|
|
தாடியை மழிக்கமாட்டேன்!
- ஞானசார தேரர் சபதம்
[Tuesday 2018-09-25 18:00]
|
தனக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை நிறைவடையும் வரை தாடியை மழிக்கப் போவதில்லை என்று ஞானசார தேரர் சபதமெடுத்துள்ளார். சிறுநீரகத்தில் ஏற்பட்ட பிரச்சினைக் காரணமாக ஞானசார தேரர் இன்று சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு சென்றிருந்தார். இதன்போது, அவர் தாடியுடன் காணப்பட்டார். இது குறித்துஅவரிடம் வினவியப் போதே, தனது தண்டனை காலம் நிறைவடையும் வரை தான் தாடி வளர்க்க முடிவெடுத்துள்ளதாக ஞானசாரர் குறிப்பிட்டுள்ளார்.
|
|
|
20 இலட்சம் இராணுவத்தினர் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுவர்!
- எச்சரிக்கிறார் மேஜர் அஜித்
[Tuesday 2018-09-25 18:00]
|
தொடர்ந்து இராணுவத்தினருக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவதால், நாடு முழுவதிலும் உள்ள இருபது இலட்சத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் எப்போது வேண்டுமானாலும் கிளர்ந்தெழுவார்கள் என்று தாய் நாட்டுக்கான இராணுவ வீரர்கள் அமைப்பு எச்சரித்துள்ளது.
|
|
|
2050 இல் 30 வீதத்தினால் அதிகரிக்கப் போகும் முதியோரின் எண்ணிக்கை!
[Tuesday 2018-09-25 18:00]
|
இலங்கையில் தற்போதுள்ள முதியோர்களின் எண்ணிக்கை 2.5 மில்லியனுக்கும் அதிகமாகும். இத் தொகை 2050 ஆகும் போது 30 வீதத்தால் அதிகரிப்பதுடன் 60 வயதுக்கு மேற்ப்பட்ட முதியவர்கள் அநேகமாக தொற்றா நோய்களினால் உயிர் இழப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வு அறிக்கைகள் உளவியல் வைத்திய ஆலோசகர் டாக்டர் தில்ஹார் சமரவீர தெரிவித்தார்.
|
|
|
சீகிரியா குன்றில் அரை நிர்வாண போஸ் கொடுத்த இளைஞர்களுக்கு வலை வீச்சு!
[Tuesday 2018-09-25 18:00]
|
சீகிரியா- பிதுரங்கலை குன்றில் அரை நிர்வாணத்துடன் புகைப்படம் எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட இளைஞர்கள் தொடர்பாக, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
|
|
|
கீத் நொயார் கடத்தல் - சரத் பொன்சேகாவிடம் 4 மணிநேர விசாரணை!
[Tuesday 2018-09-25 18:00]
|
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக, குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு இன்று பகல் 12 மணியளவில் வருகைத் தந்த அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா சுமார் 4 மணித்தியாலத்தின் பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.
|
|
|
இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாய் மரணம்!
- யாழ்.போதனா வைத்தியசாலையில் அதிர்ச்சி சம்பவம்
[Tuesday 2018-09-25 18:00]
|
யாழ்.போதனா வைத்தியசாலையில் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த ஒருமணி நேரத்தில் தாயார் உயிரிழந்துள்ள அதிர்ச்சி சம்பவம், இடம்பெற்றுள்ளது. சுக பிரசவம் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பிரசவித்த தாயார்ட, ஒரு மணித்தியாலத்தின் பின்னர் சடுதியாக மூர்ச்சையாகியுள்ளார். உடனடியாக உயிர் காக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
|
|
|
இலங்கைக்கு 8000 கோடி ரூபாவைக் கொடுக்கிறது அமெரிக்கா!
[Tuesday 2018-09-25 18:00]
|
அமெரிக்காவின் மில்லேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் 480 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 8000 கோடி ரூபா) நிதியுதவியை இலங்கையின் அபிவிருத்தி பணிகளுக்காக வழங்க முன்வந்துள்ளதாக அக் கூட்டுத்தாபனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி Brock Bierman தெரிவித்தார்.
|
|
|
பரபரப்படையும் யாழ். நீதிமன்றம் - திலீபன் நினைவு நிகழ்வைத் தடை செய்யும் வழக்கு இன்று விசாரணை!
[Tuesday 2018-09-25 08:00]
|
தியாக தீபம் திலீபனின் நினைவு நிகழ்வைத் தடை செய்யப் கோரி, , பொலிஸாரால் யாழ். நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கு, இன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. பரபரப்பான சூழலில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
|
|
|
மஹிந்தவை குழுவில் சேர்த்ததற்கு ஜஸ்மின் சூக்கா எதிர்ப்பு!
[Tuesday 2018-09-25 08:00]
|
காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் பரிந்துரைகளை ஆராயும் உபகுழுவுக்கு அமைச்சர் மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டமையை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ஜஸ்மின் சூக்கா விமர்சித்துள்ளார்.
|
|
|
கனடியப் பிரதமருடன் ஜனாதிபதி மைத்திரி சந்திப்பு!
[Tuesday 2018-09-25 08:00]
|
ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடருக்கு சமாந்தரமாக இடம்பெறும் நெல்சன் மண்டேலா சமாதான மாநாடு அனைத்து அரச தலைவர்களின் பங்குபற்றலுடன் நேற்று நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஆரம்பமானது. இந்த மாநாட்டில் பங்குபற்றியுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ரூடோவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
|
|
|
சிறிலங்கா விவகாரத்தில் அடுத்து என்ன?- ஐ.நாவில் இடம்பெற்ற உப மாநாடு!
[Tuesday 2018-09-25 08:00]
|
சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் முடிவடையவுள்ள நிலையில் அனைத்துலகத்தின் அடுத்த நிலைப்பாடு என்பதனை கேள்விக்குட்படுத்தும் வகையில் உப மாநாடு ஐ.நா மனித உரிமைச்சபையில் இடம்பெற்றது.
|
|
|
ஐ.நாவில் இன்று உரையாற்றுகிறார் ஜனாதிபதி!
- பொதுமன்னிப்பு அறிவிப்பை வெளியிடுவாரா?
[Tuesday 2018-09-25 08:00]
|
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐ.நா 73ஆவது பொதுச் சபையின் பொது விவாதம் ஆரம்பிக்கும் முதலாவது நாளான இன்று உரை ஆற்றவுள்ளார். ஜனாதிபதிக்கான நேரம், பிற்பகல் அமர்விலேயே வழங்கப்பட்டுள்ள நிலையில்,அமெரிக்க நேரப்படி, இன்று மாலை 4.30 மணியளவிலேயே அவர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை நேரப்படி, நாளை (26) அதிகாலை 2 மணியளவிலேயே, ஜனாதிபதி உரையாற்றுவார்.
|
|
|
அரசியல் கைதிகள் விடயத்தில் சம்பந்தன் அக்கறையின்றி இருக்கிறார்!
- அருட்தந்தை சக்திவேல் குற்றச்சாட்டு
[Tuesday 2018-09-25 08:00]
|
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உதாசீனப் போக்கையே கொண்டிருப்பதாகவும், இது தொடர்பில் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் நேரில் சந்தித்துக் கலந்துரையாட உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கூறி வருகின்ற நிலையில், சந்திப்புகளை மேற்கொள்ள அவர் எந்தவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல், குற்றஞ்சாட்டியுள்ளார்.
|
|
|
இலங்கையில் யுத்த இலக்குகளை இலகுவாக கைப்பற்றுகிறது இந்தியா!
-விமல் வீரவன்ச கொதிப்பு
[Tuesday 2018-09-25 08:00]
|
இந்தியா தனது யுத்த இலக்குகளை, இலகுவாக அடைந்து கொள்கிறது என விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்தார்.
திருகோணமலைத் துறைமுகத்தின் முக்கியத்துவம் என்ற தலைப்பில், தேசிய சுதந்திர முன்னணியால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
|
|
|
கார் மோதி தாயும் இரு பிள்ளைகளும் பலி- மகன் படுகாயம்!
[Tuesday 2018-09-25 08:00]
|
பொத்துவில் - அக்கரைப்பற்று வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும், இரு மகள்களும் பலியாகினர். மகன் படுகாயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். தாய் ஒருவர், இருமகள்மார் மற்றும் மகனுடன் வீதியால் சென்று கொண்டிருந்த போது காரொன்று அவர்கள் மீதுமோதியுள்ளது. குறித்த சம்பவத்தில் 34 வயதுடைய தாயும் 6 வயது மற்றும் 12 வயதுடைய பெண் பிள்ளைகள் இருவரும் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த 11 வயதுடைய மகன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
|
|
|
கூட்டு எதிரணியில் காற்றுப் போயுள்ளவர்களே உள்ளனர்!
- குமார வெல்கம
[Tuesday 2018-09-25 08:00]
|
அமெரிக்க குடியுரிமையுள்ள ஒருவருக்கு இந்த நாட்டில் தேர்தலில் போட்டியிட முடியாது. தற்போதும் அமெரிக்க குடியுரிமையில் இருக்கும் ஒருவர் எவ்வாறு நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது? என கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கேள்வி எழுப்பியுள்ளார்.
|
|
|
சரத் பொன்சேகாவிடம் இன்று விசாரணை!
[Tuesday 2018-09-25 08:00]
|
அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று வாக்கு மூலத்தை பதிவு செய்ய உள்ளனர். வாக்கு மூலமொன்றை அளிப்பதற்காக இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்திற்கு வருகை தருமாறு சரத் பொன்சேகாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ். செயலகம் முன் உண்ணாவிரதப் போராட்டம்!
[Monday 2018-09-24 19:00]
|
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இன்று அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
|
|
|
உண்ணாவிரதம் இருப்பதால் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது!
- நீதியமைச்சர் தலதா அதுகோரல
[Monday 2018-09-24 19:00]
|
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக தற்போது வழக்கு தாக்கல் செய்யப்பபட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பின் நிமித்தமே இவர்கள் விடுதலை செய்யப்படுவார்களே தவிர உண்ணாவிரத போராட்டத்தின் மூலம் அது சாத்தியப்படாது என சிறைச்சாலை புனரமைப்பு மற்றும் நீதியமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்தார்.
|
|
|
ஜனாதிபதி முன்வைக்கும் யோசனையை எதிர்ப்போம்!
- ஐ.நா பொதுச்செயலருக்கு கூட்டமைப்பு அறிவிப்பு
[Monday 2018-09-24 19:00]
|
அரசியல் கைதிகளையும், போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினரையும் சமமாக கருதி பொதுமன்னிப்பு வழங்கும் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்தால், அதனை முற்றாக எதிர்ப்போம் என ஐ.நா. பொதுச் செயலாளருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
|
|
|
போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட வேண்டும்!
- ரெலோ
[Monday 2018-09-24 19:00]
|
போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட வேண்டும் என்பதில தமது கட்சி உறுதியாக இருப்பதாகவும், அதில் எந்தவித விட்டுக் கொடுப்புக்கும் இடமில்லை என்றும் ரெலோவின் செயலாளர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.
|
|
|
மேலும் இரண்டு அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு!
[Monday 2018-09-24 19:00]
|
வழக்கு நட
|
|
|
ஒன்றரை வயதுக் குழந்தைக்கு எமனானது தந்தையின் உழவு இயந்திரம்!
[Monday 2018-09-24 19:00]
|
உழவு இயந்திர சக்கரத்தில் சிக்கி, ஒன்றரை வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று மல்லாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.மல்லாகம் கல்லாரை பகுதியை சேர்ந்த ஒரு வயதும் 8 மாதங்களுமான விஜயகாந்த் தஸ்மிலன் என்ற ஆண் குழந்தையே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
|
|
|
வாள்வெட்டில் இளைஞன் படுகாயம்!
[Monday 2018-09-24 19:00]
|
கொடி
|
|
|
இரத்ததான நிகழ்வில் இராணுவப் புலனாய்வாளர்களால் குழப்பம்!
[Monday 2018-09-24 19:00]
|
தியாகி திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களால் வருடாவருடம் ஏற்பாடு செய்யப்படும் இரத்ததான நிகழ்வு, இன்று கல்லூரியில் நடைபெற்றது. இரத்ததான முகாம் நடைபெறும் மண்டபத்துக்கு வருகை தந்திருந்த இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர், அங்கு எதற்காக இரத்ததான முகாம் நடைபெறுகின்றதென, விசாரணைகளை முன்னெடுத்தனர். இதனால், இரத்ததானம் வழங்கும் இடத்தில் குழப்பம் உருவானது.
|
|
|
மட்டக்களப்பில் உழவு இயந்திரம் தடம்புரண்ட விபத்தில் 18 பேர் காயம்!
[Monday 2018-09-24 19:00]
|
மட்டக்களப்பு- வாழைச்சேனை,கிண்ணையடியில் இன்று காலை உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில், 18 பேர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணையடி விஷ்ணு ஆலயத் திருவிழாவின் இறுதி நாளான இன்று கல்குடா கடலில் தீர்த்தமாடி விட்டு, ஆலயம் நோக்கி, உழவு இயந்திரத்தில் பயணம் மேற்கொண்ட பக்தர்களே விபத்தில் படுகாயமடைந்தனர்.
|
|
|
பெண் விரிவுரையாளரின் இறுதிச்சடங்கில் பரபரப்பு!
[Monday 2018-09-24 19:00]
|
திருகோணமலை கடலி்ல் சடலமாக மீட்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக விரிவுரையாளர் போதநாயகியின் இறுதிச் சடங்கில், சுலோக அட்டைகளுடன் பெண்கள் அணிவகுத்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
|
|
|
திருகோணமலையில் குடும்பஸ்தர் கொலை?
[Monday 2018-09-24 19:00]
|
திருகோணமலை- சீனன்வெளி ஆற்றங்கரையோரத்தில் இன்று காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் நேற்றுக் காலை வீட்டிலிருந்த வெளியே சென்றுள்ளார்.மாலையாகியும் வீடு திரும்பாததையடுத்து குடும்பத்தாரும் அயலவர்களும் அவரை தேடியபோது இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
|
|
|
|