Untitled Document
May 19, 2024 [GMT]
அமெரிக்காவில் கைதான இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு!
[Friday 2019-02-08 08:00]

அமெரிக்காவில் போலி பல்கலைக்கழகத்தில் பதிவு செய்து கொண்டு தங்கி இருந்ததாக இந்திய மாணவர்கள் 129 பேர் மீது விசா மோசடி புகார் எழுந்துள்ளது. அவர்கள் அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிப்பது தொடர்பாக இந்திய அரசு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்க எம்.பி.க்கள் குரல் கொடுத்துள்ளனர். இந்திய மாணவர்கள் சரியாக நடத்தப்படுவதுடன், தூதரக தொடர்பினைப் பெற அனுமதிக்க வேண்டும் என்று பிரபல இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான எம்.பி.க்கள் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளனர்.


அவுஸ்ரேலியாவில் கடும் வெள்ளம்
[Thursday 2019-02-07 17:00]

வடகிழக்கு அவுஸ்ரேலியாவில் 250க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் வசிக்கு முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. பிராந்தியத்தில் நிலவும் தொடர்ச்சியான மழை காரணமாக பேரழிவுமிக்க வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக குயின்ஸ்லாந்து பிரதமர் அன்னாஸ்டாசியா பலாஸ்ஸூக் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார். அதேவேளை, டவுன்ஸ்வில்லே பகுதியில் சுமார் 750 வீடுகள் வௌ்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


எட்மண்டனில் கடும் குளிர் காலநிலை
[Thursday 2019-02-07 17:00]

எட்மண்டனில் கடும் குளிர் காலநிலை நிலவிவரும்நிலையில் உதவிக்கான அழைப்புக்கள் அதிகரித்துள்ளதாக 24/7 நெருக்கடி நிலை தொடர்பான குழு தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த எட்மன்டன் பிராந்தியத்தின் கனடிய மன நல சங்க செய்தித் தொடர்பாளர், ஒட்டுமொத்த அழைப்பு முன்னரை விட தற்போது 40 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார்.


எல்லைகள் மூடப்பட்டால் அமெரிக்க உதவிகள் எவ்வாறு கிடைக்கும் : வெனிசுலா மக்கள் கேள்வி!
[Thursday 2019-02-07 17:00]

ஜனாதிபதி நிக்கொலஸ் மடுரோவின் அரசாங்கம் கொலம்பிய எல்லை வழியாக மனிதாபிமான உதவிகள் வருவதை தடுக்குமாயின் எவ்வாறு அமெரிக்க உதவிகள், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் வெனிசுலாவை வந்தடையும் என்று பொதுமக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இந்த கேள்வியை முன்வைத்து பொதுமக்கள் சிலர் நேற்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தியிருந்தனர். வெனிசுலாவில் பரவலாக பட்டினி மற்றும் பிரதான உணவுப் பொருள் பற்றாக்குறை இருந்த போதிலும் அமெரிக்க உதவிகளை மடுரோ திருப்பியனுப்பியுள்ளார்.


"ஒன்ராரியோவில் உறைபனி" - பாடசாலை வாகனங்கள் ரத்து!
[Thursday 2019-02-07 17:00]

தென்மேற்கு ஒன்ராரியோ, வின்ட்சர் பகுதிகளில் நிலவும் கடுமையான உறைபனி பொழிவு காரணமாக பாடசாலை வாகனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கடுமையான பனிப்பொழிவுடன், பனிப்புயலும் வீசிவருகின்ற நிலையில் உள்ளூர் நேரப்படி இன்று (வியாழக்கிழமை) அதிகாலை முதல் கடும் உறைபனி மழை பொழிவு நிலவியது. இதன் காரணமாக வீதிகளில் போக்குவரத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதில் கடும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


30 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளர் இன்றி 91-வது ஆஸ்கார் விருது விழா.
[Thursday 2019-02-07 08:00]

ஹாலிவுட் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகமே உற்று நோக்கும் 91-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா வருகிற 24-ந் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. யாரெல்லாம் ஆஸ்கார் விருது வாங்குகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பை போல், இந்த விழாவை தொகுத்து வழங்குவது யார் என்பதும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறும். அந்த வகையில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை இந்தியாவை சேர்ந்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கினார். இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை பிரபல நடிகர் கெவின் ஹார்ட் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டது.


"புதிய அணு ஏவுகணை ஒப்பந்தத்தில் இந்தியா, பாகிஸ்தான் இணைப்பு"
[Thursday 2019-02-07 08:00]

புதிய அணு ஏவுகணை ஒப்பந்தத்தில் இந்தியாவை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றிய போதே இதனை கூறியுள்ளார். மேலும் ரஷ்யாவுடனான அணு ஏவுகணை ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது சரியானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு ரஷ்யா தொடர்ந்து ஒப்பந்தத்தை மீறிவந்ததாக குற்றம் சாட்டிய ட்ரம்ப், அணு ஏவுகணைகள் தொடர்பான புதிய உடன்படிக்கையை அமெரிக்கா மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார். பிருத்வி, அக்னி போன்ற ஏவுகணைகளை இந்தியாவும், பாபர் ஷாகீன் போன்ற ஏவுகணைகளை பாகிஸ்தானும் தயாரித்து இருப்பதை சுட்டிக்காட்டிய ட்ரம்ப், புதிய உடன்படிக்கையில், இந்தியாவையும், பாகிஸ்தானையும் இணைக்க சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.


திடீரெனெ செத்து மடிந்த 20,000 கடல் பறவைகள் - என்ன நடந்தது?
[Thursday 2019-02-07 08:00]

நெதர்லாந்து கடேலோரம் நெடுக சுமார் 20,000 வட துருவ கடற்பறவைகள் சமீப வாரங்களில் இறந்துள்ள மர்மம் தொடர்பாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் புயலில் சிக்கிய பனாமா நாட்டு கொடியோடு பயணித்த கப்பலில் இருந்து சுமார் 345 கொள்கலன்கள் கடலில் விழுந்ததால் இது நிகழ்ந்திருக்க கூடுமா என்று நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். வடக்கு ஹாலந்து கடலோரங்களில் இருந்து சமீப நாட்களில், இறந்த நிலையில் சுமார் 20,000 வட துருவ கடற்பறவைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்தில் இருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராஃப்பின், பிளாஸ்டிக்குகள் மற்றும் பாலீஸ்டைரின் உள்பட மேசமான பொருட்கள் இந்த கொள்கலன்கள் சிலவற்றில் இருந்ததாக நம்பப்படுகிறது. எம்.எஸ்.சி சோயி என்ற இந்த கப்பலில் இருந்து கொள்கலன்கள் விழுந்த சில மணிநேரங்களில், அதில் இருந்த குழந்தைகளின் பொம்மைகள், மரச் சாமான்கள் மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் கடலோரத்திற்கு அடித்து வரப்பட்டன.


"24 மணிநேரம் மத்திய LRT நிலையம் திறக்கப்படும்"
[Wednesday 2019-02-06 17:00]

கடும் குளிரான காலநிலையில் இருந்து வீடற்றவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்குடன், எட்மன்டன் மத்திய LRT நிலையம் புதிய சேவையை வழங்கியுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் ஏழு நாட்களுக்கு தொடர்ந்தும் 24 மணிநேரம், மத்திய LRT நிலையத்தை திறந்து வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக எட்மன்டன் மாகாண சபை அறிவித்துள்ளது. வீடற்றவர்கள் தங்குவதற்கான கூடுதல் அவசர முகாம்களில் திறக்கப்படாது என்று ஹோவர்ட் டிரஸ்ட் திங்கட்கிழமை அறிவித்தது. இதற்கான மாற்று திட்டத்தை எட்மன்டன் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டது.


இலங்கையில் சோளக் காட்டுக்குள் இறங்கிய பறக்கும் தட்டு - 2 அடி உயர குள்ள மனிதனின் நடமாட்டத்தால் பரபரப்பு!
[Wednesday 2019-02-06 17:00]

இலங்கையில் உள்ள அம்பாறையில் நள்ளிரவில் ஒரு குள்ள மனிதன் நடமாட்டம் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதனால் தென் இலங்கை பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. அம்பறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 2-ந்தேதி விவசாயி கருணதிலக்க என்பவர் தனது சோள காட்டுக்கு காவலுக்கு சென்றார். அப்போது அங்கு ஒரு குள்ள மனிதன் நடமாடிக் கொண்டிருந்தான். அவன் சுமார் 2 அடி உயரமே இருந்தான். அவனை பார்த்ததும் கருணாதிலக்கவுக்கு பயம் ஏற்பட்டது. உடனே அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். தான் பார்த்த சம்பவம் குறித்து பக்கத்து காட்டில் காவலுக்கு இருந்த விவசாயிகளிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் ஓடிவந்து பார்த்தனர். அதற்குள் அங்கிருந்த குள்ள மனிதன் மாயமாகிவிட்டான்.


வெனின்சுலாவிற்கு பயணிக்க வேண்டாம் என கனேடியர்களுக்கு எச்சரிக்கை!
[Wednesday 2019-02-06 17:00]

வெனிசுவேலாவிற்கு பயணிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு கனேடியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெனிசுவேலாவிற்கான பயண ஆலோசனையை சர்வதேச விவகாரங்களுக்கான கனடா அமைப்பு புதுப்பித்துள்ளது. அதன்படி இந்த பயண எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது. வெனிசுவேலாவில் தற்போது நிலவிவரும் மனிதாபிமான மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக இப்பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெனிசுவேலாவில் நிலவும் நிலையற்ற அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளின் காரணமான அங்கு பயணிப்பதை தவிர்க்குமாறு கனடா குறிப்பிட்டுள்ளது. மருந்து, உணவு, எரிபொருள் மற்றும் நீர் போன்ற அடிப்படை தேவைகளின் பற்றாக்குறைகள் வெனிசுவேலாவில் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் செல்வத்தை சுரண்டுவதாக சீனா மீது டிரம்ப் குற்றச்சாட்டு!
[Wednesday 2019-02-06 17:00]

அமெரிக்க வேலைவாய்ப்புகளையும், செல்வத்தையும் சுரண்டுவதாக சீனா மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்க காங்கிரஸில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விசேட உரையாற்றினார். இதன்போதே அவர் இவ்வாறு சீனா மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,


ஜப்பானில் களைகட்டி வரும் "சப்போரோ பனித்திருவிழா"! Top News
[Wednesday 2019-02-06 08:00]

ஜப்பானின் வடக்கு பகுதியில் சப்போரோ பனித் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த குளிர்கால திருவிழா ஆகும். பிப்ரவரி மாதத்தில் 7 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஆண்டுதோறும் சுமார் 2 மில்லியன் மக்கள் கலந்துகொள்வார்கள். இந்த திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட பனிச்சிற்பங்கள் செய்யப்படுகின்றன. அவ்வகையில் இந்த ஆண்டிற்கான பனித்திருவிழா இன்று தொடங்கியது. 11-ம் தேதி வரை இத்திருவிழா நடைபெறுகிறது.


இங்கிலாந்து அரசின் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு!
[Wednesday 2019-02-06 08:00]

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா (வயது 63), இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு வட்டியுடன் திருப்பி செலுத்தாமல், இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு தப்பி விட்டார். அவர் மீது இந்திய கோர்ட்டுகளில் சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் வழக்குகள் போட்டுள்ளன. அவரை நாடு கடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, அவரை நாடு கடத்த கடந்த டிசம்பர் மாதம் 10-ந் தேதி உத்தரவிட்டது. மேலும், அந்த உத்தரவு, முறைப்படி இங்கிலாந்து அரசுக்கு (உள்துறை மந்திரி சஜித் ஜாவித்துக்கு) அனுப்பி வைக்கப்பட்டது. அதை இங்கிலாந்து உள்துறை மந்திரி சஜித் ஜாவித் பரிசீலித்து, விஜய் மல்லையாவை நாடு கடத்தும் கோர்ட்டு உத்தரவுக்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டார். இதை இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் உறுதி செய்தது.


"திருச்சபைகளில் பாலியல் அடிமைகளாக கன்னியாஸ்திரிகள் நடத்தப்படுகின்றனர்" - போப் பகிரங்க ஒப்புதல்!
[Wednesday 2019-02-06 08:00]

ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளில் கன்னியாஸ்திரிகள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படும் பிரச்னை இருக்கிறது அவர்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர் என போப் பிரான்சிஸ் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்த கொடுமைகள் தொடர்ந்து நடப்பதாகவும் அதனை நிறுத்துவதற்கான பணிகளில் தாம் ஈடுபட்டு வருவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.


"நிராகரிக்கப்பட்ட திட்டத்தை அமைச்சர் முன்வைத்துள்ளார்"
[Tuesday 2019-02-05 19:00]

முற்கூட்டியே அமைச்சரவை நிராகரித்த திட்டங்களை சுகாதார அமைச்சர் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் என அண்ட்ரியா ஹார்வத் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து குயின்ஸ் பார்க்கில் ஊடகங்களுக்கு நேற்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவித்த போதே, ஒன்ராறியோ புதிய ஜனநாயகக் கட்சி தலைவர் ஆண்ட்ரியா ஹார்வத் மேற்கண்டவாறு கூறினார். கடந்த புதன்கிழமை சுகாதார பாதுகாப்பு சட்டம்


அரசியல் முட்டுக்கட்டைகளுக்கு முடிவு கிடைக்குமா?- ட்ரம்ப் விசேட உரை!
[Tuesday 2019-02-05 19:00]

பல தசாப்தங்களாக நீடிக்கும் அரசியல் முட்டுக்கட்டைகளுக்கு முடிவுகட்டுவதற்கான அழைப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைக்கவுள்ளார். அரசாங்க முடக்கம் காணரமாக பிளவடைந்து காணப்படும் அமெரிக்க காங்கிரஸில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி ட்ரம்ப் உரையாற்றவுள்ளார். இதன்போது, நாட்டின் அரசியல் முட்டுக்கட்டைகளுக்கு குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் ஒன்றிணைந்து தீர்வு காணலாம் என்ற செய்தியை ஜனாதிபதி ட்ரம்ப் முன்வைக்கவுள்ளார்.


அவுஸ்ரேலியாவில் கடும் வெள்ளம் : இருவர் உயிரிழப்பு!
[Tuesday 2019-02-05 19:00]

அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் வெள்ள நீர் வடிந்தோடி வருகின்ற நிலையில், சடலங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் இருவரும் 20 வயது மதிக்கத்தக்கவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புகளில் சிக்கி 21 மற்றும் 23 வயதுடைய இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் நேற்று தெரிவித்திருந்தனர். இந்நிலையிலேயே இன்று குறித்த இருவரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


"வெனிசுவேலா அகதிகளுக்கு 53 மில்லியன் நிதி உதவி" - பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ!
[Tuesday 2019-02-05 19:00]

வெனிசுவேலாவில் அதிகரித்துவரும் அகதிகள் நெருக்கடியை சமாளிப்பதற்கு 53 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்குவதற்கு கனேடிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது. ஒட்டாவாவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கூட்டமொன்றின் போது பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இதனை அறிவித்துள்ளார். அதிகரித்துவரும் கடுமையான உணவு பற்றாக்குறை காரணமாக அண்மைக் காலங்களில் அண்டை நாடுகளில் குடியேறிய மக்களுக்கு உதவும் வகையிலேயே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


ஹாங்காங்கில் உருளைக்கிழங்குகளுடன் வந்த முதலாம் உலகப்போர் கையெறி வெடிகுண்டு!
[Tuesday 2019-02-05 09:00]

ஹாங்காங்கின் நியூ பிராந்தியத்தில் உள்ள சாய் குங் மாவட்டத்தில் தின்பண்டங்கள் செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு தொழிலாளியின் கையில் உருளைக்கிழங்கை போல் இருந்த மர்ம பொருள் ஒன்று சிக்கியது. அதை உற்று நோக்கியபோது அது கையெறி வெடிகுண்டு என தெரிந்தது. இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது.


அல்பேர்ட்டா பகுதிக்கு கடும் குளிர் எச்சரிக்கை!
[Tuesday 2019-02-05 08:00]

அல்பேர்ட்டாவுக்கு கடுமையான குளிர் எச்சரிக்கையை கனடாவின் சுற்றுசூழல் திணைக்களம் விடுத்துள்ளது. தென் பகுதியை நோக்கி தற்போது குளிர் வானிலை கடந்து செல்லும் நிலையில், இன்று காலை அல்பேர்ட்டாவில் -40C இல் குளிர்காற்று வீசும் என கனடா சுற்றுசூழல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்தோடு கல்கரியில் இன்று -29 C, செவ்வாய்க்கிழமை -20 C ஆகவும், புதன்கிழமை -15 ஆகவும் காலநிலை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


"அமெரிக்காவில் வாட்டி வதைக்கும் கடும் குளிர்" - வீடு இல்லாதவர்களை உணவு மற்றும் உடைகள் வழங்கிய பெண்!
[Tuesday 2019-02-05 08:00]

அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களில் வரலாறு காணாத அளவுக்கு கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு நிலவுகிறது. குறிப்பாக இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ நகரில் மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கும் குறைவாக வெப்ப நிலை பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். வீடுகள் இல்லாமல் பொதுஇடங்களில் வசித்து வரும் மக்களின் நிலை மிகவும் மோசமாகி உள்ளது. கடும் குளிர்காற்றை தாங்கிக்கொண்டு பனித்துகள்களின் மீது படுத்து உறங்கவேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.


கனேடிய பேராசிரியர் உயிரிழந்த வழக்கில் கொலம்பியாவில் ஒருவர் அதிரடியாக கைது!
[Monday 2019-02-04 17:00]

கொலம்பியாவில் கனேடிய பேராசிரியர் ஒருவர் உயிரிழந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொலம்பிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவின் சைமன் பிரேசர் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக 57 வயதான றமாஸான் ஜென்சே என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொலம்பியாவில் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த சமயம், மெடிலின் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி இரவு, தனது தங்குவிடுதிக்கு திரும்பாத நிலையில் காணமல் போயிருந்தார்.


"தாய்லாந்தில் நச்சுக் காற்றினால் கண்கள், மூக்குகளில் ரத்தக் கசிவு" - அச்சத்தில் மக்கள்!
[Monday 2019-02-04 17:00]

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் பரவி வரும் நச்சுக்காற்றினால் மக்களின் கண்கள் மற்றும் மூக்குகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாங்கொக்கில் காற்றில் நச்சு கலந்துள்ளது. இந்த நச்சுத்தன்மையுடன் கூடிய பனிப்புகை மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. நெரிசலான வாகன போக்குவரத்தும், நகரத்திற்கு வெளியே பொருட்களை எரிப்பதும், தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகைகளுமே இந்த நச்சுத்தன்மைக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த அபாயகரமான நச்சுத்துகள்கள் பிஎம் 2.5 எனும் அளவை கடந்து, தாய்லாந்தை சுற்றியுள்ள 41 பகுதிகளில் நச்சுக்காற்றாக வீசி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


தேவாலயத்திற்கு ஆயுதத்துடன் சென்ற கிம் ஜொங் உன்.
[Monday 2019-02-04 17:00]

உலகின் முக்கிய அரசத்தலைவர்களை போன்ற தோற்றமுடையவர்கள் அவ்வப்போது மக்கள் மத்தியில் தோன்றி பெரும் பரபரப்பினை ஏற்படுத்துகின்றனர். அவ்வாறானதொரு விநோத சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டார்ட்டேயின் (Rodrigo Duterte) தோற்றத்தைக் கொண்ட ஒருவர் ஹாங் கொங் தேவாலயத்திற்குள் அண்மையில் நுழைந்து பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தார். ஹொங்கொங்கில் வசிக்கும் பிலிப்பைன்ஸ் மக்களிடையே பிரபலமான குறித்த தேவாலயத்திற்குள் அவர் நுழைந்ததும் குழப்பமும் பரபரப்பும் ஏற்பட்டது.


கலிடன் பகுதியில் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை!
[Monday 2019-02-04 17:00]

கலிடன் பகுதியில் உள்ள வீடுடொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 54 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது கலீடான் கிராமத்திற்கு அருகே மேப்பிள் கிரோவ் வீதி பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6:20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் அறிந்து அங்கு சென்ற பீல் பிராந்திய முதலுதவியாளர்கள், சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தினார்.


கனேடிய குடியுரிமைக்காக பெறுவதற்காக ஆங்கில மொழியை கற்று வரும் சிரிய அகதிகள்!
[Monday 2019-02-04 08:00]

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் கனடாவின்


மத்திய கணக்காளர் நாயகம் மிச்செல் பேர்குசன் காலமானார்!
[Monday 2019-02-04 08:00]

கனடாவின் மத்திய கணக்காளர் நாயகம் மிச்செல் பேர்குசன் தனது 60 ஆவது வயதில் காலமானார். புற்றுநோயால் அவதியுற்ற அவர் நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. முன்னர் நியூ பிரவுன்ஸ்விக்கின் கணக்காளர் நாயகமாக கடமையாற்றி வந்த அவர், கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து மத்திய கணக்காளார் நாயகமாக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து புற்றுநோக்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும், துர்ரதிஸ்டவசமாக சிகிக்சைகள் பலனளிக்காத நிலையில், ஒட்டாவாவில் அவர்களது குடும்பத்தோர் மத்தியில் அவர் உயிரிழந்து விட்டதாகவும் அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா