|
|
ரணில் தான் பிரதமர் - ஐதேகவும் விடாப்பிடி!
[Thursday 2018-11-29 09:00]
|
மிக நீண்டகாலமாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஒருவரே நாட்டின் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற ஐ.தே.க. நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
|
|
|
கட்சியை விட்டு வெளியேற வேண்டாம் - அதிருப்தி அணியிடம் ஜனாதிபதி கோரிக்கை!
[Thursday 2018-11-29 09:00]
|
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மீது அதிருப்தி கொண்டுள்ள அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இச் சந்திப்பானது நேற்றைய தினம் ஜனாதிபதி செயலாகத்தில் இடம்பெற்றுள்ளது.
|
|
|
அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கைது - விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
[Wednesday 2018-11-28 19:00]
|
பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று கைது செய்யப்பட்டு, எதிர்வரும் டிசம்பர் 05ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு, கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008, 2009 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவருக்கு அடைக்கலம் வழங்கியதாக ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
|
|
|
ஊடகவியலாளரைத் தாக்கிய அட்மிரலின் பாதுகாப்பு அதிகாரி!
[Wednesday 2018-11-28 19:00]
|
கொழும்பு - கோட்டை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில், ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில், அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் பாதுகாப்பு அதிகாரியான, கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். த மோர்னிங் பத்திரிகையின் ஊடகவியலாளர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
|
|
|
2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் தமிழ்த்தேசியத்தின் சுயமரியாதை: உயிர்ப்போடு வெளிப்படுத்திய மாவீரர் நிகழ்வுகள்!
[Wednesday 2018-11-28 19:00]
|
2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான அரசியல் சூழலிலும் தமிழ்த்தேசிய உணர்வுடன் தமது இறைமை சுயநிர்ணய உரிமை தன்னாட்சி போன்றவற்றுக்கான அங்கீகாரத்துக்குமான ஏக்கங்களோடு ஈழத் தமிழர்கள் கொள்கை மாறாமல் இருக்கின்றனர் என்பதை செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாவீரர் நிகழ்வுகள் எடுத்துக் கூறியுள்ளனர். வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் தடைகள், அச்சுறுத்தல்கள் போன்ற துன்பங்களைத் தான்டி திட்டதிட்டபடி மாவீரர் நிகழ்வுகளில் மக்கள் கலந்துகொண்டனர்
|
|
|
விக்னேஸ்வரனின் பொலிஸ் பாதுகாப்பு நீக்கம்!
[Wednesday 2018-11-28 19:00]
|
தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம், சி.வி. விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட்டிருந்த, முதலமைச்சருக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. மாகாண சபையின் பதவிக்காலம் ஒக்டோபர் 25 ஆம் திகதி நிறைவடைந்துள்ளமையால் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
இலங்கை விடயத்தில் தவறிழைத்து விட்டோம்!
- ஒப்புக் கொண்டது பேஸ்புக்
[Wednesday 2018-11-28 19:00]
|
இலங்கை விடயத்தில், தாங்கள் தவறிழைத்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. லண்டனில் நடைபெற்ற போலிச் செய்திகள் தொடர்பிலான சர்வதேச விசாரணை ஒன்றின் போது, பேஸ்புக் நிறுவனத்தின் கொள்கை தீர்வு விவகாரங்களுக்குப் பொறுப்பான துணைத் தலைவர் ரிச்சர்ட் அலன் இந்த தவறினை ஒப்புக் கொண்டுள்ளார்.
|
|
|
மகிந்தவை பிரதமராக நியமித்தமைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!
[Wednesday 2018-11-28 19:00]
|
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமை சட்டத்துக்கு எதிரானது என்று உத்தரவிடக் கோரி தம்பர அமில தேரர் உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார். மனுவில் பிரதிவாதிகளாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட 53 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.
|
|
|
சம்பந்தனின் பதவிக்கு ஆபத்து இல்லை!
[Wednesday 2018-11-28 19:00]
|
இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுவதில் எமக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை. அவர் தனது பதவியை சரியாக வகிக்கின்றார் என்ற நிலைப்பாடு தமக்கு உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
|
|
|
மாவீரர் நாள் ஏற்பாட்டாளரின் வீடு மீது மர்ம கும்பல் தாக்குதல்!
[Wednesday 2018-11-28 19:00]
|
பருத்தித்துறை- சுப்பர்மடம் பகுதியில்நேற்று மாவீரர்நாள் நினைவேந்தலை முன்னின்று நடத்தியவரின் வீட்டின் மீது நள்ளிரவு இனந்தெரியாத கும்பல் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.மாவீரர் நாளான நேற்று இப்பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடுகள் இடம்பெற்ற நிலையில், பருத்தித்துறை பொலிஸார் நிகழ்வு ஏற்பாட்டில் இருந்த மக்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி அங்கிருந்து விரட்டியடித்தனர்.
|
|
|
ரணிலையும் மகிந்தவையும் நாங்கள் நம்பவில்லை!
- சித்தார்த்தன் செவ்வி
[Wednesday 2018-11-28 19:00]
|
ஜனநாயக ரீதியாக இருந்த அரசாங்கத்தை பலாத்காரமாக நீக்கிவிட்டு புதியதொரு அரசாங்கம் பலாத்காரமாக உருவாக்கப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜனநாயகம் மீறப்படுவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
|
|
|
சம்பந்தனை அவசரமாக சந்தித்தார் ஐ.நா உயர் அதிகாரி!
[Wednesday 2018-11-28 19:00]
|
அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் இலங்கைக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான பணிப்பாளர் மரி யமஷிட்டா தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நேற்றிரவு சந்தித்துள்ளார். இலங்கைக்கு வந்தவுடன் நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து இரா. சம்பந்தனுடன் அவசர சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.
|
|
|
சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள்!
[Wednesday 2018-11-28 19:00]
|
சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வாழ்த்து தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி நிலைமையில் சபாநாயகரின் செயற்பாடுகள்
|
|
|
கஞ்சா கடத்தியவர் கனகராயன்குளத்தில் கைது!
[Wednesday 2018-11-28 19:00]
|
யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளம் நோக்கி 13 கிலோ கஞ்சாவினை கெப் ரக வாகனம் ஒன்றில் கடத்த முற்பட்ட நபர், வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
|
|
|
தேடப்பட்டு வந்த ஆவா குழு சந்தேகநபர் நீதிமன்றில் சரண்!
[Wednesday 2018-11-28 19:00]
|
ஆவா குழுவை சேர்ந்தவர் என கூறப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த அசோக் என்ற நபர்சட்டத்தரணி ஊடாக இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார். மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் குறித்த நபர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார். மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இவர் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தலைமறைவாக இருந்தவர் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.
|
|
|
தாயக துயிலுமில்லங்களில் மாவீரர் நாள்!
[Wednesday 2018-11-28 07:00]
|
தாயகப் பிரதேசத்தில் உள்ள மாவீரர் அதுயிலுமில்லங்களில் நேற்று மாலை மாவீரர் நாள் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டது. மாவீரர்களுக்கு பெற்றோர், உறவுகள், பொதுமக்கள் பெருமளவில் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
|
|
|
கடற்புலி மாவீரர்களுக்கு நினைவுச்சுடர்!
[Wednesday 2018-11-28 07:00]
|
மாவீரர் நாளான நேற்று யாழ். மாவட்டத்தில் கடற்புலி மாவீரர்களை நினைவுகூர்ந்து, படகில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
|
|
|
நாளை ஆளும்கட்சி ஆசனங்களைக் கைப்பற்ற ஐதேக திட்டம்!
[Wednesday 2018-11-28 07:00]
|
நாளை நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் போது, ஆளும்கட்சியின் ஆசனத்தில் அமரப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.இன்று மோசமான அரசாங்கம் ஒன்று உள்ளதாகவும் அதனை எந்தவொரு நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
|
|
|
தமிழீழ மக்களுக்கு முன்னால் இரண்டு தெரிவுகள்தான் உள்ளன!
-வி.உருத்திரகுமாரன்
[Wednesday 2018-11-28 07:00]
|
அரசியல் யதார்த்தத்தை நன்கு ஆராய்ந்து பார்ப்பின் தமிழீழ மக்களுக்கு முன்னால் இரண்டு தெரிவுகள்தான் உள்ளன என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். மாவீரர் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இதனைக் கூறி்யுள்ளார்.
|
|
|
சிஐடியில் இருந்து நழுவி நீதிமன்றில் இன்று முன்னிலையாகிறார் அட்மிரல் ரவீந்திர!
[Wednesday 2018-11-28 07:00]
|
கொழும்பில் 5 மாணவர் உள்
|
|
|
தமிழரசு கட்சி அலுவலகத்திலும் மாவீரர்களுக்கு அஞ்சலி!
[Wednesday 2018-11-28 07:00]
|
தமிழ் மக்களின் உரிமைக்காய் ஆயுதமேந்தி உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூர்ந்து, தமிழரசு கட்சியின் யாழ். அலுவலகத்தில் மாவீரர்கள் தின நிகழ்வு நடைபெற்றது. மாலை 6.05 மணிக்கு மாவீரர்களை நினைவுகூர்ந்து மலர்களை தூவியும், மலர்மாலைகளை அணிவித்தும், தீபங்களை ஏற்றியும் கட்சி உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
|
|
|
நீதி, நியாயத்துக்காக
[Wednesday 2018-11-28 07:00]
|
நான் குற்றம் செய்திருந்தால் நீதி, நியாயத்துக்காக
|
|
|
ஜனாதிபதியின் முடிவினால் நாடு சீரழிகிறது!
- குமார வெல்கம
[Wednesday 2018-11-28 07:00]
|
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சரியான தீர்மானத்தை எடுக்காமையின் காரணமாக, நாடு சீரழிந்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். ' நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருப்பவர்களுக்கு ஆட்சியை வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் சிறிசேன தொடர்ந்தும் இவ்வாறான முடிவுகளை எடுத்து வந்தால் நாடு முழுமையாக சீரழிந்துவிடும் என்றார்.
|
|
|
ஐதேகவின் வாயை அடைக்க பிணைமுறி அறிக்கையை வெளியிடத் திட்டம்!
[Wednesday 2018-11-28 07:00]
|
மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடையவர்களின் பெயர்ப் பட்டியலை எதிர்வரும் வாரங்களில் வெளியிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
|
|
|
அரசாங்கத்தை அங்கீகரிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே!
- சுசில் பிரேமஜயந்த
[Wednesday 2018-11-28 07:00]
|
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஐ.தே.க ஆட்சியமைத்தால் தங்களுக்குப் பிரச்சினை இல்லை என்றும், அதனை அங்கீகரிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
|
|
|
பிரித்தானியாவில் மாவீரர் தினத்தை முன்னிட்டு இரத்த தானம்!
[Tuesday 2018-11-27 16:00]
|
தமிழினத்தின் விடுதலைக்காய் தம்மையே ஆகுதியாக்கிய மாவீரர்கள் என்றுமே நினைவுகூரப்பட வேண்டியவர்கள் . இந்த நாள் புனிதர்களுடைய நாள். தமக்கென வாழாது பிறரின் நன்மைக்காக நமது தேசிய இனத்தின் விடுதலைக்காகவும் தேசிய இனம் தனது தனித்துவத்தை பேணிப் பாதுகாப்பதற்காகவும் எந்தவொரு பிரதியுபகாரத்தையும் எதிர்பாராது உயிரைதுச்சமென மதித்து தமது உயிரை தமிழ் இனத்திற்காக ஆகுதியாக்கிய நாள் நவம்பர் 27.
|
|
|
இன்று மாலை மாவீரர்களை நினைவுகூரத் தயாராகும் தமிழர் தாயகம்!
[Tuesday 2018-11-27 09:00]
|
தாயக விடு
|
|
|
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமைச்செயலகம் வெளியிட்டுள்ள மாவீரர்தின அறிக்கை:
[Tuesday 2018-11-27 09:00]
|
தமிழீழ விடுதலைப்புலிகள்,
தமிழீழம்
கார்த்திகை 27, 2018.
எங்கள் பேரன்பிற்கும் பெரும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!
இன்று 27ஆம் நாள் கார்த்திகை திங்கள் 2018 ஆம் ஆண்டு. எங்கள் தாயக ஈழ மண்ணின் காவல் தெய்வங்களான மாவீர செல்வங்களை நெஞ்சில் நிறுத்தி நினைவு கூரும் ஒரு புனிதமான நாள். தாயக விடுதலையே குறிக்கோள் என்ற ஒற்றை சொல்லை முழு மூச்சாக கொண்டு, தங்கள் இன்னுயிர்களை ஈழ விடுதலைப்போருக்கு காலம் நேரம் இன்றி அர்ப்பணித்தவர்கள் மாவீரர்கள்.
|
|
|
|