Untitled Document
April 26, 2024 [GMT]
9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: - குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை
[Saturday 2018-05-05 08:00]

ஆந்திராவில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்ட குaற்றவாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலம், குண்டூர் அருகேயுள்ள தசேபள்ளி பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை சாக்லேட் தருவதாக கூறி ரிக்‌ஷா தொழிலாளி சுப்பையா (55) கடந்த 2ம் தேதி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர். சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


எங்களை கொன்னுடாதே பணத்தை எடுத்துக்கோ: - கொள்ளையர்களிடம் கதறிய மூதாட்டி
[Saturday 2018-05-05 08:00]

ஈரோட்டில் தீரன் படப் பாணியில் ஒரு வீட்டில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரோட்டிலிருந்து சென்னிமலை செல்லும் சாலையில் அமைந்துள்ள ஓடைக்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (41). திருமணமாகாத இவர் தாயார் தங்காயம்மாளுடன் வசித்து வருகிறார். நேற்று (மே 3) இரவு சுமார் 7 மணியளவில் இவர்களின் வீட்டுக் கதவு படபடவென அடிக்க, ஏதோ அருகிலிருக்கும் உறவினர்கள் தான் அழைக்கிறார்களோ என கதவைத் திறந்திருக்கிறார் தங்காயம்மாள். கதவைத் திறந்தவுடனேயே முகமூடி அணிந்த, வாட்டசாட்டமான 6 பேர் கையில் பெரிய பெரிய பட்டாக் கத்திகளை ஏந்தியபடி நின்றிருக்கின்றனர். இதனைப் பார்த்து பதறிப்போன தங்காயம்மாள் கத்த முயற்சிக்க, கொள்ளையர்கள் கழுத்தை நெறித்து வீட்டிற்குள் இழுத்துச் சென்றுள்ளனர். வீட்டின் வேறு அறையிலிருந்த கோபாலகிருஷ்ணன் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்த போது தான், வீட்டினுள் கொள்ளையர்கள் புகுந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.


நீட் தேர்வை எழுதுவதற்காகத் தாயின் கம்மலை அடகு வைத்து கேரளா செல்லும் ஏழை மாணவி!
[Saturday 2018-05-05 08:00]

நீட் தேர்வை எழுதுவதற்காகத் தாயின் கம்மலை அடகு வைத்து விட்டு எர்ணாகுளம் செல்கிறார் அரியலூர் மாணவி ஹேமா. பேருந்து நிலையத்திற்கே தனியாக செல்லாத நான் எப்படி வெளிமாநிலத்திற்குச் சென்று தேர்வை எழுதப் போகிறேன் என்று தெரியவில்லை எனப் புலம்புகிறார் ஏழை மாணவி.


திருமணத்துக்கு மறுத்த பெண்ணின் கழுத்தை அறுத்த எம்.பி.ஏ மாணவன்!
[Monday 2018-04-30 18:00]

திருமணத்துக்கு மறுத்த பெண்ணின் கழுத்தை எம்.பி.ஏ படிக்கும் மாணவர் ஒருவர் அறுத்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், காட்பாடி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் ஷபீர். இவர், வேலூரில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்துவருகிறார். காட்பாடி அடுத்த கல்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுபீத்தரா தேவி. இவர், பி.காம் முடித்து விட்டு ஆற்காடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும், கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.


பேச மறுத்த காதலியை நடுரோட்டில் வைத்து கழுத்தை அறுத்த காதலன்: -அதிர்ச்சி சம்பவம்
[Monday 2018-04-30 18:00]

தன்னுடன் பேச மறுத்த காதலியை நடுரோட்டில் வைத்து காதலன் கழுத்தை அறுத்த அதிர்ச்சி சம்பவம் சிதம்பரத்தில் நடந்துள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை வேளாண்மை படித்து வருபவர் லாவண்யா. இவர் வேலூர் மாவட்டம், கதம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். சிதம்பரம் பல்கலைக்கழக தாமரை விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை லாவண்யா விடுதியில் இருந்து வெளியே வந்துள்ளார்.


மோடி நண்பராக இருந்து தமிழகத்திற்கு துரோகம் செய்து விட்டார்: - வைகோ
[Monday 2018-04-30 09:00]

எத்தனையோ பிரதமர்களை எதிர்த்திருக்கிறேன், ஆனால் மோடி நண்பராக இருந்து தமிழகத்திற்கு துரோகம் செய்து விட்டார் என வைகோ தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி காவிரி பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க பொதுச்செயலாளருமான வைகோ செங்கிப்பட்டியில் அறப்போர் பிரச்சார பயணத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார். அப்போது, ''காவிரி நீர் பிரச்னையில் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. இது தொடர்பாக 100 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடைபெறுகிறது. அதிக வெள்ளம் வரும் காலத்தில் தமிழகத்தை வடிகாலாகக் கர்நாடக அரசுக் கருதி வருகிறது. இந்நிலையில் மேகதாதுவில் 138 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கி வைப்பதற்காகப் புதிதாக அணைக் கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கிறது.


கடலில் சிக்கி உயிருக்குப் போராடிய 3 பெண்களை உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய 65 வயது முதியவர்!
[Monday 2018-04-30 09:00]

கடலில் சிக்கி உயிருக்குப் போராடிய 3 பெண்களைத் தனி ஒரு ஆளாகச் சென்று 65 வயது முதியவர் காப்பாற்றிய சம்பவம் நெகிழவைத்துள்ளது. மதுரை வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல், பஞ்சவர்ணம் குடும்பத்தினர் ராமேஸ்வரத்திற்குச் சுற்றுலா சென்றுவிட்டு ஏர்வாடி தர்காவிற்கு வந்துள்ளனர். தர்காவிற்கு சென்றுவிட்டு அருகில் உள்ள சின்ன ஏர்வாடி கடற்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். சின்ன ஏர்வாடி கடலில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்த துளசி என்பவரை திடீரென எழுந்த கடல் அலை இழுத்துச் சென்றது.


சொத்து பிரச்னைக்காக டாக்டர் மீது துப்பாக்கி சூடு: - டெல்லியில் துணிகரம்
[Monday 2018-04-30 09:00]

டெல்லியின் தெற்கில் கடாய்பூர் பகுதியில் டாக்டர் ஒருவர் தனது சகோதரர்களுடன் நேற்று இரவு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் டாக்டர் வந்த கார் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது. காரில் இருந்த டாக்டரும் பதிலுக்கு அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.


ஏலத்தில் விற்கப்படும் மணப்பெண்கள்: - பேரம் பேசி வாங்கி செல்லும் ஆண்கள்
[Monday 2018-04-30 06:00]

திருமணம் என்றால் வரதட்சணை கொடுத்து பெண்களை திருமணம் முடித்துவைப்பார்கள் என்றுதான் நாம் அறிந்திருப்போம்.ஆனால், ஒரு சில இடங்களில் பெண்கள் தட்டுப்பாடல் விலை கொடுத்து மணப்பெண்கள் வாங்கப்படுகின்றனர். இன்னும் ஒரு சில இடங்களில் ஏலத்தில் பெண்கள் விற்கப்படுகின்றனர்.இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு பெண்கள தட்டுப்பாடு இருக்கிறது. இங்கு சுற்றியுள்ள பகுதிகளில் பெண்களின் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. 1000 ஆண்கள் இருந்தால், 800 பெண்கள் தான் இருக்கிறார்கள்.


கருணாநிதியைச் சந்தித்த தெலங்கானா முதல்வர்!!
[Sunday 2018-04-29 16:00]

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று சென்னையில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். தேசிய அளவில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணியை அமைக்கும் பணியில் தெலங்கனா மாநில முதலமைச்சரும், தெலங்கானா ரஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜியைச் சந்தித்து அவர் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்தநிலையில், இன்று சென்னை வந்த சந்திரசேகர ராவ், கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.


காதலியைப் பெண் கேட்டு அவரது வீட்டுக்கு குடும்பத்துடன் சென்ற இளைஞருக்கு நேர்ந்த கதி!
[Sunday 2018-04-29 15:00]

காதலியைப் பெண் கேட்டு அவரது வீட்டுக்கு குடும்பத்துடன் சென்ற இளைஞர், பெண் தர மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சயனைடு கடத்திய வழக்கு: - விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு 10 ஆண்டு சிறை..!
[Sunday 2018-04-29 15:00]

விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்ட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரில் இருவருக்கு தலா 10 ஆண்டு தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


ஒவ்வொரு சொட்டு நீரையும் வீணாக்காமல் சேமிக்க வேண்டும்: - பிரதமர் மோடி
[Sunday 2018-04-29 15:00]

அடுத்த தலைமுறையினருக்காக நாம் அனைவரும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிக்க வேண்டும் என மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 'மன் கி பாத்' ரேடியா நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: காமன்வெல்த் போட்டியில் சாதித்தவர்களுக்கு பாராட்டு ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த 21-வது காமன்வெல்த் போட்டியில், இந்திய மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக நமது வீரர்கள் செயல்பட்டு தங்கத்திற்கு மேல் தங்கம் வாங்கி குவித்துள்ளனர். தேசிய கொடியுடன் வெற்றி பெற்ற வீரர்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதனை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. அவர்கள் நமக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன்.


பணம் கொடுக்காததால் தலையை தனியாக அறுத்து கொலை: - கொடூர சம்பவம்
[Sunday 2018-04-29 15:00]

சிவகங்கையில் முத்துப்பாண்டி என்பவரை பூமிநாதன் என்பவர் தலையை அறுத்து தனியாக தூக்கி கொண்டு போய் காவல் நிலையத்தில் சரண்டர் ஆனார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அருகே புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவர் பனை மரங்களை குத்தகைக்கு எடுத்து அதில் இருந்து கிடைக்கும் நுங்குகளை முத்துப்பாண்டி என்பவரிடம் கொடுத்து விற்பனை செய்து வந்திருக்கிறார். கடந்த ஒரு ஒருவார காலமாக நுங்கு விற்பனை செய்த பணத்தை பூமிநாதனிடம் ஒப்படைக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பூமிநாதன், முத்துப்பாண்டியைத் தேடி அலைந்தார்.


ஆண் குழந்தையின் பிறப்புறுப்பை வெட்டிக் கொன்ற கொடூர டாக்டர்!
[Saturday 2018-04-28 18:00]

கருக்காலத்தின் போது வயிற்றில் இருக்கும் பாலினத்தை பெற்றோருக்கு தெரியப்படுத்துவது நமது நாட்டில் தடை செய்யப்பட்ட, சட்டவிரோத, தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தின் சத்ரா பகுதியில் வசிக்கும் அனில் பான்டா என்பவர் எட்டு மாத கர்ப்பிணியான தனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் அருகில் இருக்கும் தனியார் நர்சிங் ஹோமிற்கு அழைத்து சென்றிருக்கிறார். அந்த நர்சிங் ஹோமின் உரிமையாளரான டாக்டர் அருண் குமார் என்பவர், பான்டாவின் மனைவிக்கு வழங்கப்பட வேண்டிய மேல்சிகிச்சைக்காக வேறு ஒரு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தியுள்ளார்.


தேர்தலுக்கு பின்னரும் கூட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா? - திருமாவளவன்
[Saturday 2018-04-28 18:00]

கர்நாடக தேர்தலுக்கு பின்னர் கூட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருவது வேதனையை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசின் காலம் தாழ்த்தும் நடவடிக்கைகளால் கர்நாடக தேர்தலுக்கு பின்னரும் கூட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார்.


செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கில் நளினி கணவர் முருகன் விடுதலை!
[Saturday 2018-04-28 18:00]

வேலூர் சிறையில் செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கில் நளினி கணவர் முருகன் விடுவிக்கப்பட்டார். அரசு தரப்பில் சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் முருகனை வேலூர் நீதிமன்றம் விடுவித்தது. முருகன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


மகனுக்கு கத்திக்குத்து மருமகள் அடித்துக்கொலை : - சொத்துக்காக பெற்றோர் நடத்திய கொடூரம்
[Saturday 2018-04-28 17:00]

"நீங்க வசதியா இருக்கும்போது, உங்களுக்கு நாங்க எதுக்கு சொத்து கொடுக்கணும்" என்று கூறி, மருமகளை மாமனார் மாமியார் அடித்துக்கொன்றதோடு, பெற்ற மகனையும் கத்தியால் குத்திய சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராசு. இவருக்கு ராதாகிருஷ்ணன், குமார் உள்ளிட்ட 3 மகன்கள் உள்ளனா். இவருக்கு 6 ஏக்கரில் வயல் மற்றும் 3 வீடுகள் உள்ளன. இந்நிலையில், கடைசி மகன் குமார் எலெக்ட்ரீஷியன் வேலை பார்த்துவருகிறார். குமாரின் மனைவி அமராவதியின் அம்மா வீட்டில் நிறைய நிலம், சொத்துக்கள் உள்ளன.


திருமணம் முடிந்து திரும்பும்போது மணமகளை சுட்டுக்கொன்று நகை-பணம் கொள்ளை!
[Saturday 2018-04-28 16:00]

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்தவர் ஷாஜப். இவருக்கும் காசியாபாத்தைச் சேர்ந்த பக்ரானா என்ற பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் மணமக்கள் ஒரு காரிலும், உறவினர்கள் வேறு சில கார்களிலும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் பர்தாபூர் என்ற இடத்தில் காரை நிறுத்தி சாலையோர ஓட்டலில் சாப்பிட்டனர். அதன்பிறகு மீண்டும் பயணத்தை தொடர்ந்தனர்.


சாராயத்தில் விஷம் கலந்த ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை: - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
[Friday 2018-04-27 17:00]

போளூரில் சாராயத்தில் விஷம் கலந்த 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விஷ சாராயம் குடித்து 13 பேர் 2000ம் ஆண்டில் போளூரில் இறந்தனர். 13 பேர் இறந்த வழக்கை விசாரித்த திருவண்ணாமலை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. காமாட்சி என்பவர் விற்ற சாராயத்தில் விஷம் கலந்த 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கள்ளச் சாராயம் விற்பதில் ஏற்பட்ட போட்டி காரணமாக விஷம் கலந்ததாக வழக்கு தொடரப்பட்டது.


சொத்துக்காக உறவினருடன் சேர்ந்து கணவரை தீர்த்து கட்டிய மனைவி: - காட்டி கொடுத்த சிசிடிவி வீடியோ
[Friday 2018-04-27 08:00]

இந்தியாவில் கணவரின் சொத்துக்காக அவரை ஆட்களை வைத்து கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்தவர் ஷைலீஸ் நிம்சே. இவர் மனைவி சாக்‌ஷி. தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நிம்சேவுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது, இது தொடர்பாக அவருக்கும், சாக்‌ஷிக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.


மயக்க மருத்து கொடுத்து கள்ளக்காதலியின் மகள் பலாத்காரம்: - ஆட்டோ டிரைவர் கைது
[Friday 2018-04-27 08:00]

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கள்ளக்காதலியின் மகளை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.திருநின்றவூர், ராம் நகர், முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவம் (48). ஆட்டோ டிரைவர். இவருக்கு, திருநின்றவூரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவரது 12 வயது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறாள்.


பெண்கள் குளிப்பதை எட்டிப் பார்த்த துணை நடிகர் கைது!
[Friday 2018-04-27 08:00]

பெண்கள் குளிப்பதை எட்டிப் பார்த்த துணை நடிகர் கைது செய்யப்பட்டார். திருவாரூரை சேர்ந்தவர் வைரமூர்த்தி (29). இவர் கிண்டி ஈக்காட்டுதாங்கல் பூமகள் நகரில் ரூம் எடுத்து தங்கி சோழிங்கநல்லூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சினிமாவிலும் துணை நடிகராக நடித்து வருகிறார். இவர் இருக்கும் வீட்டின் மாடி எதிரே பெண்கள் தங்கி வேலைபார்க்கும் விடுதி உள்ளது.


கணவனை கொன்ற வழக்கில் மனைவி கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை!
[Friday 2018-04-27 08:00]

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பட்டறைப்பள்ளி சின்னராமனூரை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 37). இவரது மனைவி கஸ்தூரி (36). அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (36) என்ற மிட்டாய் வியாபாரியுடன், கஸ்தூரிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.இவர்களின் உல்லாசத்திற்கு சோமசுந்தரம் தடையாக இருந்தார்.


கோவில் வளாகத்தில் குடிபோதையில் மயங்கி கிடந்த இளம் பெண்!
[Thursday 2018-04-26 17:00]

தற்போது இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள் குடிபழக்கத்துக்கு அடிமையாகி வருவது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூரில் பிராந்தியை குடித்து கொண்டு சிரித்து பேசிகொண்ட காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இதேபோல் கும்பகோணம் அருகே தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் ஒரு இளம்பெண் குடிபோதையில் மயங்கி கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-


தமிழ் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மூன்று மட்டுமே: - இந்திய தேர்தல் ஆணையம் தகவல்
[Thursday 2018-04-26 17:00]

தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் அதிமுக, திமுக, தேமுதிக மட்டுமே என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் பதிவு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 154 கட்சிகள் தமிழகத்தில் இருப்பதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.


என் உயிர் இருக்கும் வரை ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தலை எடுக்கவிடமாட்டேன்: - வைகோ ஆவேசம்
[Thursday 2018-04-26 17:00]

``என் உயிர் இருக்கும் வரை ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தலை எடுக்கவிடமாட்டேன். அதுவரை உறங்கமாட்டேன்'' என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாகக் கூறினார். ஸ்டெர்லைட் தொழிற்சாலை இயங்குவதற்கும், புதிய தொழிற்சாலை விரிவாக்கத்திற்கும் தடை விதிக்கக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய, மாநிலச் சுற்றுச்சூழல் அமைச்சகங்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது.


பதவி கிடைக்காத திருமணத்திற்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி மணமகனை கொன்ற பேராசிரியர் கைது!
[Thursday 2018-04-26 17:00]

ஒடிசாவில் திருமணத்தன்று மணமக்களுக்கு வந்த திருமண பரிசு பார்சலில் வெடிகுண்டு இருந்தது. அந்த வெடிகுண்டு வெடித்து மணமகன் சவுமியா சேகர் சாகு மற்றும் அவரது பாட்டி கொல்லப்பட்டுள்ளதுடன் மணப்பெண் படுகாயமடைந்தார். நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கல்லூரி பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கல்லூரி ஆசிரியர் புஞ்சிலால் மெஹர் கொல்லப்பட்ட மணமகனின் தாயாருடன் ஒன்றாக பணிபுரிந்து வந்ததாகவும், தமக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வை கொல்லப்பட்ட மணமகனின் தாயாருக்கு நிர்வாகம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா