Untitled Document
May 19, 2024 [GMT]
"5 லட்சம் விவசாயிகள்.. நிர்வாண போராட்டம்.." டெல்லி அலெர்ட் !! நாளை........
[Thursday 2018-11-29 23:00]

டெல்லியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று மாலையில் இருந்து நாளை மாலை வரை மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட உள்ளது. நாம் நட்ட விதையொன்று விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது என்று தமிழக விவசாயிகள் சந்தோசமாக மார்தட்டிக் கொள்ள முடியும். தமிழக விவசாயிகள் டெல்லியில் சென்று வருடம் முழுக்க நடத்திய போராட்டம் தற்போது இந்திய விவசாயிகளின் போராட்டமாக மாறியுள்ளது.


காதலி வீட்டு நாயை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது!
[Thursday 2018-11-29 18:00]

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கரிசல்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் கார்த்திக் (வயது22). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பிளஸ்-2 மாணவியை காதலித்து உள்ளார். இதற்கு மாணவி வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த பிரச்சினையால், மாணவியின் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு அவரை திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனி வேலைக்கு அனுப்பினர். இது தொடர்பாக மாணவியின் சித்தப்பா ராமர் (35) என்பவர் கார்த்திக் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரிடம் காதல் விவகாரத்தை கூறி சத்தம் போட வலியுறுத்தி உள்ளார்.


பெற்ற குழந்தையை தாக்கி உணர்வு இழக்க செய்த தந்தை!
[Thursday 2018-11-29 18:00]

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஹவச்சா (வயது 26). இவர் ஈரோட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார். அப்போது ஈரோடு பகுதியை சேர்ந்த அமானுல்லா கான் (30) என்பவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பெண் குழந்தை பிறந்தது.


பருவநிலை மாற்றம் காரணமாக 5 ஆண்டில் 4 கோடி இந்தியர்கள் பாதிப்பு!
[Thursday 2018-11-29 18:00]

சூரிய வெப்பம் நேரடியாக பூமியை தாக்காத வகையில் பூமிக்கு மேலே ஓசோன் படலம் சூழ்ந்திருக்கிறது. இதில் விழுந்துள்ள ஓட்டைகள் காரணமாக உலகம் முழுவதும் பருவ நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் உலகில் வெப்ப நிலையும் அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவை கடுமையாக பாதிக்கும் என்று சுகாதார ஆய்வு அமைப்புகள் கூறி வருகின்றன.


ஆறு வயதில் சிறுமியாக இருந்த போது நடந்த திருமணம்:: - 12 ஆண்டுகள் கழித்து சட்டப்படி ரத்து
[Wednesday 2018-11-28 18:00]

இந்தியாவில் 6 வயதாக இருக்கும் போது சிறுமிக்கு திருமணம் நடந்த நிலையில் தற்போது 12 ஆண்டுகள் கழித்து அந்த திருமணம் சட்டப்படி ரத்து செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பித்வாஸ் கிராமத்தை சேர்ந்தவர் பிண்டுதேவி (18). இவருக்கு 6 வயதாக இருக்கும் போது கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாய திருமணம் செய்துவைக்கப்பட்டது.


புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை அளித்து நெகிழ வைத்த சிறுமி!
[Wednesday 2018-11-28 17:00]

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை அளித்து நெகிழ வைத்துள்ளார் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி சஞ்சனா. கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து உதவிகள் குவிந்து வருகிறது.

அந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கரம் கொடுத்துள்ளார் சஞ்சனா என்ற சிறுமி.


எட்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண் மருத்துவர்: - அதிர்ச்சி சம்பவம்
[Wednesday 2018-11-28 07:00]

இந்தியாவில் எட்டாவது மாடியில் இருந்து பெண் மருத்துவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் கடக்படா பகுதியை சேர்ந்தவர் பிரனவ் குல்கர்னி. இவர் மனைவி பிரஜக்டா (33). தம்பதிகள் இருவருமே மருத்துவர்கள் ஆவர். இருவரும் அங்குள்ள எட்டு மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.


ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த தமிழக காதல் ஜோடி: - சிக்கிய உருக்கமான கடிதம்
[Wednesday 2018-11-28 07:00]

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் தமிழக காதல் ஜோடி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த மோனிஷா(21) எனும் கல்லூரி மாணவியும், அதே பகுதியைச் சேர்ந்த ஹேமந்த்குமார் (23) என்பவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.


பெற்றோர் எதிர்ப்பை மீறி திருநங்கையை திருமணம் செய்த நபர்: - திருமண பதிவு செய்வதற்கு கோரிக்கை
[Wednesday 2018-11-28 07:00]

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருநங்கையை திருமணம் செய்த அருண்குமார் தங்களது திருமணத்தை தமிழ்நாடு திருமண பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். தூத்துக்குடியை சேர்ந்தவர் அருண்குமார் (22). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் ரெயில்வேயில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.


மாநில அரசின் முடிவைத் தடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை: - ஏழு பேர் விடுதலையில் அதிர்ச்சித் தகவல்
[Tuesday 2018-11-27 14:00]

சி.பி.ஐ விசாரித்த வழக்குகளில் மாநில அரசின் முடிவைத் தடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை என ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், முருகன் நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


நகை மற்றும் பணத்துக்காக கணவன் கணவன்-மனைவி அடித்து கொலை: - போலீசார் விசாரணை
[Tuesday 2018-11-27 14:00]

சென்னை ஆவடியில் இன்று காலை நடந்த கொடூர கொலை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- ஆவடி சேக்காடு அய்யப்பன் நகர் மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி விலாசினி. இருவரும் தமிழ்நாடு அரசு அச்சகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.


திருமாவளவன் - தினகரன் திடீர் சந்திப்பு!
[Tuesday 2018-11-27 14:00]

கஜா புயல் பாதித்த தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் அமைச்சர்கள் முகாமிட்டு தீவிரப்படுத்தி வருகிறார்கள். 12 நாட்கள் ஆகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத மக்கள் பலர் தங்கள் வீடுகளை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து விவசாயிகளும் தவித்து வருகின்றனர். அவர்களின் வாழ்வை புனரமைக்கும் முயற்சியில் அரசியல் கட்சியினரோடு, தன்னார்வலர்களும் கைகோர்த்து இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள்.


திருமணத்துக்கு வற்புறுத்திய காதலியை ஆற்றில் தள்ளி கொன்ற காதலன்!
[Tuesday 2018-11-27 14:00]

குமரி மாவட்டம் குழித்துறை அருகே மீனச்சல், பாட்டத்துவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜா (வயது 23). நர்சிங் படித்துள்ளார். இவர் தேங்காய் பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து நித்திரவிளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற ஸ்ரீஜா, அதன் பின்பு வீடு திரும்பவில்லை.


இன்று எனது கனவு நிறைவேறியிருக்கிறது: - விஜயசாந்தி
[Tuesday 2018-11-27 14:00]

நடிகை விஜயசாந்தி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவுக்கு சென்று வெற்றி பெற்றவர். 1980 களில் இருந்து 2005-ம் ஆண்டு வரை தென்னிந்திய படங்களில் ஆக்‌‌ஷன் கதாபாத்திரங்களிலும் நடித்து அதிரடி நாயகியாக வலம் வந்தார். தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் கால்பதித்தவர் தற்போது அதில் மும்முரமாக இயங்கி வருகிறார். /p>


விமானத்தில் பயங்கரவாதி என தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்ட இளைஞர் கைது!
[Monday 2018-11-26 16:00]

விமானத்தில் பயங்கரவாதி என தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்ட இளைஞரை பாதுகாப்பு படை கைது செய்துள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட ஜெட் விமானத்தில் பயணம் செய்த பாகுயிகாதி என்ற இளைஞர் முகத்தை மூடிக்கொண்டு புகைப்படம் எடுத்து விமானத்தில் பயங்கரவாதி என மிரட்டல் செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.


கணவனுக்கு வேலை வாங்கி தருவதாககூறி திருமணமான பெண்ணை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்ட டி.எஸ்.பி!
[Monday 2018-11-26 16:00]

தமிழகத்தில் கணவனுக்கு வேலை வாங்கி தருவதாக திருமணமான பெண்ணை டி.எஸ்.பி பாலியல்ரீதியாக பயன்படுத்திக் கொண்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் கலிகிரி பகுதியைச் சேர்ந்த தம்பதி பிரசாத்-தனலட்சுமி. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளதால், இவர்கள் வாழ்வாதாரத்தை தேடி ஹைதராபாத்திற்கு சென்றுள்ளனர்.


காதலனுடன் இரண்டாவது மனைவி ஓட்டம்: - முதல் மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து கணவன் தற்கொலை
[Monday 2018-11-26 16:00]

இந்தியாவில் காதலனுடன் இரண்டாவது மனைவி ஓட்டம் பிடித்த நிலையில் கணவன் தனது முதல் மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஹனுமந்துலு (32). இவரின் முதல் மனைவி பெயர் சந்திரகலா (28). தம்பதிக்கு மஞ்சுளா (8) என்ற மகள் உள்ளார்.


உலகிலேயே அதிகமான மனைவிகளை கொண்டு பெரிய குடும்பமாக வாழும் நபர்!
[Monday 2018-11-26 10:00]

உலகிலேயே அதிகமான மனைவிகளை கொண்டு, பெரிய குடும்பமாக வாழ்பவர் என்ற பெருமையை, ஒரு இந்தியர் பெற்றுள்ளார். வடகிழக்கு மாநிலமான மிசோரமைச் சேர்ந்த ஜியோனா சானா என்ற 70 வயதான நபர் தான், 39 மனைவிகளுடன் பெரிய குடும்பமாக வாழ்ந்து வருகிறார். விலைவாசி விண்ணை முட்டும் இந்த காலகட்டத்தில், ஒரு மனைவி, இரண்டு குழந்தைகளை வைத்து குடும்பம் நடத்துவது என்பதே, இமாலய சாதனை. ஆனால், அந்த காலத்தில் மன்னர்களும், பிரபுக்களும் ஏராளமான மனைவிகளை கொண்டிருந்தனர்.


ரஜினி பெயரை வைத்து இப்படி செய்தேனா? - பிரபல நடிகை அதிர்ச்சி
[Monday 2018-11-26 10:00]

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஜினிகாந்த் கொடுத்த நிவாரண பொருட்களை நடிகை கஸ்தூரி தான் விநியோகிப்பதாக வரும் செய்திகளை அவர் மறுத்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பினார்.


நீதித்துறையை காங்கிரஸ் கட்சியினர் மிரட்டுகின்றனர்: - பிரதமர் மோடி குற்றச்ச்சாட்டு
[Sunday 2018-11-25 17:00]

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி வசுந்தர ராஜே தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் 7ம் தேதி அங்கு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது: காங்கிரஸ் கட்சி நாளுக்கு நாள் நலிந்து வருகிறது. அவர்கள் மரியாதை என்பதையே மறந்துவிட்டனர். பின்தங்கிய சமுதாயத்தினரை காங்கிரஸ் வாக்கு வங்கியாக பயன்படுத்தி வந்தது. டாக்டர் அம்பேத்கருக்கு அக்கட்சி பாரத ரத்னா வழங்கி கவுரவிக்கவில்லை.


படேல் சிலையை விட ராமருக்கு பெரிய சிலை அமைக்கப்படும்: - உத்திரபிரதேச முதல்வர்
[Sunday 2018-11-25 17:00]

படேல் சிலையை விட ராமருக்கு பெரிய சிலை அமைக்கப்படும் என உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பாக நீண்ட காலமாக வழக்கு நடந்து வருகிறது. இதற்கிடையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என அங்குள்ள இந்து அமைப்புகள் வலுவான கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.


திருமணத்துக்காக மதம் மாறிய என்னை புது மனைவியுடன் தங்கவைத்து சித்ரவதை: - பெண் மருத்துவரின் புகார்
[Sunday 2018-11-25 17:00]

மும்பையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் தனது கணவர் தன்னை கொடுமைபடுத்துவதாக பொலிசில் புகார் அளித்துள்ளார். இருவரும் ஒரே மருத்துவமனையில் பணியாற்றி வந்தபோது காதல்வயப்பட்டு 2005 ஆம் ஆண்டு திருணம் செய்துகொண்டனர். இந்த மதத்தை சேர்ந்த இவர், தனது கணவருக்காக முஸ்லீம் மதத்திற்கு மாறியுள்ளார்.


தூக்குக்போட்டு தற்கொலை செய்து கொண்ட கள்ளக்காதல் ஜோடி!
[Sunday 2018-11-25 08:00]

தமிழகத்தில் கள்ளக்காதல் ஜோடி தூக்குக்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (45), இவர் கூலித் தொழிலாளியாக இருக்கும் நிலையில், இவருடைய மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.


காங்கிரஸ் உடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்: - துரைமுருகன் அதிரடி
[Sunday 2018-11-25 08:00]

காங்கிரஸ் உடன் திமுக கொண்டிருக்க கூடிய கூட்டணியை நாங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்குமென தெரிவித்து அரசியல் அரங்கில் புதிய அதிரடியை உண்டாக்கியுள்ளார் திமுக பொருளாளர் துரைமுருகன்.


அண்ணன் முறையுள்ள இளைஞருடன் தங்கை ஓடி போனதால் மனமுடைந்த சொந்த அண்ணன் தற்கொலை!
[Saturday 2018-11-24 18:00]

இந்தியாவில் அண்ணன் முறையுள்ள இளைஞருடன் தங்கை ஓடி போனதால் மனமுடைந்த பெண்ணின் சொந்த அண்ணன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை சேர்ந்தவர் திலீப் (22). இவரின் பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து தனது தங்கையுடன் திலீப் வசித்து வந்தார். இந்நிலையில் திலீப்பின் உறவிக்கார இளைஞர் ஒருவர் அடிக்கடி அவர் வீட்டுக்கு வருவார்.


வெளிநாட்டில் இறந்த கணவர் உடலை மீட்டுத்தருமாறு கண்ணீருடன் மனைவி மனு!
[Saturday 2018-11-24 18:00]

வெளிநாட்டில் இறந்த தனது கணவர் உடலை மீட்டுத்தருமாறு ஆட்சியர் அலுவலகத்தில் பெண் கண்ணீருடன் மனு அளித்துள்ளார். தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (45). இவருடைய மனைவி நந்தினி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மணிகண்டன் கடந்த 14 ஆண்டுகளாக அரபு நாட்டில் உள்ள மஸ்கட்டில் தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.


மலிவு விலை உணவகத்தை துவங்கி வைத்த ரோஜா: - வைரலாகும் புகைப்படத்தால் குவியும் பாராட்டு
[Saturday 2018-11-24 18:00]

பிரபல திரைப்பட நடிகர் ரோஜா மலிவு விலை உணவகத்தை துவங்கி வைத்து 4 ரூபாய்க்கு சாப்பாடு போடுகிறார். தமிழ், தெலுங்கு பட உலகில் 1990-களில் முன்னணி நாயாகியாக வலம் வந்தவர் தான் ரோஜா. சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்த இவர், கடந்த 1999-ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்தார். அதன் பின் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆந்திரப்பிரதேசத்தில் இருக்கும் நகரி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். இதைத் தொடர்ந்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரசில் மகளிர் அணி தலைவியாகவும் பொறுப்பேற்றார்.


கணவரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய மனைவி குடும்பத்தார்: - வினோத சம்பவம்
[Saturday 2018-11-24 18:00]

இந்தியாவில் வயதில் மூத்த பெண்ணை இளைஞர் மணந்த நிலையில் சண்டை காரணமாக மனைவியை லொறியால் ஏற்றி கொலை செய்துள்ளார். டெல்லியை சேர்ந்தவர் அகிலேஷ் பால் (32). லொறி ஓட்டுனராக உள்ளார். இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த விபா (38) என்ற பெண்ணை சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.

Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா