|
|
நிசாந்த சில்வா இடமாற்றத்தில் ஜனாதிபதிக்கு தொடர்பில்லையாம்!
[Thursday 2018-11-22 18:00]
|
பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவை சி.ஐ.டி.யில் இருந்து இடமாற்றிய விவகாரத்துக்கும் ஜனாதிபதிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் சர்வதேசத்துடன் இணைந்து ஜனாதிபதி மீது சேறுபூசும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளனர் என அமைச்சரவை பேச்சாளரான மஹிந்த சமரசிங்க மற்றும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் தெரிவித்தனர்.
|
|
|
வெலிக்கடைப் படுகொலை சந்தேகநபர் மீண்டும் பொலிஸ் சேவையில் இணைப்பு!
[Thursday 2018-11-22 18:00]
|
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய,
நேற்று முதல் அவர் தனது கடமையை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
|
|
|
மகிந்தவை பிரதமராக்கிய மைத்திரியின் சகோதரர்!
[Thursday 2018-11-22 18:00]
|
மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னணியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் டட்லி சிறிசேன செயற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.ஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் பேஸ்புக் பதிவினால் இந்த விடயம் அம்பலத்துக்கு வந்துள்ளது.
|
|
|
அறியாத விடயங்களுக்குள் மூக்கை நுழைக்க வேண்டாம்!
- ஐதேகவினருக்கு ரணில் அறிவுறுத்தல்
[Thursday 2018-11-22 18:00]
|
உயர்நீதிமன்றம் மற்றும் ஏனைய நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பாக சரியான விளக்கம் இல்லாமல் கருத்து தெரிவிப்பதில் இருந்து விலகி இருக்குமாறு - ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
|
|
|
மஹிந்த- ரணில் கூட்டு அரசாங்கம்!
- விக்கி முன்வைக்கும் ஆலோசனை
[Thursday 2018-11-22 09:00]
|
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பத்தைத் தீர்ப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மஹிந்த ராஜபக்ஷவும், ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்த தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் யோசனை தெரிவித்துள்ளார்.
|
|
|
அளவுக்கதிகமான தன்னம்பிக்கையைக் கொண்டிருந்தார் பிரபாகரன்!
[Thursday 2018-11-22 09:00]
|
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை கொண்டிருந்தார் என ஜப்பானிய அரசாங்கத்தின் முன்னாள் விசேட பிரதிநிதி யசூசி அகாசி தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
|
|
|
இலங்கை விவகாரம் - ஜெனிவாவில் இன்று விவாதம்!
[Thursday 2018-11-22 09:00]
|
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று விவாதம் ஒன்று நடைபெறவுள்ளது.
|
|
|
கூட்டமைப்பு முண்டு கொடுக்காவிடினும் ஐதேகவுக்கு பெரும்பான்மை உள்ளதாம்!
[Thursday 2018-11-22 09:00]
|
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றில் நடுநிலை வகிக்க வேண்டும் என்று கேட்பது மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான நிலைப்பாடாக ஒருபோதும் அமையாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அவ்வாறு கூறுகிறவர்கள் தங்களின் மாற்று திட்டம் என்ன? அதனால் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன? என்பதையும் கூறட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
|
|
|
முடிந்தால் தோற்கடியுங்கள் - ரணில் விடும் சவால்!
[Thursday 2018-11-22 09:00]
|
எதிர்வரும் 29ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ள, பிரதமர் செயலகத்திற்கான நிதியொதுக்கீட்டை நிறுத்தும் பிரேரணையை தோற்கடித்துக் காட்டுமாறு மஹிந்த அணிக்கு ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க சவால் விடுத்துள்ளார்.
|
|
|
மணிவண்ணனின் மேல்முறையீட்டு மனு ஒத்திவைப்பு!
[Thursday 2018-11-22 08:00]
|
யாழ்ப்பாண மாநகரசபை அமர்வில் தாம் பங்கேற்க மேன்முறையீட்டு நீதிமன்றால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுக்கு ஆட்சேபனை தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு வரும் ஜனவரி 8ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
|
|
|
சபாநாயகரின் பெயரில் போலி கடிதம் - சிஐடி விசாரணை!
[Thursday 2018-11-22 08:00]
|
போலிக் கடிதம் தொடர்பாக சபாநாயகர் கரு ஜயசூரியவின் பணிப்புரைக்கமைய பாராளுமன்ற செயலாளர் நாயகம் விடுத்துள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களம் பொலிஸ் மா அதிபரிடம் அனுமதி கோரியுள்ளது.
|
|
|
பிரதமரின் நிதிஒதுக்கீட்டை இடைநிறுத்தும் பிரேரணையை விவாதிக்க விடமாட்டோம்!
[Thursday 2018-11-22 08:00]
|
பிரதமரின் செயலாளரின் நிதி ஒதுக்கீட்டை இடைநிறுத்தும் பிரேரணையை 29ஆம் திகதி விவாதத்திற்கு எடுக்கப்படமாட்டாது. அதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஆளும் தரப்பு பிரதம கொரடா , அமைச்சர் எஸ்.பி திசநாயக்க தெரிவித்தார்.
|
|
|
அமைச்சரவைக் கூட்டத்துக்கு வடிவேல் சுரேஸ் செல்லவில்லை!
[Thursday 2018-11-22 08:00]
|
பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் கலந்து கொண்டார் என வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என ஐ.தே.க தெரிவித்துள்ளது.
|
|
|
இராணுவ வாகனம் மோதி முறிந்தது உயர் அழுத்த மின்கம்பம்!
[Thursday 2018-11-22 08:00]
|
கிளிநொச்சி - ஏ9 வீதியில் மத்திய கல்லூரிக்கு முன்பாக உள்ள உயரழுத்த மின் கம்பத்துடன் இராணுவ ட்ரக் ஒன்று மோதியதில் மின் கம்பம் முறிந்து விழுந்துள்ளது. நேற்று மாலை 4.45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் மின்சார சபை அலுவலகம் என்பதனால் மின்சார சபை உத்தியோகத்தர்கள் விரைந்து செயற்பட்டு அனர்த்தம் ஏற்படுவதை தவிர்த்துள்ளனர்.
|
|
|
மாவீரர் நாளுக்கு நீதிமன்றத்தில் தடைகோருகிறது பொலிஸ்!
[Wednesday 2018-11-21 18:00]
|
மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கும் கட்டளையைப் பிறப்பிக்கக் கோரி கோப்பாய் பொலிஸார், யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான கட்டளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் அறிவித்தார்.
|
|
|
ருவிட்டரில் நாமலுக்கு பதிலடி கொடுத்த கனேடிய தூதுவர்!
[Wednesday 2018-11-21 18:00]
|
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ருவிட்டரில் இட்டிருந்த பதிவுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில், இலங்கைக்கான கனேடிய தூதுவர் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
|
|
|
அமைச்சரவைக் கூட்டத்தில் வசந்த சேனநாயக்க!
[Wednesday 2018-11-21 18:00]
|
ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த சேனாநாயக்க இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய அரசாங்கத்தின் அமைச்சுப் பதவியை துறக்கப் போவதாகவும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்ளப் போவதாகவும் அறிவித்திருந்த வசந்த சேனநாயக்க இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளரர்.
|
|
|
ஜனாதிபதிக்கு எதிராக தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்!
[Wednesday 2018-11-21 18:00]
|
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு காரணமான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத செயற்பாட்டை கண்டித்தும் கொழும்பு விகாரமகா தேவி பூங்கா முன்றலில் தொடர் சத்தியாகிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணியளவில் இந்தப் போராட்டம் தம்பர அமில தேரரின் உரையுடன் ஆரம்பமானது.
|
|
|
ஐதேகவை காப்பாற்றவே நீதிமன்றம் சென்றது கூட்டமைப்பு!
- கஜேந்திரன்
[Wednesday 2018-11-21 18:00]
|
தமிழ் மக்களின் பிரச்சினைக்காக நீதிமன்றத்துக்கு செல்லாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக்கட்சியை காப்பாற்றுவதற்காக நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
|
|
|
கூட்டமைப்பு மீது பாய்கிறது சுதந்திரக் கட்சி!
[Wednesday 2018-11-21 18:00]
|
வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து நாட்டை உறுதியற்ற நிலைக்கு கொண்டு செல்லும் சதித்திட்டத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் உடந்தையாக இருக்கின்றது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச குற்றம்சாட்டியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
|
|
|
முல்லைத்தீவில் வீட்டுக்குள் நுழைந்த 13 அடி நீளமான முதலை!
[Wednesday 2018-11-21 18:00]
|
முல்லைத்தீவு- சிலாவத்தை பகுதியிலுள்ள வீடு ஒன்றினுள் இன்று அதிகாலை 1 மணியளவில் 13 அடி நீளமான முதலை ஒன்று புகுந்தது. இதனைத் தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து குறித்த முதலையைப் பிடித்து வவுனிக்குளம் முதலைகள் சரணாலயத்துக்கு கொண்டு சென்று விட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
|
|
|
179 ரூபாவைத் தாண்டியது டொலரின் பெறுமதி!
[Wednesday 2018-11-21 18:00]
|
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலையின் பெறுமதி படி, இலங்கை ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 179.04 ரூபாவாக பதிவாகியுள்ளது.
|
|
|
மூன்றுமுறிப்பில் 59.8 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!
[Wednesday 2018-11-21 18:00]
|
முல்லைத்தீவு மாவட்டத்தில், மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட மூன்றுமுறிப்பு பகுதியில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் 59.8 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. 20 ஆவது சிங்க படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் இந்திக்க விக்கிரமசிங்க, இந்த காணிகளுக்கான பத்திரங்களை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரனிடம் கையளித்துள்ளார்.
|
|
|
யாழ். விபத்துகளில் இருவர் பலி - ஆணின் சடலமும் மீட்பு!
[Wednesday 2018-11-21 18:00]
|
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த இரு முதியவர்கள் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். புலோலி கோழிக்கடைச் சந்தியில் திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் புலோலி வடக்கைச் சேர்ந்த கந்தசாமி குலநாயகம் (வயது-84) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
|
|
|
முல்லைத்தீவில் பேருந்து தீக்கிரையான மர்மம்!
[Wednesday 2018-11-21 18:00]
|
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு, கோம்பாவில் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று மர்மமான முறையில் தீக்கிரையாகியுள்ளது. நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு பயணிகளை ஏற்றிச் சென்று விட்டு திரும்பி வந்த பேருந்து வழமையாக நிறுத்தும் இடத்தில்- வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
|
|
|
5 வயது குழந்தையை கடித்துக் குதறிய தந்தை!
[Wednesday 2018-11-21 18:00]
|
யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் நேற்று இரவு மதுபோதையில் இருந்த தந்தையால், கொடூரமாக கடித்து குதறப்பட்ட 5 வயது மகன், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
|
|
|
விக்னேஸ்வரனின் கோரிக்கையை நிராகரித்தது கனடா!
[Wednesday 2018-11-21 08:00]
|
யாழ்ப்பாணக் குடாநாட்டில், கனேடியத் துணைத் தூதரகத்தை ஆரம்பிக்குமாறு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நீண்டகாலமாக விடுத்து வந்த கோரிக்கையை, கனேடிய தூதரகம் நிராகரித்துள்ளது.
|
|
|
பாரிய ஆபத்து - அபாய சங்கு ஊதுகிறார் மங்கள!
[Wednesday 2018-11-21 08:00]
|
நாட்டின் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைகளால், இலங்கையால் செலுத்தப்பட வேண்டியுள்ள கடன்களைச் செலுத்த முடியாத நிலைமை ஏற்படுமென, இலங்கையின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது.
|
|
|
|