Untitled Document
May 19, 2024 [GMT]
ஆளுக்கொரு நீதி வேளைக்கொரு நியாயம் என்ற நிலையில்தான் சட்டம் அமல்படுத்தப்படுகிறது: - மு.க.ஸ்டாலின்
[Sunday 2018-09-23 17:00]

அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ` ஆளுக்கொரு நீதி- வேளைக்கொரு நியாயம் என்ற நிலையில்தான் சட்டம் அமல்படுத்தப்படுகிறது' என்று ஆளும் அதிமுக அரசை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுகள் எந்தச் சூழ்நிலையிலும் வரம்பு மீறும் வகையில் இருக்கக் கூடாது என்பதிலும்;பொது அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பெருமளவுக்கு இருக்கிறது என்பதிலும்;இரு வேறு கருத்துகளுக்கு இடமே இல்லை.


பாடசாலை மாணவிகளை ஏமாற்றி பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த இளைஞர்: - கைது செய்த பொலிசார்
[Sunday 2018-09-23 17:00]

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பாடசாலை மாணவிகளை ஏமாற்றி பாலியல் துஸ்பிரயோகம் செய்து ஏமாற்றி வந்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். கேரளா மாநிலத்தின் கொச்சி பகுதியைச் சேர்ந்தவர் பயாஸ் முபீன்(19). வேலை ஏதும் இன்றி சுற்றித்திரிந்த இவர் பேஸ்புக்கில் போலியாக ஒரு கணக்கை தொடங்கி தனது முகத்தை மாற்றி மார்பிங் செய்து அதில் பதிவிட்டுள்ளார்.


இளம் பெண்ணை கொடூரமாக தாக்கி நிர்வாண ஊர்வலம் நடத்திய கிராம மக்கள்!
[Sunday 2018-09-23 17:00]

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் போலி மது விற்பனை மேற்கொண்டதாக கூறி இளம் பெண்ணை கொடூரமாக தாக்கி கிராம மக்கள் நிர்வாண ஊர்வலம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தின் கரிம்கஞ்ச் பகுதியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. குறித்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் 19 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.


சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்க்கு 5 ஆம் திகதி வரை நீதிமன்ற காவல்!
[Sunday 2018-09-23 17:00]

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்க்கு அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர், பொலிசாரை மிரட்டும் விதமாக பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


விஜயகுமாரின் மகளுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை: -நடன இயக்குநர் ராபர்ட் பதில்
[Sunday 2018-09-23 16:00]

நடிகர் விஜயகுமாரின் மகளுக்கு, எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நடன இயக்குநர் ராபர்ட் தெரிவித்துள்ளார். சென்னை ஆலப்பாக்கத்தில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பங்களா தொடர்பாக அவருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வனிதா தற்போது நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டருடன் வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியானதால், மிகுந்த மன வேதனை அடைந்துள்ளதாக, ராபர்ட் தெரிவித்துள்ளார்.


குறிவைக்கப்படும் பெண்கள்: - மனித கடத்தலின் மையப்பகுதியாக மாறுகிறதா டெல்லி?
[Saturday 2018-09-22 18:00]

கடந்த சில ஆண்டுகளாக இந்திய தலைநகரான டெல்லி மனித கடத்தலின் மையப்பகுதியாக மாறிவருகின்றது. மனித கடத்தலில் ஈடுபட்டுள்ள கடத்தல்காரர்கள் சர்வதேச தொடர்புகளுடன் செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2015 முதல் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட மனித கடத்தல் தொடர்பான சுமார் 535 மீட்பு நடவடிக்கைகளில் பல அப்பாவி பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.


கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த நபரை கைது செய்த பொலிசார்!
[Saturday 2018-09-22 17:00]

சென்னையில் கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். பொன்னேரியை சேர்ந்தவர் சவுந்தர். இவரது நண்பர் சின்னதுரை. இருவரும் கடந்தாண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில், காட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் மோகனபிரியா (23) என்ற பெண்ணை அங்கு சந்தித்தனர்.


மனைவி மற்றும் குழந்தைகளை தீ வைத்து கொளுத்திவிட்டு தற்கொலை என நாடகமாடிய கணவன் கைது!
[Saturday 2018-09-22 17:00]

தமிழ்நாட்டின் சேலத்தில் மதுபோதையில் மனைவி மற்றும் குழந்தைகளை தீவைத்து கொளுத்திவிட்டு தற்கொலை என நாடகமாடிய கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். கார்த்திக் என்பவருக்கும், பூமதி என்பவருக்கும் திருமணமாகி நிலா மற்றும் பூவரசன் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.


சட்டையில்லாமல் திருட வந்த திருடன்: - சாமர்த்தியாக மாட்டி கொடுத்த நாய்
[Saturday 2018-09-22 06:00]

சென்னையில் உள்ள வீட்டில் மேல் சட்டையில்லாமல் அரைநிர்வாணமாக திருட வந்த திருடனை நாய் ஒன்று சாமர்த்தியாக மாட்டி விட்டுள்ளது. வேளச்சேரியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரின் வீட்டில் கீழ் தளம், மற்றும் மேல் தளத்தில் நான்கு குடியிருப்புகள் உள்ளன. இரவு நேரத்தில் மேல்சட்டை அணியாத வாலிபர், சுவர் ஏறி குதித்து வீட்டின் உள்ளே சென்று கொள்ளையடிக்க முயன்றார்.


உணவு சுவையாக இல்லை என கணவன் திட்டியதால் மனமுடைந்த மனைவி தற்கொலை!
[Saturday 2018-09-22 06:00]

பெங்களூரில் உணவு சுவையாக இல்லை என கணவன் திட்டியதால், மனமுடைந்த மனைவி தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் ரெய்ச்சூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் ஜெயலட்சுமியை (41) திருமணம் செய்துகொண்ட பின்னர் பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார்.


மகன் வயது இளைஞருடன் கள்ளக்காதல்: - தடையாக இருந்த கணவர் கொலை
[Saturday 2018-09-22 06:00]

இந்தியாவின் பெங்களூரில் மகன் வயது இளைஞருடன் கள்ளக்காதலில் இருந்த பெண், தடையாக இருந்த கணவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தோஷ் ஷெட்டி (56) என்பவர் தனது மனைவி அன்னபூர்னா (46) மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அன்னபூர்னாவுக்கு பிரகாஷ் (26) என்ற மாணவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.


குழந்தையை கொன்று தற்கொலை செய்து கொண்ட இளம் தாய்!
[Saturday 2018-09-22 06:00]

இந்தியாவின் தெலுங்கானாவில் பெற்ற குழந்தையுடன் சேர்ந்து தாயும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரீம்நகரை சேர்ந்தவர் புர்லா கணேஷ். இவர் மனைவி ரம்யா. தம்பதிக்கு மனுஸ்ரீ (4) என்ற மகள் உள்ளார். திருமணத்தின் போது கணேஷுக்கு ரம்யா பெற்றோர் மூன்றரை லட்சம் வரதட்சணை கொடுத்தனர்.


தந்தை விஜயகுமார் அச்சுறுத்துவதாக சென்னை காவல் ஆணையரிடம் மகள் வனிதா புகார் !
[Friday 2018-09-21 17:00]

சென்னை காவல் ஆணையரிடம் தனது தந்தையான நடிகர் விஜயகுமார் தம்மை அச்சுறுத்துவதாக அவர் மகள் வனிதா புகாரளித்துள்ளார். மதுரவாயிலில் அமைந்துள்ள நடிகர் விஜயகுமார் வீட்டில் தங்கியிருந்த வனிதா அங்கிருந்து வெளியேற மறுப்பதாக விஜயகுமார் பொலிசில் புகார் அளித்தார். இதையடுத்து அங்கிருந்து வனிதா வெளியேற்றப்பட்டார்.


பிரணய் கொலைக்கு காரணமான 7 பேரையும் தூக்கில் போட வேண்டும்: - கௌசல்யாவிடம் கூறிய அம்ருதா
[Friday 2018-09-21 17:00]

தெலுங்கானா மாநிலத்தில் சாதி மறுப்பு திருமணத்தால் கணவரை இழந்த அம்ருதாவை, சாதிய அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் கௌசல்யா சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், சாதி மறுப்பு திருமணம் செய்ததால் பிரணய் என்ற இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


அமெரிக்க தேர்தலில் டிரம்புக்காக பணியாற்றிவருடன் கூட்டணி அமைத்த கமல்!
[Friday 2018-09-21 17:00]

எதிர்வரும் மக்களவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கான தேர்தல் வியூகங்களை டிரம்புக்காக பணியாற்றிவர் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கான பிரசார வியூகங்களை வகுத்தவர்களில் முக்கியமானவர் Avinash Iragavarapu.


சொந்த மகளை கர்ப்பமாக்கிய தந்தை பொலிசாரால் கைது!
[Friday 2018-09-21 09:00]

தமிழ்நாட்டில் பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் கண்டன்விளை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.


கொள்ளையிட்ட பணத்தை பங்கிடுவதில் வாக்குவாதம்: - உயிர் நண்பனை எரித்துக் கொன்ற இளைஞர்
[Friday 2018-09-21 09:00]

தமிழகத்தில் 5 மாதங்களுக்கு முன்னர் இளைஞரை எரித்துக் கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியை பொலிசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் திகதி மொத்தமாக எரிந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.


திருமணமான நபரை மணந்த மாணவிக்கு நேர்ந்த விபரீத சம்பவம்:
[Friday 2018-09-21 09:00]

இந்தியாவின் தெலுங்கானாவில் ஏற்கனவே திருமணமான நபரை மாணவி மணந்த நிலையில் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீலட்சுமி. கல்லூரி மாணவியான இவர் தினமும் கல்லூரிக்கு ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுனர் திருமால் ராவுடன் ஸ்ரீலட்சுமிக்கு நட்பு ஏற்பட்ட நிலையில் காதலாக மாறியுள்ளது.


6 பிரிவுகளில் எம்.எல்.ஏ கருணாஸ் மீது வழக்குப்பதிவு!
[Thursday 2018-09-20 19:00]

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 16ம் தேதி சென்னையில் நடந்த கூட்டத்தில் முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக எம்.எல்.ஏ கருணாஸ் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட காதல் ஜோடி: - கைது செய்த பொலிஸ்!
[Thursday 2018-09-20 18:00]

டெல்லியை சேர்ந்த ஒரு காதல் ஜோடியினர் சினிமாவையே மிஞ்சிய அளவிற்கு, மிகவும் தெளிவாக பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியின் Govindpuri பகுதியில் நீண்ட நாட்களாகவே பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்த பொலிஸார், விக்கி (24), சோனியா (20) என்ற ஜோடிகளை கைது செய்தனர். போதை பொருளுக்கு அடிமையாகியிருந்த விக்கி, 8-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, திருட்டு வேளைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளான்.


7 பேரின் விடுதலையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மட்டும் எதிர்ப்பது ஏன்? - அற்புதம்மாள் கண்ணீர்
[Thursday 2018-09-20 18:00]

பேரறிவாளனின் வாழ்க்கையே அழிந்து விட்டதாகக் கூறி அவரது தாயார் அற்புதம்மாள் கண்ணீர் வடித்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், உட்பட 7 தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு முடிவெடுத்து ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக அரசு 7 பேரை விடுவிக்க தீர்மானம் இயக்கி ஆளுநருக்கு அதை அனுப்பியது.


ஒன்றரை வயது பிஞ்சு குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்து நாடமாடிய தாய்!
[Thursday 2018-09-20 18:00]

இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூரில் பெண் ஒருவர் தமது ஒன்றரை வயது பிஞ்சு குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு கணவரிடம் நாடகமாடியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. திருச்சூரின் செவ்வூர் பகுதியில் கிணற்றில் இருந்து ஒன்றரை வயது பிஞ்சு குழந்தையின் சடலம் மீட்க்கப்பட்டது.


அதிர்வலையை ஏற்படுத்திய ஆணவக்கொலை சம்பவம்: - கமல் பட பாணியில் செயல்பட்டதாக அம்ருதாவின் தந்தை வாக்குமூலம்
[Thursday 2018-09-20 07:00]

தெலுங்கானாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள 24 வயதான பிரனய் குமார் ஆணவக்கொலை வழக்கில் குற்றவாளி மாருதிராவ் பாபசநாசம் பட பாணியில் கொலை மறைக்க முயன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் மிரியாலகுடாவைச் சேர்ந்த அமிர்தவர்ஷிணி என்பவர் தாழ்ந்த சாதியை சேர்ந்த பிரனய் குமார் என்பரை கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்தார்.


வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமான 5 மாதத்தில் உயிரிழந்த 19 வயது இளம்பெண்!
[Thursday 2018-09-20 07:00]

ஒடிசா மாநிலத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமான 5 மாதத்தில் 19 வயது இளம்பெண் உயிரிழந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. ஒடிசா மாநிலம் Balasore அருகே 19 வயதான ஊர்மிளா என்ற இளம்பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட ஊர்மிளா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


மகளின் கணவரை கொல்ல சதித்திட்டம் தீட்டிய தந்தை: -வெளியான திடுக்கிடும் தகவல்கள்
[Wednesday 2018-09-19 17:00]

தெலுங்கானாவில் அம்ருதாவின் கணவர் பிரணய் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அம்ருதா திருமணமான புதிதில் தனது தாயுடன் தொடர்பில் இல்லை. ஆனால், கர்ப்பமான பின்னர் அடிக்கடி தாயிடம் தொலைபேசியில் பேசி வந்துள்ளார். அவரது தாயும் தனது மகளுக்கு அறிவுரைகளை வழங்கி வந்துள்ளார். இந்நிலையில், அம்ருதாவுடன் தொலைபேசியில் பேசி வருவதை அவரது தாய் தன் கணவர் மாருதி ராவிடம் யதார்த்தமாக கூறி வந்துள்ளார்.


17 ஆண்டாக வளர்த்த நீண்ட ஜடை முடியை மூடநம்பிக்கையால் வெட்டிய பெண்!
[Wednesday 2018-09-19 17:00]

புனேயை சேர்ந்தவர் கலாவதி பர்தேஷி 50 வயதான அவர் 17 ஆண்டாக கூந்தலை வெட்டாமல் வளர்த்து வந்தார். இதனால் அவரது கூந்தல் நன்றாக வளர்ந்து நீளமாக ஒன்றோடு ஒன்றாக பின்னி ஜடையாக இருந்தது. அவர் கூந்தல் ஜடை முடியை வெட்டுவது நல்லதல்ல என்றும் ஜடையை வெட்டினால் தெய்வ குற்றம் ஏற்படும் என்றும் பயந்து வெட்டாமல் வளர்த்து வந்தார்.


ஓமன் தாத்தாவிடம் தலாக் பெற்ற இளம்பெண்ணுக்கு நீதி கிடைக்குமா?
[Wednesday 2018-09-19 17:00]

அரபு நாடுகளுக்கு வேலை செய்ய செல்லும் சிலர் அங்குள்ள பெரும் பணக்காரர்களுக்கு புரோக்கர்களாக மாறி விடுகின்றனர். உத்தரப்பிரதேசம், கேரளா, ஐதராபாத் போன்ற பகுதிகளில் உள்ள ஏழை வீட்டு முஸ்லிம் இளம்பெண்களுக்கு வலை விரிக்கும் இந்த புரோக்கர்கள் அந்த பெண்களின் பெற்றோர், உறவினர்களுக்கு பணத்தை அள்ளிவீசி, பால்மனம் மாறாத சிறுமிகளை சந்தைப்பொருள் ஆக்கி விடுகின்றனர்.


காதல் கணவரை கொலை செய்த தந்தையை தூக்கில் போட வேண்டும்: - கர்ப்பிணி அம்ருதா ஆவேசம் -
[Wednesday 2018-09-19 08:00]

தெலுங்கானாவில் காதல் கணவரை கொலை செய்த தந்தை உள்ளிட்ட அனைவரையும் தூக்கிலிடவேண்டும் என்று பாதிக்கப்பட்ட இளம்பெண் அம்ருதா ஆவேசமாக கூறியுள்ளார். தாழ்ந்த சாதி நபரான பிரனய் என்பவரை அம்ருதா என்ற பெண்மணி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டார்.

 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா