Untitled Document
May 7, 2024 [GMT]
அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனி குடியுரிமை இல்லை: - அதிபர் ட்ரம்ப்
[Wednesday 2018-10-31 08:00]

அமெரிக்காவில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் குடியுரிமை பெறுவதற்கு அந்நாட்டின் 14


உலகம் முழுவதும் காற்று மாசால் 6 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு: - உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்
[Tuesday 2018-10-30 16:00]

காற்று மாசால் உலகம் முழுவதும் 2016ம் ஆண்டு 6 லட்சம் குழந்தைகள் உயிரிழந்ததாக உலக சுகாதாரத்துறை அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் காற்று மாசுபாடு மற்றும் உலக சுகாதாரம் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் காற்று மாசு தொடர்பாக அறிக்கை ஒன்றை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் மாசடைந்த காற்றால் 2016ம் ஆண்டு உலகம் முழுவதும் 15 வயதிற்கு உட்பட்ட 6 லட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் உலகில் உள்ள 93% குழந்தைகள் தினமும் மாசடைந்த காற்றையே சுவாசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தோனேஷியா விமான விபத்து: - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்!
[Tuesday 2018-10-30 15:00]

இந்தோனேஷியா விமான விபத்தில் சிக்க வேண்டிய நபர் அதிர்ஷ்டவசமாக போக்குவரத்து நெரிசல் காரணமாக அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார். இந்தோனேஷியாவின் தலைநகர் Jakarta-விலிருந்து Pangkal Pinang விமானநிலையத்திற்கு Lion Air's JT-610 என்ற விமானம் 189 பேருடன் புறப்பட்டுச் சென்றது.


இரண்டு கால்களையும் இழந்த காதலனை திருமணம் செய்து கொண்ட இளம் பெண்!
[Tuesday 2018-10-30 15:00]

இரண்டு கால்களையும் இழந்து தவித்து வந்த காதலனை இளம் பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

இது குறித்த தகவலை காதலனை கரம் பிடித்த பெண்ணே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் என் உயிர் நண்பனை நான் திருமணம் செய்து கொண்டேன். அதிக பொருட்செலவில் திருமணம் செய்து கொள்வதற்கு பதிலாக அந்த பணத்தை எங்களின் வருங்காலத்துக்கு உபயோகப்படுத்தவுள்ளோம் என பதிவிட்டுள்ளார்.


கனடாவில் மோட்டாரை சரிபார்க்க கிணற்றுக்குள் இறங்கிய பெண்ணுக்கு நேர்ந்த ஆபத்து!
[Tuesday 2018-10-30 07:00]

கனடாவில் வீட்டில் தண்ணீர் வராததால் மோட்டாரை சரிபார்ப்பதற்காக கிணற்றுக்குள் இறங்கிய ஒரு பெண் தவறி விழுந்ததில் அவர் பாக்கெட்டில் இருந்த ஸ்குரூடிரைவர் அவரது வயிற்றைக் குத்திக் கிழித்ததுடன் அவரது காலும் உடைந்தது. Saskatchewanஇலுள்ள Candoவில் தனது குடும்பத்தினருடன் வசிக்கும் Chrissy Gamble, வீட்டில் தண்ணீர் வராததால் மோட்டாரை சரிபார்ப்பதற்காக கிணற்றுக்குள் இறங்கியிருக்கிறார்.


விமான விபத்தில் இறந்த தாய் -: வேதனையில் கதறி அழுத 14 வயது மகள்
[Tuesday 2018-10-30 07:00]

இந்தோனேசியா விமான விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணின் மகளிடம் அது குறித்து கூறப்பட்ட நிலையில் பள்ளிக்கூடத்திலேயே கதறி அழுதுள்ளார். நாட்டின் ஜகர்டா நகரிலிருந்து பிங்கல் பினாங்குக்கு 189 பேருடன் விமானம் கிளம்பிய நிலையில் 13வது நிமிடத்தில் மாயமானது. இதையடுத்து விமானம் கடலில் மூழ்கியதாக அறிவிக்கப்பட்டது. விமானத்தையும், உள்ளிருந்தவர்களின் சடலங்களையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது.


சிறைச்சாலை மேற்பார்வையாளர் மீது கொடூர தாக்குதல்: - பிரான்சில் சம்பவம்
[Tuesday 2018-10-30 07:00]

பிரான்சில் Villefranche-sur-Saone (Rhone) சிறைச்சாலையில் கைதி ஒருவர் அங்கிருந்த மேற்பார்வையாளர் ஒருவரை மோசமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 17:30 மணி அளவில் உணவு வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் போது நடைபெற்றுள்ளது.


பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி அமெரிக்காவிலிருந்து கடிதம்!
[Monday 2018-10-29 16:00]

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கானோர் ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், முருகன் நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.இந்த 7 பேருக்கும் ஆதரவாகப் பல குரல்கள் எழுந்தன.


விபத்தில் சிக்கிய விமானத்தை ஓட்டிச் சென்றவர் இந்திய பைலட்!
[Monday 2018-10-29 16:00]

இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்க்கால் பினாங்கு நகருக்கு இன்று காலை 6.20 மணிக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.


இந்தோனேசியாவில் விழுந்து நொறுங்கிய விமானம்: - 188 பயணிகள் பலி?
[Monday 2018-10-29 09:00]

இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்க்கால் பினாங்கு நகருக்கு இன்று காலை 6.20 மணிக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது.


வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதியர் !
[Monday 2018-10-29 08:00]

ஜெர்மனியை சேர்ந்த ஆண் நர்சு நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் பணிபுரிந்தார். அப்போது நோயாளிக்கு அளவுக்கு மீறி ஊசி மருந்து மற்றும் மாத்திரை கொடுத்து வந்தார். அதில் பலர் உயிரிழந்தனர். கடந்த 2005-ம் ஆண்டில் டெல்மென் ஹார்ஸ்ட் ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு டாக்டர் பரிந்துரைக்காத அளவுக்கு அதிகமான வீரிய சக்தி கொண்ட ஊசி போட்டபோது கையும் களவுமாக சிக்கினார்.


இனவெறியால் அமெரிக்காவில் நடந்த சோகம்!
[Monday 2018-10-29 08:00]

அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் யூதர்கள் வழிபாட்டுத் தலம் இருக்கிறது. ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட யூதர்கள் வழிபாட்டுத் தலத்துக்கு வந்திருந்தனர். அப்போது அங்கு புகுந்த 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதை எதிர்பாராத அங்கிருந்த மக்கள் ஓடி ஒளிந்தனர்.


அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு எதிரொலி: - பிரெஞ்சு ஆலயங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
[Sunday 2018-10-28 18:00]

அமெரிக்காவின் Pittsburg Synagogue நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பிரெஞ்சு ஆலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரில் உள்ள யூத வழிபாட்டுத்தலத்தில், மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


முத்துக்களால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆணுறை: -உலகை உலுக்கிய கொலையில் வெளியான உண்மை
[Sunday 2018-10-28 08:00]

தென்னாப்பிரிக்காவின் ஸ்டெலன்போஷ் பகுதியில் 4 பேர் கொண்ட கும்பல் 21 வயது மாணவியை கடத்திச் சென்று கற்பழித்த பின்னர் கொடூரமாக கொலை செய்த வழக்கில் அதிரடி திருப்பம். கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் நண்பர்களுடன் நின்றிருந்த ஹன்னா கொர்னேலியஸ் என்ற மாணவியை 4 பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று கூட்டு பலாத்காரத்திற்கு உட்படுத்தியது.


கடவுச்சீட்டை கடித்து குதறிய நாயால் தேனிலவுக்கு சென்ற இளம் தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம்!
[Sunday 2018-10-28 08:00]

பாலி தீவுக்கு பிரித்தானியா தம்பதி தேனிலவு சென்ற நிலையில் கணவரின் பாஸ்போர்ட்டின் ஒரு பகுதி நாய் கடித்து கிழிந்ததால் அவர்கள் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர். பிரித்தானியாவை சேர்ந்தவர் டேனியல். இவர் மனைவி தியா பார்த்திங். தம்பதிகள் இருவரும் தங்களது தேனிலவை கொண்டாட பாலி தீவுக்கு சென்றனர்.


மறைந்த பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் விருது!
[Saturday 2018-10-27 18:00]

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மனித உரிமை ஆர்வலராக செயல்பட்டவர் அஸ்மா ஜஹாங்கீர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் இந்த ஆண்டுக்கான விருதுக்கு பாகிஸ்தானின் மனித உரிமை ஆர்வலர் அஸ்மா ஜஹாங்கீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை தவிர, இந்த விருதுக்கு மேலும் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


அமெரிக்காவில் பிரிந்து சென்ற காதலியின் உதட்டை கடித்து எறிந்த காதலன்: - நீதிமன்றம் விதித்த கடும் தண்டனை
[Saturday 2018-10-27 17:00]

அமெரிக்காவில் பிரிந்து சென்ற காதலியிடம் அடையாளம் வைப்பதற்காக அவருடைய உதட்டை கடித்து எறிந்த காதலனுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கைலா ஹேய்ஸ் என்ற 17 வயது பெண், 21 வயது இளைஞரான சேத் ஆரோன் ஃப்ளூரி என்பவரை 2016ம் ஆண்டு முதல் காதலித்துள்ளார்.


புத்தகம் படித்துக் கொண்டிருந்த போது இடைவிடாமல் அழுததால் பெற்ற குழந்தையை குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்!
[Saturday 2018-10-27 17:00]

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள சாண்ட்லர் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜென்னா போல்வெல் (19). இவருக்கு பிறந்த ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை இருந்தது. அந்த குழந்தைக்கு ரெய்னர் என பெயரிட்டிருந்தனர். இந்த நிலையில் ஜென்னா போல்வெல் பரபரப்பாக போலீஸ் நிலையம் வந்தார். வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது குழந்தையை யாரோ கடத்தி சென்று விட்டனர் என அழுது கொண்டே புகார் செய்தார்.


ஈரான் மீதான பொருளாதார தடை அடுத்த மாதம் முதல் தீவிரமாக அமல்: - டிரம்ப் அறிவிப்பு
[Saturday 2018-10-27 17:00]

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனியுடன் ஈரான் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை 2015-ம் ஆண்டு ஏற்படுத்தியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாக கூறி அமெரிக்கா சில மாதங்களுக்கு முன் அதிலிருந்து விலகியது. அத்துடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானபோது, விலக்கி கொள்ளப்பட்ட பொருளாதார தடைகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.


பத்திரிகையாளரின் மரண மர்மம் தீரும் வரை ஆயுதங்களை விற்க ஜெர்மனி மறுப்பு!
[Saturday 2018-10-27 07:00]

சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின் முடியாட்சியை எதிர்த்து கடுமையாக விமர்சித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்தில் கொல்லப்பட்டார். இந்த தகவலை சமீபத்தில் சவுதி அரசு உறுதி செய்தது. இதனை அடுத்து, சவுதிக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் அழுத்தம் கொடுக்க துவங்கியுள்ளனர். பத்திரிகையாளரின் மரணத்துக்கு முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.


அதிர்ச்சியில் மேடையில் மயங்கி விழுந்த உலக அழகி!
[Saturday 2018-10-27 07:00]

மியான்மர் நாட்டில் Miss Grand International 2018 என்ற உலக அழகிப் போட்டி நடந்தது. இதன் இறுதிச் சுற்றில் பராகுவே நாட்டு அழகி கிளாரா சோஸாவும் , இந்திய அழகி மீனாட்சி சவுத்ரியும் களத்தில் இருந்தனர்.


மழலையர் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: - 14 குழந்தைகள் படுகாயம்
[Friday 2018-10-26 17:00]

சீனாவின் சோங்கிங் நகரில் உள்ள யுடாங் நியூ செஞ்சூரி மழலையர் பள்ளியில் இன்று காலை குழந்தைகள் தங்கள் வழக்கமான பயிற்சி முடிந்து வகுப்புகளுக்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது பள்ளி வளாகத்திற்குள் வந்த 39 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், தான் கொண்டு வந்த கத்தியால் குழந்தைகளை சரமாரியாக வெட்டத் தொடங்கினார்.


வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிய விவகாரம்: - பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.4.70 கோடி அபராதம்
[Friday 2018-10-26 09:00]

கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பயனாளர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் தேர்தல் பிரசார நிறுவனம் பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது இங்கிலாந்து தகவல் ஆணையத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.


பாலியல் குற்றச்சாட்டு: - 48 பேரை பணி நீக்கம் செய்த கூகுள்!
[Friday 2018-10-26 09:00]

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக 13 சிரேஸ்ட முகாமையாளர்கள் உள்பட 48 பேரை கூகுள் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. தொழில்நுட்பத் துறை மற்றும் தேடுபொறி துறையில் கூகுளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான் சுந்தர் பிச்சை எழுதிய கடிதத்தில், ஊழியர்களின் பொருத்தமற்ற நடத்தை குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நிறுவனம் கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.


3 மாதங்களில் 87 லட்சம் குழந்தைகளின் நிர்வாண படங்களை அதிரடியாக நீக்கிய பேஸ்புக் நிறுவனம்!
[Friday 2018-10-26 09:00]

உலகமெங்கும் உள்ள இணையதள ஆர்வலர்களின் ஆதரவைப் பெற்றுள்ள


கசோக்கி கொலையில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள்: - சவுதி இளவரசர்
[Friday 2018-10-26 09:00]

சவுதி அரேபிய மன்னராட்சியையும், இளவரசர் முகமது பின் சல்மானையும் விமர்சித்து கட்டுரைகள் எழுதி வந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 60), துருக்கியில் சவுதி தூதரகத்தில் கடந்த 2-ந் தேதி மாயமான நிலையில், அவர் அங்கேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல், உலக அரங்கை உலுக்கி உள்ளது.


பிளாஸ்டிக் போத்தல்களை கொடுத்தால் பேருந்தில் இலவச பயணம்: - இந்தோனேசியாவில் அசத்தல் திட்டம்
[Thursday 2018-10-25 18:00]

பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்யவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கவும் இந்தோனேஷியா அரசு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு ஆயிரக்கணக்கான தீவுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகிலேயே கடல் மாசு அதிகம் உள்ள நாடாக இந்தோனேஷியா கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து கடலில் கலக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற இந்தோனேஷியா அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு அபராதம், மறு சுழற்சி நடவடிக்கை என பிளாஸ்டிக்கை ஒழிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


மெக்ஸிகோவில் கொண்டாடப்பட்ட வினோத திருவிழா!
[Thursday 2018-10-25 18:00]

மெக்ஸிகோ நாட்டில் நடைபெற்ற அல்ப்ரிஜஸ் எனும் திருவிழா பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்டு மெக்ஸிகோவில் அல்ப்ரிஜஸ் திருவிழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. பறக்கும் மான், நான்கு கால் சேவல், டிராகன், எலும்புக்கூடுகள் என வினோத உருவங்களைப் படைத்து திருவிழாவை கோலாகலமாகக் கொண்டாடினர். மெக்ஸிகோவின் புகழ் பெற்ற கலைஞரான பெட்ரோ லினரிஸ் என்பவரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா