Untitled Document
April 28, 2024 [GMT]
பஸ்சில் நகை திருடிய பெண்களை விரட்டிபிடித்த பெண் கண்டக்டர்!
[Saturday 2018-04-07 08:00]

கேரளாவில் பஸ்சில் பெண் பயணியின் செயினை பறித்துக் கொண்டு ஓடிய 2 தமிழக பெண்களை பெண் கண்டக்டர் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கோலத்து என்ற இடத்துக்கு நேற்று முன்தினம் மாலை கேரள அரசு பஸ் புறப்பட்டு சென்றது. அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். பஸ்சில் கண்டக்டராக சுஜா என்பவர் பணியாற்றினார். கூட்ட நெரிசலில் சரஸ்வதி என்ற பயணியின் மூன்றரை பவுன் செயினை யாரோ திருடினர். இதை அறிந்த அவர் கூச்சலிட்டார்.


விஷம் கலந்த மதுவை திருடி குடித்த கூலித் தொழிலாளி பலி!
[Saturday 2018-04-07 08:00]

துவரங்குறிச்சி அருகே தோட்டத்தில் புதைத்து வைத்த விஷம் கலந்த மதுவை திருடி குடித்த கூலித் தொழிலாளி பலியானார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள கோட்டப்பட்டியை சேர்ந்தவர் தீபன் (28). இவர் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை விற்பதுடன், அவ்வாறு விற்ற மதுபாட்டில்கள் தவிர மீதமுள்ள மதுபாட்டில்களை துவரங்குறிச்சி அருகே எல்லைக் காட்டுப்பட்டியில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் குழி தோண்டி புதைத்து வைப்பது வழக்கம். இப்படி புதைத்து வைத்த மதுபாட்டில்கள் கடந்த ஒரு வார காலமாக அடிக்கடி திருட்டு போயுள்ளது.


பள்ளிக்குள் மது போதையில் மயங்கி விழுந்த ஆசிரியர்!
[Saturday 2018-04-07 08:00]

திருப்புவனம் அருகே அரசு பள்ளியில் பணியில் இருந்த ஆசிரியர் போதையில்


நகைக்காக என் காதல் மனைவியை இழந்துவிட்டேன்: - கண்ணீர்விட்ட பிரியாவின் கணவர்
[Friday 2018-04-06 18:00]

வடபழனியில் கொலை செய்யப்பட்ட பிரியாவின் கணவர் பாலகணேஷ் என்ற பிரபு திடுக்கிடும் தகவலை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். அப்போது, நகைக்காக என் காதல் மனைவியை இழந்துவிட்டேனே என்று மருத்துவமனையில் கதறியழுதுள்ளார். சென்னை வடபழனி, தெற்கு சிவன்கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் வசித்து வருபவர் பாலகணேஷ் என்ற பிரபு. இவர் வடபழனியில் உள்ள சிவன் கோயிலில் தற்காலிக அர்ச்சகராகப் பணியாற்றுகிறார். இவரது சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம், புள்ளலூர். இவர், வேலூர் மாவட்டம் நெமிலியைச் சேர்ந்த பிரியா என்ற ஞானபிரியாவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குக்கு குழந்தை இல்லை. அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர்.


தூங்க முடியாமல் என் மகன் தவித்தான்: - போலீஸாருடன் போராடிய பிரகாஷின் தாய் சங்கீதா கண்ணீர் பேட்டி
[Friday 2018-04-06 16:00]

'இரவில் தூங்க முடியாமல் என் மகன் பிரகாஷ் தவித்தான்' என்று அவரது தாய் சங்கீதா கண்ணீர்மல்க நம்மிடம் தெரிவித்தார். தி.நகரில் போக்குவரத்து போலீஸாருடன் மல்லுக்கட்டிய பிரகாஷ், நேற்று மாலை ஜாமீனில் வெளியில் வந்தார். வீட்டுக்குச் சென்ற அவரை கட்டித்தழுவி கன்னங்களில் முத்தங்களைப் பதித்தார் அவரது அம்மா சங்கீதா. மகனைப் பார்த்த மகிழ்ச்சியில் இருந்த சங்கீதா, நம்மிடம் பேசினார்.


ஐ.பி.எல் போட்டிகளுக்கு தமிழகத்தில் வலுக்கும் எதிர்ப்பு!
[Friday 2018-04-06 16:00]

காவிரி மேலாண்மை வாரியத்துக்காகத் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்தும் வரும் நிலையில், 'ஐபிஎல் போட்டிகள் நடைபெறக் கூடாது' என்ற குரல்களும் ஆங்காங்கே கேட்கத் தொடங்கிவிட்டது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் நாளை தொடங்குகின்றன. இரண்டு வருடங்களுக்குப் பிறகு, சென்னை அணி இந்த ஐபிஎல் போட்டியில் பங்கேற்க இருப்பதால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். நாளை துவங்க உள்ள போட்டிகளைக் காண, சென்ற வாரத்திலிருந்தே ரசிகர்கள் ஆயத்தமாகிவிட்டனர்.


இறந்த தாயின் உடலைப் பதப்படுத்திய மகன்: - பென்சனுக்காக நடந்த கொடூரம்
[Friday 2018-04-06 16:00]

ஓய்வூதியம் பெறுவதற்காக இறந்த தாயின் உடலை சுமார் இரண்டு ஆண்டுகளாகப் பதப்படுத்தி கைரேகை எடுத்து வந்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.கொல்கத்தாவில் வசித்து வந்தவர் சுபாபிரதா மஜூந்தர். இவருக்கு வயது 46. லெதர் டெக்னாலஜியில் மெரிட்டில் தேர்ச்சி பெற்ற இவர் தன் படிப்பைத் தாயின் உடலைப் பதப்படுத்துவதற்காகப் பயன்படுத்தியிருக்கிறார். இந்தச் சம்பவம் கொல்கத்தாவையே அதிரவைத்துள்ளது. இது குறித்து கொல்கத்தா போலீஸ் தரப்பில் கூறப்பட்ட விவரங்கள் பின்வருமாறு...


ஆட்டுக்குட்டியை காப்பாற்ற புலியோடு போராடிய இளம்பெண்!
[Thursday 2018-04-05 13:00]

மகாராஷ்டிரத்தில், ஆசை ஆசையாக வளர்த்த ஆட்டுக்குட்டியை அடித்துச் சாப்பிட வந்த புலியை, இளம் பெண் ஒருவர் கம்பால் அடித்து விரட்டினார். பண்டாரா மாவட்டத்தில், சகோலி அருகேயுள்ள உஸ்கான் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண், ரூபாலி மெஸ்ராம். இவர், தன் வீட்டில் ஆட்டுக்குட்டி ஒன்றைப் பாசமாக வளர்த்து வந்தார். ஆட்டுக்குட்டியை எப்போதும் வீட்டு வாசலில் கட்டிவைப்பது வழக்கம். வீட்டருகில் வந்த புலி ஒன்று, ஆட்டுக்குட்டியை அடித்துச் சாப்பிட முயன்றது. ஆட்டுக்குட்டி அலறும் சத்தம் கேட்டு, வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த ரூபாலிக்கு அதிர்ச்சி.


மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான்கான் குற்றவாளி: - அதிரடித் தீர்ப்பு
[Thursday 2018-04-05 13:00]

மான் வேட்டையாடிய வழக்கில், நடிகர் சல்மான்கானை குற்றவாளியாக அறிவித்தது, ஜோத்பூர் நீதிமன்றம்.கடந்த 1998-ம் ஆண்டு, ராஜஸ்தானில் நடைபெற்ற சினிமா படப்பிடிப்பின்போது, பாகாவாத் வனப் பகுதியில், சிங்காரா, பிளாக் பக் என்ற அறிய வகை மான்களை நடிகர் சல்மான் கான் வேட்டையாடியதாகவும், அவர் வேட்டையாடும்போது நடிகர் சாயிஃப் அலிகான் நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் உடனிருந்ததாகவும் இவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இவர்கள் 5 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.


தமிழகம் அமைதியான முறையில் ஒத்துழைக்க மறுக்கும்: - கமல்ஹாசன்
[Thursday 2018-04-05 07:00]

காவிரியில் நமக்கான உரிமையை அரசியல்வாதிகள் குளறுபடி செய்து தட்டிபறிக்கின்றனர் என்று திருச்சி பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேச்சினார். மத்திய அரசு செய்வது தவறு, இதற்கு மேல் பேசுவது அவமரியாதை, அதை நாங்கள் செய்ய மாட்டோம் என்று கமல் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆக வேண்டும், எத்தனை கலவரம் தூண்டினாலும் திசை திரும்ப மாட்டோம் என்றும் ஸ்கீம் என்பதை என்னவென்று கேட்டு காலதாமதம் செய்வதை ஏற்க முடியாது என்றும் கமல் கூறியுள்ளார்.


எதற்காக இந்தியாவில் தமிழ்நாடு இருக்க வேண்டும்: - ஆ.ராசா கேள்வி
[Thursday 2018-04-05 07:00]

பொன்னமராவதியில், ஒன்றிய நகர தி.மு.க சார்பில் இளைஞர் எழுச்சி நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள கலைஞர் திடலில், தெற்கு ஒன்றிய நகர தி.மு.க சார்பில் இளைஞர் எழுச்சி நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (04.04.2018) இரவு நடைபெற்றது.


கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் பாய்ந்த லாரி: -பரிதாபமாக பலியான பெண்!
[Thursday 2018-04-05 07:00]

கோவை சுங்கம் பகுதியில் ஜல்லியை ஏற்றி சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டினுள் புகுந்ததால் வீட்டில் தூங்கிகொண்டிருந்த பெண் பரிதாபமாக பலியானார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் மரியதாஸ் 40-வயதான அவர் அந்தப் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். அவருடைய மனைவி விக்டோரியாவுக்கு வயது 30. அவர், கூலி வேலைக்குச் செல்கிறார். இருவருக்கும் குழந்தைகள் கிடையாது.


வினையான விளையாட்டு: - தோழிகள் கண்முன்பே பறிபோன சிறுமியின் உயிர்
[Wednesday 2018-04-04 18:00]

ஆற்றில் குளித்து விளையாடிக்கொண்டிருக்கும்போது தோழி இறந்ததுகூட தெரியாமல் இருந்த சகதோழிகள் விளையாடிக்கொண்டிருந்தனர். இந்தச் சோக சம்பவம் ஜெயங்கொண்டத்தில் அரங்கேறியுள்ளது.அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உத்திரக்குடி கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பழனிவேல்-ராணி தம்பதியின் மகள் கலையரசி. அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால் தோழிகளுடன் அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றுள்ளார்.


சான்றிதழை பெறுவதற்காக பல மாதங்களாகக் கணவனை சுமந்துசென்ற மனைவி!
[Wednesday 2018-04-04 17:00]

மாற்றுத்திறனாளி சான்றிதழை பெறுவதற்காகக் கால்களை இழந்த தனது கணவனை மனைவி பல மாதங்களாக சுமந்துசென்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா அருகே உள்ள கிதாவிஹார் பகுதியைச் சேர்ந்தவர் பிம்லாதேவி. இவரது கணவர் பாதன் சிங் நரம்பு சம்பந்தமான நோயால் அவதிப்பட்டுவந்தார். இதனால் அவரது வலது கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுவிட்டது. பிம்லாதேவி ஏழ்மையில் வாடியதால் அவரது கணவருக்கு தள்ளுவண்டி வாங்க முடியவில்லை.


ஆதரவற்ற மூதாட்டிக்கு உணவு ஊட்டிவிட்ட போக்குவரத்து காவலர்: - நெகிழ்ச்சி சம்பவம்
[Wednesday 2018-04-04 17:00]

ஆதரவற்ற நிலையில் சாலையோரம் இருந்த மூதாட்டிக்கு தன் கையால் உணவு ஊட்டிவிட்ட ஐதராபாத் போக்குவரத்து காவலரின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். தெலங்கானா மாநிலம் குகட்பள்ளி காவல்நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வருபவர் கோபால்.


சிறுவனை கவ்வி இழுக்கும் வெறிநாய்: - காப்பாற்றிய துணிச்சல் பெண்
[Wednesday 2018-04-04 08:00]

வீட்டினுள் மாடி படிக்கட்டிலிருந்து குதித்து தப்ப முயலும் சிறுவனை மடக்கி வெறிநாய் ஒன்று கவ்வி இழுக்கும் நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலசரக்கு கடை நடத்தி வரும் டெல்லிவாசி ஒருவரின் வீட்டு நாய், கழுத்து பட்டையை அறுத்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடியது. அதனை சிலர் கல்லால் தாக்கியதால் கோபமடைந்த அந்தநாய், தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்களை துரத்தி தாக்க தொடங்கியது. இதில் பயந்துபோன சிறுவர்கள் வேகமாக ஓடிச்சென்று வீட்டுக்குள் புகுந்து தற்காத்து கொண்டனர். ஆனால், அவர்களில் ஒரு சிறுவன் அந்த நாயிடம் சிக்கிக்கொண்டான்.


என்கவுன்டருக்கு பயந்து போலீசில் சரண் அடையும் ரவுடிகள்!
[Wednesday 2018-04-04 08:00]

உ.பி.யில் போலீசாரின் என்கவுன்டருக்கு பயந்து ரவுடிகள் பலர் காவல்நிலையங்களில் சரணடைந்து வருகின்றனர்.உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பெற்ற நாள் முதல் ரவுடிகள், மற்றும் கிரிமினல்கள் மீதான நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. இம்மாநிலத்தில் கடந்த மார்ச் 2017-ம் ஆண்டு முதல் ஜனவரி 2018-ம் ஆண்டு 1144 என்கவுன்டர்கள் நடந்துள்ளன. இதில் 34 கிரிமினல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர், 2744 கிரிமினல்கள் கைது செய்யப்பட்டதாக ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.


அதிகாரிக்கு வைத்தியம் பார்த்த போலி டாக்டர் கைது!
[Wednesday 2018-04-04 07:00]

திருச்சி மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் வைத்தியம் பார்ப்பதாக அவ்வப்போது அம்மாவட்ட சுகாதாரத்துறைக்கு தகவல் வருவதை அடுத்து திருச்சி மாவட்ட சுகாதார இணை இயக்குநர் சம்ஷாத் பேகம் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார். சின்னதம்பிஅந்த வகையில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில், டெங்கு காய்ச்சலுக்கு வைத்தியம் பார்ப்பதாக விளம்பரப்படுத்திய சித்த வைத்தியர், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி பகுதியில் மருத்துவம் படிக்காமலேயே பலர் ஆங்கில மருத்துவம், நாட்டுவைத்தியம், எலும்பு முறிவு சிகிச்சை, எக்ஸ்ரே எடுப்பது, ரத்தப் பரிசோதனை போன்ற பணிகளில் ஈடுபட்டது தெரியவந்தது.


மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேச அரசுகளை கலைக்க வேண்டும்: - திருமாவளவன் கோரிக்கை
[Wednesday 2018-04-04 07:00]

வன்கொடுமை தடுப்புச் சட்டம் சம்பந்தமாக உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்புக்கு எதிராக வட மாநிலங்களில் போராட்டம் நடத்திய பட்டியலின மக்கள் துப்பாக்கி சூடு நடத்தி கொல்லப்பட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. வி.சி.க.தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், 'வன்கொடுமை தடுப்புச் சட்டம் பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் பட்டியலின மக்கள் கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர். ஏப்ரல் 2-ம் தேதி நடைபெற்ற முழுஅடைப்பு போராட்டத்தின்போது போலீஸாரின் தாக்குதல்களுக்கும் துப்பாக்கி சூட்டுக்கும் பத்து பேர் பலியாகியுள்ளனர்.


மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம்:
[Tuesday 2018-04-03 18:00]

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தினர் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். சென்னையில் இடம்பெறும் போராட்டத்தில் தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வம் ஆகியோர் பங்குகொண்டிருந்தனர். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளபோதும், இந்திய மத்திய அரசாங்கம் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் முன்னெக்கவில்லை.


குழந்தையை பறித்து சென்று கொன்ற குரங்கை தேடும் போலீசார்:
[Tuesday 2018-04-03 18:00]

ஒரிசாவில் தாயிடமிருந்து குழந்தையை பறித்து சென்றதாக குற்றஞ்சாட்டப்படும் குரங்கை போலீசார் தேடி வருகின்றனர். குரங்கினால் பறித்துச்செல்லப்பட்ட குழந்தையின் சடலம், நேற்று ஒரு கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது. தனது குழந்தையை குரங்கு பறித்துச்செல்வதை தாய் நேரில் கண்டாலும், அவரால் குரங்கிடமிருந்து குழந்தையை காப்பாற்ற இயலவில்லை.


சிறுமி திருமண விவகாரம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அடித்துக் கொலை:
[Tuesday 2018-04-03 07:00]

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் அழுகிய நிலையில் 5 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் சிங்பம் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மீது வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் ஒருவரை மட்டுமே பொலிசார் இதுவரை கைது செய்துள்ளனர். எஞ்சியவர்கள் மாநிலத்தை விட்டே தலைமறைவாகியிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


குடிகார கணவனால் மகளை எரித்து கொலை செய்த தாய்: - தானும் தீக்குளித்து சாவு
[Friday 2018-03-30 18:00]

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள கொத்தவாசல் கிராமம் கோவில்பத்து தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(30). கூலி தொழிலாளி. இவருக்கும் கோகிலா(25) என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களது மகள் சபித்தா(3). மாரியப்பன் குடிப்பழக்கம் உடையவர். தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். இதை கோகிலா கண்டித்ததால், கணவன், மனைவி இடையே தினமும் தகராறு ஏற்பட்டு வந்தது.


தமிழ் மக்கள் என் மேல் காட்டும் பாசம் நேசமும் என்னை வியக்கவைக்கிறது: - ஹர்பஜன் சிங்
[Friday 2018-03-30 17:00]

நடக்க உள்ள ஐபிஎல் போட்டிக்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட உள்ளார், ஹர்பஜன் சிங். இதற்காக சென்னை வந்துள்ள இவர், தமிழ் மக்கள்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.


அந்த பெண் எனது உறுப்பை துண்டிக்க முயன்றார்: - இளைஞனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
[Friday 2018-03-30 16:00]

இந்தியாவில் வீட்டிற்கு மொபைல் போன் டெலிவரி செய்வதற்கு சென்ற இளைஞரை, பெண் ஒருவர் 20 முறை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு நடந்த சம்பவம் குறித்து கேசவ் குமார் சிங் கூறியதாவது, வழக்கம்போல் பணிக்கு சென்றேன், ஆர்டர் செய்த மொபைல் போனை எடுத்து விட்டு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றேன். மொபைல் போனுக்கான 11 ஆயிரம் ரூபாயை என்னிடம் கொடுத்துவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் பொறுமையாக பதிலளித்தேன். முகவரியை கண்டுபிடிக்க தாமதமாகிவிட்டது என கூறினேன்.


தமிழகத்தில் சினிமாவை மிஞ்சும் வகையில் சிறுநீரக மாற்றம்!
[Friday 2018-03-30 16:00]

தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம், ஆம்புலன்ஸ் மூலமாக விரைவாக கொண்டு செல்லப்பட்டு பெண்ணொருவருக்கு பொருத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார், இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்துக்குள்ளானதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


சென்னையில் தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடி: - அதிர்ச்சி காரணம்
[Friday 2018-03-30 16:00]

சென்னையில், நிஜத்தில் வாழ முடியாத காதல்ஜோடி, ஒன்றாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டையை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையம் அருகே, இன்று காலை, இரண்டு பேர் ரயிலில் அடிப்பட்டு இறந்துகிடப்பதாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு, 30 வயதுக்குட்பட்ட வாலிபர் ஒருவரும் 25 வயதுக்குட்பட்ட பெண் ஒருவரும் இறந்துகிடந்தனர்.


குடிபோதையில் பெற்ற மகனை அடித்து கொலை செய்த தந்தை!
[Friday 2018-03-30 08:00]

இந்தியாவில் குடிபோதையில் தந்தையை தாக்கிய மகனை ஆத்திரத்தில் தந்தை கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் ஜாஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பித்யாதர் (62). இவர் மகன் ஹரேந்திரா பிஹிரா. நேற்று இரவு ஹரேந்திரா மது அருந்திவிட்டு வீட்டுக்கு போதையில் வந்த நிலையில் குடும்பத்தினருடன் சண்டை போட்டுள்ளார்.

Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா