Untitled Document
May 4, 2024 [GMT]
பிரசவ நாளன்று பாம்பு கடித்து உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்!
[Monday 2018-03-26 08:00]

தஞ்சை மாவட்டம், இனாம்கிளியூரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் தனலட்சுமி பிரசவ நாளன்று பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வலங்கைமான் அருகே உள்ள இனாம்கிளியூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரின் மனைவி தனலட்சுமி. கர்ப்பிணிப் பெண்ணான இவர், பிரசவத்துக்காக மருத்துவமனைக்குக் கிளம்பிக்கொண்டிருந்த தருணத்தில் வீட்டின் பின்புறம் உள்ள புதர் ஒன்றில் இருந்து வந்த நல்லபாம்பு கடித்ததால் தனலட்சுமி வலி தாங்காமல் அலறியிருக்கிறார்.


சொந்த மகளை கொடூரமாக கொன்ற தந்தை: - அதிர்ச்சி காரணம்
[Monday 2018-03-26 08:00]

இந்தியாவின் கேரள மாநிலத்தில், அடுத்த நாள் திருமணம் என மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த இளம்பெண்ணை தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொயிலாண்டியை சேர்ந்தவர் பிரிஜேஷ். ராணுவ வீரரான் இவர் உத்தர பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் பணியாற்றி வருகிறார்.மலப்புறம் அருகிலுள்ள பூவதி கண்டியை சேர்ந்த ராஜன் என்பவரின் மகள் ஆதிரா. மஞ்சரி பகுதியில் உள்ள மெடிக்கல் கல்லூரியில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.


பாக்நீரிணையை 8.25 மணி நேரத்தில் நீந்திக் கடந்த போலீஸ்: - புதிய சாதனை
[Sunday 2018-03-25 17:00]

தலைமன்னார் - தனுஷ்கோடி இடையேயான பாக்நீரிணை கடல் பகுதியை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காவலர் ஒருவர் 8.25 மணி நேரத்தில் நீந்தி கடந்து புதிய சாதனை படைத்தார்.வெளிநாடுகளில் உள்ள சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய் போன்றவற்றை நீந்தி கடப்பதை போல் இந்தியா - இலங்கை இடையேயான பாக்நீரிணை பகுதியையும் நீந்திக் கடந்து சாதனைச் செய்யும் முயற்சிகளில் நீச்சல் வீரர்கள் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர்.


துபாயில் இறந்த கணவன்: - வறுமையால் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு
[Sunday 2018-03-25 17:00]

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆலமுத்து என்பவர் துபாயில் பணியாற்றி வந்துள்ளார். இவரது வருமானத்தை நம்பியே, மனைவி மற்றும் இரு குழந்தைகள் இருந்துள்ளனர். கணவர் அனுப்பும் பணத்தை வைத்து, தமிழரசி தனது இரண்டு குழந்தைகளையும் படிக்க வைத்துள்ளார் இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஆலமுத்து இறந்துவிட்டார். இவர் அங்கு சேமித்து வைத்திருந்த பணத்தை வைத்து இந்தியா கொண்டுவரப்பட்டார்.


விருதை ஏற்க மறுத்த பிரபல பெண் பொலிஸ் அதிகாரி!
[Sunday 2018-03-25 17:00]

நேர்மையான அதிகாரிகளை கவுரவிக்கும் விதமாக வழங்கப்பட்ட சிறப்பு விருதை பிரபல பெண் பொலிஸ் அதிகாரி ரூபா ஏற்க மறுத்துள்ளார்.சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, சிறைக்குள் பல நவீன வசதிகளை பெறுவதற்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கியுள்ளார் என கூறி இந்திய அரசியலில் புயலை கிளப்பியவர் தான் ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா.


தமிழர்களுக்கு காவிரி நதிநீர் உயிர் பா.ஜ.க-விற்கு அது அரசியல்: - கொந்தளிக்கும் சீமான்!
[Sunday 2018-03-25 09:00]

ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் இருக்கும் போது காவிரி பங்கீட்டுகுழுவை மத்திய அரசு அமைத்தது ஒரு கண் துடைப்பு நாடகம் என நாகர்கோவிலில் சீமான் தெரிவித்தார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தனியார் கலை கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நாகர்கோவில் வந்தார். அப்போது சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், "காவிரி மேலாண்மை வாரியம் தமிழர்களுக்கு உயிர், ஆனால் பா.ஜ.க-விற்கு அது அரசியல். நீதிமன்ற உத்தரவு காலம் முடிவதால் பா.ஜ.க-வினர் மாற்றி மாற்றி கருத்து கூறி வருகின்றனர். காவிரி நதிநீர் பங்கீட்டு குழு என்று தற்போது கருத்து கூறும் தமிழிசை சௌந்தரராஜன் அனைத்து கட்சி கூட்டத்தில் ஏன் இந்த கருத்தை கூறவில்லை.


அழைத்தால் நான் வருவேன்: - நடிகர் கமல்ஹாசன்
[Sunday 2018-03-25 09:00]

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக நடந்து மக்கள் போராட்டத்துக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது. இதனால், ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆனால் இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆலை வெளியிடும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், பல நோய்கள் வருவதாகவும் கூறி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு எதிராக குமரெட்டியாபுரம் கிராம மக்கள் கடந்த 41 நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று கண்டன பொதுக்கூட்டம் நடத்தினர்.


போதைக்காக பெட்ரோல் பெவிக்கால் பயன்படுத்தும் மாணவர்கள்!
[Sunday 2018-03-25 08:00]

இந்தியாவில் போதைப் பொருள் மற்றும் மதுப்பழக்கம் காரணமாக தினமும் 10 பேர் தற்கொலை செய்து கொள்வதாக கடந்த இரு வருடங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்தது. தற்கொலை செய்து கொள்பவர்களின் பட்டியலில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் முதல் நான்கு இடத்தில் உள்ளன.கேரளா சிறிய மாநிலமாக இருந்தாலும் இங்கு போதைப் பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போதைப் பொருள் பயன்படுத்துபவர்களில் இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்கு அடுத்த படியாக கொச்சி நகரம் இரண்டாவது இடத்தில் உள்ளது.


எதற்காக பேட்டரி வாங்கிக்கொடுத்தார் என்பது பேரறிவாளனுக்குத் தெரியாது: - ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம்
[Sunday 2018-03-25 08:00]

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையைத் திரும்பப்பெற வேண்டும் எனப் பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. வழக்கு விசாரணையின்போது எதற்காக பேட்டரி வாங்கிக்கொடுத்தார் என்பது பேரறிவாளனுக்குத் தெரியாது என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாகச் சொல்கிறார் வழக்கறிஞர் சிவக்குமார்.


ஐந்தாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து உயிரோடு எரித்துக் கொன்ற கொடூரம்!
[Saturday 2018-03-24 17:00]

அசாம் மாநிலம் நாகோன் மாவட்டம், லாலங் கோன் பகுதியைச் சேர்ந்த 5-ம் வகுப்பு படித்து வந்த மாணவி நேற்று பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்துள்ளார். பெற்றோர் வேலைக்கு சென்றதால் அவள் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த 21 வயது வாலிபர் மற்றும் இரண்டு சிறுவர்கள் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அவரது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பேரறிவாளன்!
[Saturday 2018-03-24 17:00]

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், கடந்த சில மாதங்களாக சிறுநீரகத் தொற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார்.


படுக்கையறை வீடியோவை காட்டி எச்சரித்த அக்கா: - தீர்த்து கட்டிய தங்கை
[Saturday 2018-03-24 08:00]

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்தவர் பூபாலன் (28). இவரது மனைவி நதியா (24). இவர்களுக்கு 4 வயதில் மகளும், 2 வயதில் மகனும் உள்ளனர். பூபாலன் கடந்த 10 ஆண்டுக்கு முன் திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையத்தில் சொந்தமாக வீடு கட்டி குடியிருந்து வருகிறார். மேலும் பனியன் நிறுவனங்களில் கான்டிராக்ட் எடுத்து நடத்தி வருகிறார். அதே பகுதியில் நதியாவின் சித்தி மகள் ரேகாவும் (22) வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 14ம்தேதி காலையில் பூபாலன் வேலைக்கு சென்று விட்டு இரவு திரும்பிய போது, வீட்டுக்குள் நதியா கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.


ஒன்லைனில் நாய் வாங்கும் ஆசையில் ரூ.1.27 லட்சத்தை பறிகொடுத்த பெண்!
[Saturday 2018-03-24 08:00]

புதுவை நர்ஸை ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு வெளிநாட்டு நாய் அனுப்புவதாக கூறி ரூ.1.27 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பலே ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். புதுவை, முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் திவ்யபிரியா (25). தனியார் மருத்துவக் கல்லூரியில் செவிலியராக பணியாற்றி வரும் இவர் தனது வீட்டில் செல்லபிராணியை வளர்ப்பதற்காக ஆன்லைன் மூலம் வெளிநாட்டு வகை நாய் உள்ளிட்ட அனைத்து வகையான நாய்களை விற்பனை செய்யும் ஏஜென்சியின் விளம்பரத்தை பார்த்து நாடியுள்ளார்.


வயதானவர்களுக்கான உணவைக் கொடுக்க மறுப்பது தண்டனைக்குரிய குற்றம்!
[Saturday 2018-03-24 08:00]

பிறப்பு, பிணி, சாக்காடு போல மூப்பையும் மனிதன் தவிர்க்கவே முடியாது. எல்லோருக்குமே வயதாகும்; அதையொட்டி பல உடல்ரீதியான, மனரீதியான பிரச்னைகள் உருவாகும். அதை நாம் எதிர்நோக்கித்தான் ஆகவேண்டும். உலகெங்கும் முதியோர் பிரச்னைகள் குறித்த ஆலோசனைகள் தான் அதிகம் விவாதிக்கப்படுகிறது. அதில் முக்கியமானது அவர்களுக்கான சத்துணவுப் பற்றியதே அதிகம்.


பாறைக்குழியில் குளிக்கச் சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
[Saturday 2018-03-24 08:00]

திருப்பூர் அருகே பாறைக்குழியில் குளிக்க சென்ற தனியார் பள்ளி மாணவர்கள் 3 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.திருப்பூர் மாவட்டம் மங்கலத்தைச் சேர்ந்த சுதர்சன், அறிவொளி நகரைச் சேர்ந்த அமீர்கான் மற்றும் அண்ணாமலை கார்டன் பகுதியைச் சேர்ந்த மனோகரன் ஆகிய 3 சிறுவர்களும் இடுவம்பாளையம் என்ற பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வந்தனர். தற்போது பொதுத்தேர்வு நடைபெறும் காலம் என்பதால், தேர்வுக்காக இன்றைய தினம் அம்மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.


தூங்கிக் கொண்டிருந்த வாலிபரை துடிதுடிக்க கழுத்தை அறுத்து கொன்ற கொடூரம்
[Thursday 2018-03-22 17:00]

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள அம்மன்கோவில் காடு பகுதியை சேர்ந்தவர் மதனகோபால். இவருக்கு மாணிக்கம், ராஜி (வயது 42), ராமு ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.இந்த நிலையில் 2-வது மகன் ராஜிக்கு திருமணம் ஆகவில்லை. கூலி வேலை செய்து வந்தார். இவர் கடந்த 10 வருட காலமாக கூலி வேலைக்கு சென்று விட்டு அதே பகுதியில் உள்ள முனியப்பன் கோவிலில் படுத்து தூங்குவது வழக்கம்.


இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் அதிகாரியின் உயிரைப் பறித்த கொள்ளையர்கள்!
[Thursday 2018-03-22 17:00]

வேலூர் மாவட்டம் பானாவரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது மர்மநபர்கள் பின் தொடர்ந்து செயின் பறித்தபோது வாகனத்திலிருந்து கீழே விழுந்த பெண் சுகாதார ஆய்வாளர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மல்லிகா, நேற்று முன்தினம் பணிமுடித்து தன் கணவர் வீராசாமியுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார்.


மதம் மாறினால் தான் வீட்டுக்குள் நுழைய அனுமதிப்பேன்: - கணவனை விரட்டிய மனைவி
[Thursday 2018-03-22 08:00]

மதம் மாறச் சொல்லி என்னுடைய மனைவி மற்றும் அவருடைய உறவினர்கள் அடித்து துன்புறுத்துகின்றனர் என கண்ணீரோடு இளைஞர் ஒருவர் ஈரோடு எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


உணவுக்காக குழந்தை உட்பட 8 பெண்கள் கொலை: - சைக்கோவின் திகில் கதை
[Thursday 2018-03-22 07:00]

குழந்தை உட்பட 8 பெண்களைக் கொலை செய்த தமிழகத்தை சேர்ந்த சைக்கோ கொலையாளியை ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்ட போலீஸார் கைது செய்துள்ளனர். சைக்கோ கொலையாளியைக் கைது செய்தது குறித்து தெரிவித்த சித்தூர் எஸ்.பி.ராஜசேகரபாபு கூறுகையில், '2017 டிசம்பர் மாதம் சித்தூர் அடுத்த நகரி பகுதியைச் சேர்ந்த ரத்தினம்மாள் என்ற மூதாட்டியையும், அப்பல்ராஜ் கண்டிகைப் பகுதியைச் சேர்ந்த வெள்ளையம்மாள் என்ற மூதாட்டியையும் கல்லால் தாக்கி, முகம் மற்றும் உடல் பகுதிகளை வெறி நாய் கடிப்பதுபோல் கடித்து கொலை செய்துவிட்டு சென்றிருந்தனர்.


நான் இளைஞர்களுடன் வருவேன்: - எச்சரித்த வைகோ
[Thursday 2018-03-22 07:00]

வினையை விதைத்திருக்கிறீர்கள். வினையை அறுப்பீர்கள் என தமிழக அரசுக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் கலந்து கொண்ட வைகோ, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,


முள்ளிவாய்க்கால் முற்றத்தின் எதிரே நடராசன் உடல் நல்லடக்கம்!
[Thursday 2018-03-22 07:00]

உடல்நலக் குறைவால் உயிரிழந்த ம.நடராசனின் உடல் தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. சசிகலா கணவர் நடராசன், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனளிக்காமல் திங்கள்கிழமை நள்ளிரவு 1.35 மணிக்கு உயிரிழந்தார். பின்னர் நடராசன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டது.


பரிகார பூஜை என்ற பெயரில் நடந்த பாலியல்: - சேலத்தில் சிக்கிய ஜோதிடர்
[Wednesday 2018-03-21 18:00]

பெற்றோர்கள் கையில் விளக்கை கொடுத்து வெளியே நிற்க வைத்து விட்டு அவர்களின் பெண்ணுக்குப் பரிகார பூஜை செய்வதாகச் சொல்லி பூஜை அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் சேலத்தை சேர்ந்த ஜோதிடர் பன்னீர்செல்வம்.


ஜெயலலிதா கைரேகை வழக்கு: - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
[Wednesday 2018-03-21 17:00]

ஜெயலலிதா கைரேகையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. ஜெயலலிதா கைரேகை பதிவு இல்லாமல் வழக்கை தொடர்ந்து நடத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் பி.சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


பேஸ்புக்கை எச்சரித்த மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி!
[Wednesday 2018-03-21 17:00]

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேர் பயன்படுத்தும் பேஸ்புக் நிறுவனம் தற்போது புதிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளது. சுமார் 5 கோடி பயணர்களின் தகவல்கள் ஒரு செயலி மூலம் திருடப்பட்டு அது கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த விவரங்கள் அரசியல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


இது அண்ணா வளர்த்த தமிழ் அல்ல; ஆண்டாள் வளர்த்த தமிழ்: - சீறும் தமிழிசை
[Wednesday 2018-03-21 17:00]


ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை அழிக்க இதைச் செய்ய வேண்டுமாம்: - சொல்கிறார் சுப்ரமணியன் சுவாமி
[Wednesday 2018-03-21 08:00]

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இந்தியாவும் இணைந்தால், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை நிச்சயமாக ஒழிக்க முடியும்' எனச் சொல்கிறார், பா.ஜ.க எம்.பி., சுப்ரமணியன் சுவாமி. ஈராக்கில், கடந்த 2014-ம் ஆண்டு, ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டனர் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். கடத்தப்பட்ட 38 பேரின், டி.என்.ஏ மாதிரிகள், அங்கு இறந்தவர்களின் டி.என்.ஏ-வுடன் நூறு சதவிகிதம் பொருந்துவதாகவும், 39-வது நபரின் டி.என்.ஏ 70 சதவிகிதம் பொருந்துவதாகவும் தெரிவித்தார்.


காதலியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை குத்திக்கொன்ற காதலன்!
[Wednesday 2018-03-21 07:00]

தமிழகத்தில் காதலியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை காதலன் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவன் கார்த்திகேயன். இவன் கடந்த சில தினங்களுக்கு முன் வடசென்னிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அடிவார பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்தான்.


என் பின்னால் கடவுளும் மக்களும் தான் உள்ளனர் : - ரஜினி பேட்டி
[Tuesday 2018-03-20 17:00]

கடந்த 10-ம்தேதி இமயமலைக்கு ஆன்மிகப் பயணம் புறப்பட்ட ரஜினி இமயமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆசிரமங்களில் சென்று சுவாமிகளின் ஆசீர்வாதங்களைப் பெற்றார். தனது ஆன்மிகப் பயணத்தை 10 நாள்களில் முடித்துக்கொண்ட ரஜினி இன்று காலை 11 மணிக்கு டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்தடைந்தார்.

Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா