Untitled Document
May 1, 2024 [GMT]
இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் உயிர் தப்பிய 50 பேர்கள் தற்கொலை!
[Thursday 2024-04-18 06:00]

இஸ்ரேல் எல்லையில், நோவா இசை விழா படுகொலையில் இருந்து தப்பியவர்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் அடுத்தடுத்த மாதங்களில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற விவகார கூட்டத்தில் பேசிய ஒருவர், இந்த எண்ணிக்கை உண்மையில் அதிகமாக இருக்கலாம் என்றும், உயிர் தப்பியவர்கள் தற்போதும் தத்தளித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் எல்லையில், நோவா இசை விழா படுகொலையில் இருந்து தப்பியவர்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் அடுத்தடுத்த மாதங்களில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற விவகார கூட்டத்தில் பேசிய ஒருவர், இந்த எண்ணிக்கை உண்மையில் அதிகமாக இருக்கலாம் என்றும், உயிர் தப்பியவர்கள் தற்போதும் தத்தளித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

  

காஸா எல்லையில் இருந்து 3 மைல்கள் தொலைவில் தொடர்புடைய இசை விழா முன்னெடுக்கப்பட்டது. ஆனால் எவரும் எதிர்பாராமல் அந்த விழாவில் ஹமாஸ் படைகள் அத்துமீறியதுடன், நூற்றுக்கணக்கனவர்கள் கொல்லப்பட்டனர்.

பலர், துப்பாக்கி குண்டு துளைக்கப்பட்ட வாகனங்களில் பதுங்கி, உயிர் தப்பினர். வாகனங்களில் தப்பிய பலர் துரத்திச் சென்று கொல்லப்பட்டனர். நோவா விழாவில் பங்கேற்று உயிர் தப்பியவர்களில் பலர், குறைந்தது 50 பேர்கள் இதுவரை தற்கொலை செய்துகொண்டதாகவும்,

பலர் தொடர் மருத்துவ சிகிச்சையில் உள்ளதாகவும், இன்னும் பலர் படுத்த படுக்கையாகவே உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பலரும் அந்த சம்பவத்திற்கு பின்னர் வேலைக்கு செல்லாமல் உள்ளனர் என்றும், அவர்களுக்கு தற்போது சிகிச்சையும் ஆதரவும் தேவை என்றும் கூறுகின்றனர்.

பலர் வேலைக்கு சென்றும், எதுவும் செய்ய முடியாமல் திரும்பியுள்ளனர். 24 வயதான இளைஞர் ஒருவர் சடலங்களுடன் ஒளிந்திருந்ததாகவும், சுமார் 8 மணி நேரம் உதவிக்காக காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் வெளியான தகவலை ஏற்க மறுத்துள்ளதுடன், நோவா இசை விழாவில் தப்பியவர்களில் 50 பேர்கள் தற்கொலை செய்துகொண்டதாக எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



காசாவில் அமெரிக்காவின் மிதக்கும் தளம்!
[Wednesday 2024-05-01 07:00]

அமெரிக்க இராணுவம் காசா உதவிக்காக மிதக்கும் தளத்தை கட்டமைத்துள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மத்திய தரைகடலில் மிதக்கும் தளத்தை கட்டுவதைக் காட்டும் படங்களை அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ளது. இது காசா கடற்கரைக்கு அவசர உதவிப் பொருட்களை விரைவாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.



லண்டன் ஹெயினால்ட் பகுதியில் நடந்த தாக்குதல்: வெளியான தாக்குதல்தாரி புகைப்படம்!
[Wednesday 2024-05-01 07:00]

பிரித்தானியாவின் ஹெயினால்ட் பகுதியில் வாள் தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் வடகிழக்கு லண்டனின் ஹெயினால்ட்(Hainault) பகுதியில் இன்று காலை அதிர்ச்சியூட்டும் தாக்குதல் அரங்கேறியுள்ளது. ஹெயினால்ட் டியூப் நிலையம் (Hainault Tube station) அருகே வாள் ஏந்திய 36 வயது நபர் பொதுமக்களை தாக்கியதாக காவல்துறைக்கு காலை 7 மணி அளவில் தகவல் கிடைத்தது.



கனடாவில் மாயமான நபர் ஏரியில் சடலமாக மீட்பு!
[Wednesday 2024-05-01 07:00]

கனடாவில் காணாமல் போன நபரின் உடல் சென்ட் ஜார்ஜ் ஏரியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. ஒன்டாரியோ பிராந்திய காவல்துறை (OPP) செவெர்ன் டவுன்ஷிபில்(Severn Township) பகுதியில் உள்ள சென்ட் ஜார்ஜ் ஏரியில்(Lake St. George) காணாமல் போன ஒரு மனிதரின் உடலை மீட்டுள்ளது.



பக்கவிளைவுகளை ஏற்படுத்திய கோவிஷீல்டு தடுப்பூசி: ஒப்புக்கொண்ட நிறுவனம்!
[Tuesday 2024-04-30 18:00]

தங்கள் நிறுவனத் தயாரிப்பான கோவிட் தடுப்பூசியால் அபூர்வமாக பக்கள் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது உண்மைதான் என முதன்முறையாக ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. 2019ஆம் ஆண்டின் இறுதியில் கொரோனா தொற்று பரவத்துவங்கிய நிலையில், அதைத் தடுப்பதற்காக உலக நாடுகள் பல தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கின.



வட கொரிய ஜனாதிபதி தொடர்பில் இளம்பெண் தெரிவித்துள்ள அதிரவைத்துள்ள தகவல்!
[Tuesday 2024-04-30 18:00]

தன்னை மகிழ்விப்பதற்காக, ஆண்டுக்கு 25 இளம்பெண்களை வட கொரிய ஜனாதிபதி தேர்ந்தெடுப்பதாக, அவரிடமிருந்து தப்பிய இளம்பெண் ஒருவர் தெரிவித்துள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பொதுவாகவே, சர்வாதிகாரிகள் ஆட்சி செய்யும் நாடுகளில் என்ன நடக்கிறது என்பது எளிதில் வெளி உலகத்துக்குத் தெரிவதில்லை.



பிரித்தானிய நகரின் பல பகுதிகளில் மீட்கப்பட்ட மனித உடல் பாகங்கள்!
[Tuesday 2024-04-30 18:00]

பிரித்தானியாவின் Salford நகரின் பல பகுதிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் தொடர்பில் பொலிசார் பெயர் உட்பட பிரதான தகவல்களை வெளியிட்டுள்ளனர். குறித்த நபர் 67 வயதான Stuart Everett என அதிகாரிகள் தரப்பு நம்புவதாக தெரிவித்துள்ளனர். கிரேட்டர் மான்செஸ்டரில் அமைந்துள்ள Kersal Dale அருகே கீழ் முதுகு, தொடை உள்ளிட்ட சில உடல் பாகங்கள் cellophane தாள்களில் சுற்றப்பட்ட நிலையில் வழிபோக்கர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.



கனடாவில் சர்வதேச மாணவர்கள் இனி 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதி!
[Tuesday 2024-04-30 18:00]

கனடாவில் கல்வி கற்க வரும் மாணவர்களை பணி செய்ய அனுமதிப்பதால், அவர்களில் சிலர் கனடாவுக்கு வரும் நோக்கமே கல்வி கற்பதற்காக அல்லாமல் பணி செய்வதற்கான என மாறிவிடுகிறது என்று கூறியுள்ளார் கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சர். கனடாவில் கல்வி கற்க வரும் மாணவர்கள், தங்கள் பணத்தேவைகளுக்காக, வார்த்தில் 20 மணி நேரம் வேலை செய்யலாம் என அனுமதியளிக்கப்பட்டிருந்தது.



பிடியாணை வழங்க சென்றபோது துப்பாக்கிச்சூடு: 3 பொலிஸார் மரணம்!
[Tuesday 2024-04-30 06:00]

அமெரிக்காவில் பிடியாணை வழங்க சென்றபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 3 பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வட கரோலினாவின் Charlotte பகுதியில் உள்ள நபர் ஒருவர், துப்பாக்கி வைத்திருந்ததற்காக பொலிஸார் பிடியாணை வழங்க சென்றனர்.



உக்ரைனுக்கு சென்ற முதல் பிரித்தானிய அரச குடும்ப நபரான டச்சஸ் ஆஃப் எடின்பர்க்!
[Tuesday 2024-04-30 06:00]

டச்சஸ் ஆஃப் எடின்பர்க் சோஃபி ஹெலன் உக்ரைனுக்கு சென்றதன் மூலம், ரஷ்ய படையெடுப்புக்கு பின் அங்கு சென்ற முதல் அரச குடும்பத்தைச் சேர்ந்த நபர் ஆனார். அரச குடும்பத்தைச் சேர்ந்த டச்சஸ் ஆஃப் எடின்பர்க் சோஃபி ஹெலன் (Sophie Helen) உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டார்.



பிரித்தானியாவில் கைதான முதியவர்: சிக்கிய 58,000 சிறுவர்களின் மோசமான புகைப்படங்கள்!
[Tuesday 2024-04-30 06:00]

பிரித்தானியாவில் சுமார் 60 ஆயிரம் சிறுவர்களின் மோசமான புகைப்படங்களை வைத்திருந்த 85 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். இங்கிலாந்தின் Surreyயில் வசித்து வந்த Mundy என்ற முதியவர், தேசிய முகமை குற்றவியல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.



புலம்பெயர்ந்தோருக்காக நினைவுச்சின்னம் எழுப்பத் திட்டமிடும் ஜேர்மனி!
[Monday 2024-04-29 18:00]

சில நாடுகள் புலம்பெயர்ந்தோரை எப்படி நாட்டை விட்டு வெளியேற்றலாம் என தீவிரமாக திட்டமிட்டுவரும் நிலையில், ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோருக்காக நினைவுச்சின்னம் எழுப்பத் திட்டமிட்டுவருகிறது ஜேர்மன் தலைநகரம். இந்த திட்டத்தை முன்வைத்துள்ளவரே ஜேர்மனி பிரிந்திருந்த காலகட்டத்தில், வேலைக்காக ஜேர்மனிக்கு வந்த முதல் தலைமுறையினரின் மகள்தான். அவரது பெயர் Sevim Aydin. பெர்லின் செனேட்டில் உறுப்பினராக உள்ள Sevim Aydin, Social Democrat கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.



கனடாவில் வேகமாக பரவி வரும் வைரஸ்!
[Monday 2024-04-29 18:00]

கனடாவில் நோரோ வைரஸ் என்னும் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடிய பொதுச் சுகாதார அலுவலகம் இது குறித்து அறிவித்துள்ளது. எதிர்பார்க்கப்பட்டதனை விடவும் அதிக வேகமாக நோய்த் தொற்று பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



ஈராக்கில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு தடை!
[Monday 2024-04-29 18:00]

ஈராக் அரசு இயற்றிய புதிய சட்டம் ஓரினச்சேர்க்கை திருமணங்களை தடை செய்கிறது. அதன்படி, ஈராக் அரசு இயற்றியுள்ள புதிய சட்டத்தின்படி, ஓரின சேர்க்கையாளர்களை திருமணம் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.



கனடாவில் ஆபத்தான புதிய வகை புழு குறித்து எச்சரிக்கை!
[Monday 2024-04-29 18:00]

கனடாவில் ஆபத்தான புதிய வகை புழு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடனாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் ஹமர்ஹெட் புழு அல்லது ப்ரோட்ஹெட் ப்லானெரியன் என்ற புழு வகை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



ஜேர்மனியில் 2 உக்ரைனியர்களுக்கு நிகழ்ந்த பரிதாபம்!
[Monday 2024-04-29 06:00]

ஜேர்மனியில் இரண்டு உக்ரேனியர்கள் கத்திக் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெற்கு ஜேர்மனிய கிராமமான முர்னாவில்(Murnau) உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் சனிக்கிழமை மாலை இரண்டு ஆண்கள் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தனர்.



"குடியேறிகளை திருப்பி அனுப்புவோம்" - அயர்லாந்தின் சூடான திட்டம் பரிசீலனை!
[Monday 2024-04-29 06:00]

ருவாண்டா மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து, நாட்டிற்குள் நுழையும் குடியேறிகளை பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்பும் அவசர சட்டத்தை அயர்லாந்து பரிசீலித்து வருகிறது. பிரித்தானிய அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய ருவாண்டா மசோதாவிற்கு பதிலளிக்கும் வகையில், வடக்கு அயர்லாந்தின் வழியாக வரும் அடைக்கலம் தேடுபவர்களை பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்ப அவசர சட்டத்தை அயர்லாந்து அரசு முன்மொழிந்துள்ளது.



2024 இல் புதிய சவால்: பிரித்தானியாவுக்குள் 7000+ குடியேற்றோர் வருகை!
[Monday 2024-04-29 06:00]

2024 ஆம் ஆண்டில் பிரித்தானியாவுக்குள் சிறிய படகில் குடியேறியோர் வருகை எப்போதும் இல்லாத அளவு அதிகரித்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், சிறிய படகு மூலம் UK க்கு வரும் குடியேறியோரின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.



ஈராக் டிக்டோக் பிரபலம் மர்ம நபரால் சுட்டுக்கொலை!
[Sunday 2024-04-28 18:00]

ஈராக்கில் பெண் டிக்டோக் பிரபலம் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈராக் நாட்டில் குஃப்ரான் மஹ்தி சவாதி எனும் பெண் டிக்டோக்கில் பிரபலமானவர். ''ஓம் பஹத்'' என்று சமூக வலைத்தளங்களில் அழைக்கப்பட்ட இவர், நாட்டின் கலாச்சாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வீடியோக்களை டிக்டோக்கில் பதிவேற்றிய குற்றத்திற்காக கடந்த ஆண்டு 6 மாதம் சிறைத்தண்டனை பெற்றார்.



பிரித்தானியாவில் வெளிநாட்டு இளைஞருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
[Sunday 2024-04-28 18:00]

பிரித்தானியாவில் சாரதிகளுக்கான தேர்வில் வெற்றிபெற்ற சில மணி நேரத்தில், இளைஞர் ஒருவர் முதியவர் மீது வாகனத்தால் மோதிய சம்பவத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 26ம் திகதி குறித்த சாலை விபத்து நடந்துள்ளது. 27 வயதான ஷரோன் ஆபிரகாம் Eastbourne பகுதியில் சாலையை கடக்கும் 75 வயது Andrew Forrest மீது மோதிவிட்டு, சம்பவயிடத்தில் இருந்து மாயமாகியுள்ளார்.



முதலீடு செய்யத் தயங்கும் கனடியர்கள்!
[Sunday 2024-04-28 18:00]

கனடியர்கள் முதலீடுகளில் நாட்டம் காட்டுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறான ஓர் நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடியர்கள் மத்தியில், வரி மீளளிப்பு கொடுப்பனவுகளை முதலீடு செய்வது வெகுவாக குறைவடைந்துள்ளது.


Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா