|
|
தன்னை எவ்வளவு பிடிக்கும் என நிரூபிக்க சுந்தர் பிச்சை கடின முயற்சி - அதிபர் டிரம்ப் உரை!
[Wednesday 2019-08-07 17:00]
|
தன்னை எவ்வளவு பிடிக்கும் என்பதை விளக்க கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை கடினமாக முயற்சித்ததாகக் கூறியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆனால் கூகுள் நிறுவனம் தன்னிடம் பொய் சொல்லி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். கடந்த மார்ச் மாதம் வெள்ளை மாளிகைக்கு வந்த சுந்தர் பிச்சை, தன்னைப் பிடிக்கும் என்றும், தன் நிர்வாகத்தைப் புகழ்ந்து பேசியதோடு, அமெரிக்க ராணுவத்துக்கே கடமைப் பட்டிருப்பதாகவும், சீன ராணுவத்துக்கு உதவுவதாகக் கூறுவது முற்றிலும் பொய் என்றும் விளக்கமளித்ததை சுட்டிக் காட்டியிருந்தார். இதை கூகுளில் பணியாற்றிய பொறியாளர் கெவின் கெர்னெகீயை சந்திக்கும் வரையில் தான் உண்மை என நம்பிக்கொண்டிருந்ததாவும் தெரிவித்துளளார்.
|
|
|
மகளை போல் வேடமிட்டு சிறையிலிருந்து தப்ப முயன்ற கைதி சிறையில் தூக்கிட்டு தற்கொலை!
[Wednesday 2019-08-07 17:00]
|
பிரேசிலில், மகளை போல் வேடமிட்டு சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற கைதியை அதிகாரிகள் மடக்கி பிடித்த நிலையில், அவர் சிறை வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேசில், இயங்கி வரும் ‘ரெட் கமாண்ட்’ என்ற போதை கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்த கிளாவினோ டா சில்வா என்பவர், பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறி 73 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
|
|
|
காஷ்மீர் விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்த சீனா.. பதிலளித்த இந்தியா..
[Wednesday 2019-08-07 16:00]
|
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி காஷ்மீர் மாநிலம் இனி லடாக் என்ற ஒரு பகுதியாகவும், ஜம்மு காஷ்மீர் என்ற மற்றொரு பகுதியாகவும் செயல்படும். அந்த 2 பகுதிகளும் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. லடாக் யூனியன் பிரதேசம் சட்டசபை இல்லாமல் செயல்படும். அங்கு துணை நிலை கவர்னர் நியமனம் செய்யப்படுவார் என கூறப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மேலும் பல தலைவர்கள் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியா, லடாக்கினை பிரித்தது குறித்து சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
|
|
|
கனடாவில் மூவர் கொலை வழக்கில் முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளன!
[Wednesday 2019-08-07 16:00]
|
கனடாவில் சுற்றுலா பயணிகள் உட்பட மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமக்கு கிடைத்துள்ள ஆதாரங்கள் தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிட மறுத்துள்ள பொலிஸார், இது மூவரின் கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக அமையும் என கூறியுள்ளனர். கில்லாம் (Gillam) அருகே உள்ள நெல்சன் ஆற்றில் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அலுமினிய படகை அடுத்து, தேடுதலில் ஈடுபட்ட பொலிசார், தற்போது கொலை வழக்கிற்கு தேவையான முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேவேளை, சிறப்பு குழுவினரை இந்த தேடுதல் பணியில் ஈடுபடுத்தவுள்ளதாகவும், நெல்சன் ஆற்றின் குறிப்பிட்ட பகுதியில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
|
|
|
இணையதளத்தில் பிரபலமடைய பெண் செய்த காரியம் : வலுக்கும் கண்டனங்கள்!
[Tuesday 2019-08-06 17:00]
|
இன்ஸ்ரகிராம் சமூக வலைத்தளத்தில் பிரபலமடைவதற்காக இளம்பெண்ணொருவர் செய்த மோசமான காரியம் வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்ற நிலையில், கனடா முழுவதிலும் அவருக்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. தான் பிரபலமாவதற்காக அஞ்சல் பெட்டிக்குள் குளிர்பானத்தை ஊற்றிய கனடாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தேடப்பட்டு வருகிறார். கனடாவைப் பொருத்தவரையில் அஞ்சல் பெட்டியை சேதப்படுத்துதல் தண்டனைக்குரிய குற்றமாகும். அவர் இதுதொடர்பாக வௌியிட்டுள்ள காணொளி ஒன்றில், அஞ்சல் பெட்டியின் மூடியைத் திறக்கும் அந்த இளம்பெண், தனது கையிலிருக்கும் போத்தலில் இருந்த குளிர்பானம் முழுவதையும் தபால் பெட்டிக்குள் ஊற்றிவிட்டு, போத்தலுடன் வேகமாக அங்கிருந்து நகர்வது தெரிகிறது.
|
|
|
ரொறென்ரோ பொருளாதார வர்த்தக மையம் முன் ஹொங்கொங் மக்கள் போராட்டம்!
[Tuesday 2019-08-06 17:00]
|
ஹொங் கொங் விடுதலையை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான மக்கள் இணைந்து ரொறென்ரோவில் உள்ள ஹொங் கொங் பொருளாதார வர்த்தக மையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹொங் கொங் ஆட்சியாளர்களின் சர்ச்சைக்குரிய சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த போராட்டம் இடம்பெற்றது. 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற கணிக்கீட்டின்படி சுமார் 3 இலட்சம் ஹொங் கொங் மக்கள் கனடியப் பிரஜாவுரிமை பெற்று அங்கு வாழ்ந்து வருகின்றனர்.
|
|
|
காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று அவசரமாக கூடுகிறது - ஐ.நா.விடம் முறையிட முடிவு!
[Tuesday 2019-08-06 17:00]
|
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது மற்றும் அந்த மாநிலம் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் நடவடிக்கைகளை நிராகரித்துள்ள பாகிஸ்தான், இது தொடர்பாக விவாதிக்க இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தை நடத்துகிறது. இந்திய அரசியல் சட்டம் 370-வது பிரிவின்படி காஷ்மீருக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நேற்று ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லாடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவும் நடவடிக்கை எடுத்து உள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகளை நிராகரித்துள்ள பாகிஸ்தான், இதற்கு கண்டனமும் தெரிவித்து உள்ளது.
|
|
|
பூமியின் வரைபடத்தில் உள்ள கட்டமைப்புக்களை முப்பரிமாணத்தில் ஒளிர செய்த கனடிய மாணவன்!
[Tuesday 2019-08-06 17:00]
|
கனடாவைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் சாதனை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பூமியின் வரைபடத்தில் உள்ள உட்கட்டமைப்புக்களை ஒளிரும் முப்பரிமாணத் தொழில்நுட்பம் மூலம் மாணவர் ஒருவர் வகைப்படுத்திக் காட்டி பாராட்டுக்களை பெற்று வருகிறார். நோவா ஸ்காடியாவை சேர்ந்தவர் 23 வயதான பீட்டர் அட்வு என்ற இளைஞர் கட்டிடக் கலை கல்வியை தொடர்ந்து வருகிறார். உலகின் எல்லைகளைப் பிரிக்க பல வரைபடங்கள் இருந்தாலும், டிஜிட்டல் முறையில் ஒவ்வொரு உள்கட்டமைப்பையும் தனித் தனியே பிரித்து காட்சிப்படுத்தியுள்ளார்.
|
|
|
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு மனநோயால் நடந்தது: டொனால்டு டிரம்ப் விளக்கம்!
[Tuesday 2019-08-06 08:00]
|
அமெரிக்காவில் டெக்சாஸ் மற்றும் ஓஹியோ மாகாணங்களில் நடந்த இரு வேறு துப்பாக்கிசூடு சம்பவங்களில் 29 பேர் பலியாகி உள்ளனர். டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு தொடர்பாக 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். டெக்சாஸில் ஸ்பானிஷ் மக்கள் அதிகம் குடியேறுவதற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என கூறப்படுகிறது. ஆனால் இந்த இருசம்பவங்களும் மனநோயால் நடந்துள்ளதாகக் கூறியுள்ளார் டிரம்ப்.
|
|
|
அமெரிக்கா மற்றும் தென்கொரியா ராணுவங்கள் கூட்டுப்பயிற்சி!
[Tuesday 2019-08-06 08:00]
|
வடகொரியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா ராணுவங்களின் கூட்டுப்பயிற்சி நேற்று தொடங்கியது. இந்த கூட்டுப்பயிற்சி 10 நாட்களுக்கு நடைபெறும். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் வோல்டா நதியில் 10 பேருடன் சென்று கொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து, தண்ணீரில் மூழ்கியது. இதில் 2 பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மற்ற 6 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
|
|
|
சீனாவில் திடீர் வெள்ளத்தால் 12 பேர் உயிரிழப்பு!
[Tuesday 2019-08-06 08:00]
|
மத்திய சீனாவில் பிரபலமான சுற்றுலா தளமான டியோபி ஜார்ஜில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 12 பேர் இறந்தனர் மேலும், ஒருவரை காணவில்லை எனவும், அவரை தேடும் பணியில் ஈடுபட்டுவருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
|
|
|
நியூசிலாந்து நாட்டில் கருக்கலைப்பு சட்டபூர்வமாகிறது!
[Tuesday 2019-08-06 08:00]
|
நியூசிலாந்து நாட்டில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். எனினும் கர்ப்பம் தரித்ததால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு உடல் ரீதியிலோ அல்லது மன ரீதியிலோ ஆபத்து இருக்கும் பட்சத்தில் அவர் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம். அதுவும் அந்த பெண்ணை 2 மருத்துவர்கள் பரிசோதித்து அவர்கள் அனுமதி வழங்கினால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும். 40 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருக்கும் இந்த கடுமையான சட்டத்தை நீக்க வேண்டும் எனவும், கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றமாகாது என்பதை அறிவிக்க வலியுறுத்தியும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்ணியவாதிகள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
|
|
|
ஹாங்காங்கில் நடைபெற்று வரும் போராட்டத்தின் காரணமாக விமான சேவை ரத்து!
[Monday 2019-08-05 17:00]
|
ஹாங்காங்கில் நடைபெற்று வரும் போராட்டங்கள், அவ்வப்போது கலவர சூழலாக மாறியுள்ள நிலையில் 100-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹாங்காங்கில் குற்றம்சாட்டப்படுபவர்களை சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜூன் மாதம் முதல் வார இறுதி நாட்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதில் அவ்வப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ட்சுங் கவாங் ஓ என்ற மாவட்டத்தில் காவல் நிலையம் தாக்குதலுக்கு ஆளானது.
|
|
|
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் குறித்த புதிய தகவல்; சொந்த சகோதரியும் சுட்டுக்கொல்லப்பட்டார்!
[Monday 2019-08-05 17:00]
|
கடந்த ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்காவில் நடந்த இரட்டை துப்பாக்கிச்சூட்டில் மொத்தம் 30 பேர் உயிரிழந்தனர். அதில் ஓரிகான் மாவட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய 24 வயதான கானர் பெட்ஸ் குண்டு துளைக்காத ஆடை, முகமூடி மற்றும் செவிப்புலன் பாதுகாப்பு கருவி மற்றும் குறைந்தது 100 தோட்டா சுற்றுகளை ஏந்தி வந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
|
|
|
பிரேசில் நாட்டில் மகளைப் போல வேடமிட்டு சிறையில் இருந்து தப்ப முயன்ற கைதி!
[Monday 2019-08-05 17:00]
|
சிறையில் இருக்கும் கைதிகள் தப்பிப்பதற்காக பல்வேறு முறைகளில் செயல்படுவர். ஆனால், போலீசாரின் 24 மணி நேர கண்காணிப்பில் இருக்கும் அவர்களால், அவ்வளவு எளிதாக தப்பிவிட முடியாது. அப்படியொரு கைதி, பிரேசில் நாட்டு சிறையில் இருந்து தப்பிக்க புதிய முறையை கையாண்டிருக்கிறார். பிரேசில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் கிளாவினோ டா சில்வா. இவர் ஒரு கேங் லீடர் ஆவார். அந்த கைதிக்கு 19 வயதில் மகள் உள்ளார். சில்வாவை அவரது மகள் சந்திக்க வருவது வழக்கம். அப்படி ஒரு நாள் , அவரது மகள் பார்க்க வந்துள்ளார். ஆனால், அவரது தந்தை ஒரு திட்டம் தீட்டியிருக்கிறார் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.
|
|
|
கனடாவில் வரலாற்று சிறப்புமிக்க நகரின் தலைமை காவல் அதிகாரியாக தமிழர் நியமனம்!
[Monday 2019-08-05 17:00]
|
கனடாவின் ஒன்ராறியோ பகுதியில் உள்ள முக்கிய நகரத்திற்கு தலைமை பொலிஸ் அதிகாரியாக இலங்கை தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கனடா நாட்டின் ஹோல்டன் பகுதியில் துணை பொலிஸ் அதிகாரியாக நிஷ் துரையப்பா பணிபுரிந்தார். இவர் இலங்கையைச் சேர்ந்தவராவார். பொலிஸ் துறையில் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்துள்ளார். இவர் தற்போது வரலாற்று சிறப்புமிக்க நகரமாக விளங்கும் பீல் (Peel) நகரத்தின் தலைமை பொலிஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி அவர் எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.
|
|
|
பறக்கும் பலகை மூலம் இங்கிலிஷ் கால்வாயை கடந்து பிரெஞ்சு வீரர் சாதனை!
[Monday 2019-08-05 08:00]
|
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிராங்கி ஜபதாவின் கனவு, சாகச கனவு. அட்லாண்டிக் பெருங்கடலில் தெற்கு இங்கிலாந்தையும், வடக்கு பிரான்சையும் பிரிக்கும் இங்கிலிஷ் கால்வாயை பலரும் நீந்தி சாதனை படைக்க விரும்புவர். இன்னும் சிலரோ தங்களுக்கே உரித்தான புதுமையான முறையில் ஹோவர் போர்டு, ஹாட் பலூன், பாராசூட், கிளைடர் என ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி ஆங்கில கால்வாயை கடந்து சாதிக்க விரும்புகிறார்கள். நமது தமிழக வீரர் குற்றாலீஸ்வரன் 1994-ம் ஆண்டு, தனது 13 வயதில் இங்கிலிஷ் கால்வாயை நீந்தி சாதனை படைத்து இருக்கிறார். அவரது சாதனைக்கு இது வெள்ளி விழா ஆண்டு.
|
|
|
சீனாவில் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் முட்டை கண்டெடுப்பு!
[Monday 2019-08-05 08:00]
|
சீனாவில், நதிக்கரையோரம் மண்ணில் புதைந்து கிடந்த டைனோசர் முட்டை ஒன்றை 10 வயது சிறுவன் கண்டுபிடித்துள்ளான். குயாங்டாங்கில் வசித்து வரும் சாங் யாங்ஷீ (Zhang Yangzhe) என்ற சிறுவன் டைனோசர்களை பற்றி அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளான். அண்மையில், அங்குள்ள நதிக்கரையோரம் யாங்ஷீ விளையாடிக்கொண்டிருந்தபோது, பெரிய அளவிலான முட்டை வடிவத்திலிருந்த கல்லை கண்டுபிடித்துள்ளான்.
|
|
|
காஷ்மீர் பிரச்சினையில் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய இதுவே சரியான தருணம்- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்!
[Monday 2019-08-05 08:00]
|
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியிருப்பதாவது:- எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி அப்பாவி மக்கள் மீது இந்தியா தாக்கியுள்ளதற்கு எனது கண்டனத்தை தெரிவிக்கிறேன். சர்வதேச மனிதாபிமான சட்டம் மீறப்பட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் ஏற்பட்டுள்ள இந்த சர்வதேச அச்சுறுத்தல் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும்.
|
|
|
சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்டதில் சர்ச்சை கருத்து: ருமேனியாவில் பெண் மந்திரி நீக்கம்!
[Sunday 2019-08-04 17:00]
|
ருமேனியாவில் சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சர்ச்சைக்குரிய கருத்தை டி.வி. சேனலில் வெளியிட்ட பெண் மந்திரியை அதிரடியாக நீக்கி பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார். ஐரோப்பிய நாடான ருமேனியாவில், கராக்கல் நகரைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரா மாசேசானு என்ற 15 வயது சிறுமி ‘ஹிட்சைக்கிங்’ பயணம் (கட்டை விரலை உயர்த்திக்காட்டி அடையாளம் தெரியாத அன்னியர்களின் வாகனங்களை நிறுத்தி, அதில் இலவச சவாரி செய்வது) மேற்கொண்டார். அப்போது அவர் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை, தலைநகர் புகாரெஸ்ட் அருகே நடந்திருப்பது அந்த நாட்டையே உலுக்கி உள்ளது.
|
|
|
சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கு: அமெரிக்க இசை நட்சத்திரம் கெல்லிக்கு ஜாமீன் மறுப்பு!
[Sunday 2019-08-04 17:00]
|
அமெரிக்காவில் வசித்து வருபவர் இசை நட்சத்திரம் கெல்லி என்று அழைக்கப்படுகிற ராபர்ட் கெல்லி ஆவார். இவர் ‘ஆர் அண்ட் பி’ என்று அழைக்கப்படுகிற ‘ரிதம் அண்ட் புளூஸ்’ இசையில் பிரபலமானவர். இவர் மீது ஏராளமான செக்ஸ் புகார்கள் குவிந்துள்ளன. பெண்களையும், சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் என்பதுதான் குற்றச்சாட்டு. இவர் எல்லா குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகிறார். ஆனாலும் கடந்த மாதம் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
|
|
|
வெளிநாட்டுக் கப்பலை சிறைபிடித்த ஈரான்!
[Sunday 2019-08-04 17:00]
|
எரிபொருள் கடத்திச் சென்றதாகக் கூறி வெளிநாட்டுக் கப்பல் ஒன்றை ஈரான் பறிமுதல் செய்துள்ளது. இங்கிலாந்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டு கொடியுடன் வந்த ஸ்டெனா இம்பெரோ கப்பலை, கடந்த மாதத்தில் ஈரான் சிறைபிடித்தது. அந்தக் கப்பலையும், அதில் இருந்த 23 மாலுமிகளையும் ஈரான் இன்னும் விடுவிக்கவில்லை. இந்த நிலையில், 7 லட்சம் லிட்டர் எரிபொருளை கடத்திச் சென்ற வெளிநாட்டு சரக்குக் கப்பலை ஃபார்சி தீவு அருகே சிறைபிடித்ததாக ஈரான் கடற்படை கூறியுள்ளது. அந்தக் கப்பலில் இருந்த 7 மாலுமிகளும் தங்கள் வசம் இருப்பதாக தெரிவித்துள்ளது.
|
|
|
அமெரிக்காவில் மீண்டும் துணிகரம்: கேளிக்கை விடுதியில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி!
[Sunday 2019-08-04 17:00]
|
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள கிளப்பில் மர்ம நபர் ஒருவர் திடீரென நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினார். இந்த தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
|
|
|
ஜெர்மனியில் சோயபீன்ஸ் எனக் கூறி கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.7,733 கோடி போதைப்பொருள்!
[Sunday 2019-08-04 08:00]
|
ஜெர்மனியில் இதுவரை இல்லாத அளவுக்கு, சுமார் 7733 கோடி ரூபாய் மதிப்பு கொகைன் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உருகுவே நாட்டிலிருந்து ஜெர்மனி வழியாக பெல்ஜியம் நோக்கி செல்லும் கப்பலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக ஜெர்மன் நாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அந்நாட்டின் துறைமுக நகரமான ஹாம்பர்க் வந்த கப்பலை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதில் சோயபீன்ஸ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
|
|
|
அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலி!
[Sunday 2019-08-04 08:00]
|
அமெரிக்காவின் டெல்சாஸ் மாகாணத்தின் எல் பசோ பகுதியில் அமைந்துள்ளது வால்மார்ட் ஷாப்பிங் மால். வார இறுதி விடுமுறை என்பதால் ஷாப்பிங் மாலில் கூட்டம் அதிகமாக இருந்தது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த ஷாப்பிங் மாலின் உள்ளே திடீரென புகுந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினான்.
இந்த திடீர் தாக்குதலால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடினர்.
|
|
|
எதிர்ப்பை காட்டும் விதமாக நீதிபதி முன் மார்பகங்களை காட்டிய பெண் ஆராய்ச்சியாளர்!
[Sunday 2019-08-04 08:00]
|
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், முசேவேனி (வயது 74) அதிபராக உள்ளார். இவர் கருத்து சுதந்திரத்தை விரும்புவதில்லை. தன்னை விமர்சிப்பவர்களை ஒரு கை பார்த்து விடுவது வழக்கமாக உள்ளது. அங்கு நியான்சி (44) என்ற பெண் ஆராய்ச்சியாளர் சமூக வலைத்தளங்களில் அரசுக்கு எதிரான தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார். அதிபர் முசேவேனியின் சர்வாதிகாரப்போக்கையும் விமர்சித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த ஆண்டு தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் அதிபர் முசேவேனி அமிலம் ஊற்றி எரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருத்து வெளியிட்டிருந்தார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
|
|
|
வர்த்தகப் போரில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க சீனா வசமுள்ள ஆயுதங்கள் - ஆய்வாளர்கள் அறிக்கை!
[Saturday 2019-08-03 17:00]
|
வர்த்தகப் போரில், புதிய வரிவிதிப்புகள் வடிவில் அமெரிக்கா தொடுத்துள்ள தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க சீனாவிடம் உருப்படியாக ஒருசில பொருளாதார ஆயுதங்களே உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பு.. இருபெரும் வல்லரசுகளான அமெரிக்காவும் சீனாவும் வர்த்தகப் போரில் மாறி மாறி பொருளாதார தாக்குதல்களை தொடுத்து வருகின்றன. வர்த்தக ஒப்பந்தத்தின் வடிவில், தன்னுடைய நிபந்தனைகளுக்கு சீனாவை பணியவைக்க, அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் அனைத்தின் மீதும் அமெரிக்கா வரிகளை விதித்துள்ளது. அந்த வரிசையில், 300 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனப் பொருட்கள் மீது 10 சதவீத வரி விதிக்கப்படுவதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார்.
|
|
|
லாரன்டியன்ஸில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 6 மாத குழந்தை: விசாரணைகள் தீவிரம்!
[Saturday 2019-08-03 17:00]
|
லாரன்டியன்ஸில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த குழந்தை விவகாரம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். லாரன்டியன்ஸில் ஆற்றில் 6 மாத குழந்தை ஆற்றில் அடித்து செல்லப்பட்டு, மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இதுகுறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) மாலை ஒட்டாவாவிலிருந்து வடக்கே 220 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஃபெர்ம்-நியூவ்,லாரன்டியன்ஸில் ஆற்றில் குறித்த குழந்தை அடித்துச் செல்லப்பட்டள்ளது.
|
|
|
|