Untitled Document
April 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
உலகை உலுக்கும் உணவு விரயம்!
[Tuesday 2023-09-26 07:00]

இன்றைய தொழிநுட்ப உலகில் யாருக்கும் தங்களின் உறவுகளுடன் பேச கூட நேரம் இல்லாமல் போய்விட்டது, அப்படியிருக்கும் போது நம்முடைய தவறுகளை சுய பரிசீலனை செய்யவும் திருத்திக்கொள்ளவும் ஏது நேரம்? அப்படி நாம் செய்யும் சிறிய தவறுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து நம்மயே அழிக்கும் சக்தியாக உருவெடுத்துவிட்டது என்பது நம்மில் பலரும் அறியாத உண்மை.

அப்படி நாம் செய்யும் தவறுகளுள் ஒன்று உணவை விரயமாக்குதல். உணவு விரயமாதல் இன்றைய காலகட்டத்தில் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிக பெரிய பிரச்சினையாகவுள்ளது. ஒவ்வொர் ஆண்டும் சுமார் 130 கோடி டொன் உணவு பொருட்கள் வீணாகின்றன.

உணவை விரயமாக்குதல் உலகம் முழுவதும் நடக்கும் ஒரு சமூக குற்றச் செயலாகும். எத்தனையோ பிரச்சினைகளுக்கு மத்தியில் உணவு பொருட்களை விளைவித்து கொடுக்கும் விவசாயிகளுக்கு நாம் செய்யும் அவமரியாதையே உணவை விரயமாக்குவதாகும்.

எமக்கு உயிர் கொடுக்கும் உணவை நாம் உயிராக மதிக்க வேண்டும் என்பதை நம்மில் பலர் மறந்து விடுகின்றோம்.

உலகில் சுமார் 70 கோடி மக்கள் இரவில் உணவு இன்றி உறங்க செல்கிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

உணவின் மொத்த உற்பத்தியில் 20 சதவீதமான உணவு விரயமாக்கபடுவதாக ஐ. நா வின் உணவு விரய குறியீடு 2021 இன் ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது.

சர்வதேச அளவில் 54 நாடுகளில் 2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் 61 சவீதமான உணவு வீடுகளில் இருந்தும், 26 சதவீதம் உணவு விடுதிகளில் இருந்தும்,13 சதவீதம் உணவு சில்லறை விற்பனை நிலையங்களில் இருந்தும் விரயமாக்கப்படுகின்றது.

உலகில் உணவை நுகரும் ஒவ்வொரு தனி மனிதனும் 74 கிலோ உணவை வீட்டிலிருந்தும், 47 கிலோ உணவை திருவிழாக்கள், உணவகங்கள், திருமண நிகழ்வுகள் மற்றும் சமூக நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாற்றப்படும் உணவிலிருந்தும் விரயம் செய்வதாக அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது.

உணவை விரயம் செய்வதால் ஏற்படும் சமூக மற்றும் சூழல் தாக்கங்கள் குறித்து பெரும்பாலானவர்கள் அக்கறை செலுத்துவதில்லை.

உணவு விரயம் எனும் போது நாம் சமைப்பதை அல்லது வாங்குவதை நாம் விரயம் செய்கின்றோம், அது எங்களின் தனிப்பட்ட பிரச்சினை என்றுதான் அநேகர் நினைக்கின்றனர்.

ஆனால் உணவு விரயம் என்பது நமது தட்டோடும் இலையோடும் முடிந்துவிடும் சிறிய விடயம் அல்ல.

பொருளாதார அறிவியல் உணவை விரயம் செய்வதை மனிதன் செய்யும் மிக பெரிய சமூக குற்றம் என்கிறது. உலகில் எல்லா மதங்களும் கூட உணவு விரயம் செய்வதை பாவ செயலாகவே கருதுகிறது.

காரணம் நிலத்தில் இருந்து உற்பத்தியாக்கப்பட்டு ஒரு எரிபொருள் மூலம் உணவு சமைக்கப்பட்டு தகுந்த பாதுகாப்பு, பகிர்வு என பல கட்டங்களை தாண்டியே நமது தட்டுக்கு வருகின்றது.

அப்படி வரும் உணவை விரயமாக்குவதன் வழியாக உணவு சமைப்பதற்கு ஏற்பட்ட செலவு பல மடங்கு அதிகரிக்கிறது. அது ஒரு நாடின் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கின்றது.

மேலும் உணவை விரயமாக்குவது சுற்று சூழலுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. மிச்சமான உணவுகள் மற்றும் பழுதான உணவுகள் என பல வழிகளில் எம்மால் விரயமாக்கப்படும் உணவு மறுபடியும் மண்ணுக்கு தான் செல்கிறது.

அவ்வாறு செல்லும் உணவுகள் மீத்தேன் (methane) CH4 எனும் வாயுவை அபரிமிதமாக சூழலில் வெளிவிடுகிறது. இது ஒரு வெப்ப வாயு ஆகையால் புவிகோலம் வெப்பமடைவதற்கு காரணமாக அமைகிறது. மேலும் பருவநிலை மாற்றங்களுக்கும் இது வழிவகுகிறது. தற்போது பருவங்கள் மாறிவிட்டன என்பது அனைவரும் அறிந்ததே.

மழை காலத்தில் வெயில் கொளுத்துவதற்கும் கோடையில் மழை கொட்டுவதற்கும், புவி வெப்பமடைவதற்கும், ஓசோன் மண்டல சிதைவிற்கும், கடல் மட்டம் உயர்வதற்கும், சிறு தீவுகள் அழிவதற்கும், தீடீரெனப் புதிய தோற்று நோய்கள் உருவாவதற்கும் கூட நாம் விரயமாக்கும் உணவும் காரணமாகின்றது.

சுற்று சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த வேண்டுமானால் உணவு விரயத்தை தடுக்க வேண்டியது அவசியம். பிடித்திருக்கிறது என்பதற்காக எல்லாவற்றையும் வாங்கி எல்லாவற்றிலும் மிச்சம் வைப்பதற்கு பதிலாக தேவைக்கேற்ப வாங்கி உண்பது சிறந்தது.

அப்படியும் மிச்சமாகும் உணவுகள் இருப்பின் குப்பை தொட்டியில் வீசி யாருக்கும் பயனில்லாமல் ஆக்கி சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதை விட உணவின்றி பசியில் இருப்பவர்களுக்கு கொடுப்பது எவ்வளவு மேலான செயல்.

உணவை பசியோடு இருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றதும் மனிதர்களுக்கு தான் கொடுக்க வேண்டும் என்றில்லை பறவைகள், விலங்குகள், எறும்புகள் போன்ற பூச்சிகளுக்கு கூட அதை பகிர்ந்து கொடுக்கலாம். உணவை பழுதாக்காமல் எந்த உயிருக்காவது உணவளிப்பது மிகவும் உயர்வானது.

இந்த பரபரப்பான சூழலில் அனைவரும் மிச்சமான உணவை குப்பை தொட்டியில் வீசிவிட்டு வேலையை பார்ப்போம் என்று இருந்துவிடுகின்றோம். இதனால் வரப்போகும் ஆபத்து அனைவருக்கும் தான் என்பதை நாம் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

இன்றைய அறிவியல் தொல்நுட்ப வளர்ச்சியின் மூலம் விரயம் செய்யப்படும் உணவை மண்ணுக்கு போகவிடாமல் தடுத்து அதை சேகரித்து மறுசுழற்சி மூலம் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உதவும் உணவாக மாற்றிவிட முடியும். அல்லது மண்ணுக்கு உதவும் வகையில் இயற்கை உரமாக மாற்றியமைக்கவும் வழிசெய்யலாம்.

சில நாடுகள் விரயமாகும் உணவில் இருந்து சமையல் எரி வாயுவை தயாரிகின்றன. விரயமான உணவை மறுபடியும் உதவும் உணவாக மாற்றியமைக்கும் முயற்சியில் தற்போது பல நாடுகளும் இறங்கியுள்ளது. விரயம் செய்யப்படும் காய்கறி மற்றும் பழங்களில் பிலெக் சொலிடர் பிளை (black solidier fly) எனும் பூச்சி இனம் அபரிமிதமாக வளர்ச்சியடைக்கிறது.

இவை உணவு கழிவுகளில் வினைதிறனாக செயற்பட்டு அவற்றை புரதம் நிறைந்த உணவாக மாற்றியமைகின்றது. அவ்வாறு மாற்றியமக்கப்படும் உணவை கோழி வளர்பிற்கும், மீன் வளர்பிற்கும் தென்னாபிரிக்கா பயன்படுத்துகிறது.

இந்த முறையை உலகின் ஏனைய நாடுகளும் பின்பற்ற வேண்டும் என ஐ. நா வின் உணவு கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச் சூழல் திட்ட தலைவர் மார்ட்டினோ ஆப்டோ கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வாறான முறையை இலங்கையிலும் கையாள தொடங்கினால் இலங்கையிலும் உணவு விரயத்தையும் சூழல் மாசுப்பாட்டையும் இலகுவில் தடுக்க முடியும். இது அரசாங்கத்தால் மட்டும் சாத்தியமான விடயம் அல்ல உணவு விரயத்தை தடுக்க ஒவ்வொரு தனி நபரும் பங்காற்ற வேண்டும். சுமார் 700 கோடி மக்கள் வாழும் இந்த பூமியில் 82 கோடி மக்களுக்கு மேலானோர் போதிய உணவு இல்லாமல் வாழ்த்து வருகின்றனர்.

உற்பத்தி செய்யப்படும் மொத்த உணவில் மூன்றில் ஒரு பங்கு யாருக்கும் உபயோகப்படாமல் விரயமாக்கபடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உணவு வீணாதல் என்பது உணவு பொருட்கள் வீணாவதை மட்டும் குறிப்பதில்லை உண்மையில் உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பணம், நீர், உழைப்பு, நிலம் மற்றும் போக்குவரத்து என அனைத்தும் வீணாவதையே குறிக்கிறது.

எனவே ஒவ்வொருவரும் சமூக பொறுப்புணர்ச்சி உடையவர்களாகவும், சூழலின் மீது அக்கறை கொண்டவர்களாகவும் செயற்பட்டு உணவு விரயத்தை தடுக்க முயற்சிப்போம்.

இது எமது கடமை மட்டுமல்ல தற்காலத்தில் அவசியமான தேவையும் கூட என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இல்லையேல் நம்மை வாழவைக்கும் உணவே நம்மை அழித்துவிடும்.

  
  
   Bookmark and Share Seithy.com



உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் சுரைக்காய் கூட்டு!
[Saturday 2024-04-27 18:00]

பொதுவாக அனைவருக்குமே உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், நமது மனமும் உடலும் பெரும்பாலான சமயங்களில் அதற்கு ஒத்துப்போவதில்லை. சரியான நேரத்தில் உடல் எடையை குறைக்கவிட்டால், அது பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.



ஆடையே நனையும் அளவுக்கு வியர்க்குதா? - இந்த 4 வழிகள் தீர்வு கொடுக்கும்!
[Friday 2024-04-26 18:00]

பொதுவாகவே கோடை காலம் வந்துவிட்டால் உடல் வெப்பநிலை அதிகரிப்பதும் வியர்வை அதிகமாக வெளியேறுவதும் இயல்பான விடயமாகும். ஆனால் இது வேலைக்கு செல்லும் நபர்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கும். சில சமயங்களில் ஆடை முழுமையாக நனைந்துவிடும் அளவுக்கு வியர்வை வெளியேறும்.இந்த பிரச்சினைக்கு எவ்வாறு எளிமையாக தீர்க்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.



கோடை காலத்தில் தயிர் சாப்பிடக்கூடாதா? - பலரும் அறிந்திடாத உண்மை!
[Thursday 2024-04-25 18:00]

கால்சியம் சத்து அதிகம் கொண்ட தயிரை தினமும் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கும் நிலையில், அதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கோடை காலத்தில் நமது உடம்பை ஆரோக்கியமாகவும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள தயிர் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியமாகும்.



தினமும் சக்கரை சாப்பிடுவதால் உடலில் நடக்கும் மாற்றம்!
[Wednesday 2024-04-24 18:00]

நாம் நமது வாழ்க்கையில் அறுசுவைள் சாப்பிட்டாலும் சக்கரையை கொஞ்சம் அதிகமாக தான் உண்கிறோம். இந்த சக்கரை உண்பது சரியா என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். சக்கரை அதிகமாக உண்பதால் உடல் எடை அதிகரிக்கிறது. இதற்கான காரணம் சக்கரையில் அதிகளவு கொழுப்பு இல்லாமல் இருந்தாலும் இதை உண்ணும் போது வேறு வழியில் நாம் நிறைய கலோரியான உணவுகளை உண்கிறோம்.



இட்லி, தோசை மாவு அரைக்கும் போது தயிர் சேர்த்து அரைத்துள்ளீர்களா?
[Tuesday 2024-04-23 18:00]

இட்லி, தோசை நாம் பொதுவாக காலையில் இலகுவாக செய்யும் ஒரு உணவு வகையாகும். இட்லி, தோசை மாவு அரைக்கும் போது அதில் நாம் ஏகப்பட்ட தானியங்களை சேர்க்கின்றோம். இதில் 65 கலோரிகள், 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு என்பதால் இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.



சரியான தூக்கம் இல்லையா? இந்த பாதிப்புகள் ஏற்படுமாம்!
[Monday 2024-04-22 18:00]

தினமும் சரியான தூக்கம் இல்லாவிட்டால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தூக்கமின்மை பிரச்சினை கவனம் செலுத்துவதற்கும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும், தகவல்களை நினைவில் வைத்திருப்பதற்கும் கடினமாக்கும். எரிச்சல், மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநிலை மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.



மாம்பழத் தோல் டீ-ன் ஆரோக்கிய நன்மைகள்!
[Sunday 2024-04-21 18:00]

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் சுவைக்கு அடிமையானவர்கள் பலர், நார்ச்சத்து அதிகம் நிறைந்த மாம்பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. விட்டமின் ஏ, பி6, சி மற்றும் இ நிறையவே உள்ளன, இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இப்பழம் செரிமானத்திற்கு உகந்தது. மாம்பழத்தில் உள்ள தாமிரம் ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும்.



நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரைக் கீரை சட்னி!
[Saturday 2024-04-20 16:00]

பொதுவாகவே கீரையில் ஏகப்பட்ட சத்துக்கள் காணப்படுகின்றது. குறிப்பாக வல்லாரை இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்துகள், தாது உப்புக்களை கொண்டது. மூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கும், ஊட்டத்துக்கும் வல்லாரை பெரிதும் துணைப்புரிகின்றது. மனித மூளை நன்கு செயல்பட தேவையான அனைத்து சத்துக்களும் இந்த வல்லாரையில் செறிந்து காணப்படுகின்றது.



தினமும் இரவில் குளித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?
[Friday 2024-04-19 16:00]

காலையில் குளிப்பதை விட இரவில் தூங்கும் முன்பு குளித்தால் ஏற்படும் நன்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். உடலின் பாகங்களை தூய்மையாக வைத்திருக்க தினமும் குளிப்பது மிகவும் அவசியமாகும். உடல் சூட்டையும் சரி செய்ய உதவுகின்றது. தினமும் தலைக்கு குளிப்பதால் சிலருக்கு தலைவலி மற்றும் சைனஸ் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். நாம் காலையில் குளிப்பதை விட இரவு நேரத்தில் குளித்தால் பல நன்மைகள் கிடைக்கும்.



ஆஸ்துமா ஏற்படுவதற்கான காரணம் என்னனு தெரியுமா?
[Thursday 2024-04-18 18:00]

ஆஸ்துமா நோய் எவ்வாறு ஏற்படுகிறது இதற்கான அறிகுறிகள் என்ன? இதை எவ்வாறு தடுக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த நோயை வீசிங் இளைப்பு போன்ற பெயர்களால் அழைப்பார்கள். இது சுவாசப் பாதைக்குள் காற்று நுழையும் போது காற்றில் உள்ள தூசிகள் போன்றவற்றை நமது நாசிகளுக்குள் உள்ள ரோமங்கள் தடுக்கின்றன.



கோடை காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
[Wednesday 2024-04-17 15:00]

கோடை காலத்தில் தண்ணீர் எவ்வளவு பருக வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நமது உடலில் ஏறத்தாழ 70 சதவீதம் அளவுக்கு நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. நம் உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாகவும், வியர்வை மூலமாகவும் வெளியேற்றுவதற்கு இந்த நீர்ச்சத்து உதவியாக இருக்கின்றது. கோடை காலத்தில் அதிக வெயில் காரணமாக நீரிழப்பு ஏற்படுகின்றது. உடம்பில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டாமல் இருக்க அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.



காலை உணவாக சாதம் சாப்பிடலாமா?
[Tuesday 2024-04-16 18:00]

காலை உணவுக்கு அரிசி சாதம் சாப்பிடலாமா? என்ற கேள்விக்கு பதில் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இன்று பலரும் காலை உணவாக சாதம் எடுத்துக் கொள்ளும் நிலையில், இதனால் சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட் அதிகமாகவே இருக்கின்றது. பல நன்மைகளை நமக்கு அளித்தாலும் காலை உணவாக சாதம் சாப்பிடுவது நல்லதல்ல என்று கூறப்படுகின்றது. அப்படி சாப்பிட்டால் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம்.



மாம்பழம் சாப்பிட்டால் தீங்கா?
[Monday 2024-04-15 18:00]

இயற்கை மற்றும் செயற்கை முறையில் பழுத்த மாம்பழங்களை எளிதாக கண்டுபிடிக்க சில டிப்ஸ்களை இங்கு தெரிந்து கொள்வோம். முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் மாம்பழத்தை பழங்களின் ராஜா என்றும் கூட அழைப்பார்கள். கோடை காலத்தில் மாம்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் இன்று ரசாயனங்கள் தெளித்து பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.



கல்லீரலை சுத்தப்படுத்தும் கோவக்காய் குழம்பு!
[Sunday 2024-04-14 18:00]

கோவக்காய் ஒரு சிறந்த இயற்கை மருந்தாக காணப்படுகின்றது. இது கல்லீரலை பாதுகாப்பதில் முக்கியமாக ஒரு காயாக பார்க்கப்படுகின்றது. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை உணவுகளில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் வெளியேறி கல்லீரல் வீக்கம் குறைக்க பெரிதும் துணைப்புரிகின்றது. இரும்புச்சத்து, பொட்டாசியம், போன்ற தாதுக்கள் கோவக்காயில் அதிகமாக இருக்கிறது. இவை எலும்பு வளர்ச்சி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது.



செரிமான கோளாறுக்கு தீர்வு கொடுக்கும் பூண்டு ஊறுகாய்!
[Saturday 2024-04-13 18:00]

பொதுவாகவே அனைவரும் சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் இன்றியமையாத பொருளாக பூண்டு காணப்படுகின்றது. பூண்டு உடலுக்கு மிகவும் நல்லது. இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல மருத்துவ குணங்கள் உள்ளமை அனைவரும் அறிந்ததே. பூண்டானது நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்தது. வாயுத் தொல்லை, நெஞ்சுக்குத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தரும்.


 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா