Untitled Document
May 6, 2024 [GMT]
புதிய ஆண்டில் ஈழத்தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முன்னோக்கி நகரும்! - பிரதமர் வி.உருத்ரகுமாரன்
[Friday 2016-01-01 09:00]

புதிய ஆண்டில் உலகில் தமது உரிமைகளுக்காகப் போராடும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்விலும் முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையுடனும் ஈழத்தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முன்னோக்கி நகரும் என்ற எதிர்பார்ப்புடனும் நாம் இப் புதிய ஆண்டை வரவேற்றுக் கொள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அவர்கள் தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

புதிய ஆண்டில் உலகில் தமது உரிமைகளுக்காகப் போராடும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்விலும் முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையுடனும் ஈழத்தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முன்னோக்கி நகரும் என்ற எதிர்பார்ப்புடனும் நாம் இப் புதிய ஆண்டை வரவேற்றுக் கொள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அவர்கள் தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

  

கடந்த 2015ல் சிறிலங்காவில் இடம் பெற்ற ஆட்சி மாற்றமும் அதன் விளைவாக அனைத்துலக அரசுகள் சிறிலங்கா அரசினைத் தாங்கிப் பிடிக்கும் அணுகுமுறை ஆகியன நாம் எதிர் கொள்ளப் போகும் சவால்களுக்குக் கட்டியம் கூறும் ஆண்டாக அமைந்திருந்ததெனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், அனைத்துலக சமூகத்தின் ஆதரவை ஈழத் தமிழ் மக்களாகிய நாம் எமது சுயநிர்ண உரிமையினை அடைந்து கொள்ளும் போராட்டத்தில் எவ்வாறு வென்றெடுக்கப் போகிறோம் என்பது புதிய ஆண்டில் நாம் எதிர் கொள்ளப் போகும் பெரும் சவாலாக அமையவுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வி.உருத்திரகுமாரனின் புத்தாண்டுச் செய்தியின் முழுமையான அறிக்கை:

உலக மக்கள் அனைவரும் புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்கும் இவ்வேளை உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் எனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மலரும் இப் புதிய ஆண்டில் உலகில் தமது உரிமைகளுக்காகப் போராடும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்விலும் முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையுடனும் ஈழத்தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முன்னோக்கி நகரும் என்ற எதிர்பார்ப்புடனும் நாம் இப் புதிய ஆண்டை வரவேற்றுக் கொள்வோம். இப் புதிய ஆண்டில் தமிழகத்தில் இயற்கையின் சீற்றத்தால் பாதிப்புக்குள்ளான எமது தொப்புள்கொடி உறவுகளாகிய தமிழக மக்களின் இன்னல்கள் நீங்கி அவர்களது வாழ்வு செழிப்பாக அமையும் எனவும் நாம் நம்புகிறோம்.

கடந்து சென்ற 2015 ஆம் ஆண்டு நாம் எதிர் கொள்ளப் போகும் சவால்களுக்;குக் கட்டியம் கூறும் ஆண்டாக அமைந்திருந்தது. சிறிலங்காவில் இடம் பெற்ற ஆட்சி மாற்றமும் அதன் விளைவாக அனைத்துலக அரசுகள் சிறிலங்கா அரசினைத் தாங்கிப் பிடிக்கும் அணுகுமுறையினைக் கடைப்பிடிக்கத் தொடங்கிய ஆண்டாகவும் கடந்த வருடம் அமைந்தது. சிறிலங்கா அரசினைத் தமது நலன்கள் சார்ந்து ஆதரித்து நிற்கும் அனைத்துலக சமூகத்தின் ஆதரவை ஈழத் தமிழ் மக்களாகிய நாம் எமது சுயநிர்ண உரிமையினை அடைந்து கொள்ளும் போராட்டத்தில் எவ்வாறு வென்றெடுக்கப் போகிறோம் என்பது புதிய ஆண்டில் நாம் எதிர் கொள்ளப் போகும் பெரும் சவாலாக அமையவுள்ளது. இச் சவாலை எதிர் கொள்ளும் வகையில்; புதிய ஆண்டில் நாம் எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இப் புதிய ஆண்டில் சிறிலங்கா அரசுக்கான புதிய அரசியல் யாப்பு வரையப்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இப் புதிய அரசியல் யாப்பின் ஊடாகத் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட முடியும் என்ற நம்பிக்கையும் வெளியிடப்படுகிறது. எமக்குக் கிடைக்கும் தகவல்களின்படி புதிய அரசியல் யாப்பு சிறிலங்கா அரச கட்டமைப்பின் பௌத்த இனவாத மேலாண்மையினை மாற்றியமைக்கும் வகையில் அமையப் போவதில்லை எனவும் மாறாக தற்போது இருக்கும் கட்டமைப்பின் ஒரு தொடர்ச்சியாகவே இது அமையும் எனவும் தெரிய வருகிறது.

சிறிலங்காவின் இப் புதிய அரசியல் யாப்பு ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதனையோ, இலங்கைத் தீவின் வடகிழக்குப் பகுதி தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகம் என்பதனையோ அங்கீரிக்காது என்பது இப்போதே தெளிவாகத் தெரிகிறது. இத்தகைய அங்கீகாரம் இல்லாதவொரு எந்தவொரு முன்னெடுப்பின் ஊடாகவும் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வினைக் காணமுடியாது என்பதனை இவ்வேளையில் நாம் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.

அதே நேரம் கடந்த காலங்களைப் போலன்றி இத் தடவை இப் புதிய அரசியல் யாப்புக்குத் தமிழ் மக்களின் சம்மதத்தைப் பெறும் வகையிலான முயற்சிகள்; புதிய ஆண்டில் மேற்கொள்ளப்படும் எனவும்; தெரிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்மதம் பெறப்படுவதற்கான முயற்சிகளும், இப் புதிய யாப்பின் மீது இலங்கை பூராக நடாத்தப்படும் மக்கள் வாக்கெடுப்பின் ஊடாக தமிழ் மக்களது சம்மதத்தினையும் பெற்றுக் கொள்ளும் முயற்சிகளும் தற்போதய ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிகிறது. இவ் விடயத்தில் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவே நாம் வேண்டுகிறோம்.

கடந்த வருட இறுதிப் பகுதியில் தாயகத்தில் தோற்றம் பெற்ற தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டதொரு வடிவத்தில் அமையக்கூடிய அரசியல் தீர்வு குறித்த கருத்துப்பரிமாற்றங்களை, விவாதங்களை மக்கள் மயப்படுத்தி, ஈழத் தமிழர் தேசத்தினை விழிப்புணர்வுள்ள ஓர் அரசியல் சமூகமாக வளரத்தெடுப்பதில் ஆக்கபூர்வமான பங்களிப்பு வழங்கும் என்பது எமது எதிர்பார்ப்பாக உள்ளது. தம்மை தேர்தல் அரசியலில் ஈடுபடும் அரசியல் கட்சியாக அல்லாது, அரசியல் முடிவுகளில் மக்களை, மக்கள் அமைப்புக்களைப் பங்காளர் ஆக்கும் வகையிலான, தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டதொரு மக்கள் அமைப்பாகத் தமிழ் மக்கள் பேரவை உருவாகியுள்ளமையினை நாம் பெரிதும் வரவேற்கிறோம்.

இப் புதிய ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40 ஆவது ஆண்டின் நிறைவை எட்டும் ஆண்டாகவும் அமைகிறது. இப் புதிய ஆண்டில் தமிழ் மக்களின் அரசியற் பெருவிருப்பான சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசுக்கான அரசியல் யாப்பை உலகத் தமிழ் மக்களது பங்கு பற்றலுடன் நாம் ஆக்கத் தீர்மானித்திருக்கிறோம். ஈழத் தமிழர் தேசத்தையும, தேசத்தின் தாயகபூமியையும் சிங்களம் ஆக்கிரமித்து, சிங்கள பௌத்த மேலாண்மையைக் கொண்ட சிறிலங்கா அரசியல் யாப்பினுள் தமிழ் மக்களைக் கட்டிப் போட்டுள்ள நடைமுறையினை நிராகரிக்கும் வகையிலும், தமிழ் மக்களின் அரசியற் கனவைப் பிரதிபலிக்கும் வகையிலும் தமிழீழ அரசுக்கான அரசியல் யாப்பை அமைக்கும் முயற்சியினை வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடையும் இவ் ஆண்டில் நாம் மேற் கொள்ளவுள்ளோம்.

சிறிலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான இனஅழிப்புத் தொடர்பாக அனைத்துலகக் குற்றவியல் நீதி விசாரணை தேவை என்ற கோரிக்கையினை வலுப்படுத்தம் வகையில் சிறிலங்கா எவ்வாறு ஐக்கிய நாடுகள் மனித உரிபை; பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துகிறது என்பதனைக் கண்காணிக்கும் வகையில் நிபுணர் குழுவை நாம் கடந்த ஆண்டில் அமைத்திருந்தோம். இந்த நிபுணர்குழு இவ் வருடத்தில் தனது செயற்பாடுகளை முனைப்புடன் மேற்கொள்ளும்.

மேலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளும் இப் புதிய ஆண்டில் மேலும் விரிவு படுத்தப்படும். பதிப்பகம், ஆவணக் காப்பகம், தமிழகத்தில் தமிழர் தகவல் மையம், Yes to Referendum பரப்புரை இயக்கம், நீதிக்காய் மரம் நாட்டும் இயக்கம், புலம் பெயர் நாடுகளில் தமிழ் மொழிக் கல்விக்கான வள ஆலோசனை மையம் உட்பட்ட வேலைத் திட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இப் புதிய ஆண்டில் முன்னெடுக்கும். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுடன் உலகத் தமிழ் மக்கள் இப் புதிய ஆண்டில் தம்மை மேலும் இணைத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இப் புதிய ஆண்டில் எமது பயணத்தைத் தொடர்கிறோம்.

நன்றி,

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

  
   Bookmark and Share Seithy.com



கிளிநொச்சி டிப்போச் சந்தியில் பூங்கா அமைக்கும் இராணுவம்! ஜ முன்னணி எதிர்ப்பு.
[Monday 2024-05-06 16:00]

கிளிநொச்சி டிப்போ சந்தியில் யுத்த நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் சட்ட விரோதமாக இராணுவத்தினர் விளையாட்டு பூங்கா ஒன்றை அமைப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.



வங்காள விரிகுாவில் உருவாகிறது தாழமுக்கம்?
[Monday 2024-05-06 16:00]

எதிர்வரும் 15ஆம் 16ஆம் திகதியளவில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் ஒரு தாழமுக்கம் உருவாகி, அது சூறாவளியாக வலுவடையும் சாத்தியம் உள்ளதாக ஓய்வுபெற்ற மூத்த மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.



3 மாதங்களில் 8200 கோடி ரூபா இலாபம்! - மின்கட்டணத்தை 20 வீதம் குறைக்க பரிந்துரை.
[Monday 2024-05-06 16:00]

மின்சார சபை கடந்த மூன்று மாதங்களில் ரூ. 8,200 கோடி இலாபம் ஈட்டியதால், பொருளாதார நெருக்கடியைக் குறைப்பதற்காக துறைசார் மேற்பார்வைக்கான பாராளுமன்றக் குழுவானது மின் கட்டணத்தை மேலும் 20 சதவீதம் குறைக்க பரிந்துரைத்துள்ளது.



தெல்லிப்பழையில் வீடியோ கேமுக்கு அடிமையான மகன் - தாயைக் கொலை செய்தாரா?
[Monday 2024-05-06 16:00]

யாழ். தெல்லிப்பழையில் உயிரிழந்த தாயாரை மகன் கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்றுமுன்தினம் கெனடி ஜஸ்மின் என்ற 37 வயது பெண் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.



ஆளுநர்களையும் ஊழியர்களையும் அடைத்து வைத்த வேலையற்ற பட்டதாரிகள் கைது!
[Monday 2024-05-06 16:00]

வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் உள்ளிட்ட மாகாண சபை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை மாகாண சபை கட்டிட வளாகத்திற்குள் அடைத்து, நுழைவு மற்றும் வெளியேறும் கதவுகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 22 வேலையற்ற பட்டதாரிகள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.



சுற்றுலாப் பயணிகள் வருகை திடீர் வீழ்ச்சி!
[Monday 2024-05-06 16:00]

இந்த ஆண்டு முதல் தடவையாக சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 200,000க்கு கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 148, 867 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) தற்காலிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



செங்கலடியில் நள்ளிரவில் கடைக்குள் புகுந்த பஸ்! - 5 பேர் காயம். Top News
[Monday 2024-05-06 16:00]

மட்டக்களப்பு - செங்கலடி பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



30.5 கிலோ கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது!
[Monday 2024-05-06 16:00]

சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30.5 கிலோகிராம் கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் வவுனியா பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் வவுனியாவில் உள்ள பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர் .



சரத் பொன்சேகா தொடர்பான சீராய்வு மனு விசாரணைக்கு ஏற்பு!
[Monday 2024-05-06 16:00]

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கட்சி உறுப்புரிமை மற்றும் அவர் வகிக்கும் பதவிகளில் இருந்து அவரை நீக்கி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை இடைநிறுத்துமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் செய்த சீராய்வு மனுவை பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.



கிராம அலுவலர்கள் இன்றும் நாளையும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!
[Monday 2024-05-06 16:00]

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் 2 நாட்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து இன்றும் நாளையும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் ஜகத் சந்திரலால் தெரிவித்துள்ளார்.



யாழ்.சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய முடிவு!
[Monday 2024-05-06 04:00]

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.



சஜித்துக்கு தூது போனேனா?- கருணாகரம் மீது மனோ பாய்ச்சல்.
[Monday 2024-05-06 04:00]

“மனோ மூலம் தூது விடாது எம்மிடம் நேரடியாக சஜித் கூற வேண்டும்” என தமிழீழ விடுதலை இயக்க நண்பர் கோவிந்தன் கருணாகரம் எம்பி கூறி இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என மும்முரமாக செயற்படும் உங்களுக்கு எதற்காக சஜித் தூது விட வேண்டும் என எனக்கு தெரியவில்லை. பொது வேட்பாளர் தொடர்பில் உறுதியான முடிவை எடுங்கள். முதலில் அதை செய்யுங்கள். அப்புறம் புறா விடு தூது, அன்னம் விடு தூது, மான் விடு தூது, தென்றல் விடு தூது என்பவைகளை பார்க்கலாம். சஜித்திடமும் பேசலாம்.



மா.க.ஈழவேந்தனுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி! Top News
[Monday 2024-05-06 04:00]

1956 இல் தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்துத் தன் மத்திய வங்கி உயர் பணியைத் தூக்கியெறிந்த தன்மானத் தமிழன் மா.க.ஈழவேந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்றது.



கனடாவில் இன்று 'அறைகூவல்' - நீதிக்கான அழைப்பு!
[Monday 2024-05-06 04:00]

தமிழினப் படுகொலையை நினைவு கூர்வோம்.

திகதி: திங்கட்கிழமை, May 06, 2024

நேரம்: மாலை 7:00 மணி

முகவரி: 5637 Finch Ave E Unit 1, Scarborough, ON M1B 5K9



பசிலுக்கும் ரணிலுக்கும் இடையில் சுமுகமான பேச்சு!
[Monday 2024-05-06 04:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் நேற்று முன்தினம் பிற்பகல் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெற்றது.



மொட்டு பிரமுகருக்கு விரைவில் அமைச்சர் பதவி!
[Monday 2024-05-06 04:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக ஒருவர் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவரே இவ்வாறு அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார்.



இலவச சுற்றுலா விசா- ஆராய நிபுணர் குழு.
[Monday 2024-05-06 04:00]

இலவச சுற்றுலா விசாக்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக இலங்கை அரசாங்கம் ஒரு நிபுணர் குழுவை உருவாக்கியுள்ளது.



பணத்துக்காக கட்சியை விஜயதாசவுக்கு விற்று விட்டார் மைத்திரி!
[Monday 2024-05-06 04:00]

பணத்துக்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காட்டிக் கொடுத்து விட்டார். ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்ஷ என அவரால் தன்னிச்சையாக தீர்மானம் எடுக்க முடியாது என சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.



முக்கிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!
[Monday 2024-05-06 04:00]

நீரிழிவு, புற்றுநோய், இருதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



இந்தியாவில் இருந்து மீண்டும் முட்டை இறக்குமதி!
[Monday 2024-05-06 04:00]

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா