Untitled Document
April 27, 2024 [GMT]
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ள நீதிபதிகளுக்கு பாராட்டுகள்: - திருமாவளவன்
[Friday 2018-09-28 16:00]

சபரிமலையில் பெண்கள் வழிபடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ள நீதிபதிகளுக்கு பாராட்டுகள் என்றும், வழிபடும் உரிமைகள் மட்டுமின்றி அர்ச்சனை செய்வதிலும் பெண்களுக்கு இருக்கும் தடைகள் நீங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்


பெண்கள் சபரிமலை கோயிலுக்குச் சென்று வழிபட தடை இல்லை: - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
[Friday 2018-09-28 12:00]

சபரிமலையில், அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது.


சென்னையில் 10-ம் வகுப்பு மாணவனுடன் குடும்பம் நடத்திய 40 வயது ஆசிரியை கைது
[Friday 2018-09-28 12:00]

கேரளாவின் கோழிக்கோட்டில் 10-ம் வகுப்பு மாணவனுடன் குடும்பம் நடத்திய 40 வயது ஆசிரியை சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவின் ஆலப்புழா அருகே உள்ள சேர்த்தலா முகம்மா என்ற இடத்தில் ஒரு தனியார் ஆங்கிலப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவனும் அதே பள்ளியில் பணியாற்றும் 40 வயதான ஆசிரியையும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.ஆசிரியை விவாகரத்து பெற்றவர். அவருக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார்.


செல்போனை கணவன் பறித்ததால் மூன்று குழந்தைகளை கொன்று உயிரை மாய்த்த தாய்!
[Friday 2018-09-28 12:00]

சேலம் மாவட்டம் நாழிக்கல்பட்டி மன்னார்காடு கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது 37). கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி ஜெயா (26), இவர்களுக்கு சுமித்ராஸ்ரீ (7), ஷாலினி (3), வெற்றிவேல் என்ற 11 மாத குழந்தையும் இருந்தது. கடந்த 26-ந்தேதி வீட்டில் இருந்த ஜெயா மற்றும் அவரது 3 குழந்தைகளும் மாயமானது இது குறித்து லெட்சுமணன் மல்லூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.


பெற்ற மகளை 3 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை!
[Friday 2018-09-28 11:00]

உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டாவில் தனது தந்தை தன்னை கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் சித்ரவதை செய்ததாக 14 வயது சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்வபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து சிறுமியின் தந்தை மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.


பிறந்த நாள் அன்று காதலியை தனியாக அழைத்துச் சென்று கொலை செய்த காதலன்: - அதிர்ச்சி சம்பவம்
[Friday 2018-09-28 09:00]

இந்தியாவில் பிறந்தநாளின் போது காதலியை தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று முன்னாள் காதலன் அவரை கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் Kharadi பகுதியைச் சேர்ந்தவர் Uma Baban Kapse. இவர் கடந்த புதன் கிழமை தன்னுடைய 19-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.


வாழ்ந்தால் அவருடன்தான் வாழ்வேன்: - 65 வயது தலைமை ஆசிரியரை காதலித்த மாணவி
[Thursday 2018-09-27 18:00]


மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர் கைது!
[Thursday 2018-09-27 18:00]

சென்னை அசோக்நகர் 87-வது தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை (60). இவரது மனைவி மகேஸ்வரி (53). இவர்களுக்கு கவிதா என்ற மகளும், சந்தோஷ் என்ற மகனும் உள்ளனர். சென்னையில் உள்ள ஏ.ஜி.எஸ். அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அண்ணாமலை வடபழனியில் தனியாக ஆடிட்டிங் அலுவலகம் நடத்தி வருகிறார். மகள் கவிதா தரமணியில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மகன் சந்தோஷ் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று வருகிறார். கம்ப்யூட்டர் விளையாட்டுக்கும் அடிமையாகி உள்ளான்.


திருமண பந்தத்திற்கு பின்னர் தகாத உறவு வைத்துக்கொள்வது குற்றமில்லை: - உச்சநீதிமன்றம் அதிரடி
[Thursday 2018-09-27 12:00]

இந்திய தண்டனை சட்டப்பிரிவு 497-ஐ நீக்கி, திருமண பந்தத்திற்கு பின்னர் தகாத உறவு வைத்துக்கொள்வது குற்றமில்லை என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. திருமணத்திற்கு பின்னர் தகாத உறவில் ஈடுபட்டால், ஆண்களுக்கு மட்டுமே 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது.


உனக்கு பழகுவதற்கு இந்து இளைஞர்கள் இல்லையா? - மாணவியின் வாக்குமூலம்
[Thursday 2018-09-27 09:00]

உத்திரபிரதேச மாநிலத்தில் பெண் பொலிஸ் ஒருவர்,


இரு மனைவிகள்... ஆறு பிள்ளைகள்: - விஸ்வரூபம் எடுக்கும் விஜயகுமாரின் குடும்ப சண்டை -
[Thursday 2018-09-27 09:00]

நடிகர் விஜயகுமாரின் குடும்ப பிரச்சனை தொடர்ந்து கோடம்பாக்கத்தை கலக்கி வருகிறது 2010 ஆம் ஆண்டில் விஜயகுமாரின் குடும்பத்துக்கும் அவரது மகள் வனிதா விஜயகுமாருக்கும் இடையே நடந்த அடிதடி சண்டை விஸ்வரூபம் எடுத்தது. அன்றிலிருந்து தொடர்ந்து நடந்து வரும் இந்த பிரச்சனை மீண்டும் தற்போது வீட்டு பிரச்சனைக்காக மோதல் வந்துள்ளது. இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு மூலக்காரணமே சொத்துதான் என கூறப்படுகிறது.


பெண்ணுக்கு நாகப்பாம்பு பிறக்கும் என பூசாரி சொன்னதை நம்பி ஏமாந்த நுாற்றுக்கணக்கான மக்கள்!
[Thursday 2018-09-27 09:00]

தமிழகத்தில் திருமணமான ஒரு பெண்ணுக்கு நாகப்பாம்பு பிறக்கும் என பூசாரி சொன்னதை நம்பி நுாற்றுக்கணக்கான மக்கள் திரண்ட நிலையில் அவர் கர்ப்பமே ஆகவில்லை என தெரியவந்துள்ளது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்தவர் கோகிலா (42). இவருக்கும் நடராஜன் (45) என்பவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தத நிலையில் குழந்தை இல்லை.


இராவணன் தமிழர் இல்லை: - சுப்ரமணிய சாமி கிளப்பும் புது சர்ச்சை.!
[Tuesday 2018-09-25 18:00]

பாஜக முன்னணி தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துவரக்கூடியவர். ஈழ விவகாரம் தொடங்கி காவிரி மேலாண்மை வாரியம், ஜல்லிக்கட்டு விவகாரம் என எப்போதும் தமிழகத்திற்கு, தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வரக்கூடிய சுப்ரமணிய சாமி தற்போது ராவணன் குறித்து புது சர்ச்சைகளை கிளப்பியுள்ளார்.


மனைவி மீதுள்ள கோபத்தில் நாயைக் கொன்ற கணவர்!
[Tuesday 2018-09-25 18:00]

சென்னையில், மனைவி மீதுள்ள கோபத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வீட்டில் செல்லமாக வளர்த்த 'பப்பி' என்ற நாயை கணவர் அடித்துக் கொலைசெய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி, சாரதி தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன். கடை வைத்துள்ளார். இவரின் மனைவி செல்வி. அழகு நிலையம் நடத்திவருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இவர்கள் வீட்டில் பப்பி என்ற பெயரில் நாய் ஒன்றை வளர்த்துவந்தனர்.


தாயைக் கொன்ற மகனை காட்டிக்கொடுத்த மனைவி!
[Tuesday 2018-09-25 18:00]

சொத்துத் தகராறில், பெற்ற தாயை கொடூரமாகக் கொலைசெய்த மகனை போலீஸார் கைதுசெய்துள்ளனர். `தாயைக் கொன்ற மகனிடம், எந்தவித குற்ற உணர்வும் இல்லை' என்கின்றனர், போலீஸார். சென்னை பாலவாக்கம், மணியம்மாள் தெருவைச் சேர்ந்தவர் ராணியம்மாள். 62 வயதாகும் இவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த ராணியம்மாள், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்குக் குடிபெயர்ந்தார். மணியம்மாள் தெருவின் அருகில் உள்ள கால்வாய்ப் பகுதியில் வீடு கட்டி வாழ்ந்துவந்தார்.


குரங்கிற்கு இறுதிசடங்கு செய்த பொதுமக்கள்!
[Tuesday 2018-09-25 18:00]

ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி, ஊட்டல்மலை கானாறு கரையில் நெமிலியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகே மரம் விட்டு, மரம் தாவும் போது மின்கம்பியில் சிக்கி பெண் குரங்கு ஒன்று உயிரிழந்தது. இதனை கண்ட வன்னியநாதபுரம் இளைஞர்கள் மின்சாரத்துறை ஊழியர்களுடன் இணைந்து, இறந்த குரங்கின் உடலை மீட்டனர்.


பெண் வழக்கறிஞர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நீதிபதி பதவி நீக்கம்!
[Tuesday 2018-09-25 18:00]

பெண் வழக்கறிஞர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நீதிபதி சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் ராஜவேல். இவர் பணியில் இருக்கும் பெண் வழக்கறிஞர்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபடுவதும், போனில் பாலியல் தொந்தரவு கொடுக்கும் வகையிலும் பேசி வந்திருக்கிறார். இது சம்பந்தமாக, பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்கத்தில் தங்களுடைய குமுறல்களைக் கொட்டி கண்ணீர் விட்டிருக்கின்றனர்.


வாக்கு வங்கி அரசியலுக்கு பாஜக அரசு முற்றுப்புள்ளி வைக்கும்: - பிரதமர் மோடி
[Tuesday 2018-09-25 18:00]

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, உற்சாகமான லட்சக்கணக்கான தொண்டர்களை நான் பார்க்கிறேன் என்று அவர் தெரிவித்தார். உலகின் பெரிய ஜனநாயக கட்சி என்பதில், பெருமிதம் கொள்கிறோம் என அவர் தெரிவித்தார்.


விசித்திர மலை கிராமம்: - இசையை பெயராக கொண்டுள்ள மக்கள்!
[Tuesday 2018-09-25 18:00]

மேகாலயா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பெற்றோர் தங்களது குழந்தைகளை பெயர் சொல்லி அழைக்காமல் இசை மூலம் அழைக்கின்றார்கள். அங்குள்ள கொங்தங் என்ற மலைக்கிராமத்தில் இந்த வினோத நிகழ்வு நடந்து வருகிறது. அங்குள்ள குழந்தைகளுக்கு தனித்தனி பெயர்கள் இருந்தாலும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு இசையை உருவாக்கி அதன்படியே அவர்கள் அழைத்து வருகிறார்கள்.


இராவணன் தமிழர் இல்லை: சு.சாமி கிளப்பும் புது சர்ச்சை.!
[Monday 2018-09-24 19:00]

பாஜக முன்னணி தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துவரக்கூடியவர். ஈழ விவகாரம் தொடங்கி காவிரி மேலாண்மை வாரியம், ஜல்லிக்கட்டு விவகாரம் என எப்போதும் தமிழகத்திற்கு, தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வரக்கூடிய சுப்ரமணிய சாமி தற்போது ராவணன் குறித்து புது சர்ச்சைகளை கிளப்பியுள்ளார்.


கணவரின் நாக்கை கடித்து துண்டாக்கிய காஜல்!
[Monday 2018-09-24 17:00]

தெருக்கூத்து கலைஞரான இவருக்கும், காஜல் என்ற பெண்ணிற்கும் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. காஜல் தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று அவருக்கும் அவரது கணவர் கரண்சிங்குக்கும் கலை நிகழ்ச்சி தொடர்பாக தகராறு ஏற்பட்டது. கரண்சிங்கின் பெற்றோர் தலையிட்டு அவர்களது சண்டையை தீர்த்து வைத் தனர். பிறகு இரவு சாப் பிட்டு முடித்ததும் தூங்க சென்றனர். அப்போதும் கணவன்-மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டது.


கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்துவிட்டு பெற்ற குழந்தையை விட்டுச் சென்ற பெண்!
[Monday 2018-09-24 17:00]

கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்துவிட்டு, பெற்ற குழந்தையை தவிக்கவிட்டு சென்ற பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கடந்த வாரம் மலைப்பாதையோரத்தில் நபர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.


ரயில் விபத்தில் கால்களைப் பறிகொடுத்த காதலனை கரம்பிடித்த காதலி
[Monday 2018-09-24 17:00]

தமிழ்நாட்டில் ஐந்து மாதங்களுக்கு முன், ரயில் விபத்தில் கால்களைப் பறிகொடுத்த விஜய் என்பவர் செயற்கைக் கால்களுடன் நடக்க ஆரம்பித்துள்ளதாக அவர் மனைவி ஷில்பா கூறியுள்ளார். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விஜய்யும், ஷில்பாவும் காதலித்து வந்த நிலையில் ரயில் விபத்தில் கால்களை விஜய் பறிகொடுத்தார். கால்கள் இல்லாத விஜய்யை ஷில்பா திருமணம் செய்ய அவர் வீட்டில் எதிர்ப்பு எழுந்த நிலையில் அதையும் மீறி அவரை திருமணம் செய்தார் ஷில்பா.


விபத்தில் இறந்தவர் கணவர் என்று தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர்!
[Monday 2018-09-24 08:00]

விபத்தில் இறந்தவர் கணவர் என்று தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர் பின்னர் முகத்தில் உள்ள ரத்தத்தை துடைத்து பார்த்து தனது கணவர் என அடையாளம் தெரிந்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் திமுக மாவட்ட பிரதிநிதியாக உள்ளார்.


வேலைக்கு போகவில்லை திட்டிவந்த தந்தையைஅடித்துக் கொன்ற மகன் !
[Monday 2018-09-24 08:00]

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தின் சிமாலியா கிராமத்தில் வசிப்பவர் ராம்சிங் தட்வி. இவரது மகன் ராஜேந்திர தட்வி வேலைக்கு செல்லாமல் இருப்பதை கண்டித்துள்ளார். ராஜேந்திர தட்வி தனது அடிப்படை தேவைக்கு கூட சம்பாதிக்காமல் இருந்ததை ஏற்றுக்கொள்ளாத தந்தை தினமும் அவரை திட்டிவந்ததாகவும், வேலைக்கு செல்லுமாறு வற்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.


மகள்களுக்கு வி‌ஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தை!
[Monday 2018-09-24 08:00]

தமிழகத்தில் தொழிலாளி ஒருவர் தன்னுடைய 2 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்கூர் மலைப்பகுதியில் உள்ள செங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிக்கரசன் (40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா (39). இவர்களுக்கு சுதா (16), மேகலா (10) என 2 மகள்கள் உள்ளனர்.


ஆளுக்கொரு நீதி வேளைக்கொரு நியாயம் என்ற நிலையில்தான் சட்டம் அமல்படுத்தப்படுகிறது: - மு.க.ஸ்டாலின்
[Sunday 2018-09-23 17:00]

அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ` ஆளுக்கொரு நீதி- வேளைக்கொரு நியாயம் என்ற நிலையில்தான் சட்டம் அமல்படுத்தப்படுகிறது' என்று ஆளும் அதிமுக அரசை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுகள் எந்தச் சூழ்நிலையிலும் வரம்பு மீறும் வகையில் இருக்கக் கூடாது என்பதிலும்;பொது அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பெருமளவுக்கு இருக்கிறது என்பதிலும்;இரு வேறு கருத்துகளுக்கு இடமே இல்லை.


பாடசாலை மாணவிகளை ஏமாற்றி பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த இளைஞர்: - கைது செய்த பொலிசார்
[Sunday 2018-09-23 17:00]

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பாடசாலை மாணவிகளை ஏமாற்றி பாலியல் துஸ்பிரயோகம் செய்து ஏமாற்றி வந்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். கேரளா மாநிலத்தின் கொச்சி பகுதியைச் சேர்ந்தவர் பயாஸ் முபீன்(19). வேலை ஏதும் இன்றி சுற்றித்திரிந்த இவர் பேஸ்புக்கில் போலியாக ஒரு கணக்கை தொடங்கி தனது முகத்தை மாற்றி மார்பிங் செய்து அதில் பதிவிட்டுள்ளார்.

 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா