Untitled Document
April 28, 2024 [GMT]
ஜனநாயகத்தை மதித்தே ரணிலை நியமித்தேன்!
[Sunday 2018-12-16 20:00]

பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையிலேயே, ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கினேன்  என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டன் பின்னர் புதிய பிரதமர் மற்றும் நிகழ்விற்கு வருகை தந்திருந்த ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னிலையிலேயே ஜனாதிபதி  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையிலேயே, ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கினேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டன் பின்னர் புதிய பிரதமர் மற்றும் நிகழ்விற்கு வருகை தந்திருந்த ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

  

'225 பாராளுமன்ற உறுப்பினர்களும் கைச்சாத்திட்டாலும் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கப் போவதில்லை என்று தெரிவித்தது தனது தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டில் இன்றுவரை எவ்வித மாற்றமும் இல்லாதபோதிலும் பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையில் ரணில் விக்கரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு தான் அழைப்பு விடுத்தேன்.

பிரதமரை நியமிக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கோ நீதிமன்றத்திற்கோ இல்லையென்றும் அத்தகைய அதிகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கே உரித்துடையது என்பதை நினைவுகூறுகின்றேன்.

அத்துடன் 117 பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்குமாறு தெரிவித்தாலும் வாக்கெடுப்பின்போது அக்கருத்திற்கு பெரும்பான்மை கிடைத்ததாலும் பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கு மதிப்பளிக்கின்ற தலைவர் என்றவகையில் தான் அந்த முடிவுக்கு உடன்பட்டேன்.

பாராளுமன்றத்தை கலைத்தல், ஒத்திவைத்தல், பிரதமரை நீக்குதல், புதிய பிரதமரை நியமித்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் எடுக்கவில்லை. நாட்டின் உயர் பதவியில் இருக்கும் சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றதன் பின்னரே தான் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.

அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணம் தாய் நாட்டின் நன்மை கருதி மிக உன்னத எண்ணத்தினால் மேற்கொள்ள்பட்டது என்றும் அரசியலமைப்பிற்கு முரணாக செயற்படும் எவ்வித எண்ணமும் தனக்கு இருக்கவில்லை.

நாட்டில் ஏற்பட்டிருந்த சிக்கலான அரசியல் நிலைமைகளை தீர்த்துக் கொள்வதற்கு பொதுத் தேர்தலுக்கு செல்வதே சிறந்தது என்று தான் நம்பியதாகவும் 122 பாராளுமன்ற உறுப்பினர்களை விட 155 இலட்சம் வாக்காளர்களின் வாக்குகளின் மூலம் ஏற்படும் முடிவை நாடும் உலகமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருக்கும் என்பதால் 155 இலட்சம் வாக்காளர்களுக்கு அதிகாரத்தை வழங்கும் வகையில் வர்த்தமானியை வெளியிட்டோம்.

19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் சுயேட்சை ஆணைக்குழுவை நிறுவக்கூடியது சிறந்த அம்சமாக அமைந்தாலும் அதன் மறுபுறம் பாரிய அரசியல் சீர்குலைவு இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி மத்திய வங்கி பிணைமுறி ஊழலின் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கும் அந்த பணத்தை மீள பெற்றுக்கொள்ள தேவையான இலஞ்ச ஆணைக்குழுவின் குறித்த சுற்றுநிரூபத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல், பாராளுமன்றத்தை கால வரையின்றி ஒத்திவைத்தல். தேர்தல் பிரகடனத்தில் குறிப்பிட்டிருந்தாலும் அமைச்சரவைகளை பிரிக்கும்போது அறிவியல் அடிப்படையை பின்பற்றாமை, மத்திய வங்கி பிணைமுறி ஊழல் மற்றும் அதைக் கண்டறிய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையை அமுல்படுத்தாமை மற்றும் பிக்கு சமூகத்தை இழக்கும் நிலையை தோற்றுவித்தல், இராணுவ வீரர்களை சிறைப்படுத்தல் போன்ற தொலைநோக்கற்ற பல செயற்பாடுகளை கடந்த நான்கு வருடங்களாக அரசாங்கம் மேற்கொண்டு வந்ததாக தான் மனவருத்தத்துடன் காலங்கழித்ததாகவும் அண்மையில் மேற்கொண்ட அரசியல் முடிவுகளுக்கு அவ்வாறான நிலைமைகளே தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது என்பதையும் நினைவு கூர்ந்தார்.

மேலும் யார் எவ்வகையான அறிக்கைகளை வெளியிட்டாலும் கடந்த சில வாரங்களாக தன்னால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முடிவுகளும் நாட்டினதும் மக்களினதும் நன்மைக்காக எடுக்கப்பட்ட முடிவுகள். தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதாக கருத்துத் தெரிவிக்கும் நபர்கள், தன்னை சிறையில் அடைத்தாலும் உன்னத எண்ணத்தினால் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தன்னால் எடுக்கப்பட்ட சரியான முடிவுகள் கல்லில் செதுக்கிய எழுத்துக்களாக வரலாற்றில் பொறிக்கப்படும்.

கடாபியை போன்று தன்னையும் இழுத்து சென்று கொலை செய்ய வேண்டும் என்று அண்மைக் காலங்களில் சில பேச்சாளர்கள் தெரிவித்துள்ளதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், ஜே.ஆர்.ஜெயவர்தன காலம் முதல் அதன் பின் ஆட்சியமைத்த எந்தவொரு தலைவருக்கும் அவ்வாறான சொற்பிரயோகங்களை எவரும் முன்வைத்ததில்லை என்றும் அவ்வாறு கருத்து தெரிவித்திருந்தால் முகங்கொடுக்க நேரும் துர்பாக்கிய சம்பவங்களை அவர்கள் நன்கு அறிவார்கள் என்றும் இன்று தனக்கு அவ்வாறான சொற்பிரயோகங்கள் முன்வைக்கப்படுவதற்கான காரணம் தான் நாட்டில் உருவாக்கிய சுதந்திரமும் ஜனநாயகமும் என்று நினைவுகூர்ந்தார்.

அத்துடன் இவ்வாறான சம்பவங்களுடன் பிரச்சினைகளின்றி நாட்டின் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வது தனது குறிக்கோள் என்றும் சிக்கல்களை தோற்றுவிப்பதால் நாடு பின்னடைவை எதிர்நோக்கும் என்றும், எதிர்கால நாட்டுக்கு ஊழலற்ற பொறிமுறை ஒன்று அவசியம் என்றும் தெரிவித்தார்.

தோல்வியடைந்த கண்ணெதிரே அழிக்கப்பட்ட அரசியல் கொள்கைகளை நிறைவேற்றுவதற்கு நாட்டை நேசிக்கும் கலாசாரத்திற்கும் சமூக ஒழுக்கத்திற்கும் மரியாதை அளிக்கும் அரசியல் பொறிமுறையொன்றின் ஊடாகவேயாகும் எனவும் தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சிவராம் நினைவேந்தல்! Top News
[Saturday 2024-04-27 16:00]

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவேந்தல் இன்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் யாழ் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டு ஊடகத்துறைக்காக தமது இன்னுயிரை நீத்த ஊடகவியலாளருக்கு அஞ்சலி செலுத்தினர்.



நாச்சிக்குடா பாடசாலை விவகாரம் - அதே பெயரைப் பயன்படுத்த உத்தரவு!
[Saturday 2024-04-27 16:00]

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் பெயரில் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அதே பெயரையே உத்தியோகபூர்வமாகப் பயன்படுத்துமாறு வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.



தமிழ்ப் பாடசாலை, முஸ்லிம் பாடசாலையானது எப்படி?
[Saturday 2024-04-27 16:00]

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையாக மாற்றப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.



அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் துணைச் செயலாளர் ஜனாதிபதி ரணிலுடன் சந்திப்பு!
[Saturday 2024-04-27 16:00]

அமெரிக்க விவசாயத் தினைக்களத்தின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.



அனுர, சஜித்துடன் டீல் வைத்துள்ளாரா பேராயர்?
[Saturday 2024-04-27 16:00]

கத்தோலிக்கர்களின் கௌரவத்தை இல்லாதொழிப்பதை கத்தோலிக்க சபை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.



வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடி செய்து விற்பனை செய்த நபர் கைது!
[Saturday 2024-04-27 16:00]

வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடி செய்து விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



அமெரிக்க ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி மறுப்பு!
[Saturday 2024-04-27 16:00]

அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் குழுவை ஏற்றிச் செல்லும் ஆய்வுக் கப்பலை இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க அனுமதிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.



விஜயதாசவை நீக்க மொட்டு அழுத்தம்! - தம்மிக்கவுக்கு அமைச்சர் வாய்ப்பு?
[Saturday 2024-04-27 16:00]

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.



நாகை- காங்கேசன் கப்பல் சேவை 13ஆம் திகதி ஆரம்பம்!
[Saturday 2024-04-27 16:00]

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



வடக்கு கிழக்கு பாடசாலைகளில் அரசியல் தலையீடு!
[Saturday 2024-04-27 16:00]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுகின்றதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



முகமாலையில் மனித எலும்பு எச்சங்கள் மீட்பு!
[Saturday 2024-04-27 06:00]

கிளிநொச்சி - முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்று நேற்று இனங்காணப்பட்டுள்ளது. இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.



வடக்கு கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் - பிரித்தானிய அரசாங்கம் கவலை!
[Saturday 2024-04-27 06:00]

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வருவதாக பிரித்தானியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.



இந்தியத் தூதுவரைச் சந்தித்தார் பசில்!
[Saturday 2024-04-27 06:00]

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும், முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது உள்நாட்டு அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.



ரணில் களமிறங்கினால் முழுமையான ஆதரவு! -மஹிந்தவுக்கு முன்பாக கூறிய மொட்டு எம்.பிக்கள்.
[Saturday 2024-04-27 06:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்கினால் அவருக்கு முழுமையான ஆதரவு வழங்குவோம் என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.



ஈரானிய ஜனாதிபதிக்கான இராப்போசனத்தை புறக்கணித்தது ஏன்?- சஜித் விளக்கம்.
[Saturday 2024-04-27 06:00]

ஈரான் ஜனாதிபதியை கௌரவிக்கும் இராப்போசன விருந்தில் கலந்து கொள்ளாமைக்கான காரணத்தை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு தௌிவு படுத்தியுள்ளது.



ஒட்டாவா படுகொலைகள் - விசாரணைக்கு திகதி குறிப்பு!
[Saturday 2024-04-27 06:00]

கனடா - ஒட்டாவா Barrhaven பகுதியில் ஆறு இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள சந்தேகநபரிடம் முதற்கட்ட விசாரணைகளுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் அஜித் தோவலா?
[Saturday 2024-04-27 06:00]

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் செயற்பட்டுள்ளார் என்ற சர்ச்சைக்குரிய கருத்தின் உண்மை தன்மை என்ன,இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதா,? என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரசன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.



எல்லாவற்றையும் எனது தலையில் கொட்ட முடியாது!
[Saturday 2024-04-27 06:00]

நான் விடுதலைப்போராட்டத்தில் இருந்தவன் என்பதற்காக எல்லாவற்றையும் எனது தலையில் கொட்ட முடியாது. எத்தனை விசாரணைகள் வந்தாலும் நான் எதிர்கொள்ளத்தயாராகவே இருக்கின்றேன் என இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.



மூளை யார் என்று கூறாத மைத்திரி!
[Saturday 2024-04-27 06:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய இரகசிய வாக்குமூலம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வெள்ளிக்கிழமை முதன்முறையாக அம்பலப்படுத்தியுள்ளார்.



ரயிலில் ஏற முயன்ற இரண்டு பெண்கள் பெட்டிகளுக்கு நடுவே சிக்கி படுகாயம்!
[Saturday 2024-04-27 06:00]

கொழும்பில் இன்று பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற இரண்டு பெண்கள் ரயிலின் இரண்டு பெட்டிகள் நடுவில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். கண்டி நோக்கி பயணிப்பதற்காக ரயில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா