Untitled Document
April 29, 2024 [GMT]
சீன ஆய்வகத்தில் ஏற்பட்ட பிழையால் உருவானது தான் கொரோனா வைரஸ் - அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்! Top News
[Friday 2020-04-10 08:00]
சீனாவில் இருக்கும் மர்மமான வுஹான் வைரஸ் ஆய்வகத்தின் அரிதான புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அதன் உள்ளே இருக்கும் ஆய்வாளர்கள், விண்வெளி வீரர்கள் போன்று உடையணிந்திருப்பதை பார்க்க முடிகிறது. கொரோனா வைரஸின் துவக்க இடம் என்று கூறப்படும் சீனாவில் இந்த நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆனால் இங்கிருந்து வெவ்வேறு நாடுகளுக்கு பரவிய இந்த வைரஸால் ஒரு சில நாடுகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் போயுள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் இந்த வைரஸ் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

சீனாவில் இருக்கும் மர்மமான வுஹான் வைரஸ் ஆய்வகத்தின் அரிதான புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அதன் உள்ளே இருக்கும் ஆய்வாளர்கள், விண்வெளி வீரர்கள் போன்று உடையணிந்திருப்பதை பார்க்க முடிகிறது. கொரோனா வைரஸின் துவக்க இடம் என்று கூறப்படும் சீனாவில் இந்த நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆனால் இங்கிருந்து வெவ்வேறு நாடுகளுக்கு பரவிய இந்த வைரஸால் ஒரு சில நாடுகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் போயுள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் இந்த வைரஸ் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

  

இந்நிலையில் சீனாவின் மர்மமான ஆய்வகம் என்று கூறப்படும், வுஹான் நகரில் இருக்கும் Wuhan Institute of Virology ஆய்வாகத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. சுமார், 1,500-க்கும் மேற்பட்ட கொடிய வைரஸ்களை வைத்திருக்கும் இந்த ஆய்வகம், மிகவும் ஆபத்தான நோய்க்கிருமிகளை ஆராய்ச்சி செய்வதில் நிபுணத்துவம் பெற்றது. குறிப்பாக வெளவால்களை வைத்து மேற்கொள்ளப்படும் வைரஸ்கள். கடந்த டிசம்பர் மாதத்தில் இந்த நகரத்தில் கொரோனா வைரஸ் பரவியது. இந்த ஆய்வகத்தில் ஏற்பட்ட பிழை காரணமாக கொரோனா வைரஸ் தோன்றியதாகவும், அது வுஹானின் ஒரு சந்தையில் உணவாக விற்கப்படும் காட்டு விலங்குகளிடமிருந்து வைரஸ் மனிதர்களிடம் பரவியுள்ளதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

அவர்களில் சிலர் இதை SARS-CoV-2 எனவும் இந்த வைரஸ் அங்கு வடிவமைக்கப்பட்ட ஒரு உயிரியல் போர் ஆயுதமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர் குறித்த வைரஸ் ஆய்வகத்திலிருந்து தப்பித்ததாக சந்தேகிக்கின்றனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு எல்லாம் சீனா மறுத்து வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநரான ஷி ஜெங்லி பெப்ரவரி மாதம் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, கொரோனா பரவலுக்கும், ஆய்வகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்தார்.

இந்த தொற்றுநோய் 91,000-க்கும் அதிகமான மக்களைக் கொன்றுள்ளதுடன் உலகளவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளதால், கடந்த 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் குறித்த ஆய்வகத்தின் உட்புறத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில், அங்கிருக்கும் ஆய்வாளர்கள் சோதனைகளை மேற்கொள்ளும் போது, ​​முழு உடல் பாதுகாப்பு மற்றும் தலை கவசங்களுடன் இருப்பதை பார்க்க முடிகிறது. கடந்த 2002 மற்றும் 2003-ஆம் ஆண்டுகளில் SARS நோயால் பாதிக்கப்பட்ட பின்னர், சீன அதிகாரிகள் இந்த நிறுவனத்தை உருவாக்க முடிவு செய்தனர். இந்த SARS 775 பேரைக் கொன்றதுடன், உலகளவில் 8,000-க்கும் அதிகமானவர்கள் இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டனர்.

அதன் படி மொத்தம் 300 மில்லியன் யுவான் மதிப்பில் இந்த ஆய்வகத்தை கட்டி முடிக்க சீனாவிற்கு 15 ஆண்டுகள் தேவைப்பட்டது. இந்த கட்டிடத்தை பிரான்ஸை சேர்ந்தவர்கள் வடிவமைக்க உதவியுள்ளனர். இந்த ஆய்வகத்தின் நான்காவது மாடியில் இருக்கும், P4- மிக உயர்ந்த உயிர் பாதுகாப்பு நிலை கொண்டது. சீனாவில் மிகவும் மேம்பட்ட ஆய்வகமாக Wuhan Institute of Virology உள்ளது. ஆய்வகத்தின் கட்டுமானம் கடந்த 2015-ல் முடிந்தது. அதன் பின் பல்வேறு பாதுகாப்பு ஆய்வுகளில் தெரிவு பெற்ற பின்னர், அதிகாரப்பூர்வமாக கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ஆம் திகதி திறக்கபட்டது.

இந்த ஆய்வகத்தில் இருக்கும் P4-ஐ அங்கிருக்கும் ஊடகம் ஒன்று, சீனாவின் வைராலஜி விமானம் தாங்கி என்று பெயரிட்டது. ஆபத்தான நோய்க்கிருமிகளை ஆராய்ச்சி செய்யும் திறன் கொண்டது என்று அரசு நடத்தும் செய்தித்தாள் ஒன்று கூறியது. வுஹானில் இரண்டு பெரிய வைரஸ் ஆய்வகங்கள் உள்ளன. இங்கு ஹூனான் கடல் உணவு மொத்த சந்தையிலிருந்து 10 மைல் தொலைவில் Wuhan Institute of Virology அமைந்துள்ளது. இது தான் கொரோனா வைரஸின் தொடக்க புள்ளியாக நம்பப்படுகிறது. அதே போன்று நகரத்தின் இரண்டாவது நிறுவனம், Wuhan Centre for Disease Control(வுஹான் நோய் கட்டுப்பாட்டு மையம்) இது சந்தையில் இருந்து மூன்று மைல் தொலைவில் உள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



ஜேர்மனியில் 2 உக்ரைனியர்களுக்கு நிகழ்ந்த பரிதாபம்!
[Monday 2024-04-29 06:00]

ஜேர்மனியில் இரண்டு உக்ரேனியர்கள் கத்திக் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெற்கு ஜேர்மனிய கிராமமான முர்னாவில்(Murnau) உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் சனிக்கிழமை மாலை இரண்டு ஆண்கள் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தனர்.



"குடியேறிகளை திருப்பி அனுப்புவோம்" - அயர்லாந்தின் சூடான திட்டம் பரிசீலனை!
[Monday 2024-04-29 06:00]

ருவாண்டா மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து, நாட்டிற்குள் நுழையும் குடியேறிகளை பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்பும் அவசர சட்டத்தை அயர்லாந்து பரிசீலித்து வருகிறது. பிரித்தானிய அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய ருவாண்டா மசோதாவிற்கு பதிலளிக்கும் வகையில், வடக்கு அயர்லாந்தின் வழியாக வரும் அடைக்கலம் தேடுபவர்களை பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்ப அவசர சட்டத்தை அயர்லாந்து அரசு முன்மொழிந்துள்ளது.



2024 இல் புதிய சவால்: பிரித்தானியாவுக்குள் 7000+ குடியேற்றோர் வருகை!
[Monday 2024-04-29 06:00]

2024 ஆம் ஆண்டில் பிரித்தானியாவுக்குள் சிறிய படகில் குடியேறியோர் வருகை எப்போதும் இல்லாத அளவு அதிகரித்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், சிறிய படகு மூலம் UK க்கு வரும் குடியேறியோரின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.



ஈராக் டிக்டோக் பிரபலம் மர்ம நபரால் சுட்டுக்கொலை!
[Sunday 2024-04-28 18:00]

ஈராக்கில் பெண் டிக்டோக் பிரபலம் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈராக் நாட்டில் குஃப்ரான் மஹ்தி சவாதி எனும் பெண் டிக்டோக்கில் பிரபலமானவர். ''ஓம் பஹத்'' என்று சமூக வலைத்தளங்களில் அழைக்கப்பட்ட இவர், நாட்டின் கலாச்சாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வீடியோக்களை டிக்டோக்கில் பதிவேற்றிய குற்றத்திற்காக கடந்த ஆண்டு 6 மாதம் சிறைத்தண்டனை பெற்றார்.



பிரித்தானியாவில் வெளிநாட்டு இளைஞருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
[Sunday 2024-04-28 18:00]

பிரித்தானியாவில் சாரதிகளுக்கான தேர்வில் வெற்றிபெற்ற சில மணி நேரத்தில், இளைஞர் ஒருவர் முதியவர் மீது வாகனத்தால் மோதிய சம்பவத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 26ம் திகதி குறித்த சாலை விபத்து நடந்துள்ளது. 27 வயதான ஷரோன் ஆபிரகாம் Eastbourne பகுதியில் சாலையை கடக்கும் 75 வயது Andrew Forrest மீது மோதிவிட்டு, சம்பவயிடத்தில் இருந்து மாயமாகியுள்ளார்.



முதலீடு செய்யத் தயங்கும் கனடியர்கள்!
[Sunday 2024-04-28 18:00]

கனடியர்கள் முதலீடுகளில் நாட்டம் காட்டுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறான ஓர் நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடியர்கள் மத்தியில், வரி மீளளிப்பு கொடுப்பனவுகளை முதலீடு செய்வது வெகுவாக குறைவடைந்துள்ளது.



உலகளவில் முதன்முறையாக பிரபஞ்ச அழகிப்போட்டியில் வென்ற 60 வயது பெண்!
[Sunday 2024-04-28 18:00]

உலகளவில் அர்ஜென்டினாவில் அலஜாண்டிரா மரிசா ரோட்ரிக்ஸ் என்ற 60 வயது பெண் அழகி போட்டியில் வெற்றி பெற்று மகுடம் சூடியுள்ளார். உலக அளவில் ஆண்டுதோறும் பிரபஞ்ச அழகிப்போட்டி (மிஸ் யூனிவர்ஸ்) நடந்து வருகிறது.



டைட்டானிக்கில் மூழ்கிய கோடீஸ்வரரின் தங்க பாக்கெட் கடிகாரம்: ஏலத்தில் எத்தனை கோடிக்கு போச்சு தெரியுமா?
[Sunday 2024-04-28 08:00]

டைட்டானிக் கப்பலின் கடைசி பயணத்தில் பயணித்த கோடீஸ்வரரின் பாக்கெட் கடிகாரம் £1.2 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வரலாற்றின் மிகப்பெரிய துயரங்களில் ஒன்றை நினைவுபடுத்தும் வகையிலான, தங்க பாக்கெட் கடிகாரம்(gold pocket watch) ஏலத்தில் பிரமிக்க வைக்கும் £1.175 மில்லியன் (₹1.4 கோடி) என்ற தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது.



ருவாண்டா திட்டம் சட்டவிரோத குடியேறிகளுக்கு தடுப்பாக உள்ளது: பிரதமர் ரிஷி சுனக்!
[Sunday 2024-04-28 08:00]

பிரித்தானிய பிரதமர் ருவாண்டா திட்டம் குடியேற்ற தேடுபவர்களை தடுக்கிறது என்று தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், குடியேற்ற தேடுபவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் சர்ச்சைக்குரிய திட்டம் ஏற்கனவே தடுப்பு நடவடிக்கையாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். குடியேற்ற தேடுபவர்கள் சட்டவிரோதமாக ஐக்கிய ராஜ்ஜியத்திற்குள் நுழைய விரும்புகிறார்கள் என்றும், அவர்கள் ருவாண்டாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிந்திருப்பதால் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் சுனக் வாதிடுகிறார்.



ஆங்கிலேய கால்வாயில் சிக்கிய புலம்பெயர்ந்தவர்கள்: காவல் படையினர் நடவடிக்கை!
[Sunday 2024-04-28 08:00]

ஆங்கில கால்வாயில் சிக்கியுள்ள புலம்பெயர்ந்தவர்களை கடலோர காவல் படை காப்பாற்றியுள்ளனர். இன்று நடைபெற்ற ஒரு மீட்பு நடவடிக்கையில், ஆங்கில கால்வாயில் சிறு படகில் சிக்கியிருந்த குடியேற்ற நபர்களை கடலோர காவல்படை மீட்டுள்ளது. இந்த சம்பவம் கென்ட்டின் டீல் கடற்கரைக்கு அப்பால், குட்வின் சாண்ட்ஸ்(Goodwin Sands) அருகே நடந்துள்ளது.



இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை செய்யும் பிரிட்டன் அரண்மனை!
[Saturday 2024-04-27 18:00]

இங்கிலாந்து மன்னர் புற்றுநோயால் பாதிகப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை கலவைக்கிடமாக உள்ளதாகவும் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளில் இப்போதே அரண்மனை நிர்வாகம் இறங்கி உள்ளதாகவும் கூறப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2022, செப்டம்பரில் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை அடுத்து, சார்லஸ் இங்கிலாந்து மன்னராக மகுடம் சூடிய நிலையில் எதிர்பாரா வகையில் அவர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானார்.



ஜார்ஜ் பிளாயிட் மரணத்தைப் போல மற்ருமொருவர் உயிரிழப்பு!
[Saturday 2024-04-27 18:00]

அமெரிக்காவில், 2020-ஆம் ஆண்டு, காவலர் ஒருவர் தனது முழங்காலால் கழுத்தில் அழுத்தியதில், ஜார்ஜ் பிளாயிட் என்ற கருப்பின இளைஞர் உயிரிழந்தது இனவெறிக்கு எதிராக பெரியளவிலான போராட்டங்களுக்கு வழிவகுத்தது.



பிரித்தானியாவில் இருந்து சீனாவுக்காக உளவுபார்த்த இருவர் அதிரடி கைது!
[Saturday 2024-04-27 18:00]

பிரித்தானியாவில் இருந்து சீனாவுக்காக உளவுப் பார்த்த அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் முன்னாள் ஆய்வாளர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முன்னாள் ஆய்வாளர் கிறிஸ்டோபர் கேஷ் தனது நண்பர் 32 வயதான கிறிஸ்டோபர் பெர்ரியுடன் இணைந்து நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை சீனாவுக்கு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.



கனடிய விமானத்தில் தலையங்கியினால் ஏற்பட்ட சர்ச்சை!
[Saturday 2024-04-27 18:00]

எயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் பயணம் செய்த பழங்குடியின தலைவி ஒருவரது தலையங்கியினால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. விமானத்தில் வைத்து விமானப் பணியாளர்கள் குறித்த தலையங்கியை அகற்றியுள்ளனர். பழங்குடியின சமூகத்தின் தலைமைப் பொறுப்பை வகிப்பவர்கள் இவ்வாறு தலையங்கி அணிவது வழமையானதாகும்.



மத்திய கிழக்கில் பரவும் பதட்டம்!
[Saturday 2024-04-27 06:00]

மத்திய கிழக்கில் மோதல் பரவுவதை தடுப்பதில் சீனா பங்கு வகிக்க முடியும் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பல்வேறு ராஜதந்திர உறவுகள் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.



மன்னர் சார்லஸ் தொடர்பில் அரண்மனை வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!
[Saturday 2024-04-27 06:00]

மன்னர் சார்லஸ் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு பொது வாழ்க்கைக்குத் திரும்புகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. புற்றுநோய் சிகிச்சையில் ஊக்கமளிக்கும் முன்னேற்றம் அடைந்ததைத் தொடர்ந்து, மன்னர் சார்லஸ் அடுத்த வாரம் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவிருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.



உலகின் கடைசி உணவு ஆதாரம்: சுவல்பார்டு தீவிலுள்ள உலக விதை வங்கியில் என்ன இருக்கு?
[Saturday 2024-04-27 06:00]

நார்வே நாட்டின் வடக்கே, ஆர்டிக் வட்டத்திற்கு அப்பால் அமைந்துள்ள சுவல்பார்டு தீவு, உலகின் விதைப் பெட்டகம் என்று அழைக்கப்படுகிறது. பூமியில் உள்ள பல்வேறு வகையான பயிர்களின் விதைகளை பாதுகாப்பதற்காக, 2008-ம் ஆண்டு சுவல்பார்டு தீவில் உலக விதை வங்கி (Svalbard Global Seed Vault) நிறுவப்பட்டது. சுவல்பார்டு தீவுகள், 12 ஆம் நூற்றாண்டில் வைக்கிங் கடற்பயணிகளால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. 16 ஆம் நூற்றாண்டில், டச்சு மற்றும் ஆங்கில வேட்டையாடுபவர்கள் திமிங்கல வேட்டைக்காக இங்கு வந்தனர். 17 ஆம் நூற்றாண்டில், டென்மார்க் தீவுகளின் மீது அதன் ஆதிக்கத்தை நிலைநாட்டியது.



சீனாவின் நட்பை பெற போட்டிபோடும் அமெரிக்கா, ரஷ்யா!
[Friday 2024-04-26 18:00]

அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது, நிரந்தர எதிரிகளும் கிடையாது என்பார்கள். அப்படித்தான் உலக நாடுகளும் நடந்துகொள்கின்றன. உக்ரைன் ரஷ்ய போர் துவங்கியதைத் தொடர்ந்து சீனா ரஷ்யாவுக்கு ஆதரவாகவே நிற்க, அல்லது, வேறு வகையில் கூறினால், ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதற்கு கண்டனம் தெரிவிக்காமலே இருக்கும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவு அளித்துவரும் அமெரிக்காவோ, கடந்த சில மாதங்களாக சீனாவுடன் நட்பு பாராட்ட விளைவதைக் கவனிக்கமுடிகிறது.



அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற இந்திய வம்சாவளி மாணவி கைது!
[Friday 2024-04-26 18:00]

அமெரிக்கப் பல்கலை ஒன்றில், பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற இந்திய வம்சாவளி மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் அமைந்துள்ள Princeton பல்கலையில் பயிலும் அச்சிந்த்யா சிவலிங்கம் என்னும் மாணவி, பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.



வெளிநாடொன்றில் 56 குழந்தைகள் உள்பட 223 பேரை சுட்டுகொன்ற ராணுவத்தினர்!
[Friday 2024-04-26 18:00]

ஆப்பிரிக்க நாடான பர்கினோ பாசோவில் கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி 56 குழந்தைகள் உள்பட 223 பேரை ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா