|
|
யாழ்ப்பாணத்தில் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு!
[Monday 2018-11-26 10:00]
|
யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர் குடும்பங்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு நேற்று பிற்பகல் யாழ். மாவட்ட செயலகத்திற்கு அருகில் அமைந்துள்ள வை.எம்.சி மண்டபத்தில் இடம்பெற்றது.
|
|
|
மாவீரர் நாளுக்கு தடையை ஏற்படுத்தினால் தமிழ்மக்கள் தகர்ப்பார்கள்!
- சம்பந்தன்
[Monday 2018-11-26 10:00]
|
எத்தகைய தடைகள் வந்தாலும் அதை உடைத்தெறிந்து இந்த ஆண்டும் மாவீரர் நாளை மக்கள் நினைவுகூருவார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
|
|
|
ரணிலுக்கு மட்டுமல்ல பொன்சேகாவுக்கும் அதே கதி தான்!
[Monday 2018-11-26 10:00]
|
ரணில் விக்கிரமசிங்கவை மாத்திரமல்ல, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவையும் கூட, பிரதமராக நியமிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
|
|
|
ரணில் தான் பிரதமர் - ஒற்றைக்காலில் நிற்கும் ஐதேக!
[Monday 2018-11-26 09:00]
|
பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்காமல் விடமாட்டோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சர்வதேச ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கருத்து வெளியிட்டார்.இதன்போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரணிலை பிரதமராக்க மாட்டேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
|
|
|
மன்னார் புதைகுழி தோண்டும் பணி செவ்வாயன்று!
[Sunday 2018-11-25 19:00]
|
மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அகழ்வு பணிகளில் ஈடுபட்டு வரும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார்.பலத்த மழை காரணமாகவும் மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ வெளிநாடு சென்றதாலும் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
|
|
|
ரணில் மோசமான ஊழல் பேர்வழி, அவரை பிரதமராக நியமிக்கமாட்டேன்!
- மைத்திரி சூளுரை
[Sunday 2018-11-25 19:00]
|
ரணில் விக்கிரமசிங்கவை மோசமான ஊழல் பேர்வழி என குற்றம்சாட்டியுள்ள ரணில் விக்கிரமசிங்க மோசமான ஊழல் பேர்வழி என குற்றம்சாட்டியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரைப் பிரதமராக ஒருபோதும் நியமிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
|
|
|
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மட்டக்களப்பில் நினைவுத்தூபி!
[Sunday 2018-11-25 19:00]
|
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக நினைவுத்தூபி அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு, காந்தி பூங்காவிற்கு முன்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முயற்சியில் குறித்த நினைவுத்தூபி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
|
|
|
சமூக ஊடகங்கள் மூலம் கூட்டமைப்பு மீது மஹிந்த அணியினர் விளாசல்!
[Sunday 2018-11-25 19:00]
|
மகிந்த ராஜபக்ச தரப்பினரை நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்கடிப்பதற்கு உதவிய தமிழ் தேசிய கூட்டமைப்பினரை மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான சமூக ஊடகங்கள், இலக்கு வைத்து, பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளன என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.
|
|
|
போருக்கு ஒத்துழைத்தது போல இப்போதும் ஒத்துழைக்க வேண்டும்!
- என்கிறார் மஹிந்த
[Sunday 2018-11-25 19:00]
|
முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லை என பிரதமராக தொடர்ந்தும் உரிமை கோரும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதுடன் தற்போதைய நிலையில் பொதுத் தேர்தலே தேவை என வலியுறுத்தியுள்ளார். நாட்டில் நிலவும் அதிகார இழுபறி தொடர்பாக விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
|
|
|
மைத்திரி- மஹிந்த அரசுக்கு எதிராக எழுத வேண்டாம்!
-ஊடகங்களை மிரட்டுகிறார் வாசு
[Sunday 2018-11-25 19:00]
|
இலங்கையில் வெளிவரும் நாளாந்த மற்றும் வாராந்த பத்திரிகைகள் மைத்திரி- மஹிந்த அரசாங்க பயணத்துக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதாக ஜனநாயக இடதுசாரி முன்னணி கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
|
|
|
வர்த்தமானியை ஜனாதிபதி மீளப்பெற முடியாது!
[Sunday 2018-11-25 19:00]
|
நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பாக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அவராலேயே மீளப்பெற்றுக் கொள்ள முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
|
|
|
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் மீது ஈபிடிபி உறுப்பினர்கள் தாக்குதல்!
[Sunday 2018-11-25 19:00]
|
வட்டுக்கோட்டை - சங்கரத்தை குளத்துக்கு அருகில், வியாழக்கிழமை இரவு, வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் தேவராஜா ரஜீவனும், அவரது நண்பரும் ஈபிடிபி உறுப்பினரின் தலைமையிலான குழுவினரால் தாக்கப்பட்டுள்ளனர்.
|
|
|
உயர் பொலிஸ் அதிகாரிகள் ஜனாதிபதி செயலகத்துக்கு அழைப்பு!
[Sunday 2018-11-25 19:00]
|
சகல பிரதி பொலிஸ்மா அதிபர்கள், சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் அனைவரும் நாளை ஜனாதிபதி செயலகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறும் கலந்துரையாடலுக்காகவே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனரென தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுக்கான அழைப்பு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
|
|
|
மஹிந்தவையும் மைத்திரியையும் இணைத்து வைத்தது நானே!
- எஸ்பி திசநாயக்க
[Sunday 2018-11-25 19:00]
|
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் மகிந்த ராஜபக்சவையும் மீண்டும் சேர்த்து வைப்பதற்கான திட்டத்தின் முக்கிய சூத்திரதாரி நானே என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் எஸ்பி திசநாயக்க.
|
|
|
தமிழ் மக்களின் 30 வருட அபிலாசையை 20 மாதத்தில் நிறைவேற்றுவேன்!
- சவால் விடும் வியாழேந்திரன்
[Sunday 2018-11-25 19:00]
|
எஞ்சியுள்ள ஒரு வருடமும் பத்து மாதங்களுக்கும் கிழக்கு அபிவிருத்தி என்ற எனது அமைச்சு தொடருமென்றால் தமிழ் சமூகம் அரசியலில் கடந்த முப்பது வருடங்கள் மனதில் சுமந்திருக்கும் அபிலாசைகளை பூர்த்தி செய்து காட்டுவேன் என்று சவால் விடுத்துள்ளார் கூட்டமைப்பில் இருந்து மகிந்த தரப்புக்குத் தாவிய பிரதியமைச்சர் வியாழேந்திரன்.
|
|
|
சிஐடியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் பொலிஸ் மா அதிபர்!
[Sunday 2018-11-25 19:00]
|
பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர இன்று காலை குற்றப்புலனாய்வு பிரிவினால், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டியை தொடர்பிலான வாக்குமூலம் ஒன்றை எடுப்பதற்காக பொலிஸ் மா அதிபரை இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தார்.
|
|
|
நடுகற்களுடன் தயாராகும் வாகரை மாவீரர் துயிலுமில்லம்!
[Sunday 2018-11-25 08:00]
|
வாகரை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்களுக்கான நடுகற்கள் அமைக்கப்பட்டு மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் தமது உறவுகளின் நினைவாக நடுகற்களை அமைத்து வருகின்றனர். நாளை மறுநாள் மாவீரர் நாளன்று இங்கு நினைதுவந்தல் நிகழ்வை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
|
|
|
புதிய பிரதமரை நியமிக்கத் தயார்!
- ஜனாதிபதி
[Sunday 2018-11-25 08:00]
|
நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைய பெரும்பான்மையை நிரூபித்தால், புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில இதழுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
|
|
|
பேரவையில் இருந்து புளொட் வெளியேற்றப்படவில்லை!
- சித்தார்த்தன்
[Sunday 2018-11-25 08:00]
|
தமிழ் மக்கள் பேரவையில் இருந்து புளொட் அமைப்பு வெளியேற்றப்படவில்லை என்று அதன் தலைவர் தர்லிங்கம் சித்தார்தன் தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவை கூட்டத்திலிருந்து புளொட் அமைப்பின் பிரதிநிதிகள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள் தம்மிடம் மன்னிப்பு கோரியதாகவும் அவர் தெரிவித்தார். எனினும், தமிழ் மக்கள் பேரவையின் குறித்த செயற்பாடு தமக்கு மிகுந்த கவலையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
|
|
|
கூட்டமைப்புக்கு படுதோல்வி, ஈபிடிபிக்கு 4 ஆசனங்கள்!
- எஸ்.பியின் ஆரூடம்
[Sunday 2018-11-25 08:00]
|
பொதுத்தேர்தல் நடத்தப்பட்டால், தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும் பின்னடைவை எதிர்நோக்கும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க ஆருடம் கூறியுள்ளார். கண்டியில் நேற்று ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர்,
|
|
|
மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தலுக்கென பணம் வசூலிக்கும் மோசடிக் கும்பல்!
[Sunday 2018-11-25 08:00]
|
மட்டக்களப்பு - படுவான்கரை பகுதியில் சிலர் மாவீரர் நினைவேந்தலுக்கென பணம் வசூலிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதாகவும் அவ்வாறானவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறும் மட்டக்களப்பு மாவீரர் தின ஏற்பாட்டுக்குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
|
|
|
மைத்திரியின் சதித் திட்டத்துக்கு துணைபோகமாட்டோம்!
- மனோ கணேசன்
[Sunday 2018-11-25 08:00]
|
எதிர்காலத்தில் 122 க்கு அதிகமான பெரும்பான்மையினை நிரூபிப்பதற்கான பலம், ஐ. தே.மு.விற்கு உள்ளதெனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எந்த சதித்திட்டங்களுக்கும் துணை போகப் போவதில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
|
|
|
யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு 4 கிலோ வெடிமருந்து மீட்பு!
[Sunday 2018-11-25 08:00]
|
யாழ்ப்பாணம் -கொய்யாத்தோட்டம் கடற்கரைப் பகுதியிலுள்ள சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையில்- உள்ள பேருந்து தரிப்பிடத்தில் இருந்து நேற்று இரவு 4 கிலோ ரி.என்.ரி வெடிமருந்து விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைய, கொய்யாத் தோட்டம் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கொண்டு செல்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த குறித்த வெடிமருந்தினை விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர்.
|
|
|
நம்பகமான அதிகாரியை நீக்கி விட்டு தமிழரை ஊடகப் பிரிவு பணிப்பாளராக நியமித்தார் மைத்திரி!
[Sunday 2018-11-25 08:00]
|
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளராகவும், ஜனாதிபதியின் ஆலோசகராகவும் பல்கலைக்கழக விரிவுரையாளரான கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு வெள்ளிக்கிழமை சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கலாநிதி சுரேன் ராகவனை ஊடகப்பிரிவு பணியாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
|
|
|
ஆயுதங்களுடன் ஓட்டோவில் சென்றவரை துரத்திப் பிடித்தனர் பொலிசார்!
[Sunday 2018-11-25 08:00]
|
வவுனியா
|
|
|
மாவீரர் தின நிகழ்வுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை!
[Saturday 2018-11-24 19:00]
|
யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள மாவீரர் நினைவு தின நிகழ்வுகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
|
|
|
பாரிய தவறு செய்து விட்டார் மஹிந்த!
- குமார வெல்கம
[Saturday 2018-11-24 19:00]
|
பிரதமர் பதவியை ஏற்று, மஹிந்த ராஜபக்ஷ, அரசியல் ரீதியில் பாரிய தவறுகளை புரிந்துவிட்டார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
|
|
|
ரணிலுக்கு ஆதரவாக கை தூக்கமாட்டேன்!
- சம்பந்தனுடன் மோதிய சிறிதரன்
[Saturday 2018-11-24 19:00]
|
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் நேற்று நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்ற போது. இரா.சம்பந்தனுக்கும், சிறிதரனுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
|
|
|
|