|
|
இந்திராகாந்தி விமானநிலையத்தை பதறவைத்த ஜெட் ஏர்வேஸ்: - பெரும் விபத்து தவிர்ப்பு
[Monday 2018-04-09 07:00]
|
டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானத்தால் ஏற்பட இருந்த இரு பெரும் விபத்துகள் தவிர்க்கப்பட்டது. டெல்லி இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையம் வழக்கமான பரபரப்புடன் நேற்றிரவு இயங்கிக்கொண்டிருந்தது. விமான ஓடுதளம் அருகே கேட்டரிங் வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், துபாயில் இருந்து 133 பயணிகளுடன் ஜெட் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கிக்கொண்டிருந்தது. அப்போது, விமானத்தை ஓடுதளத்தில் நிறுத்தும்போது அதன் இறக்கை அருகில் இருந்த கேட்டரிங் வாகனத்தின் மோதியது. இதில், கேட்டரிங் வாகனம் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் உயிர்தப்பினர்.
|
|
|
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பாதயாத்திரையாக வந்த காளை: - பாதுகாவலர்கள் விரட்டியபோதும் அசரவில்லை
[Monday 2018-04-09 07:00]
|
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பாதயாத்திரையாக வந்த காளை மாட்டை பார்த்து பக்தர்கள் ஆச்சரியப்பட்டனர். தேவஸ்தான பாதுகாவலர்கள் அந்த காளையை விரட்டியபோதும் அது அசராமல் மலைக்கு நடந்து சென்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பல்லவர்கள், சோழர்கள், கிருஷ்ண தேவராயர், ஆங்கிலேயர்கள் வரை பல மாமன்னர்கள் பாத யாத்திரையாக வந்து சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். இவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றியதற்கு விலைமதிப்புமிக்க வைர, வைடூரியம் அடங்கிய ஆபரணங்களை காணிக்கையாக வழங்கி உள்ளனர்.
|
|
|
நடிகர் சங்கம் மௌனப் போராட்டம் நிறைவு: - சத்யராஜ் ஆவேசம்
[Sunday 2018-04-08 14:00]
|
விவசாயமும் விவசாயிகளும் நன்றாக இருக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இந்த நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த தீர்மானத்தின் நகல் ஆளுநரிடம் வழங்கப்படும். போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி
|
|
|
விளையாட்டு முக்கியமா? - தோனி, ரோஹித் சர்மா உருவ பொம்மைகளை எரித்த அதிமுகவினர்
[Sunday 2018-04-08 14:00]
|
விவசாயியைவிட விளையாட்டு முக்கியமா ?
|
|
|
சிஎஸ்கே வீரர்களுக்கு ரசிகர்களுக்கு ரஜினி அட்வைஸ்!
[Sunday 2018-04-08 14:00]
|
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று அறவழி போராட்டம் நடத்தி வருகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர்,
|
|
|
மான் குட்டிகளுக்கு பாலூட்டும் பிஷ்னோய் இனப் பெண்கள்: - சல்மான்கானின் நிம்மதியை கெடுத்த பின்னணி
[Sunday 2018-04-08 09:00]
|
மானை வேட்டையாடிய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது ஜோத்பூர் நீதிமன்றம். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்த வழக்கை இத்தனை காலம் நடத்தி, அதில் வெற்றியும் கண்டிருப்பவர்கள் பிஷ்னோய் எனும் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள்தான். பிஷ்னோய் சமூகத்தினர் மரங்களை பாதுகாக்க வேண்டும், எல்லா உயிர்களிடமும் பரிவு காட்ட வேண்டும் என்ற வாழ்க்கை தத்துவத்தை கொண்டவர்கள். ராஜஸ்தானில் தார் பாலைவனப் பகுதியில் இவர்கள் வாழ்கின்றனர்.
|
|
|
உயிருள்ள மீனை விழுங்கிய 11 மாத குழந்தை: - போராடி காப்பாற்றிய டாக்டர்கள்
[Sunday 2018-04-08 09:00]
|
பெங்களூரில் உள்ள ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்த ஒருவரின் 11 மாத ஆண் குழந்தை வீட்டில் தவழ்ந்து விளையாடியபோது மீன் தொட்டியில் நீந்தி கொண்டிருந்த சிறிய மீனை எடுத்து வாயில் விழுங்கியது. மீன் குழந்தையின் தொண்டையில் சிக்கிக் கொண்டது.இதனால் குழந்தையின் வாயில் இருந்து ரத்தம் வழிந்தது. மூச்சு விடவும் சிரமப்பட்டது. உடனே குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
|
|
|
கொச்சியில் கொடிகட்டி பறக்கும் ஒன்லைன் விபசாரம்!
[Sunday 2018-04-08 09:00]
|
சென்னை, மும்பை, பெங்களூரை ஒப்பிடும் போது கொச்சி மிகச்சிறிய நகரம் தான். ஆனால் இந்த நகரங்களை விட கொச்சியில் தான் போதைப் பொருள் கடத்தல், விபசாரம், கூலிப்படையினரின் அட்டகாசங்கள் உட்பட குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுவதாக கணக்குகள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலேயே போதைப் பொருள் கடத்தலில் கொச்சி 2வது இடத்தை பிடித்துள்ளது. பள்ளி மாணவர்களில் தொடங்கி ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு வரும் செல்வந்தர்கள் வரை போதைப் பொருளை சர்வ சாதாரணமாக பயன்படுத்துகின்றனர்.
|
|
|
தமிழ்நாடும் எங்களைப் போலவே ஊனமாகிவிடும்: - கண்கலங்க வைத்த மாற்றுத் திறனாளிகள்
[Saturday 2018-04-07 17:00]
|
''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் கர்நாடக அரசு கண்டிப்பாக காவிரிக்கு தண்ணீர் தராது. அப்படி காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றால் டெல்டா மாவட்டம் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழ்நாடும் எங்களைப் போலவே ஊனமாகிவிடும். அதனால் காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும்'' என மத்திய அரசை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கண் கலங்கப் பேசி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
|
|
|
மான் வேட்டையாடிய வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கானுக்கு ஜாமீன்!
[Saturday 2018-04-07 17:00]
|
மான் வேட்டையாடிய வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. சல்மான் கான் மனுவை ஏற்று ஜோத்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. நடிகர், சல்மான் கான், 52. ராஜஸ்தான் மாநிலத்தில், 1998ல், இரண்டு அரிய வகை மான்களை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
|
|
|
செல்போன்களை விற்று ஆடம்பரமாக செலவழிப்பேன்: - போலீஸை பதறவைத்த ரவுடியின் வாக்குமூலம்
[Saturday 2018-04-07 17:00]
|
சென்னையில் காவலாளியின் கையை வெட்டிவிட்டு செல்போனைத் திருடிவிட்டு தப்பியோடிய திருடர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஒரு திருடன் கொடுத்த வாக்குமூலம் காவல்துறையினரை அதிரவைத்துள்ளது.
|
|
|
காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழர்!
[Saturday 2018-04-07 08:00]
|
21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஆடவருக்கான பளுதூக்குதல் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கம் தமிழகத்தைச்சேர்ந்தவர் ஆவார். வேலுர் மாவட்டம் சத்துவாச்சாரியைச்சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் கடந்த முறை ஸ்காட்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
|
|
|
பஸ்சில் நகை திருடிய பெண்களை விரட்டிபிடித்த பெண் கண்டக்டர்!
[Saturday 2018-04-07 08:00]
|
கேரளாவில் பஸ்சில் பெண் பயணியின் செயினை பறித்துக் கொண்டு ஓடிய 2 தமிழக பெண்களை பெண் கண்டக்டர் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கோலத்து என்ற இடத்துக்கு நேற்று முன்தினம் மாலை கேரள அரசு பஸ் புறப்பட்டு சென்றது. அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். பஸ்சில் கண்டக்டராக சுஜா என்பவர் பணியாற்றினார். கூட்ட நெரிசலில் சரஸ்வதி என்ற பயணியின் மூன்றரை பவுன் செயினை யாரோ திருடினர். இதை அறிந்த அவர் கூச்சலிட்டார்.
|
|
|
விஷம் கலந்த மதுவை திருடி குடித்த கூலித் தொழிலாளி பலி!
[Saturday 2018-04-07 08:00]
|
துவரங்குறிச்சி அருகே தோட்டத்தில் புதைத்து வைத்த விஷம் கலந்த மதுவை திருடி குடித்த கூலித் தொழிலாளி பலியானார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள கோட்டப்பட்டியை சேர்ந்தவர் தீபன் (28). இவர் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை விற்பதுடன், அவ்வாறு விற்ற மதுபாட்டில்கள் தவிர மீதமுள்ள மதுபாட்டில்களை துவரங்குறிச்சி அருகே எல்லைக் காட்டுப்பட்டியில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் குழி தோண்டி புதைத்து வைப்பது வழக்கம். இப்படி புதைத்து வைத்த மதுபாட்டில்கள் கடந்த ஒரு வார காலமாக அடிக்கடி திருட்டு போயுள்ளது.
|
|
|
பள்ளிக்குள் மது போதையில் மயங்கி விழுந்த ஆசிரியர்!
[Saturday 2018-04-07 08:00]
|
திருப்புவனம் அருகே அரசு பள்ளியில் பணியில் இருந்த ஆசிரியர் போதையில்
|
|
|
நகைக்காக என் காதல் மனைவியை இழந்துவிட்டேன்: - கண்ணீர்விட்ட பிரியாவின் கணவர்
[Friday 2018-04-06 18:00]
|
வடபழனியில் கொலை செய்யப்பட்ட பிரியாவின் கணவர் பாலகணேஷ் என்ற பிரபு திடுக்கிடும் தகவலை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். அப்போது, நகைக்காக என் காதல் மனைவியை இழந்துவிட்டேனே என்று மருத்துவமனையில் கதறியழுதுள்ளார்.
சென்னை வடபழனி, தெற்கு சிவன்கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் வசித்து வருபவர் பாலகணேஷ் என்ற பிரபு. இவர் வடபழனியில் உள்ள சிவன் கோயிலில் தற்காலிக அர்ச்சகராகப் பணியாற்றுகிறார். இவரது சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம், புள்ளலூர். இவர், வேலூர் மாவட்டம் நெமிலியைச் சேர்ந்த பிரியா என்ற ஞானபிரியாவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குக்கு குழந்தை இல்லை. அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர்.
|
|
|
தூங்க முடியாமல் என் மகன் தவித்தான்: - போலீஸாருடன் போராடிய பிரகாஷின் தாய் சங்கீதா கண்ணீர் பேட்டி
[Friday 2018-04-06 16:00]
|
'இரவில் தூங்க முடியாமல் என் மகன் பிரகாஷ் தவித்தான்' என்று அவரது தாய் சங்கீதா கண்ணீர்மல்க நம்மிடம் தெரிவித்தார்.
தி.நகரில் போக்குவரத்து போலீஸாருடன் மல்லுக்கட்டிய பிரகாஷ், நேற்று மாலை ஜாமீனில் வெளியில் வந்தார். வீட்டுக்குச் சென்ற அவரை கட்டித்தழுவி கன்னங்களில் முத்தங்களைப் பதித்தார் அவரது அம்மா சங்கீதா. மகனைப் பார்த்த மகிழ்ச்சியில் இருந்த சங்கீதா, நம்மிடம் பேசினார்.
|
|
|
ஐ.பி.எல் போட்டிகளுக்கு தமிழகத்தில் வலுக்கும் எதிர்ப்பு!
[Friday 2018-04-06 16:00]
|
காவிரி மேலாண்மை வாரியத்துக்காகத் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்தும் வரும் நிலையில், 'ஐபிஎல் போட்டிகள் நடைபெறக் கூடாது' என்ற குரல்களும் ஆங்காங்கே கேட்கத் தொடங்கிவிட்டது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் நாளை தொடங்குகின்றன. இரண்டு வருடங்களுக்குப் பிறகு, சென்னை அணி இந்த ஐபிஎல் போட்டியில் பங்கேற்க இருப்பதால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். நாளை துவங்க உள்ள போட்டிகளைக் காண, சென்ற வாரத்திலிருந்தே ரசிகர்கள் ஆயத்தமாகிவிட்டனர்.
|
|
|
இறந்த தாயின் உடலைப் பதப்படுத்திய மகன்: - பென்சனுக்காக நடந்த கொடூரம்
[Friday 2018-04-06 16:00]
|
ஓய்வூதியம் பெறுவதற்காக இறந்த தாயின் உடலை சுமார் இரண்டு ஆண்டுகளாகப் பதப்படுத்தி கைரேகை எடுத்து வந்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.கொல்கத்தாவில் வசித்து வந்தவர் சுபாபிரதா மஜூந்தர். இவருக்கு வயது 46. லெதர் டெக்னாலஜியில் மெரிட்டில் தேர்ச்சி பெற்ற இவர் தன் படிப்பைத் தாயின் உடலைப் பதப்படுத்துவதற்காகப் பயன்படுத்தியிருக்கிறார். இந்தச் சம்பவம் கொல்கத்தாவையே அதிரவைத்துள்ளது. இது குறித்து கொல்கத்தா போலீஸ் தரப்பில் கூறப்பட்ட விவரங்கள் பின்வருமாறு...
|
|
|
ஆட்டுக்குட்டியை காப்பாற்ற புலியோடு போராடிய இளம்பெண்!
[Thursday 2018-04-05 13:00]
|
மகாராஷ்டிரத்தில், ஆசை ஆசையாக வளர்த்த ஆட்டுக்குட்டியை அடித்துச் சாப்பிட வந்த புலியை, இளம் பெண் ஒருவர் கம்பால் அடித்து விரட்டினார். பண்டாரா மாவட்டத்தில், சகோலி அருகேயுள்ள உஸ்கான் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண், ரூபாலி மெஸ்ராம். இவர், தன் வீட்டில் ஆட்டுக்குட்டி ஒன்றைப் பாசமாக வளர்த்து வந்தார். ஆட்டுக்குட்டியை எப்போதும் வீட்டு வாசலில் கட்டிவைப்பது வழக்கம். வீட்டருகில் வந்த புலி ஒன்று, ஆட்டுக்குட்டியை அடித்துச் சாப்பிட முயன்றது. ஆட்டுக்குட்டி அலறும் சத்தம் கேட்டு, வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த ரூபாலிக்கு அதிர்ச்சி.
|
|
|
மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான்கான் குற்றவாளி: - அதிரடித் தீர்ப்பு
[Thursday 2018-04-05 13:00]
|
மான் வேட்டையாடிய வழக்கில், நடிகர் சல்மான்கானை குற்றவாளியாக அறிவித்தது, ஜோத்பூர் நீதிமன்றம்.கடந்த 1998-ம் ஆண்டு, ராஜஸ்தானில் நடைபெற்ற சினிமா படப்பிடிப்பின்போது, பாகாவாத் வனப் பகுதியில், சிங்காரா, பிளாக் பக் என்ற அறிய வகை மான்களை நடிகர் சல்மான் கான் வேட்டையாடியதாகவும், அவர் வேட்டையாடும்போது நடிகர் சாயிஃப் அலிகான் நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் உடனிருந்ததாகவும் இவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இவர்கள் 5 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
|
|
|
தமிழகம் அமைதியான முறையில் ஒத்துழைக்க மறுக்கும்: - கமல்ஹாசன்
[Thursday 2018-04-05 07:00]
|
காவிரியில் நமக்கான உரிமையை அரசியல்வாதிகள் குளறுபடி செய்து தட்டிபறிக்கின்றனர் என்று திருச்சி பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேச்சினார். மத்திய அரசு செய்வது தவறு, இதற்கு மேல் பேசுவது அவமரியாதை, அதை நாங்கள் செய்ய மாட்டோம் என்று கமல் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆக வேண்டும், எத்தனை கலவரம் தூண்டினாலும் திசை திரும்ப மாட்டோம் என்றும் ஸ்கீம் என்பதை என்னவென்று கேட்டு காலதாமதம் செய்வதை ஏற்க முடியாது என்றும் கமல் கூறியுள்ளார்.
|
|
|
எதற்காக இந்தியாவில் தமிழ்நாடு இருக்க வேண்டும்: - ஆ.ராசா கேள்வி
[Thursday 2018-04-05 07:00]
|
பொன்னமராவதியில், ஒன்றிய நகர தி.மு.க சார்பில் இளைஞர் எழுச்சி நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள கலைஞர் திடலில், தெற்கு ஒன்றிய நகர தி.மு.க சார்பில் இளைஞர் எழுச்சி நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (04.04.2018) இரவு நடைபெற்றது.
|
|
|
கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் பாய்ந்த லாரி: -பரிதாபமாக பலியான பெண்!
[Thursday 2018-04-05 07:00]
|
கோவை சுங்கம் பகுதியில் ஜல்லியை ஏற்றி சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டினுள் புகுந்ததால் வீட்டில் தூங்கிகொண்டிருந்த பெண் பரிதாபமாக பலியானார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் மரியதாஸ் 40-வயதான அவர் அந்தப் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். அவருடைய மனைவி விக்டோரியாவுக்கு வயது 30. அவர், கூலி வேலைக்குச் செல்கிறார். இருவருக்கும் குழந்தைகள் கிடையாது.
|
|
|
வினையான விளையாட்டு: - தோழிகள் கண்முன்பே பறிபோன சிறுமியின் உயிர்
[Wednesday 2018-04-04 18:00]
|
ஆற்றில் குளித்து விளையாடிக்கொண்டிருக்கும்போது தோழி இறந்ததுகூட தெரியாமல் இருந்த சகதோழிகள் விளையாடிக்கொண்டிருந்தனர். இந்தச் சோக சம்பவம் ஜெயங்கொண்டத்தில் அரங்கேறியுள்ளது.அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உத்திரக்குடி கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பழனிவேல்-ராணி தம்பதியின் மகள் கலையரசி. அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால் தோழிகளுடன் அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றுள்ளார்.
|
|
|
சான்றிதழை பெறுவதற்காக பல மாதங்களாகக் கணவனை சுமந்துசென்ற மனைவி!
[Wednesday 2018-04-04 17:00]
|
மாற்றுத்திறனாளி சான்றிதழை பெறுவதற்காகக் கால்களை இழந்த தனது கணவனை மனைவி பல மாதங்களாக சுமந்துசென்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா அருகே உள்ள கிதாவிஹார் பகுதியைச் சேர்ந்தவர் பிம்லாதேவி. இவரது கணவர் பாதன் சிங் நரம்பு சம்பந்தமான நோயால் அவதிப்பட்டுவந்தார். இதனால் அவரது வலது கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுவிட்டது. பிம்லாதேவி ஏழ்மையில் வாடியதால் அவரது கணவருக்கு தள்ளுவண்டி வாங்க முடியவில்லை.
|
|
|
ஆதரவற்ற மூதாட்டிக்கு உணவு ஊட்டிவிட்ட போக்குவரத்து காவலர்: - நெகிழ்ச்சி சம்பவம்
[Wednesday 2018-04-04 17:00]
|
ஆதரவற்ற நிலையில் சாலையோரம் இருந்த மூதாட்டிக்கு தன் கையால் உணவு ஊட்டிவிட்ட ஐதராபாத் போக்குவரத்து காவலரின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். தெலங்கானா மாநிலம் குகட்பள்ளி காவல்நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வருபவர் கோபால்.
|
|
|
சிறுவனை கவ்வி இழுக்கும் வெறிநாய்: - காப்பாற்றிய துணிச்சல் பெண்
[Wednesday 2018-04-04 08:00]
|
வீட்டினுள் மாடி படிக்கட்டிலிருந்து குதித்து தப்ப முயலும் சிறுவனை மடக்கி வெறிநாய் ஒன்று கவ்வி இழுக்கும் நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலசரக்கு கடை நடத்தி வரும் டெல்லிவாசி ஒருவரின் வீட்டு நாய், கழுத்து பட்டையை அறுத்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடியது. அதனை சிலர் கல்லால் தாக்கியதால் கோபமடைந்த அந்தநாய், தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்களை துரத்தி தாக்க தொடங்கியது. இதில் பயந்துபோன சிறுவர்கள் வேகமாக ஓடிச்சென்று வீட்டுக்குள் புகுந்து தற்காத்து கொண்டனர். ஆனால், அவர்களில் ஒரு சிறுவன் அந்த நாயிடம் சிக்கிக்கொண்டான்.
|
|
|
|