|
|
கொழும்பில் அமெரிக்க கடற்படைக் கப்பல்!
[Saturday 2018-12-22 18:00]
|
ஆறு நாள் பயணத்தை மேற்கொண்டு அமெரிக்காவின் கடற்படை கப்பலான
|
|
|
ஏ-9 வீதியை மேவிப் பாய்ந்த வெள்ளம்!
[Saturday 2018-12-22 18:00]
|
ஏ9 வீதியில் மாங்குளத்தில் வெள்ளம் காரணமாக போக்குவரத்து சில மணிநேரம் பாதிப்படைந்தது.கடந்த இரு தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மல்லாவி கற்குவாரிக் குளம் உடைப்பெடுக்க இருந்த நிலையில் நீர் தாழ் நிலத்தை நோக்கி வெட்டி விடப்பட்டது.
|
|
|
கட்டுநாயக்கவில் இராட்சத விமானம் அவசர தரையிறக்கம்!
[Saturday 2018-12-22 18:00]
|
உலகின் மிகப்பெரிய விமானமான ஏ-380 ரகத்தைச் சேர்ந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை திடீரென தரையிறக்கப்பட்டது. டுபாயிலிருந்து அவுஸ்ரேலியா நோக்கி பயணித்த குறித்த விமானத்தில் பயணியொருவர் சுகயீனம் காரணமாக அவதியுற்றமையால் இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
|
|
|
இம்மாத இறுதிக்குள் பெறுபேறுகள்!
[Saturday 2018-12-22 18:00]
|
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபெறுகளை இம்மாத இறுதிக்குள் வௌியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார். வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாகவும், பெறுபேறு மறுஆய்வு நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
|
|
|
சூதாட்டம் மோதலாகியது - ஓட்டோவுக்கும் தீவைப்பு!
[Saturday 2018-12-22 18:00]
|
மட்டக்களப்பு, கல்லடிப் பகுதியில், மரண வீடு ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட மோதலில், ஒருவர் படுகாயமடைந்தார். காயமடைந்தவரின் ஓட்டோவும் தீ வைத்து எரிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்லடியிலுள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அருகிலேயே இந்தச் சம்பவம், இடம்பெற்றுள்ளது.
|
|
|
கொட்டித் தீர்த்த மழை-வெள்ளத்தில் மிதக்கும் கிளிநொச்சி!
[Saturday 2018-12-22 08:00]
|
கிளிநொச்சியில் நேற்றிரவு முதல் பெய்து வரும் வழமைக்கு மாறான கடும் மழையினால், மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. வழமைக்கு மாறாக 225 தொடக்கம் 370 மில்லி மீற்றர் வரை மழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களிலும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
|
|
|
சர்வதேச நீதிமன்றில் இலங்கை - நிராகரித்தது பிரித்தானியா!
[Saturday 2018-12-22 08:00]
|
இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்னிறுத்துமாறு கோரி, சுமார் 11 ஆயிரம் பேர் கையொப்பம் இட்டு சமர்ப்பிக்கப்பட்ட இணைய விண்ணப்பத்தை பிரித்தானியா நிராகரித்துள்ளது.
|
|
|
பாதுகாப்பு அமைச்சுக்கு 1124 கோடி ரூபா!
[Saturday 2018-12-22 08:00]
|
2019 ஆம் ஆண்டின் ஏப்ரல் 30 ஆம் திகதி வரையிலுமான முதல் காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கையை நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். இதுகுறித்து விவாதம் இடம்பெற்றதுடன் வாக்கெடுப்புக்கு விடப்பட்டதுடன் 102 வாக்குகளை பெற்று 96 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
|
|
|
நேருக்குநேர் மோதிய டிப்பர்கள்!
[Saturday 2018-12-22 08:00]
|
யாழ் - நாவற்குழியில் இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி, வயல்களுக்குள் குடைசாய்ந்த விபத்தில் படுகாயமடைந்த வாகனச் சாரதிகள் இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நாவற்குழி
|
|
|
குழப்பத்தால் சுதந்திரக் கட்சிக்கு பாதிப்பு!
[Saturday 2018-12-22 08:00]
|
அரசியல் நெருக்கடியினால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதுபோல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
|
|
|
தேசிய ஜனநாயக முன்னணிக்கு அங்கீகாரம்!
[Saturday 2018-12-22 08:00]
|
ஐக்கிய தேசிய முன்னணியை,
|
|
|
வடக்கு- கிழக்கு அபிவிருத்திக்கு முக்கியத்துவம்!
[Saturday 2018-12-22 08:00]
|
அடுத்த வருட வரவு-செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அந்தப் பகுதி மக்களின் தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ள நடவடிக்கை வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் நீர்வழங்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
|
|
|
எரிபொருள் விலைகள் குறைந்தன!
[Saturday 2018-12-22 08:00]
|
பெற்றோல் மற்றும் சூப்பர் டீசலின் விலை நேற்று நள்ளிரவில் இருந்து பத்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன. 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
|
|
|
ஒரே நாளில் 9 சபைகளுக்கும் தேர்தல்!
[Saturday 2018-12-22 08:00]
|
9 மாகாணசபைகளுக்கும் ஒரேநாளில் தாமதமின்றி தேர்தல் நடத்தப்படும் என்று உள்நாட்டு நிர்வாக அமைச்சர் வஜிர அபேவரத்தன தெரிவித்துள்ளார். தமது அமைச்சில் நேற்று பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட பின்னர் அமைச்சர் ஊடகங்களிடம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
|
|
|
பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் - விஜயகலாவுக்கு கல்வி!
[Friday 2018-12-21 18:00]
|
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் 29 அமைச்சரவை ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவை அந்தஸ்து இல்லாத மூன்று அமைச்சர்கள், இரண்டு பிரதி அமைச்சர்கள், 7 இராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை நடந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
|
|
|
எதிர்க்கட்சி தலைவர் இழுபறி நீடிப்பு!
[Friday 2018-12-21 18:00]
|
எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து பல்வேறு தரப்பினர் முறைப்பாபாடுகளை செய்துள்ள நிலையில் அது குறித்து இறுதியான தீர்ப்பு ஒன்றினை முன்வைக்க முடியாதுள்ளது. வெகுவிரைவில் எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து ஆராய்ந்து சபைக்கு அறிவிப்பேன் என சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்தார்.
|
|
|
நெருக்கடி தீர்ந்தது - ஐ.நா பொதுச்செயலர் வரவேற்பு!
[Friday 2018-12-21 18:00]
|
இலங்கையின் அரசியல் நெருக்கடி, அமைதியாக, அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு அமைய தீர்க்கப்பட்டிருப்பதை ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலர் அந்தோனியோ குடேரஸ் வரவேற்றுள்ளார்.
நியூயோர்க்கில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் இதனை தெரிவித்துள்ளார்.
|
|
|
நிறைவேறியது கணக்கு அறிக்கை!
[Friday 2018-12-21 18:00]
|
2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு செலவீனங்களுக்காக நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட 1,765 பில்லியன் ரூபா இடைக்கால கணக்கறிக்கை 102 வாக்குகளால் நிறைவேற்றியது.இந்த கணக்கறிக்கையின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமென ஜே.வி.பி கோரியிருந்தது.இதையடுத்து, வாக்கெடுப்பு இலத்திரனியல் முறைமையில் நடத்தப்பட்டது. இலத்திரனியல் முறைமையின் கீழ் வாக்களிக்க முடியாத சிலர் பெயர் குறிப்பிடப்பட்டு வாக்களிப்பில் கலந்து கொண்டனர்.
|
|
|
எந்தநேரத்திலும் ஆட்சியைப் பிடிப்போம்!
[Friday 2018-12-21 18:00]
|
நீங்கள் ஆளும் கட்சியில் இருப்பதாக எந்நேரமும் நினைத்து கொண்டிருக்க வேண்டாம். நாங்கள் மக்கள் புரட்சியின் ஊடாக, எந்தநேரத்திலும் ஆட்சியை கைப்பற்றலாம் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
|
|
|
சிறப்புரிமையை மீறுகிறார் ஜனாதிபதி!
[Friday 2018-12-21 18:00]
|
தனது சிறப்புரிமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீறுகிறார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அவர், ஜனாதிபதியை கொலைச் செய்வதற்கான சூழ்ச்சியில் தன்னுடைய பெயர் இல்லையென்பது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (சி.ஐ.டி) அறிக்கையிலிருந்து தெளிவாகியுள்ளது என்றார்.
|
|
|
சம்பந்தனிடம் கெஞ்சுகிறார் மஹிந்த!
[Friday 2018-12-21 18:00]
|
இரா.சம்பந்தன் நீண்டகால அரசியல் அனுபவம் உள்ளவர் என்ற அடிப்படையில் கௌரவமான முறையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எம்மிடம் ஒப்படைத்துச் செல்வதே சிறந்ததாகும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
|
|
|
சபாநாயகரிடம் சுமந்திரன் கொடுத்த மனு!
[Friday 2018-12-21 18:00]
|
எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபாநாயகரிடம் மனு ஒன்றைக் கையளித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், அமைச்சரவையின் தலைவராகவும் செயற்படுகிறார். இந்நிலையில் சுதந்திர கூட்டமைப்பினை எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
|
|
|
நந்திக்கடலில் பாய்ந்த இராணுவ வாகனம்!
[Friday 2018-12-21 18:00]
|
மாங்குளம் - முல்லைத்தீவு பிரதான வீதியால் பயணித்த இராணுவ வாகனம் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து முல்லைத்தீவு நந்திக்கடலில் பாய்ந்தது. இதனால், அந்த வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இன்று மழை பெய்து கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
|
|
|
நத்தார் விழாவில் மைத்திரியுடன் மஹிந்த!
[Friday 2018-12-21 18:00]
|
ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நத்தார் விழா ஜனாதிபதி மாளிகையில் பேராயர் கர்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. இதன்போது நத்தார் கரோல் பாடல்களுடன் இன்னும் பல நிகழ்வுகள் விழாவை அலங்கரித்தன.
|
|
|
அதிகாலையில் இருவர் வாள்களுடன் கைது!
[Friday 2018-12-21 18:00]
|
பளை பகுதியில் குழு மோதலுக்கு தயாராக இருந்த இரு இளைஞர்களை வாள்களுடன் பொலிஸார் கைது செய்தனர்.
பளை பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் குழு மோதல் ஒன்று இடம்பெற்றது. அதன் தொடர்சியாக இன்று அதிகாலை ஒரு மணிக்கு மோதலுக்கு தயாராக குழுவொன்று வாள்களுடன் சென்ற போது பொலிஸார் அவர்களைச் சுற்றிவளைத்தனர். இதன்போது, இருவர் வாள்களுடன் கைது செய்யப்பட்டனர். ஏனையோர் தப்பியோடினர்.
|
|
|
9 வீடுகளில் திருடியவர் மாட்டினார்!
[Friday 2018-12-21 18:00]
|
மட்டக்களப்பு- தலைநகரில் 9 வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, 30 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் மின் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
|
|
|
தமிழ்க் குடும்பத்தை நாடுகடத்த உத்தரவு!
[Friday 2018-12-21 08:00]
|
அவுஸ்திரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை தமிழ் குடும்பத்தை நாடு கடத்துமாறு, அவுஸ்ரேலிய உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
|
|
|
யாழ்ப்பாணம் சென்ற போதை இனிப்புகள் சிக்கின!
[Friday 2018-12-21 08:00]
|
போதை கலந்த இனிப்பு பண்டங்களை வவுனியா ஓமந்தை பொலிஸார் நேற்று இன்று மாலை கைப்பற்றியுள்ளனர். அதனை கொண்டு சென்ற ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நடத்திய வாகன சோதனையின்போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதை இனிப்பு பண்டங்களே கைப்பற்றப்பட்டன.
|
|
|
|