|
|
'தென்கொரியாவில் பயங்கர காட்டுத்தீ' - ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!
[Saturday 2019-04-06 09:00]
|
தென்கொரியாவின் வடகிழக்கு பகுதியில் கங்குவான் மாகாணத்தில் வடகொரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள கடற்கரை நகரமான கோசியாங்கில் நேற்று முன்தினம் மாலை டிரான்ஸ்பார்மர் ஒன்று வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ, அருகிலுள்ள வனப்பகுதிக்கு பரவியது. சற்று நேரத்தில் தீ மளமளவென பரவி ஒட்டுமொத்த காடும் பற்றி எரிந்தது. அதனை தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் தீ பரவியது. இதில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் தீக்கிரையாகின.
|
|
|
'சீனா - அமெரிக்கா' இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - டிரம்ப்!
[Friday 2019-04-05 17:00]
|
அமெரிக்கப் பொருட்களுக்கு சீனாவில் 25 % சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் சீனப் பொருட்களுக்கு அமெரிக்காவில் 2.5% வரி விதிக்கப்படுகிறது. இது நியாமான வர்த்தகம் அல்ல. எனவே, சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு மொத்தமாக 50 பில்லியன் டாலர்வரை 4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு எடுத்திருப்பதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சீனாவும் அமெரிக்கப் பொருட்கள் மீது வரி விதித்தது. இந்நிலையில் அமெரிக்கா – சீனாவுக்கு இடையே கடந்த சில மாதங்களாக வர்த்தக போர் நடந்து வந்தது.
|
|
|
'அமேசான் நிறுவனர் விவாகரத்து' - 35 பில்லியன் டாலர்கள் இழப்பீடாக வழங்குகிறார்!
[Friday 2019-04-05 17:00]
|
உலகின் மிகப் பெரிய பணக்காரரான ஜெஃப் பெசோஸ் தனது மனைவி மெக்கின்ஸிக்கு விவாகரத்து இழப்பீடாக 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். எனினும், 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெஃப் பெசோஸ் தொடங்கிய இணையதள வணிக நிறுவனமான அமேசானில் மெக்கின்ஸிக்கு உள்ள நான்கு சதவீத பங்கை அவர் தொடர்ந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெஃபுக்கு சொந்தமான விண்வெளி சுற்றுலா நிறுவனமான ப்ளூ ஆரிஜின் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் நிறுவனத்தில் கொண்டுள்ள பங்கை கைவிடுவதற்கு மெக்கன்சி முடிவெடுத்துள்ளார்.
|
|
|
'நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு' - ஆஸ்திரேலிய பயங்கரவாதி மீது குற்றச்சாட்டு!
[Friday 2019-04-05 17:00]
|
நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த மாதம் பயங்கரவாதி நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் இந்தியர்கள் 7 பேர் உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர். 39 பேர் படுகாயம் அடைந்தனர். உலகையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதலை நடத்திய ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரெண்டன் டாரன்ட் உடனடியாக கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் மீது ஒரே ஒரு கொலை குற்றச்சாட்டு மட்டும் பதிவு செய்யப்பட்டது.
|
|
|
கல்வி முறை மாற்றத்தை கண்டித்து ரொறன்ரோ மாணவர்கள் போராட்டம்!
[Friday 2019-04-05 17:00]
|
மாகாண கல்வி முறை மாற்றத்தை கண்டித்து ரொறன்ரோ உயர்நிலை பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்வி முறை மாற்றத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கான ஒன்ராறியோ பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குறித்த மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் ரொன்ரோ மாணவர்கள் நேற்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
|
|
|
போயிங் விமான விபத்து: தலைமை செயல் அதிகாரி மன்னிப்பு கோரினார்!
[Friday 2019-04-05 17:00]
|
அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனத்தின் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த மாதம் எத்தியோப்பியாவில் விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர். அடுத்தடுத்து விபத்து நேரிட்டு ஏராளமானோர் உயிரிழந்ததால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது. ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், இந்தியா, சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் போயிங் மேக்ஸ் ரக விமானங்கள் தரையிறக்கப்பட்டன. விமானங்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதேசமயம் போயிங் நிறுவனம் தனது 737 மேக்ஸ் ரக விமானத்தின் பாதுகாப்பு விஷயங்கள் குறித்து முழு நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தது.
|
|
|
‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை தாமதப்படுத்த கோரிக்கை: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!
[Friday 2019-04-05 08:00]
|
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பாக 2016-ம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடந்தது. இதில் பெருவாரியான மக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்ததால் 2019-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தம் அனைத்து தரப்பினரின் ஆதரவை பெற தவறியதால் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கை சிக்கலானது. இந்த ஒப்பந்தம் மீது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 2 முறை ஓட்டெடுப்பு நடந்தபோதும் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் அது நிராகரிக்கப்பட்டுவிட்டது. அத்துடன் ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ தீர்மானத்தையும் 2 முறை இங்கிலாந்து எம்.பி.க்கள் நிராகரித்ததால், ‘பிரெக்ஸிட்’டை தாமதப்படுத்த வேண்டிய சூழல் உருவானது. இதுதொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களுடன் தெரசா மே பேச்சுவார்த்தை நடத்தினார்.
|
|
|
அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி மீது மேலும் 3 பெண்கள் பாலியல் புகார்!
[Friday 2019-04-05 08:00]
|
அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, 2009-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுவரை துணை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் ஜோ பிடன். இவர் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்குவதற்கு பரிசீலித்து வருகிறார். இந்த நிலையில், பெண்கள் சிலர் ஜோ பிடன் மீது அடுக்கடுக்காக பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றனர். நெவேடா மாகாண சட்டசபையின் முன்னாள் உறுப்பினரான லூசி புளோரஸ் (வயது 39), ஜோ பிடெனின் முன்னாள் உதவியாளரான எமி லேப்போஸ் (43) உள்பட 4 பெண்கள் ஜோ பிடென், அனுமதியின்றி தங்களை தொட்டதாகவும், வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்ததாகவும் குற்றம் சுமத்தி இருந்தனர்.
|
|
|
ராணுவத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படும் பெரியரக துப்பாக்கி மீட்பு : ரொறன்ரோ இளைஞன் கைது!
[Friday 2019-04-05 08:00]
|
நோர்த் யோர்க்கில் உள்ள விடு ஒன்றில் மேற்கொள்ளப்படட தேடுதல் நடவடிக்கையின்போது, ராணுவத் தாக்குதல்களுக்கு பயன்படுவது போன்ற பெரியரக துப்பாக்கி ஒன்றும், மின்அதிர்ச்சித் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ரொறன்ரோவைச் சேர்ந்த 21 வயது ஆண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணை ஒன்றின் ஒருபகுதியாக, பாத்ரூஸ்ட் வீதி மற்றும் ஷெப்பார்ட் அவென்யூ வெஸ்ட் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், திங்கட்கிழமை இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
|
|
|
இறந்த கோழிக்குஞ்சை காப்பாற்ற தனது சேமிப்பு பணத்துடன் மருத்துவமனைக்கு ஓடிய சிறுவன்!
[Friday 2019-04-05 08:00]
|
மிசோரமை சேர்ந்த சிறுவன் விபத்துக்குள்ளான கோழிக்குஞ்சை காப்பாற்ற தான் சேமித்து வைத்த பணத்தை எடுத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிசோரம் மாநிலம், சாய்ரங் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுவன் டெரெக், தெருவில் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது அவ்வழியே சென்ற கோழிக்குஞ்சு மீது மோதி விட்டான். கோழிக்குஞ்சு உயிரிழந்த நிலையில், அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்த சிறுவன் டெரெக், தான் சேமித்து வைத்திருந்த 10 ரூபாயுடன், கோழிக் குஞ்சுவை காப்பாற்ற அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து சென்றான்.
|
|
|
கனடாவில் டொல்பின்களை பிடித்துவைக்க தடை!
[Thursday 2019-04-04 17:00]
|
கனடாவில் திமிங்கிலம் மற்றும் டொல்பின்களை பிடிப்பதற்கு தடை விதிக்கும் வகையிலான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டு சுமார் நான்கு ஆண்டுகளின் பின்னர், நாடாளுமன்றின் மீன்வளத்துறை பிரிவினால் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. திமிங்கிலம் மற்றும் டொல்பின்களை பிடித்து இனப்பெருக்கம் செய்வது பாரிய குற்றமாகும் என இச்சட்டமூலத்தில் குறிப்படப்பட்டிருந்தது.
|
|
|
போயிங் 737 மேக்ஸ் விமானத்தில் தலைமைச் செயலதிகாரி பயணித்து சோதனை!
[Thursday 2019-04-04 17:00]
|
போயிங் நிறுவனம் தனது 737 மேக்ஸ் ரக விமானத்தின் ஆன்டி-ஸ்டால் மென்பொருளை வெற்றிகரமாகப் பரிசோதித்தபோது அதில் தங்களது தலைமைச் செயலதிகாரியும் பயணித்ததாக அறிவித்துள்ளது. போயிங் 737 மேக்ஸ் 8 ரகத்தை சேர்ந்த 2 விமானங்கள் விபத்துக்குள்ளானதை அடுத்து அதன் MCAS ஆன்டி-ஸ்டால் மென்பொருளில் கோளாறு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், அந்த மென்பொருளை சரிசெய்த பின் போயிங் 737 மேக்ஸ் 8 போன்றே காக்பிட் கொண்ட அதைவிட சிறிய ரக விமானமான போயிங் 737 மேக்ஸ் 7-ஐக் கொண்டு சோதனை நடத்தப்பட்டது.
|
|
|
பிரதமர் ட்ரூடோ நீதிக்கு துரோகம் இழைத்துள்ளார்: எதிர்க்கட்சி குற்றச்சாட்டு.
[Thursday 2019-04-04 17:00]
|
பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ நீதிக்கு துரோகம் இழைத்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் அண்ட்ரூ ஸ்சேர் தெரிவித்துள்ளார். ஜொடி வில்சன்-ரேபொல்ட் மற்றும் ஜேன் பில்போட் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் ட்ரூடோ தனது கட்சியிலிருந்து நீக்கினார். இந்நிலையில் இது தொடர்பாக நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
|
|
|
தென்கொரியாவில் 5ஜி சேவை தொடக்கம்…!
[Thursday 2019-04-04 17:00]
|
உலகிலேயே முதல் முறையாக நாடு முழுவதும் 5ஜி சேவையை தென்கொரியா வழங்கத் தொடங்கியது. வெள்ளிக்கிழமை அன்று அங்கு 5ஜி சேவைகள் தொடங்கப்பட இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்றிரவே, தென்கொரியா முழுவதும் 5ஜி சேவை தொடங்கி வைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. எஸ்.கே.டெலிகாம், கே.டி., எல்ஜி யூபிளஸ் (SK Telecom, KT, and LG Uplus) ஆகிய நிறுவனங்கள் இச்சேவையை வழங்குகின்றன.
|
|
|
ஓரினச் சேர்க்கையாளர்களை கல்லால் அடித்து கொல்லும் சட்டம் புரூனேவில் அமலாக்கம்!
[Thursday 2019-04-04 07:00]
|
புருனேவில் ஒருபால் உறவுக்காரர்கள் உறவு கொண்டாலோ, திருமணத்தை தாண்டி உறவு வைத்து கொண்டாலோ கல்லால் அடித்துக் கொல்லப்படும் என்ற கடுமையான இஸ்லாமிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் கண்டனங்களை எழுப்பியுள்ளது. புருனேவின் ஒருபால் உறவுக்காரர்கள் இந்த தீர்ப்பு குறித்து அதிர்ச்சியும் அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். "நீங்கள் காலை எழுந்தவுடன், உங்கள் அண்டை வீட்டுக்காரர், உங்களின் குடும்பம், ஏன் சாலை ஓரத்தில் இறால் பஜ்ஜி விற்கும் பெண் கூட உங்களை கல்லால் அடிப்பது சரி என்று நினைக்கலாம்" என ஒருபால் உறவுக்காரர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். வலுவான இஸ்லாமிய போதனைகள் குறித்து அந்த நாட்டின் சுல்தான் மக்களிடம் உரையாடினார். "இந்த நாட்டில் இஸ்லாமிய விதிமுறைகள் வலுவாக வளர்வதை நான் பார்க்க வேண்டும்" என சுல்தான் ஹசாநல் போல்கியா பொது கூட்டம் ஒன்றில் தெரிவித்தார் என ஏஃப்பி செய்தி முகமையில் செய்தி வெளியாகியுள்ளது. புரூனேவில் ஒரின சேர்க்கை சட்ட விரோதமானது அதில் ஈடுபட்டால் 10 வருடம் வரை சிறைதண்டனைகள் வழங்கப்படலாம். புரூனேவின் மக்கள் தொகையில் இரண்டில் மூன்று பங்கு முஸ்லிம் மக்கள். சுமார் 4 லட்சத்து இருபதாயிரம் பேர் உள்ளனர். புரூனேயில் மரண தண்டனை நடைமுறையில் ஏற்கனவே உள்ளது ஆனால் 1957ஆம் ஆண்டிலிருந்து மரண தண்டனை யாருக்கும் வழங்கப்படவில்லை.
|
|
|
மசூத் அசாருக்கு தடைகோருவதில் சீனா அமைதி.
[Thursday 2019-04-04 07:00]
|
ஜெய்ஷே முகமது இயக்கத் தலைவன் மசூத் அசாருக்கு சர்வதேச அளவில் தடைவிதிக்க ஐநா.பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள நேரடித் தீர்மானம் சிக்கலை மேலும் அதிகமாக்கும் என்று சீனா கருத்து தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் கெங்-சுவாங் இப்பிரச்சினையை சரியான முறையில் தீர்க்க சீனா முயன்று வருவதாக தெரிவித்தார். கடந்த மார்ச் 27ம் தேதி அமெரிக்கா வரைவு தீர்மானம் ஒன்றை ஐநா.சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்தது.
|
|
|
ரொறன்ரோவில் அதிகாரபூர்வமான முதலாவது கஞ்சா போதைப் பொருள் விற்பனை நிலையம்!
[Thursday 2019-04-04 07:00]
|
ரொறன்ரோவில் முதலாவது கஞ்சா போதைப் பொருள் விற்பனை நிலையம் நேற்று முன்தினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. குயின் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் பல்கலைக்கழக அவென்யூபகுதியில், நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் இது திறந்து வைக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாகவே பலரும் அங்கு வரிசையில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. மிகவும் ஆர்வமுள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை முதலே அங்கு வரிசைபிடித்து நின்றதாகவும், திங்கட்கிழமை காலை அளவில் அங்கு பத்துக்கும் மேற்பட்டவர்களைக் காணக்கூடியதாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
|
|
|
‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் தெரசா மேயுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இங்கிலாந்து மந்திரி ராஜினாமா!
[Thursday 2019-04-04 07:00]
|
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பான ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 4-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த பிரதமர் தெரசா மே பரிசீலித்து வருகிறார். இது தொடர்பாக அவர் எதிர்க்கட்சி தலைவரான ஜெரேமி கார்பைனை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
|
|
|
ஜிம்பாப்வே நாட்டில் இடாய் புயல் பாதிப்பால் 268 பேர் உயிரிழப்பு!
[Wednesday 2019-04-03 17:00]
|
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் துறைமுக நகரான பெய்ராவை கடந்த மாதம் மணிக்கு 177 கிலோ மீட்டர் வேகத்தில் ‘இடாய் புயல்’ தாக்கியது. இதனால் ஏராளமான வீடுகளின் மேற்கூரைகளும், சுற்றுச்சுவர்களும் இடிந்து விழுந்தன. இடாய் புயலின் கோரத்தாண்டவத்துக்கு மொசாம்பிக் நாட்டில் சுமார் 500 பேர் பலியாகினர். தெற்காப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே நாட்டின் கிழக்கு பகுதியையும் இந்த கோரப்புயல் பதம் பார்த்தது. புயலை தொடர்ந்து பெய்த கனமழையால் பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பல்வேறு பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலைகளை வெள்ளநீர் அடித்துச் சென்று விட்டதால் நகரங்கள் எல்லாம் தீவு கூட்டங்களாக காட்சி அளிக்கின்றன.
|
|
|
ஐந்து இலட்சம் மதிப்புள்ள இரசாயன பொருள் திருட்டு: எட்மன்டன் தம்பதி மீது குற்றச்சாட்டு!
[Wednesday 2019-04-03 17:00]
|
எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்திலிருந்து மூன்று தொன் இரசாயன பொருட்களை திருடியதாக எட்மன்டன் தம்பதியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 49 வயதான ஆணொருவர் மற்றும் 44 வயதான பெண்ணொருவர் மீது நேற்று (செவ்வாய்க்கிழமை) குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது. திருடப்பட்ட இரசாயனப் பொருட்களின் பெறுமதி 5 இலட்சத்து 80 ஆயிரம் அமெரிக்க டொலர் என எட்மன்டன் பொலிஸ் சேவை குற்றப்பிரிவு அறிவித்துள்ளது.
|
|
|
அமெரிக்க அதிபர் ஓய்வு விடுதிக்குள் பொய் சொல்லி நுழைய முயன்ற பெண்!
[Wednesday 2019-04-03 17:00]
|
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஓய்வு விடுதி உள்ள இடத்தில், கணினிகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் மென்பொருளுடன் நுழைய முயன்ற சீனப் பெண் கைது செய்யப்பட்டார். புளோரிடாவின் Palm கடற்கரையில் டிரம்பின் ஓய்வு விடுதி உள்ளது. அங்கு கடந்த சனிக்கிழமை சென்ற சீனப்பெண் ஒருவர், நடக்காத ஒரு நிகழ்ச்சியின் பெயரைச் சொல்லி உள்ளே நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது.
|
|
|
கட்சிக் கூட்டத்தில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் இரண்டு பேரை வெளியேற்றினார் பிரதமர்!
[Wednesday 2019-04-03 17:00]
|
பிரதமரின் தலைமையில் இடம்பெற்ற கட்சிக் கூட்டத்தில் இருந்து ஜொடி வில்சன்-ரேபொல்ட் மற்றும் ஜேன் பில்போட் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக இரு முன்னாள் அமைச்சர்களும் முரண்பாடான கருத்துக்களை முன்வைத்துவரும் நிலையிலேயே அவர்களை கூட்டத்தில் இருந்து விலக்கியதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஒட்டாவாவில் உள்ள தேசிய லிபரல் கட்சியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தபோதே பிரதமர் இவ்வாறு கூறினார்.
|
|
|
உலகளவில் மாசடைந்த, துர்நாற்றமுள்ள காற்றால் உயிரிழந்த 50 சதவீதத்தினர் இந்தியா, சீனாவைச் சேர்ந்தவர்களே – ஆய்வு முடிவு!
[Wednesday 2019-04-03 17:00]
|
உலகளவில் மாசடைந்த, துர்நாற்றமுள்ள காற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில், 50 சதவீதத்தினர் இந்தியா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே என அமெரிக்க ஆய்வு நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன. (Gfx in) Health Effects Institute மற்றும் Institute for Health Metrics and Evaluation ஆகிய இரு நிறுவனங்கள் சேர்ந்து 2017-ல் மேற்கொண்ட ஆய்வில் உலகளவில் காற்று மாசால் ஏற்பட்ட 50 லட்சம் மரணங்களில் 25 லட்சம் மரணங்கள் இந்தியா மற்றும் சீனாவில் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
|
|
|
"பாகிஸ்தானில் இந்திய சிறுமிகளுக்கு கட்டாய திருமணம்" - விசாரணை கமிஷன் அமைத்து இஸ்லாமாபாத் ஐகோர்ட் உத்தரவு!
[Wednesday 2019-04-03 09:00]
|
இந்தியாவின் அண்டைநாடான பாகிஸ்தானில் சுமார் ஒரு கோடி இந்து மக்கள் வாழ்ந்து வருவதாக கருதப்படுகிறது. ஆனால், அந்நாட்டின் பழைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 75 லட்சம் இந்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்துக்குட்பட்ட கோக்டி மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்த ஹோலி கொண்டாட்டத்தின்போது அப்பகுதியில் மிகவும் செல்வாக்கு படைத்த முக்கிய பிரமுகர்கள் இரு இந்து சிறுமிகளை கடத்திச் சென்றனர். பின்னர், ரவீனா(13), ரீனா(15) ஆகிய அந்த சிறுமிகளை ஒரு முஸ்லிம் மதத்தலைவர் கட்டாய மதமாற்றம் செய்து இருநபர்களுக்கு திருமணம் செய்து வைத்த வீடியோ காட்சிகள் அந்நாட்டு சமூக வலைத்தளங்களில் உலா வந்தது. இவ்விவகாரத்தால் கொதிப்படைந்த இந்து மக்கள் சிந்து மாகாணத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை அவர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த சிறுமிகளை உடனடியாக மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாகிஸ்தானில் உள்ள இந்திய தலைமை தூதருக்கு வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டார்.
|
|
|
ஈரான் நாட்டில் கனமழை: 70க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு!
[Wednesday 2019-04-03 09:00]
|
ஈரான் நாட்டில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்கில் 70க்கும் மேற்பட்ட கிராமங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு பகுதியில் உள்ள குஸஸ்தான் என்ற இடத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தேஸ் மற்றும் கார்கே ((Dez and Karkheh)) ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
|
|
|
சீனா பள்ளி உணவில் விஷம் கலந்த ஆசிரியர்!
[Wednesday 2019-04-03 08:00]
|
சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹெனான் மாகாணத்தில் ஜியாவோஷு கிராமத்தில் தனியார் மழலையர் பள்ளி உள்ளது. இங்கு 4 மற்றும் 5 வயதுடைய குழந்தைகள் 50-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி காலை உணவு சாப்பிட்ட 23 குழந்தைகளுக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதில் 16 குழந்தைகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். 7 குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
|
|
|
"பிரக்சிட் வெளியேற்றத்துக்கு மேலும் கால அவகாசம் கோரப்படும்" – தெரசா மே!
[Wednesday 2019-04-03 08:00]
|
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து 46 ஆண்டுக்கால உறவைத் துண்டித்துக் கொண்டு, எந்த வித ஒப்பந்தமும் இன்றி வெளியேறும் பிரிட்டன் பிரதமர் தெரசா மேயின் முடிவுக்கு, அந்நாட்டு எம்பிக்கள் ஆதரவு கிடைக்காத நிலையில், பிரக்சிட்டை அமல்படுத்த மேலும் கால அவகாசம் கோரப்படும் என்று தெரசா மே அறிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற பிரட்டனுக்கு இன்னும் எட்டு நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளது.
|
|
|
பத்திரிகையாளர் கசோகி பிள்ளைகளுக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளை வழங்கிய சவுதி பேரரசு!
[Tuesday 2019-04-02 17:00]
|
எண்ணெய் வளம் மிகுந்த அரபு நாடான சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர் ஜமால் கசோகி. 59 வயதான இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்தார். அவர் தனது கட்டுரைகளில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் குறித்தும், அந்நாட்டின் மன்னராட்சி முறை பற்றியும் கடுமையாக விமர்சித்து எழுதி வந்தார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் 2ந்தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்திற்கு சென்றபொழுது அவர் கொல்லப்பட்டார். இதற்கு சவுதி அரேபிய இளவரசர் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனை சவுதி அரேபிய அரசு மறுத்து வந்தது. கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் என துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டினார். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்த பிறகு சவுதி அரேபிய அரசு ஒப்பு கொண்டது. எனினும் அதை சண்டையில் ஏற்பட்ட மரணம் என்று மட்டுமே தெரிவித்தது. பின்னர்தான் சவுதியிலிருந்து அனுப்பப்பட்ட குழு அவரை கொன்றது என தெரியவந்தது. இச்சம்பவம் சவுதி அரேபியாவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்டது மிகப்பெரிய தவறுதான். அதே நேரம் இதில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை என சவுதி அரேபியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
|
|
|
|