Untitled Document
April 26, 2024 [GMT]
 
அமான்சியங்களை ஆராய்கிறார் பாவனா..!
[Thursday 2017-03-02 20:00]

நடிகை பாவனா இரண்டு வருடங்களுக்கு முன் நடிக்க ஒப்புக்கொண்டு முக்கால்வாசி நடித்த நிலையில் இருக்கும் படம் தான் அட்வென்ச்சர்ஸ் ஆப் ஓமனக்குட்டன் ரோஹித் என்பவர் இயக்கத்தில் உருவான இந்தப்படத்தில் ஓமனக்குட்டனாக நடித்திருப்பவர் ஆசிப் அலி. எப்போதும் பகல்கனவு காணும் கேரக்டர் இவருடையது.. இவருக்கு ஜோடியாகத்தான் பாவனா நடித்திருக்கிறார்.. படத்தில் அமானுஷ்ய மற்றும் மர்மமான விஷயங்களை ஆராய்ச்சி செய்பவராக நடித்துள்ளார் பாவனா.. இந்த படம் வழக்கமான மலையாள சினிமா பாணியில் இருந்து மாறுபட்டு ஒரு நாவல் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளதாம்..


தலமகன் ஆத்விக்கின் முதல் பிறந்தநாள் கோலாகல கொண்டாட்டம்..
[Thursday 2017-03-02 20:00]

குட்டி தல ஆத்விக்கின் பிறந்தநாளை அஜித ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். அஜித்தின் ஒவ்வொரு பிறந்தநாளையும், அவருடைய படங்கள் வெளிவரும் நாளையும் அவரது ரசிகர்கள் ஒரு திருவிழா போலவே கொண்டாடுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல், கடந்த வருடம் அஜித்தின் மகன் ஆத்விக்கின் முதல் பிறந்தநாளையும் அஜித்தின் பிறந்தநாள் போலவே மிகவும் கோலாகலமாக கொண்டாடினார்கள்.


கமலுக்கே சவால் விடும் பெண் இயக்குனர்..
[Thursday 2017-03-02 20:00]

ஊர் உலகத்தில் வேறு கதைகளை இல்லை என்கிற மாதிரி சில சமயங்களில் ஒரே கதையை இரண்டு பேர் தனித்தனியாக படமாக்குவதற்கு போட்டிபோடும் சுவாரஸ்ய சம்பவங்கள் நடப்பது உண்டு.. இங்கே பாலாவும், பராதிராஜாவும் குற்றப்பரம்பரை கதையை படமாக எடுப்பேன் என அறிக்கைப்போர் நிகழ்த்தியது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். மலையாளத்தில் கூட கர்ணன் கதையை மம்முட்டியை வைத்து எடுப்பேன் என ஒரு இயக்குனரும், பிருத்விராஜை வைத்து எடுப்பேன் என ஒரு இயக்குனரும் மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்..


பாகுபலி-2 வை பார்வையிடுகிறார் எலிசபெத் மகாராணி..
[Thursday 2017-03-02 20:00]

பாகுபலி-2


பாலியல் கொடுமைக்கு நானும் ஆளானேன் - காதல் சந்தியா புகார்
[Thursday 2017-03-02 20:00]

பாவனாவைப் போல தானும் பாலியல் கொடுமைக்கு ஆளானதாக காதல் படத்தில் நடித்த நடிகை சந்தியா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். கேரளாவில் ஓடும் காரில் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பற்றி அவர் துணிச்சலாக புகார் கொடுத்ததை தொடர்ந்து இதில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இதைப்போல பாதிக்கப்பட்ட பலரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை தற்போது வெளிப்படுத்தி வருகிறார்கள்.


மகராணி எலிசெபத் உடனான சந்திப்பு பற்றி மனம் திறந்தார் கமல்..
[Thursday 2017-03-02 19:00]

கமல்ஹாசனின் கனவு படம் மருதநாயகம். 20 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1997ம் ஆண்டு கமல், இந்தப் படத்தை துவக்கினார். அப்போது இங்கிலாந்து மகராணி எலிசெபத் படப்பிடிப்பை துவக்கி வைத்தார். 20 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக படம் நின்று விட்டது. ஆனால் அந்த கனவு படம் கமல் மனதில் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. சாய்மீரா, ஆஸ்கர் நிறுவனங்கள் உதவியுடன் கமல் மீண்டும் மருதநாயகத்தை உருவாக்கும் முயற்சிகள் தோல்வி அடைந்தது. தந்போது முன்னணி நிறுவனமாக இருக்கும் லைக்கா நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது. படத்தின் பட்ஜெட் 500 கோடி. இந்த 500 கோடிக்கான வியாபார வழியை கமல் காட்டினால் படத்தை தயாரிக்க தயாராக இருப்பதாக லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளதாம்.


ஜெயலலிதா மரணத்தில் மர்மம் ; தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்: ராதாரவி
[Thursday 2017-03-02 19:00]

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக புகார் வந்துள்ளதால் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என நடிகர் ராதாரவி கூறினார். வாணியம்பாடியில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு கராத்தே பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார்.


ஜோதிகா நெற்றியில் திலகமிட்டு வாழ்த்தினார் சிவகுமார்..
[Thursday 2017-03-02 19:00]

தாரை தப்பட்டை படத்துக்கு பிறகு பாலா நாச்சியார் படத்தை இயக்கி, தயாரிக்கிறார். தாரை தப்பட்டை படத்திற்கு பிறகு குற்றப்பரம்பரை, புதுமுகங்களை வைத்து காதல் படம், ஆர்யா, விஷால், ராணா நடிப்பில் மும்மொழி பிரமாண்ட படம் என பல செய்திகளை கடந்து, தற்போது நாச்சியார் படம் பூஜையில் வந்து நிற்கிறது. இதனை ஈகான் நிறுவனத்துடன் இணைந்து பாலாவின் பி ஸ்டூடியோ தயாரிக்கிறது. ஜோதிகா, ஜி.பி.பிரகாஷ்குமார், நடிக்கிறார்கள். இளையராஜா இசை அமைக்கிறார். ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.


ஜோதிகா-ஜி.வி.பிரகாஷ் நடிக்கும்
[Wednesday 2017-03-01 19:00]

ஜோதிகா-ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பாலா இயக்கும்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யுமாறு நடிகர் சங்கம் கோரிக்கை
[Wednesday 2017-03-01 19:00]

தமிழகத்தில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு தமிழக மக்கள் இடையே ஒருவித விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தற்போது மீண்டும் ஒரு போராட்டம் மெல்ல மெல்ல தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. அது புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நடந்து வரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம். இந்த திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என நடிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


மகளிர் தினத்தில் கையெழுத்து இயக்கத்தை ஆரம்பிக்கிறார் வரலட்சுமி
[Wednesday 2017-03-01 19:00]

சமீபகாலமாக பெண்களுக்கு எதிராக நடந்துவரும் குற்றங்களிலிருந்து அவர்களை காப்பதற்காக நடிகை வரலட்சுமி சரத்குமார் புதிய பிரச்சாரத்தை கையிலெடுத்திருக்கிறார். நடிகை பாவனா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் தற்போது நாடெங்கும் பெரிய அதிர்வலையை உண்டாக்கியுள்ளது. பாவான தைரியமாக இந்த விஷயத்தை வெளியில் சொன்னதையடுத்து மேலும் ஒரு சில நடிகைகளும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை வெளியில் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.


கமலுக்கு எதிராக நடைபெற்றுவரும் குற்றம் - 'லைவ் டே' க்கு கமல் பதிலடி
[Wednesday 2017-03-01 19:00]

இதோ வருகிறேன் நெடுவாசல் என்ற பெயரில் கமல் எழுதியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது, ஆனால் இது தனது கூற்று அல்ல என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சமீபகாலமாக தமிழகத்தில் நிலவும் அசாத்திய சூழ்நிலைகளுக்கு கமல் குரல் கொடுத்து வருகிறார். ஜல்லிக்கட்டு, அரசியல் மாற்றம்... என ஒவ்வொரு பிரச்னையிலும் தனது கருத்தை தைரியமாக பதிவு செய்தார். அதேசமயம் அவரது பெயரில் சில பொய்யான செய்திகளும் சமூக வலைதளங்களில் உலா வந்தன. கமலும் அதை மறுத்து வந்தார். இந்நிலையில், தற்போது தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் தொடர்பான பிரச்னை, நெடுவாசிலில் நடந்து வருகிறது.


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து லாரன்ஸ் உண்ணாவிரத போராட்டம்..
[Wednesday 2017-03-01 18:00]

நெடுவாசலில் தொடங்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி நடிகர் ராகவா லாரன்ஸ் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகளும், இளைஞர்களும் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும் செயல்பட்டு வருகின்றனர்.


நடன பெண்களின் உண்மை கதை
[Wednesday 2017-03-01 12:00]

நடன இயக்குனரான காயத்ரி ரகுராம் நடனம் ஆடும் பெண்களின் உண்மை கதையை படமாக எடுப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.


மேலை நாடுகளிலும் பார்க்க இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு - ஸ்ருதி
[Wednesday 2017-03-01 12:00]

மேலை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு குறைந்துள்ளது என நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் வாரிசு ஸ்ருதிஹாசன். இசையமைப்பாளர், பாடகி, நடிகை என பன்முக திறமை கொண்ட ஸ்ருதி, தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் பிஸியான நடிகையாக பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார். ஸ்ருதி, சென்னையில் ஐஐடி.,யில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ருதிஹாசன், ‛‛மேலை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு குறைந்து தான் உள்ளது. தமிழகத்திலும் பெண்களுக்கான பாதுகாப்பில் பெருமளவு குறைபாடு உள்ளது. தண்டனைகளை கடுமையாக்கினால் தான் குற்றச்செயல்களை தடுக்க முடியும் என்றார்.


முதன்முறையாக 3 வேடங்களில் விஜய்..
[Wednesday 2017-03-01 11:00]

ரஜினி, கமல், அஜித் ஆகியோர் செய்ததை தனது படத்தில் முதன்முதலாக விஜய் செய்யவிருக்கிறாராம். அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம். விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும்


பாவனாவின் வீடியோவை வெளியிட முகநூலுக்கு தடைவித்தது சுப்ரீம் கோர்ட்டு..
[Wednesday 2017-03-01 11:00]

நடிகை பாவனா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்களும் வெளியிடுவதை தடுத்து நிறுத்த முகநூல் நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ படமும், புகைப்படங்களும் தங்களிடம் இருப்பதாக


இந்தியா - இங்கிலாந்து கலாச்சார ஆண்டு விழா ; ராணி எலிசபெத் உடன் கமல்..
[Wednesday 2017-03-01 11:00]

இந்தியா - இங்கிலாந்து இடையேயான கலாச்சார ஆண்டு விழா, இங்கிலாந்தின் லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் துவங்கியுள்ளது. இந்த விழாவை ராணி எலிசபெத் துவக்கி வைத்தார். இதில் இந்தியாவின் சார்பில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, திரைப்பிரபலங்கள் கமல்ஹாசன், சுரேஷ் கோபி, குர்தாஸ் மன், கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அவர்களுக்கு அரண்மனையில் சிறப்பான விருந்து அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது கமல்ஹாசன், ராணி எலிசபத்தை சந்தித்து பேசினார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ‛மருதநாயகம் படத்தின் துவக்கவிழாவை ராணி எலிசபத்தை வரவழைத்து பிரமாண்டமாய் ஆரம்பித்தார் கமல், அப்போதிருந்தே ராணியுடன் கமலுக்கு நல்ல அறிமுகம் இருந்தது குறிப்பிடத்தக்கது.


தடைகளை தாண்டி எழுந்து வருவேன்: நடிகை பாவனா உறுதி
[Tuesday 2017-02-28 19:00]

பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அதிர்ச்சியில் இருந்து மீண்டு வந்துள்ள பாவனா, தடைகளை தாண்டி எழுந்து வருவேன் என்று உறுதிபட கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை பாவனா படப்பிடிப்பு முடிந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கடத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு நடிகை பாவனா அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முதலில் மிகவும் சிரமப்பட்டு உள்ளார். அதன்பிறகு துணிச்சலாக போலீசில் புகார் செய்தார். மேலும் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்.


7 புதுமுக ஹீரோயின்களுடன் ஜெய் ஆகாஷ் அமாவாசையில் ஆபாசம்..
[Tuesday 2017-02-28 19:00]

நடித்துள்ள படம் அமாவாசை, இந்தப் படம் அமாவாசய்யா என்ற பெயரில் தெலுங்கிலும் வெளிவருகிறது. ராகேஷ் சவந்த் என்பவர் தயாரித்து இயக்கி உள்ளார். சையது அகமது இசை அமைத்துள்ளார். படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. படத்தில் இடம் பெற்றிருந்த ஆபாச காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளை கண்டு திடுக்கிட்ட தணிக்கை குழுவினர் இந்தப் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் தர முடியாது என்று முதலில் தெரிவித்துவிட்டனர். நீங்கள் சொல்லும் காட்சிகளை நீக்கி விடுகிறோம் என்று தயாரிப்பு தரப்பில் இருந்து கூறப்பட்டதாம். அதன் பிறகு 5 காட்சிகளை முழுமையாக நீக்கும்படியும், பல காட்சிகளின் நீளத்தை குறைக்கும்படியும் தணிக்கை குழுவினர் சொன்னார்கள்.


மஸ்காரா பாடலாசிரியருக்கு வந்த சிக்கல்..
[Tuesday 2017-02-28 19:00]

இளம் பாடலாசிரியர் ஒருவர்


இளையராஜா, ஏ.ஆர்.ரகுமானின் இசையில் நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்
[Tuesday 2017-02-28 19:00]

முன்னணி இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக மாறியவர்களில் ஜி.வி.பிரகாஷும் ரசிகர்களிடம் நடிகராகவும் ஒரு இடத்தைப் பிடித்துவிட்டார். அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படங்களான கடவுள் இருக்கான் குமாரு, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, பென்சில் ஆகிய படங்கள் தோல்வி அடைந்தாலும் கைவசம் நான்கு படங்களை வைத்திருக்கிறார். அவர் நாயகனாக நடித்துள்ள ப்ரூஸ் லீ படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது அடங்காதே, ஐங்கரன், 4 ஜி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


இசைக்காக தனது திருமணத்தை நிறுத்திய பாடகி விஜயலட்சுமி
[Tuesday 2017-02-28 19:00]

தனது வசீகர குரலால் மலையாளம் மற்றும் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி, வரும் மார்ச் மாதம் நடக்க இருந்த தனது திருமணத்தை முன்கூட்டியே நிறுத்தியது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான அவர், சினிமாவில் உயர்ந்தது போல, இல்லற வாழ்க்கையிலும் அடியெடுத்து வைக்கிறார் என சந்தோஷப்பட்ட பலரும் அவரது இந்த முடிவால் வருத்தம் அடைந்தனர். ஆனாலும் விஜயலட்சுமியோ


மகா சிவராத்திரி அன்று கோவிலை சுத்தம் செய்த ராம் சரண் மனைவி..
[Tuesday 2017-02-28 12:00]

அப்போலோ மருத்துவ குழுங்களின் நிறுவன தலைவர் பிரதாப் சி ரெட்டியின் பேத்தியும் டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் ராம் சரணின் மனைவியுமான உபசேனா, அப்போலோ மருத்துவ குழுமங்கள் வெளியிடும் பி பாஸிடிவ் எனும் இதழின் பொறுப்பாளராகவும் உபசேனா பதவி வகிக்கின்றார். மேலும் சமூக சேவைகள் மற்றும் ஆன்மீகத்திலும் உபசேனா ஈடுபாடு கொண்டவர்.


கோலாகலமாக நடந்தேறியது 89வது ஆஸ்கர் விருது விழா..
[Tuesday 2017-02-28 12:00]

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், ‛லா லா லேண்ட் படம் 6 ஆஸ்கர் விருதுகளை குவித்தது. ஹாலிவுட்டின் அதிரடி மன்னன் ஜாக்கி சானுக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய நடிகர் தேவ் பட்டேல் விருது பெறும் வாய்ப்பை தவறவிட்டார். சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர். 89வது ஆஸ்கர் விருதுகள், அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ‛டால்பி திரையரங்கில் நடந்தது. 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன.


மதுரை ஐகோர்ட்டில் நேரில் ஆஜரானார் தனுஷ்
[Tuesday 2017-02-28 12:00]

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன் தம்பதியினர், நடிகர் தனுஷ் எங்களது மகன், எங்களுக்கு பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த மேலூர் கோர்ட், நடிகர் தனுசை நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்தும், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரியும் நடிகர் தனுஷ் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், அங்க அடையாளங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து நடிகர் தனுஷ் சார்பில் பத்தாம் வகுப்பு சான்றிதழ் வெளியிடப்பட்டது.


உலகத் தரத்துடன் மகாபாரதத்தை படமாக எடுக்கிறார் ராஜமௌலி
[Tuesday 2017-02-28 12:00]

இந்தியத் திரையுலகில் பிரம்மாண்டமான சரித்திரப் படமாக வெளிவந்த பாகுபலி படம் இயக்குனர் ராஜமௌலியைப் பற்றி இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளிலும் பேச வைத்தது. 2015ல் வெளிவந்த முதல் பாகம் திரைப்பட ரசிகர்களை பிரமிக்க வைத்தது. அடுத்து இரண்டாம் பாகத்தை ஏப்ரல் மாதம் வெளியிட உள்ளார்கள். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் டெக்னிக்கலாக பல விஷயங்கள் மேம்பட்டு இருக்கும் என படக்குழுவினர் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்கள். சில நாட்களுக்கு முன்பு வெளியான பாகுபலி படத்தின் புதிய போஸ்டர் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.


எமக்கிடையே போட்டி, பொறாமை இல்லை: தமன்னா
[Tuesday 2017-02-28 12:00]

கதாநாயகிகள் இடையே போட்டி, பொறாமை இல்லை. அனைவரும் நட்பாகவே பழகி வருகிறோம்


பெண்ணாக நடிக்கும் ஆசை பரத்தையும் விட்டு வைக்கவில்லை..
[Saturday 2017-02-25 19:00]

எல்லா நடிகர்களுக்குமே ஒரு படத்திலாவது பெண் வேடத்தில் நடித்து விட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். கமல்ஹாசன் அவ்வை சண்முகி, ரஜினிகாந்த் பணக்காரன், விக்ரம் கந்தசாமி, பிரசாந்த் ஆணழகன் சிவகார்த்திகேயன் ரெமோ இப்படி பல உதாரணங்கள் உண்டு இப்போது பரத் பெண் வேடமிட்டு பொட்டு என்ற படத்தில் நடிக்கிறார். சவுகார் பேட்டை படத்தை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்கும் இந்தப் படத்தை ஷாலோம் ஸ்டூடியோ சார்பில் ஜான் மேக்ஸ் தயாரிக்கிறார். பரத்துடன் இனியா, நமீதா, சிருஷ்டி டாங்கே, மனிஷா யாதவ், நான் கடவுள் ராஜேந்திரன் தம்பி ராமய்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். அம்ரீஷ் இசை அமைக்கிறார், இனியன் ஒளிப்பதிவு செய்கிறார்.


சினிமா தான் என்னை வலிமையாக்கியது - ஸ்ருதிஹாசன்
[Saturday 2017-02-25 19:00]

நடிகர் கமல்ஹாசனின் வாரிசு எனும் அடையாளத்தோடு சினிமாவில் களமிறங்கியவர் ஸ்ருதிஹாசன். பாடகியாக அறிமுகமானவர், அதன்பின்னர் இசையமைப்பாளர், நடிகை என உயர்ந்தார். தமிழ் பெண்ணாக இருந்தாலும் ஸ்ருதி அறிமுகமானது என்னவோ பாலிவுட்டில் தான். தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், சினிமா தான் தன்னை வலிமையாக்கியது என்று கூறியுள்ளார். இதுப்பற்றி ஸ்ருதி மேலும் கூறியிருப்பதாவது.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா