|
|
வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினரின் நீக்கத்துக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!
[Tuesday 2018-09-18 18:00]
|
வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் கந்தசாமி சதீஸை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கும் கட்சித் தலைமையின் தீர்மானத்துக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
|
|
|
சரணடைந்த புலிகளைக் கொல்லவில்லை - எஸ்.பியின் குற்றச்சாட்டை மறுக்கிறது இராணுவம்!
[Tuesday 2018-09-18 17:00]
|
போரின் இறுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக, அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட அணியைச் சேர்ந்த எஸ்.பி.திஸாநாயக்க, வெளியிட்ட கருத்தை இராணுவப் பேச்சாளர் நிராகரித்துள்ளார்.
|
|
|
யாழ்ப்பாணத்தில் தமிழக அமைச்சர் செங்கோட்டையன் அளித்த உறுதிமொழி!
[Tuesday 2018-09-18 17:00]
|
யாழ்ப்பாணத்தில் ஆராய்ச்சி நிலையங்களை அமைப்பதற்கு, தமிழக முதலமைச்சருடன் கலந்துரையாடி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதியளித்தார்.
அத்துடன், இலங்கையின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு, தமிழக அரசாங்கம் மட்டுமன்றி, மத்திய அரசாங்கமும் இணைந்து பல உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்துமெனவும் தெரிவித்தார்.
|
|
|
கனேடிய தமிழ் ஊடகங்களின் ஆதரவு..! தனியொரு தமிழனாக போட்டியிடும் நிரன் ஜெயநேசனுக்கு..
[Tuesday 2018-09-18 17:00]
|
ரொறன்ரோ மாநகரசபைக்கான தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22ஆம் நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்களை தெரிவு செய்ய மக்களிடையே கடும் குழப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் வேட்பாளர்கள் தேர்தலில் களமிறங்க இருப்பதால், யாருக்கு வாக்களிப்பது என்று தமிழ் மக்களிடையே குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.
|
|
|
மைத்திரி , கோத்தாவின் பாதுகாப்பு விவகாரம் - நாடாளுமன்றத்தில் அமளி!
[Tuesday 2018-09-18 17:00]
|
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரின் உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோக்கில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தினால், , பாராளுமன்றத்தில் இன்று கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது.
|
|
|
சுமந்திரன் கொலை சூழ்ச்சி வழக்கை யாழ்ப்பாணத்துக்கு மாற்ற கொழும்பு மேல்நீதிமன்றம் மறுப்பு!
[Tuesday 2018-09-18 17:00]
|
விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்படும், மூவர் தமது வழக்கை யாழ். மேல் நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு விடுத்த கோரிக்கை, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று நிராகரிக்கப்பட்டது. தமக்கு எதிரான வழக்கை, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றாவிடின், உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக, அந்த உறுப்பினர்கள் மூவரும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்னவின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
|
|
|
எகிறும் அமெரிக்க டொலரின் மதிப்பு - சரிகிறது ரூபாவின் பெறுமதி!
[Tuesday 2018-09-18 17:00]
|
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய, அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி 166.64 ரூபாயாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
விறகு வெட்டியவரைப் புரட்டியெடுத்த கரடி!
[Tuesday 2018-09-18 17:00]
|
திருகோணமலை- கந்தளாய் பிரதேசத்தில், காட்டில் விறகு எடுக்கச் சென்றவர், கரடியின் தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், கந்தளாய் தள வைத்தியசாலையில், நேற்று அனுமதிக்கப்பட்டார். கந்தளாய், கோவில் கிராமம் பகுதியைச் சேர்ந்த என்.ஆனந்தராசா (வயது 49) என்பவரே, கரடித் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். விறகுகளை வெட்டிக்கொண்டிருக்கும் போது, மரப்பொந்து ஒன்றிலிருந்து பாய்ந்து வந்து, கரடி தாக்கியதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
|
|
|
வடமராட்சியில் கடலட்டை பிடித்த சிங்கள மீனவர்கள் மடக்கிப் பிடிப்பு!
- பொலிசாரிடம் கையளிக்க மறுப்பதால் பதற்றம்
[Tuesday 2018-09-18 07:00]
|
வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த எட்டு சிங்கள மீனவர்களை, வடமராட்சி மீனவர்கள் மடக்கிக் பிடித்தனர். இதனால் அப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன், பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
|
|
|
தமிழ் இன அழிப்புக்கு நீதி கோரி ஜெனிவாவில் திரண்ட புலம்பெயர் தமிழர்கள்!
[Tuesday 2018-09-18 07:00]
|
தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள இன அழிப்பிற்கு இனிமேலும் தாமதிக்காது நீதியை பெற்றுக்கொடுக்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி- ஜெனீவாவிலுள்ள ஐ.நா தலைமையகத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் நேற்று ஆயிரக்கணக்கில் திரண்டு கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்தினர்.
|
|
|
உண்மைகளை மூடி மறைக்கிறது கூட்டமைப்பு!
- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
[Tuesday 2018-09-18 07:00]
|
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மைகளை மூடி மறைத்து வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரவித்துள்ளார்.
|
|
|
முல்லைத்தீவில் வரட்சியினால் 1103 குடும்பங்கள் பாதிப்பு!
[Tuesday 2018-09-18 07:00]
|
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக 8,103 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுவதுடன் முதல் கட்டமாக 6,824 குடும்பங்களுக்கும் இரண்டாம் கட்டமாக 7,296 குடும்பங்களுக்கும் வரட்சி நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
|
|
|
முடிவை அறிவிக்க வேண்டும் மஹிந்த!
- என்கிறார் பீரிஸ்
[Tuesday 2018-09-18 07:00]
|
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது தடவையாகப் போட்டியிடுவதற்கு, எந்தவிதமான சட்டச் சிக்கலும் இல்லை என்றும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானத்தை, நாட்டு மக்களுக்கு மஹிந்த அறிவிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தெரிவித்துள்ளார்.
|
|
|
ட்ரம்பை சந்திக்க அமெரிக்கா செல்கிறார் மஹிந்த!
[Tuesday 2018-09-18 07:00]
|
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கலந்துரையாடலுக்கான உத்தியோகபூர்வ அழைப்பினை அமெரிக்கா வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
|
|
|
மைத்திரி, கோத்தா படுகொலைச் சதி தொடர்பாக நாமலிடம் இரவிரவாக 7 மணிநேரம் விசாரணை!
[Tuesday 2018-09-18 07:00]
|
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகிய இருவரையும் படுகொலை செய்வதற்கான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்த, ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டுப் படையணியின் பணிப்பாளர் நாமல் குமாரவிடம், 7 மணி நேரம் விசாரணைகளை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்து கொள்ளப்பட்டுள்ளது.
|
|
|
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஐ.நாவுக்கான பயணம் குறித்து விபரிப்பார் ஜனாதிபதி!
[Tuesday 2018-09-18 07:00]
|
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெறவுள்ளது. ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்பதற்கு முன்னர் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் இது என்பதால் முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின்றது.
|
|
|
கிளிநொச்சியில் அடிகாயத்துக்குள்ளானவர் மரணம்!
[Tuesday 2018-09-18 07:00]
|
கிளிநொச்சி- அம்பாள்குளம் பகுதியில் தனியார் உணவக மதுபான சாலையில் கடந்த 14 ஆம் திகதி நடந்த கத்திக்குத்து சம்பவத்தில்ட ஒருவர் படுகாயமடைந்தார். கத்தியால் குத்தியவரை அங்கிருந்த இருவர் சரமாரியாக தாக்கினர் இந்நிலையில் கத்திக் குத்துக்கு இலக்கானவரும் அடிகாயத்துக்கு இலக்கானவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தனர்.
|
|
|
மன்னார் புதைகுழியில் தொடரும் அகழ்வு - அதிர்ச்சியை ஏற்படுத்தும் எலும்புக்கூடுகள்!
[Monday 2018-09-17 18:00]
|
மன்னார் 'சதொச' வளாக மனிதப் புதைகுழியில் இருந்து, கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் மேலும் மூன்று எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
|
|
|
சட்டவிரோத மீன்பிடிக்கு அனுமதி - முல்லைத்தீவு மீனவர்கள் மீண்டும் போராட்டம்!
[Monday 2018-09-17 18:00]
|
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடித் தொழிலுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்படவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மீனவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 9 மணியளவில் முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வளதிணைக்களத்திற்கு எதிரே அமைதியான போராட்டம் ஒன்றை ஆரம்பித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கறுப்புத் துணியினால் வாயினை கட்டி தமது எதிர்ப்பை காட்டினர்.
|
|
|
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாபெரும் தமிழ் விழா!
[Monday 2018-09-17 18:00]
|
யாழ்ப்பாணத்தில், மாபெரும் தமிழ் விழா இன்று வெகு விமரிசையாக இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில்
|
|
|
யாழ்ப்பாணம் அதிரப் போகும் நிகழ்வு நடக்கப் போகிறதாம்!
- பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
[Monday 2018-09-17 18:00]
|
வட மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் ஊடக இணைப்பாளர் என அறிமுகப்படுத்திய ஒருவர், தொலைபேசி ஊடாக தன்னை அச்சுறுத்தினார் என யாழப்பாணத்தில் உள்ள பெண் ஊடகவியலாளர் ஒருவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
|
|
|
முல்லைத்தீவில் வாளுடன் இளைஞன் கைது!
[Monday 2018-09-17 18:00]
|
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் வாள்வெட்டு குழுவை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பொலிஸாக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து பொலிஸார் சிவில் உடையில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
|
|
|
தலைமன்னாரில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயம்!
[Monday 2018-09-17 18:00]
|
தலைமன்னார்- பியரிலிருந்து படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இதையடுத்து தலைமன்னார் கடற்படையினரும், அப் பகுதி மீனவர்களும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
|
|
|
திருமண விழா கைகலப்பு கத்திக்குத்தில் முடிந்தது!
- தந்தையும் மகனும் படுகாயம்
[Monday 2018-09-17 18:00]
|
வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் திருமண விழாவின் போது, ஏற்பட்ட கைகலப்பு, கத்திக்குத்தில் முடிந்தது. குடத்தனை பகுதியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த தந்தை அந்தோணிமுத்து அவருடைய மகன் அமல்ராஜ் ஆகியோரே கத்திக் குத்துக்கு இலக்காகினர்.
|
|
|
இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
[Monday 2018-09-17 18:00]
|
இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாவையும் அவரது மகன் உள்ளிட்ட சந்தேகநபர்களையும் உடனடியாகக் கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு வாழைச்சேனை நீதிவான் எம். ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.
|
|
|
பரந்தனில் மூன்று வாகனங்கள் விபத்து - ஐந்து பேர் படுகாயம்!
[Monday 2018-09-17 18:00]
|
கிளிநொச்சி- கரடிப்போக்கு சந்திக்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் இன்று மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அறியமுடிகின்றது.
|
|
|
வரலாற்றில் முதல்முறையாக டொலருக்கு இந்த மதிப்பு!
[Monday 2018-09-17 18:00]
|
வரலாற்றில் முதல் தடவையாக, இலங்கை ரூபாவுக்கு நிகராக அமெரிக்க டொலரின் பெறுமதி இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக
இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி ரூ.165.14 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
|
|
|
மெத்தைக்குள் கஞ்சா கடத்தல் - கிளிநொச்சியில் நால்வர் மாட்டினர்!
[Monday 2018-09-17 18:00]
|
கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில், இன்று சூட்சுமமான முறையில் கேரள கஞ்சாவைக் கடத்திச் செல்ல முற்பட்ட நால்வரை, கிளிநொச்சி பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 4 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
|
|
|
|