Untitled Document
May 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மக்களுக்காக அரசியல் நடத்துவேன் ; கமல்
[Wednesday 2017-03-08 19:00]

கமல்ஹாசன் திடீரென தனது மன்ற நிர்வாகிகள் மற்றும் வக்கில்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். இதில் கலந்து கொண்ட அனைவரும் கமல் நேரடியாக அரசியலுக்கு வரவேண்டும். இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நீங்கள் தான் நிரப்ப வேண்டும் என்று பேசினார்கள். அதற்கு பதிலளித்து கமல் பேசியதாவது:

எனக்கு எந்த சாதியும் மதமும் தேவையில்லை நற்பணி இயக்கம் அரசியல் கலக்காமல் இன்னும் பெரிய சமுதாய நல்வழி இயக்கமாக மாறுவதற்கு இன்று கால்கோல் நடப்பட்டது. அதற்கான ஆயத்தத்தில் முன்னேற்பாடுகளைத் தான் இப்போது உங்கள் மூலமாக ஆரம்பித்துள்ளேன். எனக்குப் பின்னாலும் இந்த நற்பணி தொடரவேண்டும். நாம் செய்வது மக்கள் அரசியல். வாக்கு அரசியல் அல்ல. வாக்கு அரசியல் சாதி, மதம் பார்க்கத் தூண்டும். நான் மனிதனை மனிதனாகப் பார்ப்பவன். எனக்கு எந்த சாதியும் மதமும் தேவையில்லை. நல்லது செய்வதற்கு சாதி மதம் தேவையில்லை. நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல உள்ளம் இருந்தால் போதுமானது. அது உங்களிடத்தில் உள்ளது. அதற்கு உறுதுணையாக நான் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

கடந்த 35 வருஷமா என்ன பண்றோம்? நற்பணி தான் பண்றோம். அதை இன்னும் பெரியதாக தொடர்வது எப்படி என்ற ஆலோசிக்கவே இந்த கூட்டம். நாம் செய்யும் நற்பணிகளுக்கு எந்த வித இடையுறும் வரக்கூடாது. அப்படி வந்தால், சட்டம் படித்த இந்த ஆலோசகர்களின் உதவி தேவை. இவர்கள் நமக்கு உதவுவார்கள். அதற்கு அரசியல் தான் களம் என்பது இல்லை. முதலமைச்சாராக மாறித் தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது இல்லை. நான் படித்தது எட்டாம் வகுப்பு வரைத் தான். எனக்கும் சட்டம் தெரியும். ஆனால், சட்டம் படித்த நீங்கள் அதை சொல்லும் போது தான் அதற்கு உரிய மரியாதை கிடைக்கும்.

உடனே அரசியலுக்கு வா என்கிறீர்கள். அது என்னால் இயலாத காரியம். வரவும் முடியாது. அது என்னுடைய வேலையும் அல்ல. கச்சேரியில் பாட்டு சரியில்லை என்று கூறை கூறுவதால் நீ மேடைக்கு வந்து பாடுன்னு சொல்லலாமா? சமையலில் ஏற்படும் குறைகளை சுட்டிக் காட்டத் தான் முடியும். அதற்காக வந்து சமைத்துப் பார் என்று கூறினால் எப்படி? மக்களுக்காக அரசியல் நடத்துவேன் நான் அறிக்கைகள் விடுவது புதியதல்ல 30 வருடங்களுக்கு முன்பு இருந்தே நான் கருத்து கூறிவருகிறேன். அன்றே இலங்கை பிரச்சனைக்கு முதல் ஆளாக குரல் கொடுத்தவன். ஆனால் இப்போது தான் நான் கூறுவது அவர்கள் காதில் விழ தொடங்கியுள்ளது. நான் அரசியலில் இல்லை என்று யார் சொன்னது. நான் அரசியலில் தான் உள்ளேன். நான் பண்ணும் அரசியல் ஒட்டு வாங்கும் அரசியல் அல்ல. மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் அரசியல். நான், நீங்க யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறமாட்டேன். ஆனால், யாருக்கு வாக்களிக்க கூடாது என்று கூறுவேன். அதை குறிப்பால் உணர்த்துவேன். அதைத் தான் கடந்த முறையும் செய்தேன். அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இன்று மக்கள் கேட்க தொடங்கியிருக்கிறார்கள். நான் சொன்னால் அது மக்களுக்காகத் தான் சொல்கிறேன் என்பதை புரிந்து கொண்டுள்ளார்கள். நான் இந்த நிலையை அடைவதற்கு எனக்கு 40 ஆண்டு காலம் தேவைப்பட்டது. டில்லியில் என் கட்சி கொடி பறக்கிறது என்னுடைய கட்சி கொடி டில்லியில் மூவர்ணமாக பறந்து கொண்டு இருக்கிறது. அதற்கு எந்த வித ஒரு பாதிப்பும் ஏற்படாமல் நான் காப்பேன். பச்சை தனியாக, வெள்ளை தனியாக, காவி தனியாக கிழிபடுவதை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன்.

அதற்காக குரல் கொடுத்துக் கொண்டு இருப்பேன். இனி மாவட்ட பிரச்சனைகளை கையில் எடுப்பேன் அதற்கு பக்கபலமாக மாவட்ட சட்ட ஆலோசகர்கள் முன் வரவேண்டும். என்னால் முடியாத எதையும் உங்களை நான் செய்யச்சொல்ல மாட்டேன். இனி, இன்னொரு சுதாகர் சிறைச் செல்வதை நான் அனுமதிக்க மாட்டேன்.உங்கள் பின்னால் நான் இருப்பேன் தவறு செய்திருந்தால் தைரியமாக மன்னிப்பு கேட்பேன். ஆனால்,செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிப்பதை அனுமதிக்க மாட்டேன். உங்கள் பின்னால் நான் இருப்பேன். நாம் செய்யும் நற்பணி கண்டு இந்த மாநிலமல்ல பக்கத்து மாநிலமே அழைத்து பாராட்டும் காலம் விரைவில் வரும். செய்வது நற்பணி, அதற்கு ஓய்வில்லை.

எந்த அரசியல்வாதி தவறு செய்தாலும் நாகரிகமான முறையில் அவர்களுக்கு கண்டனத்தை பதிவு செய்யுங்கள். மரியாதையாக பேசுங்கள். 35வருடங்களாக எந்தவித இடையூறும் இல்லாமல் நடைபெற்ற நற்பணி, இன்னும் சிறந்த முறையில், பெரிய அளவில் நடைபெற வேண்டும். அதற்கு நான் துணையிருப்பேன் . இவ்வாறு கமல் பேசினார்.

  
  
   Bookmark and Share Seithy.com



‘தி கோட்’ - அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
[Saturday 2024-05-18 16:00]

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது.



"கவர்ச்சியாக நடிக்க ஆசை" - வெளிப்படையாக பேசிய விஜே மகேஸ்வரி!
[Saturday 2024-05-18 16:00]

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக மாறியவர் தான் விஜே மகேஸ்வரி. மேலும் இவர் சென்னை 28, பியார் பிரேமா காதல், ரைட்டர், சோல் மேட், விஷமக்காரன், விக்ரம், காதல் கண்டிஷன் அப்ளை உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.



வெற்றிமாறன் கூட்டணியில் புது படத்திற்கு அஸ்திவாரத்தை போட்ட கவின்!
[Saturday 2024-05-18 08:00]

பிக் பாஸ் போயிட்டு வந்த பிறகு கவினுக்கு தொடர்ந்து ஏறுமுகம் தான் என்று சொல்வதற்கு ஏற்ப புது புது படங்களில் கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் வெற்றி படத்தை கொடுத்து வசூல் அளவில் லாபத்தை ஈட்டி விடுகிறார். லிஃப்ட், டாடா மற்றும் சமீபத்தில் வெளிவந்த ஸ்டார் படம் அனைத்துமே வெற்றி வாகை சூடிவிட்டது.



நடிகை ராதிகாவுக்கு என்னாச்சு?
[Saturday 2024-05-18 08:00]

நடிகை ராதிகா சரத்குமார் படங்கள், சீரியல்கள் ஆகியவற்றில் குணச்சித்திர நடிகையாக இருந்து வருகிறார். அம்மா ரோல்களில் அவரை பல படங்களில் தொடர்ந்து பார்த்து வருகிறோம். ராதிகாவின் கணவர் நடிகர் சரத்குமார் நடத்தி வந்த கட்சியை பாஜவில் இணைத்த நிலையில், சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக ராதிகா அந்த கட்சிக்கு பிரச்சாரம் செய்தார். மேலும் விருதுநகர் தொகுதியில் போட்டியிடவும் செய்திருக்கிறார்.



ஐடி ரெய்டிலிருந்து தப்பிக்க ராஷ்மிகா செய்த விஷயம்!
[Friday 2024-05-17 18:00]

நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ராஷ்மிகா செய்த வேலைதான் இப்போது மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடைசியாக பாலிவுட்டில் அவர் நடித்த அனிமல் படம் மிகவும் மோசமான விமர்சனத்தை சந்தித்தது. இந்நிலையில் தமிழில் சுல்தான், வாரிசு போன்ற படங்களில் நடித்த ராஷ்மிகா தமிழைக் காட்டிலும் மற்ற மொழிகளில் தான் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக பாலிவுட்டில் இவருக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் தொடர்ந்து அங்கு அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.



மலையாள சினிமாவை புரட்டிப் போடும் பிரித்திவிராஜின் 6 டாப் வசூல் படங்கள்!
[Friday 2024-05-17 18:00]

சமீபத்தில் வெளிவந்த படங்களில் மலையாள படங்கள் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது. அதுவும் சின்ன பட்ஜெட் படங்களும் பெரிய அளவில் கொண்டாடும் அளவிற்கு வசூலில் லாபத்தை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் மலையாள சினிமாவை புரட்டிப் போடும் அளவிற்கு பிரித்விராஜின் படங்கள் வசூல் அளவில் பட்டையை கிளப்பி இருக்கிறது.



அரண்மனை 4 படத்தின் 14 நாட்கள் வசூல் விவரம்!
[Friday 2024-05-17 18:00]

கடந்த மே 3ஆம் தேதி வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் அரண்மனை 4. இதற்கு முன் வெளிவந்த அரண்மனை திரைப்படங்களை விட இப்படத்தின் வசூல் புதிய சாதனைகளை படைத்து வருகிறது.



கூலி படத்தில் ரஜினி, லோகேஷின் சம்பளம்!
[Wednesday 2024-05-15 06:00]

ரஜினி தற்போது வேட்டையன் படப்பிடிப்பை நிறைவு செய்த நிலையில் அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 6-ம் தேதி தொடங்கும் என்பது முன்பே கூறப்பட்டிருந்தது. மேலும் ஜெயிலர் படத்தைப் போல ரஜினியின் கூலி படமும் மல்டி ஸ்டார் படமாக உருவாக இருக்கிறது. ஸ்ருதிஹாசன் போன்ற சில பிரபலங்கள் இந்த படத்தில் ஒப்பந்தமாக இருக்கிறார்கள். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறது.



தயாரிப்பாளர் தலையில் மிளகாய் அரைத்த ஆதிக்!
[Wednesday 2024-05-15 06:00]

விடாமுயற்சி படத்தை ஒத்திவைத்துவிட்டு அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் படத்திற்கு வந்துவிட்டார். இந்த படத்தின் சூட்டிங் இரண்டு நாளைக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்திலே இந்த படம் கைநழுவி போகக்கூடாது என ஆதிக் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.



திருமணமே செய்துகொள்ளாமல் இருப்பது ஏன்? - மனம் திறந்த கோவை சரளா!
[Wednesday 2024-05-15 06:00]

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகையாக இருப்பவர் கோவை சரளா. ஆச்சி மனோரமா அவர்களுக்கு பிறகு சிறந்த காமெடி நடிகையாக யார் வருவார் என்று இருந்த நிலையில் கோவை சரளா அந்த இடத்திற்கு வந்தார். குறிப்பாக இவர் செந்தில், கவுண்டமணி, வடிவேலு மற்றும் விவேக்குடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் எல்லாம் மிகவும் பிரபலம்.



24 வருட விஜய் டிவி வெற்றியின் ரகசியத்தை உடைத்த வெங்கட் பட்!
[Tuesday 2024-05-14 16:00]

திறமை இருந்தால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் நிச்சயமாக கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக தற்போது பலரும் பிரபலமாகி கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் செஃப் வெங்கட் பட் சமையல் வல்லுனராக மிகவும் பிரபலமாக இருக்கிறார். இதற்கு மிக முக்கிய பங்கு விஜய் டிவி தான் என்றே சொல்லலாம்.



பெயர் போனதால் மலையாள ஹீரோவிடம் சரணடைந்த கௌதம் மேனன்!
[Tuesday 2024-05-14 16:00]

கௌதம் வாசுதேவ் மேனன் தமிழில் ஹிட் கொடுத்து பல வருடங்கள் ஆகி உள்ளது. கடைசியாக அஜித்தை வைத்து எடுத்த படம் என்னை அறிந்தால் அதுவும் 2015 ஆம் ஆண்டு தான். அதற்கு அடுத்த ஆண்டு சிம்புவை வைத்து எடுத்த படம் “அச்சம் என்பது மடமையடா” . இந்த படத்திற்கு பின்னர் கௌதமிற்கு சொல்லிக் கொள்ளும்படி எந்த படமும் அமையவில்லை.



பாகுபலி 3 எடுக்க முடிவு செய்த ராஜமௌலி!
[Tuesday 2024-05-14 16:00]

இந்தியளவில் மட்டுமின்றி உலகளவில் தற்போது பிரபலமான இயக்குனராக மாறிவிட்டார் எஸ்.எஸ். ராஜமௌலி. இவர் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்கள் உலகளவில் ரீச் பெற்றது. ஆர்.ஆர்.ஆர் படத்தின் பாடல் ஆக்ஸர் விருது பெற்ற இந்திய சினிமாவிற்கு பெருமையும் சேர்த்து. அடுத்ததாக ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.



2 முறை அந்த வெற்றி இயக்குனரை ரகசியமாக சந்தித்த ரஜினி!
[Tuesday 2024-05-14 06:00]

ரஜினி இப்போது வேட்டையன் பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். அவ்வப்போது படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகும் போட்டோக்கள் ரசிகர்களை ஆரவாரப்படுத்தி வருகிறது. அதேபோல் லோகேஷ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் கூலி படத்தின் டைட்டில் டீசரும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எப்போது இந்த ஷூட்டிங் தொடங்கும், அடுத்த அப்டேட் என்ன என்பதையும் ரசிகர்கள் கவனித்து வருகின்றனர்.



யாஷிகா ஆனந்த் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட்! Top News
[Tuesday 2024-05-14 06:00]

தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கு பெயர்பெற்றவர் யாஷிகா ஆனந்த். படங்களில் கிளாமராக நடிப்பது மட்டுமின்றி இன்ஸ்டாவில் அவர் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.


NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா