Untitled Document
April 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மெய் சிலிர்ப்பதற்கு இது தான் காரணமா?
[Saturday 2023-10-28 18:00]

பொதுவாகவே அனைவரும் வாழ்வில் ஒரு முறையாவது மெய் சிலிர்க்கும் உணர்வை அனுபவத்தில் உணர்ந்திருப்போம்.மயிர் கூச்செறிவது அல்லது புல்லரிப்பது என்பது அனைவருக்குமே ஏற்படும் ஒரு அன்றாட நிகழ்வுதான். அதிகமான குளிர், மகிழ்ச்சியான சூழ்நிலைகள் போன்ற தருணங்களில் கை, கால்களில் இருக்கும் முடிகள் அனைத்தும் திடீரென எழுந்து நிற்கும். சில நொடிகள் மட்டுமே நீடிக்கும் குறித்த உணர்வை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.

நாம் அனைவரும் இதனை உணர்ந்திருந்தாலும் அது ஏன் ஏற்படுகிறது? அதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? என்பது குறித்து நம்மில் பலரும் சிந்தித்திருக்க மாட்டோம். எதனால் இந்த உணர்வு ஏற்படுகிறது என்பது தொடர்பிலும் மனிதனை தவிர வேறு எந்த உயிரினங்களுக்கு இவ்வாறான உணர்வு ஏற்படுகின்றது என்பது குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக குளிராக இருக்கும் நேரம் தவிர்த்து பிடித்த பாடலை பாடும்போதும், கேட்கும்போதும் மெய் சிலிர்ப்பு ஏற்படுவதை நாம் உணர்ந்திருப்போம். மெய் சிலிர்ப்பு ஏற்படுவது நமக்கு அந்த பாடலை எவ்வளவு பிடித்திருக்கிறது என்பதை பறைசாற்றுகின்றது.

புல்லரிப்பு என்பது சருமத்தில் ஏற்படும் சிறு சிறு கொப்புங்கள் போல காட்சியளிக்கும். நாம் மகிழ்ச்சியாக, துன்பமாக, குளிராக உணரும்போது நமது மூலை உற்பத்தி செய்யும் ஹார்மோன் நமது முடியின் துளைகளை எழ செய்கிறது. இது உணர்ச்சிகளுடன் தொடர்புடையதாகும்.

அறிவியவின் அடிப்படையில் புல்லரிப்பு ஏற்பட உணர்ச்சிகள்தான் முக்கியமான காரணமாக அமைகின்றது. பல உணர்ச்சிகள் இதனுடன் தொடர்புடையதாகும்.

குறிப்பாக பயம் ஏற்படும்போது மயிர் கூச்செரிப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி ஏக்கம், மகிழ்ச்சி, பிரமிப்பு, ஆச்சரியம், பாலியல் உணர்ச்சி என இதற்கு பல உணர்ச்சிகள் காரணமாக இருக்கிறது.

சில மிருகங்கள் எதிரிகளை உணர புல்லரிப்பது எதிரிகளின் வருகையை உணர்த்துவதாகவும் இருக்கிறது.இது அவற்றின் உயிரை காப்பாற்றும் ஒரு எச்சரிக்கை உணர்வாக இருக்கிறது.

சிம்பான்சி, எலி மற்றும் வேறு சிலவகை குரங்குகளுக்கு எதிரிகள் வரும் முன்னரே இந்த உணர்வு வந்துவிடும் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.

முடி அதிகமாக இருக்கும் மிருகங்கள் அனைத்துமே குளிர் அதிகமாக இருக்கும்போது இவ்வாறு தங்கள் முடியை தூக்கிக்கொள்ளும். அவை நினைத்தால் கூட இதனை தடுக்க இயலாது. இந்த செயற்பாடு கடுமையான குளிரிலிருந்து அவற்றை பாதுகாக்க துணைப்புரிகின்றது.

பூனைகள் சண்டையிடும் போதும், பயத்தில் இருக்கும் போதும் அவற்றின் முடி அனைத்தும் எமக்கு புல்லரிக்கும் போது இருப்பது போல தூக்கி கொண்டு நிற்கும். இதுவும் புல்லரிப்பதை போன்ற உணர்வுதான்.

  
  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா