Untitled Document
May 10, 2024 [GMT]
மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: - வைகோ
[Wednesday 2018-10-10 18:00]

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தியும், பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திட முன் வரவில்லை. இதனைக் கண்டித்து மாணவர்கள் தீவிர முழக்கங்கள் எழுப்பிய பின்னரே, மாணவப் பிரதிநிதிகள் ஓரிருவரை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்.


மாணவியை காதலித்த வாலிபர் படுகொலை: - மீண்டும் பயங்கரம்-
[Wednesday 2018-10-10 18:00]

இந்த நிலையில் மீண்டும் காதல் விவகாரத்தில் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார். கரீம்நகர் மாவட்டம் தடிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (23). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவியும் காதலித்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காதல் விவகாரத்தை அறிந்த மாணவி குடும்பத்தினர் குமாரை மிரட்டினர். மேலும் அவர் மீதும் போலீசில் புகார் செய்தனர். போலீசார் குமாரை மிரட்டி இனிமேல் மாணவியை பார்க்க கூடாது என்று எச்சரித்து அனுப்பினர். அதன் பிறகு குமார் காதலியை பார்க்காமல் இருந்தார்.


மனைவி- குழந்தையை கொல்ல முயற்சி: - கணவர் மீது போலீசில் புகார்
[Wednesday 2018-10-10 17:00]

திருவாரூர் வாசன் நகரில் வசித்து வருபவர் கிஷோர்ராஜா(வயது28). இவர் காட்டூர் பகுதியில் கார் பரிசோதனை மையம் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் மன்னார்குடி பைங்காநாடு கிராமத்தை சேர்ந்த ஜெயநந்தினிக்கும்(24) கடந்த 2016-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.


கணவனை பிரிந்து பள்ளி காதலனை மணந்த இளம்பெண்!
[Wednesday 2018-10-10 08:00]

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரியை சேர்ந்த 18 வயது இளம்பெண். இவருக்கும் சாலை நகர் பகுதியை சேர்ந்த உறவினரான சக்திவேல் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருத்தணி முருகன் கோவிலில் வைத்து திருமணம் நடந்தது. திருமணத்தின் போது குரூப் போட்டோ எடுப்பது தொடர்பாக மாப்பிள்ளை வீட்டிற்கும், பெண் வீட்டிற்கும் தகராறு வந்ததுள்ளது.


காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட காவலர்!
[Wednesday 2018-10-10 08:00]

சென்னையில் காவலராக பணிபுரிந்து வந்தவர் கார்த்திக்வேல். இவருக்கு பேஸ்புக் மூலம் சரஸ்வதி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கி உள்ளனர். சரஸ்வதியின் சொந்த ஊர் விழுப்புரம் அருகே உள்ள அன்னியூர். இந்நிலையில், இன்று காலை அன்னியூர் சென்ற கார்த்திக்வேல் சரஸ்வதியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


நீதிமன்றக் காவலுக்கு அனுமதிப்பது மோசமான முன்னுதாரணமாகிவிடும்: நக்கீரன் கோபால் வழக்கில் இந்து என்.ராம்
[Tuesday 2018-10-09 18:00]

நக்கீரன் கோபாலை சட்டப்பிரிவு 124-ன் கீழ் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுமதிப்பது மோசமான முன்னுதாரணமாகிவிடும் என நக்கீரன் கோபால் வழக்கில் இந்து என்.ராம் வலியுறுத்தினார். ஆளுநரின் பணியில் தலையிட்டதாக நக்கீரன் கோபால் மீது சட்டப்பிரிவு 124-ன் கீழ் ஜாம்பஜார் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஆளுநரின் கூடுதல் செயலாளர் செங்கோட்டையன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


பலரின் உயிரைக் காப்பாற்றிய துணிச்சல் பெண்: - உதவி கிடைக்காமையால் உயிரிழந்த பரிதாபம்
[Tuesday 2018-10-09 17:00]

தீ விபத்தில் பலரை காப்பாற்றிவிட்டு ஹீரோ உயிரிழக்கும் காட்சிகளை சினிமாவில் பார்த்திருப்போம். ஆனால், நிஜத்தில் இப்படியொரு சம்பவம் குருகிராமில் நடந்துள்ளது. குருகிராம் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலரின் உயிரைக் காப்பாற்றிய துணிச்சலான பெண், உதவி கிடைக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


நக்கீரன் கோபால் மீதான வழக்கு ரத்து: - வைகோ வரவேற்பு
[Tuesday 2018-10-09 17:00]

நக்கீரன் கோபால் மீதான 124 பிரிவின் கீழான வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார். நீதித்துறை, காவல்துறை குறித்து அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை இல்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை கைது செய்ய விடமாட்டோம் எனவும் அவர் கூறியுள்ளார்.


நக்கீரன் கோபால் திடீர் கைது!
[Tuesday 2018-10-09 16:00]

நக்கீரன் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் கோபால். இன்று காலை புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றிருந்தார். அப்போது சென்னை போலீசார் அவரை திடீரென கைது செய்தனர். விமான நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலைய மாடியில் உள்ள திருவல்லிக்கேணி துணை கமி‌ஷனர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இன்னும் நிறைய கஷ்டங்களை சண்முகப்ரியா அனுபவிப்பாங்க: - முத்துலட்சுமி வீரப்பன்
[Tuesday 2018-10-09 08:00]

'சந்தன மர' வீரப்பனைப் பிடிக்க, காவல் துறைக்குத் தான் உதவியதற்கு அரசு அறிவித்திருந்த சன்மானம் 14 ஆண்டுகளாகியும் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை சமீபத்தில் தெரிவித்திருந்தார், கோவையைச் சேர்ந்த சண்முகப்ரியா. இவர், வீரப்பன் மனைவி முத்துலட்சுமியுடன் நெருங்கிப் பழகி, வீரப்பன் குறித்த தகவல்களைச் சேகரித்துத் தந்தவர் எனக் கூறப்பட்டது. இதுகுறித்து, வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியிடம் பேசினோம்.


மனைவியின் தலையை துண்டித்து அருகிலேயே உறங்கிய கணவன்!
[Monday 2018-10-08 18:00]

திருவெறும்பூர் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த மனைவியின் தலையை துண்டித்து உடல் மற்றும் தலையுடன் விடிய விடிய கணவன் உறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள, காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் சகாயராஜ். 30 வயதான இவர் எல்.ஐ.சி ஏஜென்ட்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, தஞ்சை, திருப்பூந்துருத்தியைச் சேர்ந்த, ஜெசிந்தா ஜோஸ்பின் என்ற 26 வயது பெண்ணுடன் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன், திருமணம் நடந்தது.


வீரப்பனை காட்டி கொடுத்த பெண்ணின் தற்போதைய நிலை......!
[Monday 2018-10-08 18:00]

தமிழக- கர்நாடக வனப்பகுதிகளில் வீரப்பன் மற்றும் அவரின் கூட்டாளிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தபோது, அவர்களைக் கொல்வதற்கு இரண்டு மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. இந்த நிலையில், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மற்றும் அவரின் குழந்தைகளை கோவையில் உள்ள வடவள்ளி பகுதியில் போலீஸார் தங்க வைத்தனர். அப்போது அதிரடிப்படைத் தலைவராக இருந்த செந்தாமரைக்கண்ணன், முத்துலட்சுமியுடன் நெருங்கிப் பழகி வீரப்பன் குறித்த தகவல்களைப் பெறும்படி தனது குடும்ப நண்பரான சண்முகப்பிரியா என்ற பெண்ணின் உதவியை நாடியுள்ளார்.


ரஜினியின் பாட்ஷா படம்போல நண்பனுக்காகத் துப்பாக்கியைத் தூக்கிய மோகன்ராம்: - மும்பையில் சிக்கிய பின்னணி
[Monday 2018-10-08 18:00]

`பாட்ஷா


பிரதமரிடம் 15 கோரிக்கைகளை முன் வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
[Monday 2018-10-08 18:00]

டெல்லியில் பிரதமர் மோடியை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். அப்போது அண்ணாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தியுள்ளார்.


நாயிடம் மன்னிப்பு கேட்காதவர் கத்தியால் குத்தி படுகொலை: - டெல்லியில் நள்ளிரவில் பயங்கரம்
[Monday 2018-10-08 08:00]

டெல்லியில் நாயிடம் மன்னிப்பு கேட்காத நபரை கத்தியால் குத்தி கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். டெல்லியில் உள்ளது மோகன் கார்டன் பகுதி. நேற்று முன்தினம் நள்ளிரவு இங்கு வசிக்கும் அங்கித், பாரஸ் மற்றும் அவர்களின் நண்பர் தேவ் ஆகியோர் தங்கள் நாயை வாக்கிங் அழைத்து சென்றனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த விஜேந்தர் ரானா என்பவர், தனது மினி லாரியை ஓட்டி வந்தார். அப்போது, அந்த வண்டி நாயை லேசாக இடித்ததாக கூறப்படுகிறது. இதனால், வலி தாங்காமல் அந்த நாய் குரைத்தது.


செல்போனால் ஏற்பட்ட தகராறில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சிறுவன்!
[Monday 2018-10-08 08:00]

தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள துவாரகா பகுதியின் பிந்தாபூர் என்னும் இடத்தில் வசிப்பவர் ரன்பீர் சிங். இவரது மகன் குல்‌ஷன் (17). நேற்று முன்தினம் இரவு செல்போன் பிரச்சினை தொடர்பாக குல்ஷன் தனது சகோதரியுடன் தகராறில் ஈடுபட்டான். பிறகு சகோதரியின் செல்போனை அடித்து நொறுக்கி விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டான்.


மூளைவளர்ச்சி குன்றிய மகளை விஷம் வைத்து கொலை செய்த பெற்றோர்:
[Sunday 2018-10-07 13:00]

விருதுநகர் மாவட்டத்தில் மூளைவளர்ச்சி குன்றிய மகளை பெற்றோரே விஷம் வைத்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாழைக்குளத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவருடைய மனைவி ரேவதி. முனீஸ்வரன் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.


ஆண் குழந்தையை கொன்ற கொடூர தாய்: - சொன்ன அதிர்ச்சி காரணம்
[Sunday 2018-10-07 08:00]

சென்னையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 2 மாத ஆண் குழந்தையை, அதன் தாயே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரியில் திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தம்பதி வெங்கண்ணா-உமா தம்பதி. இவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.


சிறையிலிருந்து விடுதலையான ஆயுள் கைதி: - மனைவியை முதியோர் இல்லத்தில் சந்தித்த உருக்கமான சம்பவம்
[Sunday 2018-10-07 08:00]

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விடுவிக்கப்பட்ட ஆயுள்தண்டனை கைதி தன்னுடைய மனைவியை முதியோர் இல்லத்தில் சந்தித்துள்ள உருக்கமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இலங்கையை சேர்ந்த பக்கா என்றழைக்கப்படும் விஜயா (60), இலங்கை தமிழர் பிரச்னையின்போது அகதியாக தமிழகத்திற்கு வருகை தந்தவர்.


எதிர்கால அரசியலில் நாம் இணைந்து செயல்படுவோம்: - திருமுருகனிடம் சரத்குமார் வேண்டுகோள்!
[Saturday 2018-10-06 17:00]

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தியை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று சந்தித்தார். அரை மணி நேரம் இந்தச் சந்திப்பு நடந்தது. சந்திப்பில் என்ன பேசினார்கள் என்று ச.ம.க-வின் நிர்வாகிகளிடம் கேட்டோம்.


ஆபத்தான முறையில் செயல்பட்டதற்காக பஸ் டிரைவர் பணியிடை நீக்கம்: - ஏன் தெரியுமா?
[Saturday 2018-10-06 16:00]

கர்நாடக மாநில அரசுக்கு சொந்தமான பேருந்து பயணிகளுடன் தவனகேரே மாவட்ட சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது ஸ்டீயரிங் வீலில் ஒரு குரங்கு அமர்ந்துகொண்டு வாகனத்தை இயக்குவது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக சமீபத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.


வேற்றுச் சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்து மணந்த இளம் பெண்: - தந்தை கொடுத்த கொடூர தண்டனை
[Saturday 2018-10-06 09:00]

இந்தியாவின் பீகாரில் உள்ள கிராமத்தில் வேற்றுச் சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்து மணந்த இளம் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜவுளி என்னும் கிராமத்தை சேர்ந்த பெண் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த வேற்று சாதி இளைஞரைக் காதலித்து வந்தார்.


பெற்ற குழந்தைகளை ஆற்றில் எறிந்துவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு: - அதிர்ச்சி சம்பவம்
[Saturday 2018-10-06 09:00]

ஹைதராபாத்தில் 3 குழந்தைகளையும் ஆற்றில் வீசி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற தாய் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத் மாநிலத்தை சேர்ந்த Cheruku Muthyalu என்ற நபர், நேற்று பெண் ஒருவர் தன்னுடைய 3 குழந்தைகளை ஆற்றில் தூக்கி வீசிவிட்டு, அவரும் குதித்து தற்கொலைக்கு முயல்வதை பார்த்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததோடு, மீட்பு பணியில் ஈடபட ஆரம்பித்தார்.


பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் விடுதலையில் சிக்கல் நீடிப்பு!
[Friday 2018-10-05 18:00]

ராஜீவ் காந்தி கொலைக்குற்றவாளிகள் விடுதலையில் ஆளுநர் முடிவில் தாமதம் நீடிப்பதால் விடுதலையில் சிக்கல் எழுந்துள்ளது. ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளான நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபட் பெயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் 7 பேரும் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் உள்ளனர்.


தற்கொலை பண்ணிக்க முடிவெடுத்தேன்: - : நடிகை நிலானி பேட்டி
[Friday 2018-10-05 18:00]

காதலன் லலித்குமார் இறந்து போனதையடுத்து சின்னத்திரை நடிகை நிலானி மீது பல்வேறு அவதூறுகள் எழுந்ததையடுத்து தற்கொலை முயற்சி மேற்கொண்டார். நிலானியை திருமணம் செய்ய விரும்பிய உதவி இயக்குநர் காந்தி லலித்குமார், கடந்த மாதம் கே.கே நகர் பகுதியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இவரது இறப்பிற்கு பிறகு, நிலானி மற்றும் லலித் குறித்த நெருங்கமான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின.


விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்: - மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்."
[Friday 2018-10-05 17:00]

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்பேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் விஜய், சமீபத்தில் நடைபெற்ற சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் குறித்த பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.


உயர்ந்த சாதி பெண்ணை காதலித்து ஓடிப்போக முடிவு செய்த இளைஞருக்கு நேர்ந்த கொடுமை!
[Friday 2018-10-05 09:00]

தெலுங்கானா மாநிலத்தில் உயர்ந்த சாதி பெண்ணை காதலித்து ஓடிப்போக முடிவு செய்த நபரை அப்பெண்ணின் கொடூரமாக அடித்துள்ளனர். தாழ்ந்த சாதியை சேர்ந்த சாய்கிரண் என்பவர் தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள உயர்ந்த சாதி பெண் ஹரிதாவை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் பள்ளியில் இருந்தே ஒருவருக்கொருவர் தெரியும். இந்நிலையில், ஹரிதாவை தனது வீட்டுக்கு அழைத்து சென்று, நான் இப்பெண்ணை திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் என தனது அம்மாவின் கூறியுள்ளார் சாய்கிரண்.


பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்: - ஆயிரக்கணக்கில் அனுப்பப்படும் அஞ்சல் அட்டைகள்
[Friday 2018-10-05 08:00]

தமிழக அரசின் தீர்மானத்தை ஏற்று பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்

Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா