Untitled Document
May 2, 2024 [GMT]
மெக்ஸிக்கோவில் எரிபொருள் குழாய் வெடிப்பு : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 71ஆக உயர்வு.
[Sunday 2019-01-20 17:00]

மெக்ஸிகோவின் ஹிடால்கோ மாநிலத்தில் எரிபொருளை கொண்டுசெல்லும் குழாயை திருடர்கள் துளையிட்டதன் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குழாயிலிருந்து வெளியேறிய எரிபொருளை பிடிப்பதற்காக அங்கு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பு சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் இருபது பேருக்கு மேற்பட்டோரின் உடல்கள் அங்கேயே இன்னமும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெக்ஸிகோ அதிபர் மானுவல் லோபஸ் ஒபராடோ அறிமுகப்படுத்தியுள்ள புதிய எரிபொருள் கொள்கையால் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாற்குறையாலே இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மெக்ஸிகோவின் ஹிடால்கோ மாநிலத்தில் எரிபொருளை கொண்டுசெல்லும் குழாயை திருடர்கள் துளையிட்டதன் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குழாயிலிருந்து வெளியேறிய எரிபொருளை பிடிப்பதற்காக அங்கு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பு சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் இருபது பேருக்கு மேற்பட்டோரின் உடல்கள் அங்கேயே இன்னமும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெக்ஸிகோ அதிபர் மானுவல் லோபஸ் ஒபராடோ அறிமுகப்படுத்தியுள்ள புதிய எரிபொருள் கொள்கையால் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாற்குறையாலே இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

  

"பெட்ரோல் நிலையங்களிலேயே பெட்ரோல் இல்லாத சூழ்நிலையில் தங்களது கார்களுக்கு சிறிது பெட்ரோல் கிடைக்குமா என்று பார்ப்பதற்காகவே மக்கள் அந்த இடத்தில் மக்கள் குவிந்தனர்" என்று அந்த பகுதியை சேர்ந்த விவசாயியான இஸ்மாயஸ் கார்சியா ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த 71 பேர்களில் மூன்று பெண்கள், 12 வயது குழந்தையொன்று ஆகியோர் அடக்கம் என்று அம்மாநில கவனர் உமர் பயாத் தெரிவித்துள்ளார். விபத்தில் எஞ்சியுள்ளவற்றை தடயவியல் வல்லுநர்கள் ஆய்வுக்காக சேகரித்து வருகின்றனர்.

நடந்தது என்ன?

சட்டவிரோதமாக எரிபொருள் குழாயை துளையிட்டதே இந்த விபத்திற்கு காரணமென்று மெக்ஸிகோ அரசுக்கு சொந்தமான பெட்ரோலிய நிறுவனமான பேமெக்ஸ் கூறியுள்ளது.

எரிபொருள் குழாயை திருடர்கள் துளையிட்டதால், விபத்து நடந்தேறிய இடத்திலிருந்து வெளியான புகைப்படங்களில், வானளாவிய உயரத்துக்கு எரிபொருள் பீய்ச்சி அடிப்பது தெரிகிறது.

எரிபொருள் வழிந்தோட ஆரம்பித்ததும் அங்கிருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் எச்சரிக்கவில்லை என்று உள்ளூர்வாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

"வெடிப்பு ஏற்படுவதற்கு முன்னதாக பொது மக்களை வெளியேற்றுவதற்கு முன்பு அங்கிருந்து ராணுவ வீரர்கள் வெளியேறினர்" என்று டெலிவிசா என்ற தொலைக்காட்சியிடம் பேசிய டுரசோ என்பவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மிகப் பெரிய மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாததால்தான் ராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறியதாக அதிபர் லோபஸ் தெரிவிக்கிறார்.

தாங்கள் சொல்வதை கேட்காமல் அங்கு கூடியிருந்தவர்கள் எரிபொருளை பிடிப்பதில் தீவிரமாக இருந்ததாலே, ராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்று மக்களை நேரடியாக குற்றஞ்சாட்டாமல் அவர் தெரிவித்துள்ளார்.

மெக்ஸிகோ மக்களின் தினசரி குறைந்தபட்ச வருமானத்தைவிட ஒரு சில லிட்டர்கள் பெட்ரோலின் விலை அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



துபாயில் மீண்டும் கனமழை: சர்வதேச விமான சேவைகள் ரத்து!
[Thursday 2024-05-02 18:00]

துபாயில் மீண்டும் கனமழை பெய்துவருகிறது. இதனால் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. மேலும், போக்குவரத்து வசதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. துபாயில் இருந்து பிற நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.



கனடாவில் உடல் எடை குறைப்பு மருந்துக்கு அனுமதி!
[Thursday 2024-05-02 18:00]

கனடாவில் உடல் எடையை குறைக்கும் மருந்து வகைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கனடிய உடற்பருமண் அதிகரிப்பு சிகிச்சைப் பிரிவின் மருத்துவர் சஞ்சீவ் சொக்கலிங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த உடல் எடை குறைப்பு மருந்து வகை கனடாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.



இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொண்ட பிரபல நாடு!
[Thursday 2024-05-02 18:00]

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதல் இதுவரை இல்லாத அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடியாக, காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலையில், இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவித்துள்ளார்.



கனடாவிலிருந்து வெளியேறும் கனேடியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
[Thursday 2024-05-02 18:00]

குடியுரிமை பெற்றும், அதாவது, கனேடிய குடிமக்களானபின்பும், கனடாவிலிருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக சமீபத்திய ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன. திங்கட்கிழமையன்று வெளியான McGill Institute for the Study of Canada என்னும் அமைப்பின் ஆய்வு முடிவுகள், கனடாவிலிருந்து வெளியேறும் கனேடியர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக தெரிவிக்கின்றன.



சூடான் உள்நாட்டுப் போர்: மண், இலைகளை உண்டு உயிர் வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள்!
[Thursday 2024-05-02 06:00]

சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள துயர நிலை காரணமாக அங்குள்ள மக்கள் மண், இலைகளை உண்டு உயிர் வாழும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சூடானில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே வெடித்த உள்நாட்டு போர், நாட்டை மோசமான பசி பட்டினியில் தள்ளியுள்ளது.



பிரித்தானியாவை உலுக்கிய சம்பவம்: உயிரிழந்த 14 வயது சிறுவனின் விவரங்கள் வெளியீடு!
[Thursday 2024-05-02 06:00]

பிரித்தானியாவின் ஹெயினால்ட் பகுதியில் நடந்த வாள் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த 14 வயது பள்ளி மாணவரின் பெயர் மற்றும் புகைப்படம் வெளியாகியுள்ளது. வடகிழக்கு லண்டனின் ஹெயினால்ட்(Hainault) பகுதியில் நேற்று காலை அதிர்ச்சியூட்டும் தாக்குதல் அரங்கேறியது.



நாளை லண்டன் மேயர் தேர்தல்: 3வது முறையாக வெற்றி பெறுவாரா சாதிக் கான்?
[Thursday 2024-05-02 06:00]

பிரித்தானியாவில், லண்டன் மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி தேர்தல் நாளை (மார்ச் 02) நடக்கிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 107 உள்ளூர் அதிகாரிகளுக்கான தேர்தல், பல இடங்களில் பொலிஸ், குற்றப்பிரிவு கமிஷனர் தேர்தல் கூட இதனுடன் நடத்தப்படும். பொதுத்தேர்தலுக்கு சற்று முன்னதாக நடைபெறும் இந்த உள்ளாட்சித் தேர்தலை, பொதுத் தேர்தலின் அரையிறுதிப் போட்டியாகவே கருதப்படுகிறது.



இஸ்ரேலுக்கு ஜேர்மனி ஆயுதங்கள் வழங்கலாம்: சர்வதேச நீதிமன்றம் அதிரடி!
[Wednesday 2024-05-01 16:00]

ஜேர்மனி இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் முதலான உதவிகள் வழங்குவதை எதிர்த்து, நிகராகுவா என்னும் மத்திய அமெரிக்க நாடு, ஐ.நா சபையின் ஒரு அமைப்பான சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. ஜேர்மனி, இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் முதலான உதவிகள் வழங்குவது, 1948ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கையை மீறும் செயலாகும் என நிகராகுவா குற்றம் சாட்டியிருந்தது.



லண்டனில் மனைவியை கொடூரமாக கொலை செய்த இந்தியருக்கு நேர்ந்த கதி!
[Wednesday 2024-05-01 16:00]

பிரித்தானியாவில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த கணவனுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, லண்டனில் இந்திய வம்சாவளியினரான 25 வயதான சாகில் சர்மா தனது மனைவி மெஹக் சர்மாவுடன் வசித்து வந்துள்ளார்.



சீனாவில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம்: 19 பேர் பலி!
[Wednesday 2024-05-01 16:00]

தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தினால் 19 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை 2.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.



கனடிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
[Wednesday 2024-05-01 16:00]

கனடிய பொருளாதாரத்தில் சிறிதளவு மாற்றம் பதிவாகியுள்ளது. நாட்டின் புள்ளிவிபரவியல் திணைக்களம் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.5 வீதமாக அதிகரித்திருந்தது.



காசாவில் அமெரிக்காவின் மிதக்கும் தளம்!
[Wednesday 2024-05-01 07:00]

அமெரிக்க இராணுவம் காசா உதவிக்காக மிதக்கும் தளத்தை கட்டமைத்துள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மத்திய தரைகடலில் மிதக்கும் தளத்தை கட்டுவதைக் காட்டும் படங்களை அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ளது. இது காசா கடற்கரைக்கு அவசர உதவிப் பொருட்களை விரைவாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.



லண்டன் ஹெயினால்ட் பகுதியில் நடந்த தாக்குதல்: வெளியான தாக்குதல்தாரி புகைப்படம்!
[Wednesday 2024-05-01 07:00]

பிரித்தானியாவின் ஹெயினால்ட் பகுதியில் வாள் தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் வடகிழக்கு லண்டனின் ஹெயினால்ட்(Hainault) பகுதியில் இன்று காலை அதிர்ச்சியூட்டும் தாக்குதல் அரங்கேறியுள்ளது. ஹெயினால்ட் டியூப் நிலையம் (Hainault Tube station) அருகே வாள் ஏந்திய 36 வயது நபர் பொதுமக்களை தாக்கியதாக காவல்துறைக்கு காலை 7 மணி அளவில் தகவல் கிடைத்தது.



கனடாவில் மாயமான நபர் ஏரியில் சடலமாக மீட்பு!
[Wednesday 2024-05-01 07:00]

கனடாவில் காணாமல் போன நபரின் உடல் சென்ட் ஜார்ஜ் ஏரியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. ஒன்டாரியோ பிராந்திய காவல்துறை (OPP) செவெர்ன் டவுன்ஷிபில்(Severn Township) பகுதியில் உள்ள சென்ட் ஜார்ஜ் ஏரியில்(Lake St. George) காணாமல் போன ஒரு மனிதரின் உடலை மீட்டுள்ளது.



பக்கவிளைவுகளை ஏற்படுத்திய கோவிஷீல்டு தடுப்பூசி: ஒப்புக்கொண்ட நிறுவனம்!
[Tuesday 2024-04-30 18:00]

தங்கள் நிறுவனத் தயாரிப்பான கோவிட் தடுப்பூசியால் அபூர்வமாக பக்கள் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது உண்மைதான் என முதன்முறையாக ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. 2019ஆம் ஆண்டின் இறுதியில் கொரோனா தொற்று பரவத்துவங்கிய நிலையில், அதைத் தடுப்பதற்காக உலக நாடுகள் பல தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கின.



வட கொரிய ஜனாதிபதி தொடர்பில் இளம்பெண் தெரிவித்துள்ள அதிரவைத்துள்ள தகவல்!
[Tuesday 2024-04-30 18:00]

தன்னை மகிழ்விப்பதற்காக, ஆண்டுக்கு 25 இளம்பெண்களை வட கொரிய ஜனாதிபதி தேர்ந்தெடுப்பதாக, அவரிடமிருந்து தப்பிய இளம்பெண் ஒருவர் தெரிவித்துள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பொதுவாகவே, சர்வாதிகாரிகள் ஆட்சி செய்யும் நாடுகளில் என்ன நடக்கிறது என்பது எளிதில் வெளி உலகத்துக்குத் தெரிவதில்லை.



பிரித்தானிய நகரின் பல பகுதிகளில் மீட்கப்பட்ட மனித உடல் பாகங்கள்!
[Tuesday 2024-04-30 18:00]

பிரித்தானியாவின் Salford நகரின் பல பகுதிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் தொடர்பில் பொலிசார் பெயர் உட்பட பிரதான தகவல்களை வெளியிட்டுள்ளனர். குறித்த நபர் 67 வயதான Stuart Everett என அதிகாரிகள் தரப்பு நம்புவதாக தெரிவித்துள்ளனர். கிரேட்டர் மான்செஸ்டரில் அமைந்துள்ள Kersal Dale அருகே கீழ் முதுகு, தொடை உள்ளிட்ட சில உடல் பாகங்கள் cellophane தாள்களில் சுற்றப்பட்ட நிலையில் வழிபோக்கர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.



கனடாவில் சர்வதேச மாணவர்கள் இனி 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதி!
[Tuesday 2024-04-30 18:00]

கனடாவில் கல்வி கற்க வரும் மாணவர்களை பணி செய்ய அனுமதிப்பதால், அவர்களில் சிலர் கனடாவுக்கு வரும் நோக்கமே கல்வி கற்பதற்காக அல்லாமல் பணி செய்வதற்கான என மாறிவிடுகிறது என்று கூறியுள்ளார் கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சர். கனடாவில் கல்வி கற்க வரும் மாணவர்கள், தங்கள் பணத்தேவைகளுக்காக, வார்த்தில் 20 மணி நேரம் வேலை செய்யலாம் என அனுமதியளிக்கப்பட்டிருந்தது.



பிடியாணை வழங்க சென்றபோது துப்பாக்கிச்சூடு: 3 பொலிஸார் மரணம்!
[Tuesday 2024-04-30 06:00]

அமெரிக்காவில் பிடியாணை வழங்க சென்றபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 3 பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வட கரோலினாவின் Charlotte பகுதியில் உள்ள நபர் ஒருவர், துப்பாக்கி வைத்திருந்ததற்காக பொலிஸார் பிடியாணை வழங்க சென்றனர்.



உக்ரைனுக்கு சென்ற முதல் பிரித்தானிய அரச குடும்ப நபரான டச்சஸ் ஆஃப் எடின்பர்க்!
[Tuesday 2024-04-30 06:00]

டச்சஸ் ஆஃப் எடின்பர்க் சோஃபி ஹெலன் உக்ரைனுக்கு சென்றதன் மூலம், ரஷ்ய படையெடுப்புக்கு பின் அங்கு சென்ற முதல் அரச குடும்பத்தைச் சேர்ந்த நபர் ஆனார். அரச குடும்பத்தைச் சேர்ந்த டச்சஸ் ஆஃப் எடின்பர்க் சோஃபி ஹெலன் (Sophie Helen) உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டார்.


Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா