Untitled Document
May 21, 2024 [GMT]
பிரித்தானிய நகரின் பல பகுதிகளில் மீட்கப்பட்ட மனித உடல் பாகங்கள்!
[Tuesday 2024-04-30 18:00]

பிரித்தானியாவின் Salford நகரின் பல பகுதிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் தொடர்பில் பொலிசார் பெயர் உட்பட பிரதான தகவல்களை வெளியிட்டுள்ளனர். குறித்த நபர் 67 வயதான Stuart Everett என அதிகாரிகள் தரப்பு நம்புவதாக தெரிவித்துள்ளனர். கிரேட்டர் மான்செஸ்டரில் அமைந்துள்ள Kersal Dale அருகே கீழ் முதுகு, தொடை உள்ளிட்ட சில உடல் பாகங்கள் cellophane தாள்களில் சுற்றப்பட்ட நிலையில் வழிபோக்கர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

பிரித்தானியாவின் Salford நகரின் பல பகுதிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் தொடர்பில் பொலிசார் பெயர் உட்பட பிரதான தகவல்களை வெளியிட்டுள்ளனர். குறித்த நபர் 67 வயதான Stuart Everett என அதிகாரிகள் தரப்பு நம்புவதாக தெரிவித்துள்ளனர். கிரேட்டர் மான்செஸ்டரில் அமைந்துள்ள Kersal Dale அருகே கீழ் முதுகு, தொடை உள்ளிட்ட சில உடல் பாகங்கள் cellophane தாள்களில் சுற்றப்பட்ட நிலையில் வழிபோக்கர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

  

இதனையடுத்து ஏப்ரல் 4ம் திகதி முதல் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இதனையடுத்து Salford நகரின் பல பகுதிகளில் இருந்து எஞ்சிய உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த வழக்கு தொடர்பில் ஏப்ரல் 26ம் திகதி 68 வயதான Michal Jaroslaw Polchowski மற்றும் 42 வயதான Marcin Majerkiewicz ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் கொலை வழக்கு தொடர்பில் திங்கள்கிழமை Tameside மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

வழக்கு விசாரணைக்கு ஒத்துழைத்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அதிகாரிகள், தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர். Stuart Everett என்பவரின் உடல் பாகங்கள் மொத்தம் மூன்று பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அவை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றாலும், அந்த உடல் பாகங்கள் ஒரே நபருடையது என்றே நம்புவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



ஜனாதிபதியின் மரணம் சதி என அறிந்தால் உலகப் போர் உறுதி: நிபுணர் ஒருவர் வெளிப்படை!
[Tuesday 2024-05-21 06:00]

ஈரானிய ஜனாதிபதியின் மரணத்திற்கு பின்னால் எதிரியின் கை இருப்பதாக தெரிய வந்தால், உலகப் போர் உறுதி என்றே நிபுணர் ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Bell 212 ஹெலிகொப்டரின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மிக மோசமான வானிலை காரணமாகவே விபத்து நேர்ந்திருக்கலாம் என ஈரான் தரப்பு நம்புகிறது.



சார்லஸ் மன்னரின் உருவப்படம் குறித்து வாழும் நாஸ்ட்ராடாமஸ் விடுத்த எச்சரிக்கை!
[Tuesday 2024-05-21 06:00]

சார்லஸ் மன்னரின் உத்தியோகப்பூர்வ உருவப்படம் தொடர்பில் இருவேறு கருத்துகள் வெளியாகிவரும் நிலையில், வாழும் நாஸ்ட்ராடாமஸ் விடுத்த எச்சரிக்கை கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வாழும் நாஸ்ட்ராடாமஸ் என பரவலாக அறியப்படும் Athos Salomé சார்லஸ் மன்னரின் புதிய உருவப்படம் குறித்து தமது கருத்துகளை பதிவு செய்துள்ளார். மன்னராக முடிசூடியதன் முதலாம் ஆண்டு நிறைவை பதிவு செய்யும் வகையில் உருவப்படம் ஒன்றை சார்லஸ் மன்னர் வெளியிட்டுள்ளார்.



நெதன்யாகுவுக்கு எதிராக கைதாணை: நாள் குறித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்!
[Tuesday 2024-05-21 06:00]

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் ஆகிய இருவரும் போர் குற்றங்கள் தொடர்பாக கைதாணையை எதிர்கொள்ள இருக்கிறார்கள். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை சட்டத்தரணி, தொடர்புடைய இருவரையும் கைது செய்ய பிடியாணைக்கு முறையான விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.



கனடாவில் இந்திய மாணவர்கள் போராட்டம்!
[Monday 2024-05-20 18:00]

கனடாவில் இந்தியாவைச் சேர்ந்த பல மாணவர்கள் படித்து வரும் நிலையில், பிரின்ஸ் எட்வர்ட் ஐலேண்ட் (Prince Edward Island) மாகாணம் திடீரென குடியேற்ற விதிகளை மாற்றியுள்ளது. இதன் காரணமாக இங்கு படித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள், இந்தியாவுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய மாணவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது.



உயிரிழந்த ஈரான் அதிபர் யார்? பலரும் அறியாத தகவல்கள்!
[Monday 2024-05-20 18:00]

ஈரான் நாட்டின் எட்டாவது அதிபர் இப்ராஹிம் ரெய்சி (Ebrahim Raisi) பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 63 வயதானவர் இப்ராஹிம் ரெய்சி. கடந்த 2021-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பதிவான 28.9 மில்லியன் வாக்குகளில் 62 சதவீத வாக்குகளை அவர் பெற்றார். அதற்கு முன்பாக அந்த நாட்டின் நீதித்துறையில் முக்கிய பங்காற்றியவர். தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். 2017-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.



கனடாவில் AI துறையில் நிலவும் பதவி வெற்றிடங்கள்!
[Monday 2024-05-20 18:00]

கனடாவில் அதிகளவில் கிராக்கி நிலவும் செயற்கை நுண்ணறிவு துறைசார் தொழில்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கனடாவில் குடியேறுவதற்கு திட்டமிடுபவர்கள் மற்றும் கனடாவில் நல்ல சம்பளத்துடன் தொழில் வாய்ப்பு பெற்றுக்கொள்ள காத்திருப்போருக்கு இந்த தகவல் உதவியாக அமையக் கூடும்.



ஈரான் அதிபர் உயிரிழந்தார்: வெளியானது அறிவிப்பு!
[Monday 2024-05-20 18:00]

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழந்ததாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அதிபர் இப்ராகிம் ரைசியுடன் ஹெலிகாப்டரில் பயணித்த வெளியுறவுத்துறை மந்திரி உசைன் அமீர், கிழக்கு அசர்பைஜான் மாகாண கவர்னர் மாலிக் ரஹ்மதி உள்பட 9 பேரும் விபத்தில் உயிரிழந்தனர்.



ஈரான் ஜனாதிபதி தொடர்பில் நடவடிக்கைகள் தீவிரம்!
[Monday 2024-05-20 06:00]

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து தேவையான அனைத்து உதவிகளும் முன்னெடுக்க தயாராக இருப்பதாக துருக்கி அறிவித்திருந்தது. தற்போது ரஷ்யாவும் உதவ முன்வந்துள்ளது. ஈரானிய ஜனாதிபதி தொடர்பில் தகவல் வெளியானதும், தமக்கு துக்கத்தை ஏற்படுத்தியதாக துருக்கியின் எர்டோகன் தெரிவித்திருந்தார்.



ஜேர்மனியில் அதிர்ச்சி சம்பவம்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 38 சிறார்கள்!
[Monday 2024-05-20 06:00]

ஜேர்மனியில் பெந்தெகொஸ்தே கூடார முகாம் மீது மின்னல் தாக்கியதில் 38 சிறார்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அப்பகுதியில் இருந்து 700 பேர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜேர்மனியின் Soest மாவட்டத்திலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பெந்தெகொஸ்தே கூடார முகாம் ஒன்று அமைக்கப்பட்டிருந்த நிலையில் மின்னல் தாக்கியதாக கூறப்படுகிறது.



ஹரி - மேகன் தம்பதிக்கு நைஜீரியாவில் இலவச விமான சேவை அளித்தவர் தேடப்படும் குற்றவாளி!
[Monday 2024-05-20 06:00]

பிரித்தானிய இளவரசர் ஹரி - மேகன் தம்பதிக்கு நைஜீரியாவில் கட்டணமில்லா விமான சேவையை அளித்தவர் நிதி முறைகேட்டில் சிக்கி அமெரிக்காவால் தேடப்படும் குற்றவாளி என்றே தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரிய தனியார் விமான சேவை நிறுவனமான ஏர் பீஸ் என்பதின் நிறுவனர் Dr. Allen Onyema. இவரே இளவரசர் ஹரி - மேகன் தம்பதி நைஜீரியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது கட்டணமில்லா சேவையை அளித்தவர்.



60,000 கோடி லாபம் ஈட்டிய விமான நிறுவனம்: ஊழியர்களுக்கு போனஸாக 8 மாத சம்பளம்!
[Sunday 2024-05-19 19:00]

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதன் ஊழியர்களுக்கு 8 மாத சம்பளத்தை போனஸாக வழங்க உள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைப்பதால் எட்டு மாத சம்பளத்திற்கு இணையான தொகையை போனஸாக வழங்க முடிவு செய்துள்ளது. 2023-24 நிதியாண்டில் விமான நிறுவனம் 1.98 பில்லியன் டொலர் (இலங்கைப் பணமதிப்பில் ரூபா. 59,032 கோடி) லாபத்தைப் பதிவு செய்துள்ளது.



"மூன்றாம் உலகப்போர் வெடிக்கலாம்" - பகீர் கிளப்பும் டொனால்டு டிரம்ப்!
[Sunday 2024-05-19 19:00]

அமெரிக்க தலைமையின் திறமையின்மையால் மூன்றாம் உலகப்போர் வெடிக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வரும் நவம்பர் 5ஆம் திகதி நடக்க உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், ஜோ பைடன் (Joe Biden) அரசை விமர்சித்து வரும் டொனால்டு டிரம்ப், தற்போது உலகப்போர் வெடிக்கலாம் என பகீர் கிளப்பியுள்ளார்.



கனடாவில் தாயை கொடூரமாக கொன்ற மகன் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்!
[Sunday 2024-05-19 19:00]

கனடாவில் தாயை கொடூரமான முறையில் கத்தியில் குத்திக் கொன்ற மகன் ஒருவர், நீதிமன்ற விசாரணைகளின் போது கொலை செய்ய நினைக்கவில்லை என கூறியுள்ளார். தமது தாயாரை படுகொலை செய்யும் நோக்கில் கத்தியால் பல தடவை குத்தவில்லை என தெரிவித்துள்ளார்.



துபாயில் பள்ளி பேருந்துகளில் புதிய முயற்சி!
[Sunday 2024-05-19 19:00]

துபாயில் பள்ளி பேருந்துகளில் விளம்பரத்தரங்கள் ஒட்டுவது குறித்து புதிய முயற்சி எடுக்கவுள்ளதாக போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது பள்ளிப் பேருந்துகளில் விளம்பரம் செய்ய துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் நேற்று வெள்ளிக்கிழமை ஒப்புதல் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் பள்ளிப் போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு கூடுதல் வருவாயை வழங்குதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



மறைக்கவோ மறுக்கவோ மறக்கவோ முடியாத நினைவு நாள்: பிரித்தானியாவில் பேரணி! Top News
[Sunday 2024-05-19 08:00]

பிரித்தானியாவில் பல்வேறு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள் புலம்பெயர் தமிழ் உறவுகளால் முன்டுக்கப்பட்டு வருகிறது. இதற்கமைய இன்று 15 தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரினால் பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. தமிழீழ மக்களாகிய எமக்கு அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்பதை வலியுறுத்திய கடிதமொன்றினை தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயற்பாட்டாளர்கள் பிரதமர் அலுவலகத்தில் கையளித்தார்கள்.



முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல்: கனேடிய பிரதிநிதியின் உருக்கமான பதிவு!
[Sunday 2024-05-19 08:00]

இலங்கையின் பேரவலமான முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்கள் இலங்கை உட்பட சர்வதேச தரப்புகளினால் நினைவுகூறப்படுகிறது. அந்த வகையில் கனேடிய அரசியலின் முக்கிய பிரதிநிதியும் சுகாதார அமைச்சருமான மார்க் ஹொலண்ட்டினால்(Mark Holland) அவரது அலுவலகத்தில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தாயக உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.



பிரித்தானியாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
[Sunday 2024-05-19 08:00]

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலானது புலம்பெயர் தேசமான பிரித்தானியாவில் உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் இடம்பெற்றது. நந்திக்கடலை நினைவுகூரும் முகமாகவும் முள்ளிவாய்காக்கல் இறுதி போரின் போது கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் முகமாகவும் பிரித்தானியா உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் உள்ள ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் நினைவுகூரப்பட்டது.



அமெரிக்காவில் கஞ்சாவுக்கு பச்சைகொடி காட்டிய ஜோ பைடன்!
[Saturday 2024-05-18 16:00]

அமெரிக்காவில் கஞ்சாவை குறைந்த ஆபத்து கொண்ட போதைப்பாருள் என மறுவகைப்படுத்த ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதனால் அமெரிக்காவில் இனிமேல் கஞ்சா பயன்படுத்துவது அதிகாரப்பூர்வாக்கப்படலாம் எனத எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.



கிர்கிஸ்தானில் தாக்குதல்; இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை!
[Saturday 2024-05-18 16:00]

மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் பலர் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் தலைநகர் பிஷ்கெக்கில் நேற்று நள்ளிரவு வெளிநாட்டு மாணவர்களை குறிவைத்து கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது.



புலம்பெயர் பணியாளர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ள கனடா அரசின் நடைமுறை!
[Saturday 2024-05-18 16:00]

கனடா அரசின் ஒரு நடைமுறை, புலம்பெயர் பணியாளர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போரை, அவர்களுடைய வயது, கல்வி, ஆங்கிலப் புலமை மற்றும் பணி அனுபவம் போன்ற காரணிகளை வைத்து தரவரிசைப்படுத்தும் நடைமுறையே CRS என்னும் நடைமுறை.


Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா