|
|
ஜனநாயகத்தை மதித்தே ரணிலை நியமித்தேன்!
[Sunday 2018-12-16 20:00]
|
பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையிலேயே, ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கினேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டன் பின்னர் புதிய பிரதமர் மற்றும் நிகழ்விற்கு வருகை தந்திருந்த ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
|
|
|
முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சியதாக 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் நள்ளிரவில் கைது!
[Monday 2024-05-13 17:00]
|
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவி உட்பட நால்வர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
|
|
|
இலங்கையில் தொற்று நோய் அபாயம் - வெசாக்கிற்கும் தடை வருமா?
[Monday 2024-05-13 17:00]
|
தொற்று நோய் அபாயத்தை காரணம் காட்டி கஞ்சி வழங்க தடையேற்படுத்திய பொலிஸார், அதேபோல் வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
|
|
|
கஞ்சிக்கு விதித்த தடை வெசாக் தன்சல்களுக்கும் பொருந்துமா?
[Monday 2024-05-13 17:00]
|
நோய் பரவும் ஆபத்து என தெரிவித்து முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகத்தினை தடுத்த இலங்கை பொலிஸார் இதே காரணத்திற்காக வெசாக் தன்சல்களை தடை செய்யுமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுப்பார்களா என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
|
|
|
நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கும் அருகதை இலங்கை அரசுக்கு இல்லை!
[Monday 2024-05-13 17:00]
|
நினைவேந்தலில் ஈடுபடும் தமிழர்களை துன்புறுத்தும், அச்சுறுத்தும் , கைதுசெய்யும் இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்திற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாக தெரிவிக்க முடியாது என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பான பேர்ள் தெரிவித்துள்ளது.
|
|
|
சாதாரண தர பரீட்சை விஞ்ஞானம், ஆங்கில பாட வினாத்தாள் சர்ச்சை! - அமைச்சர் விளக்கம்.
[Monday 2024-05-13 17:00]
|
க.பொ.த சாதாரண தர (சா/த) விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாட வினாத்தாள் தொடர்பான சர்ச்சையை தெளிவுபடுத்திய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, எந்தவொரு மாணவர்களுக்கும் அநீதி ஏற்படாதவாறு நடவடிக்கை எடுப்பதாக இன்று தெரிவித்தார்.
|
|
|
கொழும்பு வந்தார் டொனால்ட் லூ!
[Monday 2024-05-13 17:00]
|
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் டொனால்ட் லூ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வந்துள்ளார்.
|
|
|
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவது இலங்கையின் நலனுக்கே நல்லது!
[Monday 2024-05-13 17:00]
|
இலங்கைக்குள் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவது இலங்கையின் நலனுக்கே சிறந்தது என்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார்.
|
|
|
முள்ளிவாய்க்கால் கஞ்சி சிரட்டையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார் சிறிதரன்!
[Monday 2024-05-13 17:00]
|
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை நினைவு கூர்ந்து ''சிரட்டை ''ஒன்றை சபாபீடத்திற்கு சமர்ப்பித்து அதனைப் பாராளுமன்ற நூதனசாலையில் வைக்குமாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் கோரிக்கை விடுத்தார்.
|
|
|
மோட்டார் சைக்கிள் மீது மோதிய ஜீப்! - இளைஞனின் கால்கள் முறிந்தன.
[Monday 2024-05-13 17:00]
|
யாழ்ப்பாணம் - இலுப்பையடிச் சந்திப் பகுதியில் நேற்று மாலை ஜீப் ரக வாகனமொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
|
|
|
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மீது பொலிஸ் தாக்குதல்!
[Monday 2024-05-13 16:00]
|
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் தற்போது பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் நடத்தி வரும் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர்.
08 வருடங்களாக நிலவி வரும் சம்பள பிரச்சினை, மாதாந்த கொடுப்பனவு போன்ற பல பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு இந்த போராட்டத்தை நடத்தியிருந்தனர்.
|
|
|
சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய மக்களுக்கு அச்சுறுத்தல் - பெண் கைது!
[Monday 2024-05-13 05:00]
|
திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்த பொதுமக்களை தடையுத்தரவை காண்பித்து பொலிசார் நேற்று மிரட்டியுள்ளனர்.
|
|
|
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் - வேலணையில் அஞ்சலி!
[Monday 2024-05-13 05:00]
|
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று தீவக நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் வேலணை வங்களாவடியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் நிறைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
|
|
|
முள்ளிவாய்க்கால் கடற்கரையில் பிதிர்க்கடன் செலுத்த ஏற்பாடு!
[Monday 2024-05-13 05:00]
|
தமிழின படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, எதிர்வரும் 18 ஆம் திகதி பிதிர்க்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு அறிவித்துள்ளது.
|
|
|
குடும்பம் ஒன்றின் மாதாந்த நுகர்வு செலவு ஒரு இலட்சத்தைத் தாண்டியது!
[Monday 2024-05-13 05:00]
|
இலங்கையில் பணவீக்கம் காரணமாக குடும்பமொன்றின் மாதாந்த நுகர்வு செலவு 2023ஆம் ஆண்டில் 103,283 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள பொருளாதார விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 16.5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
கெஹலியவுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு!
[Monday 2024-05-13 05:00]
|
தரம் குறைந்த மருந்துகளை அப்பாவி நோயாளர்களுக்கு வழங்கி அவர்களின் உயிரை ஆபத்தான நிலைக்குத் தள்ளிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது கொலை குற்றச்சாட்டில் வழக்குத் தொடரவுள்ளதாக தெரியவந்துள்ளது.
|
|
|
விஞ்ஞான பாட வினாத்தாளில் பாடத்திட்டத்துக்கு அப்பால் கேள்விகள்! - மதுர விதானகே குற்றச்சாட்டு
[Monday 2024-05-13 05:00]
|
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு அமைவாக அண்மையில் நடைபெற்ற விஞ்ஞானப் பாடத்திற்குரிய வினாத்தாள், ஒதுக்கீட்டுத் திட்டத்திற்குப் புறம்பாக தயாரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குற்றம் சுமத்தியுள்ளார்.
|
|
|
இடைக்கால அரசுக்கு சொத்துக்களை விற்கும் அதிகாரம் இல்லை!
[Monday 2024-05-13 05:00]
|
அரசாங்கத்திற்குச் சொந்தமான சில சொத்துக்கள் மற்றும் வர்த்தகங்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளால், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
|
|
|
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்கிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம்!
[Monday 2024-05-13 05:00]
|
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் இவ்வாரம் இலங்கைக்ஊ வரவுள்ளார்.
|
|
|
வவுனியாவில் நுங்குத் திருவிழா!
[Monday 2024-05-13 04:00]
|
வவுனியா - மருக்காரம்பளையில் தமிழரின் பாரம்பரிய பறை இசையுடன் நுங்கு திருவிழா நேற்று நடைபெற்றது. இதன்போது பனை மரத்தின் பயன்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன், பனை மரத்தின் உற்பத்திப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
|
|
|
கிளிநொச்சியில் கஞ்சாவுடன் இருவர் கைது!
[Monday 2024-05-13 04:00]
|
கிளிநொச்சி - கனகபுரம் மற்றும் விவேகானந்தா நகர் பகுதிகளில் ஒரு கிலோவும் 760 கிராம் கஞ்சாவுடன் ஒரு மோட்டார் சைக்கிளும் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
|
|
|
பொது வேட்பாளர் விவகாரம் - தமிழ்க் கட்சிகளுடன் பேசத் தயாராகிறது சிவில் பிரதிநிதிகள் குழு!
[Sunday 2024-05-12 17:00]
|
தமிழ் தேசியத் தளத்தில் உள்ள அரசியல் கட்சிகளுடனான பேச்சுக்களை விரைவில் ஆரம்பிப்பதற்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய செயற்குழு திட்டமிட்டுள்ளது.
|
|
|
தமிழ்ப் பொது வேட்பாளர் ஏன்? -சிறீதரனிடம் துளாவினார் இந்தியத் தூதுவர்.
[Sunday 2024-05-12 17:00]
|
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது பற்றியும், இத்தேர்தலில் வாக்களிப்பது குறித்து தமிழ் மக்கள் எவ்வாறான மனநிலையில் இருக்கின்றார்கள்? அவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது பற்றியும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் எஸ். சிறீதரனிடம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கேட்டறிந்துள்ளார்.
|
|
|
பொதுவேட்பாளர் விடயத்தில் அவசரப்பட வேண்டாம்! - என்கிறார் சம்பந்தன்.
[Sunday 2024-05-12 17:00]
|
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் விடயத்தில் தீர்மானம் எடுப்பதற்கு அவசரப்பட வேண்டாம் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சி உட்பட விடயத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பிடமும் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் பகிரங்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
|
|
|
பொது வேட்பாளர் குறித்து ஆராய வவுனியாவில் கூடுகிறது தமிழரசின் மத்திய குழு!
[Sunday 2024-05-12 17:00]
|
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் உள்ள மாவட்டக் கிளைக் காரியாலயத்தில் முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
|
|
|
சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக விஜயதாச - வழிவிட்டு ஒதுங்கினார் மைத்திரி!
[Sunday 2024-05-12 17:00]
|
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்துள்ளார். கோட்டையில் இடம்பெற்றமைத்திரிபால சிறிசேன தரப்பினரின் செயற்குழு கூட்டத்தில் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை கட்சியின் தலைவராக நியமிக்கவும் இதன்போது ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
|
|
|
தமிழினப் படுகொலை வாரம் ஆரம்பம்! - முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்.
[Sunday 2024-05-12 17:00]
|
தமிழினப் படுகொலை வாரத்தின் முதல் நாளான இன்றைய தினம் முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது. புலம்பெயர் மற்றும் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த கஞ்சி பரிமாறும் நிகழ்வு நடைபெற்றது.
|
|
|
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக மோசடி- பொதுஜன பெரமுனவின் தீவக அமைப்பாளர் கைது!
[Sunday 2024-05-12 17:00]
|
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
|
|
|
கூலிப்படையில் இணைந்து கொண்ட 17 இலங்கைப் படையினர் பலி!
[Sunday 2024-05-12 17:00]
|
ரஷ்யா - உக்ரேன் போரில் கூலிப்படையில் இணைந்து கொண்ட 17 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆள்க்கடத்தல், கடத்தல் மற்றும் கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவு வெளிப்படுத்தியுள்ளது.
|
|
|
|