Untitled Document
May 19, 2024 [GMT]
அரவிந்த் கெஜ்ரிவால் மீதான அவதூறு வழக்கு: நஷ்ட ஈடாக 10 கோடி கோரிய அருண்ஜெட்லி
[Tuesday 2016-01-05 18:00]

டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக அருண் ஜெட்லி பதவி வகித்த போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றச்சாட்டுகளை கூறினர். இந்த முறைகேடு தொடர்பான ஆவணங்களை கைப்பற்றவே, டெல்லி தலைமை செயலகத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதாக கூறிய முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார். ஆம் ஆத்மியின் இந்த புகார்களை மறுத்து வந்த அருண் ஜெட்லி, உண்மைக்கு புறம்பான மற்றும் அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது அருண்ஜெட்லி டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் குற்ற அவதூறு வழக்கு தொடர்ந்தார்.


இலங்கை சிறையில் வாடும் 104 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி மோடிக்கு ஜெயலலிதா கடிதம்!
[Tuesday 2016-01-05 17:00]
இலங்கை சிறைகளில் உள்ள 104 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- இந்திய மீனவர்கள் தங்கள் பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படையினால் தொடர்ந்து கைது செய்யப்படுவது துரதிர்ஷ்டவசமானது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அரியானா மாநிலத்தில் இரு குழந்தைகளை எரித்துக் கொன்ற தாயும் தீக்குளித்து தற்கொலை!
[Tuesday 2016-01-05 17:00]

அரியானா மாநிலத்தில் பால்மனம் மாறாத பச்சிளம் குழந்தைகளை எரித்துக் கொன்ற தாயும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள அம்பாலா மாவட்டம் டேரா சலிம்பூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான ராம் சிங் என்பவர் தனது மனைவி, குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.


சென்னை பள்ளிகளில் வெடிகுண்டு புரளி!
[Tuesday 2016-01-05 17:00]

சென்னை பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இன்று புரளி கிளம்பியதால் பெற்றோர்களிடையே அச்சம் ஏற்பட்டது. இந்நிலையில் வீண் வதந்திகளை நம்பவேண்டாம் என்று சென்னை காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர், அடையாறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக திடீரென ஒரு புரளி கிளம்பியது. இதனால் பெற்றோர்கள் பலரும் பள்ளிகளுக்கு போன் செய்து விசாரித்தார்கள்.


பிரதமர் மோடியை கிண்டல் அடிக்கும் சிவசேனா: - ஒருகோப்பை தேனீருக்கு ஏழு வீரர்கள் பலியா!
[Tuesday 2016-01-05 12:00]

பாகிஸ்தானுக்கு கடந்த மாதம் திடீரென சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு அந்நாட்டின் பிரதமரை சந்தித்ததுடன் அவருடன் சேர்ந்து விருந்துண்டதை பா.ஜ.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா கடுமையாக எதிர்த்து வருகின்றது. சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் இதுதொடர்பாக குத்திக்காட்டி வரும் சிவசேனா, பாகிஸ்தானில் மோடி குடித்த ஒருகோப்பை தேனீருக்கு பதான்கோட்டில் ஏழு வீரர்கள் பலிகொடுப்பதா? என தற்போது கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக, சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் இன்று வெளியிடப்பட்டுள்ள தலையங்கக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:-


தீவிரவாத தாக்குதல்களை கண்டறிந்து முறியடிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்: - சோனியா
[Tuesday 2016-01-05 08:00]

உள்நாட்டு பாதுகாப்பு நிலவரம் கவலை தரும் வகையில் இருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். பதான்கோட் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசிய சோனியா காந்தி


சம்பிரதாயத்தை உடைத்தெறிந்து தந்தையின் சவப்பெட்டியை சுமந்த மகள்!
[Tuesday 2016-01-05 08:00]

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தள தாக்குதலில் பலியான பாதுகாப்பு படையினரில் மேஜர் பதே சிங் என்ற ராணுவ அதிகாரியும் அடங்குவார். அவரது உடல் தகனம், குர்தாஸ்பூரில் நடைபெற்றது. அப்போது, ஆசிரியையான பதே சிங்கின் மகள் மது, அவரது உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை தகன மேடைவரை தோளில் சுமந்து சென்றார். பொதுவாக, இந்து மதத்தில், ஆண்கள் மட்டுமே இறந்தவர்களின் உடலை சுமக்க தோள் கொடுப்பது வழக்கம். அந்த சம்பிரதாயத்தை உடைத்து, மது, தன் தந்தையின் உடலை சுமந்து சென்றார்.


27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-நேபாளம் இடையே மீண்டும் பேருந்து சேவை ஆரம்பம்!
[Tuesday 2016-01-05 08:00]

இந்தியா-நேபாளம் இடையே 27 ஆண்டுகளுக்குப் பின்னர், நட்புரீதியான பேருந்து சேவை திங்கள்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது. இதன் பயனாக, தங்களின் வர்த்தக மற்றும் குடும்ப உறவுகள் மேம்படும் என்று இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் வாழும் பல்லாயிரக்கணக்கானோர் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளனர். இந்தியா-நேபாளம் இடையே மேற்கொள்ளப்பட்ட வர்த்தக, போக்குவரத்து ஒப்பந்தத்தால், இரு நாடுகளுக்கும் இடையேயான பேருந்து சேவை 27 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. இந்தப் பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டுமென, இவ்விரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நீண்டகாலமாக கோரி வந்தனர்.


பஞ்சாப் மாநிலம் மொகாலியில் 3 வாலிபர்கள் ஆயுதங்களுடன் கைது!
[Monday 2016-01-04 17:00]

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் 3 வாலிபர்கள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து வெடிப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. பதன்கோட் விமானப்படை தளத்தில் புகுந்த தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படை இடையிலான சண்டையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மொகாலியில் 3 வாலிபர்கள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருக்காது என்ற தகவலும் மறுக்கப்படவில்லை. வாலிபர்களிடம் இருந்து பாகிஸ்தான் சிம் கார்டுகள் மற்றும் இரண்டு ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் மற்றும் பாகிஸ்தான், சீனா மற்றும் பிரேசிலில் தயாரிக்கப்பட்ட கை ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அந்த வாலிபர்களிடம் பஞ்சாப் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் ஏற்பட்ட பூகம்பத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு!
[Monday 2016-01-04 17:00]

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் இன்று அதிகாலை ஏற்பட்ட பூகம்பத்தால் கடுமையாக குலுங்கின. மணிப்பூர் மாநிலத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து வட மேற்கே 29 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமென்ங்லங் மாவட்டத்தில் அதிகாலை 4.36 மணிக்கு பூகம்பம் உருவானது. பூமிக்கு அடியில் 35 மைல் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அளவுகோலுக்கு பதிவாகி இருந்தது. பூகம்பத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதல்கட்ட அறிக்கையை மணிப்பூர் அரசு வெளியிட்டுள்ளது.


ஆந்திராவில் இலவச கோதுமை மாவில் தவிடு கலப்படம்: விசாரணைக்கு உத்தரவிட்ட சந்திரபாபு நாயுடு
[Monday 2016-01-04 17:00]

ஆந்திராவில் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச கோதுமை மாவில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட கோதுமை மாவில் அரிசி தவிட்டை கலப்படம் செய்து கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கோதுமை மாவின் தரம் குறித்து சோதனை செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்ட சந்திரபாபு நாயுடு, புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 4 ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி உயிரிழப்பு!
[Monday 2016-01-04 17:00]

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 4 ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். லடாக் மாவட்டத்தில் உள்ள தெற்கு பனியாற்று பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட பனிச்சரிவில் ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர். நேற்று மாலை 4 மணியளவில் நிகழ்ந்த இந்த பனிச்சரிவு விபத்தில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.


மதுரையில் நடைபெற்ற சகாயம் 2016 இளைஞர் எழுச்சி மாநாடு!
[Monday 2016-01-04 13:00]

மதுரையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு நடத்திய சகாயம் 2016 என்ற பெயரிலான இளைஞர் எழுச்சி மாநாடு அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது. சமீப காலமாக மக்கள் மத்தியில் சகாயத்தை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கையும், எண்ணமும் வலுத்து வருகிறது. இதை வைத்து சமீபத்தில் சென்னையில் ஒரு பேரணி நடந்தது. இந்த நிலையில் மதுரையில் நேற்று சகாயம் 2016 என்ற தலைப்பில் இளைஞர் எழுச்சி மாநாடு நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர். சகாயம் 20161/8 சகாயம் 2016 சகாயம் 2016 என்ற தலைப்பில் மதுரையில் நேற்று மாலை இந்த இளைஞர் எழுச்சி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை நாகப்பட்டினம் ஜெகசண்முகம், காரைக்குடி சாமி ராஜ்குமார், திருச்சி சையது உமர் முக்தர், மதுரை ஜெயக்குமார், சுரேந்தர், தொழில் அதிபர் திருமுருகன் ஆகியோர் இணைந்து ஒருங்கிணைத்து நடத்தினர்.


திருமணமாகி 45 நாட்கள்..! தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்!
[Monday 2016-01-04 11:00]

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பஞ்சாப் மாநிலம் பதன் கோட்டில் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களில் ஹரியானாவின் அம்பாலாவைச் சேர்ந்த இளம் வீரர் குருசேவக்சிங்கும் ஒருவர்.. திருமணமாகி 45 நாட்களிலேயே தாய்நாட்டுக்காக தன் உயிரை அர்ப்பணித்த அந்த மாவீரனை பெற்றதற்காக பெருமிதம் கொள்கிறோம் என நெகிழ்கின்றனர் குருசேவக்சிங்கின் பெற்றோர்...ஹரியானா மாநிலம் அம்பாலா அருகே உள்ளது ஹர்நாலா கிராமம். இது பஞ்சாப் மாநில எல்லையையொட்டியது. இக்கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி சுசாசிங் தன் 2 மகன்களையும் நாட்டுக்காக ராணுவத்துக்கு அர்ப்பணித்துவிட்டார். சுசாசிங்கின் இளைய மகன் குருசேவக்சிங்தான் பதன்கோட் விமான படை தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்.இளம்வயதில் இருந்தே அறிவுக்கூர்மை படைத்த குருசேவக் சிங், விமானப் படையில் சேருவதற்கான தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றவர்.


பஞ்சாபில் தீவிரவாதிகளின் ஊடுருவலை அடுத்து டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு!
[Monday 2016-01-04 11:00]

பஞ்சாபில் தாக்குதல் நடத்தி வரும் அதே நேரத்தில் தலைநகர் டெல்லியிலும் மிகப் பெரிய தாக்குதலை நடத்த ஜெயத்


இந்திய-மியான்மர் எல்லையை மையம் கொண்டு கடுமையான நிலநடுக்கம்: - 4 பேர் சாவு, நூற்றுக்கணக்கானோர் காயம்!
[Monday 2016-01-04 10:00]

வடகிழக்கு மாநிலங்களில் 6.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட கடும் நில நடுக்கம் காரணமாக இன்று அதிகாலையில் அம்மாநில மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இந்திய-மியான்மர் எல்லையை மையம் கொண்டு, இன்று அதிகாலை 4.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், அசாம், மேகாலயா, மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களும் குலுங்கின.குறிப்பாக மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் பாதிப்பு கடுமையாக இருந்துள்ளது. முதல்கட்ட தகவல்படி அந்த நகரில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், நான்கு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.


கருப்பு பணம் பற்றிய விசாரணை அறிக்கை மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது: - நிதி அமைச்சகம் தகவல்
[Monday 2016-01-04 08:00]

நமது நாட்டில் பல தரப்பினரும் பெருமளவு வரி ஏய்ப்பு செய்து, கருப்பு பணத்தை வெளிநாட்டில் உள்ள வங்கிகளில் குவித்துள்ளனர். சிலர் உள்நாட்டிலும் பதுக்கி உள்ளனர். வரி ஏய்ப்பு செய்து எவ்வளவு கருப்பு பணம் இப்படி குவிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிய முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்தது. டெல்லியை சேர்ந்த பொது நிதி மற்றும் கொள்கைக்கான தேசிய நிறுவனம், பிரயோக பொருளாதார ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம், பரிதாபாத்தில் உள்ள நிதி மேலாண்மைக்கான தேசிய நிறுவனம் ஆகிய 3 அமைப்புகளைக் கொண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆய்வு நடத்தியது.


பல்கலைகளில் யோகா பாடம் தொடக்க மத்திய அரசு புதிய திட்டம்!
[Sunday 2016-01-03 23:00]

பல்கலை கழகங்களில் பி.எஸ்சி., மற்றும் எம்.எஸ்சி., யோகா பாட பிரிவுகளை துவக்க, பல்கலை கழக மானியக்குழுவான, யு.ஜி.சி., திட்டமிட்டுள்ளது. யோகாவுக்கு உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே மவுசு அதிகரித்து வருகிறது; பிரதமர் நரேந்திர மோடியும் யோகாவை பிரபலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டில், சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது, நாடு முழுவதும் பெரிய அளவில், ஒரே நாளில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


பாகிஸ்தான் வாலாட்ட முயன்றால் பதிலடி கொடுப்போம்: - ராஜ்நாத் சிங்
[Sunday 2016-01-03 23:00]

பதான்கோட் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானுக்கு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பஞ்சாப்பில் இன்று நமது வீரர்கள் தந்த பதிலடியை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். அண்டை நாடான பாகிஸ்தானுடன் நாம் அமைதியையும், நட்புணர்வையுமே விரும்புகிறோம். தீவிரவாத தாக்குதல்களின் மூலம் வாலாட்ட பாகிஸ்தான் முயன்றால் தகுந்த பதிலடி கொடுப்போம் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


குஜராத் மாநிலத்தில் மின்சாரம் தாக்கி இரண்டு சிறுவர்கள் பலி!
[Sunday 2016-01-03 21:00]

பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் கிராம வாலிபர்கள், சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். மேலும், அணிகளுக்கிடையில் போட்டிகள் நடத்தப்படுவதும் வழக்கம். அப்படி இன்று குஜராத் மாநிலத்தில் உள்ள குலாப்நகரில் உள்ள ஒரு ஜாம்நகர் கிராமத்தில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. அப்போது ரேடியோ கட்டி வர்ணனை செய்வதற்கு வசதியாக சிறிய கொட்டகை ஒன்று போடப்பட்டிருந்தது. போட்டி நடைபெற்று கொண்டிருந்தபோது அந்த கொட்டகையில் இருந்து வர்ணனை செய்யப்பட்டு கொண்டிருந்தது. அப்போது சிறுவர்கள் அந்த கொட்டகையில் இருந்து போட்டியை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்.


மதுரை மாநாடு மக்கள் நலக் கூட்டணிக்கு திருப்புமுனையாக அமையும்: - வைகோ நம்பிக்கை
[Sunday 2016-01-03 21:00]

மதுரை மாநாடு மக்கள் நலக் கூட்டணிக்கு திருப்புமுனையாக அமையும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்தார். மதிமுகவின் சென்னை மண்டலப் பொது உறுப்பினர்கள் கூட்டம் பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் அவைத் தலைவர் சு.துரைசாமி தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை பாலகிருஷ்ணன், ஆட்சி மன்றக் குழு செயலாளர் அ.கணேசமூர்த்தி, திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் இடையே செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழக அரசியலில் நல்ல மாற்றம் நிகழ உள்ளது. மக்கள் நலக் கூட்டணி பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்று வருகிறது. வரும் சட்டப் பேரவைத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணி நிச்சயம் கூட்டாட்சியை அமைக்கும்.


"அம்மா சீட்ஸ்' திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!
[Sunday 2016-01-03 20:00]

தரமான விதைகளை வழங்குவதற்கான "அம்மா சீட்ஸ்', மாடியில் தோட்டம் அமைப்பதற்கான இடுபொருள்கள் அளிக்கும் திட்டமான "நீங்களே செய்து பாருங்கள்' ஆகிய இரண்டு புதிய வேளாண் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது. இது குறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், அரசு விதைப் பண்ணைகள், விதை உற்பத்தி செய்யும் நிலையங்கள்-விவசாயிகள் ஆகியோரை ஒருங்கிணைத்து, தமிழ்நாடு மாநில விதை மேம்பட்டு முகமை ஏற்படுத்தப்பட்டு அங்கு உற்பத்தி செய்யப்படும் தரமான, சான்று பெற்ற விதைகள் "அம்மா சீட்ஸ்' என்ற பெயரில் அம்மா சேவை மைய விற்பனை வாயில்கள் மூலம் நியாயமான விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.


மகிழ்ச்சிக்கான உலக விருப்ப அடையாளமாக யோகா திகழ்கிறது: - யோகா ஆராய்ச்சி மாநாட்டில் உரையாற்றிய மோடி
[Sunday 2016-01-03 19:00]

இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா மாநிலம் சென்றுள்ளார். இரண்டாவது நாளான இன்று மைசூரு பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மானச கங்கோத்ரியில் உள்ள திறந்தவெளி அரங்கில் நடைபெறும் இந்திய அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்தார். 5 நாட்கள் நடைபெறும் இந்த அறிவியல் மாநாட்டில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கலந்து கொள்கின்றனர். இதனை தொடர்ந்து, ஜிக்னியில் நடைபெறும் 21வது சர்வதேச யோகா மாநாட்டை மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். மோடி தமது உரையில் பேசியதாவது:-


அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்து நாஞ்சில் சம்பத் நீக்கம்: - ஜெயலலிதா அறிவிப்பு
[Saturday 2016-01-02 22:00]

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டியின்போது, வெள்ளம் பாதித்த நிலையிலும், அதிமுக பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக நடைபெற்றதே என்ற கேள்விக்கு, சாவு வீட்டுக்காக கல்யாணங்கள் நடக்காமலா இருக்கிறது என்று பதில் சொன்னார். தந்தி தொலைக்காட்சியில், கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத் பங்கேற்றார். அதன் ப்ரமோ வீடியோ அத்தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.


பதான்கோட் விமானப்படை தாக்குதல் எதிரொலி: - சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரம்
[Saturday 2016-01-02 22:00]

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர்தாக்குலில் 5 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தையடுத்து தலைநகர் டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பன்னாட்டு விமான நிலையத்தில் பார்வையாளர்கள் நுழைவதற்கு 8 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் காலமானார்!
[Saturday 2016-01-02 21:00]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் இன்று காலமானார். அவருக்கு வயது 92. அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த பரதன் தில்லி கட்சியின் தலைமை அலுவலகத்தில் தங்கியிருந்தார். அவருக்கு கடந்த மாதம் 7 ஆம் தேதி பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சுயநினைவு இழந்தார். அவர் உடனடியாக தில்லியில் உள்ள ஜி.பி.பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. பரதனின் மனைவி பேராசிரியராக பணியாற்றிவர். இவர் கடந்த 1986 ஆம் ஆண்டு காலமானார். இத்தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.


மும்பையில் மதுவுக்கு பதிலாக பால் பருகுவோம்: - வித்தியாசமாக புத்தாண்டு கொண்டாடிய மகாராஷ்டிரா
[Saturday 2016-01-02 09:00]

மும்பையில் மதுவுக்கு பதிலாக பால் பருகுவோம் என்கின்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களுடன் புத்தாண்டை வித்தியாசமாக வரவேற்று கொண்டாடினர் மகாராஷ்டிர மாநில மக்கள். புத்தாண்டை கொண்டாடும் குடிமகன்களுக்கு வசதியாக இன்று அதிகாலை வரை மதுபார்களை திறந்துவைக்க மகாராஷ்டிர மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. நேற்றிரவு குடிபோதையில் வாகனங்களை ஓட்டிவந்த 500க்கும் அதிகமானவர்களை மடக்கிப் பிடித்த போக்குவரத்து போலீசார் அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.


நாட்டின் முதல் சூரிய கதிர் விழும் திபங் பள்ளத்தாக்கு!
[Saturday 2016-01-02 09:00]

நாட்டின் முதல் சூரிய கதிர் விழும் இடமாக கருதப்படும், அருணாச்சல பிரதேசத்தின், திபங் பள்ளத்தாக்கு, ஏராளமான சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில், காங்கிரசைச் சேர்ந்த, முதல்வர் நபம் துகி தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கு, சீனா - மியான்மர் நாடுகளின் எல்லைக்கு அருகில், திபங் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 2,655 மீ., உயரத்தில் அமைந்துள்ள, இந்த பள்ளத்தாக்கில், 8,000 பேர் வசிக்கின்றனர். இங்கு, நாட்டின் மற்ற பகுதிகளை போல் அல்லாமல், இரண்டரை மணி நேரத்துக்கு முன்பே சூரியன் உதயமாகி விடும்; மாலையில், இரண்டரை மணி நேரத்துக்கு முன்பே சூரியன் அஸ்தமித்து விடும். அதிகாலை, 4:00 மணிக்கு சூரிய உதயம் என்றாலும், 3:00 மணியில் இருந்தே, விடியல் துவங்கி விடும்.

NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா