Untitled Document
May 16, 2024 [GMT]
அண்டார்டிகாவை தனியாக நடந்து கடக்க முயன்ற பிரிட்டிஷ் ஆய்வாளர் ஹென்ரி ஒர்ஸ்லி மரணம்!
[Monday 2016-01-25 19:00]

அண்டார்டிகா பகுதியை யாருடைய உதவியும் இன்றி தனியாக நடந்தே கடக்க முயன்றுகொண்டிருந்த பிரிட்டனைச் சேர்ந்த சாகச நடைபயண ஆய்வாளர் ஒருவர் இறந்துவிட்டார்.அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் செயற்படாமல் போனதால் அவரது மரணம் நிகழ்ந்திருக்கிறது.இறந்தவரின் பெயர் ஹென்ரி ஓர்ஸ்லி. அவருக்கு வயது 55. இவர் முன்னாள் இராணுவ அதிகாரி. கடந்த வெள்ளிக்கிழமை தான் மிகவும் களைத்துவிட்டதாகவும் தனது உடலில் தண்ணீர்ச்சத்து வெகுவாக குறைந்துவிட்டதாகவும் வானலைகள் மூலம் அவர் உதவி கோரியதைத் தொடர்ந்து மீட்பு விமானத்தின் மூலம் சிலிக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.அவரது நடைபயணத்தில் 71ஆவது நாளில் அவர் இப்படி மீட்கப்பட்டார். அவரது இறுதி இலக்கை அடைவதற்கு 50 கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவில் அவரால் தொடர்ந்து நடக்க முடியாத நிலைமை ஏற்பட்டது.அவரது இந்த நடைபயண சாகசத்துக்கு போஷகர்களாக இருந்த பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமும் அவரது சகோதரர் இளவரசர் ஹாரியும் தங்களின் நண்பனாகவும் தங்களுக்கு உந்து சக்தியாகவும் இருந்த ஒருவரின் மரணம் தமக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.


அமெரிக்க நாடுகள் அனைத்திலும் ஸிகா வைரஸ் பரவும் அபாயம் - உலக சுகாதார நிறுவனம்
[Monday 2016-01-25 19:00]

சிகா வைரஸைப் பரப்பும் அடெஸ் கொசுசில தென்னமெரிக்க நாடுகளில் பரவிவரும் ஸிகா வைரஸ், கனடாவையும் சிலியையும் தவிர்த்து மற்ற அமெரிக்க கண்ட நாடுகள் அனைத்திலும் பரவக்கூடும் என்று தாம் எதிர்பார்ப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.கடந்த ஆண்டு மே மாதம் துவங்கி பிரசிலில் இக்கிருமி வேகமாகப் பரவிவருகிறது.அடெஸ் என்கிற கொசுவின் கடியால் பரவும் இது குழந்தைகள் பாதிப்புடன் பிறப்பதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.


ஸ்பெயின் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: - ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு!
[Monday 2016-01-25 13:00]

ஸ்பெயின் மற்றும் மொராக்கோ நாட்டின் மத்திய தரைக்கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்ட்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் இல்லை. கடந்த 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அல் ஹோசிமா அருகே ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 631 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.


சீனாவில் உள்ள ஐபோன் தயாரிப்பு ஆலை வளாகத்தில் தீ விபத்து!
[Monday 2016-01-25 13:00]

சீனாவின் செங்க்சோ நகரில் உள்ள ஐபோன் தயாரிப்பு ஆலை வளாகத்தில் நேற்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான பாக்ஸ்கான் தொழில்நுட்பக் குழுமத்தின் பிரதான தொழிற்பேட்டையான இங்கு முதலில் குளிர் சாதன இயந்திரத்தின் விசிறியில் இருந்து தொடங்கிய தீ காற்றோட்டத்திற்காக உள்ள குழாய்கள் வழியாக மளமளவென ஆலையின் கூரை மீது பரவியது. உடனடியாக ஆலை வளாகத்தின் அருகே உள்ள தீயணைப்பு அதிகாரிகள் மூலமாக தீ உடனடியாக அணைக்கப்பட்டது.இந்த தீ விபத்தால் உயிர் சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று பாக்ஸ்கான் குழுமம் இன்று தெரிவித்துள்ளது. எனினும் விபத்துக்கான காரணம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


அமெரிக்காவின் தெற்கு கடற்கரை பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
[Monday 2016-01-25 07:00]

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்துக்குட்பட்ட தெற்கு கடற்கரை பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்தது. இதனால் வீடுகள் வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கம் பெட்ரோ வளைகுடாவில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள கிழக்கு தென்கிழக்கு பகுதியில், பூமிக்கு அடியில் 124.8 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது. நில நடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பெரிய அளவில் பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.


114 ஏர்பஸ் விமானங்களை வாங்கும் இரான்!
[Monday 2016-01-25 07:00]

இரான் 114 ஏர்பஸ் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் ஒன்றில் இந்த வாரம் கையெழுத்திடவுள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.அணுசக்தி உற்பத்தி தொடர்பில், இரான் மீது விதிக்கப்பட்டிருந்த சர்வதேச தடை நீக்கப்பட்டதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இரானிய அதிபர் ஹசன் ரௌஹானி பிரான்ஸுக்கு புதன்கிழமை மேற்கொள்ளவுள்ள பயணத்தின்போது, இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என போக்குவரத்து அமைச்சர் அப்பாஸ் அக்குந்தியை மேற்கோள்காட்டி இரானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.அணுசக்தி உற்பத்தி தொடர்பில், இரான் மீது விதிக்கப்பட்டிருந்த சர்வதேசத் தடை நீக்கப்பட்டதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இரானில் பழைமையாகியுள்ள விமானங்களை மாற்றி, அடுத்து வரும் தசாப்தங்களுக்கு ஏற்ற வகையில் சேவைகளை மேம்படுத்தி மாற்றி அமைக்க குறைந்தது நானூறு விமானங்கள் தேவைப்படுவதாக மேற்கத்திய மற்றும் இரானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


ஆசியாவின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு: -விமான சேவைகள் ரத்து!
[Monday 2016-01-25 07:00]

தென் கொரியத் தீவான ஜேஜூவில் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுகு பனிப்பொழிவு ஏற்பட்டதால அப்பகுதியில் இரண்டாவது நாளாக விமான சேவைகள் ரத்தாகியுள்ளன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பல இடங்களில் சிக்கியுள்ளனர்.


கலிஃபோர்னியா சிறையிலிருந்து 3 கைதிகள் தப்பியோட்டம்!
[Monday 2016-01-25 07:00]

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உச்சகட்ட பாதுகாப்பு மிக்க சிறைச்சாலை ஒன்றிலிருந்து தப்பிச் சென்றுள்ள மூன்று கைதிகளுக்கு வலைவிரித்து அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.சித்திரவதை, கொலை உள்ளிட்ட வன்முறைக் குற்றச் சம்பவங்கள் தொடர்பில் இந்த மூன்று பேரும் வழக்கு விசாரணைகளை எதிர்நோக்கியுள்ளனர்.சாண்டா அனா என்ற இடத்தில் உள்ள ஆண்கள் சிறைச்சாலையின் எஃகு வேலிகளை வெட்டிக்கொண்டு, நீர் விநியோக சுரங்கம் ஒன்றின் வழியாக இவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.இவர்கள் ஐந்தாவது மாடியிலிருந்து துணிகளை சேர்த்து முடித்துக்கொண்டு கீழே இறங்கி தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.கடந்த 20 ஆண்டுகளில் இந்த சிறையிலிருந்து முதன்முறையாக கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக சிறைத்துறை பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.


வேகமாக பரவக்கூடிய புதிய வகை புதிய சூப்பர்பக் மரபணு 19 நாடுகளில் பரவியுள்ளது: - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்
[Sunday 2016-01-24 21:00]

மிகவும் ஆபத்தான, வேகமாக பரவக்கூடிய புதிய வகை சூப்பர்பக் மரபணு 19 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.அமெரிக்கைவை சேர்ந்த இயற்கை வளங்கள் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரையில் எம்.சி.ஆர்.-1 எனப்படும் சூப்பர்பக் மரபணு கனடா, சீனா, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட 19 நாடுகள் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்ணை விலங்குகள், மாமிசம் மற்றும் மனிதர்களிடம் இந்த மரபணு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எம்.சி.ஆர்.-1 என அழைக்கப்படும் இந்த சூப்பர்பக் மரபணுவானது முதன் முதலாக கடந்த 2012-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது.இந்த மரபணுவானது பாக்டீரியா கிருமியை நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகளுக்கு கட்டுப்படாதவையாக மற்றிவிடும். தற்போது பயன்பாட்டில் உள்ள கோலிஸ்டின் என்ற ஆண்டிபயாடிக் மருந்துக்கு மட்டுமே இந்த கிருமியை அழிக்கும் திறன் உள்ளது.


அனைத்து வகையான தீவிரவாதத்தையும் ஒழிக்க பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்: - ஒபாமா
[Sunday 2016-01-24 21:00]

அனைத்து வகையான தீவிரவாதத்தையும் ஒழிக்க பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அதிபர் பாரக் ஒபாமா கூறியுள்ளார்.மேலும் அவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:- பாகிஸ்தானால் தனது மண்ணில் உள்ள பயங்கரவாதத்தை அழிக்க முடியும் என்றும், தீவிரவாததை அழிக்க கடுமையான நடவடிகைகளை எடுக்க வேண்டும்.


13 வயது பாலஸ்தீனச் சிறுமியை சுட்டு கொன்ற இஸ்ரேல் காவலர்!
[Sunday 2016-01-24 17:00]

இஸ்ரேல்-பாலஸ்தீன எல்லைப்பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் வீரரை குத்திக்கொல்ல வந்ததாக 13 வயது பாலஸ்தீனச் சிறுமி சுட்டுக்கொல்லப்பட்ட சம்ப்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இஸ்ரேலின் ஆதிக்கத்தில் உள்ள வெஸ்ட் பேங்கக் பகுதியில் உள்ள அனாடா பகுதியில் இருக்கும் முகாமில் தங்கியிருந்த அந்த சிறுமி கையில் கத்தியுடன் ஓடிவந்ததால் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர் அவரை சுட்டுக் கொன்றதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


மலேசியாவில் கோவிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்களை மோதி தள்ளிய கார்: - 3 பேர் பலி
[Sunday 2016-01-24 16:00]

மலேசியாவில் புகழ் பெற்ற பத்துமலை முருகன் கோவில் உள்ளது. இங்குள்ள பிரமாண்ட முருகன் சிலை உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. தைப்பூச திருவிழாவையொட்டி செனாவாங்கிலிருந்து மலேசிய வாழ் தமிழர்கள் காவடி எடுத்தும், பாதயாத்திரையாகவும் சென்று கொண்டிருந்தனர்.செரிபெட்டாலிங் பகுதியில் வடக்கு, தெற்கு நெடுஞ்சாலை பகுதியில் பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் கூட்டத்துக்குள் ஒரு கார் புகுந்து மோதியது.அதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர். அவர்கள் கெபங்சான் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.


ரூ.3 கோடி பரிசு விழுந்த லாட்டரி சீட்டை வாஷிங்மெஷினில் துணிகளுடன் போட்டு துவைத்து வீணாக்கிய பெண்!
[Sunday 2016-01-24 16:00]

இங்கிலாந்தில் சமீபத்தில் ஜாக்பாட் பரிசு சீட்டு விற்பனை செய்யப்பட்டது. அதில் ஒரு சீட்டுக்கு ரூ.3 கோடியே 30 லட்சம் பரிசு தொகை விழுந்தது. அந்த அதிர்ஷ்ட சீட்டை வொர்செஸ்டர் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நட்டு படேல் என்பவர் விற்பனை செய்து இருந்தார். ஆனால் அந்த லாட்டரி சீட்டை வாங்கியது யார்? என தெரியாமல் இருந்தது. ஏனெனில் அதற்கு யாரும் சொந்தம் கொண்டாட வில்லை. இந்த நிலையில் அந்த லாட்டரி சீட்டை ஒரு பெண் வாங்கியிருந்தது தெரியவந்தது. ஆனால், அதை அவர் பத்திரமாக வைத்திருக்கவில்லை. மாறாக அதை வாஷிங்மெஷினில் துணிகளுடன் போட்டு துவைத்து வீணாக்கி விட்டார்.


கரிபீயின் தீவு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு விபத்து: - 13 பேர் பலி
[Sunday 2016-01-24 16:00]

கரிபீயின் தீவு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 13 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான நிகரகுவா நாடு சுற்றுலாவுக்கு பெயர் பெற்றது. இந்நாட்டின் பிரதான நிலப்பகுதியில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள கோர்ன் தீவுப் பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். இந்தப் பகுதியில் சென்ற 32 சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற படகு பலத்த காற்று வீசியதால், கவிழ்ந்தது. இதில் படகில் பயணம் செய்த 13 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். அவர்கள் அனைவரும் கோஸ்டா ரிகா நாட்டைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.படகின் உரிமையாளரான கேப்டன் இந்த விபத்தில் உயிர் தப்பியுள்ளார். அவரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளின் விமான தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட 29 பேர் பலி!
[Sunday 2016-01-24 09:00]

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ள இடங்களில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பாரிஸ் தாக்குதலை தொடர்ந்து ஐ.எஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த பிரான்ஸ் நாடுகள் சூளுரைத்தது. இதனிடையே ரஷ்யாவும் தன் பங்கிற்கு சிரியாவில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், சிரியாவில் நேற்று நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் சுமார் 29 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவின் கிழக்கு பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதலை ரஷ்யாவின் போர் விமானங்கள் நடத்தியதாக சிரிய கண்காணிப்பு குழு ஒன்று தெரிவித்துள்ளது.


புதிதாக பிரகடனப்படுத்தப்படவுள்ள அரசியல் சாசன திருத்தத்துக்கு நேபாள நாடாளுமன்றம் ஒப்புதல்!
[Sunday 2016-01-24 08:00]

நேபாளத்தில் புதிதாக பிரகடனப்படுத்தப்பட்ட அரசியல் சாசனத்தின் முதலாவது திருத்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை நிறைவேறியது.நேபாளத்தை 6 மாகாணங்களாகப் பிரிப்பதற்கான புதிய அரசியல் சாசனம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த மாகாணப் பிரிப்பின் மூலம், தங்கள் இன மக்கள் அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட மதேசிகள் புதிய அரசியல் சாசனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.அத்துடன், புதிய அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கெள்ள வேண்டும் என்று கோரி மதேசிகள் போராடத்தில் ஈடுபட்டு வந்தனர்.


பாகிஸ்தானில் நில நடுக்கம்: - பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம்!
[Sunday 2016-01-24 08:00]

பாகிஸ்தானில் கைபர் பக் துங்வா மாகாணத்தில் நேற்று திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் புனர், மலாகண்ட், ஸ்வாட் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிகளாக பதிவானது. அது அஷ்காசாமுக்கு 13 கி.மீ. மேற்கில், 90.7 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறி உள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லையில் 80 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக பாகிஸ்தான் வானிலை ஆராய்ச்சி துறை கூறுகிறது.


சீன அதிபர் ஷீ ஜின் பிங் இரான் அதிபருடன் பேச்சுவார்த்தை!
[Saturday 2016-01-23 22:00]

சீன அதிபர் ஷீ ஜின் பிங் இரான் அதிபருடன் பேச்சு நடத்தியுள்ளார்.இரானுக்கான சீனத் தலைவரின் விஜயத்தின்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளில் ஒரு புதிய அத்தியாயம் பற்றி இரண்டு நாடுகளின் தலைவர்களும் பேசியுள்ளனர். இரான் மீதிருந்த சர்வதேச பொருளாதார தடைகள் ஒரு வாரத்திற்கு முன்னர் நீக்கப்பட்ட பின்னர் அந்த நாட்டிற்கு உலக தலைவர் ஒருவர் மேற்கொண்ட முதல் விஜயம் இதுவாகும். அடுத்த பத்து ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தகத்தை 600 பில்லியன் டாலர்களாக அதிகரிக்க சீனத் தலைவர் ஷி ஜின்பிங் மற்றும் இரான் தலைவர் ஹசன் ரௌஹானி ஆகியோர் இணங்கியுள்ளனர்.


சவுதி இரான் நடுவே எழுந்துள்ள பதற்றத்தை குறைக்கும் முயற்சியாக ஜான் கெர்ரி சவுதி பயணம்!
[Saturday 2016-01-23 22:00]

சவுதி இரான் நடுவே எழுந்துள்ள பதற்றத்தை குறைக்கும் முயற்சியாக, அமெரிக்க அரசு செயலர் ஜான் கெர்ரி பேச்சு நடத்துவதற்காக சவுதி அரேபியா சென்றுள்ளார். மத்திய கிழக்கில் இரானின் தலையீடு அதிகரித்துவருவதாக அமெரிக்க அரசுத்துறை செயலர் ஜான் கெர்ரி வருத்தம் வெளியிட்டுள்ளார்.சவுதி அரேபியாவில் பேச்சுக்கள் நடத்திய பிறகு பேசிய கெர்ரி,சிரியாவின் உள்நாட்டு போரில், அதிபர் அஸ்ஸத்துக்கு ஆதரவளிக்கும், லெபனானிய ஆயுதக்குழுவான ஹெஸ்புல்லாவுக்கு இரான் அளித்துவரும் ஆதரவை சுட்டிக்காட்டினார்.இரானின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை தடுக்க அமெரிக்காவுடன் இணைந்து தாம் செயல்படுவதாக சவுதியின் வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சிரியாவின் பிரச்சனையில் முக்கிய பங்காற்றும் நாடுகளான இரான் மற்றும் சவுதிக்கு இடையிலான இந்த தகராறு, சிரியாவின் அமைதிப்பேச்சுக்களில் சிக்கல் ஏற்படுத்துவதை தடுப்பதற்காக, அங்கு நிலவும் பதற்றத்தை நீக்க அமெரிக்கா முயலுகிறது.


அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியைத் பனிப்புயல் தாக்கியதில் எட்டு பேர் உயிரிழப்பு!
[Saturday 2016-01-23 21:00]

ஒரு மாபெரும் பனி புயல் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை தாக்கியதில், பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். டென்னஸி, கெண்டகி, வர்ஜீனியா, மேரிலாந்து உள்ளிட்ட 10 மாநிலங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மிகக் கடுமையான இந்தப் பனிப் புயல் சார்ந்த வானிலை காரணமாக இதுவரை குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வட கரோலைனாவில் இறந்துள்ளதாகவும், அங்குள்ள சாலைகள் ஆலங்கட்டி மழை மற்றும் கருப்பு பனியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. அம்மாநிலத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. பல மாநிலங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


வருடாந்த நிதி பங்களிப்பை செலுத்தாமையினால் ஐ.நாவில் வாக்களிக்கும் உரிமையை இழக்கவுள்ள 15 நாடுகள்!
[Saturday 2016-01-23 21:00]

ஐநாவுக்கு செலுத்தவேண்டிய வருடாந்த நிதி பங்களிப்பை செலுத்த தவறிய பதினைந்து நாடுகள், ஐநாவில் வாக்களிக்கும் உரிமையை இழக்கவுள்ளன.தற்போது ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக உள்ள வெனிசுவேலாவும் அடங்கும். அந்நாடு மட்டும் ஐ நாவுக்கு மூன்று மில்லியன் டாலர்கள் அளவுக்கு நிதி செலுத்த வேண்டியுள்ளது.வாக்களிக்கும் உரிமையை இழந்த மற்ற நாடுகளின் பட்டியலில் பஹ்ரைன், லிபியா, மாலி மற்றும் புரூண்டி ஆகியவை உள்ளன.ஐநாவின் தடைகள் கடந்த சனிக்கிழமை வரை விதிக்கப்பட்டிருந்த இரானும் வாக்களிக்கும் உரிமையை இழக்கவிருந்த நிலையில், தனது பங்களிப்பை தற்போது செலுத்தியுள்ளது.உள்நாட்டு போர் அல்லது கடும் வறுமையை எதிர்கொள்ளும் ஐந்து நாடுகள் பங்களிப்பு அளிக்கவில்லை என்றாலும் அவைகளுக்கான வாக்களிக்கும் உரிமையை ஐநா நீக்கவில்லை.அப்படி விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள் ஐந்து நாடுகளில் யேமன், சொமாலியா மற்றும் கினீ-பிஸ்ஸாவ் ஆகியவை அடங்கும்.


சிறுவர்களை பாலியல் தொந்தரவு செய்த முதியவர் கொலை வழக்கு: - இங்கிலாந்து பெண்ணுக்கு ஏழரை ஆண்டு சிறை!
[Saturday 2016-01-23 19:00]

இங்கிலாந்தில் சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை கொன்ற பெண்ணின் தண்டனை உயர்த்தப்பட்டு, ஏழரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கிழக்கு லண்டனின் கேனிங் நகரில் கடந்த 2014ம் ஆண்டு மைக்கேல் பிளஸ்டட் (77) என்பவர் சிறுவர்களுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவரை பக்கத்து வீட்டில் வசித்து வரும் சாரா சேண்ட்ஸ் (33) என்ற பெண், நவம்பர் மாதம் கத்தியால் குத்தி கொலை செய்தார். சிறுவர்களை துன்புறுத்தியதால் ஆத்திரத்தில் அவரை 8 முறை கத்தியால் குத்தி கொன்றது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.


குடிபோதையில் டாக்சி டிரைவரை போட்டுத்தாக்கும் இந்திய இளம் பெண்!
[Saturday 2016-01-23 15:00]

அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள ஜாக்சன் ஹெல்த் சிஸ்டம் மருத்துவமனையில் நான்காம் ஆண்டு நரம்பியல் மருத்துவ மாணவியாக பயின்று வருபவர், அஞ்சலி ராம்கிசூன் (ராம்கிருஷ்ணன்). சுமார் இருபது வயது மதிக்கத்தக்க இந்திய வம்சாவளி பெண்ணான இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை மிதமிஞ்சிய குடிபோதையில் டாக்சி டிரைவரை போட்டுத்தாக்கும் காட்சி யூடியூப்பில் பல லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. உபேர் டாக்சியில் ஏறிவந்த இவர் குடிபோதையில் டிரைவரிடம் தகராறு செய்ததால் நொந்துப்போன டிரைவர், இனி உன்னை வைத்து காரை ஓட்ட என்னால் முடியாது என கூறி நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு, கீழே இறங்கிக் கொள்கிறார். அவரை அஞ்சலி வாய்க்கு வந்தபடியெல்லாம மிகமோசமாக திட்டுகிறார்.


அமெரிக்காவில் பாலியல் பலாத்காரம் செய்த காவலருக்கு 263 ஆண்டு சிறை!
[Saturday 2016-01-23 10:00]

அமெரிக்காவில், தனது பணிக் காலத்தின்போது கருப்பினப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் காவலருக்கு 263 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதுகுறித்து செய்திகள் தெரிவிப்பதாவது:ஓக்லஹோமா மாகாணத்தில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர் டேனியல் ஹோல்ட்ஸ்கிளா. கடந்த 2013 முதல் 2014-ஆம் ஆண்டு வரை அவர் கருப்பினப் பெண்களை பாலியல் பலாத்காரம் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக புகார் கூறப்பட்டது. அவரால் பாதிக்கப்பட்ட டெமெட்ரியா கேம்பல் என்ற பெண், இது தொடர்பாக கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தார். டேனியலுக்கு எதிராக குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கிடைத்ததையடுத்து, அவர் கடந்த ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டர்.இந்த நிலையில், டேனியல் மீதான 36 குற்றச்சாட்டுகளில் 18 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீதிமன்றம் அறிவித்தது.இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம், டேனியலுக்கு 263 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.


விசா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ள அமெரிக்கா!
[Saturday 2016-01-23 09:00]

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு, விசா கட்டுப்பாடுகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட சில நாடுகளைச் சேர்ந்தவர்களை மட்டுமல்ல, குறிப்பிட்ட சிலநாடுகளுக்குச் சென்றுவிட்டு அமெரிக்காவுக்கு வருபவர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதிக்கிறது. விசா இல்லாமல் சில ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் 90 நாட்கள் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள முடியும்.அவ்வாறு பயணம் செய்ய விரும்புவர்கள் மார்ச் 2, 2011 ஆம் தேதிக்குப் பிறகு ஈரான், இராக்,சூடான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்குச் சென்றிருந்தால், அவர்கள் விசா வாங்கிய பிறகுதான் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள முடியும். இது போன்ற மேலும் பல கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளது.


கனடாவில் மர்மநபர் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலி!
[Saturday 2016-01-23 08:00]

கனடா நாட்டின் சஸ்கட்சேவன் மாகாணத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்குள் புகுந்த மர்மநபர் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் ஐந்துபேர் பலியானதாக தெரியவந்துள்ளது.இங்குள்ள லா லோச்சே பகுதியில் ஏழாம் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயிலும் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் ஐந்து பேர் பலியாகினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


உயிராபத்தை விளைவிக்காத தற்காப்பு கருவிகளை வாங்க ஆரம்பித்த ஜெர்மனிய மக்கள்!
[Friday 2016-01-22 22:00]

புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது ஜெர்மனியின் கொலோன் மற்றும் வேறு சில நகரங்களில் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல்களுக்கு பெரும்பங்கு பொறுப்பு குடியேறி இளைஞர்கள் என்று பழிசுமத்தப்படும் நிலையில், ஜெர்மனிய மக்கள் புது வித தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். உயிராபத்தை விளைவிக்காத தற்காப்பு கருவிகளை ஜெர்மனிய மக்கள் அதிக அளவில் வாங்க ஆரம்பித்துள்ளனர்.


அபூர்வ பாலைவன பறவையினமான ஹூபாரா பறவை வேட்டைக்கு விதிக்கப்பட்ட தடை பாகிஸ்தானில் ரத்து!
[Friday 2016-01-22 22:00]

அபூர்வ பாலைவன பறவையினமான , ஹூபாரா பஸ்டார்டை (வேகமாய் ஓடக்கூடிய உயரமான ஒரு பறவை) வேட்டையாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பாகிஸ்தான உச்ச நீதிமன்றம் விலக்கியிருக்கிறது.இந்த ஹுபாரா பஸ்டார்ட் பறவையை வேட்டையாடுவதற்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து பாகிஸ்தான அரசு மனுச் செய்திருந்தது.இந்தத் தடை எண்ணெய் வளமிக்க வளைகுடா நாடுகளுடன் பாகிஸ்தானின் உறவுகளைப் பாதிக்கும் என்று அது வாதாடியது.

 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா