|
|
ஒன்ராறியோ மருத்துவமனையில் கொரோனா நோயாளி கொண்டுவந்த பொருளால் பரபரப்பு!
[Saturday 2022-01-08 16:00]
|
கனடாவின் ஒன்ராறியோவில், மருத்துவமனைக்கு வந்த கொரோனா நோயாளி ஒருவர், தன்னுடன் ஒரு பொம்மையைக் கொண்டு வந்துள்ளார். அவர் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டதால், அவரது உடைமைகளை மருத்துவமனை ஊழியர் ஒருவர் சோதித்துள்ளார்.
|
|
|
ஜெர்மனியில் பயங்கரம்: மனித மாமிசத்தை சாப்பிட நினைத்த முன்னாள் ஆசிரியர் செய்த கொடூர செயல்!
[Saturday 2022-01-08 07:00]
|
லிச்டென்பர்க் பகுதியில் வாழ்ந்தார் கொல்லப்பட்ட பொறியாளர்
இணைய டேட்டிங் தளத்தில் சந்தித்த ஒருவரை கொலை செய்து, உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டிய குற்றத்துக்காக முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது ஒரு ஜெர்மனி நீதிமன்றம். 42 வயதாகும் ஸ்டீஃபன் ஆர், மனித மாமிசத்தைப் புசிக்கும் தன் விருப்பத்துக்காக, மின் பொறியாளர் ஒருவரைக் கொன்றதாக பெர்லின் நீதிமன்ற நீதிபதி கூறினார்.
|
|
|
கோவிட்-19: அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 6 கோடியை கடந்தது!
[Saturday 2022-01-08 07:00]
|
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை உலக அளவில் 30.36 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 54.96 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
|
|
|
பிரான்சில் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் ஆணுறுப்புடன் காவல் நிலையம் சென்ற நபரால் பரபரப்பு!
[Saturday 2022-01-08 07:00]
|
தெற்கு பிரான்சில் காவல் நிலையத்திற்கு சென்ற ஒருவர் ஆணின் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் ஆணுறுப்பை பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு பிரான்சின் Villeneuve மாவட்டத்திலேயே வெள்ளிக்கிழமை குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. காவல் நிலையம் சென்ற அந்த 38 வயது நபர், தாம் ஒரு கொலை செய்துள்ளதாக கூறி துண்டிக்கப்பட்ட தலை மற்றும் ஆணுறுப்பை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
|
|
|
'உங்களால் தான் கொரோனா தொற்று இங்கு ஏற்பட்டது' - கனேடிய ஆசிரியரை திட்டிய பெண்!
[Friday 2022-01-07 16:00]
|
கனடாவில் ஆசியர் ஒருவரை பெண் ஒருவர் பொதுவெளியில் கொரோனா தொடர்பில் திட்டிய வீடியோ வெளியாகியுள்ள நிலையில் அந்த செய்தியை நாடாளுமன்ற உறுப்பினரான இலங்கை தமிழர் கேரி ஆனந்தசங்கரி சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மொண்ட்ரியலில் தான் இச்சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. அதன்படி பல்பொருள் அங்காடியில் சீனாவை சேர்ந்த Ken Mak என்பவர் தனது காதலியுடன் பொருட்கள் வாங்க வந்தார்.
|
|
|
புத்தாண்டன்று மாயமான மகள்: கண்ணீர் விடும் கனேடிய தாயார்!
[Friday 2022-01-07 16:00]
|
கனடாவில் 15 வயது டீன் ஏஜ் சிறுமி காணாமல் போயுள்ள நிலையில் அவர் தாயார் உருக்கமாக பேசியுள்ளார். கனடாவின் லண்டனை சேர்ந்தவர் அலெக்ஸிஸ் ஹாரீஸ் (15) இவர் தான் புத்தாண்டு தினத்தில் இருந்து காணாமல் போயுள்ளார். அவரை பொலிசார் தொடர்ந்து தேடி வரும் நிலையில் பொதுமக்களும் அது தொடர்பில் உதவ வேண்டும் என கோரியுள்ளனர்.
|
|
|
மெக்ஸிகோவில் காரிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 10 சடலங்கள்: அதிர்ச்சி சம்பவம்!
[Friday 2022-01-07 16:00]
|
மெக்ஸிகோவில் கார் ஒன்றிலிருந்து 10 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் மெக்ஸிகோவின் ஸகாடேகாஸ் மாநிலத்தில், மாநில ஆளுநரின் அலவலகத்துக்கு வெளியே வியாழக்கிழமை கைவிடப்பட்டுக் கிடந்த காரில் இச்சடலங்கள் காணப்பட்டன.
|
|
|
உலகளவில் அதிகரித்த உணவு பொருட்களின் விலை!
[Friday 2022-01-07 16:00]
|
2021 ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் உணவு பொருட்கள் விலைகள் முந்தைய ஆண்டைவிட 28 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு கூறுகின்றது.
|
|
|
"பேச்சுவார்த்தை நடத்துவது முட்டாள்தனம், சுட்டுக்கொல்லுங்கள்" - போர்க்களமாகும் கஜகஸ்தான்!
[Friday 2022-01-07 16:00]
|
கஜகஸ்தானில் வாகன எரிபொருள் விலையை அந்த நாட்டு அரசு இரு மடங்காக உயர்த்தியதனை ஏற்க மறுத்த மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இந்த போராட்டம் புரட்சியாக வெடித்து வன்முறையாக மாறியது. பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் அரசு பதவி விலகியது. போராட்டக் காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் நீடிப்பதுடன், இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
|
|
|
கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் சிறார்கள்: எச்சரிக்கும் சுவிஸ் நிபுணர்கள்!
[Friday 2022-01-07 08:00]
|
நியூயார்க் மற்றும் லண்டன் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் சிறார்கள் அனுமதிக்கப்படுவதை சுட்டிக்காட்டி சுவிஸ் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலக நாடுகளில் கொரோனா பெருந்தொற்றின் புதிய மாறுபாடான ஓமிக்ரான் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் நியூயார்க் நகர மருத்துவமனைகளில் திடீரென்று சிறார்கள் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
|
|
|
ஒமைக்ரானை சாதாரணமாக எடுக்கக்கூடாது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
[Friday 2022-01-07 08:00]
|
கொரோனா வைரசின் புதியவகை மாறுபாடான ஓமைக்ரான் வைரஸ் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் டெல்டா விகாரத்தை விட குறைவான கடுமையான நோயை உருவாக்குவதாக கருதப்படுகிறது. ஆனால் இந்த வைரசை “சாதாரணமானது” என்று வகைப்படுத்தப்படக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
|
|
|
"விரைவில் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள்" - எச்சரிக்கும் ட்ரூடோ!
[Friday 2022-01-07 08:00]
|
உலகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் உச்சம் பெறத் தொடங்கியுள்ளது. தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
|
|
|
கொரோனாவால் பரிதவிக்கும் சுவிஸ்: புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?
[Thursday 2022-01-06 16:00]
|
சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோர் எண்ணிக்கை புதிய உச்சம் தொட்டுள்ள நிலையிலும், புதிதாக கொரோனா கட்டுப்பாடுகள் எதையும் விதிக்கப்போவதில்லை என அரசு முடிவு செய்துள்ளது. சுவிட்சர்லாந்தில் Omicron வகை கொரோனா வைரஸ் பரவல் நிலைமை எப்படி உள்ளது என்பதன் அடிப்படையில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து முடிவு செய்யப்படும் என திங்கட்கிழமையன்று அரசு அறிவித்தது.
|
|
|
கனடாவுக்கு புதிய துணை பாதுகாப்பு அமைச்சர் நியமனம்: வாழ்த்திய அனிதா ஆனந்த்!
[Thursday 2022-01-06 16:00]
|
கனடாவில் துணை பாதுகாப்புத்துறை அமைச்சராக பில் மேத்யூஸ் நியமிக்கப்படவுள்ளார். இதையடுத்து அவருக்கு நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரான தமிழ்ப்பெண் அனிதா ஆனந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். பில் மேத்யூஸ் தற்போது துணை பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சராக உள்ளார்.
|
|
|
'நான் சீக்கிரமே இறந்து விடுவேன்' - எலும்பாக மாறி வரும் அமெரிக்க இளைஞரின் உருக்கமான பதிவு!
[Thursday 2022-01-06 16:00]
|
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டு மெல்ல மெல்ல எலும்பாக மாறி வருவது அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வருபவர் Joe Sooch(29). இவருக்கு 3 வயது ஆகும் போது அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அன்றில் இருந்து இன்று வரை சுமார் 26 ஆண்டுகளாக இந்த நோய் அவரை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று வருகிறது.
|
|
|
நூதன முறையில் வாழ்க்கை துணையை தேடும் பிரித்தானியர்!
[Thursday 2022-01-06 16:00]
|
பிரித்தானியாவில் இளைஞர் ஒருவர் பதாகை வைத்து வித்தியாசமான முறையில் திருமணத்திற்கு பெண் தேடும் நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகின்றது. லண்டனில் வசித்து வருபவர் Muhammad Malik. 29 வயதான இவர் Birmingham நகரில் சுமார் 20 அடி உயரத்துக்கு பெரிய பதாகை ஒன்றை வைத்துள்ளார். அந்த பதாகையில், "என்னை Arranged marriage-ல் இருந்து காப்பாறவும்” என பெரிய எழுத்துகளில் விளம்பரம் செய்து பலரையும் கவர்ந்துள்ளார்.
|
|
|
விதிகளை மீறி விமானத்தில் நடந்த கொண்டாட்டம்: கொந்தளித்த ட்ரூடோ!
[Thursday 2022-01-06 16:00]
|
நாடு கொரோனாவை எதிர்கொள்வதற்காக வர்த்தக இழப்பு, பள்ளிகள் மூடல் போன்ற கட்டுப்பாடுகளுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டுள்ள நிலையில், எந்த விதிகளையும் மதிக்காமல் விமானத்தில் ஒரு கூட்டம் கனேடிய சமூக ஊடக பிரபலங்கள் பார்ட்டி நடத்திய விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
|
|
|
கொரோனாவை தொடர்ந்து அமெரிக்காவுக்கு அடுத்த அச்சுறுத்தல்!
[Thursday 2022-01-06 06:00]
|
இஸ்ரேல் நாட்டில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட புதிய வகை தொற்றான flurona தற்போது அமெரிக்காவில் பல மாகாணங்களில் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றும் தீவிர குளிர் ஜுரமும் கலந்து ஒரே நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு flurona என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலில் முதன்முதலில் காணப்பட்ட flurona பரவல் தற்போது, கொரோனா பரவலால் கதிகலங்கிப்போயுள்ள அமெரிக்காவில் வேகமெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
|
|
|
வேகமெடுக்கும் கொரோனா: ஸ்தம்பித்த சுவிட்சர்லாந்து!
[Thursday 2022-01-06 06:00]
|
சுவிட்சர்லாந்தில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், லட்சம் மக்கள் தனிமைப்படுத்தல் அல்லது கண்காணிப்பில் உட்படுத்தப்பட்டுள்ளதால் தொழில்துறை ஸ்தம்பிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. புதன்கிழமை வெளியான தரவுகளின் அடிப்படையில், மொத்தமாக 118,508 பேர்கள் தனிமைப்படுத்துதல் அல்லது கண்காணிப்பில் இருப்பதால் வீடுகளிலேயே முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
|
|
|
அமெரிக்காவில் பற்றி எரிந்த குடியிருப்பு: 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உடல் கருகி பலி!
[Thursday 2022-01-06 06:00]
|
அமெரிக்காவின் பிலடெல்பியாவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பென்சில்வேனியா மாகாணத்தில் பிலடெல்பியா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் உள்ளூர் நேரப்படி காலை 6 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
|
|
|
கனடாவில் அதிகம் சம்பாதிக்கும் புலம்பெயர்ந்தோர்!
[Wednesday 2022-01-05 18:00]
|
கனடாவில் புதிதாக நிரந்தர வாழிட உரிமம் பெற்ற புலம்பெயர்ந்தோரே அதிகம் பணம் சம்பாதிப்பதாக கனேடிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அந்த ஆய்வில், 2018இல் கனடாவில் நிரந்தர வாழிட உரிமம் பெற்றவர்கள், 2019ஆம் ஆண்டில், சராசரியாக 31,900 கனேடிய டொலர்கள் ஊதியம் பெற்றதும், 1981க்குப் பிறகு, அனைத்துப் பிரிவு புலம்பெயர்ந்தோரிலும் அதிக ஊதியம் பெற்றவர்கள் அவர்கள்தான் என்பதும் தெரியவந்துள்ளது.
|
|
|
அமெரிக்கா உட்பட 8 முன்னணி நாடுகளின் விமானங்களை தடை செய்த ஹொங்ஹொங்!
[Wednesday 2022-01-05 18:00]
|
Omicron தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக பதிவாகி வருவதால் பிரித்தானியா மற்றும் பிற 7 நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு ஹொங்ஹொங் தடை விதித்துள்ளது. பிரித்தானியா, பிரான்ஸ், கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு ஜனவரி 8 முதல் இரண்டு வாரங்களுக்கு ஹொங்ஹொங் அரசு தடை விதித்துள்ளது.
|
|
|
பிரித்தானியாவிற்கு 'மஞ்சள் அலெர்ட்'!
[Wednesday 2022-01-05 18:00]
|
பிரித்தானியாவில் வெப்பநிலை கடுமையாக குறைந்து வருவதால் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் வெப்பநிலை -5C வரை குறைந்ததால், வியாழக்கிழமை காலை 10 மணி முதல் ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து முழுவதும் பனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
|
|
|
பிரான்சில் தடுப்பூசியை புறக்கணித்த இரட்டையர்களுக்கு நேர்ந்த கதி!
[Wednesday 2022-01-05 18:00]
|
பிரான்சில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத பிரபல இரட்டையர்களின் மரணம் குறித்து பல முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் பிரபல இரட்டையர்கள் மற்றும் முன்னாள் தொலைக்காட்சி நட்சத்திரங்களான Grichka மற்றும் Igor Bogdanoff இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு COVID-19 நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
|
|
|
உலகை உலுக்கிய உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம்: கனேடிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
[Tuesday 2022-01-04 16:00]
|
உக்ரேனிய விமானம் சுடப்பட்டு விழுந்து நொறுங்கிய வழக்கில் பாதிக்கப்பட்ட 6 பேரின் குடும்பத்திற்கு 107 மில்லியன் கனேடிய டொலர்களை இழப்பீடாக வழங்க கனடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஈரான் தலைநகரில் இருந்து உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் பி.எஸ் 752 (PS752) புறப்பட்டது. உக்ரைனுக்கு கிளம்பிய அந்த விமானம் இரண்டு ஏவுகணைகளால் தாக்கப்பட்டது.
|
|
|
பிரான்சில் மற்றுமொரு மரபணு மாற்ற கோவிட் வைரஸ் கண்டுபிடிப்பு!
[Tuesday 2022-01-04 16:00]
|
பிரான்ஸ் நாட்டில் புதிதாக ஒரு மரபணு மாற்ற கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த புதிய வைரஸ், 46 மரபணு மாற்றங்களைக் கொண்டுள்ளது. ஆகவே, அது தடுப்பூசிகளை எதிர்க்கக்கூடியதாகவும், அதிக தொற்றும் திறன் கொண்டதாகவும் இருக்கலாம் என கருதப்படுகிறது.
|
|
|
கனடாவில் அரங்கேறிய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நீடிக்கும் மர்மம்!
[Tuesday 2022-01-04 16:00]
|
கனடாவில் ஒண்டாரியோ மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒண்டாரியோ தலைநகர் Toronto-வில் திங்கட்கிழமை இரவு இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து Toronto பொலிஸ் கூறியதாவது, Lakeshore Boulevard Wes மற்றும் Thirtieth தெருவிற்கு அருகிலுள்ள Long Branch பகுதியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
|
|
|
நடுக்கடலில் மாயமான 4000-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர்!
[Tuesday 2022-01-04 16:00]
|
2021ல் ஸ்பெயினை அடைய முயன்ற 205 குழந்தைகள் உட்பட 4400-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் கடலில் மாயமானது தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம் என கண்காணிப்பு குழுவான Walking Borders குறிப்பிட்டுள்ளது. கண்காணிப்பு குழு வெளியிட்ட தகவலின் படி, அபாயகரமான பாதைகள், கோளாறான படகுகள் மற்றும் கடலில் புலம்பெயர்ந்தோருக்கு உதவ செல்லும் சில கப்பல்களால் ஏற்படும் பயம், ஆகியவையே புலம்பெயர்ந்தோர் மரணத்திற்கு முக்கிய காரணம்.
|
|
|
|