|
|
பெர்முடா முக்கோணத்தின் மர்மம் நீங்கியது!
[Friday 2016-10-21 07:00]
|
அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பெர்முடா முக்கோணத்திற்கு அருகே செல்லும் விமானங்கள் மட்டும் கப்பல்கள் எவ்வாறு காணாமல் போகின்றன என்ற மர்மத்திற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 5,00,000 சதுரடி பரப்பளவில் பெர்முடா முக்கோணம் அமைந்துள்ளது.
இது Florida, Puerto Rico மற்றும் Bermuda ஆகிய பகுதிகளுக்கு இடையே ஒரு முக்கோண வடிவில் காணப்படுகிறது.
இந்த கடற்பரப்பின் மீது செல்லும் கப்பல்களும், இதற்கு மேல் பறக்கும் விமானங்களும் திடீரென மாயமாக காணாமல் போவது விஞ்ஞானிகளை பெரிதும் குழப்பத்தில் ஆழ்த்தி வந்துள்ளது.
|
|
|
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படவுள்ள சிறிய ரோபோ!
[Wednesday 2016-10-19 18:00]
|
ரஷ்யாவுடன் இணைந்து எடுக்கும் ஒரு முயற்சியில், ஐரோப்பிய விண்வெளி முகமை அடுத்த சில மணி நேரங்களில் சிறிய ரோபோஒன்றை செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பின் மீது செலுத்த முயற்சிக்கவுள்ளது.ஸ்கியாப்பரள்ளி என்று அழைப்படும் அந்த சோதனை முயற்சி, தாழ்வான இடத்தை நோக்கி இறங்கும் இயக்கத்தில் தாக்குபிடித்துவிட்டால், அவ்வாறு செயல்பட்ட முதல் ஐரோப்பிய விண்கலம் என்ற பெயரை பெரும்.ஏனெனில் இதற்கு முன் ரஷிய விண்கலம் ஒன்று 20 நொடிகள் மட்டுமே இவ்வாறு இறங்குகையில் தாக்குபிடித்தது; மேலும் ஐரோப்பிய ஒன்றிய விண்கல முகமையின் விண்கலம் ஒன்று, தரை இறக்கப்பட்டது எனினும் அது செயல்படவில்லை.
|
|
|
குளிர்சாதனப் பெட்டிக்குள் தக்காளியை வைத்தால் வாசத்தையும் சுவையையும் இழக்கிறது: - ஆய்வில் தகவல்
[Wednesday 2016-10-19 08:00]
|
தக்காளியை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால், அது வாசத்தையும் சுவையையும் இழக்கிறது என புதிய ஆய்வில் தெரியவருகிறது.ஜான் பான்ஸ்சர் என்பவர் நியூஜெர்ஸியில் உள்ள தனது பண்ணை நிலையத்தில் தக்காளி வாங்குபவர்களிடம் அதை கெடாமல் பாதுகாக்கும் நோக்கில் குளிர்சாதனங்களுக்குள் வைக்காதீர்கள் என்று தவறாமல் அறிவுரை கூறுகிறார்.நாம் வீட்டுக்கு வாங்கிவந்து குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்காமல் இருந்தாலும் முன்பே கடையில் வைக்கப்பட்டிருந்தாலும் அதில் மணம் இருப்பதில்லை.
|
|
|
10 இலக்க மொபைல் எண்கள் விரைவில் 11 இலக்கமாக மாறப்போகிறது!
[Wednesday 2016-10-12 17:00]
|
11 இலக்க மொபைல் எண்களை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவர தொலைத்தொடர்புத் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அலைப்பேசி ஆப்ரேட்டர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 இலக்க மொபைல் எண்கள் விரைவில் தீர உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 10 இலக்க எண்களை மொபைல் எண்களாக பயன்படுத்த தொலைத்தொடர்புத் துறை 30 ஆண்டுகளுக்கான கொள்கையை கடந்த 2003 ஆம் ஆண்டு வகுத்தது. ஆனால் அதிகரித்து வரும் அலைப்பேசி எண்ணிக்கை வாடிக்கையாளர்கள் காரணமாக தனது கொள்கையை மறு பரிசீலனை செய்துள்ளது.
|
|
|
தூங்கி எழுந்த 60 நொடிகளுக்குள் நீர் குடித்தால்..!!
[Tuesday 2016-10-11 22:00]
|
கண்ணு சொக்கும் வரை, சிவக்கும் வரை மொபைல் பயன்படுத்திவிட்டு தான் உறங்க செல்கிறோம். அதே போல உறங்கி எழுந்ததும் மீண்டும் அதே மொபைல் மின்னஞ்சல் பார்ப்பது, முகநூல் நோண்டுவது லைக் இடுவது என நாளை துவக்கிறோம். சிலர் மலம் கழிக்கும் நேரத்திலும் கூட மொபைல் நோண்டுவார்கள். ஆனால், இதுபோன்ற பழக்கத்தை தவிர்த்து, காலை தூங்கி எழுந்ததும் 60 நொடிகளுக்குள் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை உண்டாக்கி கொள்ளுங்கள்.
|
|
|
பப்பாளி விதை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் நடக்குமா!
[Wednesday 2016-10-05 09:00]
|
பப்பாளிப் பழம் எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் பெங்களூர் பப்பாளியை சாப்பிட்ட பின் இதனைப் பிடிக்காது என்று சொல்ல மாட்டீர்கள். அவ்வளவு இனிப்பான சுவை இருக்கும்.
பப்பாளியில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பது பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். பப்பாளி மரம் எளிதில் எங்கும் வளரக் கூடியது. பூச்சி மருந்தோ, உரமோ தேவைப்படாது. ஆகவே மற்ற பழங்களைப் போலல்லாமல் அவற்றை தைரியமாக உண்ணலாம்.
பப்பாளியை சாப்ப்பிட்டால் நல்லது எனத் தெரியும். ஆனால்பப்பாளி விதையையும் உண்ணலாம் எனத் தெரியுமா?பப்பாளி விதைகள் பப்பாளியைவிட நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என நிறைய ஆய்வுகள் கூறுகின்றன.
|
|
|
பெண் மலட்டுத்தன்மையைப் போக்கும் நாட்டு வைத்தியங்கள்!
[Wednesday 2016-10-05 09:00]
|
மலட்டுத்தன்மை என்பது எந்த ஒரு பிறப்பு கட்டுப்பாடு மாத்திரையையும் எடுக்காமல், உடலுறவில் ஈடுபட்டும் கருத்தரிக்க முடியாமல் இருப்பதைத் தான் கூறுவார்கள். அதிலும் ஒரு வருடத்திற்கும் அதிகமாக தம்பதிகள் உடலுறவில் ஈடுபட்டு, கருத்தரிக்க முடியாமல் போனால், அது அந்த மலட்டுத்தன்மை இருப்பதைக் குறிக்கும். இத்தகைய மலட்டுத்தன்மை ஆண் அல்லது பெண்ணிற்கு கூட ஏற்படலாம். ஒருவருக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளும்இ ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணிகளும் காரணங்களாகும். இங்கு பெண் மலட்டுத்தன்மையைத் தடுக்கும் சில இயற்கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
|
|
|
படுக்கையறை மூலைகளில் எலுமிச்சை பழத்தை அறுத்து வைப்பது தற்காக ?
[Tuesday 2016-10-04 21:00]
|
நம் உடலுக்கு மட்டுமல்ல, நம்மை சுற்றி இருக்கும் இடங்கள் மற்றும் சுற்றுசூழலில் உண்டாகும் எதிர்மறை மாற்றங்களுக்கும் கூட செயற்கை பொருட்களை விட, இயற்கை பொருட்கள் தான் சிறந்த தீர்வை அளிக்கவல்லது. அந்த வகையில் பல ஆரோக்கிய நன்மைகள் கொண்டுள்ள எலுமிச்சை உடலை மட்டுமின்றி, வீட்டையும் கூட சுத்தமாக வைத்துக்கொள்ள பெருமளவில் உதவுகிறது. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதாலும் ஒருசில உடல்நல குறைபாடுகள் பரவாமல் பார்த்துக் கொள்ள முடியும். பாக்டீரியாக்கள்! நோய் பாதிப்பு உள்ளவர்கள் உறங்கும் அறையில் எலுமிச்சை பழத்தை அறுத்து வைப்பதால், அந்த நோய் தொற்று பெருகாமலும், அதிகரிக்காமலும் பாதுகாக்க முடியும்.
|
|
|
உலக மூளை முடக்குவாத நாள் - 05 ஐப்பசி 2016 -
மூளை முடக்குவாதம் பற்றி அறிவோம்
[Monday 2016-10-03 18:00]
|
விஞ்ஞானத்தின் எல்லையைத் தொட்டுவிட்டோமென்று கூறிக்கொண்டிருக்கும் இவ் உலகில் இவ்வாறுதான் பிறப்பு நிகழும் என்பதையோ அல்லது எவ்வாறு இறக்கப்போகிறொமென்பதையோ முன்கூட்டிக் கூறுவார் எவருமில்லை. பிறப்பும் இறப்பும் அன்றாடம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பிறக்கின்ற போது வலுவிழப்புடன் பிறப்பவர்களும், பிறந்துவிட்ட பின்னர் வலுவிழப்புக்குள்ளாகின்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) மதிப்பீட்டின் படி உலகில் 15% மக்கள் வலுவிழப்புடனானவர்களாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி நோக்கினால் ஏறத்தாழ 65 கோடி மக்கள் இந்த நிலையில் உள்ளார்கள். மேலும்இலங்கையில் 1000 பிறப்புக்கள் நடைபெறும் போது இதில் 12 தொடக்கம் 15 வரையான பிள்ளைகள் மூளைமுடக்குவாதமுள்ள பிள்ளைகளாகப் பிறப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வகையில் இவ்வாறான வலுவிழப்புடனானவர்கள் பற்றி மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்.
|
|
|
சர்க்கரை வியாதி வந்தவர்கள் எது சாப்பிடலாம்..?
[Sunday 2016-10-02 18:00]
|
சர்க்கரை வியாதி வந்தவர்கள் எது சாப்பிடலாம் எது சாப்பிடக் கூடாது என பார்க்கலாம்.
சாப்பிடக் கூடாத உணவுகள் ;
காய்கறிகளில் பீட்ரூட், திராட்சை, சர்க்கரை, ஜாம், பிஸ்கட், சாக்லெட், கார்பனேட்டட் குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், கேக், முந்திரி, க்ரீம் வகை உணவுகள், கொழுப்பு நிறைந்த மசாலா உணவுகள், ப்ரிஸ்ர்வெட்டிவ் கலந்த உணவுகள் ஆகியய்வைகள் கெடுதல் தரும்.
|
|
|
பேஸ்புக் பக்கத்தை முடக்கும் வகையில் வைரஸ் லிங்!
[Sunday 2016-10-02 18:00]
|
பேஸ்புக் பக்கத்தை முடக்கும் வகையில் ஒருவகையான வைரஸ் லிங் பேஸ்புக் ஊடாக தானாக வருகிறது அதனை அழுத்தி அனுமதித்தால் முகநுாலில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் அந்த பரவி பேஸ்புக் பக்கம் முடங்கும் ஆபத்து உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இன்று காலை வழமை போன்று திறக்கப்படும் பேஸ்புக் பக்கங்களில் இவ்வகையான ஆபத்து உள்ளது தெரியவந்துள்ளது. இவ் வைரஸ் லிங்கானது முகநுாலின் கீழ் பகுதி ஊடாகவே உள் நுளைகிறது.
இவ் வைரஸ் தாக்குதலானது பேஸ்புக்கிற்கு எதிராக சில விசமிகள் செய்யும் தாக்குதலாக தொழில்நுட்ப அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
|
|
|
சர்க்கரை நோய் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய பழங்கள்!
[Thursday 2016-09-29 18:00]
|
தற்போது இந்தியாவில் சர்க்கரை நோயின் தாக்கம் அதிகம் உள்ளது. நிறைய பேர் சர்க்கரை நோயினால் அவஸ்தைப்படுகிறார்கள். சர்க்கரை நோய் இருந்தால், உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, அதனால் நிலைமை மோசமாகக்கூடும். அதிலும் ஏற்கனவே கட்டுப்படுத்த முடியாத நிலையில் சர்க்கரை நோய் இருந்தால், அப்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இங்கு ஒருவருக்கு சர்க்கரை நோய் முற்றிய நிலையில் இருந்தால் சாப்பிடக்கூடாத சில பழங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த பழங்களை இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும் வரை சாப்பிட வேண்டாம்.
|
|
|
இந்த புள்ளிகளை அழுத்தினால் உடலினுள் நிகழும் மாற்றங்கள்..!
[Tuesday 2016-09-27 19:00]
|
நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஏராளமான சிகிச்சை முறைகள் உள்ளன. அதில் ஒன்று தான் அக்குபிரஷர் சிகிச்சை. இந்த சிகிச்சையின் மூலம் உடலின் குறிப்பிட்ட இடத்தில் அழுத்தம் கொடுத்தால், நாம் அனுபவிக்கும் ஒருசில வலிகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். தினமும் இந்த 6 அழுத்தப் புள்ளிகளை அழுத்தினால் உடல் எடையைக் குறைக்கலாம் என்பது தெரியுமா? ஏனெனில் உடலின் ஒவ்வொரு பகுதியும் மற்றொன்றுடன் தொடர்பு கொண்டுள்ளது. எனவே தான் ஒரு பகுதியில் அழுத்தம் கொடுப்பதனால், பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது. கழுத்துக்கு பின் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா?
|
|
|
ஏலியன்ஸ் பூமிக்கு வந்தால் என்ன நேரும்? - ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை!
[Tuesday 2016-09-27 18:00]
|
உலக புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், ஏலியன்ஸால் நம்மை அழிக்க முடியும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சாத்தியமுள்ள வாழத்தக்க வெளிக்கோள்கள் ஜிலிஸ்832சியில் அறிவார்ந்த வாழ்க்கை குறித்து பேசிய அவர் கூறியதாவது, ஏலியன்ஸை பூமிக்கு அழைத்தால் அது நமக்கு எதிராக முடியும், அவர்களை தொடர்பு கொள்ள கூடாது. அங்கு ஒரு அறிவார்ந்த வாழ்க்கை இருக்கும் என்றால் நாம் அதை கேட்க முடியும். ஒரு நாள் நாம் இந்த மாதிரி கிரகத்தில் இருந்து சிக்னல்களை பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் நாம் திரும்ப பதில் அளிப்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறினார். ஏலியன்ஸ் அறிவார்ந்த் வாழ்க்கை மனித வாழ்க்கையை அழிக்க முடியும் என ஹாக்கிங் பேசுவது முதல் முறை அல்ல, கடந்த வருடம் ஜூலை மாதமும் இது போல் பேசினார் என்பது நினைக்கூரத்தக்கது.
|
|
|
ஏரோமொபில் 3.0 என்ற பறக்கும் கார்கள் விரைவில் அறிமுகம்:
[Monday 2016-09-26 16:00]
|
ஏரோமொபில் 3.0 என்ற பறக்கும் கார் 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனம் தெரிவித்துள்ளது. சாலையில் பயணிக்கும் கார் போன்ற அமைப்பை கொண்ட இந்த ஏரோமொபில் 3.0 பறப்பதற்கு ஒரு சுவிட்சை தட்டினால் போதும். அதன்மூலம் இறக்கைகள் கொண்ட காராக மாறி பறக்க தொடங்கிவிடும். மினி ஹெலிகாப்டர் போல மினி கார். இந்த காரில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க முடியும். இந்த காரின் விலை 1.5 கோடி முதல் ஆரம்பமாகிறது. அடுத்த ஆண்டு முதல் முன்பதிவை தொடங்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
|
|
|
கேலக்ஸி நோட் 8 விரைவில் அறிமுகம்!
[Monday 2016-09-26 08:00]
|
தென்கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனம் வெளியிடு ஒவ்வொரு வகை மாடல் போன்களும் வாடிக்கையாளர்கள் இடையே பெரும் மதிப்பையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 28ஆம் தேதி சாம்சங் கேலக்ஸி நோட் 8 வகை மாடல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் வெளியிட்டு வந்த மாடல்கள் பெரும்பாலான மாடல்களில் பிளாட் பேனல் இருந்த நிலையில் இனி வரப்போகும் கேலக்ஸி நோட் 8 மாடலில் கர்வ் டிஸ்ப்ளே பேனல் இருக்கும் என தெரிகிறது. இந்த மாடலில் டூயல் எட்ஜ் டிஸ்ப்ளே இருக்கும் என உறுதியாக எதிர்பார்க்கப்படுகிறது.
|
|
|
சிறிய அளவான விசையைப் பயன்படுத்தி சைக்கிளிலும் புதிய தொழில்நுட்பம்!
[Saturday 2016-09-24 13:00]
|
முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட பல சாதனங்களுக்கு தற்போதைய தொழில்நுட்பத்தில் புது வடிவம், உத்வேகம் என்பன கொடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாக சில காலத்திற்கு முன்னர் அதிகளவானவர்களால் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்த சைக்கிளிலும் புதிய தொழில்நுட்பம் உட்புகுத்தப்பட்டுள்ளது. Aerovelo Eta எனப்படும் இப் புதிய சைக்கிள் ஆனது மணிக்கு 144.17 கிலோ மீற்றர்கள் வேகத்தில் பயணம் செய்யக்கூடியதாக இருக்கின்றது. இதன் காரணமாக மனித வலுவின் மூலம் மிக வேகமாக இயங்கக்கூடிய சாதனமாக உலக சாதனை படைத்துள்ளது. இதன் வெளிப் பகுதி கார்பன் பைபரினால் உருவாக்கப்பட்டுள்ளதுடன் கார் போன்ற வடிவமைப்பினைக் கொண்டுள்ளது.
|
|
|
போன் கதிர்வீச்சைத் தவிர்ப்பது எப்படி...?
[Friday 2016-09-23 21:00]
|
*கூடுமானவரை, மொபைல் போனை உடம்பிலிருந்து தள்ளியே வைத்துப் பயன்படுத்தவும். இதற்கென பயன்பாட்டில் உள்ள ஹெட்செட், ஸ்பீக்கர் போன், புளுடூத் ஹெட்செட் ஆகியவற்றைப் பயன்படுத்தவும்.
* போனைப் பயன்படுத்துகையில், தலையின் ஒரே புறமாக வைத்துப் பயன்படுத்தாமல், மாற்றி மாற்றி வைத்துப் பயன்படுத்தவும்.
*மொபைல் போனுக்கு வரும் சிக்னல் மிகவும் குறைவாக உள்ளதா? பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால், போன் அதிக சக்தியைப் பயன்படுத்தி, சிக்னல்களைப் பெற முயற்சிக்கிறது. அப்போது அதிகக் கதிர்வீச்சு வெளிப்படுகிறது.
|
|
|
தலையணைக்கு கீழ் ஒரு பூண்டு பல் வைத்து உறங்குவதால் நன்மையா..?
[Friday 2016-09-23 07:00]
|
தூக்கமின்மை என்பது இப்போது பெரும்பாலும் அனைவர் மத்தியிலும் அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கமின்மை கோளாறினால் அவதிப்படாதவர்கள் இல்லை எனவே கூறலாம்.
கடைசியாக நாம் குடும்பமாக சீக்கிரம் உறங்கிய நேரம் எப்போது என நீங்கள் யோசித்து ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். பத்து வருடத்திற்கு முன் 8 மணிக்கு இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, ஒன்பது மணிக்கு விளக்கை ஆப் செய்துவிட்டு தூங்கியது தான் வழக்கமாக இருந்தது. ஆனால், இன்று பல வீடுகளில் அம்மா, அப்பா வீட்டிற்கு வருவதே 8 - 10 மணிக்குள் தான். போதாக்குறைக்கு ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவிக்கள் வேறு..
|
|
|
அல்லோ என்ற பெயரில் புதிய செய்தி பரிமாற்ற செயலியை அறிமுகப்படுத்தும் கூகுள்!
[Wednesday 2016-09-21 17:00]
|
பிரபல இணைய தேடுபொறி நிறுவனமான கூகுள் 'அல்லோ என்ற பெயரில் புதிய செய்தி பரிமாற்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு மே மாதம் 'டியூ' எனப்படும் காணொளி அழைப்பு சேவை வசதி செயலி மற்றும் 'அல்லோ' எனப்படும் செய்தி பரிமாற்ற செயலி ஆகியவற்றை கொண்டுவர இருப்பதாக அறிவிப்பு செய்தது. அதைத் தொடர்ந்து கடந்த மாதம் 'டியூ' சேவை முறைப்படி அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு மாதத்திற்குள் பத்து லட்சம் பேர் அதனை தங்கள் அலைபேசிகளில் பதிவிறக்கம் செய்தனர். அதனைத் தொடர்ந்து கூகுள் தற்போது 'அல்லோ செய்தி பரிமாற்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
|
|
|
இரத்தம் ஏன் சிவப்பு நிறமாக இருக்கிறது?
[Sunday 2016-09-18 08:00]
|
1. இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?
ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே
|
|
|
அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபத்தை தவிர்க்க வருகிறது முப்பரிமாண வரைபடம்!
[Saturday 2016-09-17 09:00]
|
கடந்த 225 ஆண்டுகளாக ஐக்கிய ராஜ்ஜியத்தின் வரைபடங்களை ஆர்டினன்ஸ் சர்வே என்கிற அரசுத்துறை வரைந்துவந்தது.
மலையேறுபவர்களுக்கும், மீட்புப்பணியில் ஈடுபடுபவர்களுக்கும் இவையே இதுவரை வழித்துணையாக இருந்து வந்தன.தற்போது அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொலைதூர மலைப்பிரதேசங்களை முப்பரிமாண வரைபடங்களாக உருவாக்கும் முயற்சியை அந்நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
|
|
|
குழந்தைகளின் மூளைத்திறன் அதிகரிக்க:
[Friday 2016-09-16 12:00]
|
குழந்தையின் மூளை ரகசியக் களஞ்சியம். அதன் எண்ணற்ற விந்தைகளை விஞ்ஞானிகள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து வருகிறார்கள். கருவிலேயே தொடங்குகிறது இதன் கதை.
கரு உண்டாகி நான்கே வாரங்களில் முதலாவது மூளை உயிரணுக்கள் நீயூரோன்கள் உருவாகின்றன. என்ன வேகத்தில்? நிமிடத்துக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் உயிரணுக்கள் என்ற ரீதியில் கோடிக் கணக்கில் நியூரோன்கள் தோன்றி கோடான கோடி தொடுப்புகளை ஒன்றுடன் ஒன்று உண்டாக்குகின்றன. இவையெல்லாம் மிகக் கவனமாக ஏற்படுத்தப்பட்டவை.
|
|
|
சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள்:
[Thursday 2016-09-15 18:00]
|
நீர்ச்சத்து அதிகமாக உள்ள சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள்
சீதாபழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளைக் கொண்டது. சீதாபழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவையும் அடங்கியுள்ளது. இவ்வளவு சத்துக்கள் சீதாபழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
|
|
|
முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்கம் குறையும் : - 432 பேரிடம் ஆய்வு !
[Thursday 2016-09-15 06:00]
|
மனிதர்களை தாக்கும் முக்கிய நோய்களில் நீரிழிவும் ஒன்று. இந்த நோய் தற்போது சாதாரணமாகி விட்டது. அதில் டைப் 2 நீரிழிவு நோய் ஒருவரது வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களான உடற்பயிற்சி, சத்துணவு போன்றவைகளால் ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் அதிக அளவு கொழுப்பு சத்துகளால் உடலில் குளுக்கோஸ் குறைபாடு ஏற்பட்டு அதன்மூலம் இந்நோய் ஏற்படுவதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
|
|
|
ஒட்டகச்சிவிங்கிகள் நான்கு இனங்களைச் சேர்ந்தவை: - புதிய ஆய்வில் தகவல்
[Friday 2016-09-09 09:00]
|
ஆப்ரிக்காவின் புல்வெளிகளில் அலைந்து திரியும் ஒட்டகச்சிவிங்கிகள் ஒரே இனத்தைச் சேர்ந்தவை அல்ல, அவை நான்கு இனங்களைச் சேர்ந்தவை என புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.உலகின் மிகவும் உயரமான விலங்கினம் ஒட்டகச்சிவிங்கிஒட்டகச்சிவிங்கிகள் ஒரே இனத்தைச் சேர்ந்தவை, ஆனால் பல துணை இனங்களைச் சேர்ந்தவை என்றே இதுவரை அறியப்பட்டிருந்தன.அவை பல லட்சம் ஆண்டுகளாக தமது இனத்துக்குளேயே இனப்பெருக்கம் செய்துள்ளதும், தமது மரபணுவை இதர துணை இனங்களுடன் பகிர்ந்துகொள்ளவில்லை என்பதும் அவற்றின் மரபணு பரிசோதனைகளில் தற்போது தெரியவந்துள்ளன.
|
|
|
குழந்தைகளுக்கு அடிக்கடி மாதுளையை சாப்பிடக் கொடுப்பதனால் கிடைக்கும் நன்மைகள்!
[Saturday 2016-09-03 18:00]
|
இன்றைய காலத்தில் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளான பழங்கள், காய்கறிகளை விரும்பி சாப்பிடுவதை விட, ஜங்க் உணவுகளைத் தான் அதிகம் விரும்புகிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், பல குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்படுகின்றன.
ஆகவே குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒவ்வொரு பெற்றோரும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கொண்டு வர வேண்டியது அவசியம். அதில் தினமும் ஏதேனும் ஒரு பழத்தை கட்டாயம் உட்கொள்ள வேண்டும் என்ற பழக்கத்தைக் கொண்டு வருவதன் மூலம், அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
|
|
|
ஊற வைத்த வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள்:
[Thursday 2016-09-01 19:00]
|
இரவில் ஊற வைத்த வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா? சமீப காலமாக சர்க்கரை நோயினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதற்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியை எடுத்து வர வேண்டியிருக்கும். மேலும் ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதனால் வேறுசில உடல்நல பிரச்சனைகளும் தானாக வந்துவிடும். எனவே சர்க்கரை நோய் இருந்தால், அதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். சர்க்கரை நோய்க்கு ஓர் அற்புதமான இயற்கை மருந்து ஒன்று உள்ளது என்பது தெரியுமா? மேலும் அம்மருந்து சர்க்கரை நோயுடன் வேறுபல பிரச்சனைகளையும் குணமாக்கும் சக்தி கொண்டது என்பது தெரியுமா?
|
|
|
|