Untitled Document
April 28, 2024 [GMT]
உலகிலேயே சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் 'கனடா' முதலிடம்.
[Monday 2019-01-28 08:00]

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் சேர்ந்து நடத்திய கருத்து கணிப்பில், உலகின் சிறந்த வாழ்க்கை தரத்தை கொண்ட நாடாக கனடா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யுஎஸ் நியூஸ் & வேர்ல்ட் ரிப்போர்ட், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், பிஏவி கன்சல்டிங் ஆகியவை இணைந்து உலகம் முழுவதுமுள்ள 80 நாடுகளை சேர்ந்த இருபது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த பட்டியலில் சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் சேர்ந்து நடத்திய கருத்து கணிப்பில், உலகின் சிறந்த வாழ்க்கை தரத்தை கொண்ட நாடாக கனடா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யுஎஸ் நியூஸ் & வேர்ல்ட் ரிப்போர்ட், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், பிஏவி கன்சல்டிங் ஆகியவை இணைந்து உலகம் முழுவதுமுள்ள 80 நாடுகளை சேர்ந்த இருபது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த பட்டியலில் சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது.

  

உலகின் சிறந்த நாடு எது?

உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தையும், ஜப்பான் இரண்டாமிடத்தையும், சென்ற ஆண்டைவிட ஓரிடம் பின்தங்கி கனடா மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் அமெரிக்கா எட்டாவது இடத்தையும், சிங்கப்பூர் 15வது இடத்தையும், சீனா 16வது இடத்தையும், இந்தியா 27வது இடத்தையும் பெற்றுள்ளது. கல்வி, குடியுரிமை, கலாசாரம், பாரம்பரியம், சுற்றுலா போன்ற பல்வேறு அளவீடுகளை மையாக கொண்டு இந்த நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள.

உப அளவீடுகளை பார்க்கும்போது சாகசம் நிறைந்த நாடுகள் பட்டியலில் பிரேசிலும், சிறந்த குடியுரிமை கொண்ட நாடுகளின் பட்டியலில் நார்வேவும், சிறந்த கலாசார பிரிவில் இத்தாலியும், தொழில்முனைவோருக்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் ஜப்பானும், ஆதிக்கம் மிக்க நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவும், சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடாவும் முதலிடத்தை பெற்றுள்ளன.

எதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டது?

உலகிலேயே சிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தாண்டு மூன்றாமிடத்தை பெற்றுள்ள கனடா, சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது.

"செலவினம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், ஊதியத்தில் பாலின சமவுரிமை, அரசியல் நிலைத்தன்மை, பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் கனடா, வாழ்க்கை தரத்தில் உலகின் சிறந்த நாடாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது" என்று அந்த கருத்து கணிப்பு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அனைத்து உப அளவீடுகளிலும் கனடா முதல் 10 நாடுகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ளதாக அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா முதலிடத்தை பிடிக்க காரணமென்ன?

தங்களது சொந்த நாடுகளிலிருந்து பல்வேறு காரணங்களினால் வெளியேறியவர்களுக்கு/ வெளியேற்றப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் நாடாக விளங்கி வரும் கனடாவின் மக்கள் தொகையில் குடியேறியவர்களின் எண்ணிக்கை மற்ற மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பீட்டளவில் மிகவும் அதிகம்.

இந்த பட்டியலின் சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளுக்கான பிரிவில் கனடா முதலிடம் பிடித்துள்ளது குறித்து ஃபேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "உலகில் வாழ்வதற்கு மிகச் சிறந்த நாடு இது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு கனடியரும் தனது வாழ்க்கையில் வெற்றிப்பெறுவதற்கான உண்மையான, சரிசமமான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்கு தொடர்ந்து உழைப்போம்" என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ இறுதியாண்டு படித்துவரும் அஸ்வின் குமாரிடம் கேட்டபோது, "பாகிஸ்தான் என்றால் தீவிரவாதம், அமெரிக்கா என்றால் இனவெறி என்று ஒவ்வொரு நாட்டையும் நினைக்கும்போது நமக்கு ஏதாவது ஒன்று தோன்றும். ஆனால், கனடாவை நினைக்கும்போது எதிர்மறையான விடயங்களை தவிர்த்து இயற்கை, சிறந்த வாழ்க்கை போன்றவை நமக்கு நினைவுக்கு வருவதுதான் அதன் சிறப்பிற்கு உதாரணம்" என்று கூறுகிறார்.

"நான் கனடாவிற்கு வந்து கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளாகிறது. மக்களின் செயல்பாடு முதல் கல்வி நிறுவனங்களின் தரம் வரை பெரும்பாலான விடயங்கள் என்னை வியக்க வைக்கும் வகையில் உள்ளன" என்று கூறுகிறார் மதுரையை பூர்விகமாக கொண்ட அஸ்வின்.

"பேராசிரியரை பார்க்கும் பார்வையே மாறியது"

கனடாவிற்கு சென்றவுடன் தனது முந்தைய கால அனுபவங்கள் பல தலைகீழாக மாறியதாக கூறுகிறார் அஸ்வின். "தமிழ்நாடு அல்லது இந்தியாவை பொறுத்தவரை, பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது, பாடம் நடத்தும் பெரும்பாலான பேராசிரியர்களை பார்த்தால் 'அவருக்கு என்ன தெரியும்?' என்ற எண்ணம் ஏற்படுவது இயல்பானது.

ஏனெனில், நம்மூரில் இளங்கலை பட்டம் பெறுபவர்கள் வேலை கிடைக்கவில்லை என்றால் முதுகலை பட்டத்திற்கு படிக்கிறார்கள், அப்படியும் வேலை கிடைக்கவில்லை என்றால் அதே கல்லூரில் ஆசிரியர்களாக சேர்ந்துவிடுகிறார்கள். இது கனடாவில் ஒரு சதவீதம் கூட சாத்தியமில்லை.

கனடாவை பொறுத்தவரை, இளங்கலை படித்துவிட்டு பணியில் சேர்ந்து, அதில் முன்னேற்றம் தேவைப்படுபவர்களே முதுகலை படிக்கிறார்கள். பணியில் கோலூச்சி, அனுபவம் பெற்று வெற்றி பெற்ற பிறகு முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட பிறகே பேராசிரியராகிறார்கள். இவ்வாறாக தனக்கு சம்பந்தப்பட்ட துறையில் வல்லுநராக உள்ளவர்களே பாடம் கற்பிக்கும் கனடாவின் கல்வித்துறை எப்படி இருக்கும் என்று நீங்களே நினைத்து பாருங்கள்.

அதேபோன்று, நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் நிரந்தர வேலையை பெற்றுவிட்டால், சட்டரீதியான காரணம் ஏதுமின்றி உங்களை பணியிலிருந்து வெளியேற்றுவது என்பது முடியாத காரியம். நமது ஊரில் தலை வலிக்கு மருத்துவரிடம் போனால், சம்பந்தமே இல்லாமல் கிட்னியை ஸ்கேன் செய்ய சொல்லுவதெல்லாம் இங்கு நடப்பதற்கு வாய்ப்பில்லை. நீங்கள் மருத்துவம் பெறுவதற்கு அரசாங்கம்தான் நேரடியாக மருத்துவமனைக்கு பணமளிக்கும். அதில் ஏதாவது குளறுபடி கண்டறியப்பட்டால் உடனடியாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிகழ்வுகளும் நடக்கின்றன" என்று விவரிக்கிறார் அஸ்வின்.

"பொதுவெளியிலுள்ள நீரையும் நம்பி குடிக்கலாம்"

கல்விக்காக கனடாவுக்கு சென்று அங்கேயே நிரந்தரமாக குடியிருக்கும் தமிழர்கள் ஒருபுறமிருக்க, பணிக்காக சென்று கனேடிய குடியுரிமை வாங்கிய தமிழர்களும் அதிக எண்ணிக்கைகள் இருக்கிறார்கள். கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தை சேர்ந்த சமையற்கலை நிபுணரான சிவா, தான் சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்த்து ஏழாண்டுகளுக்கு முன்பு கனடா வந்ததாகவும், தற்போது கனேடிய குடியுரிமையே வாங்கிவிட்டதாகவும் கூறுகிறார்.

"எனது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர். சமையற்கலையில் இளங்கலை பட்டம் பெற்றவுடன், உள்ளூரில் சில காலம் பணியாற்றிவிட்டு 2012ஆம் ஆண்டு கனடாவிற்கு வந்தேன். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் பொதுவாக வெப்பத்தை மட்டுமே பார்த்து பழகியவர்கள் என்பதால், கனடாவின் கடும் குளிரால் அவதிப்பட்டேன்.

எனினும், கனடாவில் இருக்கும் வாய்ப்புகளை எண்ணி கடுமையாக உழைத்து முதலில் நிரந்தர வசிப்புரிமையையும், பிறகு கடந்தாண்டு கனேடிய குடியுரிமையையும் பெற்றுவிட்டேன். எனது வேலை மட்டுமின்றி, குழந்தையின் கல்வி, எதிர்காலம் ஆகியவற்றை கருதும்போது கனடாவிலுள்ள வாழ்க்கை தரம் நம்பிக்கை அளிக்கிறது.

நமது ஊரில் கடைகளில் பிளாஸ்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீரைவிட கனடாவின் பொதுவெளியில் காணப்படும் தண்ணீர் மிகவும் சுத்தமானது. இயற்கையை அழிக்காமல், மனிதர்களுக்கிடையேயான வேறுபாட்டை கேலிக்குள்ளாக்காமல், கல்வியை மதித்து, சுகாதாரத்தை சேவையாக கருதும் கனடாவுக்கு முதலிடம் கிடைத்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை" என்று நிறைவு செய்கிறார்.

  
   Bookmark and Share Seithy.com



ஈராக் டிக்டோக் பிரபலம் மர்ம நபரால் சுட்டுக்கொலை!
[Sunday 2024-04-28 18:00]

ஈராக்கில் பெண் டிக்டோக் பிரபலம் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈராக் நாட்டில் குஃப்ரான் மஹ்தி சவாதி எனும் பெண் டிக்டோக்கில் பிரபலமானவர். ''ஓம் பஹத்'' என்று சமூக வலைத்தளங்களில் அழைக்கப்பட்ட இவர், நாட்டின் கலாச்சாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வீடியோக்களை டிக்டோக்கில் பதிவேற்றிய குற்றத்திற்காக கடந்த ஆண்டு 6 மாதம் சிறைத்தண்டனை பெற்றார்.



பிரித்தானியாவில் வெளிநாட்டு இளைஞருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
[Sunday 2024-04-28 18:00]

பிரித்தானியாவில் சாரதிகளுக்கான தேர்வில் வெற்றிபெற்ற சில மணி நேரத்தில், இளைஞர் ஒருவர் முதியவர் மீது வாகனத்தால் மோதிய சம்பவத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 26ம் திகதி குறித்த சாலை விபத்து நடந்துள்ளது. 27 வயதான ஷரோன் ஆபிரகாம் Eastbourne பகுதியில் சாலையை கடக்கும் 75 வயது Andrew Forrest மீது மோதிவிட்டு, சம்பவயிடத்தில் இருந்து மாயமாகியுள்ளார்.



முதலீடு செய்யத் தயங்கும் கனடியர்கள்!
[Sunday 2024-04-28 18:00]

கனடியர்கள் முதலீடுகளில் நாட்டம் காட்டுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறான ஓர் நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடியர்கள் மத்தியில், வரி மீளளிப்பு கொடுப்பனவுகளை முதலீடு செய்வது வெகுவாக குறைவடைந்துள்ளது.



உலகளவில் முதன்முறையாக பிரபஞ்ச அழகிப்போட்டியில் வென்ற 60 வயது பெண்!
[Sunday 2024-04-28 18:00]

உலகளவில் அர்ஜென்டினாவில் அலஜாண்டிரா மரிசா ரோட்ரிக்ஸ் என்ற 60 வயது பெண் அழகி போட்டியில் வெற்றி பெற்று மகுடம் சூடியுள்ளார். உலக அளவில் ஆண்டுதோறும் பிரபஞ்ச அழகிப்போட்டி (மிஸ் யூனிவர்ஸ்) நடந்து வருகிறது.



டைட்டானிக்கில் மூழ்கிய கோடீஸ்வரரின் தங்க பாக்கெட் கடிகாரம்: ஏலத்தில் எத்தனை கோடிக்கு போச்சு தெரியுமா?
[Sunday 2024-04-28 08:00]

டைட்டானிக் கப்பலின் கடைசி பயணத்தில் பயணித்த கோடீஸ்வரரின் பாக்கெட் கடிகாரம் £1.2 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வரலாற்றின் மிகப்பெரிய துயரங்களில் ஒன்றை நினைவுபடுத்தும் வகையிலான, தங்க பாக்கெட் கடிகாரம்(gold pocket watch) ஏலத்தில் பிரமிக்க வைக்கும் £1.175 மில்லியன் (₹1.4 கோடி) என்ற தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது.



ருவாண்டா திட்டம் சட்டவிரோத குடியேறிகளுக்கு தடுப்பாக உள்ளது: பிரதமர் ரிஷி சுனக்!
[Sunday 2024-04-28 08:00]

பிரித்தானிய பிரதமர் ருவாண்டா திட்டம் குடியேற்ற தேடுபவர்களை தடுக்கிறது என்று தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், குடியேற்ற தேடுபவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் சர்ச்சைக்குரிய திட்டம் ஏற்கனவே தடுப்பு நடவடிக்கையாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். குடியேற்ற தேடுபவர்கள் சட்டவிரோதமாக ஐக்கிய ராஜ்ஜியத்திற்குள் நுழைய விரும்புகிறார்கள் என்றும், அவர்கள் ருவாண்டாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிந்திருப்பதால் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் சுனக் வாதிடுகிறார்.



ஆங்கிலேய கால்வாயில் சிக்கிய புலம்பெயர்ந்தவர்கள்: காவல் படையினர் நடவடிக்கை!
[Sunday 2024-04-28 08:00]

ஆங்கில கால்வாயில் சிக்கியுள்ள புலம்பெயர்ந்தவர்களை கடலோர காவல் படை காப்பாற்றியுள்ளனர். இன்று நடைபெற்ற ஒரு மீட்பு நடவடிக்கையில், ஆங்கில கால்வாயில் சிறு படகில் சிக்கியிருந்த குடியேற்ற நபர்களை கடலோர காவல்படை மீட்டுள்ளது. இந்த சம்பவம் கென்ட்டின் டீல் கடற்கரைக்கு அப்பால், குட்வின் சாண்ட்ஸ்(Goodwin Sands) அருகே நடந்துள்ளது.



இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை செய்யும் பிரிட்டன் அரண்மனை!
[Saturday 2024-04-27 18:00]

இங்கிலாந்து மன்னர் புற்றுநோயால் பாதிகப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை கலவைக்கிடமாக உள்ளதாகவும் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளில் இப்போதே அரண்மனை நிர்வாகம் இறங்கி உள்ளதாகவும் கூறப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2022, செப்டம்பரில் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை அடுத்து, சார்லஸ் இங்கிலாந்து மன்னராக மகுடம் சூடிய நிலையில் எதிர்பாரா வகையில் அவர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானார்.



ஜார்ஜ் பிளாயிட் மரணத்தைப் போல மற்ருமொருவர் உயிரிழப்பு!
[Saturday 2024-04-27 18:00]

அமெரிக்காவில், 2020-ஆம் ஆண்டு, காவலர் ஒருவர் தனது முழங்காலால் கழுத்தில் அழுத்தியதில், ஜார்ஜ் பிளாயிட் என்ற கருப்பின இளைஞர் உயிரிழந்தது இனவெறிக்கு எதிராக பெரியளவிலான போராட்டங்களுக்கு வழிவகுத்தது.



பிரித்தானியாவில் இருந்து சீனாவுக்காக உளவுபார்த்த இருவர் அதிரடி கைது!
[Saturday 2024-04-27 18:00]

பிரித்தானியாவில் இருந்து சீனாவுக்காக உளவுப் பார்த்த அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் முன்னாள் ஆய்வாளர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முன்னாள் ஆய்வாளர் கிறிஸ்டோபர் கேஷ் தனது நண்பர் 32 வயதான கிறிஸ்டோபர் பெர்ரியுடன் இணைந்து நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை சீனாவுக்கு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.



கனடிய விமானத்தில் தலையங்கியினால் ஏற்பட்ட சர்ச்சை!
[Saturday 2024-04-27 18:00]

எயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் பயணம் செய்த பழங்குடியின தலைவி ஒருவரது தலையங்கியினால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. விமானத்தில் வைத்து விமானப் பணியாளர்கள் குறித்த தலையங்கியை அகற்றியுள்ளனர். பழங்குடியின சமூகத்தின் தலைமைப் பொறுப்பை வகிப்பவர்கள் இவ்வாறு தலையங்கி அணிவது வழமையானதாகும்.



மத்திய கிழக்கில் பரவும் பதட்டம்!
[Saturday 2024-04-27 06:00]

மத்திய கிழக்கில் மோதல் பரவுவதை தடுப்பதில் சீனா பங்கு வகிக்க முடியும் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பல்வேறு ராஜதந்திர உறவுகள் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.



மன்னர் சார்லஸ் தொடர்பில் அரண்மனை வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!
[Saturday 2024-04-27 06:00]

மன்னர் சார்லஸ் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு பொது வாழ்க்கைக்குத் திரும்புகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. புற்றுநோய் சிகிச்சையில் ஊக்கமளிக்கும் முன்னேற்றம் அடைந்ததைத் தொடர்ந்து, மன்னர் சார்லஸ் அடுத்த வாரம் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவிருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.



உலகின் கடைசி உணவு ஆதாரம்: சுவல்பார்டு தீவிலுள்ள உலக விதை வங்கியில் என்ன இருக்கு?
[Saturday 2024-04-27 06:00]

நார்வே நாட்டின் வடக்கே, ஆர்டிக் வட்டத்திற்கு அப்பால் அமைந்துள்ள சுவல்பார்டு தீவு, உலகின் விதைப் பெட்டகம் என்று அழைக்கப்படுகிறது. பூமியில் உள்ள பல்வேறு வகையான பயிர்களின் விதைகளை பாதுகாப்பதற்காக, 2008-ம் ஆண்டு சுவல்பார்டு தீவில் உலக விதை வங்கி (Svalbard Global Seed Vault) நிறுவப்பட்டது. சுவல்பார்டு தீவுகள், 12 ஆம் நூற்றாண்டில் வைக்கிங் கடற்பயணிகளால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. 16 ஆம் நூற்றாண்டில், டச்சு மற்றும் ஆங்கில வேட்டையாடுபவர்கள் திமிங்கல வேட்டைக்காக இங்கு வந்தனர். 17 ஆம் நூற்றாண்டில், டென்மார்க் தீவுகளின் மீது அதன் ஆதிக்கத்தை நிலைநாட்டியது.



சீனாவின் நட்பை பெற போட்டிபோடும் அமெரிக்கா, ரஷ்யா!
[Friday 2024-04-26 18:00]

அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது, நிரந்தர எதிரிகளும் கிடையாது என்பார்கள். அப்படித்தான் உலக நாடுகளும் நடந்துகொள்கின்றன. உக்ரைன் ரஷ்ய போர் துவங்கியதைத் தொடர்ந்து சீனா ரஷ்யாவுக்கு ஆதரவாகவே நிற்க, அல்லது, வேறு வகையில் கூறினால், ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதற்கு கண்டனம் தெரிவிக்காமலே இருக்கும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவு அளித்துவரும் அமெரிக்காவோ, கடந்த சில மாதங்களாக சீனாவுடன் நட்பு பாராட்ட விளைவதைக் கவனிக்கமுடிகிறது.



அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற இந்திய வம்சாவளி மாணவி கைது!
[Friday 2024-04-26 18:00]

அமெரிக்கப் பல்கலை ஒன்றில், பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற இந்திய வம்சாவளி மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் அமைந்துள்ள Princeton பல்கலையில் பயிலும் அச்சிந்த்யா சிவலிங்கம் என்னும் மாணவி, பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.



வெளிநாடொன்றில் 56 குழந்தைகள் உள்பட 223 பேரை சுட்டுகொன்ற ராணுவத்தினர்!
[Friday 2024-04-26 18:00]

ஆப்பிரிக்க நாடான பர்கினோ பாசோவில் கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி 56 குழந்தைகள் உள்பட 223 பேரை ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ரஷ்யாவில் மீட்கப்பட்ட கனடியர் சடலம்!
[Friday 2024-04-26 18:00]

ரஷ்யாவில் கியூபாவில் விடுமுறையை கழிப்பதற்காக சென்ற கனடியர் ஒருவரின் சடலம் ரஷ்யாவிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. கியூபெக்கின் மொன்றியாலைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார். 68 வயதான பாராஜ் ஜார்ஜோர் என்பவரின் சடலம் தவறுதலாக ரஸ்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



பிரித்தானியாவில் இருந்து இத்தாலிக்கு ராணுவ விமானத்தில் பறந்த குழந்தை!
[Friday 2024-04-26 06:00]

இத்தாலிய அரசின் தலையீட்டை தொடர்ந்து, சிகிச்சைக்காக இங்கிலாந்திலிருந்து இத்தாலிக்கு ராணுவ விமானத்தில் குழந்தை கொண்டு செல்லப்பட்டது. இத்தாலிய அரசு தலையிட்டதையடுத்து, கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று இங்கிலாந்திலிருந்து இத்தாலிக்கு வான்வழியாக கொண்டு செல்லப்பட்டது.



பிரான்ஸில் 15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த கட்டுப்பாடு?
[Friday 2024-04-26 06:00]

15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை பெற்றோர் கட்டுப்படுத்த வேண்டும் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கேட்டுக் கொண்டுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு பெற்றோர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று வியாழக்கிழமை தெரிவித்தார்.


Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா