Untitled Document
April 26, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மனிதம் சாகவில்லை ஆனால் நாங்கள்தான்!!
[Tuesday 2017-03-07 16:00]

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள கற்சிலைமடு என்னும் கிராமத்தில் உள்ள பாடசாலையில் தொண்டர் ஆசிரியராகக் கடமையாற்றுபவர்தான் தர்சன் என்னும் 27 வயதுடைய இளைஞர். இவருக்கு பாடசாலையில் மாதாந்தப் படியாக ரூபா 5000.00ல் இருந்து ரூபா 10,000.00 வரை வழங்குகின்றார்கள். இவர் ஏறக்குறைய 7 ஆண்டுகள் இப்பகுதியிலே தொண்டர் ஆசிரியராகக் கடமைபுரிகின்றார்.

இதனைவிட புதுக்குடியிருப்பிலும் ஒட்டுசுட்டானிலும் தனியார் நடன வகுப்புகளையும் நடாத்திவருகின்றார். இதில் கற்கும் மாணவர்களில் போரினால் பெற்றோரை இழந்த, மற்றும் வறிய மாணவர்களுக்கு இலவசமாகவும், மற்றயோருக்கு மாதாந்தக் கட்டணம் பெற்றும் வகுப்புக்களை நடாத்தி வருகின்றார். இவர் தற்போது இடமாற்றம் பெற்று முத்துஐயன் கட்டுப்பகுதியில் உள்ள பாடசாலையில் நடன ஆசிரியராகக் கடமையாற்றுகின்றார்.

இவர் ஆரம்பத்தில் பெற்ரோரற்ற இரண்டு மாணவர்களை தனது இருப்பிடத்தில் வைத்து அவர்களுக்கு உணவு,உடை போன்ற உதவிகளை வழங்கி அவர்களது கல்விக்கு உதவி செய்துகொண்டிருந்தார். காலப்போக்கில் அவரின் உதவியை நாடிய மாணவர்களின் தொகை ஆறாக அதிகரிக்க அவர் தனியான ஒரு வீட்டினை ரூபா 2500.00 வாடகைக்குப் பெற்று அதில் மாணவர்களைத் தங்கவைத்து அவர்களுக்கு உணவு, உடை மற்றும் கல்வி உதவிகளைச் செய்து வருகின்றார். மாதாந்த வருமானம் போதாத நிலை உருவாகும்போது யாழ்ப்பாணத்தில் 3 வாகனங்கள் வைத்துத் தொழில் புரிந்துவரும் தனது தகப்பனாரின் உதவியை நாடினார். அவரது தகப்பனாரும் இவருக்கு மாதாந்தம் பற்றாக்குறையாக உள்ள பணவுதவியைச் செய்து வருகின்றார்.

இந்த ஆசிரியரும் மாணவர்களும் தாங்கள் வாடகைக்கு இருக்கும் வீட்டில் வீட்டுத் தோட்டம் செய்து அதில் வரும் மரக்கறிவகைகளையும் உணவுக்காகப் பயன்படுத்துகின்றார்கள். மாணவர்களின் கல்வி நலன்கருதி வெளி ஆசிரியர்களை இந்த மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுப்பதற்காக மாதாந்தம் ரூபா 5000.00ம் சம்பளத்தில் நியமதித்துள்ளார். கணிதம், விஞ்ஞானம், கணனிக் கல்விக்கென 3 ஆசிரியர்களை அழைத்து பாடம் கற்பிக்க வைக்கின்றார். கணனி ஆசிரியர் ஒரு மடிக்கணனியை வைத்தே 10 மாணவர்களுக்குக் கற்பிப்பதாகவும் குறிப்பிட்டார்.

தற்போது மாணவர் தொகை 10ஆக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட இவர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மாணவர்களும் இதில் உள்ளடங்கி உள்ளனர் எனக் குறிப்பிட்டடார். (10 மாணவர்களில் 4 மாணவர்கள் தங்களது பெற்ரோரோடு வாழும் வறிய மாணவர்களாவர்.) மாணவர் தொகை அதிகரித்ததனால் தனக்கு அவர்களுக்கான எல்லாச் செலவுகளையும் கவனிக்கமுடியாது உள்ளதாகவும் ஒரு சில உதவிகளைச் செய்தால் இவர்களது படிப்பு முடியும்வரை அவர்களுக்கு உதவி செய்வதாகவும் குறிப்பிடுகின்ற இவர் தற்போது கனடா வன்னிச் சங்கத்தின் உதவியை நாடி நிற்கின்றார்.

இவரது இந்த விடயங்கள் உண்மையா பொய்யா என்பதனை அறிவதற்காக கனடா வன்னிச் சங்கத்தின் தலைவர் தொலைபேசி மூலமாகத் தர்சனைத் தொடர்பு கொண்டு பல விடயங்களைக் கேட்டு அறிந்துள்ளதோடு நேரடியாகவும் அவரைச் சந்தித்து உண்மைநிலைகளை அறிந்து கொள்ள நடவடிக்கை எடுத்தார். அதன் பிரகாரம் இரண்டு சந்திப்புக்கள் ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. இன்னும் ஒரு சந்திப்பு அவருடன் இடம்பெறவுள்ளது. தலைவரோடு உரையாடியபோதும், நேரடியான சந்திப்பின்போதும் அவர் பின்வரும் உதவிகளை முதற்கட்டமாக வேண்டிநிற்கின்றார்.

1. மாணவர்களுக்காக வீட்டில் உடுக்கும் உடுப்புகள்.

மாணவர்கள் தற்போது பொக்கல் உள்ள காற்சட்டைகளையே வீட்டில் அணிகிறார்கள் எனக் குறிப்பிட்டார். காற்சட்டை, ரீசேட் போன்றவை, இவை பாவித்தவையாக இருந்தாலும் பறவாயில்லை என்றார். மாணவர்கள் வயது 13 தொடக்கம் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.

2. ஒரு கறவை மாடு வாங்கித் தந்தால் அதனைத் தாங்கள் இருக்கும் வீட்டிலேயே வளர்த்து மாணவர்களுக்குத் தேவையான தேனீர் பால் தேவைகளுக்குப் பயன்படுத்தமுடியும் எனக் குறிப்பிட்டார்.

3. தன்னிடம் நடனம் பழகும் வறுமையுடைய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கொடுப்பதற்காக சலங்கைகள், பழகுவதற்கு பாவிக்கும் உடுப்புகள், அரங்கேற்றத்திற்கான உடுப்புகள் பாவித்தவையாக இருந்தாலும் நல்லதாக இருந்தால் போதுமானதாககும் எனக் குறிப்பிட்டார்.

மேற்குறித்த விபரங்களை வாசித்து அறிந்துகொண்ட எங்கள் கருணை உள்ளங் கொண்ட உறவுகளே !!!!!!!!!!!!!!!!

இவ் உதவிகளைச் செய்வதற்கு உங்கள் உதவிக்கரங்ளைத் தாருங்கள். நீங்கள் உதவிசெய்யவிரும்பும்போது கனடா வன்னிச் சங்கத்துடன் தொடர்பு கொள்ளலாம். எங்களது 3 உறுப்பினர்கள் தாயகப் பிரதேசத்திற்குச் செல்ல இருப்பதனால் அவர்களிடமே இவ்வுதவிப் பொருட்களைக் கொடுத்துவிடுவதற்கு ஒழுங்கு செய்துள்ளோம். எனவே உங்கள் உதவிகளை எதிர்வரும் 30 நாட்களுக்குள் (சித்திரை 06 க்கு முன்பாக)செய்வதற்கு முன்வாருங்கள் என அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

நடனப் பொருட்கள் தொடர்பில் நடனம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும், நடனம் பயின்ற மாணவர்களும் இதற்காக உதவி செய்யலாம். எனவே நீங்கள் எங்களுடன் தொடர்பு கொண்டால் நாங்களே உங்கள் இடத்திற்கு நேரடியாகவந்து பெற்றுக் கொள்கின்றோம்.

  
  
   Bookmark and Share Seithy.com



நல்லூரில் வாழும் பழங்குடியின மக்களின் பல்வேறு பிரச்சினைகளை ஆராய விசேட குழு! Top News
[Monday 2024-04-08 22:00]

மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நல்லூரில் வாழும் பழங்குடியின மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த உடனடியாக விசேட குழுவொன்றை நியமிக்க திருகோணமலை அரசாங்க அதிபருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தரவிட்டுள்ளார். நல்லூரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அண்மையில் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நல்லூரில் தங்களின் வாழ்வாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளமை குறித்து கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.



34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி! Top News
[Monday 2024-04-08 22:00]

தமிழினம் புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் சூழலில், தமது அடையாளத்தை அடுத்த தலைமுறை தொலைத்துவிடாதிருக்க தாய்மொழியைக் கற்பித்தல் அவசியம் என்ற உயர்சிந்தனையின் விளைவாகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ்மொழியைக் கற்பிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. யேர்மனியிலும் தமிழ்க் கல்விக் கழகம் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துத் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் 34 ஆண்டுகளைத் தொட்டுநிற்கிறது.



செங்கலடி இலுப்படிச்சேனையில் வர்த்தக நிலையங்களை திறந்து வைத்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்! Top News
[Monday 2024-04-08 06:00]

செங்கலடி இலுப்படிச்சேனையில் உள்ளுர் தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தும் நோக்கில் வர்த்தக நிலையங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார். 22 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிராமிய வர்த்தக நிலையங்கள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.



ஏறாவூர்பற்றில் மாதுளை சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைப்பு! Top News
[Sunday 2024-04-07 08:00]

விவசாயிகள் மத்தியில் பழச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் மாதுளை சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை ஏறாவூர் பற்று பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது. விவசாயிகளின் விளைச்சலை அதிகரிப்பதற்காக விவசாயச் சங்கங்களுக்கு விவசாய உபகரணங்களையும், மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கும் உபகரணங்களையம் ஆளுநர் வழங்கி வைத்தார்.



கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வவுணதீவு வீதி திறந்து வைப்பு! Top News
[Friday 2024-04-05 06:00]

140 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு வீதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டதுடன், மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோபாலரத்தினம் உட்பட அரச அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.



கனடிய தமிழர் பேரவையின் மகளிர் தின கொண்டாட்டங்கள்! Top News
[Thursday 2024-03-28 21:00]

கனடிய தமிழர் பேரவையின் மகளிர் தின கொண்டாட்டங்கள் மார்ச் 24, 2024 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வானது கனடாவில் உள்ள தமிழ் சமூகத்திற்குள்ளும் அதற்கு அப்பாலும் பெண்களின் குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் பங்களிப்புகளைக் கொண்டாடும் வகையில் அமைந்திருந்தது. பாரம்பரிய மங்கள விளக்கு ஏற்றுதல் கலாச்சார முக்கியத்துவத்துடன் ஆரம்பமான நிகழ்வு கனேடிய தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து பாடுவதன் மூலம் நமது இரட்டை பாரம்பரியத்தையும் கலாச்சாரங்களின் இணக்கமான கலவையையும் பிரதிபலித்து தொடர்ந்தது.



யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் டோட்முன்ட் நகரில் நடத்தப்பட்ட வாகைமயில் 2024! Top News
[Friday 2024-03-22 18:00]

யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் என்னும் நடனப்போட்டியைத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடத்தி வருவது யாவரும் அறிந்ததே. இம்முறை டோட்முன்ட் நகரில் 16.03.24 சனி, 17.03.24 ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் தெரிவுப்போட்டிகளின்றி நிறைவுப்போட்டியாகப் பதினொரு ஆண்டுகளை நிறைவு செய்தபடி வாகைமயில் வெகு சிறப்பாகத் தோகை விரித்தாடியது. யேர்மனியில் உள்ள நடன ஆசிரியர்களால் பயிற்றப்பட்ட அவர்களின் மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் மிஞ்சிய வகையில் களம் கண்டனர். இவர்கள் அற்புதமான பதங்களுடன் பல வண்ணங்கள் உடுத்தித் தேர்போல (இரதங்கள்) அழகாக அசைந்து, மிதமான அணிகளோடு அவையில் இதமான பரதத்தால் நவரசம் தந்தது மண்டபம் நிறைந்த மக்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது. பிரான்சு, சுவிற்சலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த திறமையும் பட்டறிவும்(அனுபவம்) வாய்ந்த நடுவர்களால் போட்டிகள் நடுவம் செய்யப்பட்டு, மதிப்பளிப்புகளும் வாகைமயில் விருதுகளும் வழங்கப்பட்டன.



இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவையின் ரஜத ஜெயந்தி மாபெரும் மாநாடு! Top News
[Wednesday 2024-03-13 06:00]

COYLE அல்லது இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவையின் ரஜத ஜெயந்தி மாபெரும் மாநாடு நேற்று (10) ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த ஆண்டு மாநாடு 25 வது முறையாக நடைபெற்றது. COYLE அல்லது இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவை மார்ச் 10, 1999 இல் ஆரம்பிக்கப்பட்டது. "இன்றிலிருந்து முழு மனதுடன் தயாராவோம்" என்பதே இந்த ஆண்டு ரஜத ஜெயந்தியின் கருப்பொருளாக அமைந்துள்ளது.



கல்விக்கு முதலிடம், தமிழர் ஐக்கியத்துக்கு சிறப்பிடம், இரண்டிலும் கனடிய தமிழர், உலகத்தமிழருக்கு வழிகாட்டி - தெஹியோவிற்ற தமிழ் வித்தியாலய விஞ்ஞானகூட அங்குராப்பணம் தொடர்பில் மனோ கணேசன்! Top News
[Tuesday 2024-03-05 06:00]

இன்று, தமிழர்களாகிய எங்கள் ஒரே ஆயுதம், கல்வி. அதேபோல் எங்கள் ஒரே சிந்தனை தமிழ் ஒற்றுமை. இந்த இரண்டு கொள்கைகளையும் முன்னெடுத்து, கனடா தமிழர் பேரவை, அமெரிக்கா முதல் ஐரோப்பா, ஆசியா ஊடாக ஆஸ்திரேலியா வரை உலகம் முழுக்க பரவி, விரவி வாழ்கின்ற தமிழருக்கு, முன்மாதிரியாக நின்று வழி காட்டி உள்ளது. இந்த இரு கொள்கைகளின் அடையாளமாகவே, இங்கே இன்று இந்த மலையக தமிழரினுள் வரும் பெருந்தோட்ட பிள்ளைகள் பயிலும், தெஹியோவிற்ற தமிழ் மகாவித்தியாலய விஞ்ஞானகூடம் கட்டப்பட மற்றும் உபகரணங்கள் வழங்க, கனடா மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் மத்தியில் நிதி சேகரித்து, கனடா தமிழர் பேரவை சாதித்து காட்டியுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.



சிகரம் தொட்ட தமிழ்த்திறன் போட்டியின் முத்தகவை நிறைவு! Top News
[Tuesday 2024-03-05 06:00]

1993ஆம் ஆண்டு மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களினால் வித்திடப்பட்ட தமிழ்த்திறன் போட்டி, தமிழ்க் கல்விக் கழகத்தின்; வரலாற்றுத் தடங்களில் தனக்கெனத் தனிச்சிறப்புடன் வெற்றி நடைபோட்டு வருகிறது. தமிழாலயங்களில் தமிழ் பயின்றுவரும் மாணவர்களில் மொழித்திறனாளர்கள், உரையாற்றளாளர்கள், கட்டுரைத்திறனாளிகள், வரைஞர்கள் போன்ற வளமிக்க ஆற்றலாளர்களைக் கண்டறிவதும் அவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்குவதும் தமிழ்த்திறன் போட்டியின் இலக்காகக் கொண்டு ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவருகிறது.



திரு.இரா மனோகரன் அவர்களுக்கு “தமிழ்த்திறனாளன்” மதிப்பளிப்பு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி! Top News
[Monday 2024-03-04 06:00]

02.03.2024 அன்று யேர்மனியின் தமிழ்க் கலவிக்கழகத்தினால் முன்சன்கிளட்பாக் நகரில் நடாத்தப்பட்ட தமிழ்த்திறன் போட்டியின் முப்பாதவது அகவை நிறைவு விழாவின் போது யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் சிறப்பு மதிப்பு நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.



இன்றிலிருந்து ஒன்ராறியோவில் அமுலுக்கு வரும் 'ஒற்றைக்கட்டண' திட்டம்! Top News
[Tuesday 2024-02-27 06:00]

இன்று முதல் ஒன்ராறியோ பொதுப்போக்குவத்துச் சேவையில் 'ஒற்றைக்கட்டண' திட்டம் அமுலுக்கு வருகின்றது. இன்று தொடக்கம் ரொறன்ரோ பொதுப்போக்குவரத்துச் சேவை (TTC) மற்றும் ரொறன்ரோ பெரும்பாகத்திலுள்ள 'கோ' (GO) போக்குவரத்துச் சேவை உட்பட இத்திட்டத்தில் பங்குபற்றும் அனைத்து சேவைகளுக்குமிடையில் பயணிக்கும் பயணிகள் ஒருமுறை மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். இது பற்றி ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் அவர்கள் “ஒன்ராறியோ அரசானது, அனைத்து போக்குவரத்துப் பயணிகளுக்கும் அவர்களின் சொந்தப் பணத்தை சேமித்து மீண்டும் அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கின்றது" என கூறுகின்றார்.



வவுனியாவில் இடம்பெற்ற மேழி எழுபது பிரமாண்ட விழா! Top News
[Tuesday 2024-02-27 06:00]

எழுத்தாளர் கலாநிதி மேழிக் குமரனின் எழுபது அகவையையும் ஐம்பதாண்டு இலக்கிய பயணத்தையும் முன்னிட்டு இரு நூல்கள் வெளியீட்டு நிகழ்வு (25.02.2024) காலை 9 மணிக்கு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. வவுனியா தமிழ்ச் சங்கத்தின் நிறுவுனர், தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் த.மங்களேஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், கல்வி அமைச்சின் ஓய்வு நிலை மேலதிக செயலாளர் உடுவை எஸ்.தில்லை நடராஜா, கௌரவ விருந்தினர்களாக வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் ஓய்வு நிலை பீடாதிபதி க.பேர்ணாட், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் ந.சிவசக்தி ஆனந்தன், இலக்கியவாதிகள்,சமூக ஆர்வலர்கள்,திணைக்கள உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



‘ஒற்றைக்கட்டண’ திட்டம்! Top News
[Thursday 2024-02-08 18:00]

கடந்த திங்கட்கிழமையன்று, ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்டும் போக்குவரத்து இணை அமைச்சர் விஜய் தணிகாசலமும் இணைந்து ஒன்ராறியோ அரசாங்கம் பொதுப் போக்குவரத்துப் பயணிகளுக்கான செலவைக் குறைப்பதற்காக 'ஒற்றைக்கட்டண' திட்டம் ஒன்றினை அறிவித்தனர். இந்த 'ஒற்றைக்கட்டண' நடைமுறை மூலம் சராசரியாக 1,600 டொலர்களை பயணிகள் சேமிப்பர். பிப்ரவரி 26, 2024 முதல், ரொறன்ரோ பொதுப்போக்குவரத்துச் சேவை (TTC) மற்றும் ரொறன்ரோ பெரும்பாகத்திலுள்ள 'கோ' (GO) போக்குவரத்துச் சேவை உட்பட இத்திட்டத்தில் பங்குபற்றும் அனைத்து சேவைகளுக்குமிடையில் பயணிக்கும் பயணிகள் ஒருமுறை மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.



தமிழ் மரபுத் திங்கள் 2024! Top News
[Thursday 2024-02-01 21:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழ் மரபத்திங்கள் செயலவையும் இணைந்து 28/01/2024இல் தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வு வெகு சிறப்பாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் கனடாவின் பூர்வகுடி மக்களுக்கான அங்கீகாரம் செலுத்தப்பட்டு கனேடிய மத்திய பாராளுமன்ற உறுப்பினர், மாகாண உறுப்பினர்கள் ,மாநகர, நகர சபை உறுப்பினர்கள் மற்றும் கல்விச்சபை உறுப்பினர்கள் ,கலைஞர்கள், ஏராளமான பொது மக்கள் முன்னிலையில் கனேடிய தேசியக் கொடி ஏற்றப்பட்டு அடுத்து தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு மிகவும் சிறப்பாக நிகழ்வுகள் ஆரம்பமாகி தொடர்ந்து தமிழரின் மரபு இசையான பறை இசை முழங்கி சிறப்பித்தனர் ,தொடர்ந்து கனேடிய மக்கள் பிரதிநிதிகளின் உரை ,நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரனின் உரை, தமிழ் மரபுச் செயலவை மேலாளரும் கல்விச்சபை மேலாளருமான நீதன் சண் அவர்களின் உரைகள் இடம்பெற்றன.


Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா