ஈர்ந்த மக்களுக்கும் மாவீரர்களுக்குமான சிறப்பு நினைவேந்தல் வழிபாடு பொதுமக்களால் உணர்வுடன் ஏற்பாடு செய்யப்பட்டது.



கனடாவில் அதிகரித்துள்ள வீட்டு வாடகைத் தொகை!
[Monday 2024-05-13 06:00]

கனடாவில்(Canada) வீட்டு வாடகைத் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் வாடகைத் தொகையானது 9.3 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் 2023ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இவ்வாறு அதிகரித்துள்ளமையானது ஆய்வுகளின் மூலம்தெரியவந்துள்ளது.



எவரெஸ்ட் சிகரத்தை 29ஆவது முறையாக அடைந்து சாதனை படைத்த நேபாளி!
[Monday 2024-05-13 06:00]

நேபாள மலையேற்ற வீரர் கமி ரீட்டா 29ஆவது முறையாகவும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வரலாற்று படைத்துள்ளார். நேபாளத்தில் சாகர்மாதா என்று அழைக்கப்படும் எவரெஸ்ட், கடல் மட்டத்திலிருந்து 8,848.86 மீட்டர் உயரத்தில் உள்ளது, இது பூமியின் மிக உயரமான மலை சிகரமாகும். இந்நிலையில் ‘எவரெஸ்ட் மேன்’ என்று அழைக்கப்படும் 54 வயதான நேபாள மலையேற்ற வீரர் கமி ரீட்டா 29ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறி தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார்.



மீண்டும் மிரட்டும் பாபா வாங்கா கணிப்பு!
[Sunday 2024-05-12 16:00]

2024ல் பெரும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் என பாபா வாங்கா கணித்துள்ளதாக கூறப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டு பிறந்து நான்கு மாதங்கள் கடந்துவிட்டன. உலகம் முழுவதும் பல்வேறு வகையான அசௌகரியங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பல்கேரியாவை சேர்ந்த பார்வையற்ற தீர்க்கதரிசி பாபா வங்கா 1996 இல் தனது 85 வயதில் காலமானதற்கு முன் கூறிய சில கணிப்புகள் ஏற்கனவே கவனத்தை ஈர்த்து வருகின்றன.



அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையின் முதல் பயனாளி மரணம்!
[Sunday 2024-05-12 16:00]

அமெரிக்காவில் (America) மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையின் முதல் பயனாளி சிகிச்சை முடிந்து இரண்டு மாதங்களுக்குப் பின்னர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது குடும்பத்தினரும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை வைத்தியர்களும் நேற்று (11) இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர்.



காசாவில் கட்டிடங்களின் இடிபாடுகளில் 10000 உடல்கள்!
[Sunday 2024-05-12 16:00]

இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் தகர்க்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளின் கீழ் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உடல்கள் உள்ளன என காசாவின் சிவில் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தாக்குதலை மேற்கொண்டதும் மருத்துபிரிவினரும் காசாவின் சிவில் பாதுகாப்பு பிரிவினருமே முதலில் அங்கு செல்கின்றனர்.



"பெஞ்சமின் நெட்டன்யாகு ஒரு இனப்படுகொலையான்" - கொலம்பிய ஜனாதிபதி விமர்சனம்!
[Sunday 2024-05-12 16:00]

வரலாற்றில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு ஒரு இனப்படுகொலையாளன் என பதிவுசெய்யப்படுவார் என கொலம்பிய ஜனாதிபதி கஸ்டவோ பெட்டிரோ பதிவிட்டுள்ளார். பெஞ்சமின் நெட்டன்யாகு அப்பாவி சிறுவர்கள் பெண்கள் முதியவர்கள் மீது ஆயிரக்கணக்கில் குண்டுகளை வீசுகின்றார் இதன் காரணமாக அவர் கதாநாயகனாக மாற முடியாது என அவர் பதிவிட்டுள்ளார்.



மியான்மார் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 15 இலங்கையர்கள் விடுதலை!
[Sunday 2024-05-12 06:00]

மியான்மார் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு அந்நாட்டுச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை கடற்றொழிலாளர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நேற்று இவர்கள் நாட்டை வந்தடைந்தடைந்துள்ளனர். இந்நிலையில் குறித்த 15 பேரும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இளவரசி கேட்டின் உடல் நிலை தொடர்பில் இளவரசர் வில்லியம் விளக்கம்!
[Sunday 2024-05-12 06:00]

பிரித்தானிய இளவரசி(Catherine, Princess) கேட்டின் உடல் நிலை சீராக இருப்பதாக இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார். இளவரசர் வில்லியம், மருத்துவமனை ஒன்றின் புதிய கட்டிட கட்டுமானப்பணியின் ஆரம்ப விழாக்கு நேற்று சென்றிருந்த நிலையில் மேற்படி கூறியுள்ளார்.



இஸ்ரேல் தூதரின் செயற்பாட்டால் அதிர்ச்சியடைந்த ஐ.நா சபை!
[Sunday 2024-05-12 06:00]

பாலஸ்தீனத்திற்கு(Palestine) ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேல்(Israel) தூதர் ஐ.நா.வின் அறிக்கையை கிழித்த காணொளி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் ஐ. நா பார்வையாளராக செயற்பட்டு வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீனத்தை நிரந்தர உறுப்பினராக்குவதற்கான ஐ. நா தீர்மானமொன்றை கொண்டுவந்துள்ளது.



ஐரோப்பாவில் ஐந்து இலங்கையர்கள் கைது!
[Saturday 2024-05-11 18:00]

லாத்வியா நாட்டின் எல்லைகளுக்குள் சட்டவிரோதமான முறையில் மக்களை ஏற்றிச் சென்ற ஐந்து இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லாத்வியா குடியுரிமை பெற்ற இலங்கையர் ஒருவரினால் செலுத்திய வோக்ஸ்வேகன் போலோ (Peugeot) 307 ரக வாகனத்தையே எல்லைப் பாதுகாப்புப் படையினர் சோதனையிட்டுள்ளனர்.



மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய கனடிய இரத்த வங்கி!
[Saturday 2024-05-11 18:00]

கனடிய இரத்த வங்கி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது. குறிப்பாக மாற்றுப் பாலின சமூகத்தினரிடம் இவ்வாறு மன்னிப்பு கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாற்றுப் பாலின சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் இரத்த தானம் செய்வது தொடர்பில் கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட சட்டங்களுக்காக இவ்வாறு மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.



பூமியை தாக்கிய சக்தி வாய்ந்த சூரியப்புயல்!
[Saturday 2024-05-11 18:00]

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த சூரியப்புயல் பூமியை தாக்கியது. ஏற்கனவே பூமியை கடும் சூரிய காந்த புயல் தாக்கும் அபாயம் உள்ளது என்றும் இதனால் கலிபோர்னியா முதல் தெற்கு அலபாமா வரை அரோரா என்ற துருவ ஒளி ஏற்படும் என்றும் அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் தெரிவித்தது.



சீனாவில் நாய்க்கு வண்ணம் பூசி பாண்டா கரடியாக ஏமாற்றிய பூங்கா நிர்வாகம்!
[Saturday 2024-05-11 18:00]

சீனாவில் உள்ள பூங்கா ஒன்றில் சௌ சௌ இன நாய்க்கு கருப்பு வேலை பெயிண்ட் அடித்து பாண்டா கரடியாக மாற்றி பார்வையாளர்களை பூங்கா நிர்வாகம் ஏமாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில் சௌ சௌ இன நாயை பாண்டா என நினைத்து தினமும் ஏராளமானோர் காணக் குவிந்துள்ளனர்.



புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரித்தானியாவின் திட்டம்: லண்டனில் திடீர் போராட்டம்!
[Saturday 2024-05-11 06:00]

பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களை மிதவைப்படகில் ஏற்றும் திட்டத்திற்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானியா - லண்டனிலுள்ள தனியார் விடுதியில் புகலிடக்கோரிக்கையாளர்கள் நீண்டகாலமாக தங்கியிருக்கும் நிலையில், இன்று (10.05.2024) காலை 10.00 மணியளவில் பொலிஸார் சுமார் 5 பொலிஸ் வான்களில் அங்கு வந்துள்ளனர்.



ஜெர்மனியின் இராணுவ திட்டத்திற்கு கனடா நிதியுதவி!
[Saturday 2024-05-11 06:00]

உக்ரைனுக்காக வான் பாதுகாப்பை வழங்குவதற்கான ஜெர்மனியின் திட்டத்திற்கு கனடா(Canada) பூரண ஆதரவை வழங்கும் என கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் உறுதியளித்துள்ளார். இந்த திட்டத்தின் முதல் கட்டமாக 76 மில்லியன் கனேடிய டொலர்களை(55 மில்லியன் அமொரிக்க டொலர்) உதவியாக வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



அபுதாபி இளவரசர் ஷேக் ஹஸ்ஸா காலமானார்!
[Saturday 2024-05-11 06:00]

அபுதாபி (Abu dhabi) இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Hazza bin Sultan bin Zayed Al Nahyan )காலாமானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர் (09.05.2024) காலமானதாக அபுதாபி ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. காலமான அபுதாபி இளவரசர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் மூத்த மகனாவார்.



200,000 அகதிகளை வரவேற்ற வரலாற்று நிகழ்வை நினைவுகூர்ந்த கனடா அரசு!
[Friday 2024-05-10 18:00]

கனடா, ஒரு காலகட்டத்தில், 200,000 அகதிகளை வரவேற்றுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், நேற்று, வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த சம்பவம் தொடர்பான நிகழ்வொன்று கனடாவில் நடைபெற்றது. 1975ஆம் ஆண்டு, வியட்நாம் போர் முடிவடை ந்ததைத் தொடர்ந்து, துன்புறுத்தல் மற்றும் மோசமான வாழ்க்கைச் சூழலுக்குத் தப்பி ஏராளமானோர் வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து பல நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றார்கள்.



அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கைக்கு பெஞ்சமின் நெதன்யாகுவின் பதில்!
[Friday 2024-05-10 18:00]

இஸ்ரேல் தன்னிடம் உள்ள அனைத்துவளங்களையும் பயன்படுத்தி தனியாக போரிடும் எனவும், எங்கள் விரல்நகங்களையும் பயன்படுத்தி போரிடும்வோம் எனவும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலிற்கான ஆயுதவிநியோகத்தினை இடைநிறுத்துவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கைக்கு பதில் அளித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



கனடாவில் வாடகை குடியிருப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!
[Friday 2024-05-10 18:00]

கனடாவில் வாடகைக் குடியிருப்பாளர்கள் பெரும் நிதி நெருக்கடி நிலைமையை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒப்பீட்டளவில் வீட்டு உரிமையாளர்களை விடவும் வாடகைக் குடியிருப்பாளர்கள் இந்த நெருக்கடிகளை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா