Untitled Document
May 3, 2024 [GMT]
நாயை அனுமதிக்க மறுத்த சுங்க அதிகாரிகளை துவைத்தெடுத்த குவைத் நாட்டவர்கள்! - கட்டுநாயக்கவில் பதற்றம்
[Friday 2018-07-27 18:00]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் சுங்க அதிகாரி ஒருவர் உள்ளிட்ட ஐந்து பேரை குவைத் நாட்டவர்கள் இருவர் தாக்கி காயப்படுத்தினர். தாக்குதலுக்கு இலக்கானவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


புகை வந்த குளத்தில் இருந்து கிடைத்த ஆட்லறி குண்டின் பாகம்! Top News
[Friday 2018-07-27 18:00]

யாழ். அரியாலை - மணியம்தோட்டம் பகுதியிலுள்ள அம்மன் குளம் தூர்வாரப்பட்ட போது அதிலிருந்து புகை வந்ததைத் தொடர்ந்து, இன்று அதில் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றன. நீதிமன்றின் அனுமதியுடன், பிரதேச செயலகத்தின் உதவியுடன் விசேட அதிரடிப்படையினர் அகழ்வுப் பணியை முன்னெடுத்தனர். இதன்போது, குறித்த குளத்தில் இருந்து ஆட்லறி குண்டு ஒன்றின் விசிறி (Fan) மீட்கப்பட்டுள்ளது.


அச்சுவேலியில் தேர் இழுத்த இராணுவத்தினர்! Top News
[Friday 2018-07-27 18:00]

அச்சுவேலி உலவிக்குளம் சித்திவிநாயகர் ஆலய தேர்த் திருவிழாவில் இராணுவத்தினர் தேரின் வடம் பிடித்து இழுத்துள்ளனர். அச்சுவேலி சித்திவிநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா நேற்று காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இதன்போது ஆலயத்திற்கு வருகை தந்திருந்த 100க்கும் மேற்பட்ட இராணுவத்தினர், தமது சீருடையின் மேலங்கியை கழட்டி விட்டு தேர் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.


புதிய அரசமைப்பை வைத்து சுமந்திரனும், ஜெயம்பதியும் பணம் சம்பாதிக்கிறார்கள்! - டிலான் பெரேரா!
[Friday 2018-07-27 18:00]

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனுக்கும் ஜயம்பதி விக்ரமரத்னவுக்கும், புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான நோக்கம் எதுவும் கிடையாது. புதிய அரசமைப்பை வைத்துக் கொண்டு, இவர்கள் இருவரும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்தும் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்தும் பணம் சம்பாதிக்க முயற்சிக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.


பெண்ணின் கழுத்தை அறுத்து காயப்படுத்திய மர்ம நபர்!
[Friday 2018-07-27 18:00]

வீட்டில் தையல் வேலையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தை, பின்புறமாக வந்த மர்ம நபர் ஒருவர் வெட்டிக் காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். பருத்தித்துறை - தும்பளைப் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றுப் பட்டப்பகலில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


ஈழத் தமிழ் இளைஞனை நாடுகடத்தியது அவுஸ்ரேலியா!
[Friday 2018-07-27 18:00]

அவுஸ்ரேலியாவில் இருந்து தமிழ் இளைஞன் ஒருவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தந்தை சுட்டுகொல்லப்பட்டதுடன் தாய் மற்றும் சகோதரி காணாமல் போன நிலையில் அவுஸ்ரேலியாவில் புகலிடம் கோரிய குறித்த இளைஞன் நாடு கடத்தப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.


ஒரே இரவில் நாடெங்கும் 3325 பேர் கைது! - பொலிஸ் அதிரடி
[Friday 2018-07-27 18:00]

நாடளாவிய ரீதியில் நேற்று இரவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றம் உட்பட பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 3325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 5808 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.


ஒக்ரோபரில் இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் மற்றொரு தீர்மானம்?
[Friday 2018-07-27 07:00]

வரும் ஒக்டோபர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான மற்றொரு தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று எச்சரித்துள்ளார் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா.


யாழ். அபிவிருத்திக்கான ஐந்தாண்டு திட்ட அறிக்கை வெளியீடு!
[Friday 2018-07-27 07:00]

ஐக்கிய நாடுகளின் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான நிதியத்தின் ஆதரவுடன், வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படக் கூடிய அபிவிருத்திகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல் அரசியல் தீர்வில் பயனில்லை! - கோத்தா
[Friday 2018-07-27 07:00]

நாட்டில் தமிழ் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகங்களின் செய்தியாசிரியர்களை நேற்று மாலை சந்தித்து பேசிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


வெலிக்கடை சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு உடனடியாக கலைப்பு!
[Friday 2018-07-27 07:00]

வெலிக்கடை சிறைச்சாலையில் இயங்கி வந்த புலனாய்வுப் பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவின் உத்தரவின் பேரிலேயே வெலிக்கடை சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு கலைக்கப்பட்டிருக்கின்றது.


விசேட நீதிமன்றத்தில் ஜனாதிபதி செயலக முன்னாள் பிரதானிக்கு எதிராக முதல் வழக்கு!
[Friday 2018-07-27 07:00]

பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி செயலகத்தின் ஆளணியின் பிரதானி காமினி செனரத்துக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.


கட்டுநாயக்கவில் விமானப் பயணிகளுக்கு ஈ- கார்ட் முறை அறிமுகம்!
[Friday 2018-07-27 07:00]

பயணிகளுக்கு ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்காக ஈ காட் (E-Card) முறை அமுல்படுத்தப்பட உள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இதற்குப் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் மற்றும் குடியகல்வு குடிவரவு அமைச்சின் அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.


அடுத்த அமர்வுக்கு முன் புதிய அமைச்சரவை! - அவைத் தலைவர்
[Friday 2018-07-27 07:00]

அடுத்த மாகாண சபை அமர்வுக்கு முன்னர், வடமாகாண அமைச்சர் சபை ஒன்று அமைக்கப்படும். முதலமைச்சருடனும், ஆளுநருடனும் நடாத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இந்த நம்பிக்கையை தான் வெளியிடுவதாக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.


நல்லிணக்கத்தை ஏற்படுத்தினால் தான் நாடு அபிவிருத்தி அடையும்! - ரணில்
[Friday 2018-07-27 07:00]

துரிதமாக நாடு வளர்ச்சியடைய வேண்டுமாயின் சமாதானம், நல்லிணக்கம் அவசியமாகும். அதனை ஏற்படுத்தினால் மாத்திரமே வளர்ச்சிமிகு நாட்டை உருவாக்க முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


திருகோணமலையில் குழு மோதலில் இருவர் காயம்! - 7 பேர் கைது
[Friday 2018-07-27 07:00]

திருகோணமலை - உவர்மலை பகுதியில் நேற்று இரவு இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் படுகாயமடைந்தனர். குறித்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் 7 சந்தேக நபர்களை பொலிஸார் இதுவரை கைது செய்துள்ளனர். கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் உள்ள மைதானத்தில் மது பாவனையில் ஈடுபட்டு கொண்டிருந்த இளைஞர் குழுவே இவ்வாறு மோதிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


விக்னேஸ்வரனின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்!
[Thursday 2018-07-26 19:00]

​டெனிஸ்வரனை வடக்கு மாகாண அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த முறையீட்டு மனுவை விசாரிக்க நீதியரசர்கள் குழு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05ம் திகதி அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.


கூரிய ஆயுதத்தினால் தாக்கிக் கொலை! - மன்னார் புதைகுழி குறித்து திடுக்கிடும் தகவல்
[Thursday 2018-07-26 19:00]

மன்னார் சதொச வளாகத்தில் இன்று 42 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது. மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் பலவற்றில் கூரிய ஆயுதத்தால் பலமாக தாக்கப்பட்டமையால் ஏற்பட்ட முறிவுகளை காணக்கூடியதாக இருப்பதாக அகழ்வில் ஈடுபட்ட நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


அனந்தியின் துப்பாக்கி விவகாரம் - வடக்கு மாகாணசபையில் வாக்குவாதம்!
[Thursday 2018-07-26 19:00]

பாதுகாப்பு அமைச்சிடம் அமைச்சர் அனந்தி கைத்துப்பாக்கியைப் பெற்றுக் கொண்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக வடக்கு மாகாணசபையில் இன்று வாக்குவாதங்கள் ஏற்பட்டன.


முதலமைச்சரின் 50 விமானப் பயணங்களுக்கு 11 இலட்சம் ரூபா செலவு!
[Thursday 2018-07-26 19:00]

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் உலங்குவானூர்தி மூலமாக 50 தடவைகள் சுமார் 11 இலட்சத்து 15 ஆயிரத்து 500 ரூபா செலவில் பயணம் மேற்கொண்டதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வில், எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா வடமாகாண முதலமைச்சர் உலங்கு வானூர்த்தி மூலமான பயண செலவு தொடர்பான விபரங்களை வாய் மூலமான வினாவாக கேட்டிருந்தார்.


குடாநாட்டில் 14 ஆயிரம் படையினர் தான் உள்ளனராம்!
[Thursday 2018-07-26 19:00]

யாழ்ப்பாணக் குடாநாட்டில், சுமார் 14,000 இராணுவத்தினரே நிலைகொண்டிருப்பதாக யாழ். படைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படையினர் நிலைகொண்டிருப்பதாக அரசியல்வாதிகளால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்ற நிலையில், அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.


விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட முன்னாள் எம்.பி உடுவே தம்மாலோக தேரர்!
[Thursday 2018-07-26 19:00]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்வதற்காக விமானத்தில் ஏறிய ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான, உடுவே தம்மாலோக தேரர் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டுள்ளார். வெளிநாடு செல்வதற்கு நீதிமன்ற தீர்ப்பில் வழங்கப்பட்ட திகதி பற்றிய சர்ச்சை காரணமாகவே அவர் இவ்வாறு விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டுள்ளார்.


வடக்கு, கிழக்கில் உள்ளிட்ட 7 மாகாணசபைளுக்கு ஜனவரியில் தேர்தல்!
[Thursday 2018-07-26 19:00]

வடக்கு,கிழக்கு உள்ளிட்ட 7 மாகாண சபைகளுக்கான தேர்தலை ஜனவரி மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்லுக்கு முன்னர் மாகாணசபைத் தேர்தலை நடத்தும், அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.


ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை! - என்கிறார் சரத் என் சில்வா
[Thursday 2018-07-26 19:00]

மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்த திகதியை தீர்மானிப்பது மற்றும் தண்டனையை எதிர்நோக்கும் கைதிகளை பெயரிடுவது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதிகாரத்தை, ஏதேனும் ஒரு குழுவுக்கு வழங்க முடியாது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.


நான் பட்ட வலியை இன்று உணர்ந்திருப்பார் அனந்தி! - தருணம் பார்த்து போட்டுத் தாக்கிய சத்தியலிங்கம்
[Thursday 2018-07-26 19:00]

தன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்துவதற்கு காரணமாக இருந்த அமைச்சர் அனந்தி, அவர் மீது இன்று குற்றச்சாட்டு சுமத்தப்படும் போது தான் பட்ட வலியை உணர்ந்திருப்பார், என வட மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.


பொதுவேட்பாளரை ஆதரிக்கமாட்டேன்! - என்கிறார் சரத் பொன்சேகா
[Thursday 2018-07-26 19:00]

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை என்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். குமார் சங்கக்கார அடுத்த தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு வழங்குவீர்களா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


கோத்தா கொலை முயற்சிக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட குருக்கள் விடுதலை!
[Thursday 2018-07-26 19:00]

கொள்ளுப்பிட்டி, பித்தல சந்தியில் கடந்த 2006 ஆம் ஆண்டு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலுக்கு உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்த சர்மா எனப்படும், ஸ்ரீஸ்கந்தராஜா குருக்களை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் முற்றாக விடுதலை செய்து இன்று உத்தரவிட்டுள்ளார்.


கைது செய்யப்படமாட்டார் விஜயகலா! - என்கிறார் கம்மன்பில
[Thursday 2018-07-26 19:00]

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை அரசாங்கம் ஒரு போதும் கைது செய்யப் போவதில்லை என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் அவரை உடனடியாக கைது செய்யுமாறு சட்டமா அதிபருக்கு ரீட் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி நீதிமன்றத்திற்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா