Untitled Document
May 18, 2024 [GMT]
 
கவர்ச்சிக்கு நோ ; சவாலான வேடங்களில் மட்டுமே நடிப்பேன் : அருந்ததி நாயர்
[Monday 2017-03-20 20:00]

விஜய் ஆண்டனி நடித்த


இளையராஜா - SPB இடையே நடந்தது என்ன?
[Monday 2017-03-20 20:00]

இளையராஜா- எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இடையேயான மோதலுக்கான காரணம் என்ன? தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த கூட்டணியாக மறக்க முடியாத பாடல்களை கொடுத்த இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் 40 ஆண்டுகளாக நட்புடன் பழகி வந்தனர்.2500-க்கும் அதிகமான பாடல்களை இளைய ராஜா வும், எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் சேர்ந்து வெளியிட்டுள்ளனர்.ஏ.ஆர்.ரகுமானுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றி இருந்தாலும் தனக்கு பிடித்த இசையமைப்பாளர் இளையராஜா தான் என்று எஸ்.பி.பால சுப்பிரமணியம் பல மேடை களில் கூறியுள்ளார்.


சூர்யாவிற்கு நன்றி சொன்ன விஜய்
[Monday 2017-03-20 20:00]

யார் ரசிகருக்கு உதவினார் சூர்யா, அதற்கு ஏன் விஜய் நன்றி சொல்கிறார் என்கிற கேள்வி நிச்சயம் தலைதூக்கவே செய்யும். விஜய் ரசிகருக்குத்தான் சூர்யா உதவினார், அதற்குத்தான் நன்றி கூறியுள்ளார் விஜய். என்ன உதவி செய்தார் சூர்யா..? அதற்கு முன் ஒரு சின்ன பிளாஸ்பேக் ஒன்றை பார்த்து விடுவோம் ‛சி-3' பட புரமோஷனுக்காக கடந்த ஜனவரி மாதம் கேரளாவுக்கு சென்றிருந்த சூர்யா, திருவனந்தபுரத்தில் உள்ள தனது ரசிகர்களையும் சந்தித்தார். அதில் ஒரு மாற்றுத்திறனாளி ரசிகர் தன்னை பார்க்க துடிப்பதை அறிந்து அவரை அருகில் வரவழைத்து பேசினார்..


இளையராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாட்டோம்: எஸ்.பி.பி.சரண்
[Monday 2017-03-20 20:00]

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் தற்போது தனது தந்தை பாட ஆரம்பித்து 50 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து எஸ்.பி.பி 50 என்ற நிகழ்ச்சியை உலக நாடுகள் முழுவதும் நடத்தி வருகிறார். தற்போது இந்த நிகழ்ச்சி அமெரிக்க நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் இளையராஜா தன் பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனால் இசை கச்சேரி நடத்துவதற்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்.பி.பி.சரண் கூறியிருப்பதாவது:


சாதனை படைத்தது 'பாகுபலி 2' டிரைலர் ..
[Monday 2017-03-20 20:00]

'பாகுபலி 2' படத்தின் டிரைலர் கடந்த வாரம் 16ம் தேதியன்று காலை வெளியானது. 24 மணி நேரத்தில் 5 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்த டிரைலர் தொடர்ந்து பல சாதனைகளைப் புரிந்து வருகிறது. இப்போது மேலும் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்தியாவிலேயே அதிக லைக்குகளைப் பெற்ற டிரைலர் என்ற சாதனைதான் அது. யு டியூபில் நான்கு மொழிகளில் வெளியான இப்படத்தின் டிரைலரை, தெலுங்கில் 5 லட்சத்து 94 ஆயிரம் பேரும், ஹிந்தியில் 3 லட்சத்து 61 ஆயிரம் பேரும், தமிழில் 86 ஆயிரம் பேரும், மலையாளத்தில் 16 ஆயிரம் பேரும் லைக் செய்துள்ளனர். மொத்தமாக 10 லட்சம் லைக்குகளை 'பாகுபலி 2' டிரைலர் கடந்துள்ளது.


இளையராஜா செய்தது சரி - சப்போட் பண்ணுகிறார் 'மதன் கார்க்கி'
[Monday 2017-03-20 20:00]

இளையராஜாவின் இசையில் அதிக பாடல்களை பாடியவர்கள் எஸ்.பி.பால சுப்ரமணியம், மனோ, சித்ரா ஆகியோர். இந்நிலையில், சமீபகாலமாக திரைப் படங்களில் தனக்கு பாட வாய்ப்புகள் குறைந்து விட்டதால், வெளிநாடுகளில் கச்சேரிகள் நடத்தி வருகிறார் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இந்நிலையில், இளையராஜா பெற்றுள்ள காப்பி ரைட்ஸ் பிரச்னை காரணமாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்பட இளையராஜாவின் இசையில் பாடல்கள் பாடிய பாடகர் பாடகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அனைவருமே அதிர்ச்சியடைந்துள்ளனர்.


பாடக்கூடாது என்றால் எதற்கு இசை அமைக்க வேண்டும் - கங்கை அமரன் கண்டனம்
[Monday 2017-03-20 20:00]

இசை அமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இனி இளையராஜா இசை அமைத்த பாடல்களை பாட மாட்டேன் என்று அறிவித்துள்ளார். இது இசையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இளையராஜாவின் தம்பியும், இசை அமைப்பாளருமான கங்கை அமரன் இது குறித்து கூறியிருப்பதாவது:


டோரா படத்தின் கதை நயன்தாராவுக்காக எழுதப்பட்டது: இயக்குனர் பெருமிதம்
[Saturday 2017-03-18 18:00]

இயக்குனர் சற்குணத்தின் உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கி உள்ள படம் டோரா. நயன்தாரா தான் படத்தின் முதன்மையான ரோல். அவரின் தந்தையாக தம்பி ராமய்யாவும், வில்லனாக ஹரீஷ் உத்தமனும் நடித்திருக்கிறார்கள். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், விவேக் சிவா மெர்வின் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் கதை நயன்தாராவுக்காக எழுதப்பட்டது என்கிறார் இயக்குனர் தாஸ் ராமசாமி.


சல்மான் கான் காஷ்மீரின் சுற்றுலா தூதராகிறார்..
[Saturday 2017-03-18 18:00]

காஷ்மீர் மாநில சுற்றுலா தூதராக பாலிவுட் நடிகர் சல்மான் கானை நியமிக்க விரும்புவதாக அம்மாநில முதல்மந்திரி மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் நேற்று மும்பையில் நிகழ்சிகள் நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அம்மாநில முதல்மந்திரி மெகபூபா முப்தி பங்கேற்றார். அப்போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


மஞ்சு வாரியர் பெண்களுக்கு சொல்லும் யோசனை..
[Saturday 2017-03-18 18:00]

கேரளாவில் பெண்கள் பாதுகாப்புக்கு நடிகை மஞ்சு வாரியர் ஒரு யோசனையை தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடிகை பாவனாவுக்கு நடந்த பாலியல் சித்ரவதை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து கேரளாவில் பெண்கள் பாதுகாப்புடன் வாழ தகுந்தது இல்லை. இங்கு பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். இதனால் கேரள காவல் துறை பெண்களை பாதுகாக்க


ரஜினியுடன் ஜோடிசேரும் தீபிகா படுகோன்..
[Saturday 2017-03-18 18:00]

ஷங்கர் இயக்கத்தில் படத்தில் நடித்து முடித்ததும் சில வார ஓய்வுக்குப் பிறகு பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. கபாலி படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினியும், பா.ரஞ்சித்தும் இணையும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது! தாணுவின் பைனான்ஸில் ஃபர்ஸ்ட்காப்பி அடிப்படையில் தனுஷின் வுண்டர் பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கவிருக்கிறது. படத்தை தயாரித்து தாணு கையில் தனுஷ் கொடுத்த பிறகு அவர் மிரட்டலான விளம்பரங்களை செய்து படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பார்.


ஆபாச காட்சிகளுடன் வெளிவந்த 'புரூஸ் லீ'க்கு ரசிகர்கள் எதிர்ப்பு
[Saturday 2017-03-18 18:00]

சமூக வலைத்தளங்களில் தங்களை லட்சக்கணக்கான பேர் பின் தொடர்ந்தால், தாங்கள்தான் அடுத்த சூப்பர் ஸ்டார், வசூல் சக்கரவர்த்தி என்ற எண்ணத்தில் சில ஹீரோக்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களைத் தொடர்பவர்களும், சினிமா ரசிகர்களும் மிகவும் தெளிவானர்கள் என்பது அவர்களுக்கு இப்போதுதான் தெரிய வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது களத்தில் இறங்கி போராடியவர்களில் ராகவா லாரன்ஸ், ஜி.வி.பிரகாஷ் இருவரும் முக்கியமானவர்களாக இருந்தார்கள். தங்களை தமிழ்க் கலாசாரத்தின் காவலர்களாகவே காட்டிக் கொண்டார்கள். அதன்பின் அவர்கள் நடித்து வெளிவந்த இரண்டு படங்களுமே ஆபாசக் குப்பைகள் என்பதும், கலாசாரத்தையே கெடுக்க வந்த படங்கள் என்பதும் ரசிகர்களுக்கு நன்றாகவே புரிந்த ஒன்றுதான்.


கிளாமர் கேட்பதால் வேதனையில் அருந்ததி நாயர்..
[Saturday 2017-03-18 18:00]

விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் படத்தில் நாயகியாக நடித்தவர் அருந்ததி நாயர். கேரளத்து நடிகையான இவர், அந்த படத்தில் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு விதமான கெட்டப்புகளில் நடித்திருந்தார். ஆனால் முதல் படத்திலேயே வித்தியாசமான பர்பாமென்ஸ் கொடுத்து பாராட்டு பெற்ற அவருக்கு இன்னும் அவர் எதிர்பார்க்கிற மாதிரியான புதிய படங்கள் கமிட்டாகவில்லை. இதுபற்றி அருந்ததி நாயர் கூறுகையில், சைத்தான் படத்தில் மிக அழுத்தமான வேடத்தில் நடித்தேன். நான் புதுமுக நடிகை என்றபோதும் என்னை நம்பி வெயிட்டான வேடத்தை கொடுத்தனர். நானும் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர், ஹீரோவின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நடித்தேன்.


சசிகுமாருடன் யோடி சேருகிறார் ஹன்சிகா..
[Saturday 2017-03-18 18:00]

குட்டிப்புலி படத்தில் முத்தையாவை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர் எம்.சசிகுமார். அந்தப் படத்திற்குப் பிறகு கார்த்தியை வைத்து கொம்பன், விஷால் நடித்த மருது ஆகிய படங்களை இயக்கினார் முத்தையா. இவற்றில் கொம்பன் நல்ல வெற்றியையும், மருது மோசமான தோல்வியையும் சந்தித்தன. அது மட்டுமல்ல, இந்த இரண்டு படங்களுமே இயக்குநர் முத்தையா மீது சாதி வெறியர் என்ற முத்திரையை குத்தப்பட காரணமாக அமைந்தன. அதனாலேயே அவருக்கு காலஷீட் தர சம்மதித்திருந்த சூர்யாவும், விஷாலும் பின்வாங்கிவிட்டனர் என்ற பேச்சு எழுந்தது. இந்நிலையில்தான் முத்தையாவை அழைத்து அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் சசிகுமார்.


ராய்லட்சுமியும் கையில் காயத்துடன் புகைப்படம் வெளியிட்டார்..
[Saturday 2017-03-18 17:00]

டுவிட்டரில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகர் நடிகைகள் தங்களைப்பற்றி அவ்வப்போது ஏதேனும் ஒரு அதிரடியான விசயங்களை வெளியிட்டு தங்களைச்சுற்றி ஒரு பரபரப்பு வளையத்தை உருவாக்கிக்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில், இலியானா உள்ளிட்ட சில நடிகைகள் தண்ணீருக்குள் தாங்கள் நிற்பது போன்ற புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். அதேப்போல், லண்டன் நடிகை எமிஜாக்சன் தனது ஆபாச படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், தற்போது நடிகை ராய்லட்சுமியும் ஒரு புதிய பரபரப்பை கிரியேட் செய்திருக்கிறார்.


சட்டசபையில் எனக்கு நாற்காலி ரெடியாகிறது - கங்கை அமரன்
[Saturday 2017-03-18 17:00]

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் கங்கை அமரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்; அவர் கூறியதாவது: மோடியின் உத்தரவுப்படி நடக்கும் ஊழியனாக தொண்டனாக வருவதில் பெருமையடைகிறேன். தமிழகத்தில் என்னை பரிந்துரை செய்த தமிழக பா.ஜ., நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் ஏழை எளிய குடும்பத்தில் பிறந்தவர்கள். சுத்தமான அரசியல்வாதிகள் மட்டுமே உள்ள பாஜ.,வில் இருப்பது பெருமைப்படுகிறேன். வேட்பாளரானதால் மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இது எனக்கு உற்சாகமாக உள்ளது.


ஸ்ரேயா கோஷலுக்கு மெழுகுச்சிலை..!
[Friday 2017-03-17 16:00]

நம்ம ஊரில் கொடிகட்டி பறக்கும் ஹீரோக்களுக்கு நம் உள்ளூர் மக்கள் அங்கீகாரம் கொடுப்பது பெருமைதான் என்றாலும், நம்மவர்களை வெளிநாட்டினர் பாராட்டும்போது தான் அவர்களுக்கான கூடுதல் அங்கீகாரம் கிடைத்ததாக கிடைக்கிறது. அப்படி ஒரு கெளரவம், அதிர்ஷ்டம் பின்னணி பாடகி ஸ்ரேயா கிடைத்திருக்கிறது. ஆம்.. ஸ்ரேயாவின் நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தும் விதமாக உலகப்புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸின் டெல்லி மியூசியத்தில் முதல் இந்திய பாடகராக இவரது மெழுகுச்சிலை நிறுவப்படவுள்ளது. இந்தி மட்டுமல்லாது தமிழ் படங்களிலும் மனதை மயக்கும் பாடல்களை பாடி, இந்திய இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஸ்ரேயா கோஷல்..


மீண்டும் இணைந்து நடிக்கும் சமந்தா - நாகசைதன்யா
[Friday 2017-03-17 16:00]

தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை விரைவில் காதல் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் நடிகை சமந்தா அவருடன் திரைப்படம் ஒன்றில் இணைந்து நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் நாகசைதன்யா நடித்து வரும் படத்தில் சமந்தா நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் இறுதியில் ராகுல் ப்ரீத்தி சிங் அப்படத்தில் நாயகியாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கும் படத்தில் நாகசைதன்யாவிற்கு ஜோடியாக அவரது காதலி சமந்தா நடிக்கவிருக்கின்றாராம். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவிருக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


மகாபாரத்தை பற்றிய கமலின் சர்ச்சை கருத்துக்கு குஷ்பு ஆதரவு..
[Friday 2017-03-17 16:00]

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஆளும் கட்சிகளுக்கு எதிராக அவ்வப்போது டுவிட்டரில் கமெண்ட் வெளியிட்டு வருகிறார் கமல். அதன்காரணமாக, சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். இந்தநிலையில், சமீபத்தில், ஒரு பெண்ணை வைத்து சூதாடும் கதை. அதை இந்திய மக்கள் புனித நூலாக கருதுகிறார்கள் என்று மகாபாரத்தை பற்றி ஒரு கருத்தினை சொல்லியிருந்தார். இதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது போலீசில் புகார் அளித்தது. அதோடு, இப்படி இந்து மக்களின் புனித நூலைப்பற்றி பேசும் நடிகர் கமல்ஹாசன், பைபிள், குரானைப்பற்றி பேசுவாரா? என்றும் இந்து அமைப்புகள் அவருக்கு கேள்வி எழுப்பின.


சிக்கலிலிருந்து தப்பிய நயனின் டோரா
[Friday 2017-03-17 14:00]

வித்தியாசமான கதை என்றால் தான் இப்போது நடிகர், நடிகைகள் கேட்கிறார்கள். அப்படி வளர்ந்து வரும் இயக்குனர் மிகவும் மாறுபட்ட கதையை கொண்டு பிரபலங்களிடம் கூறி பின் படத்திலும் கமிட்டாகின்றனர். அப்படி அந்த படம் வெளியாவதற்கு முன் ஒரு சிலர் அது என்னுடைய கதை, திருடி விட்டார்கள் என புகார் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். அண்மையில் நயன்தாரா நடித்திருக்கும் டோரா படம் என்னுடைய அலிபாபாவும் அற்புத காரும் கதை என ஸ்ரீதர் என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் டோரா இயக்குனர் தாஸ் ராமசாமி கதையையும், ஸ்ரீதர் கதையையும் வாங்கி ஆலோசனை செய்துள்ளனர். இதில் தாஸ் ராமசாமியின் கதை அவருடைய கதை தான் என்று உறுதிபடுத்தியுள்ளனர் எழுத்தாளர் சங்கம்.


ஹாலிவுட்டில் காலடி பதிக்கும் இளைய தளபதி விஜய்
[Friday 2017-03-17 14:00]

விஜய்யின் புகழ் தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற சினிமா ரசிகர்களிடம் பரவி இருப்பது நமக்கு தெரியும். அங்கு இருக்கும் விஜய் ரசிகர்களும் அவர் படம் வந்தால் போதும் திருவிழா போல் கொண்டாடுவார்கள். இந்நிலையில் Lake Of Fire என்ற ஹாலிவுட் படத்தை இயக்கி இருக்கிறார் ராஜ்திருசெல்வன். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் அஜித்தை வைத்து ஒரு அரசியல் சார்ந்த கதையை இயக்க ஆசைப்படுவதாகவும், அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறியிருந்தார். இதனை நாம் ஏற்கெனவே கூறியிருந்தோம்.


படுக்கைக்கு அழைத்தவர்களை அடையாளப்படுத்திய நடிகை கஸ்தூரி!
[Friday 2017-03-17 14:00]

சினிமாவில் நடிகைகள் பல அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டிருக்கிறார்கள் என நடிகை கஸ்தூரி கூறினார் என சில நாட்கள் முன்பு செய்தி வந்தது. பின்னர் நான் அப்படி சொல்லவே இல்லை என அவரே விளக்கம் கொடுத்தார். இந்நிலையில் இன்று அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சினிமா துறையில் அப்படி நடப்பதாக நான் சொல்லவில்லை. ஒரு நடிகையாக சினிமா துறையில் விரல் விட்டு என்ன கூடிய அளவில் தான் பிரச்சனைகளை சந்தித்துள்ளேன்.


ரெமோ நடிகையுடன் மீண்டும் நடிக்க மறுத்த சிவகார்த்திகேயன்
[Friday 2017-03-17 14:00]

சரண்யாவைத் தொடர்ந்து ராதிகா, ஊர்வசி, நதியா, ரம்யாகிருஷ்ணன் என பல நடிகைகள் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்கள். இந்த பட்டியலில் இப்போது பவுனு பவுனுதான் ரோகினியும் சேர்ந்துள்ளார். இதற்கு முன்பு சில படங்களில் அம்மாவாக நடிக்க வாய்ப்புகள் சென்றபோது, எனக்கு அவ்வளவு வயதாகிவிடவில்லை என்று அந்த வாய்ப்புகளை திருப்பி அனுப்பிவந்த அவர், சசிகுமார் நடித்த பலே வெள்ளையத் தேவா படத்திலும் அப்படியொரு வாய்ப்பு சென்றபோது, இனியும் தாமதிக்க வேண்டாம் என்று அந்த படத்தில் சசிகுமாருக்கு அம்மாவாக நடித்தார்.


இயக்குனரின் சர்ச்சைக்கு சன்னி லியோன் பதிலடி!
[Friday 2017-03-17 14:00]

பாலிவுட்டின் சர்ச்சைக்குரிய இயக்குனர் ராம்கோபால் வர்மா, சமூக வலைதளங்களில், எக்குத் தப்பாக பேசி, வாங்கி கட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். இப்படித் தான், சமீபத்தில், மகளிர் தினத்தன்று, நடிகை சன்னி லியோனை பற்றி, ஆபாசமாக கருத்தை தெரிவித்தார். இதற்கு, கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. பல்வேறு தரப்பினரும், ராம் கோபால் வர்மாவை கண்டித்தனர். ஆனால், சன்னி லியோனோ, அமைதியாக இருந்தார். இரண்டு நாட்களுக்கு பின், 'என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை இப்போது தெரிந்து கொண்டேன். இது போன்ற பிரச்னைகள் வரும் போது, அனைவரும் ஒரே குரலில், அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்' என, டுவிட்டரில் தெரிவித்தார். இதைப் படித்த பலரும், 'அடேங்கப்பா; அதிரடியான பெண்ணுக்குள், இப்படி ஒரு அமைதியான குணமா' என, ஆச்சரியப்பட்டனர்.


மார்பக புற்றுநோய் குறித்து பெண்களுக்கு அமிதாப்பச்சன் அறிவுரை
[Friday 2017-03-17 14:00]

மார்பக புற்றுநோய் ஏற்பட்டால், பெண்கள் தர்மச்சங்கடத்துக்கு ஆளாக வேண்டாம் என்று நடிகர் அமிதாப்பசன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம். பெண்களை சமீப நாட்களாக மிகவும் அச்சுறுத்தி வரும் வியாதி, மார்பக புற்றுநோய். இதனால், பெண்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செல்போன் செயலி ஒன்றை மும்பையில் தனியார் நிறுவனம் வடிவமைத்தது.இதனை 74 வயது நடிகர் அமிதாப்பச்சன் தொடங்கி வைத்தார்.


தீபிகா படுகோனேயின் படப்பிடிப்பு தளத்திற்கு தீ வைப்பு..
[Thursday 2017-03-16 19:00]

கோலாப்பூரில் நடிகை தீபிகா படுகோனே நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு தளம் தீ வைத்து சூறையாடப்பட்டது. பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோனே, நடிகர்கள் ரன்வீர் சிங், ஷாகித் கபூர், விவேக் ஓபராய் உள்ளிட்டவர்கள் நடிப்பில்


பிரபல அமெரிக்க நிறுவனத்துடன் பணியாற்றும் தமிழ் இசை அமைப்பாளர்..
[Thursday 2017-03-16 19:00]

தமிழில் வளர்ந்த வரும் இசை அமைப்பாளர் சாம் டி.ராஜ். வந்தா மல படத்தில் அறிமுகமான இவர், தற்போது சமுத்திரகனி நடிக்கும் ஏமாலி உள்பட பல படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். இவர் தற்போது சாலி கிராமத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஸ்டூடியோ ஒன்றை அமைத்துள்ளார். நெட்பிலிக்ஸ் என்ற அமெரிக்க ஆன்லைன் வீடியோ நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட இருக்கிறார். இதுகுறித்து சான் டி.ராஜ் கூறியதாவது: இதுவரை இந்தியாவில் தனது கிளையை துவக்காத நெட்பிலிக்ஸ் நிறுவனம் அடுத்த மாதம் மும்பையில் திறக்க திட்டமிட்டுள்ளது. ஆன்லைன் வீடியோ சேவையில் பிரபலபமான இந்த நிறுவனம் ஏற்கனவே ஷாருக்கான் அவர்களின் ரெட் சில்லிஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் ரிலையன்ஸ் ஜியோயுடன் இணைந்து செயல்பட உள்ளது.


ரசிகர்கள் தரமான படங்களை வரவேற்கிறார்கள் : சூர்யா
[Thursday 2017-03-16 19:00]

தனித்தன்மை, வித்தியாசமான கதை களத்துடன் வரும் தரமான படங்களை ரசிகர்கள் வரவேற்கிறார்கள் என்று பட விழாவில் நடிகர் சூர்யா பேசினார். விஜய் மில்டன் இயக்கத்தில் பரத், ராஜகுமாரன், சுபிக்‌ஷா, ராதிகா பிரஷித்தா ஆகியோர் நடித்துள்ள படம் கடுகு. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் தியேட்டரில் நடந்தது. இதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டு பேசியதாவது:-


கீர்த்தி சுரேஷின் தேங்காய் பிரார்த்தனை..
[Thursday 2017-03-16 19:00]

கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு ட்ரான்ஸ்பர் ஆர்டர் வாங்கிக்கொண்டு வந்து டூட்டி பார்த்துகொண்டிருக்கிறார். அவ்வப்போது ஸ்பெஷல் டூட்டியில் தெலுங்கு திரையுலகிற்கும் டெபுடேஷன் டூட்டி பார்க்கிறார். இவரது சம்பளம் இப்போது ஒரு கோடி ரூபாயை நெருங்கிவிட்டதாக தகவல்.. இன்று மகள் உயர்ந்திருக்கும் நிலையையும், சம்பாதிக்கும் வருமானத்தையும் பார்த்து அக மகிழ்ந்து போயிருக்கும் அவரது அம்மா மேனகா தான், ஒரு காலத்தில் கீர்த்தியை நடிக்க அனுப்பமாட்டேன் என தடை போட்டவர். அந்த தடையை நீக்குவதற்காகவும் சினிமாவில் நடிப்பதற்காகவும் கீர்த்தி என்ன பண்ணினார் தெரியுமா....?


மீனை கொடுமைப்படுத்தவில்லை என சான்றிதழ் வாங்கிய சிபிராஜ்
[Thursday 2017-03-16 19:00]

சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், நடித்துள்ள படம் கட்டப்பாவ காணோம். விண்ட் சைம்ஸ் மீடியா எண்டர்டைன்மெண்ட் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார் வெங்கடேஷ், லலித் இணைந்து தயாரித்துள்ளனர். அறிவழகன் உதவியாளர் மணி சேயோன் இயக்கி உள்ளார். இந்தப் படம் ஒரு மீனை சுற்றி நடக்கிற கதை. அதற்கும் விலங்கு நல வாரியத்திடமிருந்து சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள். இதுகுறித்து இயக்குனர் மணி சேயோன் கூறியதாவது:

Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா