Untitled Document
May 2, 2024 [GMT]
"தவறான உறவில் ஈடுபட்டால் மரண தண்டனை" - புரூனேயில் புதிய சட்டம்!
[Saturday 2019-03-30 08:00]

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று புரூனே. இங்கு ஷரியத் சட்டம் பின்பற்றப்படுகிறது. அதுவும் அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனேசியாவை காட்டிலும் இங்கு ஷரியத் சட்டம் மிகக் கடுமையாக நடைமுறைப் படுத்தப்படுகிறது. இந்த நாட்டில் தகாத உறவும் (கள்ள உறவு), ஓரினச்சேர்க்கையும் கிரிமினல் குற்றமாகக் கருதப்படுகிறது. ஆனாலும் இந்த குற்றங்கள் அங்கு பெருகி வந்த நிலையில் தண்டனையை கடுமையாக்க முடிவு எடுத்தனர். தண்டனை கடுமையாகிறபோதுதான் குற்றங்கள் நடப்பது முடிவுக்கு வரும் என கருதிய அந்த நாட்டின் மன்னர் இவ்விரு குற்றங்கள் செய்வோருக்கும் மரண தண்டனை விதிக்க உத்தரவிட்டு சட்டம் கொண்டு வந்தார். இந்த நாட்டில் மரண தண்டனையை குற்றவாளிகள் மீது கல் எறிந்து கொன்று நிறைவேற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புரூனே நாட்டில் திருட்டை ஒழிக்கவும் தண்டனையை கடுமையாக்க சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி முதல் முறை திருடுகிற குற்றவாளிகளுக்கு வலது கையை வெட்டி விடுவார்கள். இரண்டாவது முறை அதே நபர் திருடினால் அவருக்கு இடது காலை வெட்டி விடுவார்கள்.


"பிரித்தானிய பிரதமரின் பிரெக்ஸிற் முயற்சி வெற்றியளிக்கும்" : ட்ரம்ப்!
[Friday 2019-03-29 17:00]

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, பிரெக்ஸிற் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுத்து வருவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் வைத்து நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”பிரித்தானிய பிரதமர் எனது சிறந்த நண்பராவார்.


கனேடிய புவியியலாளர் கொலைக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு.
[Friday 2019-03-29 17:00]

புர்கினோ பாசோவிலுள்ள சுரங்க முகாமிலிருந்து கனேடிய புவியியலாளர் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டமையை ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது. ஐ.எஸ். அமைப்பு நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. வுட்மன் என்ற குறித்த கனேடியர் கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி கடத்தப்பட்டார்.


நிரவ்மோடிக்கு லண்டனில் 2 சொகுசு வீடுகள்!
[Friday 2019-03-29 17:00]

மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி (48) தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர். இதற்கிடையே லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி இங்கிலாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இந்தநிலையில் இந்தியாவுக்கு நாடுகடத்துதல் தொடர்பாக வழக்கு இன்று லண்டன் கோர்ட்டில் நடைபெற உள்ளது. அப்போது அவர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்வார் என எதிர் பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளில் அவரது வக்கீல்கள் தயாராக உள்ளனர்.


அமெரிக்காவின் வரி விதிப்பை தளர்த்த கனடா தீவிரம்!
[Friday 2019-03-29 17:00]

அமெரிக்காவின் உருக்கு மற்றும் அலுமினியம் பொருட்கள் மீதான வரியை தளர்த்துவதற்கான நடவடிக்கை தொடர்பாக கனடா கவனம் செலுத்தியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வரித்தீர்வைகளை அதிகரிப்பது குறித்து கனடா ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


"வெளிநாட்டினர் ஊடுருவலை தடுக்காவிட்டால் மெக்சிகோ எல்லையை மூடுவேன்" - டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை!
[Friday 2019-03-29 17:00]

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றவுடன் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டார். மெக்சிகோ எல்லை வழியாக ஹோண்டுராஸ், கவுதமாலா, எல்சால்வேடர் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் ஊடுருவுகின்றனர். அவர்களை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட தீவிர நடவடிக்கை எடுத்துள்ளார். சுவர் கட்டுவதற்கான செலவை மெக்சிகோ ஏற்க வேண்டும் என வலியுறுத்தினார். அதை ஏற்க அந்நாடு மறுத்து விட்டது. எனவே மெக்சிகோ எல்லையை மூடப் போவதாக மிரட்டல் விடுத்தார். இருந்தும் அந்நாடு பணியவில்லை. இந்த நிலையில் மெக்சிகோ எல்லையை மூடப்போவதாக மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள அண்டை நாடுகளான ஹோண்டுராஸ், கவுதமாலா, மற்றும் எல்சால்வேடர் நாடுகளில் இருந்து மெக்சிகோ வழியாக சட்ட விரோதமாக ஊடுருவு கின்றனர்.


'நஃப்டா முரண்பாட்டு' நீடித்து வருவதாக தகவல்!
[Friday 2019-03-29 09:00]

வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (நஃப்டா) குறித்து நிலவி வரும் முரண்பாட்டு நிலைமைகள் நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உருக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள வரி இதுவரையில் தளர்த்தப்படவில்லை. இவ்வாறான ஓர் பின்னணியில் நப்டா உடன்படிக்கையில் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா கோரிக்கை விடுத்து வருகின்றது.


மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க அமெரிக்கா முடிவு!
[Friday 2019-03-29 08:00]

புல்வாமா தாக்குதலை அரங்கேற்றிய ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைவன் மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டையாக இருப்பதால், சீனாவுக்கு நெருக்குதல் ஏற்படுத்தும் வகையில் ஐநா.பாதுகாப்பு கவுன்சிலில், அமெரிக்கா வரைவு தீர்மானத்தை தாக்கல் செய்து உள்ளது. 14 உறுப்பு நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக மசூத் அசாரைத் தடை செய்யக் கோரிய போதும், ஒற்றை ஆதரவாக பாகிஸ்தானுக்கு தனது ஆதரவை சீனா வழங்கி வருகிறது. இந்த நிலையில் ஐநா.சபையின் தீவிரவாதத் தடுப்புக் குழுவை அணுகாமல், நேரடியாக பாதுகாப்பு கவுன்சிலில் வரைவு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது.


"கனடா-சீனா வர்த்தக முரண்பாடு" - கனோலா விவசாயிகள் கவலை!
[Friday 2019-03-29 08:00]

கனடா மற்றும் சீனாவிற்கும் இடையேயான வர்த்தக முரண்பாடுகள் தொடர்ந்தால், அது மிகப்பெரிய சந்தை தொழில்முனைவைத் பாதிக்கும் என்று பரந்த கனோலா விவசாயிகள் கவலை வௌியிட்டுள்ளனர். அண்மைய நெருக்கடிகள் விவசாயிகளுக்கு ஏன் ஏற்பட்டது என்றும்- கனேடிய அரசியல்வாதிகள் இதுபற்றி என்னநினைக்கிறார்கள் என்பதனையும் ஆராய்ந்து வருவதாக iPolitics பத்திரிகையின் வேளாண்மை தொடர்பான செய்தியாளர் Kelsey Johnson தெரிவித்துள்ளார். கெனோலா என்ற எண்ணெய் பெறும் விதையானது 1970 ஆம் ஆண்டுகளில் மானிடோபா பல்கலைக்கழகம், வேளாண்மை மற்றும் கனடா விவசாய துறை ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது.


பிரக்சிட் விவகாரத்தில் இறுதி கட்ட முயற்சி!
[Friday 2019-03-29 08:00]

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேற முடிவு செய்துள்ள நிலையில், ஒப்பந்தமின்றி வெளியேறும் பிரக்சிட் முடிவுக்கு எதிராக பிரிட்டன் எம்பிக்கள் இருமுறை நாடாளுமன்றத்தில் வாக்களித்துள்ளனர். எட்டு மாற்று வழிகளையும் அந்நாட்டு எம்பிக்கள் நிராகரித்துள்ளனர். இந்நிலையில் தெரசா மேயின் முயற்சிக்கு ஆதரவைத் திரட்ட கடைசிக் கட்ட முயற்சியாக பிரக்சிட்டை தாமதப்படுத்துதல், அல்லது ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிவது தொடர்பான திட்டத்தை முன்வைப்பது அதற்கான ஆதரவு வாக்கைக் கோருவது என்று அரசுத் தரப்பு கருதுகிறது.


சுந்தர்பிச்சை அமெரிக்க அதிபர் டிரம்புடன் சந்திப்பு!
[Thursday 2019-03-28 17:00]

அமெரிக்காவுக்கே தாம் கடமைப்பட்டிருப்பதாகவும், சீன ராணுவத்திற்கு அல்ல என்று கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை உறுதிபடத் தெரிவித்ததாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். சீனாவில் கூகுளின் வர்த்தக நடவடிக்கைகள் அந்நாட்டிற்கும், அந்நாட்டு ராணுவத்திற்குமே உதவுவதாக ஏற்கெனவே டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.


கனடாவின் வர்த்தக பற்றாக்குறை ஜனவரி மாதத்துடன் குறைந்துள்ளது!
[Thursday 2019-03-28 17:00]

கனடாவின் வர்த்தக பற்றாக்குறை கடந்த ஜனவரி மாதத்துடன் குறைந்துள்ளதாக நேற்று வௌியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. கணணிமயப்படுத்தப்பட்ட தரவு வௌியீட்டின் படி 4.82 பில்லியனில் இருந்து 4.25 பில்லியன் டொலர் வரை வர்த்தக பற்றாக்குறை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


'பிரெக்சிட் விவகாரம்' - எம்பிக்களின் அனைத்து மாற்று திட்டங்களையும் நிராகரித்தது பிரிட்டன் பாராளுமன்றம்!
[Thursday 2019-03-28 17:00]

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறும் ‘பிரெக்சிட்’ நடவடிக்கையின் காலக்கெடு வருகிற 29-ந் தேதி முடிவடைகிறது. ஆனால் பிரெக்சிட்டுக்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை 2 முறை அந்நாட்டு பாராளுமன்றம் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் நிராகரித்துவிட்டது. அத்துடன் ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்சிட்’ தீர்மானமும் 2 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில், பிரெக்சிட்டை தாமதப்படுத்துவதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இதனால் பிரெக்சிட்டின் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் கோரிக்கை வைத்தார். இதனை ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க் ஏற்றுக் கொண்டார். “பிரெக்சிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் பாராளுமன்றம் ஆதரித்தால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற மே மாதம் 22-ந் தேதி வரை காலக்கெடு வழங்கப்படுகிறது. மாறாக அந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால் அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதிக்குள் வெளியேறியாக வேண்டும்” என்று டொனால்டு டஸ்க் கூறியுள்ளார்.


பெருநிறுவனங்களில் பாலின வேறுபாடு : கனடாவில் அதிகரிப்பு!
[Thursday 2019-03-28 17:00]

கனடாவின் பெருநிறுவன நிர்வாகக் குழுக்களில் பாலின வேறுபாடு தொடர்வதாக ரொறென்ரோ டொமினியன் வங்கியின் பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சதவீதம் அமெரிக்காவை விட அதிகமாக இருப்பதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. நாட்டின் வளத் துறைகளிலும், சிறு நிறுவனங்களிலும் இந்த விடயம் தொடர்பில் முன்னேற்றம் காணப்பட வேண்டும் என்று பொருளியல் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.


"இந்தியா குறிப்பிட்ட இடங்களில் பயங்கரவாதிகள் முகாம்கள் இல்லை"- பாகிஸ்தான் அறிவிப்பு!
[Thursday 2019-03-28 17:00]

காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி, பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றதாக கூறப்பட்ட நிலையில், இந்தியா சில ஆதாரங்களை, பாகிஸ்தான் அரசிற்கு சமர்ப்பித்தது. இந்த கோப்புகளை ஆராய்ந்த பின்னர் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புல்வாமா தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு குறித்து, இந்தியா 6 பகுதிகளாக 91 பக்கங்கள் உடைய ஆவணங்களை சமர்ப்பித்தது. இந்த ஆவணத்தொகுப்பில் பாகிஸ்தான் மீதான பொதுவான குற்றச்சாட்டுகள் பல உள்ளன. முற்றிலும் பாராமல், புல்வாமா தாக்குதல் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் மட்டும் தனியே எடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.


பிரதம நீதியரசர் பதவிக்காக முன்னாள் நீதியமைச்சரின் பரிந்துரையை பிரதமர் நிராகரித்ததாக தகவல்!
[Thursday 2019-03-28 08:00]

பிரதம நீதியரசர் பதவிக்காக முன்னாள் நீதி அமைச்சர் ஜோடி வில்சன் ராய்போல்ட் செய்த பரிந்துரையை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே நிராகரித்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டு மானிடோபவின் நீதியரசர் ஒருவரை பிரதம நீதியரசர் பதவிக்காக நியமிக்குமாறு அப்போதைய நீதியரசர் ராய்போல்ட் பரிந்துரை செய்திருந்தார். எனினும் அந்த பரிந்துரையை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே நிராகரித்திருந்ததாக கூறப்படுகின்றது.


20 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த உலகப் புகழ்பெற்ற பிகாசோ ஓவியம்!
[Thursday 2019-03-28 08:00]

உலகப் புகழ்பெற்ற ஓவியரான பாப்லோ பிகாசோ கடந்த 1938-ம் ஆண்டு தனது காதலியும், புகைப்பட கலைஞருமான டோரா மாரை சித்தரிக்கும் வகையில் ஓவியம் ஒன்றை தீட்டினார். சவுதி அரேபியாவை சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவர் இதனை பொக்கிஷமாக பாதுகாத்து வந்தார். ஆனால் கடந்த 1999-ம் ஆண்டு அவர் தனது சொகுசு கப்பல் மூலம் பிரான்ஸ் சென்றபோது மர்ம நபர்கள் சிலர் அவரிடம் இருந்து இந்த ஓவியத்தை திருடி சென்றனர். இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த ஓவியம் நெதர்லாந்தில் கிடைத்துள்ளது.


கனடாவில் போலி அழைப்புக்களின் மூலம் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதாக எச்சரிக்கை!
[Thursday 2019-03-28 08:00]

போலி தொலைபேசி அழைப்புக்களின் மூலம் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Guelph Hydro மற்றும் Alectra Utilities நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன. தமது நிறுவனத்திலிருந்து அழைப்பு ஏற்படுத்துவதாகக் கூறி போலியான முறையில் சட்டவிரோத குழுவொன்று அழைப்புக்களை ஏற்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருவதாக இதன்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலுவைக் கட்டணத்தை செலுத்தத் தவறினால் இணைப்பு துண்டிக்கப்படும் என சிலர் தொலைபேசி ஊடாக எச்சரிக்கை விடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


பிரிட்டன் எம்பிக்கள் வாக்கெடுப்பால் தெரசா மேவுக்கு மீண்டும் பின்னடைவு!
[Thursday 2019-03-28 08:00]

பிரக்சிட் எனப்படும் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் அனைத்து மாற்று வழிமுறைகளுக்கும் எதிராக பிரிட்டன் நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஒப்பந்தமின்றி வெளியேற இங்கிலாந்து அரசு முடிவெடுத்த நிலையில், பிரதமர் தெரசா மேயின் முயற்சிக்கு நாடாளுமன்றம் இரண்டு முறை முட்டுக்கட்டை போட்டது. மூன்றாவது முறையாக வாக்கெடுப்பு நடத்துவதற்காக ஐரோப்பிய யூனியனிடம் கால அவகாசத்தை அவர் கோரியிருந்தார். இம்முறை தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றி தந்தால் தாம் ராஜினாமா செய்யவும் தயார் என்று தெரசா மே அறிவித்திருந்தார். இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான 8 மாற்று வழிகள் குறித்து எம்பிக்கள் நேற்று நாடாளுமன்றத்தில் பல முறை விவாதம் நடத்தினர். ஆனாலும் இந்த எட்டுவழிகளையும் இங்கிலாந்து எம்பிக்கள் நிராகரித்து விட்டனர்.


பேரழிவால் சீர்குலைந்த மொசம்பிக்கை வாட்டும் தொற்றுநோய்!
[Wednesday 2019-03-27 17:00]

சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மொசம்பிக்கின் பெய்ரா நகரில் ஐவர் கொலரா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் பேரழிவை சந்தித்திருந்த மொஸம்பிக் தற்போது மலேரியா, கொலரா போன்ற தொற்று நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. இயற்கை பேரழிவில் நூற்றுக் கணக்கானோர் உயிரிந்த நிலையில், தற்போது பலரும் தொற்று நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


3 மாத சிறைதண்டனைக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் நவாஸ் ஷெரீப்!
[Wednesday 2019-03-27 17:00]

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (வயது 69), அல் அஜீசியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த டிசம்பர் மாதம், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். இருதய நோய், நீரிழிவு நோயால் அவதிப்பட்ட அவருக்கு சிறையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், மருத்துவமனையில் சேர்த்து உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதனை சுட்டிக்காட்டி நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமீன் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், நவாஸ் ஷெரீப்புக்கு 6 வாரங்கள் ஜாமீன் வழங்கினர். பாகிஸ்தானுக்குள் எந்த பகுதியிலும் மருத்துவ சிகிச்சை பெறலாம், ஆனால், வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.


மூடப்பட்ட வான்வெளியை மீண்டும் திறந்தது பாகிஸ்தான்!
[Wednesday 2019-03-27 17:00]

பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரில் உள்ள பாலகோட் பகுதிக்குள் கடந்த மாதம் இந்திய விமானப்படைகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உள்பட பல விமான நிலையங்களை பாகிஸ்தான் அரசு அவசரமாக மூடியது. இதேபோல் சில நகரங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களும், உள்நாட்டு விமான நிலையங்களும் மூடப்பட்டன. பிப்ரவரி மாதம் 27-ம் தேதியில் இருந்து சில நகரங்களின் வான் எல்லை வழியாக வெளிநாட்டு விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர், சில முக்கிய விமான நிலையங்கள் வழியாக மிக குறைவான விமானச் சேவைகள் இயக்கப்பட்டன. சுமார் ஒருமாத இடைவெளிக்கு பின்னர் இஸ்லாமாபாத், கராச்சி, பெஷாவர், குவெட்டா ஆகிய விமான நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டு உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் தரையிறங்கவும், புறப்பட்டு செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டது.


ரொறன்ரோவில் கடத்தப்பட்ட சீன நபர் பாதுகாப்பாக மீட்பு!
[Wednesday 2019-03-27 17:00]

ஒன்ராறியோ மாகாண தலைநகர் ரொறன்ரோவில் வைத்து கடத்தப்பட்டவர் என நம்பப்படும் சீன பிரஜை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வான்சென் லூ (வயது 22) என்ற இளைஞன் ஒன்ராறியோ வீதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு மக்களிடம் உதவி கோரியுள்ளார். இது தொடர்பாக குடியிருப்பாளர்கள் மாகாண பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிறு காயங்களுக்கு உட்பட்டிருந்த குறித்த சீன இளைஞனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


லண்டனில் திப்பு சுல்தானின் வாள், துப்பாக்கி ஏலத்தில் விற்பனை!
[Wednesday 2019-03-27 16:00]

திப்பு சுல்தான் 1750ம் ஆண்டு நவம்பர் 20ல் தேவனஹள்ளி பகுதியில் பிறந்தவர் ஆவார். இவர் மைசூரின் புலி எனவும் அழைக்கப்பட்டவர். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான் ஹைதர் அலியின் மகனாவார். பிரிட்டிஷ் படைகளுடனான இரண்டாம் ஆங்கில-மைசூர்ப் போரில் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்த திப்பு, தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார். திப்பு சுல்தான் ஆட்சிக்காலத்தின்போது போர்களில் பயன்படுத்திய வாள், துப்பாக்கி போன்றவற்றை லண்டனில் உள்ள ஒரு நிறுவனம் ஏலம் விட்டது.


லண்டனில் கைதான நிரவ் மோடி மீண்டும் ஜாமீன் மனு!
[Wednesday 2019-03-27 08:00]

மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48), அங்குள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றின் மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை (சுமார் ரூ.13 ஆயிரத்து 500 கோடி) பரிமாற்றம் செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது இந்தியாவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு முன்பாகவே அவர் நாட்டில் இருந்து தப்பி விட்டார். அவர் இங்கிலாந்தில் இருப்பதை அறிந்து, அவரை நாடு கடத்திக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. இந்த நிலையில் அவர் லண்டனில் கடந்த 19-ந்தேதி கைது செய்யப்பட்டார்.


"பாகிஸ்தானில் இந்து பெண்களின் கட்டாய மதமாற்றம்" :வழக்கில் புதிய திருப்பம்!
[Wednesday 2019-03-27 08:00]

பாகிஸ்தானில் இரண்டு இந்து பெண்களை கடத்தி வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதாக சொல்லப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இன்று இந்த வழக்கு குறித்த விசாரணை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் வந்தது. ஆனால், புதிய திருப்பமாக இரண்டு பெண்களும் தங்களுக்கு முறையே 18 மற்றும் 20 வயது ஆகிறது என்றும், தாங்கள் தாங்களாகவே இஸ்லாம் மதத்தை தழுவியதாகவும் தெரிவித்துள்ளனர். அரசு நிறுவனங்களும், ஊடகங்களும் தங்களை தொந்தரவு செய்வதாகவும், அத்தகைய செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டுமென பாதிக்கப்பட்ட இருவரும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில்புகார் அளித்துள்ளதாகவும் பிபிசி செய்தியாளர் ஃபார்ஹான் ராஃபி கூறியுள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு தங்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு இல்லை என்றும் இரு பெண்கள் நீதிமன்றத்தில் கோரினர். எனவே அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமாபாத் துணை ஆணையிரிடம் அப்பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம், அவர்களை பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்புமாறு உத்தரவிட்டது.


போதைப்பொருள் உபயோகிப்பதன் காரணமாக 600 பேர் உயிரிழப்பு!
[Wednesday 2019-03-27 08:00]

ஒன்றாரியோவில் 600 பேர் போதைப்பொருள் பாவனை காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இறப்பு அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இறப்பு வீதக் கணக்கெடுப்பின் புதிய அறிக்கைக்கு இணங்க, கடந்த 2018ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் 600 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 94 சதவீதமானவர்கள் விபத்துக்களினால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.


ஜெர்மனி செல்ல வேண்டிய விமானத்தை தவறுதலாக ஸ்காட்லேண்டில் தரையிறக்கிய விமானி!
[Wednesday 2019-03-27 08:00]

ஜெர்மனிக்கு செல்ல வேண்டிய விமானம் தவறுதலாக ஸ்காட்லேண்டுக்கு சென்றது தொடர்பாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. 97 பேர் பயணிக்கக் கூடிய BAe-146 விமானம் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் சார்பில் லண்டனில் இருந்து டபிள்யூ.டி.எல். ((WDL)) வான் போக்குவரத்து சேவை நிறுவனத்தால் இயக்கப்பட்டது. அந்த விமானத்தின் பணிக்குழுவிடம் தவறான பயணத்திட்டத்துக்கான ஆவணங்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா