Untitled Document
May 7, 2024 [GMT]
அமெரிக்காவில் குதிரையுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட கொடூரன்!
[Friday 2021-09-24 07:00]

அமெரிக்காவில் குதிரையுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கைதி ஒருவர், சிறையில் இருந்து தப்பித்து ஆற்றில் குதித்து தப்பி ஓட முயன்ற நேரத்தில் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். குறித்த சம்பவம் அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் நடந்துள்ளது.


தாலிபான்களுக்கு ஜெர்மனி அரசு முன்வைத்துள்ள கோரிக்கைகள்!
[Thursday 2021-09-23 17:00]

ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்துள்ள புதிய அரசாங்கத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என தலிபான் வலியுறுத்தி வருவதற்கு மத்தியில், ஜேர்மனி தனது நிபந்தனைகளை பட்டியலிட்டுள்ளது. இரு நாடுகளிடையே உறவை ஏற்படுத்த தலிபான் அரசு நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளை ஜேர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் Heiko Maas பட்டியலிட்டுள்ளார்.


"ஒரு வருடத்தில் உலகம் இயல்பு நிலைக்கு திரும்பும்" - உண்மையை போட்டுடைத்த பிரெஞ்சு கோடீஸ்வரர்!
[Thursday 2021-09-23 17:00]

கொரோனா பிடியிலிருந்து உலகிற்கு எப்போது தான் விடிவுக்காலம் பிறக்கும் என்பதை பிரெஞ்சு கோடீஸ்வர தொழிலதிபரும், அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் 9 சதவீத உரிமையாளருமான Stéphane Bancel வெளிப்படுத்தியுள்ளார்.


பிரித்தானியா கடற்கரையில் சடலமாக கிடந்த இளம் பெண் மருத்துவர்!
[Thursday 2021-09-23 17:00]

நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் மகிழ்ச்சியாக விளையாடி கொண்டிருந்த பெண் மருத்துவர் கடற்கரையில் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் மாகேட் பகுதியில் இருக்கும் கடற்கரைக்கு திருஷிக்கா(26) என்ற இளம் பெண் தன் பெண் தோழிகளுடன் சென்றுள்ளார். அங்கிருக்கும் குளத்தில் இவர் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.


செவிலியரை கொடூரமாக தாக்கிய கனேடியர்: தீவிரமாக தேடும் போலீசார்!
[Thursday 2021-09-23 17:00]

கியூபெக் மாகாணத்தில், தன்னைக் கேட்காமல் தன் மனைவிக்கு கொரோனா தடுப்பூசி போட்ட செவிலியர் ஒருவரின் முகத்தில் குத்திய கனேடியரை பொலிசார் தெடிவருகிறார்கள். மொன்றியலுக்கு தென்கிழக்கில் 155 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது Sherbrooke நகரம். அங்குள்ள மருந்தகம் ஒன்றில் ஒரு செவிலியர் ஒரு பெண்ணுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கியுள்ளார்.


ஃபைசர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்த அமெரிக்கா அனுமதி!
[Thursday 2021-09-23 17:00]

அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஃபைசர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்த அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் குறைந்ததது ஆறு மாதத்திற்க்கு பிறகே பூஸ்டர் டோஸ் செலுத்தப்படவேண்டும் என கூறப்பட்டுள்ளது.


"எந்த நாட்டுடனும் பனிப்போரை விரும்பவில்லை" - ஜோ பைடன் உறுதி!
[Thursday 2021-09-23 08:00]

இனிமேல் எந்த நாட்டுடனும் பனிப்போரை விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் அவையின் 76-வது பொது அவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தேவையற்ற போர்களில் இனி அமெரிக்கா ஈடுபடாது என்றார்.


முன்னாள் உளவாளியை திட்டமிட்டு கொன்ற ரஷ்ய நிர்வாகம்: வெளியான முக்கிய தகவல்!
[Thursday 2021-09-23 08:00]

லண்டனில் உள்ள ஆடம்பர ஹொட்டலில் தேநீரில் பொலோனியம் விஷம் கலந்து Alexander Litvinenko என்ற முன்னாள் ரஷ்ய உளவாளியை கொன்றது ரஷ்ய நிர்வாகந்தான் என ஐரோப்பா மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2006ல் லண்டனில் நடந்த குறித்த படுகொலை தொடர்பில் Alexander Litvinenko-ன் மனைவி அளித்த புகாரின் பேரிலேயே தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.


நாடு கடத்தப்பட்ட இலங்கையர்களுக்கு 10 மில்லியன் யென் இழப்பீடு வழங்க டோக்கியோ உயர் நீதிமன்றம் உத்தரவு!
[Thursday 2021-09-23 08:00]

ஜப்பானிய குடிவரவு அதிகாரிகளின் இரண்டு இலங்கையர்கள் மீதான நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கு முரணானது என்று டோக்கியோ உயர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரித்தானிய பெண்ணை 3 வருடமாக தொந்தரவு செய்த ஆவி: காக்க வந்த தெய்வ குழந்தை!
[Wednesday 2021-09-22 16:00]

பிரித்தானியாவில் வாழும் ஒரு பெண் மூன்று ஆண்டுகளாக ஆவி ஒன்றினால் தான் துன்புறுத்தப்பட்டதாக தெரிவிக்கிறார். எசெக்ஸைச் சேந்த Charlene Smith (36) என்ற அந்த பெண்ணுடைய உறவினர் ஒருவர் படிக்கட்டுகளில் உருண்டு விழுந்து இறந்ததைத் தொடர்ந்து, தனது வீட்டில் யாரோ நடமாடுவதை உணர்ந்திருக்கிறார் அவர்.


லண்டனில் கண்டெடுக்கப்பட்ட 28 வயது பள்ளி ஆசிரியை சடலம்: அதிர்ச்சி பின்னணி!
[Wednesday 2021-09-22 16:00]

லண்டனில் கொலை செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்கு பிறகு இளம்பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள OneSpace community centre அருகே தான் Sabina Nessa என்ற 28 வயதான பள்ளி ஆசிரியையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலம் கண்டெடுக்கப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னரே அவர் கொலை செய்யப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆபத்தை அறியாமல் புது குடியிருப்பிற்கு குடிபோன கனேடிய பெண்: பின்னர் நடந்த சம்பவம்!
[Wednesday 2021-09-22 16:00]

ஆல்பர்ட்டாவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றுக்கு சமீபத்தில்தான் குடிபோன அந்த குடும்பத்துக்கு, அது தங்கள் குடியைக் கெடுக்கப்போகும் இடம் என்பது தெரிந்திருக்கவில்லை. Cody McConnell, அவரது மனைவி Mchale Busch (24) அவர்களது 16 மாதக் குழந்தையான Noah McConnell ஆகியோர் Hinton என்ற இடத்திலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் குடியேறினார்கள்.


M25 நெடுஞ்சாலை போராட்டகாரர்களுக்கு பிரித்தானியா அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!
[Wednesday 2021-09-22 16:00]

பிரித்தானியாவில் M25 நெடுஞ்சாலை போராட்டகாரர்களுக்கு எதிராக நீதிபதி தடை உத்தரவை பிறப்பித்துள்ளார் என போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் அறிவித்துள்ளார். Insulate Britain என்ற சுற்றுச்சூழல் குழுவினர் காலநிலை மாற்றத்திற்கு எதிராக ஒரே வாரத்தில் ஐந்து முறை M25 நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கொரோனா பரவல் குறித்த உண்மையை போட்டு உடைத்த சீன நாட்டவர்!
[Wednesday 2021-09-22 16:00]

உலகம் கொரோனாவைக் குறித்து அறிந்துகொள்வதற்கு இரண்டு மாதங்கள் முன்பே, சீனாவின் வுஹானில் நடந்த ஒரு சர்வதேச விளையாட்டுப்போட்டியில் வேண்டுமென்றே கொரோனா பரப்பட்டது என அதிரடியான ஒரு தகவலை போட்டு உடைத்துள்ளார் சீன நாட்டவர் ஒருவர். முன்னாள் சீன கம்யூனிஸ்ட் கட்சியினரான Wei Jingsheng என்பவர்தான் இந்த அதிரடி தகவலை வெளியிட்டுள்ளார்.


கோவிட்-19: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 23.02 கோடியை தாண்டியது!
[Wednesday 2021-09-22 08:00]

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கத்தொடங்கியுள்ளது. இதனால், உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன.


கனடாவில் முதல் முறையாக பாலியல் தொழிலார்களுக்கு அமைக்கப்பட்ட சங்கம்!
[Wednesday 2021-09-22 08:00]

கனடாவில் முதல் முறையாக பாலியல் தொழில் மற்றும் பாலியல் தொழிலாளர்களை ஆதரிக்கும் அமைப்பு நாட்டின் தொழிலாளர் சங்கத்தில் இணைக்கப்பட்டது. கனடாவில் 1986-ஆம் ஆண்டு முதல், பாலியல் தொழில் மற்றும் பாலியல் தொழிலாளர்களை ஆதரிக்கும் அமைப்பாக மேகிஸ் (Maggie's) இயங்கி வருகிறது.


இரு மாபெரும் பிரச்சனையை எதிர்கொள்ளவிருக்கும் பிரித்தானியா!
[Wednesday 2021-09-22 08:00]

பிரித்தானியாவில் இன்னும் இரண்டே நாட்களில் உணவு தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அதிரடி நடவடிக்கைகள் எடுப்பதாக அரசு அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் கார்பன் டை ஆக்சைடு (CO2) மற்றும் எரிவாயு பற்றாக்குறை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


வன்கூவரில் கொவிட் விதிமுறைகளை மீறிய இரு உணவகங்களின் வணிக உரிமங்கள் இரத்து!
[Tuesday 2021-09-21 18:00]

வன்கூவரில் கொவிட்-19 தொடர்பான சுகாதார உத்தரவுகளை மீறிய இரு உணவகங்களின் வணிக உரிமங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன. ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள கஸ்டோ மற்றும் கிட்சிலானோவில் உள்ள கோர்டுராய் ஆகிய இரண்டு உணவகங்களின் வணிக உரிமங்களே தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.


பிரதமர் பதவியை தக்கவைத்துக்கொண்ட ஜஸ்டின் ட்ரூடோ!
[Tuesday 2021-09-21 18:00]

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ தக்கவைத்துக் கொண்டுள்ளார். ட்ரூடோவின் லிபரல் கட்சி அதிகாலை 1:40 நிலவரப்படி மக்களவையில் உள்ள 338 இடங்களில் 156 இடங்களில் வெற்றிபெற்று முன்னிலைப் பெறுகின்றது. 2019ஆம் ஆண்டின் கடைசி வாக்கெடுப்பில் இருந்து சிறிது மாற்றம் ஏற்பட்டது. எனினும் பெரும்பான்மைக்கு இது போதுமானதல்ல.


பிரித்தானியாவை உலுக்கிய கொலை சம்பவத்தில் வெளியான கொலையாளியின் விபரம்!
[Tuesday 2021-09-21 18:00]

இங்கிலாந்திலுள்ள வீடு ஒன்றில் நான்கு பேர்கொல்லப்பட்ட சம்பவத்தில், கொலை செய்தவன் அந்த பிள்ளைகளின் தாயின் காதலன்தான் என தெரியவந்துள்ளது. Derbyshireஇலுள்ள வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்ட பொலிசார், அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது, Terri Harris (35) என்ற பெண்ணும் அவரது பிள்ளைகள் இருவர், அந்த பிள்ளைகளில் ஒரு பிள்ளையின் தோழி என மொத்தம் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டுள்ளனர்.


கனேடிய தேர்தலில் வெற்றியை பதிவு செய்த இந்தியர்களின் பட்டியல்!
[Tuesday 2021-09-21 18:00]

கனடா பொது தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் யார் யார் வெற்றிவாகை சூடினார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் லிபரல் கட்சி சார்பாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க இருக்கிறார். இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளில் லிபரல் கட்சி 158 இடங்களில் முன்னிலையில் உள்ளது, இதில் 149 இடங்களில் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.


கொரோனா தாக்கம்: கனடாவின் தற்போதைய நிலை!
[Tuesday 2021-09-21 18:00]

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 15இலட்சத்து எட்டாயிரத்து 654பேர் குணமடைந்துள்ளனர்.


ஜேர்மனியில் முகக்கவசம் அணியுமாறு கூறிய கடை ஊழியருக்கு நேர்ந்த கதி!
[Tuesday 2021-09-21 18:00]

ஜேர்மனியில் மாஸ்க் அணியாமல் மதுபானம் வாங்க வந்த ஒருவருக்கு மதுபானம் வழங்க மறுத்திருக்கிறார் கடை ஊழியர் ஒருவர். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மதுபானம் வாங்க வந்த 49 வயது நபரோ கொரோனா விதிகளுக்கெதிரான கொள்கைகள் கொண்டவர். அந்த கடை ஊழியர் தனக்கு மதுபானம் வழங்க மறுக்கவே, கோபத்துடன் அங்கிருந்து சென்ற அந்த நபர் மீண்டும் கடைக்கு மாஸ்க் அணிந்து திரும்பியிருக்கிறார்.


கனேடிய பொது தேர்தலின் தற்போதைய நிலவரம்!
[Tuesday 2021-09-21 06:00]

கனடாவில் பொது தேர்தல் இடம்பெறுகின்ற நிலையில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்வதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறைவான ஊழியர்கள் மற்றும் குறைவான வாக்களிப்பு மையங்கள் இயங்குவதாலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்க நேரிட்டுள்ளதாக அந்நாட்டு தேர்தல் அலுவலகம் கூறியுள்ளது.


அமெரிக்காவில் பரபரப்பு: பள்ளி ஒன்றில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய பதின்ம வயது இளம்பெண்!
[Tuesday 2021-09-21 06:00]

அமெரிக்காவில் உள்ள உயர்நிலைப்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில், நியூபோர்ட் நியூஸில் உள்ள ஹெரிட்டேஜ் உயர்நிலைப் பள்ளிக்குள் திங்கட்கிழமை பிற்பகல் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.


அந்தரங்க உறுப்பை அளவெடுக்க பிரித்தானிய சிறுவன் பயன்படுத்திய பொருள்: பின்னர் நடந்த விபரீதம்!
[Tuesday 2021-09-21 06:00]

பிரிட்டனை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன், விபரீத முயற்சியாக அந்தரங்க உறுப்பை எவ்வளவு பெரியது என அளக்க நினைத்துள்ளான். அதற்க்காக, அறையில் இருந்த USB கேபிளை தனது அந்தரங்க பகுதியில் செலுத்தி அளவிட முயன்றுள்ளான். ஒரு கட்டத்தில் கேபிளானது சிக்கிக்கொண்டது. உடனே அதனை வெளியே எடுக்க முயன்றுள்ளான். ஆனால் கேபிள் சிக்கிக்கொண்டதால் அந்தரங்கப்பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறித் தொடங்கியது.


அமெரிக்காவை எச்சரித்த வடகொரியா!
[Monday 2021-09-20 17:00]

ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் வழங்கும் அமெரிக்காவின் முடிவை வடகொரியா கடுமையாக எதிர்த்துள்ளது. இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்க்கொள்ள ஆக்கஸ் என்ற புதிய பாதுகாப்பு கூட்டமைப்பை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா உருவாக்கியுள்ளது.


அமெரிக்காவில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் மீண்டும் உயிர்த்தெழுந்த அதிசயம்!
[Monday 2021-09-20 17:00]

அமெரிக்காவில் பெண் ஒருவர் இறந்து 45 நிமிடத்திற்கு பிறகு மீண்டும் உயிர் பிழைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நகரில் உள்ள மேரிலாந்தை சேர்ந்தவர் கேத்தி. இவரது மகள் ஸ்டேசி ஃபைபர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா