|
|
சர்ச்சை எழுந்ததால் பேச்சை மாற்றியது அமெரிக்கா, ‘‘காஷ்மீர் பிரச்சினை இரு தரப்பு விவகாரம்’’ என கருத்து!
[Wednesday 2019-07-24 08:00]
|
‘‘பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்சினையில், மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதமர் மோடி என்னை கேட்டுக்கொண்டார்’’ என வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் கூறினார். இதை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வரவேற்றார். இது குறித்து அவர் பாக்ஸ் நியூசுக்கு அளித்த பேட்டியில், ‘‘காஷ்மீர் பிரச்சினையில் இருதரப்பு பேச்சுவார்த்தையில் தீர்வு ஒருபோதும் வராது. காஷ்மீர் பிரச்சினையில் ஒரே ஒருமுறை, பர்வேஸ் முஷரப் அதிபராகவும், இந்திய பிரதமராக வாஜ்பாயும் இருந்தபோது தீர்வை நெருங்கினோம். ஆனால் அதன் பின்னர் எதிர் எதிர் துருவங்கள் ஆகிவிட்டோம். இந்தியா பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும். இதில் அமெரிக்கா மிகப்பெரிய பங்களிப்பு செய்ய முடியும்’’ என குறிப்பிட்டார்.
|
|
|
வெளியுலகத்துடன் தொடர்பே இல்லாமல் வாழும் பழங்குடியின மக்கள்!
[Wednesday 2019-07-24 08:00]
|
அமேசான் காடுகளில் வாழும் வெளியுலகத் தொடர்பில்லாத ஆதிவாசி மக்கள் அழியும் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரேசில் நாட்டின் அமேசான் மழைக்காடுகளில் மாரன்ஹாவோ ((Maranhao)) என்ற இடத்தில் ஆவா இனத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். பலநூறு ஆண்டுகளாக வெளியுலகின் தொடர்பில் இல்லாமல் தனித்து வாழ்ந்து வரும் இவர்கள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஹெலிகாப்டரில் சென்ற ஆய்வாளர்களை வில் அம்புகளால் தாக்கும் வீடியோவை நேஷனல் ஜியோகிராபிக் சேனல் வெளியிட்டது.
|
|
|
பேச்சுவார்த்தை மூலம் ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படுத்துவது கடினம் - டிரம்ப் பேட்டி!
[Wednesday 2019-07-24 08:00]
|
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட மோதல் உச்சத்தை எட்டி இருக்கிறது. இருநாடுகளும் வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் ஈரானில் அமெரிக்காவுக்காக உளவு பார்த்த 17 பேரை கைது செய்து இருப்பதாகவும், அவர்களில் சிலருக்கு மரண தண்டனை விதித்ததாகவும் ஈரான் அறிவித்துள்ளது. இது இரு நாடுகளின் உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது.
|
|
|
இருளில் மூழ்கியது வெனிசூலா!
[Wednesday 2019-07-24 08:00]
|
எண்ணெய் வளம் மிக்க நாடான வெனிசூலாவில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது. மேலும் அங்கு பொருளாதார நெருக்கடியும் நிலவுகிறது. பொதுத்துறை நிறுவனமான மின்சார நிறுவனம் நஷ்டத்தில் செயல்பட்டு கொண்டிருப்பதால் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இந்த நிலையில், நாட்டில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி உள்ளன. மொத்தம் உள்ள 23 மாகாணங்களில் 18 மாகாணங்களில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
|
|
|
ஒசாமா பின்லேடன் இருந்த இடத்தை அமெரிக்க உளவுத்துறைக்கு சொன்னது யார்? -இம்ரான்கான் புதிய தகவல்!
[Tuesday 2019-07-23 17:00]
|
பாகிஸ்தானின் அபோதாபாத்தில் 2011 மே 2-ம் தேதி அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க உளவுத்துறை (சிஐஏ) சிறப்பு நடவடிக்கையால் கொன்றது. அபோதாபாத்தில் பின்லேடன் மறைவிடத்தை அமெரிக்காவிற்கு கூறியது யார்? என்பது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகியது. ஆனால் ஒசாமா பின்லேடன் இருப்பிடம் சம்பந்தமாக தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றே பாகிஸ்தான் அரசு மறுத்துவந்தது. இந்நிலையில் ஒசாமா பின்லேடன் இருப்பிடத்தை அமெரிக்க உளவுத்துறைக்கு சொன்னது யார்? என்பது தொடர்பாக இம்ரான் கான் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
|
|
|
சீனாவும், ஆஸ்திரேலியாவும் பசிபிக் தீவுகளில் பலப்பரீட்சை!
[Tuesday 2019-07-23 17:00]
|
பசிபிக் தீவுகளுக்கு சீனா பணத்தை வாரி இறைப்பது ஆஸ்திரேலியாவை கவலை கொள்ளச் செய்துள்ளது. பப்புவா நியூ கினியா உள்ளிட்ட பசிபிக்கில் உள்ள 14 முக்கிய தீவு நாடுகள், இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படுபவை. அந்த தீவுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியே சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் தான். இதன் காரணமாக, பிறநாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த தீவுகள் உள்ளன. அந்தத் தீவுகளுக்கு ஆஸ்திரேலியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
|
|
|
இங்கிலாந்தின் புதிய பிரதமராக முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சன் தேர்வு!
[Tuesday 2019-07-23 17:00]
|
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு எம்.பி.க்களின் ஆதரவை பெற முடியாததால் பிரதமர் தெரசா மே, பதவி விலகுவதாக கடந்த மாதம் அறிவித்தார். இங்கிலாந்தை பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவர் பதவியை அலங்கரிப்பவரே, நாட்டின் பிரதமர் நாற்காலியிலும் அமர வைக்கப்படுவார். அதன்படி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி தொடங்கியது.
|
|
|
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை சுமந்து சென்ற கப்பல் உடைக்கப்படவுள்ளது!
[Tuesday 2019-07-23 17:00]
|
இறுதியுத்தக் காலப்பகுதியில் நூற்றுக்கணக்கான இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை சுமந்து சென்று கனடாவின் வான்கூவர் தீவை அடைந்த எம்.வி. சன் சீ (MV Sun Sea) கப்பல் உடைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெடரல் அரசாங்கம் MV Sun Sea என்னும் அந்த கப்பலை உடைப்பதற்காக 4 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. 2010 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இருந்து தப்பி நாட்டை விட்டு வெளியேறிய நூற்றுக்கணக்கான தமிழர்களை சுமந்து கொண்டு அந்த கப்பல் கனடாவின் வான்கூவர் தீவை அடைந்தது. அதன்பின்னர் குறித்த கப்பல் பல ஆண்டுகளாக பிரிட்டிஷ் கொலம்பியாவிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கப்பலுக்கு யாரும் உரிமை கோராத நிலையில், அது பின்னர் கனேடிய எல்லை பாதுகாப்பு முகவரகத்தின் சொத்தாக மாறியது.
|
|
|
காஷ்மீர் பிரச்சினையில் சமரசம் செய்ய தயார் என டிரம்ப் அறிவிப்பு!
[Tuesday 2019-07-23 09:00]
|
காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம் செய்யத் தயார் என்று இம்ரான்கானிடம் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்பின் யோசனையை இந்தியா நிராகரித்துள்ளது. பிரதமர் மோடி உதவும்படி கேட்டுக் கொண்டதாக டிரம்ப் கூறியதையும் இந்திய வெளியுறவுத்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மூன்றுநாள் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், வெள்ளை மாளிகையில் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார். அப்போது காஷ்மீர் பிரச்சனையை எழுப்பிய டிரம்ப், இந்த விவகாரத்தில் உதவ முன்வருமாறு பிரதமர் மோடி தம்மிடம் கேட்டுக் கொண்டதாகவும், தேவைப்பட்டால் இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரச பேச்சு நடத்த தாம் மத்தியஸ்தராக இருக்க விரும்புவதாகவும் அப்போது டிரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும், இம்ரான்கான் சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் காஷ்மீர் பற்றிய டிரம்ப்பின் சமரச முயற்சி குறித்து குறிப்பிடப்படவில்லை.
|
|
|
அமெரிக்காவை சேர்ந்த 17 சிஐஏ அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து ஈரான் உத்தரவு!
[Tuesday 2019-07-23 08:00]
|
ஈரான் நாட்டில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட 17 சிஐஏ அதிகாரிகளுக்கு அந்நாடு மரண தண்டனை விதித்துள்ளது. ஈரானுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்ததில் இருந்து அமெரிக்கா -ஈரான் இடையே கடந்த மூன்று மாதங்களாக கடுமையான மோதல் வலுத்துள்ள நிலையில் சிஐஏ உளவு நிறுவனத்திற்காக பணியாற்றும் 17 பேரை கைது செய்ததாக அறிவித்த ஈரான் அரசு நேற்று அந்த 17 பேருக்கும் மரண தண்டனையை அறிவித்தது.
|
|
|
தென் ஆப்பிரிக்காவில் தடை நீங்கியதால் கொடூரமாக கொல்லப்படும் யானைகள்!
[Tuesday 2019-07-23 08:00]
|
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் ஜெஸ்டின் சுலிவான். இவர் ஒரு ஆவணப்பட இயக்குனர் ஆவார். இவர் சமீபத்தில், போட்ஸ்வானா பகுதியின் வனத்திற்குச் சென்றார். அந்த வனத்தில் உள்ள விலங்குகளின் அரிய புகைப்படங்களை எடுக்க பல்வேறு விதமான நவீன புகைப்பட கருவிகளுடன் சென்றார். அவர் வனத்தில் ஏதேனும் அரிய காட்சிகள் இருக்கிறதா? என்பதை கவனிக்க டிரோனை பறக்கவிட்டு இயக்கினார். சிறிது நேரம் பறந்த டிரோன், ஓர் துயர காட்சியை காண்பித்தது. அந்த காட்சியில் யானை ஒன்று, தும்பிக்கை தனியாகவும், உடல்பகுதி தனியாகவும் துண்டிக்கப்பட்டு இறந்துக் கிடந்துள்ளது. இதனை கண்டு ஜெஸ்டின் கடும் அதிர்ச்சிக்குள்ளானர்.
|
|
|
2024-ம் ஆண்டில் நிலாவுக்கு செல்லும் முதல் பெண் - நாசா நிறுவனம் அனுப்புகிறது!
[Tuesday 2019-07-23 08:00]
|
நிலாவில் மனிதன் முதல் முறையாக கால் பதித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2024-ம் ஆண்டு நிலாவுக்கு முதல் பெண் அனுப்பப்படுவார் என அமெரிக்காவின் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலவில் முதல் பெண்ணை தரையிறக்கும் நாசாவின் புதிய திட்டத்திற்கு ‘ஆர்ட்டிமிஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
|
|
|
எகிப்து செல்லும் விமான சேவைகளை ரத்து செய்தது பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம்!
[Sunday 2019-07-21 18:00]
|
எகிப்தின் தலைநகர் கெய்ரோ செல்லும் விமானங்களை ஒரு வாரம் ரத்து செய்துள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. விமானங்களை ரத்து செய்வதற்கான சரியான காரணத்தை அந்நிறுவனம் தெரிவிக்காத போதிலும், உலக முழுவதும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
|
|
|
மீண்டும் ஹாங்காங்கில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள்..!
[Sunday 2019-07-21 18:00]
|
ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்டோரை சீனாவிற்கு கொண்டு சென்று விசாரிக்க வகை செய்யும், மசோதாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், வன்முறையில் ஈடுபட்ட காவலர்கள் மீது தனி விசாரணை நடத்த கோரி பல்லாயிரக் கணக்கானோர் பேரணி நடத்தினர். சீனா கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், குற்றஞ்சாட்டப்படுபவர்களை சீனாவிற்கு கொண்டு சென்று விசாரிக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் நாடாளுமன்றம் நோக்கி கண்டன பேரணி நடத்தினர்.
|
|
|
பாகிஸ்தான் தலைமை மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல் - 3 பேர் உயிரிழப்பு!
[Sunday 2019-07-21 18:00]
|
பாகிஸ்தான் நாட்டில் உள்ளது தேரா இஸ்மாயில் கான் தலைமை மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் இன்று தற்கொலைப்படை பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும், 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
|
|
|
கனடாவின் ஒரு சில இடங்களில் கடும் வெப்பம் நிலவக்கூடும் என எதிர்வு கூறல்!
[Sunday 2019-07-21 18:00]
|
கனடாவின் சில பகுதிகளில் கடும் வெப்பம் நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கனேடிய சுற்றுசூழல் திணைக்களத்தினால் இந்த எதிர்வு கூறல் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவில் கியூபெக், ஒன்றாரியோ பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
|
|
|
7 மாத குழந்தையை கொன்ற இந்திய தாய்: 6 வருடம் சிறை தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு!
[Sunday 2019-07-21 06:00]
|
இங்கிலாந்தில் லண்டன் நகரில் வசித்துவரும் இந்திய வம்சாவளியினர் ஷாலினா பத்மநாபா (வயது 33). இவர் பல வருடங்களாக தனது கணவருடன் சேர்ந்து கருத்தரித்தல் சிகிச்சை எடுத்துக்கொண்டதன் பலனாக ஷாகன் என்ற பெண் குழந்தையை பெற்றார். ஆனால் அந்த குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததாலும், பல்வேறு சிகிச்சைகள் தேவைப்பட்டதாலும் 4 மாதங்கள் வரை ஆஸ்பத்திரியிலேயே இருந்தது. குழந்தை வீடு திரும்பிய பின்னரும் குழாய் மூலம் உணவு செலுத்துதல் போன்ற தனிக்கவனம் செலுத்த வேண்டியிருந்தது.
|
|
|
பாகிஸ்தானில் நடக்கும் குற்றங்கள் குறித்து இம்ரானிடம் டிரம்ப் பேச வலியுறுத்தல்!
[Sunday 2019-07-21 06:00]
|
பாகிஸ்தான் பிரதமருடனான சந்திப்பின் போது அந்நாட்டின் சிந்து மாகாணத்தில் நடக்கும் அநீதிகள் குறித்து பேச வேண்டும் என அதிபர் டிரம்பிடம் அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். வரும் திங்களன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபர் டிரம்பை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது தீவிரவாதம் குறித்து மட்டுமின்றி, பாகிஸ்தான் மக்களுக்கு நடக்கும் அநீதிகளைக் களைவது குறித்தும் வலியுறுத்த வேண்டும் என 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிரம்புக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
|
|
|
கிமு 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப் பழமையான மசூதியின் சிதிலங்கள் இஸ்ரேல் பாலைவனத்தில் கண்டுபிடிப்பு!
[Sunday 2019-07-21 06:00]
|
இஸ்ரேலில் மிகப் பழமையான மசூதியின் சிதிலங்களை நெகவ் பாலைவனத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ரஹத் நகருக்கு அருகே உள்ள நெகவ் பாலைவனத்தில் இஸ்ரேலிய தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மசூதி ஒன்றின் சிதிலங்களைக் கண்டறிந்தனர்.
|
|
|
பிரிட்டன் எண்ணெய் கப்பல் சிறைபிடிப்பு: ஈரான் பதிலடியால் பதற்றம்!
[Saturday 2019-07-20 17:00]
|
ஈரான் பறிமுதல் செய்து வைத்துள்ள தங்கள் நாட்டின் எண்ணெய் கப்பலை விடுவிக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பிரிட்டன் எச்சரித்துள்ளதால், இருநாடுகள் இடையே பதற்றம் நிலவுகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதார தடையை மீறி, சிரியாவுக்கு எண்ணெய் ஏற்றிச் சென்றதாக ஈரானின் கிரேஸ் 1 கப்பலை, கடந்த 4ஆம் தேதி பிரிட்டன் சிறை பிடித்தது. ஜிப்ரால்ட்டர் நீரிணையில் பறிமுதல் செய்யப்பட்ட அந்தக் கப்பலுக்கான காவல் மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளின் அடிப்படையில், அந்தக் கப்பலை விடுவிக்கத் தயாராக இருப்பதாக பிரிட்டன் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் வைத்து பிரிட்டனின் ஸ்டெனோ இம்பெரோ (Steno impero) என்ற எண்ணெய் கப்பலை ஈரான் ராணுவம் பறிமுதல் செய்துள்ளது.
|
|
|
கனடாவில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!
[Saturday 2019-07-20 17:00]
|
சட்டவிரோதமான முறையில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவின் லண்டன் பகுதியில் வைத்து நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் பயணித்த காரினை சோதனைக்கு உட்படுத்தியபோது போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
|
|
|
பாகிஸ்தான் ராணுவத்திற்கு வழங்கிய நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தியது!
[Saturday 2019-07-20 17:00]
|
கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றார். அதில் இருந்து அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது என கூறி பாகிஸ்தானுக்கு அளித்து வந்த பாதுகாப்பு நிதி உதவியை அமெரிக்கா முற்றிலும் நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் பாராளுமன்ற ஆய்வு சேவை மையம் என்ற தன்னாட்சி அமைப்பு சமீபத்தில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
|
|
|
சர்ச்சைக்குரிய குழாய் பதிப்பு திட்ட விரிவாக்கத்திற்கு கனடா ஒப்புதல்!
[Saturday 2019-07-20 17:00]
|
சர்ச்சைக்குரிய ட்ரான்ஸ் மவுண்டைன் குழாய் பதிப்பு திட்ட விரிவாக்கத்திற்கு கனேடிய அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை ஏரிவாயு உற்பத்தியில் உலகளவில் கனடா ஐந்தாம் இடம் வகிக்கிறது. இந்த குழாய்பதிப்பு திட்டமானது, எட்மன்டன், அல்பேர்டா ஆகிய பகுதிகளிலிருந்து புர்னாபி, பிரிட்டிஷ் கொலம்பியா என பழங்குடி மக்கள் இருக்கும் பகுதி வரை மசகு எண்ணெயை கொண்டு செல்லும். தற்போது 1,150 கிமீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த குழாய்பதிப்பு இரு மடங்கு தூரத்துக்கு விரிவாக்கம் செய்யப்படும். அதன் கொள்ளவு நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பேரல்களில் இருந்து 890,000 ஆக உயரும்.
|
|
|
துருக்கி விமான நிலையத்தில் ருசிகர சம்பவம்: பெண்ணின் செயலால் சிரிப்பலை!
[Saturday 2019-07-20 08:00]
|
துருக்கியின் இஸ்தான்புல் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்வதற்காக அங்குள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றார். அவர் தனது விமான டிக்கெட்டை அதிகாரிகளிடம் காட்டி விமான நிலையத்துக்குள் நுழைந்தார். பின்னர் அங்கிருந்த விமான நிலைய ஊழியர்கள் அந்த பெண் வைத்திருந்த உடைமைகளை வாங்கி, ‘பேக்’ செய்து ‘கன்வேயர் பெல்ட்’ வழியாக அனுப்பினர்.
|
|
|
இந்தியா - ரஷ்யா இடையே ராணுவ தளவாட பரிமாற்ற ஒப்பந்தம்!
[Saturday 2019-07-20 08:00]
|
இந்தியா - ரஷ்யா இடையே ராணுவ தளவாட பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் விமான, கடற்படை தளங்களை பயன்படுத்திக்கொள்ள இந்த ஒப்பந்தம் வழி வகுக்கும். ரஷ்யா உடனான உறவை இந்தியா மேலும் வலுப்படுத்திக் கொள்ள மோடி தலைமையிலான மத்திய அரசு மேலும் ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ தளவாட பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. கடந்த மாதம் மாஸ்கோவுக்கு சென்றிருந்த பாதுகாப்புத்துறை கூடுதல் செயலாளர் ஜூவேஷ் நந்தன் தலைமையிலான குழு, இந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்துள்ளது.
|
|
|
சீனா எரிவாயு தொழிற்சாலையில் பாரிய தீவிபத்து!
[Saturday 2019-07-20 08:00]
|
சீனாவில் உள்ள எரிவாயு ஆலை தீப்பிடித்ததில், சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருந்த வீடுகளின் கண்ணாடி ஜன்னல் உடைந்து நொறுங்கின. ஹெனான் மாகாணத்தில் உள்ள சான்மென்க்ஸிகா((Sanmenxia)) நகரில், உள்ள எரிவாயு தொழிற்சாலை வெள்ளிக்கிழமை மதியம் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் வான் உயரத்துக்கு கரும்புகை வெளியேறியதோடு, ஆலையின் அருகே சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருந்த கட்டிடங்களின் ஜன்னல்கள் நொறுங்கின.
|
|
|
இம்முறை மனிதன் நிலவிற்கு சென்று அங்கேயே தங்குகிறான்: - நாசா ட்வீட்!
[Friday 2019-07-19 17:00]
|
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவைப் பற்றி ஆராய்வதற்காக இஸ்ரோ ‘சந்திராயன்-1’ என்ற விண்கலத்தை தயாரித்து கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறுகளை கண்டுபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆய்வுகளை செய்து முக்கிய பங்கு வகித்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஏவப்பட இருந்தது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 56 நிமிடங்களுக்கு முன்னதாக அதிகாலை 1.55 மணிக்கு, சந்திரயான் 2 விண்கலம், விண்ணில் ஏவப்படுவது நிறுத்தப்பட்டு, வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
|
|
|
கனேடிய பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் நூதன போராட்டம்!
[Friday 2019-07-19 17:00]
|
கனேடிய பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கறுப்பு ஜுலை நினைவேந்தலினை முன்னிட்டே இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், சுடறேற்றி அகவணக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களை இலக்கு வைத்து கடந்த 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்தநிலையிலேயே கறுப்பு ஜுலை நினைவேந்தலினை முன்னிட்டு கனேடிய பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
|
|
|
|