Untitled Document
May 2, 2024 [GMT]
ஜேர்மனியில் சொந்த அக்காவை தொண்டையை அறுத்து கொடூரமாக கொன்ற தம்பிகள்!
[Thursday 2021-12-30 17:00]

ஜேர்மனியில் தங்கள் சொந்த அக்காவையே கொடூரமாக கொலை செய்துள்ளார்கள், அவரது தம்பிகள். அதற்கு காரணம்? ஜேர்மனியில் வாழும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 34 வயதான இளம்பெண் ஒருவருக்கு 16 வயதில் திருமணமான நிலையில், கணவரது வன்முறை காரணமாக கணவரைப் பிரிந்த அந்த இளம்பெண், வேறு ஒருவருடன் பழகத் தொடங்கியுள்ளார்.

ஜேர்மனியில் தங்கள் சொந்த அக்காவையே கொடூரமாக கொலை செய்துள்ளார்கள், அவரது தம்பிகள். அதற்கு காரணம்? ஜேர்மனியில் வாழும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 34 வயதான இளம்பெண் ஒருவருக்கு 16 வயதில் திருமணமான நிலையில், கணவரது வன்முறை காரணமாக கணவரைப் பிரிந்த அந்த இளம்பெண், வேறு ஒருவருடன் பழகத் தொடங்கியுள்ளார்.

  

இந்த விடயம் அவரது தம்பிகளுக்கு பிடிக்காமல் போகவே, அவரைக் கொல்லத் திட்டமிட்ட அவரது தம்பிகளான Sayed H. (26) மற்றும் Seyed H (22) இருவரும், கடந்த ஜூலை மாதம், ஒரு நாள், அவரை சந்திக்க விரும்புவதாகக் கூறி பெர்லினுக்கு வரச்சொல்லியிருக்கிறார்கள். தம்பிகள் சொன்னதை நம்பி அந்த இளம்பெண் அவர்களுடன் செல்ல, அவரைக் கழுத்தை நெறித்தும், தொண்டையை அறுத்தும் கொலை செய்துள்ளார்கள் இருவரும்.

பிறகு அவரது உடலை சூட்கேஸ் ஒன்றில் அடைத்து, டெக்ஸி ஒன்றைப் பிடித்து ரயில் நிலையம் சென்று, அங்கிருந்து பவேரியாவுக்கு ரயிலில் சென்று, மூத்த தம்பியின் வீட்டின் அருகில் ஓரிடத்தில் அக்காவின் உடலைப் புதைத்துள்ளார்கள் அவர்கள்.

இந்த கொலை தொடர்பாக, கடந்த ஆகத்து மாதம் 3ஆம் திகதி அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுக் காவலில் அடைக்கப்பட்டார்கள். விசாரணையின்போது, தங்கள் அக்காவின் மேற்கத்திய நாகரீக வாழ்வுக்காக அவரைத் தண்டிப்பதற்காகவே அவரைக் கொலை செய்ததாகவும், தங்கள் பார்வையில் அவர் ஒரு பெண் என்ற வகையில், பழமை வாய்ந்த கௌரவத்துக்கும் ஒழுக்கத்துக்கும் ஏற்ற வாழ்க்கையை அவர் வாழவில்லை என்றும் தெரிவித்தார்கள்.

ஜேர்மனியில் நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், சகோதரர்கள் இருவர் மீதும் கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

  
   Bookmark and Share Seithy.com



சூடான் உள்நாட்டுப் போர்: மண், இலைகளை உண்டு உயிர் வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள்!
[Thursday 2024-05-02 06:00]

சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள துயர நிலை காரணமாக அங்குள்ள மக்கள் மண், இலைகளை உண்டு உயிர் வாழும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சூடானில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே வெடித்த உள்நாட்டு போர், நாட்டை மோசமான பசி பட்டினியில் தள்ளியுள்ளது.



பிரித்தானியாவை உலுக்கிய சம்பவம்: உயிரிழந்த 14 வயது சிறுவனின் விவரங்கள் வெளியீடு!
[Thursday 2024-05-02 06:00]

பிரித்தானியாவின் ஹெயினால்ட் பகுதியில் நடந்த வாள் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த 14 வயது பள்ளி மாணவரின் பெயர் மற்றும் புகைப்படம் வெளியாகியுள்ளது. வடகிழக்கு லண்டனின் ஹெயினால்ட்(Hainault) பகுதியில் நேற்று காலை அதிர்ச்சியூட்டும் தாக்குதல் அரங்கேறியது.



நாளை லண்டன் மேயர் தேர்தல்: 3வது முறையாக வெற்றி பெறுவாரா சாதிக் கான்?
[Thursday 2024-05-02 06:00]

பிரித்தானியாவில், லண்டன் மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி தேர்தல் நாளை (மார்ச் 02) நடக்கிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 107 உள்ளூர் அதிகாரிகளுக்கான தேர்தல், பல இடங்களில் பொலிஸ், குற்றப்பிரிவு கமிஷனர் தேர்தல் கூட இதனுடன் நடத்தப்படும். பொதுத்தேர்தலுக்கு சற்று முன்னதாக நடைபெறும் இந்த உள்ளாட்சித் தேர்தலை, பொதுத் தேர்தலின் அரையிறுதிப் போட்டியாகவே கருதப்படுகிறது.



இஸ்ரேலுக்கு ஜேர்மனி ஆயுதங்கள் வழங்கலாம்: சர்வதேச நீதிமன்றம் அதிரடி!
[Wednesday 2024-05-01 16:00]

ஜேர்மனி இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் முதலான உதவிகள் வழங்குவதை எதிர்த்து, நிகராகுவா என்னும் மத்திய அமெரிக்க நாடு, ஐ.நா சபையின் ஒரு அமைப்பான சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. ஜேர்மனி, இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் முதலான உதவிகள் வழங்குவது, 1948ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கையை மீறும் செயலாகும் என நிகராகுவா குற்றம் சாட்டியிருந்தது.



லண்டனில் மனைவியை கொடூரமாக கொலை செய்த இந்தியருக்கு நேர்ந்த கதி!
[Wednesday 2024-05-01 16:00]

பிரித்தானியாவில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த கணவனுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, லண்டனில் இந்திய வம்சாவளியினரான 25 வயதான சாகில் சர்மா தனது மனைவி மெஹக் சர்மாவுடன் வசித்து வந்துள்ளார்.



சீனாவில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம்: 19 பேர் பலி!
[Wednesday 2024-05-01 16:00]

தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தினால் 19 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை 2.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.



கனடிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
[Wednesday 2024-05-01 16:00]

கனடிய பொருளாதாரத்தில் சிறிதளவு மாற்றம் பதிவாகியுள்ளது. நாட்டின் புள்ளிவிபரவியல் திணைக்களம் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.5 வீதமாக அதிகரித்திருந்தது.



காசாவில் அமெரிக்காவின் மிதக்கும் தளம்!
[Wednesday 2024-05-01 07:00]

அமெரிக்க இராணுவம் காசா உதவிக்காக மிதக்கும் தளத்தை கட்டமைத்துள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மத்திய தரைகடலில் மிதக்கும் தளத்தை கட்டுவதைக் காட்டும் படங்களை அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ளது. இது காசா கடற்கரைக்கு அவசர உதவிப் பொருட்களை விரைவாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.



லண்டன் ஹெயினால்ட் பகுதியில் நடந்த தாக்குதல்: வெளியான தாக்குதல்தாரி புகைப்படம்!
[Wednesday 2024-05-01 07:00]

பிரித்தானியாவின் ஹெயினால்ட் பகுதியில் வாள் தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் வடகிழக்கு லண்டனின் ஹெயினால்ட்(Hainault) பகுதியில் இன்று காலை அதிர்ச்சியூட்டும் தாக்குதல் அரங்கேறியுள்ளது. ஹெயினால்ட் டியூப் நிலையம் (Hainault Tube station) அருகே வாள் ஏந்திய 36 வயது நபர் பொதுமக்களை தாக்கியதாக காவல்துறைக்கு காலை 7 மணி அளவில் தகவல் கிடைத்தது.



கனடாவில் மாயமான நபர் ஏரியில் சடலமாக மீட்பு!
[Wednesday 2024-05-01 07:00]

கனடாவில் காணாமல் போன நபரின் உடல் சென்ட் ஜார்ஜ் ஏரியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. ஒன்டாரியோ பிராந்திய காவல்துறை (OPP) செவெர்ன் டவுன்ஷிபில்(Severn Township) பகுதியில் உள்ள சென்ட் ஜார்ஜ் ஏரியில்(Lake St. George) காணாமல் போன ஒரு மனிதரின் உடலை மீட்டுள்ளது.



பக்கவிளைவுகளை ஏற்படுத்திய கோவிஷீல்டு தடுப்பூசி: ஒப்புக்கொண்ட நிறுவனம்!
[Tuesday 2024-04-30 18:00]

தங்கள் நிறுவனத் தயாரிப்பான கோவிட் தடுப்பூசியால் அபூர்வமாக பக்கள் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது உண்மைதான் என முதன்முறையாக ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. 2019ஆம் ஆண்டின் இறுதியில் கொரோனா தொற்று பரவத்துவங்கிய நிலையில், அதைத் தடுப்பதற்காக உலக நாடுகள் பல தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கின.



வட கொரிய ஜனாதிபதி தொடர்பில் இளம்பெண் தெரிவித்துள்ள அதிரவைத்துள்ள தகவல்!
[Tuesday 2024-04-30 18:00]

தன்னை மகிழ்விப்பதற்காக, ஆண்டுக்கு 25 இளம்பெண்களை வட கொரிய ஜனாதிபதி தேர்ந்தெடுப்பதாக, அவரிடமிருந்து தப்பிய இளம்பெண் ஒருவர் தெரிவித்துள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பொதுவாகவே, சர்வாதிகாரிகள் ஆட்சி செய்யும் நாடுகளில் என்ன நடக்கிறது என்பது எளிதில் வெளி உலகத்துக்குத் தெரிவதில்லை.



பிரித்தானிய நகரின் பல பகுதிகளில் மீட்கப்பட்ட மனித உடல் பாகங்கள்!
[Tuesday 2024-04-30 18:00]

பிரித்தானியாவின் Salford நகரின் பல பகுதிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் தொடர்பில் பொலிசார் பெயர் உட்பட பிரதான தகவல்களை வெளியிட்டுள்ளனர். குறித்த நபர் 67 வயதான Stuart Everett என அதிகாரிகள் தரப்பு நம்புவதாக தெரிவித்துள்ளனர். கிரேட்டர் மான்செஸ்டரில் அமைந்துள்ள Kersal Dale அருகே கீழ் முதுகு, தொடை உள்ளிட்ட சில உடல் பாகங்கள் cellophane தாள்களில் சுற்றப்பட்ட நிலையில் வழிபோக்கர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.



கனடாவில் சர்வதேச மாணவர்கள் இனி 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதி!
[Tuesday 2024-04-30 18:00]

கனடாவில் கல்வி கற்க வரும் மாணவர்களை பணி செய்ய அனுமதிப்பதால், அவர்களில் சிலர் கனடாவுக்கு வரும் நோக்கமே கல்வி கற்பதற்காக அல்லாமல் பணி செய்வதற்கான என மாறிவிடுகிறது என்று கூறியுள்ளார் கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சர். கனடாவில் கல்வி கற்க வரும் மாணவர்கள், தங்கள் பணத்தேவைகளுக்காக, வார்த்தில் 20 மணி நேரம் வேலை செய்யலாம் என அனுமதியளிக்கப்பட்டிருந்தது.



பிடியாணை வழங்க சென்றபோது துப்பாக்கிச்சூடு: 3 பொலிஸார் மரணம்!
[Tuesday 2024-04-30 06:00]

அமெரிக்காவில் பிடியாணை வழங்க சென்றபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 3 பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வட கரோலினாவின் Charlotte பகுதியில் உள்ள நபர் ஒருவர், துப்பாக்கி வைத்திருந்ததற்காக பொலிஸார் பிடியாணை வழங்க சென்றனர்.



உக்ரைனுக்கு சென்ற முதல் பிரித்தானிய அரச குடும்ப நபரான டச்சஸ் ஆஃப் எடின்பர்க்!
[Tuesday 2024-04-30 06:00]

டச்சஸ் ஆஃப் எடின்பர்க் சோஃபி ஹெலன் உக்ரைனுக்கு சென்றதன் மூலம், ரஷ்ய படையெடுப்புக்கு பின் அங்கு சென்ற முதல் அரச குடும்பத்தைச் சேர்ந்த நபர் ஆனார். அரச குடும்பத்தைச் சேர்ந்த டச்சஸ் ஆஃப் எடின்பர்க் சோஃபி ஹெலன் (Sophie Helen) உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டார்.



பிரித்தானியாவில் கைதான முதியவர்: சிக்கிய 58,000 சிறுவர்களின் மோசமான புகைப்படங்கள்!
[Tuesday 2024-04-30 06:00]

பிரித்தானியாவில் சுமார் 60 ஆயிரம் சிறுவர்களின் மோசமான புகைப்படங்களை வைத்திருந்த 85 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். இங்கிலாந்தின் Surreyயில் வசித்து வந்த Mundy என்ற முதியவர், தேசிய முகமை குற்றவியல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.



புலம்பெயர்ந்தோருக்காக நினைவுச்சின்னம் எழுப்பத் திட்டமிடும் ஜேர்மனி!
[Monday 2024-04-29 18:00]

சில நாடுகள் புலம்பெயர்ந்தோரை எப்படி நாட்டை விட்டு வெளியேற்றலாம் என தீவிரமாக திட்டமிட்டுவரும் நிலையில், ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோருக்காக நினைவுச்சின்னம் எழுப்பத் திட்டமிட்டுவருகிறது ஜேர்மன் தலைநகரம். இந்த திட்டத்தை முன்வைத்துள்ளவரே ஜேர்மனி பிரிந்திருந்த காலகட்டத்தில், வேலைக்காக ஜேர்மனிக்கு வந்த முதல் தலைமுறையினரின் மகள்தான். அவரது பெயர் Sevim Aydin. பெர்லின் செனேட்டில் உறுப்பினராக உள்ள Sevim Aydin, Social Democrat கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.



கனடாவில் வேகமாக பரவி வரும் வைரஸ்!
[Monday 2024-04-29 18:00]

கனடாவில் நோரோ வைரஸ் என்னும் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடிய பொதுச் சுகாதார அலுவலகம் இது குறித்து அறிவித்துள்ளது. எதிர்பார்க்கப்பட்டதனை விடவும் அதிக வேகமாக நோய்த் தொற்று பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



ஈராக்கில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு தடை!
[Monday 2024-04-29 18:00]

ஈராக் அரசு இயற்றிய புதிய சட்டம் ஓரினச்சேர்க்கை திருமணங்களை தடை செய்கிறது. அதன்படி, ஈராக் அரசு இயற்றியுள்ள புதிய சட்டத்தின்படி, ஓரின சேர்க்கையாளர்களை திருமணம் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.


Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா