Untitled Document
May 17, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பார்த்தாலே பசி எடுக்கும் கிராமத்து ஸ்டைலில் விரால் மீன் குழம்பு!
[Thursday 2024-05-02 18:00]

பொதுவாகவே அனைவருக்கும் விதவிதமாக சமைத்து சாப்பிடுவது மிகவும் பிடித்த விடயமாக தான் இருக்கும்.அதிலும் அசைவ உணவுகள் என்றால் சொல்லும் போதே நாவூரும். அசைவ உணவுகளை பொருத்த வரையில், மீன்களில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றது. மீன்களை பொரித்து சாப்பிடுவதை விட குழம்பு செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. மீன்குழம்பு என்றாலே கிராமத்து ஸ்டைல் தான் மிகவும் சுவையாக இருக்கும்.

மசாலாவை அரைத்து குழம்பு வைப்பது தான் கிராமத்து ஸ்டைலில் ஸ்பெஷல். அதனால் தான் கிராமத்து மீன் குழம்பு சுவையிலும் மணத்திலும் அல்டிமேட்டாக இருக்கின்றது. அப்படி பார்த்தவுடனே பசி எடுக்கும் வகையில் விரால் மீன் குழம்பு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

விரால் மீன் - 1/2 கிலோ

கிராம் சின்ன வெங்காயம் - 20

தக்காளி - 2

துருவிய தேங்காய் - 1/4 கப்

புளி - நெல்லிக்காய் அளவு

பூண்டு - 10பல்

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

மிளகாய்த் தூள் - 1 1/2 தே.கரண்டி

கொத்தமல்லி தூள் - 2 தே.கரண்டி

சீரகம் - 1தே.கரண்டி

வெந்தயம் - 1/2 தே.கரண்டி

வறுத்துப் பொடித்த வெந்தயம் - 1 தே.கரண்டி

நல்லெண்ணெய் - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலாவதாக விரால் மீனை நன்றாக சுத்தம் செய்து சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து கழுவி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின் ஒரு பாத்திரத்தில் புளியுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊறவைத்து கொள்ள வேண்டும்.

புளி நன்றாக ஊறியதும் அதனை கெட்டியாக பதத்தில் கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் துருவிய தேங்காய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் போன்ற பதத்தில் அரைத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் மண் சட்டி ஒன்றை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம் மற்றும் வெந்தயம் போட்டு வெடிக்க விட வேண்டும்.

பின்னர் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு பொன் நிறமாக மாறும் வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளி வதங்கியவுடன் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.

மசாலாவின் பச்சை வாசனை போனதன் பின்னர் புளி கரைசலை சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட வேண்டும்.

குழம்பு நன்றாக கொதித்த பிறகு கழுவி வைத்துள்ள விரால் மீன் துண்டுகளை போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்டை அதனுடன் சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவினால் சுவையான விரால் மீன் குழம்பு தயார்.

  
  
   Bookmark and Share Seithy.com



மணமணக்கும் கிராமத்து ஸ்டைல் மட்டன் குழம்பு!
[Tuesday 2024-05-14 16:00]

கிராமத்து ஸ்டைலில் சுவையான மட்டன் குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்று பெரும்பாலான நபர்கள் அசைவ பிரியர்களாகவே காணப்படுகின்றனர். அதிலும் மட்டன் என்றால் அலாதி பிரியம். ஆம் கிராமத்து ஸ்டைலில் மட்டன் குழம்பு வைத்தால் வீட்டில் அடிபுலியாகவே இருக்கும். தற்போது அந்த ரெசிபியை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



உணவு சாப்பிட்ட உடனே செய்யக்கூடாத விஷயங்கள்!
[Monday 2024-05-13 18:00]

உணவு சாப்பிட்ட பிறகு சிலர் ஓய்வெடுக்க விரும்புவார்கள். சிலர் புகைபிடிப்பதையோ அல்லது டீ குடிப்பதையோ விரும்புவார்கள். ஆனால் சாப்பிட்ட பிறகு செய்யும் சில செயல்கள் எப்படி உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?ஒவ்வொரு நபரும் உணவுக்குப் பிறகு ஓய்வெடுக்க வெவ்வேறு வழிகளைக் கொண்டுள்ளனர். ஆனால் மதிய உணவு அல்லது இரவு உணவிற்குப் பிறகு நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.



புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்கிறீங்களா? - இந்த ஆபத்து நிச்சயம்!
[Sunday 2024-05-12 16:00]

கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பெற இளைஞர்கள் புரதப்பவுடர் எடுத்துக்கொள்வதால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படுமா? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். புரோட்டீன் பவுடர்கள் முட்டை, பால் சார்ந்த பொருட்கள், சோயா பீன்ஸ், பட்டாணி, அரிசி ஆகியவற்றிலிருந்து புரோட்டீன்களை தனியாக பிரித்து அதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.



கறிவேப்பிலை தண்ணீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!
[Saturday 2024-05-11 18:00]

கறிவேப்பிலையின் மணமும் அதன் சுவையும் பலரையும் கவர்கிறது. இது பொதுவாக சாம்பார், தோசை மற்றும் தேங்காய் சட்னி போன்ற தென்னிந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும். இது ஆயுர்வேதத்தின் பொக்கிஷமாக கருதப்படுகிறது, ஏனெனில் இதில் பல மருத்துவ குணங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன, இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.



மூளை நரம்புகளை வலுவாக வைத்துக்கொள்ளும் உணவுகள்!
[Friday 2024-05-10 18:00]

நம்முடைய அன்றாட வேலைகளை சரியாக செய்வதற்கு மூளை சுறுசுறுப்பாக இருப்பது மிகவும் முக்கியம் என்பதால் அதற்குரிய சரியான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். மூளைக்கு சத்தான உணவுகளை கொடுக்கவில்லை என்றால் அது நமது உடலில் பல பிரச்சனைகளை கொண்டு வரும். மூளையின் செயல்பாட்டிற்கு தேவையான சத்துக்கள் வைட்டமின் B, B12, E, தாமிரம், ஃபோலிக் அமிலம் போன்ற சத்துக்கள் அதிகமாக சேர்க்கப்படுகின்றன.



வீட்டிலேயே சன்ஸ்கிரீன் தயார் செய்வது எப்படி?
[Thursday 2024-05-09 18:00]

சருமத்திற்கு தீங்கை விளைவிக்கும் சன்ஸ்கிரீமை கடைகளில் வாங்குவதை விட வீட்டிலேயே எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். வெயில் கூடிய பிரதேசங்களில் கண்டிப்பாக சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது முக்கியமாகும். இதை பயன்படுத்தினால் சூரியக்கதிர்கள் சருமத்தை பாதிக்காமல் சருமம் அழகாக இருக்கும்.



ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் நல்லதா?
[Wednesday 2024-05-08 18:00]

ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் நல்லதா? அல்லது தோல் இல்லாமல் சாப்பிட்டால் நல்லதா? என்ற கேள்விக்கான பதில் இதோ. பொதுவாக நாள் ஒன்றிற்கு ஒரு ஆப்பிள் எடுத்துக்கொண்டால் மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறப்படுகின்றது. ஏனெனில் ஆப்பிளில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. குடல் மற்றும் இரப்பை பிரச்சினைக்கு சிறந்த தீர்வை அளிக்கும் இது, நல்ல குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.



செட்டிநாட்டு ஸ்டைலில் மணமணக்கும் முட்டை மசாலா குழம்பு!
[Tuesday 2024-05-07 18:00]

பொதுவாகவே புரததிற்கான மிகச் சிறந்த மூலமாக முட்டை காணப்படுகின்றது. முடி உதிர்வு பிரச்சினை தொடக்கம் சரும பாதுகாப்பு வரை உடல் ஆரோக்கியத்தில் முட்டை முக்கிய இடம் வகிக்கின்றமை அனைவரும் அறிந்ததே. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினசரி ஒரு முட்டை சாப்பிட வேண்டியது அவசியம்.



எல்லா மதங்களிலும் விரதங்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் தெிரியுமா?
[Monday 2024-05-06 18:00]

மனிதன் தன் பசியை கட்டுப்படுத்ததுவது தான் விரதமாகும். இது ஒ்வொரு மதங்களிலும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக காணப்படுகின்றது ஏன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். விரதம் இருப்பதால் அது பல நன்மைகளை தருகிறது. இதனால் சுய கட்டுப்பாடு மற்றும் தெய்வீகத்துடனான தொடர்பு போன்றவற்றை மேம்படுத்தும் ஒருவகையான ஆன்மீக ஒழுக்கத்தின் வடிவமாக விரதம் பார்க்கப்படுகிறது.



பெண்களே அழகாக இருக்க ஆன்மீக அழகுக்குறிப்புக்கள் இதோ!
[Sunday 2024-05-05 18:00]

பெண்கள் பொதுவாக அழகை விரும்புபவர்கள். உலகில் படைக்கப்பட்ட எல்லாப் பெண்களுமே மகாலட்சுமியின் சொரூபமானவர்கள். இவர்களில் சிலர் இயற்கயைான அழகை கொண்டிருப்பார்கள். சிலருக்கு அந்த அழகு கொஞ்சம் குறைவாக இருப்பதால் நீங்கள் தாழ்வு மனப்பான்மை அடைய கூடாது. உங்களிடம் இருக்கும் அழகை நீங்கள் மெருகூட்டிக்கொள்ள இந்த பதிவில் சில சிஷயங்ககளை குறிப்பாக பார்க்கலாம்.



பாகற்காயை எப்படி கசப்பில்லாமல் வறுவல் செய்யலாம் தெரியுமா?
[Saturday 2024-05-04 17:00]

பாகற்காய் மரக்கறி வகைகளில் மிகவும் முக்கியமான ஒரு மரக்கறியாகும். ஆனால் இதன் சுவை கசப்பென்பதால் இதை குழந்தைகளும் ஏன் பெரியவர்கள் சிலர் கூட உண்ண மாட்டார்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இந்த பாகற்காயை உடலுக்கு சேர்க்கும் வகையில் கசப்பு சுவை வராமல் ஒரு ரெசிபியை இந்த பதிவில் பார்க்கலாம்.



குழந்தைகள் ஏன் தாத்தா பாட்டியுடன் வளர வேண்டும் தெரியுமா?
[Friday 2024-05-03 18:00]

தற்காலத்தில் பொதுவாக கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்பவர்களாக இருக்கின்றனர். இதனால் குழந்தைகளை சரியாக பராமரிக்க முடியாமலும் அவர்களுடன் நேரத்தை செலவிட முயாமலும் போகின்றது. முன்னைய காலாத்தில் பெரும்பாலும் மக்கள் கூட்டுக்குடும்பங்களாகவே வாழ்ந்தார்கள். இதனால் குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டியின் அன்பும் அரனைனைப்பு கிடைத்தது. ஆனால் தற்காலத்தில் அந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது.



ஒயின் குடித்தால் உண்டாகும் ஆபத்துக்கள் என்னவென்று தெரியுமா?
[Wednesday 2024-05-01 16:00]

ஆண் பெண் என இருபாலாரும் ஒயின் குடிப்பதால் உடலில் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்க முடியும். ஒயின் குடிப்பதால் புற்றுநோய் வராமல் தடுக்கும் இது இதயத்தை பாதகாக்கும் வயதாகும் நெரத்தில் உண்டாகும் மூளை மந்தத்தையும் இல்லாமல் செய்கிறது.



சுட்டெரிக்கும் வெயிலுக்கு தர்பூசணி மில்க்‌ஷேக்!
[Tuesday 2024-04-30 18:00]

சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமான தர்பூசணி மில்க்ஷேக் எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கோடைகாலத்தில் உடலில் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே இருப்பது இயல்பு. இதனால் கோடைகாலத்தில் அதிக பழ வகைகள் சாப்பிடவும், நீர் ஆகாரங்களை அதிகமாக எடுத்துக்கொள்ளவும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.



வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் கிடைக்கும் பயன் என்ன?
[Monday 2024-04-29 18:00]

தினமும் காலையில் வெறு வயிற்றில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன் என்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். நெய்யில் பல வகையான நன்மைகள் உள்ளது. காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சாப்பிடும் பொழுது அது நம்முடைய செரிமானத்தை தூண்டச்சயெ்கிறது.


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா