|
|
ஞானசார தேரரை விடுத்தால் மைத்திரி இனவாதி! - செல்வம் அடைக்கலநாதன்
[Wednesday 2019-01-30 19:00]
|
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், ஞானசார தேரருக்கு, சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்குவாராக இருந்தால் அவர் ஒருபக்க சார்பில் செயற்படும் இனவாதியாகவே கருதப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
|
|
|
சுதந்திர தின விழாவைப் புறக்கணிக்கிறார் மஹிந்த!
[Wednesday 2019-01-30 19:00]
|
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் சுதந்திர தின விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கமாட்டாரென உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக மஹிந்தவின் பிரத்தியேகச் செயலாளர் உதித் லொக்குபண்டார, உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
|
|
|
கோத்தாவை போட்டியில் இறக்கினால் மஹிந்தவின் அரசியல் எதிர்காலம் சூனியமாகும்! - எச்சரிக்கிறார் வெல்கம
[Wednesday 2019-01-30 19:00]
|
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதி போட்டியிட்டால் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் பயணம் முடிவுக்கு வந்து விடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம.
|
|
|
கொலைக் குற்றவாளிக்கு மரணதண்டனை!
[Wednesday 2019-01-30 19:00]
|
கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளியாக காணப்பட்ட எதிரிக்கு மரணதண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மட்டக்களப்பு - பிறைத்துறைசேனை பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றில் ஈடுபட்டவருக்கே மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி இர்ஸதீன் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார்.
|
|
|
10 மணிக்குப் பின் பயணங்களை தவிர்க்குமாறு சஜித்துக்கு ஜனாதிபதி ஆலோசனை!
[Wednesday 2019-01-30 19:00]
|
இரவு 10 மணிக்குப் பிறகு பயணங்களை மேற்கொள்ளாத வகையில் கடமைகளை முன்னெடுக்குமாறு, அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடம் தான் வேண்டுகோள் விடுத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு- தாமரைத் தடாகத்தில் நேற்று இரவு இடம்பெற்ற கலாபூஷண விருது விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
|
|
|
சுவிஸ் குமாரை தப்பிக்க விட்ட வழக்கு - விசாரணையைத் துரிதப்படுத்த நீதிவான் உத்தரவு!
[Wednesday 2019-01-30 19:00]
|
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபரை விடுவித்தமை தொடர்பாக, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு எதிரான வழக்கின் விசாரணைகளை விரைவுபடுத்துமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
|
|
|
சிறுமியைக் கடத்த முயன்றவர் நாவாந்துறை மக்களால் நையப்புடைப்பு!
[Wednesday 2019-01-30 19:00]
|
சிறுமியைக் கடத்த முயன்றதாக குற்றம்சாட்டப்படும் ஒருவரை நாவாந்துறைப் பகுதி மக்கள் பிடித்து, நையப்புடைத்த பின்னர், பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். கடந்த வாரம் நாவாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமியை குறித்த நபர் கடத்திச் செல்ல முற்பட்டார் என்றும், இன்றும் அதே நோக்கோடு அந்தப் பகுதிக்கு வந்தார் என்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் தெரிவித்தனர்.
|
|
|
தம்பியின் தாக்குதலில் அண்ணன் பலி - அண்ணன் கத்தியால் குத்தியதில் தம்பி படுகாயம்!
[Wednesday 2019-01-30 19:00]
|
பருத்தித்துறை பகுதியில் பணக் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையினால், அண்ணன், தம்பிக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், தம்பியின் தாக்குதலில் அண்ணன் உயிரிழந்தார். கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் தம்பி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெல்லியடி வதிரி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிறிரங்கநாதன் சுதாகரன் (வயது 38) என்பவரே உயிரிழந்தார்.
|
|
|
பொன்னாலையில் 12 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!
[Wednesday 2019-01-30 19:00]
|
பொன்னாலை பகுதியில் 12 கிலோ கஞ்சா போதைபொருளுட்ன், சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். தமக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து நேற்று இரவு கஞ்சாவை மீட்டதாகவும், அதனை விற்பனை செய்யும் நோக்குடன் வைத்திருந்த மாதகலை சேர்ந்த 38 வயதுடைய சந்தேக நபரை கைது செய்ததாகவும்,பொலிஸார் கூறினர்.
|
|
|
ரவிராஜ் கொலை வழக்கு - மேன்முறையீட்டு மனு ஏப்ரல் 4ஆம் திகதி விசாரணை!
[Wednesday 2019-01-30 19:00]
|
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவிக்க உத்தரவிட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை ஏப்ரல் மாதம் 04ம் திகதி விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
|
|
|
சவேந்திர சில்வாவை பதவி நீக்க வேண்டும்! - ஜஸ்மின் சூக்கா
[Wednesday 2019-01-30 08:00]
|
போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை இராணுவத் தலைமை அதிகாரி சவேந்திர சில்வா உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்பட ட வேண்டும் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
|
|
|
அமெரிக்காவைத் தலையிடக் கோரி கையெழுத்துப் போராட்டம்!
[Wednesday 2019-01-30 08:00]
|
காணாமல் ஆக்கப்பட்டவா்களுக்கு இலங்கையில் நீதி கிடைக்காத நிலையில், வவுனியாவில் தொடா்ச்சியான போராட்டங்களை நடத்திவரும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள், அமொிக்கா இந்த விடயத்தில் தலையிட வேண்டும். எனக் கோாி கையெழுத்து போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனா்.
|
|
|
காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கேட்டு வவுனியாவில் அணிதிரள்வோம்!- அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை
[Wednesday 2019-01-30 08:00]
|
சிறிலங்கா இராணுவத்தினராலும் அவர்களோடு இணைந்து பணியாற்றிய துணை ஆயுதக் குழுக்களினாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கேட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று வவுனியாவில் முன்னெடுக்க இருக்கும் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு எமது தார்மீக ஆதரவினை தெரிவித்துக் கொள்வதுடன், வடக்கு-கிழக்கு தமிழர்கள் அரசியல், கட்சி, சமய, சமூக வேறுபாடுகளைத் துறந்து பெருந்திரளாக அணிதிரளுமாறு உலகத் தமிழர்கள் சார்பில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை கேட்டுக்கொள்கின்றது.
|
|
|
சூரிச்சுக்கு விமானம் அனுப்பி நாயைக் கொண்டு வந்தவர் ஜனாதிபதியாவதா? - சம்பிக்க ஆலேசம்
[Wednesday 2019-01-30 08:00]
|
வீட்டில் வளர்ப்பதற்காக, சூரிச் நகருக்கு விமானம் அனுப்பி நாயொன்றை கொண்டு வந்தவரையே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த எதிரணி தயாராவதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
|
|
|
அமெரிக்காவுடன் எந்த பாதுகாப்பு உடன்பாடும் இல்லை! - ருவன் விஜயவர்தன
[Wednesday 2019-01-30 08:00]
|
இலங்கையில் அமெரிக்கப் படைத் தளம் அமைப்பது பற்றி எந்தவொரு ஒப்பந்தமும் செய்து கொள்ளப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
|
|
|
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மர்ம விமானம்?
[Wednesday 2019-01-30 08:00]
|
பல்வேறு பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரித்து நிற்பதாக எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன கூறினார்.
விமான நிலையத்தில் இருக்கின்ற அந்த விமானத்தை இலங்கை சுங்கத் திணைக்களத்தினரோ, விமானப் படையினரோ பரிசோதனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
|
|
|
தேர்தல் ஆணையாளர் பதவி விலகுவதால் பிரச்சினை தீராது! - மஹிந்த
[Wednesday 2019-01-30 08:00]
|
தேர்தல் ஆணையாளர் பதவி விலகுவதால் மட்டும் நாட்டின் குழப்பத்திற்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
|
|
|
கடற்படையின் துப்பாக்கிச் சூட்டை அடுத்து ஆற்றில் குதித்த ஒருவரின் சடலம் மீட்பு!
[Wednesday 2019-01-30 08:00]
|
திருகோணமலை- கிண்ணியா பகுதியில் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு அஞ்சி, மகாவலி ஆற்றில் குதித்த மூவரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மண் அகழ்வுப் பணியில் ஈடுபட்டு வந்த மூவர் மீது நேற்று கடற்படையினரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதனை அடுத்து கிண்ணியா கங்கைப் பாலம் பகுதியில் குறித்த இளைஞர்கள் ஆற்றில் பாய்ந்து மூழ்கினர்.
|
|
|
யாழ். அரச அலுவலகத்தில் பெண் ஊழியர்கள் மூவருக்கு நேர்ந்த கதி!
[Wednesday 2019-01-30 08:00]
|
யாழ்ப்பாணத்தில் உள்ள அரச அலுவலகம் ஒன்றில் சிற்றூழியர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் உத்தியோகத்தர்கள் மூவருக்கு வெளியில் நிற்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த அலுவலகத்தில் பணிபுரியும் 3 பெண் உத்தியோகத்தர்கள் கடந்த வெள்ளிக்கிழமை காலை அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
|
|
|
கனடாவில் இரு இலங்கைத் தமிழர்களை கொன்றதை ஒப்புக்கொண்டார் மெக் ஆதர்!
[Wednesday 2019-01-30 08:00]
|
இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட 8 பேரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள புரூஸ் மெக்ஆதர் என்ற கனேடியர், தம் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவரே கனடாவில் அதிக கொலைகளை செய்தவராக கருதப்படுகிறார் என்று கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன
|
|
|
சவேந்திர சில்வாவுக்கு எதிரான போர்க்குற்ற ஆவணம் வெளியானது!
[Tuesday 2019-01-29 20:00]
|
இலங்கை இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய ஆவணம் ஒன்றை தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு வெளியிட்டுள்ளது.
|
|
|
தாயகம் - தேசியம் - தன்னாட்சியுரிமை: - தேர்தலுக்கு தயாராகும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
[Tuesday 2019-01-29 20:00]
|
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக் காலத்திற்கான தேர்தல் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் 2019 ஏப்ரல் 27ம் தேதியும் இதர நாடுகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்பட இருக்கின்றது.
இரண்டாம் தவணைக்காலத்தின் அரசவை நிறைவுகண்டிருந்த நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது கடந்து வந்த பாதை அதன் செயல்முனைப்புக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கடந்த அரசவை அமர்வில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விரிவான உரையொன்றினை ஆற்றியிருந்தார்.
|
|
|
கிண்ணியாவில் பதற்றம் - இரு இளைஞர்கள் பலி, 12 கடற்படையினர் காயம்!
[Tuesday 2019-01-29 20:00]
|
கிண்ணியா கங்கைப் பாலம், கீரைத்தீவு பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டை அடுத்து,நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, கடற்படையினருக்கும், அப்பகுதி பொதுமக்களுக்கும் இடையில் நடந்த மோதல்களில் 12 கடற்படையினர் காயமடைந்தனர்.
|
|
|
நாங்கள் எப்போதும் எதிர்க்கட்சி தான்! - என்கிறது கூட்டமைப்பு.
[Tuesday 2019-01-29 20:00]
|
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் தேசிய அரசாங்க கூட்டணியில் கைகோர்க்காது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் நோக்கத்தில் ஏனைய கட்சிகளுடன் பேச்சு நடத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
|
|
|
நாளை வவுனியாவில் நடக்கும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் ஒன்று கூடுமாறு அழைக்கிறார் விக்கி!
[Tuesday 2019-01-29 20:00]
|
வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்களினால் நாளை நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்ட பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் செய்தி ஒன்றை வெளிப்படுத்த வேண்டும் என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
|
|
|
வவுனியா வடக்கில் உருவாக்கவுள்ள மற்றொரு சிங்களக் குடியேற்றம்!
[Tuesday 2019-01-29 20:00]
|
வவுனியா வடக்கில், கச்சல் சமனங்குளத்தினையும் அதனை அண்டிய பகுதியையும், சப்புமல்கஸ்கட என பெயர் சூட்டி,சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கச்சல் சமனங்குளம் தமிழர்களின் பூர்வீக கிராமமாக காணப்பட்டதுடன் அங்குள்ள கச்சல் சமனங்குளத்தில் அக்கிராமத்திலும் அதனை அண்டி வாழ்ந்த வெடிவைத்தகுளம் பிரதேச மக்களும் இணைந்து விவசாய செய்கையில் ஈடுபட்டு வந்திருந்தனர்.
|
|
|
போதைப்பொருள் விற்பனை குறித்து தகவல் வழங்கிய மாணவன் மீது தாக்குதல்!
[Tuesday 2019-01-29 20:00]
|
கிளிநொச்சி - கோணாவில் பகுதியில், போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கிய மாணவன் ஒருவர், தாக்குதலுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவன் மீது நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
|
|
|
சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கு - சந்தேகநபருக்கு பிணை வழங்க நீதிவான் மறுப்பு!
[Tuesday 2019-01-29 20:00]
|
பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவது பாரதூரமான குற்றம். அவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவரை விசாரணைகள் நிறைவடைவதற்குள் பிணையில் விடுவிப்பது ஏற்புடையது அல்ல என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி. போல் தெரிவித்துள்ளார்.
|
|
|
|